Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது! 27 NOV, 2024 | 08:59 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில்... முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடர் மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலரினால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர். முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில்... முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலத்தின் மனைவியுமான கமலாதேவியினால் பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர். மேலும் குறித்த அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்.... மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல் மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கே.கனகரத்தினம் ஏற்றியதை தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில்வாயினியின் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில்... யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர் அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது வவுனியா வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்... வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின் தாயாரான பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர். வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் நாள்.... வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் தாயார் இருவரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர்களின் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள்... 2024 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார். ஏனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபுவின் தந்தை இராமையாவும் கப்டன் வண்ணனின் தந்தை விஜயசேகரமும் ஏற்றி வைத்தனர் இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர். தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்... தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள்போன்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நரடைபெற்றது. மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. சரியாக 6.10 மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் இசை இசைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு நாள் இன்றயதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன. தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட் தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர். மன்னார் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்... மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டது. ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்... அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது. இன்று கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர். அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் நம்பர் பலகைகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/199882
  2. தொடர் மழையினால் முதல் நாள் ஆட்டம் 20.4 ஓவர்களுடன் முடிவு; தென் ஆபிரிக்கா 80 - 4 விக்; பந்துவிச்சில் இலங்கையர் அபாரம் 27 NOV, 2024 | 07:49 PM (நெவில் அன்தனி) இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (27) ஆரம்பமான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக 20.4 ஓவர்களுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் மழையினால் ஆட்டம் தடைப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஏய்டன் மார்க்ராம் (9), டோனி டி ஸோர்ஸி (4) ஆகிய இரண்டு ஆரம்ப வீரர்களும் ஸ்லிப் நிலையில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தனர். அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் மார்க்ராமின் பிடியை ஏஞ்சலோ மெத்யூஸும் விஷ்வா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் டி ஸோர்ஸியின் பிடியை கமிந்த மெண்டிஸும் எடுத்தனர். தொடர்ந்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (16), அணித் தலைவர் டெம்பா பவுமா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஸ்டப்ஸ் ஆட்டம் இழந்தார். லஹிரு குமாரவின் பந்துவீச்சில் ஸ்லிப் நிலையில் திமுத் கருணாவிடம் ஸ்டப்ஸ் பிடிகொடுத்தார். (46 - 3) மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தபோது லஹிர குமாவின் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாம் (4) போல்ட் ஆனார். இதனிடையே ஏஞ்சலோ மெத்யூஸ் மிகத் துல்லியமாக இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை வீசினார். பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் மழை தொடர்ந்து பெய்ததால் பிற்பகல் 3.00 மணியளவில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். ஆட்டும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா 28 ஓட்டங்களுடனும் கய்ல் வெரின் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் லஹிரு குமார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/199884
  3. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு! மட்டக்களப்பில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் பல வீதிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளுக்குள் வெள்ளத்தினால் சிக்கியவர்களை படகு மற்றும் உழவு இயந்திரங்களின் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நகரை சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தூர இடங்களுக்கான பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கான படகு சேவை இடம்பெற்று வருகின்றது. சீரற்ற கால நிலை காரணமாக கடந்த 3 தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து வயல் நிலங்கள் மற்றும் ஆறுகள் நிறைந்து வெள்ள நீரில் மூழ்கி வெள்ள காடாகியது. இந்த வெள்ளத்தினால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்திற்கும், வவுணதீவுக்கும் புதூர் மற்றும் மட்டக்களப்பு நகருக்கும், மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும், மட்டக்களப்பு செங்கலடிக்கும் சித்தாண்டிக்கும் மற்றும் பட்டிருப்புக்கும் போரதீவுக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளுக்கிடையிலான படகு சேவையை ஆரம்பிக்கப்பட்டது. அதேவேளை வெள்ளத்தினால் மட்டக்களப்பு புளியந்தீவை சுற்றிய களக்பை அண்டிய வாவிக்கரை வீதிகள் உள்ள பகுதிகள்,கோட்முனை, ஊறணி, இருதயபுரம், மாமாங்கம் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மட்டக்களப்பு பொதுசந்தைகட்டிடம், மாநகரசபை, பிரதான பஸ்தரிப்பு நிலையம், தனியர் பஸ்தரிப்பு நிலையம் விமான நிலையம், மற்றும் தாழ்நில பகுதிகளிலுள்ள வர்தகநிலையங்கள் வெள்ளத்தினால் முழ்கியது. இதனையடுத்து துர இடங்களுக்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் நகர் செயல் இழந்துள்ளதுடன் மட்டக்களப்பு கல்முனைக்கும் இடையிலான கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://tamil.adaderana.lk/news.php?nid=196518
  4. தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல், அனர்த்தங்களை எதிர்கொண்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் - ஜனாதிபதி அறிவுறுத்தல் 27 NOV, 2024 | 04:53 PM தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு செயற்படாமல் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை (27) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான நிலையங்களில் தங்க வைத்து தேவையான உணவு மற்றும் மலசலகூட வசதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார். சீரற்ற காலநிலை காரணமாக அதிக ஆபத்துள்ள வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் மனநிலை மற்றும் நெருக்கடிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் உயர்தர பரீட்சையை மேலும் காலம் தாழ்த்த நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். தற்போது மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருக்கும் மீனவர்கள் தொடர்பில் தேடியறிந்து அவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதற்கு அவசியமான வசதிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் அறிவுறுத்தினார். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வைஸ் எயார் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, முப்படைகளின் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ, காலநிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.கருணாநாயக்க முதலான அதிகாரிகளும் இjில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/199865
  5. வெள்ளக்காடாக மாறிய அம்பாறை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அதிக பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. வானிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். கழிவு நிர் வாய்க்கால்களை நேரத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயிகளும் கவனம் செலுத்தி புனரமைக்கப்படாமையால் விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பல கிராம புறங்களில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் உட்புகுந்தும் சூழ்ந்தும் காணப்படுவதால் பலர் பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி வாழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- https://tamil.adaderana.lk/news.php?nid=196375
  6. 27 NOV, 2024 | 04:07 PM (நா.தனுஜா) இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்குப் பதிலாக நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 'ஓரிரவு கொள்கை வீதம்' என அழைக்கப்படும் ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, அதனை 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் (6 ஆவது) மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே மேற்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நாட்டின் பொருளாதார நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் சார்ந்த தரவுகளும் வெளியிடப்பட்டன. 'ஓரிரவு கொள்கை வீதம்' அறிமுகம் இலங்கை மத்திய வங்கியானது நேற்று (27) முதல் நடைமுறைக்குவரும் வகையில், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டுவந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்கு நகர்ந்துள்ளது. 'ஓரிரவு கொள்கை வீதம்' எனும் பெயரால் அழைக்கப்படும் இவ்வீதமே இனிவருங்காலங்களில் மத்திய வங்கியின் நாணயக்கொள்கை நிலைப்பாடுகள் குறித்து சமிக்ஞை செய்வதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான நாணயக்கொள்கைக் கருவியாகத் தொழிற்படும். அதற்கமைய நாணயச்சபையினால் ஓரிரவு கொள்கை வீதமானது 8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதுடன், நியதி ஒதுக்குவீதத்தை 2 சதவீதமாகப் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த துணைநில் வைப்பு வசதிவீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பன மத்திய வங்கியின் கொள்கை வட்டிவீதங்களாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது. இருப்பினும் மத்திய வங்கியுடனான ஓரிரவு கொடுக்கல், வாங்கல்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு இக்கொள்கை வட்டிவீதங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். அதேபோன்று ஓரிரவு கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு மேலதிகமாக, நாணயக்கொள்கை நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்கும் நாணயச்சபை தீர்மானித்துள்ளது. இப்புதிய கொள்கை வீதத்தை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏனைய நாடுகளில் நடைமுறையிலிருக்கும் கொள்கை வீதங்கள் குறித்து நன்கு ஆராய்ந்து, அவற்றினூடாகக் கிட்டிய பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பணவீக்க எதிர்பார்க்கை இது இவ்வாறிருக்க கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் மதிப்பிடப்படும் முதன்மைப்பணவீக்கமானது கடந்த செப்டெம்பர் மாதத்தைப்போன்று ஒக்டோபரிலும் தொடர்ந்து எதிர்மறைப்பெறுமதியில் காணப்பட்டதாகவும், மின்சாரக்கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி இதற்குப் பிரதான காரணமாக அமைந்ததாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை இப்பணச்சுருக்கமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து நேர்மறையாக மாற்றமடைந்து, நடுத்தரகாலத்தில் 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடையும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. வருமான உட்பாய்ச்சல் அடுத்ததாக கடந்த காலங்களில் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் ஆகியவற்றின் ஊடாகப் பெறப்பட்ட வருமானமானது, நாட்டின் வெளியக நடைமுறைக்கணக்கு மீதியின் நேர்மறை மாற்றத்துக்குப் பங்களிப்புச்செய்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி - ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 4.9 பில்லியன் டொலர்களாகப் பதிவான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மூலமான வருமானம் இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 5.4 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி - ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 1.6 பில்லியன் டொலர்களாகப் பதிவான சுற்றுலாத்துறை மூலமான வருமானம் இவ்வாண்டு அதே காலப்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி அதேவேளை கடந்த ஜனவரி - ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் மொத்த ஏற்றுமதிகள் 10.7 பில்லியன் டொலர்களாகவும், மொத்த இறக்குமதிகள் 15.4 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை முன்னேற்றமடைந்திருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/199840
  7. முதலாவது டெஸ்ட் - நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (27) Durban மைதானத்தில் இடம்பெறுகிறது. அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த தொடர் இலங்கை அணிக்கு தீர்மானமிக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=196500
  8. மழை, வெள்ளம்! - திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்கள், 4851 பேர் பாதிப்பு 27 NOV, 2024 | 01:04 PM சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1708 குடும்பங்களைச் சேர்ந்த 4851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை, வெள்ளம் காரணமாக 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இதேவேளை, 532 குடும்பங்களைச் சேர்ந்த 1,621 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 06 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199827
  9. ஏழரை கோடி கொள்ளை - பிரதான சந்தேகநபர்கள் கைது மினுவாங்கடை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளினால் மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட போது சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 40 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி மினுவாங்கொடையில் உள்ள தனியார் வங்கிக்குப் பணத்தை எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பாகப் பணம் கொண்டு செல்லும் நிறுவனத்தின் சாரதி ஒருவர் 7.5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைத் திருடி, அதே வாகனத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார். பின்னர் கம்பஹா - உக்கல்கொட பகுதியில் வாகனத்தை நிறுத்தி, பணத்தை எடுத்துக் கொண்டு மற்றுமொருவருடன் உந்துருளியொன்றில் தப்பிச் சென்றார். இதனையடுத்து, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் பணத்தில் 3 கோடி ரூபாவினை பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் கைதாகியிருந்தார். இந்நிலையில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=196516
  10. நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரஹாம் தோர்ப் குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மட்டை அவர், 1997-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக தனது முதல் இரண்டு டெஸ்ட் சதங்களை அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். அதே நேரத்தில் மார்ட்டின் குரோவ் குடும்பத்தினர் வழங்கிய மட்டை அவர், 1994-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க பயன்படுத்தியதாகும். குரோவ் மற்றும் தோர்ப் இருவரும் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் வாழ்க்கையை கொண்டவர்கள். நியூஸிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 17 சதங்களுடன் 45.36 சராசரியைக் கொண்டிருந்தார். அவர், கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். அதேவேளையில் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற கிரஹாம் தோர்ப் 16 சதங்களுடன், 44.66 சராசரியை கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர், இயற்கை எய்திருந்தார். https://thinakkural.lk/article/312730
  11. update - உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவம் - காணாமல்போன மற்றுமொரு மாணவனின் சடலம் கண்டுபிடிப்பு 27 NOV, 2024 | 02:06 PM காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்றதில் காணாமல்போனவர்களில் மற்றுமொரு மாணவன் சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, மாணவனின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன. அத்தோடு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிந்தவூர் மதரஸா பள்ளியிலிருந்து 11 மாணவர்கள் உழவு இயந்திரத்தின் மூலம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோதே உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காணாமல்போனோர் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்கள் ஆவர். மேலும், இந்த விபத்தில் உழவு இயந்திர சாரதியும் உடன் பயணித்த மற்றுமொருவரும் கூட இதுவரை மீட்கப்படவில்லை. https://www.virakesari.lk/article/199821
  12. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றம் பெறும்; விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை கடந்த 23 ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக திருகோணமலையின் இறக்கண்டிக்கு கிழக்காக 80 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் மையம் அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை 4.00 மணியளவில் புயலாக மாற்றம் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வழமையாக வடகீழ் பருவக்காற்று காலங்களில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கம் மற்றும் புயல்களின் நகர்வுப்பாதையை ஒரளவு தெளிவாக கணிக்க முடியும். ஆனால் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுப்பாதையை தெளிவாக கணிக்க முடியவில்லை. அத்தோடு இதன் கரையைக் கடக்கும் இடம் இன்னமும் தெளிவாகவில்லை. தற்போதைய நிலையின் படி இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 30ம் திகதியளவில் சென்னைக்கும் கடலூருக்குமிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நகரும் பாதையும் கரையைக் கடக்கும் இடமும் மாற்றமடையலாம் என்பதனைக் கருத்தில் கொள்க. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கும் வடக்கு மாகாணத்தினுடைய அனைத்து மாவட்டங்களுக்கும் தற்போது கிடைத்து வருகின்ற மழை நாளை வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சற்று வேகமான காற்றுடன் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறையை பொருத்தவரை இன்று முதல் மழை படிப்படியாக குறைபடையும் ஆனாலும் எதிர்வரும் 30.11.2024 வரை இடை இடையிடையே கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன தொடர்ச்சியாக கிடைத்த வருகின்ற கனமழை காரணமாகவும் குளங்களினுடைய மேலதிகமான உபரி நீர் வான் பாய்வதன் காரணமாகவும் வடக்கு(அனைத்து மாவட்டங்களும்)மற்றும் கிழக்கு மாகாணங்களின் உடைய பல பகுதிகளிலும்(முக்கியமாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை)வெள்ள அர்த்தத்துக்கான வாய்ப்புகள் மிக உயர்வாகவே காணப்படுகின்றன. அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே….. நாம் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்போம். -நாகமுத்து பிரதீபராஜா- https://thinakkural.lk/article/312749
  13. வட்டுவாகல் பாலத்தினூடாக மீண்டும் நீர் குறுக்கறுத்து பாய்கிறது - பயணிகள் அவதானம்! 27 NOV, 2024 | 12:06 PM முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்துச் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. முல்லைத்தீவு - பரந்தன் ஏ35 வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி பாலம் வெளியே தெரியாதபடி காணப்படுவதனால் வட்டுவாகல், சாலை முகத்துவாரங்கள் வெட்டிவிடப்பட்ட நிலையில் வெள்ள நீர் வடிந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் தாெடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வட்டுவாகல் பாலத்தில் ஆங்காங்கே நீர் குறுக்கறுத்து பாய்ந்த வண்ணம் இருக்கிறது. இதனால் இப்பாலத்தின் ஊடாக பொதுமக்கள் அவதானமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://thinakkural.lk/article/312749
  14. வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 1043 குடும்பங்களைச் சேர்ந்த 3524 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வட்டக்கச்சி ஊடாக கண்டாவளை செல்லும் பிரதான வீதியில் புளியம்போக்கனை பகுதியில் வீதி குறுக்கரத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டககச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/312739
  15. நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் - காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு அம்பாறை - காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரம், காரைத்தீவு பஸ் நிலையம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உழவு இயந்திரத்தில் 11 மாணவர்கள், சாரதி மற்றும் உதவியாளர் பயணம் செய்தனர், இதன்போது, வௌ்ளத்தில் சிக்கிய 5 மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். அதன்படி, காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://tamil.adaderana.lk/news.php?nid=196492
  16. ”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே" ஜெ.பி. கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தேசிய அளவில் ஏற்பட்ட “அநுர ஆதரவு அலை” யாழ் மாவட்டத்திலும் ( பெரும்பாலும் இளைய தலைமுறையினரிடத்தில்) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் “தமிழ்த் தேசியத்தை” மையப்படுத்திய கட்சிகளிடத்தில் அநுர முழுமையாக தாக்கம் செலுத்தியிருப்பதாக கொள்ள முடியாது. தென்னிலங்கையின் தேசியக் கட்சிகளுக்கும் கடந்த காலங்களில் யாழ்.மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். பெரும்பாலும் ஆளும்கட்சியின் அல்லது பிரதான எதிர்க்கட்சியின் கூட்டணியாக இருக்கும் அணிகள் யாழ்ப்பாணத்தில் அவர்களுக்குரிய ஆசனங்களை தக்க வைத்து வந்துள்ளன. அந்த அணிகள் தனித்தனியே போட்டியிட்டதாலும் அரசாங்க கட்சிகள் மீதான நம்பிக்கையீனம் காரணமாகவும் பிரதான ‘தமிழ்த்தேசிய’ கட்சியைத் தாண்டி வாக்குகளை அள்ள முடியாதிருந்தது. இலங்கையின் விகிதிசார தேர்தல் முறையில்- ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சி ஒரு ஆசனத்தை போனசாக பெறும். அதன்படி யாழ். மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை பிரதான தமிழ்த்தேசிய அணி பெற்று வந்தது. மீதமுள்ள ஆசனங்கள் தான்( இம்முறை 6-1 போனஸ்= 5) விகிதாசார முறையில் கட்சிகளிடையே பங்கிடப்பட்டுள்ளது. 2020 இல் யாழ்.மாவட்டத்துக்கு கிடைத்த 7 ஆசனங்கள் சனத்தொகை அடிப்படையில் இம்முறை 6 ஆக குறைக்கப்பட்டதால் போட்டி சற்று கடுமையாகத்தான் இருந்தது. 30 ஆண்டுகால யுத்தத்தின் பிடியில் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு உள்ளாகிவந்த வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தை மையப்படுத்திய சிறுபான்மை சமூகங்களில் கணிசமானோர் மத்திய அதிகாரத்தில் பங்கெடுக்காத இன-ரீதியான பிராந்தியக் கட்சிகளிலும் பார்க்க தேசியக் கட்சிகளின் கூட்டணியில் செல்வாக்கு செலுத்தும் தலைவர்களுக்கு / கட்சிகளுக்கு வாக்களிப்பது சிறந்தது என்று கருதி வந்துள்ளனர். இதன் மூலம் அந்தக் கட்சிகள் தங்களுக்கான ஆசனங்களை தக்க வைத்து வந்துள்ளன. இம்முறை ‘அநுர அலை’ ஏற்படுத்திய அலையில் தென்னிலங்கையில் பிரதான தேசியக் கட்சிகள் காணாமல் போனதைப் போல வடக்கிலும் காணாமல் போயுள்ளன. அவர்கள் பெற்றுவந்த ஆசனங்கள் அப்படியே ஜனாதிபதி அநுர அணிக்கு கைமாறியுள்ளன.. பிரதான “தமிழ்த்தேசிய” அணிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேசியக் கட்சிகளைவிட உள்வீட்டு குத்துவெட்டுக்களை இம்முறை அதிகம் சமாளிக்க வேண்டியிருந்தது. சம்பந்தர் என்கின்ற Pre-wartime அரசியல் ஆளுமை இருந்த போதே வெடித்திருந்த உள்வீட்டு சண்டை அவருக்குப் பின்னர் பூதாகரமாகியிருந்தது. அறியப்பட்ட பல பழைய முகங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் வெவ்வேறு முகாம்களில் போட்டியிட்டன. பிரதான கூட்டணியில் பல புதிய முகங்கள் பிரதான வேட்பாளர்களாக இறக்கப்பட்டனர். வெவ்வேறு நிகழ்கால அரசியல் காரணங்களால் பிளவுபட்ட அணிகள் தனித்தனி சின்னங்களில் களமிறங்கியிருந்தன. வழமையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் எதிர் “தமிழ்த் தேசிய”கட்சிகள் என்று இருந்த போட்டி, இம்முறை தேசியக் கட்சி (அநுர) எதிர் மட்டுமன்றி, உள்ளூர் தமிழ்த் தேசிய அணிகளின் பரஸ்பர உள்வீட்டுச் சண்டையாகவும் சேர்ந்து பலமுனைப் போட்டியாக விகாரமடைந்திருந்தது. தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும்பங்கு அப்படியே அநுரவுக்கு கைமாறியுள்ளது.அத்தோடு அநுர அலையால் உந்தப்பட்ட புதிய தலைமுறை வாக்குகளும் அவர் பக்கம் சேர்ந்துள்ளன.அத்தோடு பாரம்பரிய அரசியல்வாதிகளின் போக்குகளால் விரக்தியடைந்திருந்த ஒரு தரப்பினர் மாற்றாக புதிய முகங்களை தேடத் தொடங்கியிருந்தனர். சுயேட்சை அணிகளாக இறங்கிய புதிய முகங்களின் அதிரடி வருகையாலும் “ தமிழ்த்தேசிய” அணிகளின் உள்வீட்டுச் சண்டைகளாலும் அவர்களின் பாரம்பரிய வாக்கு வங்கி சிதறிப் போனது. வழமைபோல் தனியொரு தமிழ்க் கூட்டணியால் மாவட்டத்தின் அதிகூடிய வாக்குகளை சேர்க்க முடியவில்லை.இதனால் வழமையான போனஸ் ஆசனம் பறிபோனது. ஏற்கனவே சனத்தொகை அடிப்படையில் ஒரு ஆசனத்தை இழந்திருந்த யாழ் மாவட்டத்தில், போனஸ் போக மீதமுள்ள ஐந்து ஆசனங்களில் இரண்டு அநுர அணிக்கு கிடைத்தது. வழமையான தேசியக் கட்சிகளின் வாக்குகளில் பெரும்பங்கு இம்முறை பிளவுபடாமல் சுளையாக அநுரவுக்கு கைமாறியது முக்கிய காரணம். மீதமுள்ள மூன்று ஆசனங்களும் சிறு சிறு அணிகளாக பிளவுபட்டு நின்ற தமிழ்த் தேசிய அணிகளுக்கும் புதிதாக வந்த சுயேட்சை அணிக்கும் பகிரப்பட்டன. கிட்டத்தட்ட இதே நிலைமை தான் வடக்கின் இன்னொரு மாவட்டமான வன்னியிலும் நடந்துள்ளது; பிரதான தமி்ழ்த்தேசிய அணியின் வாக்குகள் சிதறியதால் கடந்த முறை அதற்கு கிடைத்த போனஸ் ஆசனத்தை இம்முறை தேசியக் கட்சியான அநுர அணியிடம் பறிகொடுத்தது. அதனிடம் இருந்த 2 ஆசனங்களில் ஒன்றை பிளவுபட்டு நின்ற மற்ற அணியிடம் இழந்தது. வடக்கில் தலைமைகள் இடையே ஏற்பட்ட பிளவு கிழக்கில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை. மட்டக்களப்பில் “தமிழ்த் தேசிய” வாக்குவங்கி அணிகளாக சிதையாமல் இருந்ததால் போனஸ் ஆசனத்தையும் தக்கவைத்து கடந்த முறையை விட ஒரு ஆசனத்தை மேலதிகமாகவும் கைப்பற்றியுள்ளது. திருகோணமலையில் சம்பந்தர் வைத்திருந்த ஒரு ஆசனம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது. தென்னிலங்கையை போலவே இங்கும் அநுர அணி மாவட்டத்தை கைப்பற்றியுள்ளது. அம்பாறையில் கடந்த முறை தமிழ்த் தேசிய அணிக்கு கிடைக்காத ஆசனம் இம்முறை கிடைத்திருக்கின்றது. மாவட்டம் அநுர அணியிடம் கைமாறியிருக்கிறது. ஆக- வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத் தோற்றமே. “தமிழ்த் தேசியம்” என்கின்ற சித்தாந்தம் அரசியல் அணிகளையும் தேர்தல்களையும் கடந்தது.ஆனால், புதிய தலைமுறை வாக்காளர்களையும் உள்வாங்கி, பிளவுபடாத ஒரே அணியாக மாற்றம் பெறுவதே அடுத்த பாராளுமன்றத்தில் பலமான “தமிழ்த் தேசிய” அணியை உருவாக்க ஒரே வழி. https://thinakkural.lk/article/312707
  17. பங்களாதேஷை 201 ஓட்டங்களால் வீழ்த்திய மே. தீவுகளுக்கு இரண்டரை வருடங்களில் சொந்த மண்ணில் முதலாவது வெற்றி 27 NOV, 2024 | 12:56 AM (நெவில் அன்தனி) அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விவியன் றிச்சட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 201 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் மிக இலகுவாக வெற்றிபெற்றது. கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் ஈட்டிய முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியில் ஜஸ்டின் கிறீவ்ஸ் குவித்த கன்னிச் சதம், மிக்கைல் லூயிஸ், அலிக் அத்தானேஸ் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச், ஜேடன் சீல்ஸ் ஆகியோர் பதிவு செய்த 3 விக்கெட் குவியல்கள் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன. இந்தப் போட்டியில் தஸ்கின் அஹ்மத் 6 விக்கெட் குவியலைப் பதிவு செய்தபோதிலும் அது கடைசியில் வீண்போனது. 334 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சகல விக்கெட்களையும் இழந்து 132 ஓட்டங்ளைப் பெற்று தோல்வி அடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 9 விக்கெட்களை இழந்து 450 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை 2ஆம் நாளன்று நிறுத்திக்கொண்டது. அன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் 3ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 9 விக்கெட் இழந்த 269 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மறுநாள் காலை ஆட்டம் தொடர்வதற்கு முன்னர் தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொள்ள பங்களாதேஷ் தீர்மானித்தது. நான்காம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. எண்ணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 450 - 9 விக். டிக்ளயார்ட் (ஜஸ்டின் கிறீவ்ஸ் 115 ஆ.இ., மிக்கைல் லூயிஸ் 97, அலிக் அத்தானேஸ் 90, கெமர் ரோச் 47, ஹசன் மஹ்முத் 87 - 3 விக்) பங்களாதேஷ் 1ஆவது இன்: 269 - 9 விக். டிக்ளயார்ட் (ஜேக்கர் அலி 53, மொமினுள் ஹக் 50, லிட்டன் தாஸ் 40, அல்ஸாரி ஜோசப் 69 - 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 152 (அலிக் அத்தானேஸ் 42, க்ரெய்க் ப்ரெத்வெய்ட் 23, தஸ்கின் அஹ்மத் 64 - 6 விக்., மெஹ்தி ஹசன் மிராஸ் 31 - 2 விக்.) பங்களாதேஷ் - வெற்றி இலக்கு 334 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (மெஹ்தி ஹசன் மிராஸ் 45, ஜேக்கர் அலி 31, லிட்டன் தாஸ் 22, கெமர் ரோச் 20 - 3 விக்., ஜேடன் சீல்ஸ் 45 - 3 விக்., அல்ஸாரி ஜோசப் 32 - 2 விக்.) ஆட்டநாயகன்: ஜஸ்டின் கிறீவ்ஸ். https://www.virakesari.lk/article/199788
  18. 27 NOV, 2024 | 11:31 AM நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199814
  19. 27 NOV, 2024 | 09:12 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199797
  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதிகளை (டெல்டா) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வது, அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தங்கள் சட்டத்தின் கீழ் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையா என்பது குறித்த சில கேள்விகள் - பதில்கள். கேள்வி: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் பிரச்னையின் பின்னணி என்ன? பதில்: காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன்கள் எடுக்கும் விவகாரம் என்பது நீண்ட காலமாகவே விவசாயிகளின் எதிர்ப்பிற்குரிய விஷயமாக இருந்துவருகிறது. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்ம கரிம எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பகுதியும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் பொதுமக்கள் அப்பகுதியிலும் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத மத்தியில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளில், எண்ணெய் துரப்பண ஆய்வுகள் "A" பிரிவிலிருந்து "B"க்கு மாற்றப்பட்டும் எனக் கூறப்பட்டது. அதன்படி, கடலிலும் நிலத்திலும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளுக்கு என பொதுமக்கள் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டியதில்லை. இதையடுத்து, டெல்டா பகுதியில் மீண்டும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. சோவியத் ஒன்றியம் இந்த விலங்கு மூலம் செய்த பரிசோதனை ஒரு சுற்றுச்சூழல் பேரழிவாக மாறியது எப்படி?26 நவம்பர் 2024 இந்த நிலையில், டெல்டா பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிவிப்பின்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இடம்பெற்றன. இஸ்ரேல் - ஹெஸ்பொலா போர் நிறுத்தம் வருமா? அமெரிக்கா என்ன செய்கிறது?26 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கிறது. கேள்வி: இந்த சட்டத்தின் மூலம் என்ன பாதுகாப்பு கிடைத்தது? பதில்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படும். விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது. சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும். இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்பு, மின்சாரம், நீர் விநியோகம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை இதன் கீழ் தடைசெய்ய முடியாது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை இந்தச் சட்டம் பாதிக்காது. தமிழ்நாட்டில் வேர்க்கடலை பயிரிட குஜராத்தில் விதைகளை வாங்கும் விவசாயிகள் - என்ன காரணம்?25 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை இந்தச் சட்டம் பாதிக்காது. கேள்வி: இப்போது எழுந்துள்ள சர்ச்சை என்ன? பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் எழுத்து மூலமாக பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தார்: 1. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது? 2. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன், எரிவாயு துரப்பணத்திற்காக சூழல் அனுமதி அல்லது தடையில்லாச் சான்றிதழ் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரம் என்ன? அனுமதி கோரப்பட்ட இடங்கள், நிறுவனங்களின் விவரங்களையும் தரவும். 3. டெல்டா மாவட்டங்கள் மாநில அரசால் சிறப்பு விவசாய மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, எண்ணெய், எரிவாயு துரப்பணத் திட்டங்களைத் தடுக்க மத்திய அளவிலான கொள்கை ஏதும் உள்ளதா? இதற்கு மத்திய அமைச்சகம் பின்வரும் பதில்களை அளித்தது: "1. மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. மூன்று திட்டங்களுக்கு ஏற்கனவே பெறப்பட்டிருந்த சூழல் அனுமதி மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2. கடந்த ஐந்து ஆண்டுகளில் பின்வரும் நிறுவனங்கள் சூழல் அனுமதி கோரிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வுக்காக 20 கிணறுகளைத் தோண்ட ONGC அளித்த விண்ணப்பம். நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் துரப்பணத்திற்காக Cairn Oil & Gas நிறுவனத்தின் மூலம் வேதாந்தா அளித்த விண்ணப்பம். கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் துரப்பணத்திற்காக Cairn Oil & Gas நிறுவனத்தின் மூலம் வேதாந்தா அளித்த விண்ணப்பம் ஆகியவை நிலுவையில் உள்ளன. 3. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் சில பகுதிகளின் சிறப்புப் பாதுகாப்பிற்காக அந்தப் பகுதிகளை Eco Sensitive Zone (ESZ)/ Eco-Sensitive Area (ESA) என அறிவிக்கிறது. தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த அமைச்சகத்திற்கு அப்படி எந்தக் கோரிக்கையும் வரவில்லை. மேலும், எண்ணெய்வயல், எரிவாயு துரப்பணச் சட்டம் மற்றும் விதிகளில் இப்படி அறிவிக்க எந்த விதிமுறையும் இல்லை". 2020-ஆம் ஆண்டில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கிறது; ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியிருப்பதால் காவிரி டெல்டா பகுதிகள் உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களா என சர்ச்சை எழுந்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?22 நவம்பர் 2024 பட மூலாதாரம்,X/ADVTSUDHA படக்குறிப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா கேள்வி: ஆகவே, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அனுமதிக்கப்பட்டது செல்லாதா? பதில்: அப்படியல்ல என்கிறார்கள் நிபுணர்கள். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு தனது சட்டத்தின் மூலமாக அறிவித்தது. மத்திய அரசு தெரிவித்துள்ள EcoSensitive Zone (ESZ )/ Eco-Sensitive Area (ESA) என்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, மலை பகுதிகளை பாதுகாக்க அளிக்கப்படும் அறிவிப்பு. டெல்டா பகுதியில் உள்ள விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் இதுபோன்ற அறிவிப்பு தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இது குறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணியை முதலில் பார்க்கலாம். மத்திய அரசானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான சட்டத்தை 2020ல் திருத்த முடிவுசெய்தது. ஆனால், இந்தச் சட்டம் திருத்தப்படவில்லை ''என்றார் மேலும் அவர், ''மாறாக சில பகுதிகள் மட்டும் அரசிதழின் மூலம் அறிவிப்பாக வெளியிடப்பட்டன. அதன்படி, எண்ணெய், எரிவாயு போன்றவை இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யும் பணிகள், A பிரிவிலிருந்து B பிரிவுக்கு மாற்றப்படும். A பிரிவில் உள்ள திட்டத்திற்கு பொதுமக்களின் கருத்தைப் பெற வேண்டும். B பிரிவில் உள்ள திட்டங்களுக்கு பொது மக்களின் கருத்தைக் கேட்கத்தேவையில்லை. ஆனால், சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்தான் வழங்கவேண்டும்'' என்கிறார் ''இந்த நிலையில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் இயற்றப்பட்டது. ஆகவே, புதிதாக அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்தால் மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ள பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்காது. கடந்த ஐந்தாண்டுகளாக புதிதாக எந்தத் திட்டத்திற்கும் மாநில அரசு சூழல் அனுமதியும் வழங்கவில்லை. ஆகவே, வேளாண் மண்டலத்தைப் பாதுகாக்க மாநில அரசின் சட்டமே போதுமானது. மத்திய அரசின் ESZ ஒரு பகுதியில் அறிவிக்கப்பட்டால் ஒரு சின்ன மேம்பாட்டுத் திட்டத்தை, குறிப்பாக புதிதாக ரோடு போடுவது போன்ற திட்டங்களைக்கூட செயல்படுத்த முடியாது. மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், மத்திய அரசின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றச் சட்டம்தான். ஆகவே, மத்திய அரசு புதிதாக ஏதும் செய்யத் தேவையில்லை" என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cp81gny4r89o
  21. வவுனியாவில் கடும் மழை: அரசதிணைக்களங்களும் நீரில் முழகியதுடன் மன்னார் வீதியும் போக்குவரத்து தடை 27 NOV, 2024 | 02:06 AM வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் எனபன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மாகவித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வவுனியாவின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் வெள்ள நீரில் முழ்கின. இதனையடுத்து, வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகரசபைச் செயலாளர், மாவட்ட அனத்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/199790
  22. இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா மாணவன் தேசிய ரீதியில் சாதனை: தேர்தலில் பயன்படுத்த ஜனாதிபதிடம் கோரிக்கை 27 NOV, 2024 | 02:21 AM இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க கூடியதாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்த வாக்குளை அறியும் வசதியும் காணப்படுகின்றது. போலியான முறையில் மீண்டும் ஒருவர் வாக்குகளை அளிக்க முயன்றால் அதனை அந்த இயந்திரம் நிராகரித்து குறித்த நபரை வெளிப்படுத்தும் வகையில் தொழில் நுட்பத்தை பயனபடுத்தி இவ இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட புத்தாக்க போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன், மாகாணத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் முதலாம் இடத்தையும் குறித்த கண்டுபிடிப்பு பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவனுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து வாழத்துக்கள் குவிந்த வண்ணமுள்ளது. இது குறித்து சி.கபிலாஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் செலவு அதிகமாக காணப்பட்டதாக எமது பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை குறைக்கும் வகையில் ஏதாவது செய்ய முடியுமா என புத்தர்க்க போட்டியில் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த இயந்திரம். அத்துடன், குறித்த இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்தித்தை மேலும் மெரு கூட்டி எதிர்காலத்தில் தேர்தல்களில பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. பாடசாலையின் மாணவர் பாராளுன்ற தேர்தலில் இந்த இயந்திரத்தை பயன்படுத்தினர். தேர்தல் செலவுகளை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ள ஜனாதிபதி எனது இக் கண்டு பிடிப்பை பார்வையிட்டு, செலவு குறைந்த முறையில் வாக்களிக்க கூடியதாக இவ்வாறான இயந்திரத்தை மெருகூட்டி பயன்படுத்த தனக்கு உதவ வேண்டும எனவும் அம் மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/199792
  23. யாழில். சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்கள் பாதிப்பு 26 NOV, 2024 | 11:10 PM யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 2ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335 பேரும், யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1520 பேரும்,சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 371 குடும்பங்களைச் சேர்ந்த 1462 பேரும்,சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 416 குடும்பங்களைச் சேர்ந்த 599 பேரும், காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேரும் பாதிக்கப்பட்டனர். தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 294 பேரும், நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும் உடுவில் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும் வேலணை பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழு பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199786
  24. 26 NOV, 2024 | 06:02 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத்தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் தாம் போட்டியிட்ட தேர்தல் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தமது பிரச்சார செலவுகளை குறித்த காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலில் வெற்றிப் பெற்ற மற்றும் வெற்றிப் பெறாத சகல வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சார செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜனாதிபதித் தேர்தலின் போது குறித்த காலப்பகுதிக்குள் செலவு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத தரப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்தி முடித்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கான தேவை காணப்படுகிறது. அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்னணியில் முதற்கட்டமாக காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு 21 நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணிகளினால் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படாமல் பிற்போடப்பட்டது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். வேட்புமனுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவினால் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது .சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது. ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/199754

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.