Everything posted by P.S.பிரபா
-
933F688F-248F-40F5-9576-1D01F6AC521E.jpeg
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
A3B02BFD-952C-421D-90C4-7A9FC281E23C.jpeg
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
உங்களது ஊர்ப் பயண அனுபவத்தை நகைசுவையாக நகர்த்திக்கொண்டு போகிறீர்கள், நன்றாக உள்ளது. COVID பயணக்கட்டுப்பாடுகளை இங்கே எடுத்த கையோடு நானும் தை மாத ஊருக்கு சென்றிருந்தேன்.. வழமையான ஊர்ப்பயணங்களை விட சற்று வித்தியாசமாகவே இருந்தது. எனது நண்பர்கள் வரும் வாரங்களில் போக உள்ளார்கள், ஆனால் முன்பு மாதிரி அதிக கட்டுப்பாடுகள் இல்லை. நான், யாழில் எழுதும் எனது உள்ளூர் பயண அனுபவங்கள், ஊர்ப் பயண அனுபவங்களிற்கான படங்களை விம்பகத்திலும், postimage website மூலம் இணைப்பதுண்டு. படத்தின் அளவைக் கூட postimage மூலம் குறைக்கலாம். அதே போல இணைக்கும் பொழுது no expiry தேர்ந்தெடுத்தால் படங்கள் காணாமல் போகாது..
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
எனக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது ஏனெனில் இன்னமும் இந்த செய்தி பரவிக்கொண்டுதான் உள்ளது(WhatsApp/Viber) .. எனக்கு நட்புவட்டத்தில் உண்மையை சொல்லமுடியவில்லை, ஏனெனில் நான் எனது உண்மையான பெயரிலேயே இங்கே எழுதுவதால் ஆனால் அவர்களிடம் ஆதாரம் எங்கே? April fool செய்தியாக இருக்கலாம் தானே? என சிலதை கூறிவிட்டு forward செய்ய வேண்டாம் என கூறினேன்.. கேட்பார்களோ தெரியாது😔😔..
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
அப்படிதான் சற்று முன்பு என் தந்தையுடன் கதைத்தபோது கூறினார்.. நேற்று அவருடன் கதைக்கமுடியாமல் போய்விட்டது.. இன்று கதைத்த பொழுதுதான் தெரிந்தது. பாடசாலைகள் கூட நாளையிலிருந்து விடுமுறை எனவும், ஊரடங்கு என்றும் கூறினார்..
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
இல்லை, ஆனால் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தம் தரக்கூடிய நாடுகள் எங்கே இருக்கின்றன என்றால் அது மேற்குலக நாடுகளில்தான் உள்ளது என நினைக்கிறேன். அதனால்தான் அவர்களுடன் இணைந்தோ இல்லை அனுசரித்தோ நடக்கவேண்டும் என நினைக்கிறேன். நான் நினைப்பது தவறாக இருக்கலாம். எங்கள் விடயத்தில் யார் ஓரளவிற்கேனும் உதவுவார்கள் என்பதை/சரியானதை விளங்கப்படுத்தினால் விளங்கிக்கொள்கிறேன்.. இந்த உக்ரோன் போரைப் பற்றி இணையத்தளங்களில் அவர்கள் மீது வெறுப்பை காட்டி எழுதியதால்தான் இந்தளவு கருத்துக்களும், இல்லாவிடில் ஏதோவொரு செய்தியாக பார்த்துவிட்டு மனதிற்குள் புடினை சபித்துக்கொண்டு பாதிக்கப்படும் மக்களிற்காக இரக்கப்பட்டிருப்பேன் ஏனெனில் போர் ஏற்படுத்திய வலிகளை அனுபவித்துக் கொண்டு இருப்பதால் அதனை வெறுக்கிறேன்.. அவ்வளவுதான்.. நன்றி அண்ணா.
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
வணக்கம் குமாரசாமி அண்ணா! வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா?
-
இரத்த சரித்திரம்
இதென்ன பேய்/பிசாசு கதையோ? ஏற்கனவே Night Stalker பார்த்துவிட்டு செம கலக்கத்தில இருக்கிறேன்.. இனி இதற்குள் வரவில்லை நன்றி. வணக்கம்
-
அந்த மனிதன்
அடுத்த பகுதி வரும் வரைக்கும் அந்த மனிதன் ஒரு புரியாத புதிர் தான்
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
நீங்கள் யாரிடம் கேட்கலாம் என நினைக்கிறீர்கள்? இந்த இந்தியா, சீனா, ரஷ்யாவிடமா? அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே, இன்னமுமா அவர்களை நம்புகிறீர்கள்? சரி, அதைவிடுங்கள் முன்பு எங்களை ஏறெடுத்துப் பார்க்காதவர்கள்(மேற்கு) இன்று தங்களது தேவைக்கு வரும் பொழுது அதை முறியடிப்பது யார்? //எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? // போராட்டதை அவர்கள் மட்டுமா முறியடித்தார்கள்? //மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.// இருக்கலாம். ஆனால் தற்பொழுது மனித உயிர்கள் அநியாயமாக பலியிடப்படும் பொழுது அதை நியாயப்படுத்துவது கூட அறமென்பது இல்லை என்பதுதான் என் எண்ணம்..
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
என்னுடைய எண்ணமெல்லாம் தற்போதைய போரைவைத்து நாங்கள் என்ன செய்தோம் என்பதே!! ஒப்பிட்டு காட்டி எங்கள் நிலையை பார்க்க கேட்கிறமோ இல்லை இந்த மேற்கின் எதிரியை புகழ்ந்து இன்னமும் எங்கள் நிலையை மோசமாக்கிறமோ!! நன்றி.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
@Kapithan வணக்கம் அண்ணா, அவர் முதலே உங்கள் எல்லோரிடம் கேட்டிருந்தார்.. ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் எழுதியிருந்தார்.. ஆனால் ஒருவரும் கவனிக்கவில்லை???? கவனித்திருந்தால் நேரத்தை வீண் விரயமாக்கியிருந்திருக்க மாட்டீர்கள்.. உண்மையில் உங்கள் எல்லோருக்கும் துரோகத்தின் நாட்காட்டி எழுதும் அவரால் நீங்கள் நினைப்பது போல இருக்கவில்லை என்ற கோபமோ என நினைக்கிறேன். அங்கே கூட அவர் அப்படி எழுதுவதை ஒருபட்ச கட்டுரை என சிலர் கூறினார்கள் பின் அவர் கேட்டுக்கொண்ட படி விலகியே இருந்தார்கள். இங்கே மட்டும் இது தனது சொந்த ஆக்கம் என கூறியபின்பும் எத்தனை இடையூறுகள்.. நன்றி..
-
புட்டினும் புதுமாத்தளனும்
@goshan_che உங்களுடைய நகைச்சுவையில் இருக்கும் கருத்து அருமை!! மீண்டும் கண்டது சந்தோஷம்!
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
பயணக்கட்டுரைக்கு நன்றி அங்கிள்…அழகான ஒரு நெடுஞ்சாலை, நல்லதொரு அனுபவத்தை தந்திருக்கும்!!
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
பரவாயில்லை அங்கிள்… எனக்கும் இடங்கள் அதிலும் காடு மலை கடல் என்பனவற்றை பார்க்க மிகவும் விருப்பம்.. அதிலும் ஒரு தரமாவது USல் உள்ள Grand Ganyan பார்க்க விருப்பம்..let’s see
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேராசைப்படாமல், அவரவர் serviceabilityற்கு ஏற்ப ஈடுபடுவதில் பிரச்சனை இல்லை என்பது எனது தனிப்பட்ட எண்ணம். மேலும் personal guarantee பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. Residential investment mortgageற்கு(வர்த்தக நோக்கமில்லாத) எப்படி வரும் என்பதில் சந்தேகம் உள்ளது, மறைமுகமாக என்றால் கூட(terms and conditions) உங்களது இருக்கும் வீட்டையும் சேர்த்து (collateral securities) இந்த investment property வாங்கினால்தானே இந்த பிரச்சனை!. நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம் எனக்கு பங்குகள் பற்றிய அறிவு இல்லை ஆனால் எனது தந்தை என்னிடம் அடிக்கடி கூறும் வீடு/காணி எப்பொழுதும் பெறுமதியானது என்பதுதான்..let’s see!
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நல்லது அண்ணா.. வைத்தியர்களின் வழிகாட்டலில் நீங்கள் பூரண குணமடைவீர்கள் என்பதால் மனதை தளர விடவேண்டாம்..
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
மிக்க நன்றி அண்ணா!! உங்கள் அனைவரதும் ஊக்கமும் ஆதரவும் தான் என்னை இவை போன்ற காட்சிகளை படம் பிடிக்கும் ஆர்வத்தை வளர்க்கிறது. யாழ் இணையம் இல்லாவிட்டால் என்னால் இவற்றை செய்திருக்கமுடியாது.. யாழ் இணையத்திற்கும் என்னை ஊக்குவிக்கும் கள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிக்க நன்றி அங்கிள்! அதற்கு இன்னமும் நாட்கள் இருக்கிறது என நினைக்கிறேன்..
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
நன்றி தமிழ் சிறி அண்ணா! நீங்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறேன்? வணக்கம், நன்றி. இங்கே வெளியூருக்கு போக தடைகள் எடுத்த ஆரம்பத்தில் போனதால் 48hrsகுள் எடுத்த negative PCR, இலங்கைக்கான health declaration form, onlineல் complete செய்து QR code எடுத்துக்கொண்டு போனேன். பின்பு அங்கிருந்து வரும் பொழுது 48hrsற்குள் எடுத்த negative PCR( யாழ்பாண ஆஸ்பத்திரியில்) எடுத்துக்கொண்டு வந்தேன். Hotel Quarantine அப்பொழுது இருக்கவில்லை. நேரே யாழ்ப்பாணம் போக முடிந்தது.. கட்டுநாயக்க விமான நிலையம் நான் போகும் பொழுது சன நடமாட்டம் அதிகளவு இல்லை.. checkingம் இல்லை. இப்பொழுது விதிமுறைகள் மாறிவிட்டதாக கூறினார்கள். முழு விபரம் தெரியவில்லை. இம்முறை அப்பாவுடன் சேர்ந்து சில வேலைகள் முடிப்பதே நோக்கமாக இருந்தமையால் அதிகளவு நேரத்தை அவருடனும் அலுவலகங்களிலுமே செலவழிக்கமுடிந்தது.. townற்கு போக கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தமையால் புத்தக கடைப் பக்கம் இம்முறை போகமுடியவில்லை.. அதே போல யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிக்கும் தயக்கம் காரணமாக போகவில்லை. எனது தங்கை கூறினாள், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ஒரு நல்ல புத்தகக் கடை(வெண்பா நூல்மனைக் கூடம்) உள்ளது என்று..அடுத்த முறை போக இருக்கிறேன்!
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை மேம்படுத்தும் நோக்கில் கட்டப்படும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டு மண்டைதீவு வழியால் சென்ற பொழுது மண்டைதீவில் ஆஸ்பத்திரி கட்டும் யாழ் இணைய திரி ஒன்றும் நினைவில் வந்து போனது!!! சிறுவயதில் எனது அப்பு அம்மம்மாவுடன் இந்த வெள்ளைக்கடற்கரைக்கும் அதன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கும் ஒரேயொரு தரம் போனது நினைவில் உள்ளது.. அதன்பிறகு இம்முறை தான் போனேன்.. அங்கே போக சந்தர்ப்பங்கள் இருந்தும் இத்தனை காலமும் போனதில்லை, ஆனால் இம்முறை பார்க்க வேண்டும் போல மனதிற்கு தோன்றியது!!!இந்த வெள்ளைகடற்கரை என நான் நினைத்து வைத்திருந்தது சாட்டி என பின்னாளில் அறிந்து கொண்டேன். எப்பொழுதும் போல நல்லூர் மனதில் தனியான ஒரு இடத்தை பிடித்தது!! அதிகாலையில் பொங்கல் பொங்கிய இடத்தில் மாலையில் மத்தாப்பும் சக்கர வானமும்(?) சிரித்தது!!! பாரதியாரின் காணி நிலம் வேண்டும் கவிதையில் வரும்.. பத்து பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும் - அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற்படவேணும்; - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும்.. வரிகளை நினைக்க வைத்த தென்னங்காணி!! மீண்டும் கொழும்பில் மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை பார்த்த மகிழ்ச்சி..சற்றே திரும்பி தூரத்தே தெரியும் தாமரை மொட்டைப் பார்த்ததும் காணாமல் போய்விட்டது!! அவுஸ்ரேலியா திரும்பும் பொழுது மனமும் இந்த இரவின் கறுப்பு போல கவலை கொண்டது!! இங்கே காலை வேளை சுக்கு கோப்பியை குடிக்கும் பொழுது காலஞ்சென்ற என் அம்மா உருவாக்கி விட்டுப் போன கோப்பி மரங்களையும், அவர் போட்டு தந்த கோப்பியையும் என் இலங்கை பயணத்தையும் நினைத்தபடி நிகழ்வுலகிற்கு திரும்பினேன்..!! முற்றும்.. நன்றி - பிரபா
-
நினைவுகளின் தொகுப்பு - யாழ்ப்பாணம் 2022
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - நல்லூர் 2022
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - கொழும்பு 2022
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - யாழ்ப்பாணம் 2022
From the album: நினைவுகளின் தொகுப்பு
-
நினைவுகளின் தொகுப்பு - சாட்டி 2022
From the album: நினைவுகளின் தொகுப்பு