Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by P.S.பிரபா

  1. Okay..என்னவோ சொல்ல வாறீங்க..விளங்கின மாதிரியும் விளங்காத மாதிரியும் .. பார்ப்போம்..
  2. நாங்கள் எங்கள் உள்மனதில் எப்படியான எண்ணங்களை வைத்திருக்கிறோம், எதனை நம்புகிறோம் என்பதை வைத்துத்தான் எங்களது பார்வையும் நேரா அல்லது கோணலா எனத் தெரியும்.. உளவியல், உளநல மருத்துவம், அவை தொடர்பான ஆலோசனைகள் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள், ஆனாலும் எங்களது சமூகத்தில் அதிலும் வெளிநாடுகளிலும் கூட அந்த துறைகளில் படித்து தேர்ச்சி பெறுவோர் குறைவு எங்களது சமூகத்தில் இவை இந்தமாதிரியான துறைகளுக்கு மதிப்பும் இல்லை. ஏனெனில் எங்களது பார்வை இந்த விடயத்தில் கோணலாக இருப்பதுதான். பின் ஒன்று நடந்தவுடன் ஜயோ ஒருத்தருக்கும் இப்படி என தெரியாதே என கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? கதைப்பதற்கோ, உதவி கேட்பதற்கோ அல்லது உதவுவதற்கோ வழிவிட்டிருந்தால் தானே!!. நன்றி அண்ணா இந்த விடயத்தைப் பற்றி எழுதியது..
  3. ஊருக்கு விடுமுறையில் போவதற்கும் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது ரதி!! விடுமுறையில் போகும் பொழுது நாங்கள் தேவையில்லாதவற்றைப் பேசியோ ஒப்பிட்டோ கதைப்பதில்லை. தேவையில்லாமல் அறிவுரை கூறவும் மாட்டோம். இடம், உறவுகளின் தன்மைக்கேற்பவே, அங்கே உள்ளவர்களின் நிலையை அறிந்து அதற்கேற்பவே நடப்போம். ஆனால் நிரந்தரமாக அங்கே வசிக்க நினைத்தால், காலப்போக்கில் சட்டங்கள், நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் என பலவற்றை ஒப்பிடத் தொடங்குவோம். நல்ல விடயங்கள் என சிலவற்றை அங்கே நடைமுறைப்படுத்த நினைப்போம். விதிமுறைகள் பிழையாகத் தெரியும். இதனால் தேவையில்லாத பிரச்சனைகளை எதிர் நோக்குவோம். மற்றப்படி அங்கே உள்ளவர்களுக்கு பிரச்சனைகளைத் கொடுக்காமல் நான் ஒரு foreign return என்று பந்தா காட்டாமல், காசு இருக்குது அதனால் என்னவும் செய்யலாம் என இல்லாமல் அங்கே உள்ளவர்களைப் போல(பெரும்பாலான) சாதாரன வாழ்க்கையை நடத்த இயலும் என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அங்கே அப்படியில்லலை(விதி விலக்குகளும் இருக்கலாம்). அநாவசியமான ஆடம்பர வீடுகளும், கொண்டாட்டங்களும் இவற்றையெல்லாம் பார்க்கும் இன்னொரு பிரிவினர் அந்த நிலைக்கு தாங்களும் வரவேண்டும் என்பதற்காக, பணம் உழைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கான வழியில் போய் சீரழிகிறார்கள். என்னைப்பொறுத்தவரை முன்னரைவிட வர்க்க வேறுபாடுகள் அதிகரித்தே உள்ளது. இது எப்படி உருவானது? நான் கண்ட கேட்ட விடயங்களை வைத்து நிறையக் கூறலாம் ஆனால் அங்கே போய் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் அதுபோல உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகளுக்குள்ளும் இந்த விடயம் வரக்கூடாது. ஆகையால்தான் புலம்பெயர்ந்தோர் அங்கே போகும் பொழுது யோசித்து நடக்கவேண்டும் என நினைப்பது. நீங்கள் என்னைப் பற்றி தெரியாமல் நீங்களாகவே ஒரு முடிவிற்கு வந்திருக்கிறீர்கள். இது தேவையற்ற ஒன்று. நன்றி.. உண்மை
  4. பகிடி பகிடியாக தொடங்கி ஒரு சீரியசான விடயத்தையும் எழுதியுள்ளீர்கள் சிறி அண்ணா.. நல்ல விடயம்.. உங்களது ஜேர்மன் ஆள் கூறியது என்னளவில் சரியே இன்றைய நிலையில் அங்கே போய் ஒரு பொது விடயங்களிலும் மூக்கை நீட்டாமல் இருந்தால் கொஞ்சம் மரியாதையாக இருக்கலாம்..இங்கே சட்டம் சுதந்திரம் என்பவற்றை அனுபவித்து விட்டு அங்கே போய் இது பிழை..அது சரி என்றால் அங்கே இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் வீண் கரைச்சலைத்தான் உருவாக்குவோம்.. எனது அனுபவத்தில் பணம் மட்டும் எதையும் தீர்மானிக்கும் கருவியில்லை. மருந்து இல்லை என்றால் அவ்வளவுதான். சில சமயங்களில் பொருட்களும் இல்லை. இந்த நிலையை மாற்ற முடியாது ஏனெனில் நாடு இவ்வளவு கீழ் நோக்கிப் போயும் கூட தமிழர்களுக்கு நல்லது நடக்க கூடாது என நினைக்கும் பெரும்பான்மையே அதிகம். அதே போல உண்மையான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அக்கறையும் அங்கே உள்ள எங்களது மக்களுக்கு இல்லை(என்னைப் பொறுத்த வரை). எங்கள் எல்லோருக்கும் நாங்கள் பிறந்த நாடு என்ற பாசம் என்பது இருந்தாலும் கூட நடைமுறையில் சாத்தியமானதைத்தான் செய்யலாம்.. இது அங்கே உள்ளவர்களுக்கும் நன்கு விளங்கும். ஆனால் எங்கட புலம்பெயர்ந்தவர்கள் அங்கே போய் செய்யும் வேலைகளால் என்ன மாதிரியான மறைமுக விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்/ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அங்கே போகும் சமயங்களில் உணரமுடிகிறது..
  5. மரத்தை வெட்டுவதை விட இப்படி போட்டுள்ளது பரவாயில்லை என்றே நினைக்கிறேன்
  6. தாளையடி அங்கிள்.. அந்த நீலக்கடலும் அலைகளும்.. தென்னை மரங்களும்.. மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேறு வசதிகள் இல்லை.. ஆனாலும் இந்த இடம், அதன் அமைதி என்னை மீண்டும் மீண்டும் அங்கே போக வைக்கிறது.
  7. பொல்லாத மனிதர்களிடமிருந்து ஒதுங்கி தனித்திருக்கும் மரமும் மாதாவும் தான் ஒருவருக்கொருவர் துணை… யாழ் மாவட்டம் எத்தனை அழகிய கடற்கரைகளை உடையது என்பதற்கு இந்த இடமும் ஒரு உதாரணம்.. எத்தனை அழகான அமைதியான இடம்..
  8. “மான் கண்ட சொர்க்கங்கள்” இந்தப் பாடலைக் கேட்க உங்களுக்குப் பொறுமை இருக்கவேண்டும்.. கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் ஒலிக்கும் இந்தப் பாடலை SPB பாடியிருக்கும் விதம் அருமை.. பாடல்வரிகள் கண்ணதாசன் என நினைக்கிறேன்..
  9. அலரி மலரும் ஆயுதமும் அருகருகே…பார்வைக்கு மட்டும்..
  10. ஆலமர நிழலில் இளைப்பாற இம்முறை புத்தனை முந்திவிட்ட சித்தன் சிவன்… நான் அறிய இந்த இடத்தில் எந்த சிலையும் இருந்ததில்லை. இம்முறை கண்டதால் ஒரு ஆச்சரியம்..
  11. வாழ்க்கை ஒரு வட்டம் இந்த சைக்கிள் சில்லைப் போல!! ஆனால் - உயிர் அந்தரத்தில் ஊசாலடும் இந்த விளக்கு போல!!!
  12. ரதி.. எதிர்பாராத விதமாக இந்த ஆடிக் கடைசியில் யாழ்ப்பாணம் போயிருந்தேன். அப்பொழுது எனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் நான் போன இடம் இந்தப் புத்தகசாலைதான்(குயின்சி புத்தக சாலை- KKS வீதியில் உள்ளது) உங்களது ரசனை எனக்கு தெரியாது ஆனால் வெளிநாட்டில் இருந்து எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, உள்ளூர் எழுத்தாளர்கள், வேற்று மொழி எழுத்தாளர்களின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள்(தமிழ் மொழி பெயர்ப்பு), வேற்று மொழியில் பலராலும் போற்றப்பட்ட நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் என நிறைய உள்ளது. என்னைப் பொறுத்த வரை, இப்போதைக்கு இது நல்லதொரு புத்தகசாலை.
  13. யாழ்ப்பாணத்தில் என்னோடு சேர்ந்து பெற்றோல்/டீசலிற்கு நிற்கும் வரிசையை பார்க்கும் நன்றியுள்ள ஜீவன்!!
  14. New Zealand's Hakaவிற்கு சற்றும் சளைக்காத Tonga நாட்டினரின் Sipi Tau, இதுவும் பார்வையாளர்களை பரவசப்பட வைக்கும்!! 3.56ல் இருந்து பார்க்கவும்!!!
  15. நடுக்கடலில விடாமல் பத்திரமாக எதியோப்பாவில இறக்கிவிட்டுவிட்டதற்கு ஏஜென்சிக்காரனுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும் இல்லையோ?? Anyway, உங்களைப் போன்றவர்களின் கருத்துகளை அறிய சந்தர்ப்பம் கிடைத்தது சந்தோஷமே.. நன்றி Goshan!!
  16. 1968 classic 🎶 by Engelbert Humperdinck😊.. Every day I wake up, then I start to break up Knowing that it's cloudy above Every day I start out, then I cry my heart out Lonely is a man without love I cannot face this world that's fallen down on me So, if you see my girl please send her home to me Tell her about my heart that's slowly dying Say I can't stop myself from crying
  17. நகைச்சுவையாக எழுதினாலும் அதிலுள்ள கருத்துகள் இன்னமும் உறைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.. அது போகட்டும் சோமாலியாவில் நிலமைகள் எப்படி என அறிய ஆவல்.. 😊
  18. உண்மைதான்.. எனது தந்தை சில வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்த விடயங்களை நிறைவேற்ற, COVID கட்டுப்பாடுகள் எடுத்த உடனே பறந்து போய் வேலையை முடித்து ஒரு மாதம் நின்று விட்டு வந்துவிட்டேன்😊 இப்பொழுது நிலமை சரியாக இல்லாதநிலையை பார்க்கும் பொழுது நல்லகாலம் போய் வேலையை முடித்து கொடுத்தமையால் ஒரு மன அமைதி இருந்தாலும் சிலவற்றை யோசிக்கும் பொழுது கவலைப்படுவதும் உண்டு.. அங்கே உள்ளவர்களில் கல்வியை கற்று இரண்டு degree இருந்தாலும் அதற்கேற்ற வேலை இல்லை.. இன்னும் சிலர் O/L படிப்பையே நிறுத்துகிறார்கள்.. பலவிதமான கோலங்களில் அங்கே உள்ள சமுதாயம் வளர்ந்து வருகிறது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.