Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. சிறியர், இங்கு போர் சம்மந்தமாக பகிரப்படும் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கின்றேன். வேறு பல தகவல் தளங்களிலும் பொது அபிப்பிராயங்களை பார்க்கின்றேன். இங்கு பிரச்சனை என்ன என்றால் பகிரப்படும் தகவல்கள் ஏதோ ஒரு தரப்புக்கு பக்கச்சார்பானதாகவோ/ஆதரிப்பதாகவோ/ஊக்குவிப்பதாகவோ உள்ளன. சுய, விறுப்பு வெறுப்புக்களை ஒரு பக்கம் தூக்கி எறிந்துவிட்டு யதார்த்தத்தை, உண்மை நிலையை அறிவுபூர்வமாக ஆராயும் பக்குவ நிலையான தகவல்கள் ஏறக்குறைய எங்கும் இல்லை. சுய அடையாளங்கள், குறுகிய வட்டங்களுக்கு அப்பால் சென்று பரந்த வீச்சில், அனைவருக்குமான சிறப்பான எதிர்காலம் என பார்த்தால் இப்போதுள்ள குழப்பங்கள் எமது எதிர்காலத்து வாழ்க்கையை, எமது சந்ததிகளை வெகுவாக பாதிக்கும். நொருங்கிய இடிந்த கட்டடத்துக்குள் குற்றுயிராக கிடப்பது எந்த நாட்டவன் எந்த இனத்தவர் என இனம்கண்டு அவர்கள் மீது இரக்கம் கொள்வதும் அல்லது திருப்தி அடைவதும், ஆட்களின் அடையாளத்தின் அடிப்படையில் அவர்களது இறப்பை கொண்டாடுவதும், துக்கம் அடைவதும் நாங்கள் அடிப்படை மனித விழுமியங்கள், உயர்வான நிலையை விட்டு விலகி இதர காட்டு விலங்கினங்கள் போல் பின்னோக்கிய பரிணாமத்திற்கு திரும்புகின்றோம் என்பதை குறிக்கின்றது.
  2. இவர்களினால் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
  3. எனக்கு அடக்க முடியாமல் ஒண்டுக்கு அடிக்க வருது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஜிப்பை கழற்றி ஒரு ஓரமாக ஒண்டுக்கு அடிக்க நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?
  4. போர் காலத்தில் பொக்கற் ரேடியோ பிரபலம். அப்துல் ஹமீதின் பாட்டுக்கு பாட்டு தொடக்கம் செய்திகள் வரை (பி பி சி இழுத்ததோ நினைவில்லை.) கேட்டோம். சைக்கிள் பெடலை அடித்து டைனமோ மின்சாரத்தில் வானொலி கேட்ட அனுபவமும் உண்டு. குண்டு வீச்சு விமானங்களில் நடைபெறும் உரையாடலை 1987 காலத்திலேயே கேட்ட நினைவு உண்டு. சிங்களம் விளங்குவது இல்லை. ஆனால், எவ் எம் அலைவரிசையில் உரையாடலை கண்டுபிடித்துவிட்டாலே பெரிய சந்தோசம் தான். அந்நேரங்களில் சிங்களம் தெரிந்தவர்கள் அல்லது தெரியும் என சொல்பவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவு இல்லை. அவர்கள் என்ன சொல்லப்போகின்றார்கள் வாயை பார்த்துக்கொண்டு நிற்போம். அந்த காலங்களில் எவ் எம் அலைவரிசையில் விமானங்களின் உரையாடலை கேட்பது இலங்கை அரசினால் தண்டனைக்குரிய குற்றம் என நினைக்கின்றேன்.
  5. என்னைய்யா இரண்டு கிழமைகளில் முடியும் என்றாங்கள் இது வருட கணக்காய் இழுபடும் போல் உள்ளது. அப்போ பெற்றல் விலை ஏறினது ஏறினதுதானா?
  6. பாஞ்ச் ஐயா, இது கற்பனை புனைவோ அல்லது உண்மையோ? சித்தப்பாவிடம் அடிவாங்கி பின்னர் யாழ் இணையத்தில் இணைந்து கருத்துக்கள் பகிரும் அந்த உறவு யார்? இளம் வயது உடையவரோ?
  7. அடுத்த கட்ட போர் தயார்ப்படுத்தல்களிற்கு தேவையான கால அவகாசத்தை பெறுவதற்கு மற்றும் ஏனைய திசை திருப்பல்களிற்கு டிரம்ப் ஐயா இப்படி கூறக்கூடும். முன்பும் பேச்சுவார்த்தை போரிற்கான கால அவகாசத்தை பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டது. சிறிது ஆறப்போட்டுவிட்டு பின்னர் திடீரென மூர்க்கமாக தாக்குவார்கள் என நினைக்கின்றேன்.
  8. எனக்கு எமது வரலாற்று பாடம் ஒரு விடயத்தை நினைவுபடுத்துகின்றது. விடுதலை புலிகள் அமைப்பு மாவிலாறு நீர்த்தேக்கத்து நீரை திறந்துவிடாது தடைசெய்தமையும் அதைத்தொடர்ந்து இராணுவ நகர்வுகள் நடைபெற்று முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் முற்றுப்பெற்றது. ஹோர்மூஸை ஈரான் முடக்குவது போரில் ஈரானை முழுமையான தோல்விக்கு இட்டுச்செல்லும் என ஊகிக்கின்றேன்.
  9. ஒப்பிலாமணி 1991 ஆண்டளவிலேயே இயக்கத்தில் இணைந்து இருக்கலாம் என அறிந்தேன். இவர் விசேட வேவு அணியை சேர்ந்தவராம். தொண்டமானாறு, பலாலி, மயிலிட்டி, காங்கேசந்துறை, மாதகல் என கரையோரமாக காரைநகர் வரை மிகப்பெரும் பாரிய தாக்குதலை நடாத்த இயக்கம் திட்டமிட்டதாகவும் அந்த தாக்குதலுக்கான உள்ளக புலனாய்வு, வரைபட ங்கள் வரை அனைத்தையும் கையாளும் பெரிய பொறுப்பு நிலையில் ஒப்பிலாமணி செயற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த தாக்குதலை நடாத்தும் முன்பே ஒப்பிலாமணி ஆவணங்களை கொண்டு (வசாவிளான் பகுதியாக அமையலாம்) இராணுவத்திடம் தப்பி ஓடிவிட்டார். ஒப்பிலாமணி ஓடியதால் இயக்கத்தினால் மிக நீண்டகாலமாக திட்டமிட்ட மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதாம். தாக்குதல் நடாத்தப்பட்டால் தான் மரணம் அடையவேண்டி வரும் எனும் காரணமும் ஒப்பிலாமணி ஓடக்காரணமாக அமையலாம். ஒப்பிலாமணி இராணுவத்துடன் இணைந்தது சூரியகதிர் நடவடிக்கை மூலம் இராணுவம் யாழை கைப்பற்றுவதற்கு அனுகூலமாக அமைந்ததாம். அப்போது பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் பிரதான விசாரணையாளராக நியமனம் பெற்ற ஒப்பிலாமணி இலங்கை அரசாங்கம் மூலம் பின்னர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. தன்னை இயக்கம் சிறுவர் போராளியாக பலாத்காரமாக இணைத்தது என்பது புருடா என்பதே நான் அறியக்கூடியது.
  10. ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லி அவிக்கின்றார்கள். உண்மை, பொய்யை பிரித்தறிய முடியாத நிலை. எதுவரை செல்கின்றது என பார்ப்போம்.
  11. படத்தில் எங்க ஆமிக்காரரை காண இல்லை? ஆமிக்காரர் தானே வடக்க்கில் வாழும் பெருன்பான்மை சிங்கள மக்கள்.
  12. எங்களுக்கு தெரியாத வட கொரியாவை பற்றி எங்களில் ஒருவர் விபரித்துள்ளார். வாசித்துவிட்டு சத்தம் போடாமல் போகவேண்டும்.
  13. சினிமா பாடல் இலக்கியமா அல்லது இலக்கியம் இல்லையா என்பதை கேட்பதைவிடுத்து யார் யாருக்கு ஞானபீடம் வேண்டும் என வினவுங்கள். அவர்களுக்கு வைரமுத்து ஞானபீடத்தை பெற்றதனால் ஏற்பட்ட கடி, சொறி, சிரங்கு உட்பட எல்லா உபாதைகளும் பறந்துவிடும்.
  14. சினிமா பாடல்கள் இலக்கியத்தினுள் வருகின்றது என்பது தெரியாதபடியால் கேட்டு குத்தாட்டம் போட்டுவிட்டார்கள்.
  15. வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைக்கக்கூடாது என கொக்கரிக்கும் எவரும் தாமோ, தம் சார்ந்தாரோ இந்த பாடலை, இவை போன்ற இன்னும் பலப்பல பாடல்களை கேட்கவோ, கேட்டு இரசிக்கவோ, குத்தாட்டம் போடவோ, கிளுகிளுப்பு அடையவோ இல்லை இல்லை என நம்புவோமாக!
  16. கிறிஸ்துவ மாணவர்களிற்கு பைபிளை பாடசாலைக்கு தேடிச்சென்று கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அதை அவரவர் செல்கின்ற சேர்ச்சிலேயே கொடுக்கலாம். அப்படித்தான் காலம் காலமாக நடக்கின்றது. வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் வார இறுதியில் சமய வகுப்பிற்கு சென்று வருகின்றார்கள். அங்கு தேவையானவற்றை வழங்குகின்றார்கள். இலங்கையிலும் கிறிஸ்துவ மாணவர்கள் யாராவது பைபிள் இல்லாமல் சிரமப்பட்டதாக நான் அறியவில்லை. பைபிளை கொளுத்தும் அளவிற்கு சிந்திப்பது மனப்பிறழ்வு நிலை என்பது ஒருபுறம் அமைய, பாடசாலையை மத பிரச்சார மேடையாக்குவதும் தவறானதே. அவரவர் அவரவர் மதத்தில் அவரவர் விடயங்களை கடைப்பிடிக்கும்போது சச்சரவுகள் வருவதில்லை.
  17. பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது? வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?
  18. வைரமுத்து எழுதிய பல ஆயிரம் பாடல்களில் சில நூறு முத்துக்களாவது இல்லையா? வைரமுத்து வெளியிட்ட நூல்களில் ஒரு சிலவாவது முத்துக்கள் இல்லையா? இந்த முத்துக்கள் ஞானபீடத்துக்குரிய தகுதியை கொடுக்கவில்லையா? கவிஞர் கண்ணதாசனிற்கு எவ்வாறான அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்தன என தெரியவில்லை. ஆனால், அவர் மீது வசவுகள் பாடி அவர் படைப்புக்களை நையாண்டி செய்து தமது வக்கிரங்களை கொட்டி தீர்த்த தமிழ் இலக்கிய காவலர்களின் புலம்பல்களை முன்னொரு பொழுது வாசித்துள்ளேன்.
  19. மத்திய கிழக்கு பிரச்சனைகளுடன் நம்ம உடையார் தனது கால்களை ஈரானுக்குள் ரொம்ப ஆழமாய் விட்டுட்டார் போல உள்ளது.
  20. கவிஞர் வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள்! எரிச்சல், பொறாமை மிகுந்த, சிறிய மனிதர்கள் நிறைந்தது இலக்கிய உலகம். தனக்கு பரிசு பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதை விட மற்றவனுக்கு கிடைக்கக்கூடாது என இங்கு நினைப்பவர்கள் பலர்.
  21. மேலோட்டமாக வேகமாக பதிவுகளை நோட்டமிட்ட போது அகதி முகாமில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் இணைந்தார் என விளங்க பார்த்தேன்.
  22. டிரம்ப் ஐயாவின் இளைய புதல்வன் தனது ஒரு சில பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து பியர் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக முன்னர் ஒரு செய்தி பொக்ஸ் இல் பார்த்தேன். டிரம்ப் ஐயாவின் குடும்பம் மேலும் மேலும் உயர்ந்து செல்கின்றது என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. டிரம்ப் ஐயாவிற்கு எதிலும் ஒரு வியாபார புத்தி. போரின் பாதிப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு. இங்கே வெற்றி பெறுவோர் யார் என அடையாளப்படுத்தினால் அனைவரும் பெரும் தொழில் நிறுவனங்கள், மற்றும் முதலீட்டாளர்களே. அன்றாடம் உழைத்து சீவிக்கும் சாதாரண மக்கள் அனைவரும் தோற்கும் பகுதிக்குள் வருகின்றார்கள்.
  23. மாதவிடாயை தடுக்க அல்லது பிற்போட ஊசி எடுப்பது மாத்திரை எடுப்பது பிள்ளைகளின் உடல்நலத்தை பாதிக்காதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.