Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. பெருமைப்படும்படி என்ன கூறினார் என சற்று விரிவாக கூறுங்கள் பார்போம்.
  2. இலங்கையில் பணியாற்றும் மருத்துவர்களில் பலர் வெளியில் மருத்துவ கல்வியை முடித்தவர்கள். ஆனால், காசு சல்லி வேணுமே.
  3. யாழ் மருத்துவபீடத்தினர் தங்கள் பக்கம் என்ன தவறு எப்படி ஏற்பட்டது என்பதையும் அறியத்தரலாமே. பல்கலைக்கழகத்தில் எப்படி மாணவியை பதிவு செய்தார்கள்? விடுதிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இங்கு பல தகவல்கள் தவறவிடப்பட்டுள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன. மருத்துவராக வருவதற்கு மூன்று சாதாரண சித்திகள் போதாது என்றெல்லாம் இல்லை. சாதாரண சித்திகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று பயின்று பலர் மருத்துவர்களாக வந்துள்ளார்கள்.
  4. இந்த புள்ளி விதிமுறை வீதி விபத்துக்களை குறைக்குமா பார்ப்போம்.
  5. இங்கே சோனியா ஒரு கிழட்டு மூதாட்டி, கிழவி என்பதுதான் நீங்கள் விளங்கவேண்டியது நண்பரே.
  6. மிகவும் துயரமான தகவல். எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி! 🙏
  7. சாத்தர், சிங்களவர்கள் இப்போது எல்லா இடங்களிலும் கற்பது, தொழில் செய்வது உங்களுக்கு தெரியாதா என்ன. தமிழ் பெடிகளும் பலர் கூலி, தொழிற்சாலை வேலைகளிக்கு தென்பகுதி செல்கின்றார்கள். திருடியவர்கள் வாகன ஓட்டிகளோ யார் அறிவார்.
  8. இரண்டாம் தடவை எழுதும்போது இந்தியா என தவறுதலாக எழுத்துப்பிழையாக எழுதிவிட்டேன். 79 வயது மூதாட்டியை கிழவி என அழைப்பது வழமைதானே. இப்போது இலங்கையில் 50 வயது நபரையே முதியவர், தாத்தா என எல்லாம் அழைக்கின்றார்கள்.
  9. ஆசிரியர் தவிர வேறெந்த அரச வேலைகளின் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன? எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விபரத்தை வழங்குங்கள் பார்க்கலாம்.
  10. றோ ஏஜெண்டுகள் நல்ல விசுவாசமாய் வேலை பார்க்கறீனம் போல.
  11. கிந்தியாவுக்கு வளர்த்த புலி (கடாய்) மார்பில் பாய்ந்த (மார்பை புளந்த) கதை இது. எப்படி கிந்தியா தனது நீண்டகால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை நாசமாக்கியதோ அவ்வாறே தமது நீண்ட கால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பது தற்காலத்தில் பலரது மனநிலையாக உள்ளது. சோனியா கிழவிக்கு தன்னாலோ அல்லது தனது பிள்ளைகளாலோ கிந்தியாவின் பிரதமராக வரமுடியவில்லை என்பது கடைசிவரை நிறைவேறாத ஆசையாகவும், ஏமாற்றமாகவும் அமைகின்றது.
  12. சிறீதரன் சாதாரண ஆளாய் வந்து இப்போது கோடீஸ்வரர் ஆகீட்டாராம். சாதாரண ஆளாய் உள்ள இன்னொரு புதியவருக்கு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை வழங்குவது வரவேற்கத்தக்கது தானே.
  13. டாக்குத்தர்மார், வைத்தியசாலைகள் தங்கட சுகத்துக்கும் வசதிக்கும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பிக்கின்றார்கள் இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் என்றாலும். பிறகு ஆபரேசன் செய்தால் இரண்டு வருடங்களுக்கு குழந்தைக்கு முயற்சி செய்யக்கூடாது என்று சொல்வார்கள். வயிற்றை வெட்டித்தான் எடுப்பது வழமை என்றால் பிறகு எப்படி பிறப்பு விகிதம் கூடும்? சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெறுவதை ஊக்குவித்தால் நல்ல காசு பார்க்கலாம். தங்களுக்கு காசு வரும் வழியைத்தானே ஊக்குவிப்பார்கள்!
  14. இந்தியாவில்தான் இப்படி நடப்பதாக இதுவரை செய்திகளில் பார்த்துள்ளதாக நினைவு.
  15. என்னய்யா இது ஒரு புது பிரச்சினை. வழமையாக புத்த பெருமான் தானே பிரச்சனையை கிளப்புவார்? இங்கை ராமர், சீதை, அனுமார், ஆதாம் என்று பெரிய குரூப்பாய் வந்து நிற்கின்றார்கள். தனிநாட்டுக்கான சண்டை முடிந்து விட்டது. இனி மணல் திட்டிக்கான சண்டையை தொடங்க வேண்டியதுதான்.
  16. ஆயுதபலம், செல்வம் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எங்கள் சரிதத்தை பார்த்தால் அங்கும் ஆயுதபலமே தீர்ப்பு எழுதியுள்ளது. வெனிசுவெலா அதிபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என எமக்கு தெரியாது. அதே சமயம் டிரம்ப் அவர்கள் யோக்கியன் என கூறுவதற்கு இல்லை. எவருக்கும் ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் காணப்படும். உங்களைப்போலவே நானும் எனது சொந்த கருத்துக்களை, புரிதலை வெளிப்படுத்துகின்றேன். நடைமுறை உலகை பார்த்தால் வெனிசுவெலா அதிபரின் கடத்தலின் பின் பங்கு சந்தையில் அமெரிக்க நிலவரம் உயர்ந்துள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள், போர் விமானங்கள், படைகள் வெனிசுவெலாவை கண்காணிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது வெனிசுவெலா அமெரிக்காவின் முற்றுகைக்குள் உள்ளது. தமக்கு தேவையான நேரத்தில் வெனிசுவெலா மீது தாக்குதல் நடாத்துவது, ஆட்களை தொடர்ந்து கடத்துவது, கொல்வது அமெரிக்க படைகளுக்கு இலகுவான ஒரு விடயம். அமெரிக்காவின் அனுமதி/அனுசரனை இல்லாமல் வெனிசுவெலா அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என சொல்லப்படுகின்றது. அதாவது ஆயுதபலம் மூலம் அமெரிக்கா வெனிசுவெலாவை முடக்கியுள்ளது. சீனா, ரஷ்யா போன்றவற்றை பொருத்தமட்டில் ஐயோ வடை போச்சே எனும் நிலமைதான்.
  17. செய்தியின் தலைப்பு எழுதப்பட்ட விதம் மயக்கத்தை தருகின்றது. இது மூன்றுவிதமான அர்த்தங்களை கொடுக்கலாம். பிரசுரம் செய்பவர்களுக்கு இதைவிட தெளிவான தலைப்பை எழுதமுடியாதோ?
  18. அது அப்ப. இப்ப தொல்பொருள் திணைக்களத்திற்குத்தான் எல்லாம் சொந்தம். அமெரிக்கா, இந்தியா இனி தொல்பொருள் திணைக்களத்துடன்தான் பேரம் பேச வேண்டும்.
  19. செயற்கை நுண்ணறிவை பாவித்து ஒரு சேனல் இனித்தான் செய்யலாமா என்று யோசிக்கிறேன். திறந்ததும் அறிவிக்கிறேன். சப்ஸ்கிரைப் பொத்தான் பெல் பொத்தானை சொடுக்கி எல்லாரும் இணைப்பு எடுத்திடுங்கோ.
  20. பாவம் கிந்தியாவுக்குத்தான் பேக்கரி டீல் போடவும், வீரம் விண்ணானம் காட்டவும், வச்சுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை போல.
  21. பல் டாக்குத்தர் பிள்ளையின் வாயுக்குள் வேறு ஏதோ ஆயுதத்தை விட்டுப்போட்டாராம் என்று ஒரு இடத்தில் வாசித்தேன். கண்காணிப்பு கமெரா பூட்டினால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்.
  22. உலக வெளியில் நாங்கள் புறக்கணிக்கத்தக்க துணிக்கைகள். எங்களுக்கு ஏற்கனவே 2009 தீர்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. இனி வெனிசுவெலா என்ன ஈரான் என்ன எது நடந்தாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை யாராவது மாற்றி எழுதப்போறாங்களா என்ன. அது சரி உந்த வெனிசுவலா அதிபரை பார்க்க சதான் குசைனின் முகசாயல் அடிக்கிது. எனக்கு கண்ணில் கோளாறோ அல்லது யாராவது உங்களுக்கும் அப்படி தோன்றுகின்றதோ? துருத் சோசல் பாவிக்கிற ஆட்க்கள் யாராவது முடியுமானால் டிரம்ப் பார்க்கக்கூடியமாதிரி இலங்கையில் மன்னார் எனும் இடத்தில் வெனிசுவெலாவை விட அதிக எண்ணை உள்ளதாய் எழுதிவிடுங்கோ. என்ன நடக்கிது என்று பார்ப்பம்.
  23. கிறிஸ்துவ பாதிரியார்கள், பெளத்த துறவிகள் போராட்டங்களில் ஈடுபடும்போது அவை ஆதரிக்கப்படுவதும், வேலவன் சுவாமிகள் என்றதும் அது ஆதரிக்கப்பட முடியாமல் போவதும், சங்கி என பட்டம் கட்டப்படுவதும் போராட்டத்தை எந்த மத துறவி செய்கின்றார் என்பதை பார்த்தே ஆதரவு கொடுக்கப்படுகின்றதா என ஐயம் ஏற்படுகின்றது. வேலவன் சுவாமிகளுக்கு கொடுக்கும் அறிவுரைகளை கிறிஸ்தவ துறவிகளுக்கு கூற முடியுமா? பெளத்த துறவிகளுக்கு கூற முடியுமா? தலாய் லாமாவுக்கு கூற முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.