Everything posted by நியாயம்
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம்பெயர் தமிழர்களை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் விடுதலை புலிகள் ஆதரவாளர்காக தம்மை இனம் காட்டியோரே அதிகம் அரசியலில் முன்னிலைக்கு வந்துள்ளார்கள். விதிவிலக்குகள் காணப்படலாம். ஆனால் பின்புலம் இல்லாமல் முன்னுக்கு வர முடியாதல்லவா?
-
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
தற்காலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என அழைக்கலாம். நாட்டை ஆள்பவர்கள் பெரும்பாலும் 40 தொடக்கம் 65 வயதுக்கு உட்பட்டோரே.
-
சட்டவிரோத கரைவலைத் தொழிலுக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை தேவை - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
அலிபாபாவும், நாற்பது திருடர்களும் கொண்ட தமிழ் ஆயுதக்குழு/அரசியல் கட்சியின் செயல்களில் ஒன்றோ? இலங்கை படைகளின் தேவைகளுக்கு இவ்வாறு மீன் பிடிக்கப்பட்டதோ? சாதாரண மீனவர்கள் இலங்கை கடற்படைக்கு தெரியாமல் வெளிச்சம் பாய்ச்சி, வெடிவைத்து எல்லாம் மீன் பிடிக்க முடியுமா?
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
பெருமைப்படும்படி என்ன கூறினார் என சற்று விரிவாக கூறுங்கள் பார்போம்.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
இலங்கையில் பணியாற்றும் மருத்துவர்களில் பலர் வெளியில் மருத்துவ கல்வியை முடித்தவர்கள். ஆனால், காசு சல்லி வேணுமே.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
யாழ் மருத்துவபீடத்தினர் தங்கள் பக்கம் என்ன தவறு எப்படி ஏற்பட்டது என்பதையும் அறியத்தரலாமே. பல்கலைக்கழகத்தில் எப்படி மாணவியை பதிவு செய்தார்கள்? விடுதிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இங்கு பல தகவல்கள் தவறவிடப்பட்டுள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன. மருத்துவராக வருவதற்கு மூன்று சாதாரண சித்திகள் போதாது என்றெல்லாம் இல்லை. சாதாரண சித்திகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று பயின்று பலர் மருத்துவர்களாக வந்துள்ளார்கள்.
-
ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை!
இந்த புள்ளி விதிமுறை வீதி விபத்துக்களை குறைக்குமா பார்ப்போம்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இங்கே சோனியா ஒரு கிழட்டு மூதாட்டி, கிழவி என்பதுதான் நீங்கள் விளங்கவேண்டியது நண்பரே.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் துயரமான தகவல். எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றேன். ஓம் சாந்தி! 🙏
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
சாத்தர், சிங்களவர்கள் இப்போது எல்லா இடங்களிலும் கற்பது, தொழில் செய்வது உங்களுக்கு தெரியாதா என்ன. தமிழ் பெடிகளும் பலர் கூலி, தொழிற்சாலை வேலைகளிக்கு தென்பகுதி செல்கின்றார்கள். திருடியவர்கள் வாகன ஓட்டிகளோ யார் அறிவார்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இரண்டாம் தடவை எழுதும்போது இந்தியா என தவறுதலாக எழுத்துப்பிழையாக எழுதிவிட்டேன். 79 வயது மூதாட்டியை கிழவி என அழைப்பது வழமைதானே. இப்போது இலங்கையில் 50 வயது நபரையே முதியவர், தாத்தா என எல்லாம் அழைக்கின்றார்கள்.
-
அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
ஆசிரியர் தவிர வேறெந்த அரச வேலைகளின் வெற்றிடங்கள் நிரப்பப்பட உள்ளன? எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விபரத்தை வழங்குங்கள் பார்க்கலாம்.
-
இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
றோ ஏஜெண்டுகள் நல்ல விசுவாசமாய் வேலை பார்க்கறீனம் போல.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
கிந்தியாவுக்கு வளர்த்த புலி (கடாய்) மார்பில் பாய்ந்த (மார்பை புளந்த) கதை இது. எப்படி கிந்தியா தனது நீண்டகால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் வாழ்க்கையை நாசமாக்கியதோ அவ்வாறே தமது நீண்ட கால நலன்கள் கருதி இலங்கை தமிழர்கள் இந்தியாவின் எதிரிகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்பது தற்காலத்தில் பலரது மனநிலையாக உள்ளது. சோனியா கிழவிக்கு தன்னாலோ அல்லது தனது பிள்ளைகளாலோ கிந்தியாவின் பிரதமராக வரமுடியவில்லை என்பது கடைசிவரை நிறைவேறாத ஆசையாகவும், ஏமாற்றமாகவும் அமைகின்றது.
-
மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
மச்சாடோ பிழைக்கத்தெரிந்தவர் போல் உள்ளது.
-
சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
சிறீதரன் சாதாரண ஆளாய் வந்து இப்போது கோடீஸ்வரர் ஆகீட்டாராம். சாதாரண ஆளாய் உள்ள இன்னொரு புதியவருக்கு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை வழங்குவது வரவேற்கத்தக்கது தானே.
-
குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்க வேண்டும் ; அஜித் பி பெரேரா தனிநபர் பிரேரணை முன்வைப்பு
டாக்குத்தர்மார், வைத்தியசாலைகள் தங்கட சுகத்துக்கும் வசதிக்கும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பிக்கின்றார்கள் இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் என்றாலும். பிறகு ஆபரேசன் செய்தால் இரண்டு வருடங்களுக்கு குழந்தைக்கு முயற்சி செய்யக்கூடாது என்று சொல்வார்கள். வயிற்றை வெட்டித்தான் எடுப்பது வழமை என்றால் பிறகு எப்படி பிறப்பு விகிதம் கூடும்? சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெறுவதை ஊக்குவித்தால் நல்ல காசு பார்க்கலாம். தங்களுக்கு காசு வரும் வழியைத்தானே ஊக்குவிப்பார்கள்!
-
சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!
இந்தியாவில்தான் இப்படி நடப்பதாக இதுவரை செய்திகளில் பார்த்துள்ளதாக நினைவு.
-
மன்னார் தீவின் நுழைவாயிலில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர், ஏன் சர்ச்சை ஆனது?
என்னய்யா இது ஒரு புது பிரச்சினை. வழமையாக புத்த பெருமான் தானே பிரச்சனையை கிளப்புவார்? இங்கை ராமர், சீதை, அனுமார், ஆதாம் என்று பெரிய குரூப்பாய் வந்து நிற்கின்றார்கள். தனிநாட்டுக்கான சண்டை முடிந்து விட்டது. இனி மணல் திட்டிக்கான சண்டையை தொடங்க வேண்டியதுதான்.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஆயுதபலம், செல்வம் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. எங்கள் சரிதத்தை பார்த்தால் அங்கும் ஆயுதபலமே தீர்ப்பு எழுதியுள்ளது. வெனிசுவெலா அதிபர் எப்படிப்பட்ட அயோக்கியன் என எமக்கு தெரியாது. அதே சமயம் டிரம்ப் அவர்கள் யோக்கியன் என கூறுவதற்கு இல்லை. எவருக்கும் ஒரு பக்கம் ஆதரவும், ஒரு பக்கம் எதிர்ப்பும் காணப்படும். உங்களைப்போலவே நானும் எனது சொந்த கருத்துக்களை, புரிதலை வெளிப்படுத்துகின்றேன். நடைமுறை உலகை பார்த்தால் வெனிசுவெலா அதிபரின் கடத்தலின் பின் பங்கு சந்தையில் அமெரிக்க நிலவரம் உயர்ந்துள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள், போர் விமானங்கள், படைகள் வெனிசுவெலாவை கண்காணிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது வெனிசுவெலா அமெரிக்காவின் முற்றுகைக்குள் உள்ளது. தமக்கு தேவையான நேரத்தில் வெனிசுவெலா மீது தாக்குதல் நடாத்துவது, ஆட்களை தொடர்ந்து கடத்துவது, கொல்வது அமெரிக்க படைகளுக்கு இலகுவான ஒரு விடயம். அமெரிக்காவின் அனுமதி/அனுசரனை இல்லாமல் வெனிசுவெலா அரசாங்கத்தினால் செயற்பட முடியாது என சொல்லப்படுகின்றது. அதாவது ஆயுதபலம் மூலம் அமெரிக்கா வெனிசுவெலாவை முடக்கியுள்ளது. சீனா, ரஷ்யா போன்றவற்றை பொருத்தமட்டில் ஐயோ வடை போச்சே எனும் நிலமைதான்.
-
ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை
செய்தியின் தலைப்பு எழுதப்பட்ட விதம் மயக்கத்தை தருகின்றது. இது மூன்றுவிதமான அர்த்தங்களை கொடுக்கலாம். பிரசுரம் செய்பவர்களுக்கு இதைவிட தெளிவான தலைப்பை எழுதமுடியாதோ?
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
அது அப்ப. இப்ப தொல்பொருள் திணைக்களத்திற்குத்தான் எல்லாம் சொந்தம். அமெரிக்கா, இந்தியா இனி தொல்பொருள் திணைக்களத்துடன்தான் பேரம் பேச வேண்டும்.
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
செயற்கை நுண்ணறிவை பாவித்து ஒரு சேனல் இனித்தான் செய்யலாமா என்று யோசிக்கிறேன். திறந்ததும் அறிவிக்கிறேன். சப்ஸ்கிரைப் பொத்தான் பெல் பொத்தானை சொடுக்கி எல்லாரும் இணைப்பு எடுத்திடுங்கோ.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
பாவம் கிந்தியாவுக்குத்தான் பேக்கரி டீல் போடவும், வீரம் விண்ணானம் காட்டவும், வச்சுக்கொள்ளவும் ஒன்றும் இல்லை போல.
-
கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!
பல் டாக்குத்தர் பிள்ளையின் வாயுக்குள் வேறு ஏதோ ஆயுதத்தை விட்டுப்போட்டாராம் என்று ஒரு இடத்தில் வாசித்தேன். கண்காணிப்பு கமெரா பூட்டினால் பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்.