Everything posted by நியாயம்
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
நாம் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை கதவடைப்பு நடைபெறுகின்றது. கதவடைப்பை பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பும் வைக்கின்றது. மக்களின் நாளாந்த வாழ்க்கையை பாதித்தது நீங்கலாக கதவடைப்புக்கள் அவை வைக்கப்பட்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றி உள்ளனவா?
-
“LTTE பயங்கரவாதியான உங்கள் கணவர்” சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை!
இங்கு பகிரப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தவறு ஏதும் இழைத்துள்ளதாக தெரியவில்லை. தனது கடமையை செய்துள்ளார். ஆனால் செய்தியை வழங்கும் ஊடகம் தனிநபர் மீது சேறு பூசும் வேலையை செய்துள்ளது. குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், தனக்கு பிடித்தமான விடயங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. இதுபோலவே விடுதலை புலிகள் அமைப்பு மீது அபிமானம் வைப்பதும், மதிப்பதும், அவமதிப்பதும் அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு. ஆனால், இங்கே அரச பணியாளர் ஒருவர் வேலைக்கு கள்ளம் அடித்துவிட்டு/தனக்கு கொடுக்கப்பட்ட பணியை பொறுப்பாக செய்யாமல் தனக்கு வேண்டியவர்கள் மூலம் மேலதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பது தவறான செயல் மட்டும் அல்ல, சட்டவிரோதமான செயலும் ஆகும். இலங்கை அரசின் அகராதியில் விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அரச நிறுவனத்தின் கடிதம் ஒன்றில் பயங்கரவாதி என குறிப்பிடப்படுவது ஒன்றும் சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. தவிர, இந்த கடிதத்தை மருத்துவ அதிகாரி வினோதன் எழுதியன் பின்னால் அவருக்கு முறைப்பாடு செய்தவர்கள் யார் என தெரியாது. இங்கு தனது வேலை விடயத்தில் தனது வாழ்க்கை துணையை வைத்து அச்சுறுத்தல் கொடுத்தது மிக தவறான செயல். இதே பெயரில் உள்ள ஒரு முன்னாள் போராளி புலிகள் அமைப்பின் உறுப்பினர் தன்னை புலனாய்வு பிரிவின் முன்னைய பொறுப்பாளராக தெரிவித்து பல காணொளிகளை சமூக ஊடகத்தில் பிரசுரித்து உள்ளார். சம்பவத்தில் தொடர்புபட்ட பணியாளர் இவரது வாழ்க்கை துணையோ தெரியவில்லை. இலங்கையில் பொதுவாகவே அரச பணியாளர்கள் வேலை விடயத்தில் சோம்பேறித்தனம், வேலை செய்வதற்கு பஞ்சி. வாழ்க்கை துணையை முன்னாள் பயங்கரவாதி என விளித்தது இவ்வளவு கோபத்தை ஏற்படுத்தும், இவ்வளவு ரோசக்காரி என்றால் ஆரம்பத்திலேயே தனது வேலையை ஒழுங்காக ஏன் செய்யவில்லை?
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
நகைகள் அணிந்து கோயிலுக்கு செல்வது வாழ்க்கை முறை. தாலிக்கொடியை கோயிலுக்கும் அணியாவிட்டால் அதை ஏன் கழுத்தில் கட்டவேண்டும்? கோயிலுக்குள் நுழையும் ஆண்கள் மேலாடையை நீக்க வேண்டும் என கடவுள் பணித்ததாக தெரியவில்லை. ஆனால், அது ஆலயங்களில் விதிமுறையாக உள்ளது.
-
பனை மரங்களுக்கு தீ வைத்த விஷமிகள்!
இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பனந்தோப்பில் எப்படி வெளியார் தீ வைப்பார்கள்? இராணுவமே தீயை வைத்துவிட்டு வெளியாரை சாடுகின்றதோ?
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
சசிகாந்த் செந்தில் இந்திய புலனாய்வு துறையை சேர்ந்தவர் இல்லை என உங்களுக்கு எப்படி தெரியும்?
-
இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை!
இணுவில் இப்போது நல்ல முன்னேற்றம் போல் உள்ளது.
-
96ஆவது அகவையில் தடம் பதிக்கிறது வீரகேசரி! : நூற்றாண்டை நோக்கி வீறுநடை!
வீரகேசரியின் இணைய செய்திகள் சலிப்பை தந்தாலும், தொடர்ந்து நிலைத்து நீடிக்க வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
இந்தியாவில் உள்ள அழுக்குகளை இந்தியர்களால் கழுவி முடிக்க இயலாது. தமது உடம்பில் உள்ள அழுக்கு கடிப்பதற்கு அயல் நாட்டு மக்களின் உடம்பில் போய் தேய்ப்பது பரிகாரம் என நினைக்கின்றார்கள். தமிழர்களை சுரண்டிப்பார்க்கும் படத்திற்கு அனிருத் இசை அமைத்தால் உவரை புறக்கணிப்பு செய்யலாமே. அனிருத் ஒரு தமிழர் தானே. படத்தின் கதை அறியாமல் இசை அமைத்து கொடுத்தாரா?
-
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்
தெலுங்கு படம் என கூறப்படுகின்றது. இதற்குள் எப்படி, ஏன் இலங்கை, தமிழர்கள் வருகின்றார்கள்? நான் கலைக்களஞ்சியத்தில் பார்த்தேன். இன்னும் கதை பற்றிய தகவல் இல்லை.
-
வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!
ஒட்டு மொத்த இலங்கையே பின்னடைவை சந்திக்க நிர்வாக பிரச்சனையே காரணம் என எப்போது ஏற்றுக்கொள்வார்கள்?
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்திய அணி தொடரையே வென்றது போன்ற மகிழ்ச்சியுடன் மைதானத்தை விட்டு வெளியேறும் படத்தை பார்த்தேன். மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள் போலும். என்னதான் ஐபில் ஆட்டத்தை மாத கணக்கில் விளையாடினாலும் இந்திய மண்ணிற்கு வெளியில் போட்டி என வந்தால் இவர்களிற்கு போராட்டம் தான். ஐபிஎல் இல் அதிக ஓட்டங்கள் குவித்த சாய் சுதர்சனால் சோபிக்க முடியவில்லை. இவர் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடவே தகுதியானவர் போலும்.
-
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி; எச்சங்கள், பொருட்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு
ஒருவரின் கருத்தையும் காணவில்லை. கொக்குதொடுவாய் 1994 - 1996 கால பகுதியில் எவர் கட்டுப்பாட்டில் காணப்பட்டது?
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இந்தியா தொடரில் தோற்கும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது போல் தோன்றுகின்றதே.
-
கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் - பிரதமர் அறிவிப்பு
பாலஸ்தீனத்தில் பட்டினி சாவை, அழிவை தடுத்து நிறுத்த உலக நாடுகளால் முடியவில்லை. மனித பேரவலத்தை மெளனமாக அங்கீகரிப்பதற்கு பிராயத்திச்சமாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கின்றோம் என அறிக்கைகள் விடுகின்றார்கள் போலும். இவர்கள் அங்கீகாரத்துடன் ஐநாவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவுக்கரம் கிடைக்கும்முன்பே இஸ்ரேல் மிச்சம் சொச்சம் உள்ள இடங்களையும் நிர்மூலமாக்கிவிடும்.
-
ஆயுதஎழுத்து பாகம் 2
அவர் புஸ்தகமே எழுதுகின்றாராம். இங்கு எழுத நேரம் இல்லைப்போல. ஆயுத எழுத்து ஒன்றுதானே உள்ளது. அது ஏன் இரண்டு பாகங்களாக வருகின்றது?
-
யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!
தகவலுக்கு நன்றி ஏராளன். மருத்துவ துறையில் பேராசிரியர் நிலையை அடைவது எல்லாம் அரிதான விடயங்கள் என நினைக்கின்றேன். முன்னைய காலங்களில் இப்படி அதிகளவானவர்களுக்கு பேராசிரியர் தகுதிநிலை கொடுக்கப்படுவது பற்றி நினைவு இல்லை.
-
எனது மரணச்சடங்கு.🖤
சில குறிப்பிட்ட உறவினர்கள்/சொந்தக்காரர்கள் வருவது தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். வைத்தியசாலைக்கும் வந்து பார்க்க முடியாதபடி கூறிவைக்க முடியும் என நினைக்கின்றேன். நான் இப்படியான கோணத்தில் சிந்திக்கவும் இல்லை தேவையும் இல்லை. ஆனால், ஒரு வினா என்ன என்றாலும் போய்ச்சேரும் இடத்தில் எப்படியான சோலிகள், இறப்புக்கு பிறகும் வாழ்வு வேறு ஒரு பரிமாணத்தில் தொடரும் என்றால், வரும், யார் யாருடன் எல்லாம் டீல் பண்ண வேண்டும் என தெரியாதே.
-
நெல்லை பாளையங்கோட்டையில் மென்பொறியாளர் ஆணவக்கொலை
பொதுவாக பெண்ணின் அண்ணன்மார், அப்பா, மாமாமார் போன்றோர்தான் காதலனை வெட்டுவார்கள் கொலை செய்வார்கள் என இந்திய செய்திகள் வரும். இங்கே பெண்ணின் தம்பிக்கு உரு ஏறிவிட்டது.
-
எனது மரணச்சடங்கு.🖤
நாங்கள் செத்த பிறகு பறைமேளத்தை அடித்தால் என்ன, தவில் நாதசுவரம் வாசித்தால் என்ன எங்களுக்கு கேட்கவா போகின்றது. உயில் என எழுதினால் செத்தவீட்டுக்கு வருபவர்கள் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும் என எழுதி வைத்தால், அத்துடன் எமது நினைவு நாட்களில் அன்னதானம் கொடுக்க வேண்டும் என கூறிச்சென்றால் கடைசி நேரத்திலும், செத்த பிறகும் ஒரு திருப்தியை ஏற்படுத்தலாம்.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
ஒரு கதைக்கு கைது செய்யப்பட்ட பெடியன் பதின்நான்கு வயதில் இயக்கத்தில் இருந்தான் என வைத்தாலும், பதின் நான்கு வயதில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு கொடுக்கப்பட்டான் என எடுத்து கொண்டாலும், 2025ம் ஆண்டு, 16 வருடங்களின் பின், இயக்கமே இல்லாத நிலையில், ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு 16 ஆண்டுகளின் பின் கைது செய்யப்பட்ட உந்த பெடியன் முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் என இனம் காணப்படுவது மூலம் இங்கே நிறுவப்படுவது என்ன? உந்த பெடியன் நாசமாய் போனதற்கு புனர் வாழ்வு கொடுத்தவர்களின் பங்கு இல்லையா? 16 வருடங்களின் உந்த பெடியன் யார் யாருடன் கூட்டு வைத்தான், இவனை தவறாக வழி நடாத்தியவர்கள் யார் என ஒரு தகவலும் இல்லையே. இந்த செய்தியை வழங்கிய அரச அதிகாரியிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்.
-
புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது
என்னய்யா இலங்கை முன்னாள் கடற்படை தளபதி கைது என ஒரு செய்தி உள்ளது. இதுபற்றி ஒரு ஆராய்ச்சியும் இல்லையா?
-
பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்
வரும் 2026 ஓ/எல் எடுக்கும் மாணவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் பரீட்சைக்கு தோற்றுகின்றார்களா? வழமையில் ஆண்டு பத்தில் தானே புதிய மாற்றத்தை கொண்டு வர முடியும்? ஏற்கனவே ஆண்டு பத்தில் உள்ளவர்கள் புதிய முறைக்கு எப்படி உள் வாங்கப்படமுடியும்? அதற்கு போதிய கால அவகாசம் உள்ளதா? இந்த செய்தியை உறுதிப்படுத்தும் நம்பகரமான செய்தி மூலத்தை பகிருங்கள் வாசித்து பார்ப்போம். மதியம் ஒன்று முப்பதுக்கு நிறைவு அடையும் பாடசாலைகள் மாலை நான்கு வரை நீடிக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் அறிந்தேன். உண்மை நிலை தெரியவில்லை.
-
யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!
இவர் கதைகள் எழுதும் சத்திரசிகிச்சை நிபுணரோ அல்லது வேறு ஒருவரோ? கதைகள் எழுதும் வைத்தியர் யாழ் போதனா வைத்தியசாலையை விட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ளதாக ஒரு செய்தி பார்த்த நினைவு.
-
தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!
உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்! இதுவும் ஒரு பிக் பொஸ் நிகழ்ச்சியாக அமையுமோ? யார் யாரை வெற்றிகரமாக வெளியில் அனுப்புகின்றார் என பார்ப்போம்.
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
வாசிங்டன் சுந்தர் கொஞ்சம் செய்கிறார் போல் உள்ளது. சாய் சுதர்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இப்போது முன்னிலையில். ஆனால் இந்தியாவை வெற்றிகொள்ளுமா என்பது சந்தேகமே.