Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இறுவட்டு அட்டைகள் மாவீரர் புகழ் பாடுவோம்/ சந்தனப் பேழை பல்வேறு இறுவட்டுகளில் வெளியான மாவீரர் பாடல்களின் தொகுப்பாக இது வெளியானது. பின் பக்கம்:
  2. இறுவட்டு அட்டைகள் மண்ணுறங்கும் மாவீரம் இது தான் மெய்யான அட்டையா என்பது குறித்து எனக்குச் சரிவரத் தெரியவில்லை. இது நான்காம் ஈழப் போர்க் காலத்தில் வெளிவந்தது.
  3. இறுவட்டு அட்டைகள் போரிடும் வல்லமை சேர்ப்போம் மேல் படத்தில் அந்த அன்ரிக்கு சோதிப்பது லெப். கேணல் காந்தன்...
  4. இறுவட்டு அட்டைகள் போர் முரசம்/ விடுதலை முரசம் ஈழத்தின் முன்னணி நாதஸ்வரக் கலைஞர்களான வி.கே. கானமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி ஆகியோர் தனித்தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி உதயசங்கர் மற்றும் தவில் வித்துவான் கணேஸ் ஆகியோருடன் இணைந்து வழங்கிய, போர்க் காலப் பாடல்களின் நாதஸ்வர இசை வடிவம்.
  5. இறுவட்டு அட்டைகள் பூபாளம் "பூபாளம்" - இம்மண்ணின் படைப்பு திறனாய்வு: லோகன் மூலம்: ஈழநாதம் வெளியீட்டுத் திகதி: 1990.12.17 எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான இந்த போரிலே சிங்கள அரசு தமிழ்மக்களின் உரிமையையும் இறைமையையும் நசுக்கி எம்மின மக்களையும் அவர்களுடைய போராட்ட உணர்வுகளையும் நிர்மூலமாக்கி விடுவதில் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகிறது. இந்த நிலையில் எமது மக்களை தாயகப்பற்றுடன்கூடிய போராட்ட உணர்வு ஒருமுகப்படுத்தப்பட்டு கூர்மைப்படுத்தப்பட்டாலன்றி எமது சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொள்ளும் இந்த போரை வென்றெடுப்பதில் பெரும் உணர்வுரீதியான சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி ஏற்படும். இந்த சிக்கல்களை எதிர்நோக்கி சிங்கள அரசின் திட்டமிட்ட சதிகளை நிர்மூலமாக்குவதில் அண்மையில் நிதர்சனம் அலுவலகத்தில் வெளியிடப்பட்ட "பூபாளம்" பாடற் பதிவுநாடா பெருவெற்றி கண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. மேஜர் காந்தரூபன், கப்ரன் கொலின்ஸ், கப்ரன் வினோத் ஆகிய கடற்புலிகளான கரும்புலிகளின் நினைவாக வெளியிடப்பட்ட இந்த எழுச்சிமிக்க பாடல்களைக் கொண்ட நாடா நிதர்சனம் வெளியீடு செய்த பாடல் வரிசையில் தமிழீழ மக்கள் மத்தியில் வெகுவாக பிரபல்யமாகி வருகிறது. இவ்வெளியீட்டில் கருத்தாழம்மிக்க கவிதை நடையும் அதனைத் தொடர்ந்து அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. ஈழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனையும் போராட்டத்திற்கு அறைகூவி அழைப்பதுபோல அமைந்திருக்கும் "பெற்றதாயின் மானம் காக்க புறப்படு மகனே" என்ற முதலாவது பாடல் இனிய இசை அமைப்புடன் அமைவதுடன் தமிழன்னை வாழ்த்துடன் ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வை கொண்டுவரும் என்பதில் ஐயமேதுமில்லை. தொடர்ந்த பாடல்களான "மக்கள் சக்தி வெல்லும்" என்று ஆரம்பிக்கும் பாடலும் "செந்தமிழ் ஈழம் எமதென்னும் போதிலே" என்ற ஒரு தமிழ் மகனின் மனோநிலை பற்றிய பாடலும் திரும்பத் திரும்ப ஒருமுறை கேட்டவரின் வாய்களிலே வந்து செல்லும். எமது தமிழின விடுதலைப் போராட்டததில் ஒரு பகுதி இளைஞர்கள் மண்ணின் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் வீறு கொண்டெழுந்து போராடும் அதேவேளை ஒரு சிலர் தாம் தப்பினால் போதும் என்று உயிருக்கு அஞ்சி வாழ நினைப்பதை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்திருக்கும் "இராவணன் ஆண்டால் எனக்கென்னடா!" என்ற பாடல் ஒவ்வொருவருடைய சிந்தையையும் கவரக்கூடியதாக உள்ளதுடன் மிக எளிமையான இசை அமைப்பும் கொண்ட ஒரு கர்நாடக சங்கீதப் பாடலாகும். இது நிச்சயம் இந்த வெளியீட்டில் முதலிடததைப் பிடிக்கும். தொடர்ந்து "மாணிக்கத் தேரினை மண்டியிட்டாடும் காணிக்கையாகவே தந்தாலும் மாணிக்க மண்ணைத் தருவோமா?" என்ற ஐந்தாவது பாடல் மண்ணின் பெருமையை எடுத்துச் சொல்வதாய் உள்ளது. மேலும் "கரடு முரடு பாதைகளை கடந்து வந்தோம்", "கண்மணி ராஜா நில்லு என் கேள்விக்கு பதிலென்ன சொல்லு", "ரத்தத்திலே சிவந்த மண்ணே முத்தம் கொடுத்தேன் வா" போன்ற பாடல்கள் போராட்ட சூழலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. தாள நயமும் சுருதி லயமும் இப்பாடல்களுடன் இணைந்து போவது மனதை கொள்ளை கொள்வதாக உள்ளது. இறுதியாக பாடல் வரிசையில் "இந்த ஆண்டில் இன்றேல் எதிர்வரும் ஆண்டில் இருக்க மாட்டார் எங்கள் தோழர்கள் கூண்டில்" என்ற பாடல் சுதந்திரமான சுயநிர்ணய உரிமையை விரைவில் பெற்றுக்கொள்ளப் போவதை கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது. இவை தவிர ஒவ்வொரு பாடல்களும் ஆரம்பிக்கும் முன்னர் அந்தப் பாடல் பற்றிய விளக்க உரை மிகவும் சாந்தமான குரலாக அமைந்திருப்பதும் பாடலை தெளிவுபடுத்துவதாக அமைந்திருப்பதும் தயாரிப்பாளர்களது திறமையை எடுத்துச் சொல்வதாக உள்ளது. இததகைய சிறந்து பாடல்களை இயற்றி அதற்கு எமது மண்ணின் மைந்தர்களை கொண்டே இசை அமைத்து அதனுடன் பாடகர்களின் குரலூடாக தேவகானமாக்கப்பட்ட பூபாளத்திற்கு வெறும் அறுபது ரூபா மட்டும் பெறுமதி இட்டிருப்பது மிகக் குறைவானதொன்றாகும். *****
  6. முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை செல்லும் வழியில் கொக்கிளாய் எனும் ஊர் உள்ளது.தமிழீழத்தின் இதயபூமியென்றழைக்கப்படும் மணலாற்றுப்பிரதேசத்தில் இவ்வூரும் ஒன்று. 1984ம் ஆண்டின் பிற்பகுதியில் மணலாற்றுப்பிரதேசத்தின் பல ஊர்களில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழர்கள் இலங்கை இராணுவத்தாற் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். முன்னரும் அடிக்கடி இராணுவத்தாற்பல இன்னல்களை இம்மக்கள் கண்டிருந்தாலும் தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்குத் தம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் வழங்கி வந்தனர். இது இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு அளிக்கவே தென்னைமரவடி,கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி,கொக்குத்தொடுவாய்,நாயாறு,செம்மலை, இன்னும் சில ஊர் மக்கள் விரட்டப்பட்டனர். இதன்போது சிலகுடும்பங்கள் அளம்பில் ஐந்தாங்கட்டையிலிருந்த தெரிந்தவர்களின் தென்னந்தோப்புகளில் குடியேறினர்.அத்தோடு முல்லைத்தீவு ,முள்ளியவளை, புதுக்குடியிருப்பு,இன்னும் எங்கெங்கெல்லாமோ சென்று வாழ முற்பட்டனர் அகதிகளான மக்கள். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இதயபூமியை சிங்களமயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த எண்ணி இராணுவம் கொக்கிளாய்ப்பாடசாலையை இராணுவமுகாமாகமாற்றி முல்லை திருகோணமலை இராணுவப்போக்குவரத்திற்கும் சிங்களக்குடியேற்றத்திற்கும் பெரும் பலத்தை ஏற்படுத்தியது. கொக்கிளாய் இராணுவமுகாம் அகற்றப்படவேண்டிய அவசியத்தை உணர்ந்தவிடுதலைப்புலிகள் அதனைத்தாக்கியழிக்க முடிவெடுத்தனர்.இத்தாக்குதலுக்கு மக்களும் பலவழிகளில் புலிகளுக்கு உதவினர். 1985.2.13 அன்று அதிகாலைநேரம் கொக்கிளாய் முகாமின்மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொண்டனர். நேர்த்தியான வேவின் பின் மணலாற்றுக்காட்டின்வழியே சென்ற தாக்குதலணி துணிச்சலுடன் முகாமைப் பலமாகத்தாக்கியது.இத்தாக்குதலை எதிர்பார்த்திராத இராணுவம் நிலைகுலைந்துபோனது.இத்தாக்குதலே தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவமுகாம்மீதான முதலாவது தாக்குதலாகும்.இதன்போது 16 போராளிகள் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்கள்.அவர்களிற் பலரின் வித்துடல்களை மீட்கமுடியவில்லை.அக்காலப்பகுதியில் இவ்வீரச்சாவுகள் விடிவுக்கு முந்திய மரணங்களாக மக்களால் நினைவுகொள்ளப்பட்டன.இத்தாக்குதலால் இலங்கை இராணுவம் இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. லெப்டினன்ட் சைமன் கனகரத்தினம் ரஞ்சன் பொத்துவில், அம்பாறை வீரப்பிறப்பு:20.09.1956 லெப்டினன்ட் பழசு முதுங்கொடுவ உடுகமகே கேமசிறி பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:10.10.1963 வீரவேங்கை கெனடி கனகசபை வில்வராசா கிரான், வாழைச்சேனை, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:19.04.1961 வீரவேங்கை காந்தரூபன் பொன்னையா சந்திரகுமார் கல்லடி, மட்டக்கள்ப்பு. வீரப்பிறப்பு:30.07.1964 வீரவேங்கை ஜெகன் (இடிஅமீன்) சண்முகராசா பிரபாகரன் லிங்கநகர், திருகோணமலை. வீரப்பிறப்பு:26.01.1963 வீரவேங்கை காந்தி கந்தையா பரமேஸ்வரன் தம்பலகாமம், திருகோணமலை வீரப்பிறப்பு:17.08.1956 வீரவேங்கை ரவி நமசிவாயம் தர்மராஜா செம்மலை, அளம்பில், மணலாறு. வீரப்பிறப்பு:02.10.1964 வீரவேங்கை வேதா கனகு இராசநாயகம் சங்கத்தடி, கண்டாவனை, பரந்தன், கிளிநொச்சி வீரப்பிறப்பு:30.10.1959 வீரவேங்கை ரஞ்சன்மாமா பொன்னையா சண்முகநாதன் கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி. வீரப்பிறப்பு:16.10.1951 வீரவேங்கை காத்தான் துரைச்சாமி சிறீமுருகன் குமரபுரம், பரந்தன், கிளிநொச்சி. வீரப்பிறப்பு:05.03.1961 வீரவேங்கை மயூரன் குணசிங்கராசா துவாரகன் மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:02.02.1967 வீரவேங்கை சொனி சதாசிவம் அன்ரனி நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:03.01.1964 வீரவேங்கை தனபாலன் தியாகராசா வரேந்திரன் காரைநகர், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:30.09.1965 வீரவேங்கை சங்கரி செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:01.06.1962 வீரவேங்கை மகான் கதிரவேலு செல்வராசா கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:22.05.1962 வீரவேங்கை நிமால் கந்தையா ஜெயந்தன் தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:22.03.1966 http://irruppu.com/2021/02/13/கொக்கிளாய்-இராணுவமுகாம்/
  7. 1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.1993ம் ஆண்டு பூநகரி முகாம் தகர்ப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக மேற்கொள்ளப்படவிருந்த பலாலி விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கும் இவனது பங்களிப்பு முக்கியமானதாக இருந்து. இயக்கத்தில் இருந்த காலத்தில் இராணுவத்திற்க்குள்ளே நீண்டகாலமாக இருந்தான் அதன் பின்னர் பூநகரி முகாம் மீதான வேவு நடவடிக்கையில் 01.03.1994 அன்று வீரச்சாவடைந்தான். கப்டன் கந்தையா (அபிமன்யு) தியாகராசா ஞானவேல் மயிலிட்டி, யாழ்ப்பாணம், வீரப்பிறப்பு: 28.10.1973 வீரச்சாவு 01.03.1994 http://irruppu.com/2021/03/01/கப்டன்-கந்தையா-அபிமன்யு/
  8. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட காவலரனில் உள்ள படையினரும் பல்வேறு தொந்தரவுகளில் ஈடுபட்டனர். இப்படையினர் மீது ஒருதாக்குதல் நடாத்தவேண்டிய நிலைக்கு விடுதலைப்புலிகள் தள்ளப்பட்டனர். அதற்கமைவாக அப்போதைய யாழ்மாவட்டத்தளபதி ராதா அவர்களினால் துரிதகதியில் வேவுத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேவுத்தரவுகளை தலைவர் அவர்களிடம் கொடுத்தார்.தளபதி ராதா அவர்கள். வேவுத்தரவுகளை பார்த்து அதன் சாதக பாதக நிலைகளை தளபதி ராதா அவர்களிடம் கூறியதோடு மட்டுமல்லாமல் தனது மெய்பாதுகாப்பாளர்களில் பெரும்பாலானவர்களை இத்தாக்குதலுக்கு அனுப்பிவைத்ததுடன் இத்தாக்குதலுக்கான பயிற்சிகளை வடமராட்சியில் நடாத்தும்படி தளபதி ராதா அவர்களிடம் கூறிப்பிட்டார் தலைவர் அவர்கள்.அதற்கமைவாக பயிற்சிகள் வடமராட்சியில் நடைபெற்றன பயிற்சிகளை தலைவர் அவர்கள் பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதலுக்கான திட்டம் தளபதி ராதா அவர்களினால் விளங்கப்படுத்தப்பட்டன. அதற்கமைவாக இரண்டு பாரவூர்தியில் சென்று திகைப்பூட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பிவருவதே திட்டமாகும் .ஒரு பாரவூர்தியில் சொர்ணம் (சொா்ணம் அவர்கள் அந்தக்காலப்பகுதியில் தலைவர் அவர்களின் பாதுகாப்புப் பிரிவிற்க்கு இரண்டாவது பொறுப்பாளாரக இருந்தார். இவரே பிரிகேடியர் சொர்ணம் ஆவார் வீரச்சாவு 15.05.2009) அவர்கள் தலைமையில் செல்லும் போராளிகள படையினர் தங்கும் தங்ககம் (விடுதி)மீது தாக்குதல் நடாத்துவார்கள் .அதேசமயம் மற்றுமொரு பாரவூர்தியில் கப்டன் ஐயா தலைமையில் செல்லும் போராளிகள் காவலரன்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் . அதற்கமைவாக 22.04.1987 அன்று இரவு 10.00 மணியளவில் ஆரம்பித்த இத்தாக்குதல் குறிப்பிட்ட நிமிடத்திற்க்குள் காவலரன்கள் முழுமையான கைப்பற்றப்பட்டதுடன் அக்காவலரனில் உள்ள ஆயுதங்களும் கைப்பற்ப்பட்டன .அதே சமயம் கண்காணிப்புகோபுரத்திலிருந்த படையினர் இவர்கள்மீது தாக்குதல் நடாத்த இதைக் கவனித்த சுபன்(மன்னார் மாவட்டச் சிறப்புத்தளபதி வீரச்சாவு.25.09.1992 ) இன்னொரு போராளியிடம் கூற அவரோ படையினரிடமிருந்து கைப்பற்றிய ஆர்.பி.ஐி எடுத்து கண்காணிப்புக்கோபுரத்தின் மீது குறிதவறாமல் தாக்குதல் மேற்கொள்ள கண்காணிப்புக்கோபுரம் தகர்த்தெறியப்பட்டது. அன்று அப்போராளி அக்கண்காணிப்புக்கோபுரத்தின் மீது மேற்கொண்டதாக்குதல் தவறினால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னொரு காவலரனில் போராளிக்கும் படையினருக்கும் கைகலப்பில் படையனரைக் கொன்றான். அப்போராளி இப்படியான பல்வேறு சாகசங்களையும் நிகழத்திய வெற்றிகரத்தாக்குதலில் பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட படையினர் கொல்லபபட்டதுடன் அதி நவீன ஆயதங்களும் கைப்பற்ப்பட்ட இவ்வெற்றிகரத்தாக்குதலில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ் வெற்றிகரகொமாண்டோத்தாக்குதலை அப்போதைய யாழ்மாவட்டத் தளபதி ராதா அவர்கள் காங்கேசன்துறையிலிருந்து வழிநடாத்தினார். இச்சம்பவமானது அக்களமுனையில் களமாடியவரின் உள்ளத்திலிருந்து. எழுத்துருவாக்கம்…சு.குணா. இச்சமரில் வீரச்சாவடைந்தவர்கள் விபரம் வருமாறு. கப்டன் பவான் (ஐயா) பொன்னம்பலம் யோககுமார் சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம். லெப்டினன்ட் கிர்மானி சிலுவைராசா ஜோன்சன் பேட்டன் குருநகர், யாழ்ப்பாணம். 2ம் லெப்டினன்ட் குணம் மு.யோகேந்திரன் உப்புக்குளம், மன்னார். 2ம் லெப்டினன்ட் குலம் மு.யோகேந்திரன் பள்ளிமுனை, உப்புக்குளம், மன்னார் வீரவேங்கை தாஸ் கஸ்பார் சூசைதாசன் நிலாச்சேனை, உயிலங்குளம், மன்னார். வீரவேங்கை சுவர்ணன் பொன்னையா சிறிபோஸ் சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம். For more images: http://irruppu.com/2021/04/21/காங்கேசன்துறை-பகுதியில்/
  9. கப்டன் மாயவன் செபஸ்ரியான்பிள்ளை சிவகுமார். பிறப்பு: 13.09.1975 வீரச்சாவு . 18.05.1995 சம்பவம். பலாலியிலிருந்து தொண்டமனாறு நோக்கி முன்னேறிய இலங்கைப் இராணுவத்துடனான நேரடிச் சமரின் போது.வீரச்சாவு . 1991ம் ஆண்டு பிற்பகுதியில் அமைப்பில் இணைந்த மாயவன் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து யாழ்மாவட்டத் தாக்குதலனியில் இணைக்கப்படுகிறான்.அங்கு களப் பயிற்சிகளையும் களஅனுபவங்களையும் பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொள்கிறான்.யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற அநேகமான சமர்களில் தனது திறமையைக்காட்டினான். சக போராளிகளிடத்தில் அன்பாக பழகுவதுடன் தனக்குத் தெரிந்தவைகளை சக போராளிகளுக்கு அவர்களுக்கு விளங்கும் வகையில் சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற்றியவன் . முகாமில் நடந்த கலைநிகழ்வுகளிலும் சரி விளையாட்டுகளிலும் பயிற்சிகளிலும் அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டவன்.காயமடைந்து மருத்துவமனையிலிருந்து முகாமிற்கு வரும்போராளிகளுக்கான சகல வேலைகளிலும் முன்மாதிரியாக செயற்பட்டவன். மணலாறு மண்கிண்டிமலை இராணுவமுகாம் தகர்ப்பிலும் பங்குபற்றினான். இத்தாக்குதலுக்குப் பழிதீர்க்குமுகமாக விமானப்படையினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதலில் பாடசாலை சென்ற இவனது சகோதரி உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1994 ம் ஆண்டு காலப்பகுதியில் கனரக ஆயுதப் பயிற்சியாளனாக நியமிக்கப்பட்டு அங்கு தனது திறமையான செயற்ப்பாட்டைக் காட்டி போராளிகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவன்.பல சமர்களில் பங்கேற்று அச் சமர்களின் அனுபவங்களை நகைச்சுவையோடு சக போராளிகளுக்கு சொல்லிக் கொடுத்தவன். அன்று பலாலியிலிருந்து இராணுவம் முன்னேறுவதாக எமது முகாமுக்கு அறிவிக்கப்பட்டது.உடனடியாக அணிகள் தயார்படுத்தப்பட்டு களமுனைக்குச் சென்றன அவ் அணிகளுடன் சென்ற மாயவன் களமுனைத்தகவல்களுடன் வருவானென எதிர்பார்த்த வேளையில் தான் தொலைத்தொடர்புக்கருவியூடாக அச் சோகச் செய்தி எம்மை வந்தடைந்து. முன்னேறிய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவடைந்தான். இவனால் அக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட போராளிகள் இறுதிவரை போராடினார்கள். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/05/18/கப்டன்-மாயவன்/
  10. மேஐர் தசரதன் சந்திரன் சுபாகரன் வீரச்சாவு 29.06.2001 1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான். தொடர்ந்து மேஐர் போர்க் அவர்களுடன் சிலகாலம் நின்ற தசா அங்கே இயந்திரவியல் சம்பந்தமாக படித்துக்கொண்டு அங்கிருந்த சர்வசேத்திலிருந்து வந்த படகுகளைப் பராமரித்து அதற்கான பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபட்டான். போர்க் வீரச்சாவடைய லெப்.கேணல் மலரவனுடன் பொறியியற்துறையில் சிலகாலம் பங்குபற்றி அங்கே வெடிமருந்துகள் சம்பந்தமாக கற்றதுடன் படகுகளுக்கு ஆயுதங்கள் பூட்டுவது சம்பந்தமான தனக்கான தேடல்மூலம் நிறையவே கற்றுக் கொண்டான்.தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் திருவடி அவர்களுடன் இணைந்து தென் தமிழீழ விநியோக நடவடிக்கையில் பெரும் பங்காற்றிய தசா அதன் பின்னர் லெப் கேணல் அண்ணாச்சியுடன் இணைந்து சாளையில் படகுகளை தேவைகளுக்கேற்ப இடங்களுக்கு மாற்றுவது படகுக்காவிகளைப் பராமரிப்பதுடன் அக்காலப்பகுதியில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் படகுச் சாரதியாகச் சிறப்புத்தளபதியின் அனுமதியுடன் செவ்வனவே பங்காற்றினான். தொடர்ந்து கனரக ஆயுதப் பயிற்சி பெற்று பலகடற்சமர்களில் ஐம்பது கலிபர் துப்பாக்கியோடு பங்காற்றினான்.ஐம்பது கலிபரின் சிறந்த சூட்டாளனுமாவான். இந்தநேரத்தில் தான் இந்தியா விநியோகத்திற்காகவும் அதற்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும் ஒருதொகைப் போராளிகள் மன்னாருக்குச் சென்றபோது அங்கு சென்ற தசா அப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில்.இவனது திறமையான செயற்பாடுகளைக் கவனித்த கடற்புலிகளின் முதலாவது தளபதியாகவிருந்த கங்கைஅமரன் அவர்களின் மெய்ப் பாதுகாவலனாகவும் அவரின் வாகனச் சாரதியாகவும் இணைத்துக்கொள்கிறார் . அப்பணியில் இருக்கையில் பணி நிமித்தமாக சென்றுகொணடிருக்கையில் 29.06.2001 அன்று கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் ஆழஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் தளபதி லெப் கேணல் கங்கைஅமரன் அவர்களுடன் வீரச்சாவடைகிறான். எழுத்துருவாக்கம்..சு.குணா http://irruppu.com/2021/06/29/மேஐர்-தசரதன்-20ம்-ஆண்டு-வீர/
  11. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின் முதல் கப்டன்.ஜிம்கலி,பிறந்தது,வளர்ந்தது, வாழ்ந்தது , வீழ்ந்தது கிரான் என்கின்ற தமிழர் வரலாற்றின் வீரமிகு ஊராகும். நூற்றுக்கணக்கான மாவீரர்களை விடுதலைப் போராட்டத்திற்கு ஈன்றெடுத்த கிரான்,விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு வரலாற்றுப்பதிவுகள் சிலவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நெஞ்சினில் விடுதலைநெருப்பை ஏந்தி,காலம் எமக்குத்தந்த வரலாற்றுத் தேசியத் தலைவன் ஆணையில் களமாடி, சிங்களத்தை சிதறடித்த நூற்றுக்கணக்கான மாவீரர்களின் நினைவுகள் எமது நெஞ்சினில் அழியாது நிறைந்துள்ளது.இவற்றில் ஒருவரான கப்டன். ஜிம்கலி வரலாற்றில் மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராளியாக எமக்குத் தென்படுகின்றார்.கிரான் தமிழன்னை இம் மாவீரர்களைப்பெற்றதிலிருந்து உயர்ந்த இடத்தில் வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றாள். இதனை இம் மாவீரர்கள் சார்பாக உறுதியாகக் குறிப்பிடமுடியும். தளம்பாது,தடம்புரளாது,நீண்ட விடுதலைப் போரட்டத்தில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் அழியாத பதிவையும் விடுதலை வரலாறு கொண்டுள்ளது. கப்டன். ஜிம்கலி அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக் கணக்கான போராளிகள் மாவீரர்களாக எம் கண்முன்னே, காற்றோடு காற்றாக கலந்து நிற்கின்றார்கள்.இவர்களை எம்மால் மறக்க முடியாது, மறப்பதும் சரியான அர்த்தமாகாது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது பாசறையில் படைத்துறைப்பயிற்சி பெற்றுக்கொண்ட கப்டன். ஜிம்கலி அவர்களின் சொந்த ஊரான கிரானில் விடுதலைப் போராட்டத்திற்கு முந்திய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற வரிசையிலும் ஜிம்கலி இருந்தார். ஆட்சியாளர்களுக்கு எதிராக தமிழ்மக்கள் திரண்டெழுந்தபோது, பேரூந்து எரிப்பு, சிங்கள எழுத்துக்கள் அழிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றத்திற்கு எதிரான போக்கு என்பவற்றில் ஜிம்கலியின் பங்கு அதிகமாகவே இருந்தது. வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கின்றபோது எமது மண்ணிலிருந்து கிளர்தெழுந்த தமிழ் இளைஞர் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நாம் அறிந்து கொள்ளவேண்டிய பல சம்பவங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. எந்த சுயநலமுமில்லாது தமிழ்மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என்று எழுந்தவர்கள் தான் இந்த வீரமறவர்கள், நாம் வசதியோடு, வளமாக வாழ நினைக்கின்றோம் ஆனால் இவர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும், தங்களை தாங்களே ஆட்சி செய்து தமிழ்மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் தங்களை தமது மண்ணுக்கு உரமாக்கினார்கள். மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கின்ற கிரான் என்ற ஊர் தமிழர்களின் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. கிரானிலிருந்து மேற்கு திசையாக பயணிக்கின்ற போது எமது பார்வையில் படுகின்ற ஒவ்வொரு ஊரும், விடுதலைப் போராட்டத்தில் முக்கிய, அழியாத நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. புலிபாய்ந்தகல், கோராவெளி, பொண்டுகள் சேனை, குடும்பிமலை, பள்ளத்துச்சேனை,தரவை ,வடமுனை,கள்ளிச்சை மியான்கல்குளம், கூளாவடி.வாகனேரி என இன்னும் பல வயல்சார்ந்த ஊர்கள் தமிழ்மக்களுக்கு படியளக்கும் பசுமை நிறைந்த இடமாகவும் காணப்படுகின்றன. தமிழீழத்தின் எல்லையை நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு இடமும் தமிழர்களின் பெயர் சொல்லும் தமிழர்களின் வாழ்வாதார இடமாகவும் அமைந்திருக்கின்றன. கொஞ்சம் குடியிருப்புகள் கொஞ்சம் வயல்நிலங்கள், கொஞ்சம் காடுகள் என கலந்திருக்கின்ற இவ்வூர்கள் அனைத்தும் எமது விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வாழ் விடங்களாகவும் மாறி யிருந்தன.ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு என்ற அடிப்படையிலும் எம்மால் காணக்கூடியதாகவும் இருந்தது.மேற்கு புறத்தின் எல்லையில் அகல வாய் திறந்திருந்த சிங்கள ஆக்கிரமிப்பையும் வடமுனையில் தடுத்து நிறுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் போர் அமைந்திருந்தது. ஒவ்வொரு குடியேற்றத்திற்கும்ஒவ்வொரு காரணம் வைத்திருக்கும் சிங்கள அரசு மேற் கூறப்பட்ட தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த வைத்திருந்த காரணம் மகாவலி c வலயமாகும்.போராளிகளின் வாழ் விடங்களாக மாறிய இவ்விடங்களில் வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் விடுதலைப் புலிகள் இருந்தனர். வீரம் செறிந்த விடுதலைப் போரை சந்தித்த இடங்களாகவும் இவை விளங்கின. புலிபாய்ந்தகல், இவ்வூர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் முதல் வரலாற்றுப்பதிவு ஒன்றைக் கொண்டதால்சிறப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் இரகசியமான முறையில் இயங்க ஆரம்பித்த வேளையில் பண்ணைமுறையிலான மறைவிடங்களை தமிழீழ மெங்கும் ஆங்காங்கே வைத்திருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது பண்ணை இயங்கியது, புலிபாய்ந்தகல் ஊரில்தான் என்பதையும், இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஒரு சில தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த இப் பண்ணையின் மூலமாக முதல் அத்தியாயத்தை விடுதலைப் போராட்ட வரலாற்றில் இவ்வூர் பெற்றிருக்கிறது. அதற்குப் பின்பு பல போர் நிகழ்வுகளையும், மற்றும் வழிமறிப்புத்தாக்குதல்களையும், பரந்து விரிந்த இடத்தில் வாழ்ந்த போராளிகளின் எல்லைப்பாதுகாப்பு அரண் ஊராகவும், சிங்கள ஆக்கிரமிப்பு படையினர் ஒவ்வொருவரும் அறிந்து கொண்ட இடமாகவும் இது விளங்கியது. கப்டன்.ஜிம்கலி, பயிற்சியை முடித்தவுடன் தமிழ்நாடு மாநிலத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது பயிற்சி முகாமில் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அதன் பிறகு தாய் மண் திரும்பிய வேளையில் யாழ்ப்பாண ஸ்ரீலங்கா காவல் நிலைய அழிப்பு தாக்குதலிலும் ஈடுபட்டார். மட்டக்களப்பு நோக்கி வருகிற வழியில்வன்னிபெருநிலப்பரப்பில் பல நடவடிக்கைகளில் போராளிகளுடன் இணைந்து செயலாற்றினார். முல்லைத்தீவின் கொக்கிளாய் என்ற இடத்தில் அமைந்திருந்த சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப் பட்ட முதல் சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதல் என்ற வரலாற்று பதிவிலும் இடம்பெற்றார். இத் தாக்குதலில் கிரான் ஊரின் முதல் மாவீரர் கென்னடி என்பவரும் வீரச்சாவடைந்தார். விடுதலைப் புலிகளின் இந்தியாவின் இரண்டாவது பாசறையில் பயிற்சி பெற்ற கென்னடி கிரான் ஊரில் விடுதலையை நேசித்த குடும்பங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்டவர். திருகோணாமலை மாவட்டத்தில் குச்சவெளி என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த சிங்களக்காவல் நிலையம் மீதான தாக் குதலிலும் கப்டன் ஜிம்கலி பங்கேற்றுக் கொண்டார். 1985 ம் ஆண்டு மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத் தளபதி அருணா தங்கியிருந்த ஈரளக்குளம் மதுரையடி முகாமில் கப்டன். ஜிம்கலி அவர்களும் இணைந்திருந்தார் இம் முகாமில் வைத்து திட்டமிடப்பட்ட ஏறாவூர் சிங்கள காவல் நிலையத்தாக்குதலில் கப்டன். ஜிம்கலி அவர்களின் பங்கு அளப்பெரியதாக இருந்தது. 2 . 9 . 1985 ம் ஆண்டு அன்று இத் தாக்குதல் நடந்த வேளையில் சிங்கள அதிரடிப்படையினர், கல்லடி, கும்புறுமுலை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர்.இத் தாக்குதல் நடக்கின்றபோது ஏறாவூர் சிங்கள காவல் துறையினருக்கு உதவிக்கு வரவிருக்கும் கும்புறுமூலையில் நிலை கொண்டிருந்த சிங்கள அதிரடிப்படையினரை தடுத்துத் தாக்கும்பணி கப்டன். ஜிம்கலி தலைமையிலான குழுவினருக்கு கொடுக்கப் பட்டிருந்தது. இக் குழுவில் மட்டு – அம்பாறை முதல் பாசறையில் பயிற்சி பெற்ற மட்- இருதயபுரத்தைச் சேர்ந்த கப்டன்.சபேசன்,கிரான் ஊரைச் சேர்ந்த கங்கா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கப்டன். ஜிம்கலி குழுவினரின் தீவிர தாக்குதலால் நிலை குலைந்த சிங்கள அதிரடிப்படையினர் முகாமுக்கு திரும்பி ஓடினார்கள்.அன்றிலிருந்து கப்டன். ஜிம்கலி கும்புறுமூலை அதிரடிப் படையினருக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வீரனாகக் காணப்பட்டார். கிரான் ஊரிலிருந்து விடுதலைக்காக திசைமாறிய இளைஞர்கள் எல்லாம் சரியான திசையில் கப்டன் ஜிம்கலி அவர்களின் பின்னால் அணிதிரண்டனர்.இவர்களுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிருந்தும் இணைந்துகொண்ட இளைஞர்களையும் வைத்து மாவட்டத்தின் இரண்டாவது பயிற்சிப் பாசறையை பள்ளத்துச்சேனை என்ற பழந்தமிழ் வயல்சார்ந்த ஊரில் தனது மேற்பார்வையில் திறம்பட நடத்தினார். இப் பாசறையில் பயிற்சி பெற்று,பூநகரி சிங்கள இராணுவ படைத்தளம் மீதான தாக்குதலில் 16 . 11 . 1993 . அன்று வீரச்சாவடைந்த மேஜர். ரூபன் பல களங்களை கண்ட வீரமான ஓர் போராளியாகும். மட்டக்களப்பு வடக்கு பொறுப்பாளராகப் பணியாற்றி பலசாதனைகளை விடுதலைக்காக நிகழ்த்திக்காட்டியவர் என்பதையும் இச் சந்தர்பத்தில் நினைவு கூருகின்றோம். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட தளபதியாக லெப். கேணல் குமரப்பா பொறுப்பேற்றுக் கொண்டதைத்தொடந்து, வரலாற்று சிறப்புமிக்க கோயிலைக் கொண்டிருந்த கோராவெளி ஊரில்அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தங்குமிட முகாமுக்குப் பொறுப்பாளராக கப்டன். ஜிம்கலி நியமிக்கப் பட்டிருந்தார். கப்டன்.ஜிம்கலி அவர்களின் திட்டமிடலிலும், தலைமையிலும் வாகனேரி என்ற ஊரில் 1986 ம் ஆண்டு ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும், பல இராணுவத்தினர் காயமடைந்தனர். 27 . 06 1986 அன்று அதிகாலையில் கப்டன் .ஜிம்கலி முகாம் சிங்கள இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. நீண்ட காலமாக வேவுபார்க்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு இப் பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்தினர் மேற் கொண்டிருந்ததாக பின்பு அறியப்பட்டது. காலை இரண்டு குண்டு வீச்சு விமானங்கள்,உலங்கு வானுர்தி என தாக்குதலுக்கு மேலதிக பாதுகாப்பைக்கொடுத்ததாக நடவடிக்கை அமைந்திருந்தது.இம் முகாமுக்கு குறிப்பட்ட தூரத்தில் தங்கியிருந்த தளபதி லெப்.கேணல் குமரப்பா கப்டன். ஜிம்கலி அவர்களுடன் தொடர்பை எடுப்பதற்கு முயன்று முடியாததால் போராளி கங்கா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிங்கள இராணுவத்தினரின் தாக்குதல் பற்றியதை அறிந்துகொண்டு, எல்லோரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் எனக்கூறினார் இதற்கேற்ப குறிப்பிட்ட சில போராளிகளை குழுவாக ஒரு பக்கம் அனுப்பிவைத்து, இன்னொரு பக்கம் அவர்களும் சண்டையில் ஈடுபட்டனர். மேஜர்.ரூபன் , கப்டன்.தரன் ஆகிய குழுவினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் சிங்கள இராணுவத்தினர் சிதறி ஓடினர். இதன் பின்பு முகாமுக்குள் நுழைந்து தேடிய போதுதான் கப்டன். ஜிம்கலி உட்பட பத்து பேர் வீரச்சாவடைந்தது தெரிய வந்தது. இதில் தாக்குதல் நடத்தப்பட்ட முகாமை விட்டு வெளியேறிய நிலையில் குண்டு வீச்சு விமானத்தாக்குதலில் கங்கா வீரச்சாவடைந்திருந்தார். துப்பாக்கி சூட்டுக்காயத்துடன் சயனைட் அருந்திய நிலையில் கப்டன். ஜிம்கலி அவர்களின் வித்துடல் எடுக்கப்பட்டது.அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருடன் இருக்கவில்லை.இவ் ஆயுதம் சிங்கள இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது உறுதிசெய்யப்பட்டது. ஆனால் இவ் விடத்தில் சில ஆண்டுகளின் பின்பு ஒரு மரப் பொந்துக்குள் மறைத்து வைக்கபட்டிருந்ததை அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் கண்டெடுத்து போராளிகளிடம் ஒப்படைத்தார். இது ஜிம்கலிவைத்திருந்தது என தெரியவந்தது. தனது உயிரை விட தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற ஆயுதம் மேலானது என்ற உணர்வு கப்டன்.ஜிம்கலி அவரிடமிருந்ததை எம்மால் உணரமுடிந்தது. அக் காலங்களில் ஒவ்வொரு போராளியும் ஆயுதத்தைப் பாதுகாப்பதற்கு தமது உயிரை அர்பணித்தார்கள் என்பதை எமது போராட்ட வரலாறுகளின் மூலம் அறிந்திருக்கின்றோம். இச் சம்பவத்தைத்தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தங்கள் புலனாய்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்.இப் புலனாய்வு நடவடிக்கையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முதல் பாசறையில் பயிற்சி பெற்ற கறுவாக்கேணி ஊரைச் சேர்ந்த கப்டன். சங்கர் ஈடு பட்டிருந்தார். இவருடைய திறமையினால் கோராவெளிமுகாம் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக விரிவாக அறிய முடிந்தது . மாடுவளர்ப்பு அதிகமாகக் காணப்பட்ட இப் பகுதிகளில் மாடு வாங்குபவர்கள் போல் வந்து முகாம் அமைவிடத்தை துல்லியமாக அறிந்து கொடுத்ததால் சிங்கள இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதை சம்பந்தப் பட்டவர்கள் மூலமாக கப்டன். சங்கர் தெரிந்து கொண்டார். இவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற பலவீனத்தைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு அன்றிலிருந்து ஆக்கிரமிப்புவாதிகள் ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இன்றும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. நன்றி தமிழ்காந்
  12. http://irruppu.com/2021/06/29/தரையிறங்கிய-சிறப்புப்பட/ June 29, 2021 1990.06 .மாதம் நடுப்பகுதியில் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியதும் இலங்கை அரசஇயந்திரம் முழுப்படைப்பலத்தையும தமிழீழமக்களுக்கெதிராக முழுவீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது. இவைகளுக்கெதிராக விடுதலைப்புலிகளும் கடுமையாக போரிட்டுக்கொண்டிருந்தனர்.அந்தவகையில் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்த இலங்கை இராணுவமுகாம்களில ஒன்றான திருகோணமலை மாவட்டம் முதூர் நகர் பகுதியில் அமைந்திருந்த இராணுவமுகாமும் ஒன்றாகும்.இம்முகாமில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் இருந்தனர்.இதை இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பித்ததும் விடுதலைப்புலிகள் தங்களது முற்றுகைக்குள் கொண்டுவந்தனர்.இம்முகாம் கப்டன்.பேனாட் அவர்கள் மற்றும் மேஐர்.பவான் அவர்கள் தலைமையிலான போராளிகள் இலங்கைப்படைகளை வெளியேறாத வண்ணம் ஒருமுற்றுகைக்குள் வைத்திருந்தனர்.இப்படைமுகாமில் உள்ளவர்களுக்கு ஆதரவாகவும் இம்முகாமில் உள்ளவர்களை மீட்பதற்காகவும்.பல்வேறு கடல்வழிமூலம் தரையிறக்க முயற்சிகளை இலங்கைஇராணுவம் மேற்கொண்டது. இருந்தாலும் விடுதலைப்புலிவீரர்களின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் அம்முயற்சிகளிலிருந்து பின்வாங்கியது இலங்கை முப்படைகள்.இருந்தாலும் 14.06.1990 அன்று இரவு திருகோணமலைமாவட்டம் முற்றுகைக்குள்ன முகாமிலிருந்து சுமார் ஆறுகிலேமீற்றர் தூரத்திலிலுள்ள இலக்கந்தை என்னுமிடத்தில் நள்ளிரவில் இங்கைஇராணுவத்தின் அதிசிறப்புப்காட்டுபபயிற்சி பெற்ற எண்பத்திமூன்று பேரைக்கொணட சிறப்பு அணிகளை தரையிறக்கியது. தரையிறங்கிய படைகள் மெதுமெதுவாக முதூர் நகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் முற்றுகைக்குட்பட்ட இராணுவமுகாமை நோக்கி நகர்ந்து வந்தனர் .இப்படை நகர்வை விடுதலைப்புலிகளின் வேவுவீரர்கள் அப்பகுதிக் பொறுப்பாளாரான பேனாட் அவர்களுக்குத் தெரிவித்தனர். பேனாட் அவர்களோ அணிகளை ஒருங்கினைத்து விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான பகுதியான கட்டைப்பறிச்சான் பாலத்திற்க்கு அண்மையாக வழிமறித்து ஒருபாரிய வீராவேசத்துடன் இருந்த சிறிய அணிகளையும் ஒருங்கினைத்து தாக்கினார்கள்.இச்சமர் 15.06.1990 அன்று காலை ஒன்பதுமணியளவிலிருந்து மாலை மூன்றுமணிவரை நீடித்தது.இத்தீரமிகு தாக்குதலில் தரையிறங்கிய சிறப்புப்படையணிகளில் நாற்பதிற்க்கும் மேற்பட்டபடையினர் கொல்லப்பட்டதுடன் அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.எஞ்சிய படையினரை கலைத்துச் சென்ற விடுதலைப் புலிகள் மீது விமானப்படையினரின் மூர்கத்தனமான தாக்குதல் நடாத்தி பாதுகாப்பு வழங்க கடற்படையினரின் படகுகளில் ஏறி தப்பியோடினர். இவ்வீரம் செறிந்த சமரில் மேஐர்.பவான் வீரச்சாவு.(03.07.1990.)அவர்கள் கப்டன் .குட்டி அவர்கள்.வீரச்சாவு.(17.06.1990) மேஐர்.வெற்றிச்செல்வன்.அவர்கள்.வீரச்சாவு. (09.06.1992)மேஐர் .வினோத்.அவர்கள்.(வீரச்சாவு. லெப்.நிமால்.அவர்கள்.வீரச்சாவு.(30.06.1991.). ஆகியோர். தலைமையிலான அணிகள் இச்சமரில் தத்தம் பகுதிகளை இராணுவம் வந்துவிடக்கூடாது என்கிற நிலையில் தலைவனை மனதில் நிலைநிறுத்தி கடுமையாகப் போரிட்டு இவ்வெற்றிகர நடவடிக்கைக்கு மேலும் வலுச்சேர்த்தார்கள்.இவ்வெற்றிகர தாக்குதலில் வீரவேங்கை ஜெகன் அவர்கள் வீரவேங்கை .டங்கா அவர்கள் வீரச்சாவடைந்தார்.இவ்வெற்றிகர நடவடிக்கைகளை கப்டன்.பேனாட் அவர்கள். (வீரச்சாவு.01.09.1990)செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார்.இத்தாக்குதல்களில் வீரமிக்க போராளிகள் சுமார் அறுபதுபேர்கள் தான் இருந்தார்கள். எப்படைவரினும் எமது வீரச்சாவடைந்த உடலைத் தாண்டிதான் வரவேண்டும் என்ற ஒவ்வொரு போரளியின் உணர்வாலேதான் இவ்வெற்றி தலைநர்ப்போராளிகளுக்குச்சாத்தியமாகிற்று. எழுத்துருவாக்கம்…சு.குணா. கப்டன் பேனாட் காளிக்குட்டி இரத்தினசபாபதி புதுக்குடியிருப்பு, தம்பலகாமம், திருகோணமலை.
  13. மண்டைதீவுச் சமரின் பின் அச்சமரில் பங்கு பற்றிய போராளிகளைச் சந்தித்த தலைவர் அவர்கள் எதிரி ஒரு பெரும் தாக்குதலுக்குத் தயாராகுகிறான்.அதற்க்குத் தயாராக இருக்கும்படியும் அதற்கான ஆலோசனைகள் பலவற்றை போராளிகளிடத்தில் கூறினார். அதற்கமைவாக வலிகாமம் பகுதியிலுள்ள மாதகல் திருவடிநிலையில் பதினைந்துபேர் கொண்ட சிறு அணி நிலை கொள்ள வேவு அணிகள் முன்னே தமது வேவுத்தகவல்களைச் சேகரித்தன .09.07.1995 அன்று காலை எதிரி பலத்த எறிகணைத்தாக்குதல் மற்றும் விமானத்தாக்குதல்களை நடாத்தியவாறு பாரியதொரு முன்னேற்ற நடவடிக்கையை திருவடிநிலை கடற்கரையோரப் பிரதேசம் நோக்கி ஆரம்பித்தான் . அங்குநின்ற அணிகள் சிறுசிறு தாக்குதல்களை நடாத்தி பின்வாங்கின. இவ் அணிகளுடன் மேலதிகமாக மூத்த தளபதி பானு அவர்களின் தலைமையில் மேஐர் பசிலன் அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி அணிகளும் இன்னும் பல அணிகளும் அராலியில் ஒரு அரண் அமைத்து எதிரியின் முன்னேற்றத்தை தடுத்தனர்.ஆனால் 12.07.1995 அன்று அணிகள் பின்னால் எடுக்கப்பட்டதுடன் அனைத்து அணிகளும் மருதனார்மடப் பாடசாலையில் ஒருங்கினைத்து மூத்த தளபதி பொட்டு அவர்கள் தலைமையில் ஒரு பெரும் தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டதுடன் http://irruppu.com/wp-content/uploads/2021/07/IMG-7d8d9dc474fd390ee1a25386a8036ea6-V.jpg எதிரியின் முன்னேறிப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையால் மக்கள் படுகின்ற இன்னல்களைப் பற்றி குறிப்பிட்ட மூத்த தளபதி பொட்டு அவர்கள் இராணுவம் கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துவதற்க்கு முன் தாக்குதல் நடாத்த வேண்டுமெனவும்.அணிகள் பிரிக்கப்பட்டு அளவெட்டி பகுதிக்கு மூத்த தளபதி பானு அவர்களும் உதவியாக( 18.10.1995 அன்று சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவடைந்த லெப் கேணல் சங்கர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்) .14.07.1995 அன்று அதிகாலை சண்டை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் முன்னரன்கள் கைப்பற்றப்பட்டு அணிகள் முன்னேறிச் சென்று அருணோதயாப் பாடசாலை உட்பட்ட பெரும்பிரதேசம் எமது பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தன.அன்றைய தினம் மதியம் எமதணிகளுடன் மேலதிகமாக மட்டு.அம்பாறைப் படையணிகள் இணைக்கப்பட்டு மாசியப்பிட்டி பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு இவ் அணிகள் அனுப்ப்பட்டு அங்கு நின்ற அணிகளுடன் இணைந்து சண்டையிட்டு அவ்விடங்களும் கைப்பற்றப்பட்டன. http://irruppu.com/wp-content/uploads/2021/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D1.jpg இவ் வெற்றிகர இராணுவ நடவடிக்கையை தலைவர் அவர்களின் ஆலோசனையுடன் மூத்த தளபதி பொட்டு அவர்கள் வழி நடாத்தினார்.இந் நடவடிக்கையில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டு பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு ஒரு புக்காரா விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.படையினரால் வன்வளைப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டது்.இந் நடவடிக்கையில் எழுபது போராளிகள் வீரச்சாவடைந்தனர். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/07/14/முன்னேறிப்பாய்ச்சலும்-ப/
  14. தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன. இத்தகவல்களை மணலாற்று வேவுஅணிகள் தளபதிகளான அன்பு அவர்கள் மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகளோ எமது தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதற்காகவுமே இத்திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டம் அமைக்கப்படுவதாகவும் இவைகளுக்குப்பாதுகாப்பு வழங்கும் காவலரன்களைத் தாக்கி அழிக்க உத்தரவிட்டதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி இத்தாக்குதலில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படக்கூடாது என்று கூறி தளபதிகளை வழியனுப்பி வைத்தார். தலைவர் அவர்கள்.வேவு அணிகள் கொடுத்ததரவுகளின் அடிப்படையில் தலைவர் அவர்கள் நல்லதொரு தாக்குதற்த்திட்டத்தைக் கொடுத்தார்.அதற்கமைவாக இருநூறுபேர்கொண்ட ஆண் பெண் போராளிகளைக் கொண்ட அணிகள் பிரிக்கப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன பயிற்சிகள் நிறைவுபெற்று தாக்குதல் திட்டம் கமல் முகாமில் சிறப்புத் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது. (அத்துடன் களத்தை வழிநடத்துகிற தளபதி வீமன் அவர்களுக்கு சிறப்புத்தளபதி அன்பு அவர்கள் தெளிவான ஒருவிடயத்தைக் கூறினார்.தமிழர்தாயகப்பிரதேசத்தின் மணலாற்றின் முக்கியத்துவத்தை ஆழமாகவிளங்கப்படுத்தி அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை எமது தலைவர் அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்.எனவே எமது மக்களின் தாயகப்பரப்பு துண்டாடப்படாமல் இருக்க என்ன விலைகொடுத்தாலும் இக்காவலரன்களை அழிக்கவேண்டும். ஏனெனில் இக்காவலரன்களை அழிக்காமல் விட்டால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை தடுக்கவும் முடியாது என்பதற்காகவே அவர் கடும்தொணியில் இவ்விடயத்தைக்கூறினார்.ஒவ்வொருபோராளியும் இவ்விடயத்திலிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இக்காவலரன்களை அழிக்கவேண்டுமென மனதில் உறுதிபூண்டார்கள்.) திட்டத்தின்படி திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்திட்டத்திற்க்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்ட அனைத்துக் காவலரன்களை அதாவது இருபத்திஐந்திற்க்கும் மேற்பட்டகாவலரண்கள். தாக்கியழிப்பதே திட்டமாகும். திட்டத்திற்கமைவாக 02.03.1992 அன்று இரவு வேவு அணிகள் பெருஙகாடுகளுக்கூடாக மிகவும் தாக்குதல் அணிகளை மிகவும இரகசியமாக நகர்த்தி 03.03.1992 அன்று அதிகாலை சுமார் ஒருமணியளவில் எதிரியின் தாக்கவேண்டிய காவலரன்களுக்கு அண்மையாகக் கூட்டிச்சென்று விட்டனர். தாக்குல் அன்றைய தினம் அதிகாலை இரண்டு மணியளவில் ஆரம்பாமானது தாக்குதல் ஆரம்பித்த குறுகிய நேரத்தில் அனைத்துக் காவலரன்களும் விடுதலைப்புலிவீரர்களின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.கைப்பற்றப்பட்ட அனைத்துக் காவலரன்களையும் அழித்துவிட்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் புலிகள் தளம் திரும்பினர். இவ்வெற்றிகரத்தாக்குதலை களத்தில் தளபதி வீமன் அவர்களும் உதவியாக லெப்.கேணல்.கஐந்திரன் அவர்களும்(வீரச்சாவு..30.12.2006) வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டச் சிறப்புத் தளபதி லெப்.கேணல். அன்பு அவர்கள் வீரச்சாவு.(12.11.1993) செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இத்தாக்குதலுக்கான வேவுத்தகவல்களை சேகரித்துத் தந்ததுடன் தாக்குதல் அணிகளையும் களத்திற்க்குள் குறிப்பிட்டநேரத்திற்க்குள் நகர்த்தி சண்டையிலும் பங்காற்றி பின்னாளில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் .இளம்புலி அவர்களையும் நினைவுகூருகின்றோம். இவ்வெற்றிகரத்தாக்குதலில் களத்தை வழிநடாத்திய தளபதி மேஐர்.வீமன் அவர்கள் வீரச்சாவடைந்தார். எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/08/15/திட்டமிட்ட-சிங்களக்-குடி/
  15. நீண்டகாலமாக மன்னாரிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படயினர் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டுவந்தனர். அதுமட்டுமல்லாது கடற்புலிகளின் இந்திய விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்தனர். இருந்தாலும் கடற்புலிகளும் இக்கடற்படையினர் மீது பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனாலும் அவைகளும் வெற்றியளிக்கவில்லை.மாற்றுத்திட்டமொன்றின் மூலம் தான் தாக்குதல் நடத்தலாம் அதுவென்ன என்கிற எண்ணமே போராளிகளிடமும் தளபதிகளிடமும் இருந்தது. இப்பிரச்சனைகள் அனைத்தும் எமது தலைவர் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டுவந்தனர் தளபதிகளான சூசை அவர்களும் தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்களும் இவ் அனைத்து விடயங்களையும் அக்களநிலவரங்களையும கேட்டறிந்து தீவிரமாக ஆராய்ந்த எமது தலைவர் அவர்கள். மீனவர்கள மீதுதானே தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதற்கேற்றாற்போல ஒரு நல்லதொரு தாக்குதற்திட்டம் எமது தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்டது.அதற்கமைவாக ஒரு ரோலர் கொள்வனவு செய்து அவ்ரோலரில் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டு மூன்று கடற்கரும்புலிகள் செல்வார்கள் . அவர்கள் சாதரண மீன்பிடி ரோலரைப்போல மீன்பிடியில் ஈடுபடுவார்கள் .இலங்கைக்கடற்படையினர் தமது வழமையான தாக்குதலை அப்பாவி மீனவர்கள் மீது நடாத்தலாம் என எண்ணி ரோலருக்கு மிக அண்மையாக வரும்போது இக்கடற்கரும்புலிகள் மீன்களைக் கொடுப்பது போல பாவனைசெய்து வரும் இலங்கைக் கடற்படையின் டோறாப்பீரங்கிக்கலம் மீது தாக்குதல் நடாத்துவார்கள் இதுவே அத்தாக்குதற் திட்டமாகும். திட்டத்திற்கமைவாக நீண்ட கடலனுபவம் கொண்ட கடற்கரும்புலிவீரர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். தாக்குதற் திட்டத்திற்கமைவாக 2000 ஆண்டு. மூன்றாம் மாதம் முற்பகுதியில் இக்கடற்கரும்புலிவீரர்கள் தமது இலக்கை அதாவது மக்களுக்கு பாரிய அழிவுகளை கொடுத்துககொண்டிருந்த இலங்கைக்கடற்படையினரின் கலத்தை அழிப்பதற்கான தங்களது பயணத்தை ஆரம்பித்தார்கள்.கடுமையான காற்று சீரற்ற காலநிலை இவைகளுக்கும் மத்தியில் தங்களது இலக்கை நோக்கி இக்கடற்கரும்புலிவீரர்கள் சென்றார்கள்.கிட்டத்தட்ட ஒருவாரமாக அக்கடலில் தங்களது இலக்கிற்க்காக அலைந்து திரிந்தார்கள் . இறுதியாக 12.03.2000 அன்று அதிகாலை இவர்களது ரோலரை அண்மித்த இலங்கைக்கடற்படையினர் இவர்களை விரட்டி மீன்களைப்பறித்து இவர்களை தாக்கமுற்பட்டபோது அவ் அதிவேகடோறாப்படகுமீது தாக்குதல் நடாத்தி மன்னார் கடலிலே தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு புதியவரலாற்றை எழுதிச்சென்றார்கள் இக்கடற்கரும்புலிவீரர்கள். http://irruppu.com/wp-content/uploads/2021/08/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%A6%E0%AE%AE%E0%AF%87%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-840x473.jpg அதுவரை தமிழ் மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையினரால் இருந்த தொந்தரவும் நீங்கியது.மீண்டும் தமிழ்மீனவர்கள் மீது கைவைத்தால் இப்படியான தாக்குதல் நடக்குமென்பதால் இலங்கைக்கடற்படையினரும் தமிழ்மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தாமல் ஒதுங்கிக்கொண்டனர். இத்தீரமிகு தாக்குதலில் ஒரு டோறாப்படகு பாரியசேதமடைந்ததுடன் பலகடற்படைபடையினர் கொல்லப்பட்டதுடன் பலகடற்படையினர் படுகாயமடைந்தனர். இத்தீரமிகு தாக்குதலை எமது தலைவர் அவர்களின் திட்டத்திற்கமைவாக கடற்புலிகளின் அப்போதைய தளபதி பிருந்தன் மாஸ்ரர் அவர்கள் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார். இவ்வீரமிகு தாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளான… கடற்கரும்புலி …மேஐர்.பரதன். கடறகரும்புலி…மேஐர்.மதன். கடற்கரும்புலி..கப்டன்.தினேஸ். எழுத்துருவாக்கம்…சு.குணா http://irruppu.com/2021/08/10/ஆழ்கடல்-தமிழ்-மீனவர்களின/
  16. 1993 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக் கடற்படையினர், வடமராட்சிப்பகுதியில் கஸ்ரத்தின் மத்தியில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது சுட்டும் வெட்டியும் அவர்களின் படகுகளை மூழ்கடித்தும் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல்களை அதுவும் கரையிலிருந்து நான்கு கடல்மைல் தூரத்திற்குள் வந்து மேற்கொண்டிருந்தனர். இதனைக் கடற்புலிகள் தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். தலைவர் அவர்களோ எங்களிடம் அதற்கேற்ற ஆயுதம் இல்லை நீங்கள் அக் கடற்படையினர் மீது தாக்குதல் நடாத்தி அவர்களிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்களுக்கெதிராகப் பயன்படுத்தும்படியும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான பொறுப்பை தளபதி லெப் கேணல் சாள்ஸ் ( வீரச்சாவு 11.06.1993 ) அவர்களிடம் ஒப்படைத்தார். அதற்கமைவாக சாள்ஸ் அவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையில் கிளாலி கடல்நீரேரியில் மக்கள் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையில் இலங்கைக் கடற்படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்தார். தளபதி சாள்ஸ் அவர்களின் இழப்பிற்க்குப் பழிவாங்கும் முகமாக ஒரு தாக்குதலை நடாத்துவற்காக இச் சந்தர்ப்பத்தையும் கடற்புலிகள் ஆக்ரோசத்துடனும் அதேவேளை நிதானத்துடனும் செயற்பட்டனர். அதற்கமைவாக கடற்கரும்புலிகளான மேஐர் புகழரசனும் கப்டன் மணியரசனும் தேர்வுசெய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் சிறப்புத் தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது .திட்டத்தின்படி மீனவர்களது படகைப்போல படகொன்றைக் கொள்வனவு செய்து அதற்குள் வெடிமருந்து நிரப்பப்பட்டு அதற்குமேல் வலைகள் போடப்பட்டு இவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவார்கள். கடற்படையினர் இவர்களது படகை அணைத்து ஒருவரை தமது கடற்படைப்படகில் ஏறச்சொல்வார்கள் அச்சமயம் மணியரசன் ஏறமுற்பட புகழரசன் வெடிக்கவைப்பார். வெடிக்கவைத்தவுடன் இன்பருட்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று அவ்டோறாப்படகை கைப்பற்றுவார்கள்- இதுவே திட்டமாக இருந்தது. 29.08.1993 அன்று திட்டத்தின்படி பருத்தித்துறைக் கடற்பரப்பில் கடற்கரும்புலிகள் டோறாப்படகை மோதி வெடித்தனர்.சண்டைப்படகுகள் வேகமாகச் சென்று டோறாவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தநேரத்தில் போதிய வசதியின்மையால் அம்முயற்சி பலனலிக்காமல் போக கடற்புலிகள் அவ்டோறாப்படகிலிருந்த ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தார்கள். இத்தாக்குதலுக்காக இக்கடற்கரும்புலிகள் பட்டகஸ்ரம் கொஞ்ச நஞ்சமல்ல ஒவ்வொருநாளும் இரவிலிருந்து மதியம் வரை வல்வெட்டித்துறையிலிருந்து மணற்காடுவரை இலக்கைத்தேடி ஓடுவார்கள் .பின்னர் இலக்குக்கிடைகாமல் திரும்புவார்கள் .இதுமாதக்கணக்கில் இடம்பெற்றது இருந்தாலும் இவர்கள் இலக்குக்கிடைக்கும் வரை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து இலக்கின் மீது தமது உயிராயுதத்தால் மோதி விடுதலைப்போராட்டத்திற்க்கு பலம் சேர்த்தார்கள்.இதுவே கடற்கரும்புலித்தாக்குதலில் முதலாவதாக மூழ்கடிக்கப்பட்ட டோறாப்படகாகும். இவ்வெற்றிகத் தாக்குதலில் கடற்கரும்புலி மேஐர்.புகழரசன். கடற்கரும்புலி கப்டன் மணியரசன். ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இவ்வெற்றிகரத் தாக்குதலை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடாத்தினார்கள். தலைவர் அவர்கள் குறிப்பட்டபடி கடற்கரும்புலிகளின் உயிராயுதத்தால் மீட்கப்பட்ட ஆயூதங்கள் கடற்புலிகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதுவும், அதன் பின் நடைபெற்ற கடற்சமரில் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் முன்னனி ஆயுதங்களாக சண்டைகளின் திருப்புமுனையாக அமைந்தது என்று கூறினால் அதுமிகையாது. எழுத்துருவாக்கம்..சு.குணா. http://irruppu.com/2021/08/30/கடற்கரும்புலிகளினால்-மு/
  17. தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடக்க காலகட்டத்தில் ஆங்காங்கே இலங்கை இராணுவத்தினர்மீதான சிறுசிறு பதுங்கித்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.பெரும்பலும் மக்களைப்பாதுகாக்கவும்,இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கட்டுப்படுத்தவும்வேண்டி இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். விடுதலைப்புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பலரும் பல்வேறு வகையில் தம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி விடுதலைக்கு வலுச்சேர்த்த வரலாறுகளும் பல உண்டு. இங்கே ,1984 ம் ஆண்டு செப்ரெம்பர் 10ம் தேதி முல்லைத்தீவு -திருகோணமலை பிரதான வீதியில் செம்மலையிலிருந்து நாயாறு நோக்கி சுமார் 1மைல் தூரத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்தாக்குதல் பற்றிப் பதிவு செய்ய விளைகின்றேன். அதை விபரிக்குமுன் அத்தாக்குதலைத் திறம்பட நடாத்திமுடித்த கப்டன் லோரன்ஸ் அவர்களைப்பற்றிக் குறிப்பிட்டாகவேண்டும். முல்லைத்தீவு மணலாற்றுப்பிரதேச அநேகமான மக்களுக்கு அவரைத்தெரியும். அதிலும் செம்மலைக்கிராம மக்களின் வீடுகளில் லோரன்சும் ஒரு பிள்ளை எனுமளவு மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஓர்சிறந்த போராளி .எப்போதும் சிவந்தே காணப்படும் கண்களில் விடுதலை வேட்கையும் ,சுறுசுறுப்பான செயற்பாடுகளும் மக்கள்மீது அவர்காட்டும் அன்பும் தமிழீத்தாயத்திற்கொண்ட அளவுகடந்த பற்றும் அவரை எல்லோர் மனங்களிலும் பதியவைத்துவிட்டது.அவரைப்போன்ற பல போராளிகளால்தான் போராட்டம் உச்சநிலைக்கு வளர்ந்தது என்றால் மிகையல்ல. அப்போதெல்லாம் இலங்கை இராணுவம் தனது விருப்பிற்கேற்ப அடாவடித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. அடிக்கடி சுற்றிவளைப்புகளும் கைதுகளும் மக்களின் வாழ்வை நிம்மதியற்ற நிலைக்குள்தள்ளியிருந்தது. நாயாற்றில் தமிழரின் பூர்வீக நிலத்தில் சிங்களமீனவர்களைக்குடியமர்த்தி ,அவர்களுக்குப் பாதுகாப்புவழங்குவதற்காகக் கொக்கிளாயில் இராணுவமுகாம் ஒன்றை இலங்கை இராணுவம் நிறுவியது.இதனால் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்கும்,கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுக்குமாக இராணுவ வாகனத்தொடரணிகளின் போக்குவரவு அதிகமாகியது.கூடவே, இடையில் நாயாற்றிலிருந்த சிங்களவர்களுக்கு அது பெரும் பலத்தையும் கொடுத்தது. மேலும் மேலும் அதிகரித்த இராணுவ நடவடிக்கைகளால் மணலாற்று மக்கள் சொந்த வீடுகளில் அச்சத்துடன் வாழும் நிலையை எதிர்கொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளால் மட்டுமே இந்நிலையை மாற்றமுடியும் என்பது மக்களின் அசையாத நம்பிக்கையாவிருந்தது. இவ்வேளையில் இலங்கை இராணுவத்திற்குத் தகுந்த பாடங்கற்பிக்கவேண்டி ஒரு கண்ணிவெடித்தாக்குதலை நடாத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர். இதற்குச் செம்மலைவாழ் மக்களிற் சிலரும் பக்கபலமாக நின்றனர்.கப்டன் லோரன்ஸின் தலைமையில் பணிகள் ஆரம்பமாகின.இராணுவத்தின் போக்குவரவு தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டதோடு தாக்குதலுக்கான நாளும்,இடமும் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அன்றையநாள் நிச்சயமாக இராணுவ வாகனம் வருமா என்பது கேள்வியாகவிருந்தது. அதனால் முல்லைத்தீவிலிருந்து இராணுவத்தை நாயாறுக்கு வரவழைக்க முடிவெடுத்தனர் புலிகள்.இதன்படி அளம்பிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்களவர்களின் லொறிக்குச் செம்மலை இளைஞர்கள்சிலர் கற்களை விட்டெறிந்துவிட்டு ஓடிவிட்டனர்.இச்செய்தி முல்லை இராணுவத்தைச்சென்றடைய அங்கிருந்து இராணுவத்தை நிரப்பியவாறு ஒரு ஜீப்வண்டியும் ஒரு துருப்புக்காவி(ரக்)வண்டியும் விரைந்து வந்தது.அழைத்து அடிப்பதென்பது இதுதான் போலும். http://irruppu.com/wp-content/uploads/2021/08/20210827_141345-840x630.jpg இதற்கு முன்னையநாள் சைக்கிளில் புறப்பட்ட கப்டன் லோரன்ஸ் அவர்களும் போராளிகள் சிலரும் செம்மலைக்கும் நாயாற்றுக்குமிடையில் 9 ம் கட்டையில் மக்கள் குடிகள் அரிதான இடத்தைத்தெரிவுசெய்து கண்ணிவெடியைக்கவனத்துடன் தடயமேதுமின்றிப் புதைத்துவிட்டு அருகிலுள்ள பற்றைகளுக்குள் பதுங்கியிருந்தனர்.அவர்களுக்கான உணவுப்பொதிகளை நேரத்துக்குநேரம் மக்கள் கொண்டுசென்று கொடுத்தனர்.அத்தோடு இராணுவத்தினரின் நகர்வும் மக்களால் அறியப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.ஆகமொத்தம் புலிகளும் மக்களும் இத்தாக்குதல் சரியாக இடம்பெறுவதற்கான எல்லாநடவடிக்கைகளையும் செவ்வனே நிறைவேற்றினர் என்பதோடு சரியான நேரத்திற்காகக்காத்திருந்தனர் எனபதே விடயம். நேரம் மதியத்தை நோக்கி நகர்கிறது. விரைந்துவந்த ஜீப்வண்டியும் துருப்புக்காவியும் நாயாற்றைச்சென்றடைந்து திரும்பிவரும்வரை காத்திருந்தனர் போராளிகள்.ஜீப்வண்டி சரியாகக் கண்ணிவெடியிடத்தை அடைய வெடி வெடிக்கவைக்கப்பட்டது.இதனைச்சற்றும் எதிர்பாராத இராணுவம் நிலைகுலைந்தது. ஜீப் முற்றிலும் சிதறியது அதிலிருந்த இராவத்தினர் அந்த இடத்திலேயே உயிரைவிட்டனர்.பலர் படுகாயமடைந்தனர்.துருப்புக்காவியின் முன்பக்கமும் சேதத்திற்குள்ளானது.இன்னும் சில இராணுவத்தினர் செய்வதறியாது கடற்ரைப்பக்கமாக ஓடி மீனவர்குடில்களில் தஞ்சமடைந்தனர். பீதியடைந்த சிலர் ஒடிச்சென்று மரங்களில் ஏறி ஒளிந்தனர்.சிறிய துப்பாக்கிச் சண்டையுடன் புலிகள் அவ்விடத்தைவிட்டகன்றனர்.ஏனெனில் அந்த இடம் தொடர் சண்டைக்கேற்றதல்ல என்பதே. இத்தாக்குதலில்10க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டதுடன் பல இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். சிலமணிநேரத்தின்பின் கொக்கிளாயிலிருந்து வந்த இராணுவம் செம்மலைப்பகுதியில் மக்கள்குடிருப்புகளை நோக்கிச் சரமாரியாகச்சுட்டதில் இளைஞர் ஒருவரின் கால் சிதைவுக்குள்ளாகிப்பின்னர் கால் துண்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றிகரத்தாக்குதலில் வீரச்சாவடைந்த.. லெப்டினன்ட் எட்வின் இரத்தினசபாபதி திலீபன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு. அவர்களையும்.நினைவுகூருகின்றோம். வீரப்பிறப்பு: 07.11.1965 வீரச்சாவு: 10.09.1984 http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-.%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D1.jpg அக்காலகட்டத்தில் அது ஒரு வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றித் தாக்குதலாக அமைந்தது. இத்தாக்குதலுக்காகக் கப்டன் லோரன்ஸ்(வீரச்சாவு 25.10.1985) அவர்கள் ஓட்டிச்சென்ற சைக்கிள் பற்றைகளின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டது.அது ஆதரவாளர் ஒருவருடையது.மீண்டும் இராணுவம் வந்து தேடுதல் வேட்டை நடத்தினால் மக்களுக்கும் இத்தாக்குதலுக்குமான நேரடித்தொடர்புவெளிப்பட்டுவிடும் என்பதனால் ,ஆபத்து என்று தெரிந்தும் ஆதரவாளர்கள் இரவோடிரவாகத்தாக்குதல்நடந்த இடத்திற்குச்சென்று சைக்கிளை எடுத்துவந்துவிட்டனர். தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள், இத்தாக்குதலுக்கு உதவிய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கப்டன் லோரன்ஸ் அவர்களைப் பணித்தார்.ஆயினும் முக்கியமான பணிகளின்மூலம் ஒத்துழைப்புவழங்கிய இளைஞர்கள் சிலர் தாமாகவே மணலாற்றுக்காட்டின்ஓரமாகத்தலைமறைவாகத்தங்கி யிருந்து நிலைமையைப்பார்த்துத் தாம் ஊர்திரும்புவதாகத்தெரியப்படுத்தி அவ்வாறே 3 நாட்களின் பின் மீண்டனர்.இவை பலரும் அறியாத தாக்குதலுக்குப்பின்னான நிலவரங்கள்.இப்படி இன்னும் ஏராளம் உண்டு. இவ்விடயங்கள் மக்களோடு புலிகளுக்கிருந்த நலுலுறவையும் ,புலிகள்மீது மக்களுக்கிருந்த அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்பதைக்காணலாம். எழுத்துருவாக்கம்.. கலைமகள் 10.09.2021 http://irruppu.com/2021/09/09/இலங்கை-இராணுத்தினர்-மீதா/
  18. உலக வல்லரசுகள் இலங்கைக்கு வழங்கிய செய்மதித் தகவல்களின் அடிப்படையில் 10.09.2007 அன்று இலங்கையிலிருந்து ஆயிரத்து ஐநூறு கடல் (1500NM ) மைல்களுக்கப்பால் அதாவது சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இரு வணிகக் கப்பல்களும் அவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக வந்த எண்ணெய்க் கப்பலும் தமது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் கடற்படையின் கப்பல் வருவதை (எந்த நாட்டுக் கடற்படையென்று அவருக்குத் தெரியாது ) http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.jpg அவதானித்த வணிகக் கப்பலொன்றின் தலைவரான எழில்வேந்தன் கப்பல்களை பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லப் பணித்ததுடன் இத்தகவல்களை தமிழீழத்திலுள்ள கட்டளை மையத்திற்க்கும் அறிவித்தார். மூன்று கப்பல்களும் வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் போது முறையே மதியம் ஒருமணியளவில் லெப்.கேணல் சோபிதன் தலைமையிலான வணிகக் கப்பலும் லெப் கேணல் செம்பகச்செல்வன் தலைமையிலான எண்ணெய்க்கப்பலும் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கின .இச்சம்பவத்தில் அதிலிருந்த போராளிகளும் இயக்க மரபிற்கிணங்க சயனைற் அருந்தி கடலிலே காவியமானார்கள். மூன்றாவது வணிகக்கப்பலான லெப் கேணல் எழில்வேந்தனது கப்பலை நோக்கி வந்த கடற்படையினர் மீது கப்பலிலிருந்த மோட்டாரை பயன்படுத்தி கடற்படையினர் மீது தாக்குதல் நாடாத்த கடற்படையின் கப்பலுக்கருகில் வீழ்ந்த எறிகணையால் சற்று நிலைகுலைந்த கடற்படையினர், கிட்டநெருங்காமல் தொலைவிலிலிருந்தே தாக்குதலை தொடர்ந்தனர் . இருந்தாலும் இவர்களும் தாக்குதல்களை தொடர்ந்து நாடத்தியவாறு ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அதாவது அடுத்தநாள் அதிகாலை மூன்றுமணியளவில் கடற்படைக்கப்பலின் பாரிய குண்டுத் தாக்குதலொன்று இவர்களது கப்பலின் அடிப்பகுதியில் தாக்க கப்பல் கடலிலே மூழ்கியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் இவர்களது தியாகமும் வீரமும் கற்பனை செய்யக்கூட முடியாது. இக்கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சயனைற் இல்லாதிருந்ததால் அங்கிருந்த மருத்துவப் போராளியான லெப் கேணல் தமிழ்மாறன் இருமருந்துகளைக் கலந்து நஞ்சாக்கி ஊசியில் ஏற்றி சயனைற் இல்லாதிருந்தவர்களுக் கொடுத்தார். http://irruppu.com/wp-content/uploads/2021/09/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.jpg அடுத்தது லெப்.கேணல் வேங்கை மற்றும் லெப் கேணல் திருவருள் தரையில் மட்டுமே பயன்படுத்தும் 120mm மோட்டரை கப்பலில் வெல்டிங் பண்ணி நிலைப்படுத்திக்கொடுக்க சகபோராளிகள் அம்மோட்டாரின் மூலம் கடற்படைக்கெதிராக தாக்குதல் நடாத்தினார்கள் . இதற்கிடையில் மேஐர் தமிழ்நம்பி, கப்டன் அருணன் கப்பலின் ஒருபகுதியை எரித்தபோது அத்தீயை அணைத்து கொண்டிருக்கும் சமநேரத்திலும் அத்தீக்குள்ளாலும் சகபோராளிகள் மோட்டார் எறிகணைகளை எடுத்து வந்து கடற்படைகெதிராக தாக்குல் நடாத்தினார்கள் இறுதிவரை மிகவும் மூர்க்கத்தோடும் உறுதியோடு களமாடி 11.09.2007 அன்று கடலிலே புதியதொரு வரலாற்றை படைத்துச் சென்றார்கள். எழுத்துருவாக்கம்.சு.குணா. http://irruppu.com/2021/09/11/120mm-மோட்டரை-கப்பலில்-பயன்பட/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.