Everything posted by கந்தப்பு
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ் இணைய கடவுட் சீட்டினை ஒருவருடமாக மறந்து போய் விட்டேன். இதனால் கணனியின் ஊடாக யாழில் கருத்து எழுத முடியவில்லை. கைத்தொலை பேசி ஊடாகவே எழுதுகிறேன். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் போட்டியில் புள்ளிகள் வழங்க மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். முதலாவது கேள்விக்கு போட்டியிடும் நாடுகளில் ஒன்றினை தெரிவு செய்பவர்கள் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்கும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
The HinduWomen’s World Cup 2025: Bengaluru venue dropped after sta...ICC announced revised Women’s World Cup 2025 schedule, with Navi Mumbai replacing Bengaluru’s Chinnaswamy after the stampede incident.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது. https://www.maalaimalar.com/news/sports/cricket/womens-world-cup-matches-moved-out-of-bengalurus-chinnaswamy-stadium-navi-mumbai-to-host-semi-final-final-785233
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
போட்டி விதி 1 இல் குறிப்பிட்டு இருக்கிறேன். பார்க்கவில்லையா? சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.
-
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1) மகளிர் உலக கிண்ணப்போட்டியில் போட்டியிடும் அணிகளில் எந்த அணிக்கு உங்களது ஆதரவு ? ( இக்கேள்விக்கு போட்டியிடும் அணிகளில் ஒன்றினை தெரிவு செய்தால் 1 புள்ளி வழங்கப்படும்) ஆரம்ப சுற்று போட்டிகளான வினா 2 இல் இருந்து 31 வரையிலான கேள்விக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் எந்த அணி வெற்றிபெறும் என குறிப்பிட வேண்டும் 2)இலங்கை - இந்தியா 3) அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 4)பாகிஸ்தான் - வங்காளதேசம் 5)இங்கிலாந்து - தென்னாபிரிக்கா 6)அவுஸ்திரேலியா - இலங்கை 7)இந்தியா - பாகிஸ்தான் 8)நியூசிலாந்து - தென்னாபிரிக்கா 9)இங்கிலாந்து - வங்காளதேசம் 10)அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் 11)இந்தியா - தென்னாபிரிக்கா 12)நியூசிலாந்து - வங்காளதேசம் 13)இலங்கை - இங்கிலாந்து 14)அவுஸ்திரேலியா - இந்தியா 15)தென்னாபிரிக்கா - வங்காளதேசம் 16)இலங்கை - நியூசிலாந்து 17)பாகிஸ்தான் - இங்கிலாந்து 18)அவுஸ்திரேலியா - வங்காளதேசம் 19)இலங்கை - தென்னாபிரிக்கா 20)நியூசிலாந்து - பாகிஸ்தான் 21)இங்கிலாந்து - இந்தியா 22)இலங்கை - வங்களாதேசம் 23)பாகிஸ்தான் - தென்னாபிரிக்கா 24)அவுஸ்திரேலியா - இங்கிலாந்து 25)இந்தியா - நியூசிலாந்து 26)இலங்கை - பாகிஸ்தான் 27)அவுஸ்திரேலியா - தென்னாபிரிக்கா 28)இங்கிலாந்து - நியூசிலாந்து 29)இந்தியா - வங்காளதேசம் 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? 31) ஆரம்ப சுற்று போட்டியில் இறுதி இடம் பிடிக்கும் அணி எது? 32) அரை இறுதிக்கு தெரிவாகும் 4 அணிகள் எவை? ( சரியாக பதில் அளிக்கும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். மொத்த புள்ளிகள் 4 ) 33) இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகள் எவை? ( சரியான விடைகளுக்கு தலா 3 புள்ளிகள், மொத்த புள்ளிகள் 6) 34)இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி எது? ( 5 புள்ளிகள்) 41 , 42 கேள்விகளை தவிர இனி வரும் எல்லா கேள்விகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். 41,42 வது கேள்விகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டிகள் கொழும்பு, மும்பை( Mumbai), இந்தோர்( Indore), விசாகப்பட்டினம், கௌகாத்தி( Guwahati) ஆகிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. 35) எந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் ஒரு அணி பெறும்? 36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்? 37) இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 38)இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் குறைந்த ஓட்டத்தை பெறும் அணி எது? 39) ஏதாவது போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 40) ஏதாவது போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 41) இம்முறை ஏதாவது ஒரு அணி 200 ஓட்டங்கள் பெறுமா? 42) யாராவது ஒரு வீரங்கனை ஏதாவது போட்டியில் 100 ஓட்டங்கள் பெறுவாரா? 43) போட்டி தொடரில் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதினை பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 45) ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 46)இத்தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? 47)இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் செப்டம்பர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார் 5) ஆரம்ப சுற்று போட்டிகளில் மழை காரணமாக போட்டிகள் நடைபெறாவிட்டால் அப்போட்டிகளுக்கான புள்ளிகள் எல்லோருக்கும் வழங்கப்படும் 6) அதிக ஒட்டங்கள், குறைந்த ஓட்டங்கள் பெறும் அணிகள், வீராங்கனை தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள், வீராங்கனைகள் சமமான ஓட்டங்கள் பெற்று இருந்தால் அவ்வணிகள், வீராங்கனைகளில் எதாவது சரியான பதிலை எழுதியவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். ( ஓட்ட விகிதப்படி புள்ளிகள் வழங்கப் படவில்லை). இதே போல பந்து வீச்சாளர்கள் பற்றிய கேள்விகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படும். உ+ம் பாகிஸ்தான் வீராங்கனை ஒரு போட்டியில் 28 ஓட்டங்கள் வழங்கி 5 விக்கேற்றுகளை பெற்றார். அவுஸ்திரேலியா வீராங்கனை 30 ஒட்டங்களை வழங்கி 5 விக்கேற்றுக்களை பெற்றார். ஏதாவது ஒரு போட்டியில் வீராங்கனை ஒருவர் பெற்ற அதிக விக்கேற்றுக்கள் 5 எனில் 45 வது கேள்விக்கு பாகிஸ்தான் அல்லது அவுஸ்திரேலியா அணியை தெரிவு செய்தவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்- யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.- 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
முன்பு சிலர் என்னை மகளிர் உலகக் கிண்ண போட்டியை நடாத்தும் படி கேட்டிருந்தார்கள். சிலர் பங்கு பற்றுவதாக சொன்னார்கள். சொன்னவர்கள் இப்பொழுதும் பங்கேற்க விருப்பம் என்றால் நான் நடாத்துகிறேன்- கிருஷாந்தி நினைவேந்தல்
நீண்டகாலமாக மனதில் மிக கவலையை ஏற்ப்படுத்திய சம்பவம் கிருசாந்தி மரணம்.- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை
இங்கிலாந்து துடுப்பாட்ட வீரருக்கும் இச்செய்திக்கும் என்ன சம்பந்தம்?- இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி
யாழ்களத்தில் தயா, அமரர் சோழியன் போன்றவர்களின் யூலை கலவர அனுபவங்கள் பல இருக்கின்றன.- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான படங்களில் சத்தியராஜ் அவர்கள் நடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அவர் நடித்த ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் பற்றி முன்பு யாழில் வந்த கருத்துக்களை பார்வையிட IMDb▶️ Uchithanai Muharnthaal - Uchithanai Muharnthaal (2011)...Watch Trailer | 1:41- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
உண்மை.- செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
உச்சிதனை முகர்ந்தால் படம் பார்க்கவில்லையா?- செம்மணியும் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையும் : பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கிறார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் அரச வழக்குரைஞர் பிரசாந்தி மகிந்தரட்ண
‘கிருஷாந்திதனது பரீட்சையை முடித்துக்கொண்டு பிறகு மற்றொரு தோழி சுந்தரம்கௌதமியுடன் சில நாட்களிற்கு முன்னர் உயிரிழந்த சக மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றது‘ - சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த சக மாணவியும் வேகமாக சென்ற இராணுவ வாகனம் இடித்ததினால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 க்கு பிறகு வடக்கு கிழக்கில் ஒருசில பெண்கள் சிங்கள இராணுவத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்ததை எங்கே சொல்லி அழுவது.- வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
செம்மணியில் மட்டும் 600 தமிழர்கள் அரசபடையினால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் இருந்தால் அவர்களின் அடுத்த சந்ததியும் சேர்த்து இப்பொழுது ஆயிரத்துக்கு மேல் இருந்திருப்பார்கள். செம்மணி மாதிரி எத்தனையோ அவலங்கள். சனத்தொகை குறைந்ததுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் அரச படைகளினால் திட்ட மிடப்பட்ட இன அழிப்பே முக்கிய காரணம்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கிருபன் இந்தியா நாடாளுமன்ற தேர்தல்- தமிழகம் போட்டியிலும் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறார் போட்டியை நடாத்திய கோஷான், முதல் 3 இடங்களை பெற்ற கிருபன், ஈழப் பிரியன், வாதவூரான் ஆகியோருக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.- 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
யாழ்கள கடவுட்சொல்லினை மறந்து விட்டேன். இதனால் கடந்த ஒரு வருடமாக கை தொலைபேசியின் ஊடாகவே எனது கருத்துக்கள் எழுதுவதுண்டு. நல்லகாலம் கைத்தொலைபேசியில் கடவுட் சொல்லை சேமித்து வைத்திருக்கிறேன். கணனியில் கடவுட் சொல்லை மறந்ததினால் கருத்துக்கள் எழுதமுடியாமல் இருக்கிறது. மறந்து போன கடவுட்சொல்லை மீட்க (Reset Password) கணனி ஊடாக முயற்சித்தாலும் யாழில் இருந்து ஒரு மின்னஞ்சலும் கிடைப்பதில்லை. கடைசியாக இலங்கை தேர்தல் போட்டியும் கைத்தொலைபேசி ஊடாகவே நடாத்தினேன். கணனி மூலம் எழுதுவது இலகு. கை தொலைபேசி மூலம் கருத்துக்கள் பதிவு செய்யும்போது சிலவேளை கை வலிக்கும்- 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
மகளிர் உலககிண்ணப்போட்டி செப்டம்பர் இறுதியில் ஆரம்பிக்கிறது. யாழ்கள போட்டியினை இம்மாதத்தில் ஆரம்பிக்கவா? அல்லது ஒரு மாதம் பிந்தி ஆரம்பிக்கவா? ஒருமாதம் பிந்தி ஆரம்பித்தால் ஒவ்வொரு அணியில் விளையாடும் வீரங்கனைகளின் பெயர்கள் தெரியும். வீரங்கனைகளின் பெயரில் நாலு ஐந்து கேள்விகள் கேட்கலாம். ஆனால் ஆண் வீரர்கள் போல எத்தனை பேருக்கு வீரங்கனைகள் பற்றி தெரியும்? இம்மாதம் ஆரம்பித்தால் விளையாடும் நாடுகளை மட்டும் வைத்து வீரப்பையன் சொல்வது போல 4,5 குண்டக்க மண்டக்க கேள்விகளை கேட்கலாம்.- 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
யாராவது போட்டியை நடாத்த விரும்பினால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள். ஒருவரும் போட்டியை நடாத்த விரும்பாவிடில் நான் நடத்துகிறேன்.- 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
போட்டியை நடாத்தும் படி கேட்டதற்கு நன்றிகள். ஆனால் மகளிர் போட்டியினை ஒருபோதும் பார்த்ததில்லை . வீராங்கனைகளின் பெயர்களும் தெரியாது. போட்டியை நடத்தினாலும் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பது யோசனையாக இருக்கிறது.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
4 வது கேள்விக்கான புள்ளிகளை காணவில்லை?- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
கிருபன் இப்பொழுதே முதல் இடத்தில் 20 புள்ளிகளுடன் இருக்கிறார். வாழ்த்துகள் கிருபன்.- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) ஆஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) தென்னாப்பிரிக்கா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) உஸ்மான் கவாஜா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) நேதன் லையன் போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா- ‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
பலர் திரைப்படங்களை பார்க்காமல் படம் சரியில்லை என்று விமர்சிக்கிறது போல இருக்கிறது. ஒவ்வொரு ரசிகர்களின் விருப்பங்கள் வேறுபடும். சில படங்களை திரையரங்கில் சென்று பார்க்கவேண்டும். அதே படத்தினை வீட்டில் தொலைக்காட்சியில் இடைவெளி விட்டு 2,3 நாட்களாக பார்க்கும் போது சுவாரசியம் போய் விடும். சிலருக்கு விசாரணை, வாழை, விடுதலை 1, 2 போன்ற படங்கள் பிடிக்கும். சிலருக்கு மாநகரம், கைதி, ரட்சசன் போன்ற படங்கள் பிடிக்கும். சிலருக்கு 96 , மெய்யழகன் போன்ற படங்கள் பிடிக்கும். தக்லைவ் விமர்சகர்கள் சொல்வது போல மோசமில்லை.- யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
கிருசாந்தி கொலையின் முதல் குற்றவாளியான சோமரத்னா ராஜபக்சா ‘இந்த நிலத்தில் (செம்மணியில்) 300 முதல் 400 வரை சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு மாலையும் அங்கு சடலங்கள் கொண்டுவரப்பட்டு, சிப்பாய்கள் அவற்றை புதைக்கச் சொல்லப்பட்டனர்’ என்று சொல்லி இருக்கிறார். https://en.wikipedia.org/wiki/Somaratne_Rajapakse - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.