Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. மும்பாய் அணியின் ஆரம்ப துடுப்பாளர் ராயன் ரிக்கெல்டன் உலக டெஸ்ட் தொடர் இறுதிப் போட்டிக்கு தயார் செய்வதற்காக playoff இல் இருக்கமாட்டார் . பங்களூர் ஜேக்கப் பெத்தல் மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியில் இன்று Birmingham இல் விளையாடவுள்ளார்.
  2. தீப‌க் கோடா , சிவ‌ம் டூபே மூலம் டோனி எனக்கு ஆப்பு வைத்து விட்டார் 😪😀
  3. 124 ஓட்டங்களுக்கு மேல் GRT இனை அடிக்கவிடாமல் செய்திருந்தால் சென்னை கடைசி இடத்தில் வந்திருக்காது. ராஜஸ்தான் கடைசியாக வந்திருக்கும். எனக்கு ராஜஸ்தான் கடைசியாக வரும் என்பதற்கு புள்ளி கிடைத்திருக்கும்.
  4. வென்றால் மட்டும் போதாது, ராஜஸ்தானே விட ஒட்டவிகிதம் அதிகமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் சென்னை கடைசி இடம் இருக்காது
  5. சமீர் ரிஷ்வி சென்ற வருடம் சென்னை அணியில் இருந்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்கமால் 8 பந்துகளில் 15 ஓட்டங்கள் பெற்றவர்
  6. அதே மைதானம் அல்ல . லக்னோ குஜராத் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. ஆனால் SRH பங்களுர் போட்டி லக்னோ அதல் பிகாரி வாஜ்பேய் மைதானத்தில் நடைபெற்றது.
  7. பெங்களூர் அணித்தலைவர் காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ளார். அவுஸ்திரேலியா Hazelwood காயம் காரணமாக அவுஸ்திரேலியா இருக்கிறார். SRH ட்ரெவிஸ் ஹெட் கோவிட் நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளார்.
  8. போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. சென்னையில் அல்ல
  9. முன்பு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் இழக்காமல் 200 ஒட்டங்களை துரத்தி வென்று இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு விக்கெட் இழக்காமல் துரத்தி மற்றைய அணியை வென்ற வரலாறுகள் இருக்கின்றன. 2020 இல் சென்னை அணி இவ்வாறே பஞ்சாபினை வென்றது. ஆனால் வென்ற எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் 200 க்கு குறைவான ஓட்டங்களே தேவையாக இருந்தன. நேற்றைய ஐபிஎல் போட்டியிலேதான் 200 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.
  10. லக்னோ அணி தற்பொழுது 10 புள்ளிகளுடன் இருக்கிறார்கள், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வென்றால் 16 புள்ளிகள் அவர்களுக்கு கிடைக்கும். (பங்களூர், குஜராத், பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகி உள்ளன. )மும்பாய், டெல்லிக்கு தலா 2 போட்டிகள் இருக்குது. இரண்டு அணிகளும் பஞ்சாப் உடன் விளையாடவேண்டும். இரண்டும் பஞ்சாப் உடன் தோல்வி அடைந்தால் மீதமுள்ள டெல்லி மும்பாய் அணிக்கு இடையிலான போட்டியில் டெல்லி வென்றால் டெல்லிக்கு 15 புள்ளிகள் கிடைக்கும். மும்பாய் வென்றால் மும்பாய்க்கு 16 புள்ளிகள் கிடைக்கும். டெல்லி வென்றால் லக்னோ தெரிவாகி விடும். ஆனால் மும்பாய் வென்றால் மும்பாய், லக்னோ அணிகள் இரண்டும் 16 புள்ளிகளுடன் இருப்பார்கள். ஆனால் மும்பாயின் ஓட்ட விகிதம் இரு நாடுகளுக்கு இடையில் அதிகமாக இருக்கிறது. லக்னோ அடுத்த 3 போட்டிகளிலும் பெரிய வெற்றிகளை பெற்று, மும்பாய் மீதமுள்ள போட்டிகளில் பெரிய தோல்விகள் பெற்றால் லக்னோக்கு வாய்ப்பு இருக்கிறது.
  11. ட்ரெவர் ஹெட்டுக்கு கோவிட் நோயினால் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் சிலவேளை விளையாட மாட்டார்
  12. தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று நடைபெற்ற 16ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் (சின்னம்மா), கலந்து கொண்டு இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
  13. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன எழுச்சி மாபெரும் பொதுக்கூட்டம் செஞ்சியில் மாநாடாக காட்சியளிக்கிறது.... கன்னியாகுமரி முதல் செஞ்சி வரை இனப்படுகொலைக்கு நீதிக்கோரி பேரணியாக எடுத்தவந்த நினைவு தீபச் சுடரை தி.வேல்முருகன் ஏற்றினார். மே 18, சர்வதேச இனப்படுகொலை நாள்! முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வீரவணக்க நினைவேந்தல் இன்று அம்பேத்கர் திடலில் நடைப்பெற்றது! தமிழீழ விடுதலைக் களத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் இன்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் வீரவணக்கம் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது
  14. சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அதன் செயலாளர் புருஸ்லி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கோவையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் நடாத்திய நினைவேந்தல் நிகழ்வில் பல மக்கள் கூடியிருந்தார்கள். நேற்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மே 18 தினம் நினைவேந்தல் தினம் நடைபெற்றது. இதில் கட்சிகள், மதங்கள், அமைப்புகள் என்று வேறுபாடு பாக்கமால் மக்கள் இசைப்பிரியா, பாலகன் பாலசந்திரன் ஆகியோரின் பதாதைகளுடன் கலந்து கொனடார்கள். திருமுருகன் காந்தி, மதிமுகவின் வை கோ ஆகியோர்கள் கலந்து உரையாற்றினார்கள்.
  15. வீர மரணமடைந்த போராளிகளுக்கும், உயிர் நீத்த பொது மக்களுக்கும் கண்ணீர் கலந்த, நினைவு அஞ்சலிகள்
  16. இன்னும் நாட்களை கூட்டபோகினமாம். அடுத்த இருவருடங்கள் 78 நாட்களாம். Hindustan TimesLonger IPL to corner quarter of cricket’s calendarIPL will expand to 78 days by 2027, starting March 14, 2025, with all players from major cricketing nations expected to be available.
  17. இவ்வருடம் முதலில் 84 போட்டிகள் வைக்கத்தான் முடிவெடுத்தார்கள். 84 போட்டிகள் வைத்தால் இன்னும் 8,9 நாட்கள் விளையாட வேண்டும். அப்படியானால் உலக டெஸ்ட் இறுதி போட்டியில் விளையாடவுள்ள இந்தியா வீரர்களுக்கு தேவையான ஓய்வு நேரங்கள் காணாது. இதனால் 74 போட்டிகளுடன் நடத்த முடிவெடுத்திருந்தார்கள் என சில மாதங்களுக்கு முன்பு ஒரு இணையத்தில் நான் வாசித்தேன். அப்போது இந்தியா 2023 -2025 உலக கோப்பை டெஸ்ட் தொடரில் முதலாம் இடத்தில் இருந்தது. ஆனால் அவர்களே எதிர்பார்க்காத நிலையில் நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் 3-0 என படுதோல்வியை அடைந்தது இந்தியா. அவுஸ்திரேலியாவிடமும் தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தது இந்தியா. 2028 இல் 94 போட்டிகள் என்று சொல்கிறார்கள்.
  18. பணம் மற்றும் வாணிக விருப்பங்கள்: ஐபிஎல் (IPL) தொடரின் நீளத்தை நிர்ணயிக்க வணிக விருப்பங்களும் காரணமாக உள்ளன; இதில் ஸ்பான்ஸர்கள் மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் அடங்கும், அவை அதிக வருமானத்தை பெற்று கொள்ள நீண்ட கால போட்டித் தொடரை முன்னுரிமை அளிக்கக்கூடும். Money and Commercial Interests: The IPL's length is also driven by commercial interests, including sponsorships and television rights, which can prioritize longer tournaments for increased revenue
  19. 4 வது கேள்வி இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? என்று கேட்டிருந்தீர்கள். உதாரணமாக தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடி 200 ஒட்டங்கள் பெற்றது என வைப்பம். பிறகு அவுஸ்திரேலியா துடுப்பாடி 500 ஓட்டங்கள் பெற்றது என்றும் வைப்பம் . தொடர்ந்து தென்னாபிரிக்கா விளையாடி 250 ஒட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழ்ந்தது என்று வைத்தால் அவுஸ்திரேலியா 50 ஓட்டங்கள் இன்னிங்ஸினால் வெற்றி பெறும் . இரண்டாவது இன்னிங்கிஸ் தென்னாபிரிக்கா மட்டுமே விளையாடி இருக்கும் அவுஸ்திரேலியா விளையாடி இருக்காது. 4 வது கேள்விக்கு பதில் தென்னாப்பிரிக்கா என்றுதானே வரும்
  20. கடைசி 2 போட்டியிலும் விளையாடிய மாதிரி ரசல் இன்று விளையாடினால், இரண்டு புள்ளிக்காக எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது 😀 இன்று மழை வந்து குழப்பலாம் என்று வேறு செய்திகள் வருகிறது .
  21. அதிகாரபூர்மாக கேகேஆர் இன்னும் வெளியேறவில்லை. கே கே ஆர் அடுத்த சுற்றுக்கு செல்வது மிக மிக கடினம். ஆனால் பஞ்சாப், டெல்லி அணிகள் விளையாடுவதை பொறுத்து கே கே ஆருக்கு சந்தர்ப்பம் இருக்கிறது. பஞ்சாப் இனி ராஜஸ்தான்,மும்பாய், டெல்லி அணிகளுடன் விளையாடவேண்டும்.இந்த 3 போட்டிகளில் தோற்கும் என்றால் 15 புள்ளிகளுடன் நிற்கும். டெல்லி இனி குஜராத், மும்பாய் , பஞ்சாப்புடன் விளையாட வேண்டும், இதில் டெல்லி குஜாரத், மும்பையுடன் தோற்று பஞ்சாப்பினை வென்றால் டெல்லியும் 15 புள்ளிகள் பெறும். கே கே ஆர் பங்களூரு, SRH இனை வென்றால் 15 புள்ளிகள். மூன்று அணிகளும் KKR, பஞ்சாப், டெல்லி 15 புள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகிதத்துடன் KkR 4 வது அணியாக GT,RCB,MI உடன் தெரிவாகும்.ஆனால் LSG மிகுதி இருக்கும் 3 போட்டிகளில் குறந்தது ஒரு போட்டியில் தோற்க்க வேண்டும். இல்லாவிட்டால் LSG 16 புள்ளிகள் பெற்று விடும். ஆகவே இன்றைய போட்டி கேகேஆர் க்கு மிக முக்கிய போட்டி.
  22. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. 2023 இல் பிராவே சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் போது பத்திரான சிறப்பாக பந்து வீசினார். அவ்வருடம் சென்னை சாம்பியன் ஆனாது. தற்பொழுது பிராவோ கொல்கத்தா அணியிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.
  23. இதே போலதான் 1979 இல் இந்தியா உலகக்கோப்பையில் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. அக்காலத்தில் டெஸ்ட் அந்தஸ்து கிடைக்காத இலங்கையுடனும் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த உலகக்கோப்பையில் 1983 இல் வெற்றிக்கிண்ணத்தை தட்டி கொண்டது
  24. பத்திரானா Death Bowler-மேற்கிந்தியா வீரர் டுவைன் பிராவோ போல இறுதி ஓவர்களுக்கு பந்து வீசவே அழைக்கப்படுவார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.