Everything posted by கந்தப்பு
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
4 வது கேள்வி இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? என்று கேட்டிருந்தீர்கள். உதாரணமாக தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடி 200 ஒட்டங்கள் பெற்றது என வைப்பம். பிறகு அவுஸ்திரேலியா துடுப்பாடி 500 ஓட்டங்கள் பெற்றது என்றும் வைப்பம் . தொடர்ந்து தென்னாபிரிக்கா விளையாடி 250 ஒட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழ்ந்தது என்று வைத்தால் அவுஸ்திரேலியா 50 ஓட்டங்கள் இன்னிங்ஸினால் வெற்றி பெறும் . இரண்டாவது இன்னிங்கிஸ் தென்னாபிரிக்கா மட்டுமே விளையாடி இருக்கும் அவுஸ்திரேலியா விளையாடி இருக்காது. 4 வது கேள்விக்கு பதில் தென்னாப்பிரிக்கா என்றுதானே வரும்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடைசி 2 போட்டியிலும் விளையாடிய மாதிரி ரசல் இன்று விளையாடினால், இரண்டு புள்ளிக்காக எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது 😀 இன்று மழை வந்து குழப்பலாம் என்று வேறு செய்திகள் வருகிறது .
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அதிகாரபூர்மாக கேகேஆர் இன்னும் வெளியேறவில்லை. கே கே ஆர் அடுத்த சுற்றுக்கு செல்வது மிக மிக கடினம். ஆனால் பஞ்சாப், டெல்லி அணிகள் விளையாடுவதை பொறுத்து கே கே ஆருக்கு சந்தர்ப்பம் இருக்கிறது. பஞ்சாப் இனி ராஜஸ்தான்,மும்பாய், டெல்லி அணிகளுடன் விளையாடவேண்டும்.இந்த 3 போட்டிகளில் தோற்கும் என்றால் 15 புள்ளிகளுடன் நிற்கும். டெல்லி இனி குஜராத், மும்பாய் , பஞ்சாப்புடன் விளையாட வேண்டும், இதில் டெல்லி குஜாரத், மும்பையுடன் தோற்று பஞ்சாப்பினை வென்றால் டெல்லியும் 15 புள்ளிகள் பெறும். கே கே ஆர் பங்களூரு, SRH இனை வென்றால் 15 புள்ளிகள். மூன்று அணிகளும் KKR, பஞ்சாப், டெல்லி 15 புள்ளிகளுடன் இருக்கும். ஓட்ட விகிதத்துடன் KkR 4 வது அணியாக GT,RCB,MI உடன் தெரிவாகும்.ஆனால் LSG மிகுதி இருக்கும் 3 போட்டிகளில் குறந்தது ஒரு போட்டியில் தோற்க்க வேண்டும். இல்லாவிட்டால் LSG 16 புள்ளிகள் பெற்று விடும். ஆகவே இன்றைய போட்டி கேகேஆர் க்கு மிக முக்கிய போட்டி.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. 2023 இல் பிராவே சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் போது பத்திரான சிறப்பாக பந்து வீசினார். அவ்வருடம் சென்னை சாம்பியன் ஆனாது. தற்பொழுது பிராவோ கொல்கத்தா அணியிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதே போலதான் 1979 இல் இந்தியா உலகக்கோப்பையில் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. அக்காலத்தில் டெஸ்ட் அந்தஸ்து கிடைக்காத இலங்கையுடனும் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த உலகக்கோப்பையில் 1983 இல் வெற்றிக்கிண்ணத்தை தட்டி கொண்டது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பத்திரானா Death Bowler-மேற்கிந்தியா வீரர் டுவைன் பிராவோ போல இறுதி ஓவர்களுக்கு பந்து வீசவே அழைக்கப்படுவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பாகிஸ்தான் வென்றது 1992 1987 இல் அவுஸ்திரேலியா வென்றது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
CSK பந்து வீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் கூறுகையில், “தனது பந்துவீச்சை எதிரிகள் தற்போது நன்கு புரிந்து கொண்டிருப்பதால், மாதீஷ பதிரானா தன்னுடைய யுத்தவழிகளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார். முக்கியமான ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பதிரானாவை மிகவும் நுட்பமாக எதிர்கொண்டு விளையாடுகிறார்கள் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதன் விளைவாக, தனது செயல்திறனை மேம்படுத்தும் வகையில் தந்திர மாற்றங்கள் தேவைப்படுகின்றன என அவர் பரிந்துரை செய்தார். பதிரானாவின் அண்மைய பந்துவீச்சு முறைமாற்றங்களும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என சைமன்ஸ் குறிப்பிடினார். இருப்பினும், அவர் மேம்படும் திறன் இருக்கின்றது என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதாக” அவர் தெரிவித்தார். கடைசிப் போட்டியில் பத்திரானா ஒரு வைட் போல் ஒன்றும் வழங்க வில்லை. அதற்கு முதல் நடந்த பங்களூருக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார். இனி வரும் 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் பத்திரானவை நீக்கமட்டார்கள் என நினைக்கிறேன். எனெனில் 2026 ஐபிஎல்லுக் மினி ஏலம் தான் நடத்துவார்கள். சென்னை ஒரு சிலரை மட்டுமே அணியில் இருந்து நீக்குவார்கள் என நினைக்கிறேன்.
-
நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்.
எப்பொழுதும் எளிமையாகவும் அமைதியாகவும் இருப்பார். 🙏
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கென்யா இலங்கை, வங்காளதேசம், சிம்பாவே , கனடா போன்ற நாடுகளை மட்டுமே வென்றது. கென்யா அரை இறுதி போட்டிக்கு சென்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நியூசிலாந்து அணி கென்யாவில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியினை பாதுகாப்பு காரணமாக புறக்கணித்து விளையாடாத காரணம். நியூசிலாந்து விளையாடாததினால் கென்யா 4 புள்ளிகள் பெற்றது. அத்துடன் இங்கிலாந்து சிம்பாவேயில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி சிம்பாவேக்கு எதிரான போட்டியை முகாம்பே அரசின் இனவெறி காரணமாக புறக்கணித்தது. இதனால் சிம்பாவே 4 புள்ளிகள் பெற்று சூப்பர் 6 க்கு தெரிவானது . இப்போட்டியில் இங்கிலாந்து கலந்து வெற்றி பெற்றால் இங்கிலாந்து சூப்பர் 6 க்கு சென்றிருக்கும். சூப்பர் 6 இல் இங்கிலாந்தினை கென்யா வென்று இருக்குமா என்பது கேள்விக்குறி. இலங்கை சூப்பர் 6 இற்கு செல்ல நல்ல ஓட்ட விகிதம் தேவை என்பதினால் தான் ( இலங்கை இருந்த குழுவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா தீவு போன்ற பலமான நாடுகளும் கனடா, வங்காளதேசம், கென்யா ஆகியவையும் இருந்தன) கனடா, வங்கதேசம் , கென்யா போன்ற நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஓட்டவீதத்தினை அதிகரிக்கலாம் என முடிவெடுத்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் பந்து வீச்சினை முதலில் எடுத்து எதிரணியை குறைந்த ஓட்டத்தில் ஆட்டமிழக்க செய்து குறைந்த ஓவர்களில் வெற்றி பெற்றால் ஒட்டவிகிதத்தினை கூட்டலாம் என இலங்கை அணி முடிவெடுத்தது. 3 போட்டிகளிலும் இலங்கை அணியே நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. வங்கதேசம் 124 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை 21.1 ஓவர்களில் வெற்றி பெற்றது. கனடா 36 ஓட்டங்களுக்கு வெற்றி பெற்றது. 4.4 ஓவர்களில் இலங்கை வெற்றி பெற்றது . கென்யாவுக்கு எதிரான போட்டியில் இரண்டாவதாக துடுப்பாடும் அணி வெல்வது கடினம் என வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தும் இலங்கை முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்தது. சூப்பர் 6 இற்கு இலங்கை, நியூசிலாந்து, கென்யா இக்குழுவில் இருந்து தெரிவானது. இலங்கை 4 புள்ளிகளுடனும், கென்யா 8 புள்ளிகளுடனும் நியூசிலாந்து புள்ளிகளுடன் தெரிவானது. (ஏற்கனவே ஆரம்ப சுற்றில் கென்யா, இலங்கை, நியூசிலாந்துக்கு இடையிலான போட்டிகளின் புள்ளிகள் சூப்பர் 6 இல் சேர்க்கப்பட்டது. இந்நாடுகளுக்கு கிடையில் சூப்பர் 6 இல் போட்டிகள் நடைபெறவில்லை).சூப்பர் 6 இல் சிம்பாவே அணியை மட்டுமே வென்று அரை இறுதிக்கு தெரிவானது கென்யா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாரோ ஒருவரின் வேலை. இதில் வைபாவ் சூரியவன்ஷி வயது மிகவும் குறைவு. அவர் இந்தியா அணியில் இடம் பிடிக்க சில காலங்கள் தேவை
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் இந்தியா நிறுவனங்களின் வருமானத்திலும் போட்டிகள் நடக்கும் நேரம் தங்கி இருக்கிறது. சன் , விஜய் தொலைக்காட்சிகள் மக்கள் அதிகம் பார்க்கும் நாடகங்களை அவர்களின் Prime time இல் ஒளிபரப்பு செய்வார்கள். TRP rating அடைப்படையில் அதிகளவு பார்ப்பதினால் விளம்பரதாரர்களிடம் அதிக பணத்தை வசூல் செய்வார்கள்.இதே போல ஞாயிறுகிழமைகளில் பெரும்பாலோருக்கு வேலை இல்லாத நாட்கள். அதிக மக்கள் தொலைக்காட்சியில் இந்தியாவில் ஐபிஎல் பார்ப்பார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமையில் 2 போட்டிகள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முன்பு மும்பாயில் நடக்க இருந்ததாக நீங்கள் சொன்னதற்காகதான் மேலே எழுதினேன். முன்பு கொல்கத்தாவில்தான் நடக்க இருந்தது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முன்பும் கொல்கத்தாவில் நடப்பதாகதான் இருந்தது. சென்ற வருட சாம்பியன் கொல்கத்தா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னைக்கு எதிரான போட்டியில் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடாததினால் , அவருக்கு பதிலாக விளையாடிய லுங்கி நிகிடி (தென்னாப்பிரிக்கா வீரர்) 30 ஓட்டங்கள் குடுத்து 3 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அணியின் விக்கெட் கிப்பர் ஜிதேஷ் சர்மா அணித்தலைவராக செயற்படுவார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? - ஐ.பி.எல் பிசினஸ் தெரியுமா? https://www.vikatan.com/IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்ட...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பி விட்டார்கள். உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி யூன் 11 இலண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையில் நடைபெறவுள்ளது. சென்னை, SRH அணிகள் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்புகளை இழந்துள்ளார்கள் . இதனால் அவுஸ்திரேலியா SRH வீரர்கள் கமின்ஸ், டிர்வர் ஹெட், சென்னை வேகப்பந்து வீச்சளார் நேதன் எலிஸ் போன்றவர்கள் இந்தியாவுக்கு வருவார்களா என்பது கேள்விக்குரிய இருக்குறது. பங்களூர் அணியின் ஹேசில்வுட் காயம் காரணமாக சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. இன்னும் காயத்தில் இருப்பதினால் அவரும் இந்தியா வருவது சந்தேகமாக இருக்கிறது. டெல்லி அணிக்கு இன்னும் இறுதி போட்டிக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் மிச்சல் சார்க் பெரும்பாலும் வரமாட்டார். உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு தயார் படுத்த வேண்டிய தேவையும் அவருக்கு இருக்கிறது. பஞ்சாப் அணியின் முதன்மை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார். அவர் பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்களை இந்தியாவில் நிற்கும் படி கேட்டுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியின் மார்கோ ஜான்சன் தாயகம் திரும்பி விட்டார். போட்டிகள் தொடங்க சில நேரம் அவர் திரும்பி வரலாம் . ( தென்னாப்பிரிக்கா அணியினர் சிம்பாவே அணியுடன் பயிற்சி போட்டிகள், உலக டெஸ்ட் இறுதி போட்டிக்கு தயார்படுத்த யூன் 1 ம் திகதி சிம்பாபே செல்லுகிறார்கள். ஐபிஎல் வீரர்களும் செல்வார்களா என்பதனை இன்னும் தென்னாப்பிரிக்கா அணி தெரிவிக்கவில்லை). மற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். குஜராத் அணி அகமதாபாத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வணியின் ஜோஸ் பட்லர், ஜெரால்ட் கோட்ஸே தாயகம் திரும்பி விட்டார்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இறுதி போட்டி யூன் 1 ம் திகதி நடைபெறலாம். கொல்கத்தாவில் மழை பெய்யலாம் என்பதினால் அகமதாபாத் இல் நடைபெறலாம். எனினும் இன்று அல்லது திங்கள் கிழமை போட்டிகள் பற்றிய விபரங்கள் வரலாம் https://www.livemint.com/news/ipl-2025-new-schedule-live-updates-when-will-indian-premier-league-season-18-resume-date-latest-news-bcci-11746963756490.html
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்களை திரும்பி வர தயாராக இருக்கும் படி ஒவ்வொரு அணியும் கேட்டு வருகுகிறது. யுத்த நிறுத்தம் தொடர்ந்தால் சிலவேளை போட்டி மே 15 ஆம் திகதி அளவில் ஆரம்பிக்கலாம். சிலவேளை சென்னை, பங்களூர், ஹைதராபாத் போன்ற தென்னிந்தியா நகரில் மட்டுமே போட்டிகள் நடைபெறும் எனவும் சொல்லப்படுகிறது. இடைநிறுத்தப்பட்ட டெல்லி, பஞ்சாப் போட்டி மறுபடியும் நடைபெறுமா என்பதும் இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்று ஞாயிறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்பொழுது ஒரு கிழமை மட்டும் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வருகின்றன. SportstarIPL 2025 LIVE — BCCI suspends IPL for one week as tension...As tensions remain escalated between India and Pakistan, tournaments in both countries, namely the Indian Premier League and the Pakistan Super League look to have been affected.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது . Fortune IndiaIPL suspended indefinitely amid India-Pakistan tensions a...
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிசிசிஐ, வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தின் 10% ஐ அவர்களின் நாட்டின் தேசிய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது. Fox SportsAustralia stars in contract dispute after Cricket Austral...Players protest against IPL cash grab
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Tata ipl App இல் ( The official IPL App) பஞ்சாப் 16 , டெல்லி 14 புள்ளிகளுடன் இருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆனால் ஐபிஎல் வெப்தளத்தில் புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.