Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. Movie Name: Duet (1994) Singer: Balasubramanyam S P Music Director: Rahman AR Year: 1994 Actors: Meenakshi Sheshadari, Prabhu, Ramesh Arvind என் காதலே ஏன் காதலே, என்னை என்ன செய்யப் போகிறாய்? நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, ஏன்? கண்ணிரண்டை கேட்கிறாய்? என் காதலே ஏன் காதலே, என்னை என்ன செய்யப் போகிறாய்? நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, ஏன்? கண்ணிரண்டை கேட்கிறாய்?
  2. பாடல்: நீ தூங்கும் நேரத்தில் படம்: மனசெல்லாம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  3. பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை படம்: உயிரே இசை: ஏ.ஆர்.ரகுமான் குரல்: உன்னி மேனன்
  4. மனம் விரும்புதே உன்னை மனம் விரும்புதே உன்னை... உன்னை உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா (மனம்.....) அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே.... மீண்டும் காண.... மனம் ஏங்குதே... (நினைத்தாலே.....) மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலை காட்டும் சிறு பூவைப்போலே பொல்லாத இளங்காதல் பூத்ததடா சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே என் காதலா...! என் காதலா.....! நீ வா! நீ வா! என் காதலா...! (நினைத்தாலே.....) மனம் விரும்புதே உன்னை மனம் விரும்புதே உன்னை... உன்னை உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா (மனம்.....) அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது அதிலே என் மனம் தெளியும் முன்னே அன்பே உந்தன் அழகு முகத்தை யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும் மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே.... மீண்டும் காண.... மனம் ஏங்குதே... (நினைத்தாலே.....) மழையோடு நான் கரைந்ததுமில்லை வெயிலோடு நான் உருகியதில்லை பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா மலைநாட்டுக் கரும்பாறை மேலே தலை காட்டும் சிறு பூவைப்போலே பொல்லாத இளங்காதல் பூத்ததடா சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலையே... நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலையே என் காதலா...! என் காதலா.....! நீ வா! நீ வா! என் காதலா...! (நினைத்தாலே.....)
  5. சஜீவன் அண்ணாவுக்கும் ,இன்று பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த தின வாழ்த்துக்கள்.
  6. படம்: திருவிளையாடல் ஆரம்பம் பாடல்: கண்ணுக்குள் ஏதோ
  7. சிக்கன் சிரிப்பு ! ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் ---------------------------------------------------------------------------------------------------------------------------- மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே ! ----------------------------------------------------------------------------------------------------------------- கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ? கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா? கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------- நோயாளி: டாக்டர், சிக்கன் லெக் சாப்டதுலேர்ந்து, கலுத்தெல்லாம் நீண்டு ஒரு கொக்கரக்கோவா வருது டாக்டர். டாக்டர்: நீங்க வெட்னரி டாக்டரைதான் பார்க்கனும், பயப்படத்தேவையில்லை, தொடைய சுத்தி சுத்தி தொன்னூறு ஊசி போடுவாங்க ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- முனியான்டி விலாஸ் ஓனர்: எதுக்கு என்னை அரஸ்ட் பண்ணுரிங்க சார் ? போலிஸ்: ஏன்யா, சிக்கன பார்த்து ஊரே ஓடிக்கிட்டு இருக்கு, நீ என்ன தெனாவட்டா, இங்கு சிக்கன் சிக்ஸிடி பைவ் கிடைக்கும்னு போர்ட மாட்டிவைச்சிருப்ப ! -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மந்திரி: எங்கள் தலைவர், ஒரு லட்சம் கோழிகளை அழித்து சிக்கன நடவடிக்கை எடுத்திருக்கிறார், தலைவர் வாழ்க. உதவியாளர் மெதுவாக: தலைவா சொதப்பிட்டியே, அது சிக்கன நடவடிக்கை இல்ல தலைவா, சிக்கன் மீது நடவடிக்கை ! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கோழி 1: ஏன்டா, ரொம்ம சந்தோசமா கூவுர ? கோழி 2: நம்ப கண்ணு முன்னேடியே, நம்ம ளுங்கள அறுப்பாங்கல்ல, இனி கொஞ்ச நாள், புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கலாம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------ பாரி: ஏன்டா, கோழி வருத்துன்னு கோட்வேர்ட்ல சொன்ன ஜொள்ளுவடிய நிப்பானே, நம்ம சுந்தர் ஏன்டா, அவுங்க அப்பனா பாத்தாப்பல ஓடுறான் ? மாரி: முன்னடி, கோழின்னு பிகருங்களைத்தான் சொல்லுவோம், இப்ப கோர்டு வேர்டு, பேர்ட் வோர்டா மாறிடுச்சி, அதான் புளு வந்துடுமே பயந்து ஓடுறான். --------------------------------------------------------------------------------------------------------------------------------------- வாத்தியார்: பசங்களா, 'கூறை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ...' எங்க பழமொழியை முடிங்க பார்க்கலாம்.. சுட்டி பையன்: சார், கோழிய புடிச்சா உடனே வைகுண்டம் தானாம், எங்க அப்பா சொன்னாரு ! --------------------------------------------------------------------------------------------------------------------------------- கமலா: விமலா, என்ன ஒங்க மாமியாரு, திடீர்னு போய்டாங்களா, எப்படிடி ? விமலா: இதான் சரியான சமயம்னு, சிக்கன் வருவல் செஞ்சிபோட்டேன், அவுங்க சை சையா சாப்பிட்டு போய்டாங்க! -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- புறா: எறும்பு நண்பா, எப்படி நீ வேடனை கடிக்காமல், என்னை காப்பாற்றினாய் ? எறும்பு: உனக்கு பறவை காய்சல் இருக்குன்னு சொன்னேன், அதான் தலை தெறிக்க ஓடிட்டான்.
  8. உங்களின் உற்சாகமூட்டலுக்கு மிக்க நன்றி கு.மா. அண்ணா, தூயா.
  9. பிளாஸ்டிக் என்னும் சொல்லுக்கு "எளிதாக அச்சில் வார்க்கக்கூடியது" எனப் பொருள். பிளாஸ்டிக் 1862ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது. தொடக்கத்தில் இதனை செல்லுலாய்ட் என அழைத்தனர். இப்போதும் சில இடங்களில் இப்பெயரே வழங்கி வருகிறது. செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பல்வேறு வகைப்பட்ட பிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல வகைப் பொருட்கள் விற்பனைக்கு வந்து விட்டன. குறைந்த எடை, வளைந்து கொடுக்கும் தன்மை, காற்று, தண்ணீர் ஆகியவற்றால் சிதையாத தன்மை போன்றவற்றால் பிளாஸ்டிக் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு இன்று உலகில் பல்கிப் பெருகி விட்டதால், இக்காலத்தை பிளாஸ்டிக் ஊழி என்றால் அதில் மிகையேதுமில்லை. சிறு பொம்மைகளிலிருந்து மிகப் பெரிய தொழிலகங்களில் பயன்படும் பொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்கள் பிளாஸ்டிக்கைக் கொண்டு செய்யப்படுகின்றன. மருத்துவத் துறையிலும் இதன் பயன்பாடு மிக அதிகம். தற்காலத்தில் பிளாஸ்டிக் என்பது, அச்சில் வார்த்து வெப்பம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டு பல்வகை வடிவங்களிலான பொருட்களைத் தயாரிக்கும் பிசுபிசுப்புத் தன்மையுடைய பொருளைக் குறிக்கிறது. இதற்குச் சாயம் பூசி பல்வேறு நிறங்களையும் அளிக்க முடியும். உலோகத்துடன் ஒப்பிடும் போது பிளாஸ்டிக் குறைந்த எடை கொண்டது; காற்று மற்றும் நீரால் பாழாகாது; துருப்பிடிக்காதது. நெருப்பினால் அழியாத ஒரு வகைப் பிளாஸ்டிக்கும் கூட வந்துவிட்டது. சில பிளாஸ்டிக்குகள் கண்ணாடி போன்று நெகிழ்ச்சியுடையவை; பட்டு போன்று மென்மையானவை; எஃகு போன்று உறுதியானவை. பல்வகைப் பண்புக் கூறுகளைக் கொண்ட பல்வேறு பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றின் தனிச் சிறப்புகள் காரணமாக மின்சாரத் துறைசார்ந்த பொருட்களிலும் கூடப் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வகைகள்: அறிவியல் முறையில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பல்வகைப்படும். சில வகைகள் பின் வருமாறு: பினோலிக், அமினோ, செல்லுலோசிக், பாலிமைட், பாலியஸ்டர், ஆல்கைட், புரோட்டின், இன்ன பிற. பினோலிக் மற்றும் அமினோ பிளாஸ்டிக்குகள் சூடாக்கி வார்ப்படம் செய்யப்படுபவை. வார்ப்படமாக உருவாக்கப்பட்ட பின்னர், இவ்வகைப் பிளாஸ்டிக்குகள் உருக்கப்பட முடியாதனவாகும். வார்ப்படங்களாகவும், அச்சுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட இவற்றிலிருந்து பல பொருட்கள் செய்யப்படுகின்றன. இதில் அடங்கியுள்ள செயல்முறை பின்வருமாறு: முதலில் பிளாஸ்டிக் துகள்கள் ஒரு வார்ப்பட அச்சில் அடைக்கப்படுகின்றன; பின்னர் சூடுபடுத்தப்பட்டு அழுத்தப் பெறும்; குறிபிட்ட நேரத்திற்குப் பின்னர் தேவையான பிளாஸ்டிக் தயாராகி விடும். தற்போது எந்திரங்களைக் கொண்டு இச்செயல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்: பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு மின்சாரச் சுவிட்சுகள், பிளக்குகள், உருக்கிகள், ஹோல்டர்கள், தொலைபேசிக் கருவிகள், வானொலிப் பெட்டிகள் போன்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைக் காகிதம் அல்லது துணி போன்ற நார்ப் பொருட்களுடன் கலந்து, பல்வேறு பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பினோலிக் பிளாஸ்டிக்கின் மெல்லிய படலத்தைப் பரந்த துணி அல்லது காகித்தத்தில் பரப்பி மேசை விரிப்புகள், இருக்கை விரிப்புகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு பெட்டிகள், புத்தக அலமாரிகள், விமானம், ரயில் போன்றவற்றின் உட்பகுதிப் பாகங்கள் எனப் பலவகைப் பொருட்களும் செய்யப்படுகின்றன. பொறியியல் பகுதிகளான சக்கரங்கள், பற்சக்கரங்கள் போன்றவையும் பினோலிக் பிளாஸ்டிக்கைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுகின்றன. சுமார் 15-20% மரத்தூளை பினோலிக் பிளாஸ்டிக்குடன் கலந்து மரப்பலகைகளைப் போன்றே பிளாஸ்டிக் பலகைகளும் தயாரிக்கப்படுகின்றன. பிளைவுட் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. அமினோ பிளாஸ்டிக்: அமினோ பிளாஸ்டிக்கில் "யூரியா" மற்றும் "மெலாமைன்" வகைகள் மிக முக்கியமானவை. யூரியா பிளாஸ்டிக் மிகவும் உறுதியானது; தனது வடிவத்தை இழக்காது; இது சுவையற்றது, மணமற்றது, எந்த நிறத்தையும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. இப்பண்புகள் காரணமாக, வானொலிப் பெட்டிகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், சுவர்க் கடிகாரங்கள், பொத்தான்கள், சமையலறைப் பாத்திரங்கள் போன்ற பலவற்றையும் செய்வதற்கு இது மிகவும் பயன்படுகிறது. மெலாமைன் பிளாஸ்டிக்கும், யூரியா பிளாஸ்டிக்கின் பண்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. இது தண்ணீர், வெப்பம் ஆகியவற்றைத் தாங்கும் வலிமை கொண்டது. எனவே, மின்சாதனங்களின் தயாரிப்புக்கு இது மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. செல்லுலோசிக்: செல்லுலோசிக் பிளாஸ்டிக் தீயில் உருகிவிடும் தன்மையுடையது. வெப்பத்தில் நீர் போன்று உருகி, ஆறவைத்தால் மீண்டும் உறுதியாகிவிடக் கூடியது. எனவே இதிலிருந்து மீண்டும், மீண்டும் புதிய பொருட்களை உற்பத்தி செய்ய இயலும். விரிப்புகள், உருளைகள், குழாய்கள் வடிவத்தில் செல்லுலோஸ் நைட்ரேட் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. விரிப்பு, உருளை, குழாய்களை வேண்டிய அளவில் துண்டித்து இணைக்கவும் முடியும். பேனா, மூக்குக் கண்ணாடிச் சட்டங்கள் ஆகியன இதிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை. ஒளிப்படப் பிலிம்கள், வாகனங்களுக்கான வார்னிஷ், செயற்கைத் தோல் போன்றவையும் செல்லுலோஸ் நைட்ரேட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன. செல்லுலோஸ் அசிடேட்: இதுவும் செல்லுலோஸ் நைட்ரேட் போன்றதே எனினும், இது வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் கொண்டதாகும். செல்லுலோஸ் அசிடேட் பிளாஸ்டிக் துகள்களிலிருந்து, படிவ அச்சுகளைப் பயன்படுத்தி, பல்வேறு பொருட்களைத் தயாரிக்க இயலும். தண்டுகள், குழாய்கள், விரிப்புகள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மெல்லிய பிலிம்களையும் தயாரிக்கலாம். மெல்லிய பிளாஸ்டிக் பிலிம்களை ட முதல் 1/8000 செ.மீ. தடிமன் அளவுக்கும் கூட தயாரிக்கக்கூடும். எக்ஸ் கதிர் பிலிம்களையும் தயாரிக்க இயலும். அசிட்டேட் ரேயான் இழைகளும் இதைக்கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றன. எதனாய்ட்: இந்த வகையில் முக்கியமான பிளாஸ்டிக்குகளாக விளங்குபவை பாலிஸ்டெரின், பாலிவினைல் கலவை, பாலி மீதைல் மெதாக்ரைலேட் மற்றும் பாலிதைலேன் ஆகியனவாகும். பாலிஸ்டெரின் வகை நிறமற்றதும், பளிங்குபோல் காட்சியளிப்பதுமாகும். இதில் தேவையான வண்ணத்தைப் பூசலாம். பலவகைப் பொம்மைகள், மின்கல உறைகள், பெனிசிலின் சிரிஞ்சுகள் போன்றவற்றைத் தயாரிக்க இது உதவுகிறது. இதன் விலையும் குறைவு. பாலிவினைல் குளோரைட் (பிவிசி): வினைல் பிளாஸ்டிக்குகள் வகையில் இது மிக முக்கியமான ஒன்றாகும். மின்செப்புக் கம்பிகளைச் சுற்றும் உறையாக இது பயன்படுத்தப்படுகிறது. வாகன இருக்கைகள், மழைக்கால உடைகள், தரை விரிப்புகள் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. பல வடிவங்களிலும், கவர்ச்சியான வண்ணங்களிலும் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராமபோன் இசைத்தட்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது. இதனைக் கொண்டு உருவாக்கப்பட்ட காலணியின் அடிப்பாகம், தோலால் உருவாக்கப்பட்டதை விட வலிமை வாய்ந்ததாக விளங்குகிறது. வினைல் பிளாஸ்டிக்கைக் கலந்து உருவாக்கப்பட்ட ஆடைகள் தோலால் செய்யப்பட்டவை போல் இருக்கும்; இதனைக் கலந்து உருவாக்கிய காகிதம், அட்டைப் பெட்டி செய்யப் பயன்படுகிறது. எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் இது ஈரமாவதில்லை. செயற்கைப் பற்கள் மற்றும் கண்கள்: பாலி மீதைல் மெதாக்ரைலேட் எனும் பிளாஸ்டிக் மிகவும் லேசானது; தெள்ளத் தெளிவானது; பிளாஸ்டிக் தடிகள், குழாய்கள், விரிப்புகள் தயாரிக்கப் பயன்படுவது. இவ்வகைப் பிளாஸ்டிக்கில் வண்ணங்களைக் கலந்து இருளில் ஒளிரும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விமானச் சாளரங்கள், இருக்கைகள், மூக்குக் கண்ணாடி வில்லைகள், மருத்துவக் கருவிகள், செயற்கைப் பற்கள், செயற்கைக் கண்கள் ஆகியன தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. பாலி எதிலின்: பாலி எதிலின் என்பது பிளாஸ்டிக்கின் அண்மைக்கால வளர்ச்சியாகும். இது பிளாஸ்டிக் துகள்கள், பிலிம்கள், விரிப்புகள், குழாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவதாகும். மின் கருவிகள் தயாரிப்பிலும், உணவுப் பொருட்களைப் பொட்டலங்களாகக் கட்டுவதற்கும் இது பயன்படுகிறது. நைலான் பொருட்கள்: நைலான் என்பது பாலிமைட் பிசின் வகையைச் சார்ந்தது; இழைகள், துகள்கள், விரிப்புகள், குழாய்கள், கயிறு, நூல் ஆகிய வகைகளில் இது கிடைக்கிறது. நைலான் மிகவும் வலிமையானது; வேதிப் பொருட்கள் சேர்க்கையால் சேதமடையாதது. ஆல்கைட்: ஆல்கைட்கள் வண்ணப் பூச்சு வார்னிஷ்களில் பயன்படுவன; தண்ணீரால் அழியாதவை. பொத்தான்கள், தைக்கும் ஊசிகள், பேனா, நாகரிகப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன. நன்றி:உணர்வுகள்
  10. தரைக்கு அடியில் 1 கிலோ மீட்டரிலிருந்து 6 கிலோ மீட்டர் வரையான பகுதியில் காணப்படும் பிசு பிசுப்பான, குழம்பு போன்ற எண்ணெய்ப் பொருளைக் கனிம எண்ணெய் என அழைப்பர். உலகின் இன்றைய பல கண்டுபிடிப்புகளுக்கு இந்த எண்ணெய்ப் பொருளே மூல காரணமாய் விளங்குகிறதெனலாம். சுமார் 90% புதிய பொருட்களின் கண்டுபிடிப்புகளுக்கு இதுவே மூலப் பொருளாக விளங்குகிறது. எட்வின் எல். டிராக் (Edwin L Drake) என்ற எழுத்தறிவற்ற, வேலை ஏதுமில்லாத அமெரிக்கர் ஒருவரே 1859இல் இந்த எண்ணெயைக் கண்டுபிடித்தவர். அவருக்கு இக்கண்டுபிடிப்புக்கான ஊக்கம் அளித்தவர் நியூயார்க் வழக்குரைஞர் ஒருவராவார். ஜார்ஜ் எச். பிசெல் எனும் அந்த வழக்குரைஞருக்கு, 1854ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பேராசிரியர் ஒருவர் கனிம எண்ணெயின் சிறிதளவு மாதிரியைக் காட்டினார். இப்பேராசிரியர் தமது ஆய்வுக்கூடத்தில் அம்மாதிரியைப் பயன்படுத்திச் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். சோதனைக்குப் பின்னர் பேராசிரியர், "இந்த எண்ணெயைச் சரியான முறையில் தூய்மைப் படுத்திப் பயன்படுத்தினால் நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு மாற்றாக விளக்கு எரிக்கப் பயன்படுத்தலாம்" என்று பிசெலிடம் உறுதியாகக் கூறினார். திமிங்கில எண்ணெய், மெழுகு ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியிலிருந்து எண்ணெய் எடுக்கும் பரிசோதனை அக்காலத்தில் மிகுதியாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பேராசிரியரின் கருத்துகள் பிசெல் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. கனிம எண்ணெயைத் தூய்மைப் படுத்துவதற்கான புதிய நிறுவனம் ஒன்றை அவர் நிறுவினார். இதன் விளைவாக கெரசின் எனப்பட்ட மண்ணெண்ணெயை பீப்பாய் ஒன்றுக்கு 20 டாலர் வரை கொடுத்து வாங்க வர்த்தகர்கள் முன்வந்தனர். ஆனால் பிசெலின் முயற்சிகள் வெற்றியடையவில்லை; கையிலிருந்த பணம் எல்லாம் செலவழிந்து விட்டது. இந்நிலையில் எட்வின் எல் டிராக் தம் முயற்சிகளைத் தொடர்ந்தார். டிட்ஸ்வெல் என்னுமிடத்தில் எண்ணெய்க் கிணறு ஒன்றைத் தோண்டினார். உள்ளூர் மக்கள் அவரை நையாண்டி செய்த போதிலும் அவரது முயற்சி வெற்றி பெற்றது; ஒரு நாள் 69 அடி ஆழத்தில் எண்ணெய் வெளிப்பட்டது. எண்ணெய் பம்பின் துணை கொண்டு டிராக் ஒவ்வொரு நாளும் 20 பீப்பாய் எண்ணெயை வெளிக்கொணர்ந்தார். 1867ஆம் ஆண்டு வாக்கில் நிலக்கரி எண்ணெய்க்குப் பதிலாக, முழுதுமாய் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்க நாடுகளின் உள்நாட்டுப் போரின் போதும் இந்த மண்ணெண்ணெயே பயன்படுத்தப்பட்டது. தென் மாநிலங்களில் பருத்திக்குப் பதிலாக இந்த எண்ணெயைக் கொண்டு அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டது. சண்டைக்குப் பின்னர் அமெரிக்காவின் தொழில்மயத்துக்கு மண்ணெண்ணெய் பேருதவி புரிந்தது. பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் பல இடங்கள் ஆகியவற்றில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் மத்தியக் கிழக்கில், எண்ணெய் வளப் பகுதிகள் கண்டுகொள்ளப் படாமலே இருந்தன. 1870ஆம் ஆண்டில் லார்ட் ராய்ட்டர் கனிமம் மற்றும் எண்ணெய்க்கான உரிமைகளைக் குத்தகையாக பாரசீக அரசிடமிருந்து பெற்றார். ராய்ட்டரைத் தொடர்ந்து, வில்லியம் காக்ஸ் டா உர்ச்சி இத்துறையில் நுழைந்தார். இவர் ஆஸ்திரேலியத் தங்கச் சுரங்கங்களிலிருந்து ஏராளமாகப் பொருளீட்டியவர். இவர் இருபதாயிரம் பவுண்டுகளைப் பாரசீக அரசுக்கு அளித்து சுமார் ஐந்து இலட்சம் சதுர மைல் பரப்பில் எண்ணெய் எடுக்கும் உரிமையைப் பெற்றார். ரேனால்ட்ஸ் என்ற ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் எண்ணெய் எடுப்பதற்கு, நிலத்தைத் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 1904ஆம் ஆண்டு ஜனவரியில் நிலத்தடியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது முயற்சி வெற்றி பெற்றது. ஆனால் அக்கிணற்றில் எண்ணெய் உடனடியாக வறண்டு விட்டது. இதற்குள் டா உர்ச்சி சுமார் ஒன்றேகால் இலட்சம் பவுண்ட் பணத்தை, மத்தியக் கிழக்கு நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கும் முயற்சியில் செலவழித்தார். பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் ரேனால்ட்சின் முயற்சி 1908 மே 26இல் வெற்றியடைந்து பாரசீகத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. ஆங்கிலோ பெர்சியன் எண்ணெய்க் கம்பெனி என்றதொரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. சுமார் 130 மைல் நீளத்திற்கு எண்ணெயை எடுத்துச் செல்வதற்கான குழாய் ஒன்றைப் புதைக்க வேண்டி இருந்ததாலும், ஒரு சொட்டு எண்ணெயைக் கூட விற்க முடியாததாலும் கம்பெனி நட்டத்தில் இயங்கிப் பொருளாதார நெருக்கடி உண்டாயிற்று. இந்த நிலையில் பிரிட்டனின் கப்பல் துறை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில் பாரசீக எண்ணெய்த் தொழிலின் கொள்கையை மறு பரிசீலனை செய்து எண்ணெய்க்குப் பதிலாக நீராவியைக் கப்பலின் எரிபொருளாகப் பயன்படுத்த முடிவெடுத்தார். இதனால் பாரசீகத்தின் நலிந்த எண்ணெய்த் தொழில் புத்துயிர் பெற்றது. இதற்குள் முதல் உலகப் போரின் போது மத்தியக் கிழக்கின் எண்ணெய்த் தொழில் புத்துயிர் பெற்று வளர்ச்சி அடைந்ததோடு, பிரிட்டனும் வலிமையடைந்தது. இந்தியாவில் எண்ணெய்க் கண்டுபிடிப்பு இந்தியாவின் முதல் எண்ணெய்க் கிணறு 1866ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நஹர் பங்க் என்னுமிடத்தில் தோண்டப்பட்டது. ஆனால் இக்கிணற்றில் எண்ணெய் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் அசாமின் மகம் எனுமிடத்தில் 1867இல் தோண்டப்பெற்ற கிணற்றில் எண்ணெய் கிடைத்தது. அசாம் இரயில்வே கம்பெனி மற்றும் சிண்டிகேட் ஆகியன 1890-93 ஆம் ஆண்டுகளில் நான்கு எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டின. இரு கம்பெனிகள் சார்பிலும் சுமார் 15 எண்ணெய்க் கிணறுகள் 1898ஆம் ஆண்டுவரை தோண்டப்பெற்று அவை பெரும் வெற்றி பெற்றன. பின்னர் இரு கம்பெனிகளும் ஒன்றிணைந்து அசாம் எண்ணெய்க் கம்பெனி என்ற பெயரால் விளங்கியது. சில காலம் கழித்து 1901ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் தூய்மைப்படுத்தும்சாலை ஒன்று திக்பாய் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்டது. 1920ஆம் ஆண்டு வாக்கில் அசாம் எண்ணெய் ஆலை 80 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி நாளொன்றுக்கு 14000 காலன் கனிம எண்ணெயை வெளியேற்றியது. அதே ஆண்டு பர்மா எண்ணெய்க் கம்பெனி இதன் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. 1959ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் காம்பத் என்னுமிடத்தில் முதன்முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காம்பத் தவிர குஜராத்தின் அங்க்லேஷ்வர் மற்றும் கல்லோல் ஆகிய இடங்களில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்தியாவின் எண்ணெய்க் கண்டுபிடிப்புக்கு, சோவியத் ஒன்றியம் பேருதவி புரிந்துள்ளது. எண்ணெயைக் கண்டுபிடித்தல், வெளிக்கொணர்தல், தூய்மைப்படுத்தல் ஆகிய அனைத்திலும் அந்நாடு உதவியுள்ளது. அவர்கள் கருத்துப்படி நமது நாட்டில் தற்போது சுமார் 4 மில்லியன் டன் அளவுக்கு எண்ணெய் வளம் உள்ளது; அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 150 மில்லியன் டன் எண்ணெயை நமது நாடு உற்பத்தி செய்ய இயலும். இதற்கேற்ப பல இடங்களில் எண்ணெய் வள ஆய்வும், புதிய எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிற நாடுகளில் எண்ணெய் உற்பத்திப் பணிகள் எண்ணெய் வளத் தொழில் இராக், குவைத், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது உலகம் முழுதும் வட துருவம் முதல் தென் துருவம் வரை எண்ணெய் வள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் மத்தியக் கிழக்கு நாடுகள் எண்ணெய் வளத்தில் மிகவும் சிறந்து விளங்குகின்றன. மத்தியக் கிழக்கு நாடுகள் தவிர்த்து ரஷ்யா, ருமேனியா ஆகிய நாடுகளிலும் எண்ணெய் வளம் மிகுந்திருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாகரீக, பண்பாட்டு வளர்ச்சிக்கும் இது இன்றியமையாததாக விளங்குகிறது. போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பிளாஸ்டிக், நைலான், டெரிலின், சிந்தெட்டிக் பொருட்கள் ஆகிய அனைத்திற்கும் எண்ணெய் வளம் மிக, மிகத் தேவை. எண்ணெயிலிருந்து புரதச் சத்தும் கூடத் தயாரிக்கப்பட முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே எண்ணெய் வளம் மனித குலத்தின் ஆக்கத்திற்குப் பேருதவி புரியும் என்பதில் ஐயமில்லை. நன்றி: உணர்வுகள்
  11. கவுண்டமணி -- செந்திலின் நகைசுவை காட்சி
  12. படம்: இருவர் பாடியவர்: உன்னி கிருஸ்ணன் இசை: ஏ.ஆர். ரகுமான் பாடல்: நறுமுகியே
  13. இந்திய நகைசுவை றாப் பாடல் ஒன்று
  14. பாடல்: ஏதோ ஏதோஒன்று படம்: எனக்கு 20 உனக்கு 18 இசை: ஏ.ஆர்.ரகுமான் குரல்: கார்த்திக், கோபிகா
  15. படம்: நான் அடிமை இல்லை பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை: விஜய் ஆனந் ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஸ்டுபிட்ட் எவன் சொன்னான்? Wகொ சைட் இட் ஈ சய்? பாசமாவது பந்தமாவது ஆல்ல் ணொன்சென்செ ஈ சய் ஹ ஹ ஹா ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது கீழ் வர்க்கம் மேல் வர்க்கம் இணயாத இரு கோடுகள் ஹாஹ் ஹ ஹ ஹ சேர்ந்தாலும் ஹா சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள் கட்டில் சொந்தம் என்னைக் கைவிட்டது தொட்டில் சொந்தம் என்னைத் தொடர்கின்றது உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான் யாருமில்லை எனக்காகத்தான் மலரே மலரே மடியில் தவழும் நிலவே ஹ ஹ ஹ ஹ டேய் உங்கம்மா என்னை வெல கொடுத்து வாங்க நினைச்சா ஹ நான் யாருக்கும் அடிமை இல்லை ஈட்'ச் இம்பொச்சிப்லெ ஈ சய்! ஹ ஹ ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைக்கின்றது ம்ஹ ஹ ஹ பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைக்கின்றது கல்யாணமே அன்பின் ஆதாரம்தான் உன் வாழ்விலே அது ஹஹ வியாபாரம் தான் மணி மாளிகை உன் வீடுதான் மாஞ்சோலையில் என் கூடு தான் மதுதான் மனைவி இனி என் வாழ்க்கை துணைவி நான் குடிப்ப்பேன் கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா? ஹஹ குடிச்சிக்கிட்டே இருப்பேன் எனை கேக்கறதுக்கு யார் இருக்கா? ஹா...... ஹ ஹ ஹ ஹாஆஆஆஆ ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களூம் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது ஹன்ஹாஆஆ காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
  16. கவுண்டமணி -- ராமராஜனின் நகைசுவை காட்சி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  17. படம்: பட்டனத்தில் பிரவேசம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்: வான் நிலா நிலா
  18. வசி, இந்த பாடல் தானே. http://video.google.ca/videoplay?docid=372...eXpBg&hl=en
  19. வெற்றிகொடி கையிலெடு
  20. பாடல்: நிவேதா .... இசை: மரகதமணி குரல்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் படம்: நீ பாதி நான் பாதி
  21. பாடல்: செஞ்ஞோறிட்டா இசை: யுவன் சங்கர் ராஜா படம்: பூவெல்லாம் கேட்டுப்பார் குரல்: உன்னி கிருஸ்ணன்.
  22. இனியவளுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள். இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த தின வாழ்த்துக்கள்.
  23. (கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர், மனைவி: பக்கா குடும்ப விளக்கு) கணவன்: அன்பே, வந்துட்டேன் மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா? கணவன்: BAD COMMAND OR FILE NAME. மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே? கணவன்: ABORT,RETRY,IGNORE. மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே? கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME. மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன். கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED. மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி. கணவன்: DATA TYPE MISMATCH. மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல. கணவன்: BY DEFAULT. மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா? கணவன்: HARD DISK FULL. மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க? கணவன்: UNKNOWN VIRUS DETECTED. மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா? கணவன்: TOO MANY PARAMETERS. மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன். கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE. மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்! கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER. மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு. கணவன்: SHUT DOWN THE COMPUTER. மனைவி: நான் போறேன். கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR COMPUTER
  24. வசி, இன்று தான் இப்பகுதிக்கு வந்துள்ளேன். நீங்கள் கேட்ட பாடல் கிடைத்தால் இணக்கின்றேன். நன்றி. பொறி கக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
  25. எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே எந்தன் பாதயும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே நீ நடக்கும் போது உன் நிழலும் மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன் உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால் குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன் உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே எந்தன் பாதயும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால் உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும் என் பெயரைதான் யாரும் கேட்டல் உன்பெர் சொல்கிரேன் ஒரே ஒரு உடலில் இருஇதயம் காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும் நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி எந்தன் வாழ்வடி எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான் உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிரேனே எந்தன் பாதயும் நீதான் எந்தன் பயணமும் நீதான் உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.