Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. Possible Vote Share Estimate (Analytical Scenario) Alliance / Party Estimated Vote % DMK-led alliance 43–47% AIADMK-BJP-allies 35–39% TVK + smaller allies 10–15% Others (NTK, AMMK, independents etc.) 2–6%
  2. இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்வது மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமான களையெடுக்கும் நடவடிக்கையே. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் உந்தப்பெற்று, இஸ்லாமியர் அல்லாதவரை அழிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுவரும் ஈரானின் அணுக்குண்டு எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இஸாலாமிய அடிப்படைவாத காட்டாட்சி அழிக்கப்படுவதுதான் வழியென்றால், அதனைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமே அணுவாயுத நிலைகளை அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் எல்லைகளுக்கு அப்பால், நிலக்கீழ் சுரங்கங்களில் அது கட்டிக் காத்து வருவதே. கையில் கிடைக்கும் எவ்வாயுதத்தைக் கொண்டும் மதவெறியில் உந்தப்பட்டு "அல்லாகு அக்குபர்" என்று கோஷமிட்டபடி தன்னையும் அழித்து ஏனையவரையும் அழிக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளிடம் அணுவாயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை ஈரானின் அபிமானிகள் சிந்திப்பது நல்லது. இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்தில் இருந்து அழிப்போம், அமெரிக்காவிற்கு மரணத்தைக் கொடுப்போம் என்று கங்கணம் கட்டிச் செயற்படும், இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, பணம் என்று வாரியிறைக்கும், நீண்டதூர ஏவுகணைகளை உற்பத்திசெய்து தனது பயங்கரவாத கொடுக்குகளை உலகம் முழுக்கப் பரப்ப எத்தனிக்கும் மூர்க்கர்களின் ஆட்சி முற்றாக நிர்மூலமாக்கப்பட வேண்டும், இது காலத்தினதும், மனித இருப்பினதும் அவசியமாகும். சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக, அச்சுருத்தி வைத்துக்கொண்டு, மிருகத்தனமாக கொடுங்கோலாட்சி செய்யும் ஈரானிய மத அடிப்படைவாதிகள் சின்னாபின்னமாக்கப்பட வேண்டும். வேடிக்கை என்னவென்றால் ஈரானின் கொடுங்கோலாட்சி அகற்றப்படவேண்டும் என்று ஈரானியர்கள் கேட்கிறார்கள், கொடுங்கோலன் கமெய்னி கொல்லப்பட்டபோது வீதிகளில் ஆர்ப்பரித்து மகிழ்வதோடு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் நன்றி கூறுகிறார்கள். ஆனால், ஈரானிற்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத சிலர் ஐயோ, இது தகுமா? ஐ நா விடம் அனுமதி கிடைத்ததா? ஈரானிடம் அணுவாயுதம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்று கூவுகிறார்கள் 😆.
  3. சி என் என் இல் இன்று வந்த ஆய்வுக்கட்டுரை. கடந்த 10 நாட்களாக நடக்கும் போர்பற்றிய சாராம்சம். ஆங்கிலத்தில் இருந்து உடனடியாக தமிழில் மொழிபெயர்க்க நேரமின்மையினால் அப்படியே இணைக்கிறேன். முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். Week 2 of Iran analysis: Military momentum meets economic and political reality | CNN Politics 1. Air dominance over Iran The United States and Israel have increased air dominance across Iran. We should anticipate military operations to intensify over the coming week. This will mean a focus on not just the missiles and launchers, but the production facilities and infrastructure that produce Iran’s missiles and drones, as well as its nuclear facilities. The Trump administration has not ruled out a ground operation, perhaps focused on enriched uranium buried in Esfahan, more than 250 miles south of Tehran. That would be highly risky, and may not be possible without further degradation of Iran’s military power. In sum, the military campaign is settling in for a period of weeks — not days. This will not be a short war. 2. Iranian leadership divisions After losing dozens of its top leaders, including slain ruler Ayatollah Ali Khamenei, Iran appointed an interim leadership council under its president, chief justice and a senior cleric. Under Iran’s constitution, this council holds the reins of power until a new supreme leader is appointed. Inside the precision strikes that shattered Iran’s leadership 2:41 On Saturday, Iran’s president, Masoud Pezeshkian, released what appears to be a hastily produced video declaring that attacks on neighboring countries would stop, unless the US struck Iran from those countries. Within hours, however, attacks against the Gulf countries restarted, including a drone targeting Dubai’s airport. This suggests either a breakdown in command-and-control within Iran, a power struggle within senior circles, or a refusal within some units to follow the orders of this temporary council. Iran’s leaders later scrambled to project cohesion. Later on Saturday, Ali Larijani, the secretary of Iran’s equivalent to the US National Security Council, insisted the interim council was in charge, and early Monday in Iran, the country announced a new supreme leader. 3. Succession uncertainty (resolved— for now) Early Monday, Iranian state media announced that Khamenei’s 56-year old son, Mojtaba, was selected as Iran’s next supreme leader — its third since the 1979 revolution. This is likely to prolong the war even further. If Trump was hoping for a Venezuela-like leadership change, with a new leader willing to deal with the US, it will not be Mojtaba, who is known as an ideological hard-liner with deep ties to the Islamic Revolutionary Guards Corps. However, it’s unclear whether Mojtaba will succeed in consolidating power. He’s relatively unknown, has never spoken publicly, and has never held an official government position. The Islamic Republic also rose to power in 1979 in opposition to a hereditary monarchy, one reason Mojtaba was thought not to be a leading contender. So, while Iran has named new leader, it’s too early to predict how long Mojtaba will be able to govern — presuming he even survives this war. Vapor trails in the sky after Israel intercepted missiles launched from Iran, amid the US-Israel conflict with Iran, as seen from Tel Aviv, Israel on March 6. Dylan Martinez/Reuters 4. Missile math We spoke last week about the importance of targeting Iran’s missile launchers, without which the country is unable to prepare larger salvos of strikes. US and Israeli forces appear to have had some success in this mission. Iranian missile launches decreased by 90% over the week, according to US Central Command, and most are now being intercepted. The fewer missiles in the sky, the fewer interceptors needed to take them down. Related article The Iran war’s troubling missile math 9 min read Iran’s drones remain a challenge, they are more plentiful and easier to launch from nearly anywhere inside Iran. Drone attacks are down by 86%, according to Central Command, but some continue to sneak through air defenses. Decreasing drone launches will be a key indicator over this second week. 5. Gulf states off the sidelines Iran’s decision to attack the Gulf states has continued to backfire on Tehran. Iran had hoped that by pressuring these influential countries, they would in turn pressure Washington to stop attacks inside Iran. The opposite has happened. The prevailing view in Gulf capitals is that while these countries may not have chosen this war, now that it’s started — the US must carry the military plan to its conclusion. Firemen and rescue workers inspect the site of an explosion at the Fairmont The Palm Hotel in Dubai, United Arab Emirates, on February 28. Altaf Qadri/AP Speaking for the first time during a tour of a hospital to visit wounded, the president of United Arab Emirates warned Iran that his country has “thick skin and bitter flesh,” and vowed to “emerge victorious from this war.” Quietly, multiple militaries are now working together in the skies over the Middle East, which was not the case when the operation began. Several Gulf states have stated they reserve the right to respond against Iran in self-defense, and this week could see these countries striking back against Iran. Farther afield, Iranian attacks against British and French facilities in the region triggered Paris and London to cooperate with the US, including granting access to bases and the deployment of French and UK military assets to the region. In sum, Iran has grown more isolated over the last week, and the US has enhanced the cooperation it’s receiving from allies and partners. Given the complexity of this operation, Trump should welcome the increasing support. Berating the UK’s prime minister as too late, which Trump did on Saturday, serves no purpose. 6. Russia and China Iran for years has claimed strategic alliances with Russia and China, believing that one or both would support the country in a moment of distress. Iran has directly supported Russia’s war in Ukraine, presuming that Russia would return the favor when Tehran was in need. From public view, however, neither Moscow nor Beijing has lent more than rhetorical support to Iran. CNN reported late in the week that Russia is providing targeting information to Iran against American ships, albeit with little apparent effect. If that’s true, it should carry repercussions from Washington, perhaps with increased support for Ukraine. Trump is unlikely to do that, but it would be the best response to ensure Moscow halts whatever it might be providing to the Iranians. As for China, it is nowhere to be seen in this crisis — and given its dependence on oil through the Strait of Hormuz, cannot be happy with Iran’s decisions to threaten the passage. Trump is scheduled to visit Beijing at the end of the month — an opportunity, should he choose it, to press China on its support for Iran’s missile and drone programs. By the time Trump visits, there may be little left of those programs inside of Iran. 7. No major asymmetric response — yet To understand Iran, one must understand its so-called “Revolutionary Guards.” The IRGC — as its name implies — “guards” the revolution, including through suppression of the Iranian people who demand a new system. But the IRGC is also tasked with spreading the revolution abroad through terrorism and support for proxy groups that foment instability across the Middle East. That is the job of the IRGC’s “Quds Force,” and we should presume it’s been tasked with acts of terrorism abroad, including within our borders. Iran’s intent often outstrips its capabilities, however, and thus far we have not seen any such acts carried out. McGurk: Iran is trying to 'create this sense of mayhem and chaos' 4:14 We should hope and presume that the Department of Homeland Security, FBI and the US intelligence community are working together and with foreign counterparts to detect and disrupt any emerging threats. The UK last week arrested four operatives reportedly planning attacks on behalf of Iran. As a reminder of the threat the IRGC has posed even within our borders, a federal jury on Friday convicted an Iranian intelligence agent, Asif Merchant, tasked from Tehran with assassinating senior political leaders in the United States, including President Donald Trump. Merchant was arrested and convicted under the Biden administration. 8. Energy shock The key indicator now may not be military or political — but economic. Twenty percent of global energy trade passes each day through the Strait of Hormuz. Since this conflict began, ships have largely not transited the narrow passage due to fears of Iranian attacks. Insurance rates for these ships have skyrocketed, together with global oil prices, which surged 35% over the past week. This was one of the sharpest spikes in history. What’s at stake with the Strait of Hormuz 5:55 If this problem is not solved soon, Gulf producers will run out of storage room and be required to shut their taps — further jeopardizing future supply. We should expect prices to continue to rise this week, building political pressure on the White House to either wind down the military operation before its conclusion, or find a way to reassure shippers transiting the Strait. Cutting the military campaign short mid-stream might be the worst outcome of all — leaving behind a wounded but intact Iranian regime with residual missile and nuclear capabilities. The White House is scrambling to find solutions. Late last week, it announced a $20 billion insurance facility to backstop risk, as well as suspended sanctions on ships stranded with 140 million barrels of oil heading for India. Given the criticality of this issue, the US military may need to get involved in helping to protect the Strait and risks to slow-moving tankers. This happened before, during the Reagan administration, when the US Navy protected transit — but it’s a much harder mission now, given Iran’s armed with drones that travel over one thousand kilometers and can be launched from anywhere across Iran. So, keep a close eye on this space, perhaps the most significant strategically over the coming week. 9. Escalation dominance — not outcome dominance Briefings from US military leaders this week stressed that US military power is building as Iran’s is rapidly diminishing. That equation by the day increasingly tilts against Iran as the United States and Israel degrade its ability to project power outside of its borders. That does not, however, impact Iran’s ability to project power inside its own borders — against its own people. Thus, on the current trend line, we are likely to see an Iran with massively degraded military power but without the regime change that many are hoping to see. Changing political outcomes from air power alone is not a viable military task. President Donald Trump looks on during a roundtable discussion on college sports in the East Room of the White House in Washington, DC, on March 6. Anna Moneymaker/Getty Images 10. No natural endpoint The lack of a natural endpoint is what makes the campaign unlike anything Trump, as commander in chief, has presided over across his two terms. However, heading into the second week, we can begin to see how this might conclude. The Pentagon sought to clarify last week that it has “discrete and scoped” objectives: destroy Iran’s power projection capacity — missiles, drones, navy and nuclear facilities. It would likely take a few more weeks to prosecute all of those targets. At that point, the military campaign would have run to conclusion. The United States cannot direct political outcomes, but it can make clear that any new government — if it wants sanctions relief, for example — must agree not to restore those capabilities. All the while, US and Israeli air forces can continue patrolling Iranian skies. That may be the best case for a new normal after all of this — a weakened and contained Iran. But even that outcome is weeks away at least. Bottom line The United States together with Israel and a broader coalition in defense is now prosecuting a methodical military campaign with defined military objectives focused on Iran’s power projection in the region. Political objectives remain unclear and should be unambitious in any case. Over the coming week, it’s the economic factor and the Strait of Hormuz that might emerge as the dominant issue.
  4. மன்னிப்பும் இல்லை ஒரு ரோமமும் இல்லை. தமது வில்லத்தனத்தை தமது அரபு நண்பர்களும் கண்டுகொடுவிட்டதால்த்தான் இந்த மன்னிப்புக் கோரும் நாடகம். ஆனால், இவர் மன்னிப்பு என்று மழுப்பும்போதே ஈரானின் ராணுவம் "அமெரிக்க இலக்குகள் எங்கிருந்தாலும் தாக்குவோம்" என்று அறிக்கை விட்டதோடு, தம்மீது தாக்குதல் நடத்தப்படாத போது கூட இந்த அரபு நாடுகளைத் தேடித் தேடித் தாக்கியது . ஆரம்பத்தில் அமெரிக்க இலக்குகள் என்றுவிட்டு பின்னர் விமான நிலையம், கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை, சிவிலியன் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள், வீதியில் செல்லும் வாகனங்கள் என்று சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இராணுவத்தின் அழுத்தத்திற்குப் பயந்துதான் தனது இரண்டாவது அறிக்கையான "அமெரிக்க இலக்குகளைத் தாக்குவோம்" என்ற இராணுவத்தின் அறிக்கையினை அப்படியே தனது டுவிட்டர் கணக்கில் பதிவுசெய்தார் ஜனாதிபதி. முன்னர் சொன்னார்கள் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் களத்தில் நிற்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. ஆகவே தான் ஏற்கனவே முடிவு செய்ததன்படி களத்திலிருப்போர் தம் விருப்பிற்குத் தாக்குகிறார்கள் என்று . இல்லையில்லை, நாமேதான் தாக்குதலை நடத்தச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறோம் என்று இப்போது சொல்கிறார்கள். வந்திருக்கும் புதிய ஆன்மீகத் தலைவரும் கடும்போக்குவாதி என்பதுடன் ஈரானின் புரட்சிகர படையின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆகவே இவர் உயிருடன் இருக்கும்வரை ஈரான் இன்னும் இன்னும் அழிவுகளைச் சந்திக்கப்போவது திண்ணம். என்னைப்பொறுத்தவரையில் ஆன்மீகத் தலைவர் என்று எவருமே இனிமேல் வரக்கூடாது. வருவோர் எல்லாம் அழிக்கப்பட வேண்டும். ஈரான் மதச் சார்பற்ற நாடாக மாறவேண்டும். மதம் ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இதனால் ட்ரம்ப்பும், பிபியும் செய்யும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது பூரண ஆதரவு உண்டு. ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் உலக இருப்பிற்கு மிகவும் ஆபத்தானது. அதனை எவர் தடுத்து நிறுத்தினாலும் எனது ஆதரவு அவர்களுக்குண்டு. புட்டின் விசுவாசிகளுக்கு இப்போது நடக்கும் தாக்குதல்கள் கலக்கத்தைக் கொடுக்கலாம். தற்போது உலகில் இருப்பது ஒரேயொரு வல்லரசுதான் என்பதை அமெரிக்கா மீளவும் நிரூபித்திருக்கிறது. ரஸ்ஸியாவும், சீனாவும் நினைத்துக்கொண்டிருந்த "பல" வல்லரசுக் கனவினை இப்போதைய தாக்குதல்கள் முற்றாக அடித்து நொறுக்கியிருக்கின்றன. அமெரிக்காவின் இராணுவ வல்லமையும், தொழிநுட்பமும் ரஸ்ஸிய சீன தொழிநுட்பத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மகத்தானது என்பதை நடந்துவரும் தாக்குதல்கள் காட்டுகின்றன.
  5. இவர் த‌னது வாயை வாடகைக்கு விடுபவர். தான் தனியாக கட்சி நடத்தியபோது தீம்காவை கிழித்துத் தள்ளினார். "வாருங்கள் நாடாளுமன்றத்தில் பதவி தருகிறோம்" என்று ஸ்டாலின் கூப்பிட்டவுடன் ஒரேயடியாகக் காலில் வீழ்ந்து பதவியை ஏற்றுக்கொண்டார். இப்போது தீம்காவும் காங்கிரஸும் போடும் தாளத்திற்கு ஆடவேண்டிய நிலை. ஆகவேதான் காங்கிரஸின் பல்லவியான "ஈரானைத் தாக்காதே" என்பதை இவர் பாடுகிறார். ஆனால், ஆள் சுத்தமான பிராமண இந்துத்துவவாதி.
  6. ஈரானிய புரட்சிகர படையின் மீது மிகுந்த செல்வாக்குச் செலுத்துபவரும், ஈரானிய மதக் கடும்போக்குவாதிகளில் முதன்மையானவர் என்றும் கருதப்படும் முன்னாள் ஆன்மீகத் தலைவர், கமெய்னியின் மகன் தற்போது ஆன்மீகத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். ஈரான் மத அடிப்படைவாதத்தினை விட்டு, ஜனநாயக வழிக்குத் திரும்புவதற்கு இவர் தனது தகப்பனாரைக் காட்டிலும் பெரும் தடையாக இருப்பார் என்பதை ஊகிப்பது கடிணமில்லை. ஆகவே, இவரும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். பார்க்கலாம்.
  7. இந்தியாவுக்காக இருக்காது. சீனாவுக்காக இருக்கலாம். இசண்டையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் தரமும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
  8. உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை, மத்தியகிழக்கில் இருக்கும் வேற்றின முஸ்லீமிற்கும் எங்கோ ஒரு ஓரத்தில் வாழும் இலங்கை முஸ்லீம்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? மத்திய கிழ‌க்கில் வாழும் அரபு முஸ்லீம்கள், மற்றைய முஸ்லீம்களை, குறிப்பாக ஆசிய முஸ்லீம்களை தமக்கு நிகராகக் கருதுவதில்லை. இரண்டாம் மூன்றாம் தர நிலை கூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், இவர்களோ அவர்களைக் கடவுள்கள் போலக் கொண்டாடுகிறார்கள். சொந்த நாட்டில் வாழும் சகோதர இனத்திற்கெதிராக கொலைகளையும், இன்னொரு இனத்துடன் கூட்டுச் சேர்ந்து இனவழிப்பையும் மேற்கொள்வார்கள்.
  9. இத்தாக்குதலைப் பார்க்கும்போது செஞ்சோலைதான் மனதில் வருகிறது. இஸ்லாமியப் புரட்சிகர ராணுவ முகாமிற்கு அருகில் பாடசாலை இருந்தது, அதனாலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் அபிமானிகளோ ஈரானின் ஏவுகணையொன்று இலக்கை விட்டு விலகிச் சென்று சொந்த நிலப்பகுதியில் வீழ்ந்தபோதே இது நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது இஸ்ரேலின் தாக்குதலலாகத்தான் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
  10. கடந்த காலங்களில் ஈராக், அப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்குள் அமெரிக்கா மரபுவழியாகத் தலையிட்டு ஈற்றில் முடிவின்றி வெளியேறியது போல ஈரானிலும் நடந்துவிடக்கூடாதென்ற காரணத்தினாலேயே அமெரிக்கத் துருப்புக்களை ஈரானிற்குள் இறக்கும் நோக்கம் அதற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இப்படிச் சொல்வதால் அமெரிக்கா ஈரானிடம் தோற்றுவிடும் என்பதல்ல, மாறாக நீண்டகாலமாக இப்போர் தொடருமாக இருந்தால், அமெரிக்காவிற்கு ஏற்படக் கூடிய ஆள்ப்பல இழப்பு, பணவிரயம் ஆகியவற்றை கருத்திற்கொண்டே இதனைத் தவிர்க்க விரும்புகிறார்கள். நீங்கள் ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான போர்களை பார்த்தாலும், இவ்விரு போர்களிலும் முற்றான ராணுவ வெற்றியை ஆரம்பத்தில் அமெரிக்க ஈட்டியிருந்தது. இந்த நாடுகளை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்கா கொண்டுவந்திருந்தது. ஆனால் "அதன்பின்னர் என்ன எனும் கேள்வியில்த்தான்" இப்போர்கள் முற்றான மூலோபாய வெற்றியை கொடுத்தனவா இல்லையா என்கிற பேச்சு எழுகிறது.
  11. தற்போதைய நிலையில் அமெரிக்கா பலமான நாடாகத் தெரியவில்லை என்றால், இப்போதிருக்கும் பலமான நாடு எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ரஸ்ஸியாவா அல்லது சீனாவா? மரபுவழிச் சமர் ஒன்றினை ஈரானுடன் நடத்த முடியாது என்று எதனை வைத்து அளவிடுகிறீர்கள்? The United States could overwhelmingly defeat Iran in a conventional military confrontation (meaning a straightforward fight between regular armies and forces) because of the huge gap in resources, technology, and global power-projection capabilities. 🇺🇸 U.S. Military Advantages The U.S. has vastly more manpower, advanced aircraft, naval power, missiles, and global logistics than Iran. Analysts rank the U.S. as the world’s most powerful military and Iran as a strong regional power, but not one that can match U.S. forces head-to-head. In a pure conventional fight — large-scale air strikes, naval blockades, missile barrages — American forces could destroy or neutralize many of Iran’s military assets. The U.S. also has far greater capacity to project force globally (aircraft carriers, long-range bombers, satellites, advanced cyber capabilities). 🇮🇷 Iran’s Strategy and Limits Iran’s strength is not in conventional forces aimed at defeating a superpower on the battlefield; it has focused instead on asymmetric tools: ballistic missiles, drones, cyber tactics, naval mines, fast attack boats, and regional proxy militias. These capabilities would not enable Iran to win a direct conventional war, but they could impose significant costs, disrupt U.S. operations, and complicate the conflict.
  12. நியாயமான கேள்வி. ஆனால், இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையே போர்கள் இவ்விரு நாடுகளும் அணுவாயுதத்தினை வைத்திருக்கின்றன என்று தெரிந்தபின்னரும் ஆரம்பிக்கப்படவில்லையா? ரஸ்ஸியா இரண்டாவது மிகப்பெரிய அணுவாயுத வல்லரசு என்று தெரிந்த பின்னரும் பனிப்போரோ அல்லது நேரடியான போர்களை அந்நாடு முகங்கொடுக்கவில்லையா? இரு அணுவாயுத வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் இன்றுவரை மோதியே வருகின்றன. அணுவாயுதம் வைத்திருக்கும் நாடொன்றின்மீது தாக்குதல் நடத்துமுன்னர் ஒன்றிற்கு இருமுறை சிந்திப்பது அவசியம்தான். ஆனால் அதுவே போரினைத் தடுக்குமா என்பது கேள்விக்குறியே.
  13. வணக்கம் எப்போதும் தமிழன், நீங்கள் கேட்டுக்கொண்டதால் இதனை எழுதுகிறேன். இந்தியா தனது அணுவாயுதத்தினை தானாகவே உள்நாட்டில் உருவாக்கிக்கொண்டது. இதற்கு ரஸ்ஸியாவோ அல்லது வேறு எவருமோ உதவவில்லை. 1940 களின் இறுதிப்பகுதிகளிலேயே தனக்கான அணுவாயுத உருவாக்கத்தை இந்தியா ஆரம்பித்துவிட்டது. போரிற்கல்லாமல், சக்தித் தேவைகளுக்காக அணுச்சக்தியைப் பாவிப்பது பற்றிய அறிவை இந்தியா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பெற்றிருக்கலாம், ஆனால் எந்தவொரு அணுஆயுத வல்லரசும் இந்தியாவுக்கு உதவவில்லை. 1974 ஆம் ஆண்டு இந்திய அணுவாயுதத்தை முற்றாக்கிவிட்டது என்று வெளித்தெரிய ஆரம்பித்தவுடன் அதுவரை இந்தியாவிற்கு சக்தித் தேவைக்கான அணுவாலைகளில் உதவிய நாடுகள் தமது பங்களிப்பை நிறுத்தி விட்டன. ஆனால் பாக்கிஸ்த்தான் அப்படியல்ல. வெளிநாட்டு அணுமின் நிலைகள், ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றிய பாக்கிஸ்த்தான் விஞ்ஞானிகள் தாம் நாடு திரும்பும்போது தம்மோடு திருடிக்கொண்டு வந்த தகவல்க் கொத்துக்களை அடிப்படையாக வைத்தே தமது அணுவாயுதத்தை உருவாக்கிக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்ட கோப்புக்களுக்கு மேலதிகமாக, இந்தியாவின் பரம வைரியான சீனா அணுவாயுத உலைகளின் கட்டுமானத்தில் பாக்கிஸ்த்தானுக்கு உதவியது. சீனா அணுவாயுத பரவல்த் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் கூட பாக்கிஸ்த்தானின் அணுவாயுத உற்பத்திக்கு உதவியது என்பது உண்மையே. ஆனால் இஸ்ரேலின் அணுவாயுத உற்பத்தியின் கதை வித்தியாசமானது. சுற்றிவரவும் தம்மை ஆக்கிரமிக்கக் காத்திருக்கும் அரபு நாடுகளில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள அணுவாயுதம் தன்னிடம் இருப்பது அவசியம் என்று இஸ்ரேல் கருதியது. இதனால் 1950 களிலேயே இதுதொடர்பான முயற்சிகளில் அது இறங்கிவிட்டது. ஆரம்பத்தில் இஸ்ரேலின் அணுவாயுத ஆராய்ச்சியில் பிரான்ஸ் உதவியிருந்தபோதும், இஸ்ரேலிய விஞ்ஞானிகளே தமக்கு உகந்தவகையில் அணுவாயுதத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இறுதியாக, அணுவாயுதப் பரவலைத் தடுக்கும் ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டிலேயே அமுலுக்கு வந்தது. பாக்கிஸ்த்தானைத் தவிர ஏனைய நாடுகள் எல்லாமே அப்பொழுது அணுவாயுதத்தை வைத்திருந்தபோதிலும் எல்லா நாடுகளும் அதில் கைச்சாத்திடவில்லை, வெறும் நான்கு நாடுகளைத் தவிர‌.
  14. இது தவறான தகவல். அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான மூன்று எப் 15 ரக தாக்குதல் விமானங்களை குவைத்தின் விமான எதிர்ப்புப் படையனி சுட்டு வீழ்த்தியிருக்கிறது என்பதே சரியான தகவல். ஈரானின் விமானங்கள் குவைத்தின் வான்பரப்பிற்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது தாக்குதலை நிறைவுசெய்து தளம் திரும்பிக்கொண்டிருந்த மூன்று அமெரிக்க விமானங்களை குவைத் விமான எதிர்ப்புப் படையணி ஈரானின் விமானங்கள் என்று தவறுதலாகக் கணித்து சுட்டு வீழ்த்தியிருக்கிறது. தாக்கப்பட்ட விமானங்களில் இருந்த ஆறு விமானமோட்டிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் நலமுடன் இருப்பதாக குவைத் அரசு தெரிவித்திருக்கிறது. தனது தவற்றிற்காக அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள குவைத் அரசு, இத்தாக்குதல் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொள்வதாகவும் கூறியிருக்கிறது.
  15. பெருமளவு கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். நிதானமாகப் பதிலளிக்கிறேன். உங்களுடன் வாதிடும் நோக்கத்தில் அல்ல, மாறாக சில கருத்துக்களை முன்வைப்பதற்காக மட்டுமே. வேலையில் இருக்கிறேன், ஆனால் கட்டாயம் பதில் த‌ருகிறேன். நன்றி
  16. லிபியாவை ஆண்ட கடாபி சதாமைப் போன்றதொரு முன்னாள் இராணுவ அதிகாரி, பின்னர் 42 வருடங்களாக நாட்டினை கொடுங்கோலாட்சி செய்த சர்வாதிகாரி, குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே நாட்டின் வளங்களைச் சூறையாடி சொத்துக் குவித்த ஊழல்வாதி, இவற்றுக்கெல்லாம் மேலாக கடுமையான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு மனிதர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத அடிப்படைவாதி. ஆனால் நீங்கள் கூறும் மேற்குலகு அவரை அகற்றவில்லை. மாறாக அவரது குற்றங்களை எதிர்த்து சாதாரண லிபிய மக்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்ப்பாட்டாளர்கள் ஆகியோரே போராட்டங்களில் குதித்தனர். இப்போராட்டங்களை கடாபி இராணுவத்தினைக் கொண்டு கொடூரமாக அடக்க முனைகையிலேயே அது மக்களின் ஆயுதப் போராட்டமாக மாறியது. போட்ராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளக் கைப்பற்ற கடாபியின் படைகள் முயலும்போதே நேட்டொ தலைமையில் வாந்தாக்குதல்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது. இறுதியில் தப்பிச்செல்ல எத்தனித்த கடாபியின் வாகனத்தின்மீது நேட்டோவின் வான் தாக்குதலில் அகப்பட்ட கடாபி பதுங்கியிருந்தபொழுது அவரை லிபிய புரட்சிகரப் படையே கண்டுபிடித்துக் கொன்றது. அவரின் பின்னரான லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமக்கிடையே சண்டையிட்டு நாட்டினை அழித்தார்கள். சிரியாவின் சர்வாதிகாரி பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடாபியைப் போலவே அவரும் ஒரு கொடுமையான சர்வாதிகாரி. புட்டினின் நெருங்கிய நண்பர். சுமார் இரண்டு இலட்சம் சிரிய மக்களின் படுகொலைகளுக்கு நேரடியாகக் காரணமானவர். ரஸ்ஸிய ஆயுதங்கள், ரஸ்ஸிய இராணுவப் பிரிவுகள், ரஸ்ஸியாவின் தனியார் இராணுவக் கூலிகள், ரஸ்ஸிய விமானங்கள், ஈரானின் ஆயுத வளங்கள், ஹிஸ்புள்ளாக்களின் படையணிகள் என்று பல முனை உதவிகளைக்கொண்டு போர் நடத்தியவர். தனது அதிகார ஆசையினால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான ஐஸிஸ் அமைப்பு உருவாக வழிசமைத்துக் கொடுத்தவர். நீங்கள் கூறும் மேற்கினைக் காட்டிலும் நீங்கள் பூஜிக்கும் புட்டினும், இன்று நீங்கள் உருகும் அயொதுள்ளா கமெய்னியுமே சிரியாவின் அழிவுகளுக்குப் பெருங்காரணமானவர்கள். அப்கானிஸ்த்தானை முதலில் ஆக்கிரமித்தது நீங்கள் பூஜிக்கும் புட்டினின் நாடான ரஸ்ஸியாதான் என்றால் நம்புவீர்களா? 1979 முதல் 1989 வரையான 10 வருட காலத்தில் குறைந்தது பத்து இலட்சம் அப்கானியர்கள் கொல்லப்படுவதற்கு ரஸ்ஸியா முதன்மைக் காரணமாக இருந்தது. நீங்கள் கூறும் மேற்கின் ஆக்கிரமிப்பில் கொல்லப்பட்ட அப்கான் மக்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சம் மக்கள். ஆக அப்கானின் மக்கள் அழிவில் மேற்கைக் காட்டிலும் ரஸ்ஸியாவின் பங்களிப்பு நான்கு மடங்கிலும் அதிகமானது. நீங்கள் இன்று கூறும் ஈராக், சிரியா,லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களைப் போல அப்கானிஸ்த்தானிலும் உள்நாட்டு மோதல்களை ரஸ்ஸியாவின் வெளியேற்றம் ஏற்படுத்தியது. அதுவரை ஒன்றாகப் போராடிய முஜஹிதீன்கள் ரஸ்ஸியாவின் வெளியேற்றத்தின் பின்னர் அதிகாரத்திற்காகப் தம்க்குள்ப் போராடி நாட்டினை மேலும் அழித்தார்கள். 1994 இல் பாக்கிஸ்த்தானின் இராணுவப் புலநாய்வுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட தலிபான்களும் அப்கானிஸ்த்தானிற்குள் வரை மோதல்கள் பன்முகப்படுத்த‌ப்பட்டன. ஆக, மேற்கைக் காட்டிலும் நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் அதிக‌ அழிவினை ஏற்படுத்தியது ரஸ்ஸியாதான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.
  17. ஈராக்கின் சதாம் உசேன் எவ்வாறான அரசதிபர்? ஜனநாயக தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்டவரா? அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, சதிப்புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர். மிகவும் கொடூரமான சர்வாதிகாரியாக வலம் வந்தவர். அவரது ஆட்சியில் குர்திஸ்கள் உட்பட அவரின் இனத்தைச் சாராத பல மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். குர்திஸ்கள் மீது இரசாயண ஆயுதத்தினைப் பிரயோகித்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. ஆனாலும் குவைத்தினை ஆக்கிரமிப்பென்பதென்று அவர் எடுத்த முடிவே அவருக்கு எமனாக மாறியது. 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளின் யுத்தம் அவரை குவைத்திலிருந்து வெளியேற்ற நடத்தப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னரான காலத்தில் சதாம் எடுத்த நிலைப்பாடும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதில் அவர் காட்டிய தீவிரமும் 2003 இல் ஈராக்கினை அமெரிக்கா மீண்டும் தாக்கவேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியது. இப்போரிற்காக அமெரிக்கா முன்வைத்த காரணங்கள் வலுவற்றவையாக இருந்தபொழுதிலும், பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மீதான சதாமின் ஆசை இரகசியமல்ல. ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், உலகெங்கிலும் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்குவதற்காக ஈராக்கினுள் வந்து குவிந்தார்கள் அதன் விளைவாக ஏற்பட்ட போர்களும், சியா ‍- சுன்னி பிரிவுகளுக்கிடையிலான போரின் விளைவுகளுமே ஈராக்கினை முற்றான அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றன.
  18. நீங்கள் கேட்பது சரிதான். இன்று சர்வதேச வல்லரசுகளோ, பிராந்ர்திய வல்லரசுகளோ எந்த சட்டத்திற்கும் கட்டுப்படுவதில்லை என்பது உண்மையே. அமெரிக்கா நடத்திய வியட்னாம், ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான தாக்குதல்கள், ரஸ்ஸியா நடத்திய அப்கானிஸ்த்தான், மோல்ட்டோவா, ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு வல்வளைப்புக்கள், சீனா நடத்திய தீபெத், தென்சீனக் கடற்பகுதி மற்றும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மீதான ஆக்கிரமிப்புக்கள் என்று எல்லா வல்லரசுகளும் தம் பங்கிற்கு தமது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி சர்வதேசச் சட்டங்களை மீறி வருகின்றன. ஆனால், இவை எதுவுமே தம்மிடம் இருக்கும் அணுவாயுதத்தினை சட்டங்களை மீறும் செயற்பாடுகளில் பாவித்ததில்லை, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீதான தாக்குதலைத் தவிர. புலிகளையும் ஈரானின் முல்லாக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதன் மூலம் போரட்டத்தையல்லவா கொச்சைப்படுத்துகிறீர்கள். இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுவே தலையாய கடமையென்று அணுவாயுத உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஈரானைப்போல, புலிகள் ஏதாவதொரு இனத்தை அழிப்பதே தமது தலையாய கடமை என்று செயற்பட்டார்களா? அப்படிச் செயற்பட்டார்கள் என்றால் அதனை இங்கே குறிப்பிடுங்கள் பார்க்கலாம். அடுத்ததாக, புலிகளிடம் கடற்படையும், வான்படையும் இருப்பதனால்த்தான் அழிக்கப்பட்டார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? இதனை நிரூபிக்க உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் இங்கே பகிரலாமே? இந்தியா தனது பழிவாங்கலுக்காகவே புலிகளை அழிக்கக் கங்கணம் கட்டிச் செயற்பட்டது என்று நன்கு தெரிந்தபின்னரும் ஏன் மீண்டும் மீண்டும் புதிதாக காரணங்களைக் கொண்டுவந்து இணைக்கிறீர்கள்?
  19. எப்போதும் தமிழன், நீங்கள் கேட்டதனால் சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் முட்டுக் கொடுப்பதற்காக நான் எனது பதிவினை இடவில்லை. இரண்டாவது, இன்று அணுவாயுத வல்லமை பெற்ற நாடுகளைப் பார்த்தீர்கள் என்றால், அந்நாடுகள் புதிதாக எந்த நாட்டிற்கும் அணுவாயுதத்தைக் கொடுக்கப்போவதில்லை, தம்மிடம் இருக்கும் அணுவாயுதங்களை சிறிது சிறிதாக குறைத்துக்கொள்வது, எந்த நாடும் தனது சக்தித் தேவைகளுக்காக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வழிகளில் வீரியம் குறைந்த அணுச் சக்தி நிலைகளை உருவாக்கிக்கொள்வது எனும் கொள்கைகளை மட்டுமே கொண்ட அணுவாயுத பரவல்த் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஸ்ஸியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன. பின்னாட்களில் அணுவாயுதத்தை உருவாக்கிக்கொண்ட இந்தியா, பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இவ்வொப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திடவில்லை. வடகொரியா 2003 ஆம் ஆண்டளவில் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது. இவற்றுள், வடகொரியாவைத் தவிர ஏனைய நாடுகள் அனைத்துமே அணுவாயுதத்தினை ஒருபோதும் பாவிக்கப்போவதில்லை என்பதே சர்வதேசத்தின் எண்ணம். வடகொரியாவினை ஆளும் சர்வாதிகாரி எந்நேரத்திலும் அணுவாயுதத்தைப் பாவிக்கலாம் எனும் அச்சம் இன்றுவரை இருந்தே வருகிறது. ஆனால், ஈரானின் அணுவாயுத ஆசைக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. அதுதான் இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக அழித்துவிடுவதென்பது. ஆகவேதான் எப்பாடுபட்டாவது அணுவாயுத வல்லமையினைப் பெற்றுவிட அது துடிக்கிறது. மதவெறிபிடித்து அலையும் ஈரானிய முல்லாக்கள் தமது கைகளில் அணுவாயுதம் கிடைத்தவுடன் அதனை எந்நாட்டின் மீது ஏவுவார்கள் என்பதை அனுமானிப்பது அவ்வளவு கடிணமான விடயமாக உங்களுக்கு இருக்கப்போவதில்லை. சர்வாதிகாரியான கிம் உங் ஜுன் இடம் இருக்கும் அணுவாயுதத்தின் ஆபத்தினை எதிர்கொள்ளும் உலகு, மதவாதிகளான ஈரானிய முல்லாக்களின் அணுவாயுத அச்சுருத்தலினையும் எதிர்கொள்ளவேண்டுமா என்பதே இன்றிருக்கும் கேள்வி. அதனால்த்தான் ஈரான் அணுவாயுதத்தினை உருவாக்கிக்கொள்வதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டிய தேவை இருக்கிறது. இதனால்த்தான் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலினை நான் ஆதரிக்கிறேன்.
  20. ஈரானின் கொடுங்கோலாட்சி அழிக்கப்படுதல் மனித குலத்திற்கு அவசியமானது. மதத்தின் பெயரால் மத்தியகிழக்கு முழுவதையும் அச்சநிலையில் வைத்துக்கொண்டு, உலக இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களும், பண உதவியும் செய்துவந்த கமெய்னியும் அவனுடன் இன்னும் 40 இலிருந்து 50 வரையான இரானியக் கொடுங்கோலாட்சியின் தலைவர்களும், தளபதிகளும் ஒரே நாள் தாக்குதல்களில் கொல்லப்பட்டது மனிதகுலத்திற்குக் கிடைத்திருக்கும் மகத்தான் வெற்றியென்பதில் சந்தேகமில்லை. கமெய்னி கொல்லப்பட்டாலும் கூட அவனது புத்திரனின் தலைமையில் ஈரானிய இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மீதமிருக்கும் ஏவுகணைகளை இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கின் பல நாடுகள் மீது ஏவிவருகிறார்கள். ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுச் சரணடையுங்கள், உங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளுங்கள் எனும் அமெரிக்கத் தலைவரின் கோரிக்கையினை மதவெறி பீடித்த ஈரானிப் பயங்கரவாதிகள் கேட்பதாகத் தெரியவில்லை. ஆகவே முற்றான அழித்தொழிப்பொன்றினை இவர்கள் எதிகொள்ளப்போகிறார்கள் என்பது உறுதி. இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் நடத்தப்பட்டு வரும் ஈரானியப் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்கள் முற்றான இலக்கினை அடையும் வரை தொடரப்பட வேண்டும். தற்போது பாம்பின் தலையில் அடிவீழ்ந்திருக்கிறது, ஆனாலும் இன்னும் கொல்லப்படவில்லை. ஆகவே மீதமிருக்கும் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டு, நாடு முழுவதுமாக அவர்களின் தழைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் வரை அமெரிக்கா - இஸ்ரேல் தலைமையிலான தாக்குதல்கள் நிறுத்தப்படக் கூடாது. இப்போது நடத்தப்படும் தாக்குதல்களை திட்டமிட்டுவந்த வேளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அமெரிக்காவிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்திருந்தார். ஈரான் மீது அமெரிக்கா நடத்தவிருக்கும் தாக்குதளினால் இஸ்ரேல், ஈரானிடமிருந்து வரும் கடுமையான எதிர்வினையினை முகம்கொடுக்க நேரிடும், ஆனாலும், மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் ஈரானியப் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து, ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்தும்வரை தொடர்ந்து நடக்குமாக இருந்தால், இஸ்ரேலியர்கள் இழப்புக்களைச் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அது. ஆக, இப்போது நடப்பது இரானிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளைக் களையெடுக்கும் நடவடிக்கை. ஆகவே அது முற்றுப்பெறும் வரை இப்போர் ஓயப்போவதில்லை. இப்போரிற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் நீண்டகாலமாக ஆயத்தங்களை செய்துவந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
  21. சில மாதங்களுக்குப் பின்னர், ஒரு நாள் இரவு வேலை. நானும், நீர் கொழும்பைச் சேர்ந்த கத்தோலிக்கச் சிங்களவரான‌ பெர்னாண்டோ எனும் பொறியியலாளரும் பணியில் இருந்தோம். தொழிற்சாலையில் இயந்திரங்கள் சரிவர இயங்குகின்றனவா, தொழிலாளர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்று பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு இரவு உணவு அருந்துவதற்காக அன்று பணியில் இருந்த நாம் இருவரும் எமது அலுவலக அறைக்குச் சென்றோம். உணவருந்திக் கொண்டிருக்கும்போது பெர்ணான்டோவின் தகப்பனார் தொலைபேசியில் அவனுடன் உரையாடத் தொடங்கினார். அவனது முகத்தில் கலவரம். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது எங்கோவொரு இடத்தில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருப்பது புரிந்தது. ஆனாலும் அதனைக் கேட்கும் திராணியில்லை. வெகுநேரமாகத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு இணைப்பைத் துண்டித்துக்கொண்டதும் பேசத் தொடங்கினான். "கட்டுநாயக்கவில் விமானப்படையினரின் விமானங்களைப் புலிகள் தகர்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று ஆரம்பித்தவன், "இத்தாக்குதல் குறித்து உனது கருத்து என்ன? இவ்விமானங்கள் எமது சொத்துக்கள் அல்லவா? எமது நிதியில்த்தானே இதனை வாங்கியிருக்கிறது அரசாங்கம், அப்படியிருக்க இவற்றை அழிப்பது சரியா?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். அழிக்கப்பட்டிருப்பது விமானப்படை விமானங்களா அல்லது ஏர் லங்கா விமானங்களா என்றுகூட எனக்குத் தெரியாது. அப்படியிருக்க அழிக்கப்பட்டது சரியா தவறா என்று என்னால் எப்படிக் கூறமுடியும். நான் பதிலளிக்காது பேசாமல் இருக்கவே, "உனக்குச் சந்தோசமாக இருக்கலாம்" என்று சட்டென்று கூறினான். இருப்பதோ நூறுவீதம் சிங்களவர்களைக் கொண்ட இடம். தொழிற்சாலையில் என்னைத்தவிர இன்னொரு தமிழர் மருந்துற்கேனும் இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் எவராலும் தடுத்துவிடமுடியாது, அப்படியிருக்க நடந்தது குறித்து சந்தோசப்படுகின்றேன் என்று எப்படிக் கூறமுடியும்? ஆகவே, "இல்லையில்லை, அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை" என்று வேண்டுமென்றே பொய்கூறினேன். சிறிது நேரத்திலேயே கட்டுநாயக்காத் தாக்குதல் குறித்த செய்தி தொழிற்சாலையெங்கும் பரவிவிடவே, நான் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்து விட்டேன்.
  22. சுமார் ஒருவருடம் முடிவடைந்த பின்னர் என்னுடன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற நண்பனான பிரபாகரனையும் அவ்வேலைத்தளத்தில் இணைத்துவிட்டேன். இயல்பாகவே அதிகம் பேசத் தயங்கும் அவன், அத்தொழிற்சாலையில் எவருடனும் அதிகம் பேச்சுக்கொடுப்பதில்லை. தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துவிடுவான். இதனாலேயே அவன் மீது அங்கு பணியாற்றிய சில சிங்களப் பொறியியலாளர்களும், பெரும்பாலான தொழிலாளர்களும் சந்தேகப் படத் தொடங்கினர். அவனது பெயரும் பிரபாகரன் என்று தெரிந்துவிடவே ஏதோ விடுதலைப் புலிகளின் தலைவரே அங்கு வேலைக்கு வந்து இணைந்திருப்பதாக அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ? அவன் குறித்து என்னிடம் தொடர்ச்சியாக கேள்விகேட்கத் தொடங்கினார்கள். அவனை எப்படி உனக்குத் தெரியும்? ஏன் எம்முடன் பேசமாட்டேன் என்கிறான்? ஏன் எப்போது பார்த்தாலும் கண்களை முழுசுவது போல வைத்திருக்கிறான்? இவனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பதே அவர்களின் கேள்விகளாக இருந்து வந்தது. சிலர் வெளிப்படையாகவே அவனைக் கொட்டியா என்று அழைக்கத் தொடங்கினார்கள். சிலவேளைகளில் மனமுடைந்து பேசுவான். எதுக்கடா இங்கே வந்தேன் என்று இருக்கிறது என்றும் கூறுவான். அந்தச் சூழலில் அவனால் நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உனக்குச் சிங்களம் தெரியும், அதனால சமாளிக்கிறாய், என்னால முடியாது" என்று சொல்லிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவனது சகோதரியொருவர் ஜேர்மனியிலிருந்து அவனை அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். சில மாதாங்களிலேயே அவனுக்கான விசா கிடைத்தவுடன், எதுவுமே கூறாது வேலையை விட்டு விட்டுச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு வேலையினை உதறித்தள்ளிவிட்டுச் சென்றமையானது நிர்வாகத்தில் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக எனது நண்பன் என்றபடியினால் என்மீதே அவர்களின் கேளவிக்கணைகள் வந்து வீழ்ந்தன. சிலர் அவனைப் புலிகளின் உறுப்பினர் என்று நம்புமளவிற்கு வதந்திகள் பரவத் தொடங்கியிருந்தன.
  23. இலங்கை காவல்த்துறையும் நானும் காலம் : 2000 முதல் 2002 வரை இடம் : பிலியந்தலையிலிருந்து கட்டுப்பெத்தை வரையான பயணப்பாதை 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையின் பட்டக்கத்தரை எனும் பகுதியில் அமைந்திருந்த ஈஸ்வரன் சகோதரர்கள் நிறுவனத்தினதும் இந்தியாவின் நில்க்கமால் நிறுவனத்தினதும் பிளாத்திக்கு தளபாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளனாகப் பணியாற்றி வரத் தொடங்கினேன். தற்போது நூற்றுக்கு நூறு வீதம் சிங்களவர்களை மட்டுமே கொண்ட அப்பிரதேசத்தில் 1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது அப்பகுதியில் வேலை நிமித்தம் வாழ்ந்துவந்த தமிழர்கள் தாக்கப்பட்டதாகவும், அத்தொழிற்சாலையில் பிற்காலத்தில் தொழிலாளர்களாகவும், வாகன ஓட்டுனர்களாகவும் இணைந்துகொண்ட அப்பகுதிச் சிங்களவர்கள் கலவரத்தின்போது தமிழர் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் எனக்கு முன்னர் அத்தொழிற்சாலையில் பணியாற்றி, பின்னர் கனடா சென்றிருந்த தமிழ் நண்பர் ஒருவர் கூறியிருந்தார். ஆகவே மிகுந்த அவதானத்துடனேயே அப்பகுதிக்குச் சென்றுவந்தேன். என்னைப்போலவே இன்னொரு தமிழ்ப் பொறியியலாளரும் கூடவே அங்கு பணியாற்றி வந்தார். ஆறு பொறியியலாளர்களால் வழிநடத்தப்பட்டு வந்த அத்தொழிற்சாலையில் சுமார் 60 வரையான சிங்களத் தொழிலாளிகள் பணியாற்றி வந்தார்கள். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே அவர்களுக்கு இருக்கும் கர்வம், நான் தமிழ‌ன் என்று தெரிந்திருந்தமையினால் இரட்டிப்பாகியிருந்தது எனக்கு நன்கு புரிந்தது. வேலை நிமித்தம் அவர்களுடன் பேசும்போது அதட்டலான தொனியில் பேசுவதும், நான் கூறும் வேலைகளை செய்ய மறுப்பதும் சிலவேளைகளில் நடப்பதுண்டு. "நீ வேண்டுமானால் இத்தொழிற்சாலையில் நடத்துனராக இருக்கலாம், ஆனால் நீ எனது வீதியினூடாகத்தான் ஒவ்வொருநாளும் இங்கு வந்து செல்லவேண்டும் என்பதை மறந்துவிடாதே" என்று அதட்டும் அள‌விற்கு அவர்களின் போக்கு இருந்தது. பெரும்பாலான சிங்களத் தொழிலாளிகள் தாமுண்டு, தம் வேலையுண்டு என்று இருந்துவிடுபவர்கள். ஆனால், பலர் வெளிப்படையாகவே இனவாதம் கக்கினார்கள். அதுவும் தமிழ்ப் பொறியியலாளர் என்று தெரிந்ததும் அவர்களின் இனத்துவேஷம் வெளிப்படையாகவே தெரிந்தது.
  24. 2006–2009 காலகட்டத்தில், குறிப்பாக இறுதி கட்டத்தில் நடைபெற்ற Sri Lankan Civil War ன் போது, அமெரிக்காவைவிட ரஷ்யா இலங்கை அரசுக்கு நேரடி இராணுவ உதவியை அதிகமாக வழங்கியது. ஆனால் முழுப் படம் சற்று விரிவானது. 🇷🇺 ரஷ்யா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியது. United Nations இல் இலங்கைக்கு தூதரக ஆதரவு வழங்கியது, குறிப்பாக இலங்கை மீது மேற்கத்திய நாடுகள் முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டது. சீனாவுடன் சேர்ந்து, இந்தப் போர் ஒரு உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தது. 🇺🇸 அமெரிக்கா Liberation Tigers of Tamil Eelam (LTTE) அமைப்பை 1997 முதல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. ஆரம்ப ஆண்டுகளில் சில பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் நுண்ணறிவு ஆதரவும் வழங்கியது. ஆனால் போரின் இறுதி கட்டத்தில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து பொதுவாக விமர்சித்தும், தற்காலிக சமாதானம் மற்றும் விசாரணைகளை வலியுறுத்தியும் இருந்தது. மொத்த மதிப்பீடு 2008–2009 இறுதி இராணுவ நடவடிக்கைகளின் போது நேரடி இராணுவ உதவி என்ற கோணத்தில் பார்க்கும்போது, அமெரிக்காவைவிட ரஷ்யா (மேலும் சீனாவும்) அதிக ஆதரவு வழங்கியது. மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மிகவும் தாக்கம் செலுத்தியவை. 2022 முதல் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளும் அழிவுகளும் முதன்மையாக ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க எடுத்த முடிவின் விளைவாகும். 2022 பிப்ரவரியில் Russia, Ukraine மீது முழுமையான இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய நாடே அதனால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு ஆகியவை பொதுமக்கள் மற்றும் இராணுவ உயிரிழப்புகளுக்கும் கட்டமைப்பு சேதங்களுக்கும் நேரடி காரணங்களாக உள்ளன. அமெரிக்காவின் பங்கு என்ன? United States உக்ரைனை ஆக்கிரமிக்கவில்லை. இராணுவ உதவி (ஆயுதங்கள், பயிற்சி, நுண்ணறிவு தகவல்) நிதி உதவி ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் (sanctions) தூதரக ஆதரவு ஆகியவற்றினை அது வழங்கியது இந்த உதவி உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மறுபுறம், நேட்டோ விரிவாக்கமும் அமெரிக்காவின் புவியியல்-அரசியல் நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது: புவியியல்-அரசியல் பதற்றங்கள் சூழலை உருவாக்கியிருக்கலாம். ஆனால் போர் தொடங்கும் இறுதி முடிவு ரஷ்யா தலைமையால் எடுக்கப்பட்டது. நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை தூண்டியதாக யாராவது நினைத்தாலும், அதனால் தாக்குதலைத் தொடங்கிய நாட்டின் பொறுப்பு வேறு நாட்டிற்கு மாற்றப்படாது. “அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக உக்ரைன் விலை செலுத்துகிறதா?” உக்ரைன் ஒரு மிகப் பெரிய விலையைச் செலுத்துகிறது, காரணங்கள்: அது ஒரு சுயாட்சியுடைய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையில் சிக்கியிருப்பது ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கியமான நிலைப்பகுதியாக இருப்பது வரலாற்று தொடர்புகள் ரஷ்யாவுடன் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பாவை நோக்கிச் சென்றது ஆனால் உடனடி மற்றும் நேரடி அழிவுகளுக்கான காரணம் ரஷ்யா தொடங்கிய போரே — அமெரிக்காவின் “ஆதிக்கம்” அல்ல.
  25. இப்படியே வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திக்கச் செல்வதும், வடையும் கோப்பியும் அருந்திவிட்டு வருவதும் தான் நாம் காலம் காலமாகச் செய்வது. இதனால் யாருக்கு என்ன இலாபம்? இங்கிலாந்தும் எதுவும் செய்யப்போவதில்லை, அமெரிக்காவும் செய்யப்போவதில்லை, இந்தியாவும் செய்யப்போவதில்லை. இவ்வாறான சந்திப்புக்கள் எல்லாமே தமிழ்க் கட்சிகள் "நாமும் இருக்கிறோம்" என்பதை தமிழ்ச் சனத்திற்குக் காட்ட நடத்தப்படுபவைதான். இதனால் ஆன பயன் எதுவும் இல்லை. ஏனென்றால் சிங்களத்தை மீறி, அவர்களை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை வெளிநாடுகளிடம் வைக்கப்போவதுமில்லை, வெளிநாடுகளும் அவற்றைக் கேட்கப்போவதில்லை. அரசியலில் உதிரிகளாகச் சிதறிக் கிடந்தபடி, பேரினவாதிகளை மடிக்குள் வரவிட்டு விட்டு இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சென்று பார்த்துப் படமெடுத்துப் போடுவதால் மட்டும் எதுவுமே ஆகிவிடாது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட எவரிடமாவது இதன் மூலம் தமிழினத்திற்குச் சார்பான துரும்பைத்தன்னும் நகர்த்த முடிந்ததா என்று கேளுங்கள். அப்படியில்லை என்றால் எதற்காக இப்படியான சந்திப்புக்களில் கலந்துகொள்கிறீர்கள் என்றாவது கேளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.