Everything posted by ரஞ்சித்
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இதுதான் உண்மை போலத் தெரிகிறது. அமெரிக்காவின் விசேட வான்வழிப் படையினர் ஹோர்முஸ் பகுதியை அடைவதற்கான கால அவகாசத்திற்காகவே தம்பர் இதைச் செய்ததாக பலர் கூறுகிறார்கள். முன்னர் குறிப்பிட்டவாறு கார்க் தீவினையல்லாமல் வேறு ஒரு தீவான அபு முசாப்பிலேயே அமெரிக்கப் படைகள் தரையிறங்கலாம் என்றும் கூறுகிறார்கள். இதன்பின்னர் ஈரான் ராணுவத்தின் உண்மையான வலிமையினைக் காண முடியும். பார்க்கலாம்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
உலக சந்தையில் எரிபொருளின் விலையேற்றமும் அதனால் ஏற்பட்டுவரும் பொருளாதாரச் சிக்கல்களும் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றன. போர் தொடங்குமுன்னர் ஒரு லீட்டர் ஒரு டொலர் அறுபது சதத்திற்கு விற்கப்பட்ட டீசலை நான் இன்று மூன்று டொலர்கள் 20 சதங்கள் கொடுத்து வாங்குகிறேன். இரு மடங்கைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. இதனோடு பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த பொருட்களின் விலைகள் சடுதியாக 50 சதத்திலிருந்து ஒரு டொலர்கள் வரை அதிகரித்திருக்கிறது. இது போதாது என்று வட்டி வீதத்தினை குறைந்தது இரு முறையாவது அதிகரிக்கவேண்டி நேரிடும் என்று அவுஸ்த்திரேலிய மத்திய வங்கியின் ஆளுனர் எதிர்வு கூறுகிறார். நிலைமை இப்படியிருக்கிறது. ஆனாலும், இப்போர் ஆரம்பிக்கப்பட்டமைக்கான சில காரணங்கள் இருக்கின்றன. அவையாவன, ஈரான் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட வேண்டும், நீண்டதூர ஏவுகணை உற்பத்தியைக் கைவிடவேண்டும், இஸ்ரேலினைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதக் குழுக்களுக்கான தனது நிதி, ஆயுத மற்றும் தார்மீக ஆதரவினை கைவிடவேண்டும் என்பன. ஆனால், இவை எவற்றையும் தான் கைவிடப்போவதில்லை என்று ஈரான் கூறுவதாலேயே போர் ஆரம்பித்தது. முன்னர் 2000 கிலோமீட்டர்கள் பாய்ந்துசென்று தாக்கும் ஏவுகணைகளுடன் நிறுத்திக்கொள்வேன் என்று கூறிய ஈரான், இரு நாட்களுக்கு முன்னர் சுமார் 4000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் இரண்டினை இந்துசமுத்திரத்தின் டியேகோகார்சியா தீவில் அமைந்திருக்கும் இங்கிலாந்து - அமெரிக்க கூட்டு இராணுவ தளம் மீது ஏவியிருக்கிறது. ஒரு ஏவுகணை பாதி வழியில் தானாக வீழ்ந்துவிட, இரண்டாவது அமெரிக்கக் கடற்படையினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஆக, ஈரான் தனது ஆயுத பெருக்கத்தை நிறுத்தப்போவதில்லை என்பதுடன் இஸ்ரேலினைத் தொடர்ச்சியாக அழிக்கும் தனது நோக்கத்தினையும் கைவிடவில்லை என்பது உறுதியாகிறது. போதாக்குறைக்கு தான் அழிக்கப்பட்டால், உலக பொருளாதாரத்தையும் சேர்த்து அழித்துச் செல்வேன் என்றும் சபதமிட்டிருக்கிறது. போர் பெருமளவு தூரத்தினைக் கடந்து வந்துவிட்டது. சீன - ரஸ்ஸிய உதவியினால் இன்றுவரை தாக்குப்பிடிக்கும் ஈரானின் முல்லாக்களும், அவர்களின் இராணுவ வல்லமையும், அணுவாயுதக் கனவும் முற்றாக அழிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் எனும் நாட்டிற்கு மட்டுமல்லாது, மொத்த உலகிற்கும் ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் இருப்பு ஆபத்தானது. ஆகவே போர் தொடரப்பட்டு, ஈரான் முல்லாக்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, அயல்நாடுகளுக்கும் உலகிற்கும் ஆபத்தில்லாத ஈரான் உருவாகும்வரை சண்டை தொடரப்படுதல் அவசியம். எதிர்கால மத்திய கிழக்கும், மொத்த உலகும் அமைதியை அடைய வேண்டுமென்றால் இப்போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முழுமையான வெற்றியுடன் முடிக்கப்படுதல் அவசியமானது. அதற்கான விலையினை உலகம் செலுத்துவதும் தவிர்க்க முடியாதது.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
இங்கு சிலர் கூறுவதுபோல யுத்த நிறுத்தம் இடம்பெறவில்லை. யுத்தம் 4 ஆவது வாரமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், ஹோர்மூஸ் நீரிணையினால் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குவதை 48 மணி நேரத்திற்குள் நிறுத்தாவிட்டால் ஈரானின் எண்ணெய் மற்று எரிவாயு உற்பத்திநிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இத்தாக்குதலே 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட நடக்கவிருக்கும் அல்லது நடந்துகொண்டிருக்கும் பேச்சுக்களுக்குக் கால அவகாசம் கொடுப்பதற்காகவே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய ஈரானிய நிலைகள் மீதான தாக்குதல்கள் வழமைபோல அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. இஸ்ரேல் வழமைபோல ஈரானின் இராணுவ இலக்குகள் மீதும் அரச - இராணுவத் தலைமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்திக்கொண்டே இருக்கிறது. ஈரானும் அயல் நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறதுது. அமெரிக்கா யுத்தத்திலிருந்து பின்வாங்காது விட்டாலும், இச்சண்டைகளில் இருந்து இராஜதந்திர ரீதியில் விலகிக்கொள்வதற்கான ஏதுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இதனாலேயே பேச்சுக்களுக்கு இடம் விடும்வகையில் சில தாக்குதல்களை மட்டும் பிற்போட்டிருக்கிறது அமெரிக்கா. போர் நிறுத்தப்படவில்லை. ஈரான் மீதான இராணுவ அழுத்தங்களை அது தொடர்ச்சியாக பிரயோகித்து வரும் வேளை, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முற்றான உதவிகளை வழங்கியேவருகிறது. மேலும் போர் ஆரம்பிக்கப்படுவதற்கான காரணங்களாக தான் முன்வைத்தவற்றை விடாப்பிடியாக இன்றுவரை கூறியே வருகிறது. ஆக, தொடர்ச்சியான கடும்தாக்குதல்களை சிறிதுகாலத்திற்கு மட்டுப்படுத்திவிட்டு, விட்டுக்கொடுக்காத பேச்சுக்களில் ஈடுபடவே அமெரிக்கா விரும்புகிறது. இப்போரைப் பொறுத்தவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் இராணுவ வல்லமையினனையும், இராணுவக் கட்டுமானங்களையும் கணிசமாக அழித்துவிட்டன. ஈரானின் ஏவுகணைச் செலுத்திகள், ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்புத் தொலிற்சாலைகளையும் கணிசமானளவு அழித்திருக்கின்றன. ஈரானைப் பொறுத்தவரை அயலில் உள்ள வளைகுடா நாடுகளின்மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறது. அமெரிக்கத் தளங்கள் மீதும், தூதரகங்கள் மீதும் கணிசமான தாக்குதலை நடத்தியிருக்கின்றது. இதுவரையில் 13 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதுடன் பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது 10 அமெரிக்க விமானங்கள் முழுவதுமாகவோ பகுதியாகவோ சேதமடைந்திருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஹோர்மூஸ் நீரிணையூடாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதலினை நடத்தி அப்பகுதியூடான கப்பற்போக்குவரத்தினை முற்றாகத் தடுத்து வைத்திருக்கிறது. தனது இராணுவ நிலைகள், கட்டுமானங்கள் கடுமையாக அழிக்கப்பட்டிருக்கும்பொழுதிலும், தீவிரமாக எதிர்த்தாக்குதலினை நடத்தியே வருகிறது. இருபக்கமும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன், எத்தரப்புமே அறுதியான வெற்றியினை இதுவரை பெறவில்லை. அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் தொழிநுட்ப பலத்தினால் அவர்களின் கை ஓங்கியிருப்பினும் ஈரானும் தொடர்ந்தும் போரிட்டே வருகிறது. அமெரிக்கா தனது தீவிரத் தாக்குதல்களை மட்டுப்படுத்தியிருப்பதாகக் கூறினும், இஸ்ரேல் தனது தாக்குதல்களை தொடர் தீவிரத்துடன் நடத்தியே வருகிறது. ஈரானுடன் அமெரிக்கா பேச்சுக்களில் ஈடுபட்டாலும்கூட தமது தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்றே நெத்தன்யாகு அறிவித்திருக்கிறார். இப்போரின் ஊடாக ஈரானின் இராணுவ வல்லமையினை முற்றாக அழித்துவிடவும், தன் மீது ஈரான் செலுத்தும் பாதுகாப்பு அச்சுருத்தலினை நிரந்தரமாகவே அகற்றிவிடவும் இஸ்ரேல் முயல்கிறது.
-
90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
நாங்கள் சோசலிசம், சோசலிசம் என்று இந்திய , ரஸ்ஸிய கொள்கைகளின் பின்னால் ஓடியதால் அமெரிக்காவிற்கு எதிரானவர்களாக அடையாளம் காணப்பட்டோம். அதன் விளைவே இலங்கையரசு அமெரிக்காவை எமக்கெதிராகப் பாவித்தமை. அமெரிக்காவுடன் அனுசரித்துப் போகவேண்டும் என்கிற தெளிவு எமக்கு ஏற்பட்டபோது எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது. எமது கையில் இருந்த விடுதலைப் போராட்டத்தைக் காவுகொடுத்துவிட்டு இன்று எவரதோ போராட்டத்திற்காக, எவரதோ அதிகாரத்திற்காக, எவரதோ விடிவிற்காக, எவரதோ பாதுகாப்பிற்காக பிரிந்து நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அரசியலில் ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் நாம் எம்முடன் சம்பந்தப்படாத பிணக்குகளில் இடதுசாரியென்றும், வலதுசாரியென்றும் பிரிந்துநின்று எம்மை அடையாளம் காணப் பார்க்கிறோம். நாம் இழந்தவை ஏராளம். இவை எதனையும் மீட்பதற்கான மனோநிலையோ, சூழ்நிலையோ இல்லாத கையறு நிலையில் நானும் நீங்களும் நின்றுகொண்டிருக்கிறோம்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
பெரும்பாலான தமிழ் யூடியூப்பர்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர்கள் தாம் பேசுவது தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தமிழ்பேசும் இஸ்லாமியர்களைக் குளிர்விக்க இப்படிப் பிதற்றுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேல் சுக்குநூறாகியது, மரண அடி, அழிந்தான் யூதன், அமெரிக்கா பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறது, அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பல்களை ஈரானின் ட்ரோன்கள் நிர்மூலமாக்கின, இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாகு ஈரானினால் துல்லியமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் விரும்பியவாறு தலைப்பிட்டு தமது மனம் போன போக்கில் எடுத்துவிடுகிறார்கள். இதிலும் சில ஈழத்தமிழர்கள் மதில்மேல் பூனைபோல இருந்துகொண்டு ஒரு நாள் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் மறுநாள் ஈரானுக்குச் சார்பாகவும் பேசுகிறார்கள். தமிழ் அடியான் என்கிற யூடியூப்பர் ஒருநாள் அமெரிக்காவை போர்க்களத்தில் இருந்து ஈரான் அகற்றிவிட்டது, அமெரிக்கப் படைகள் முற்றாக மத்திய கிழக்கில் இருந்து காணமலாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வெளியிட்டார். மறுநாள் அமெரிக்காவின் பாரிய நெடுந்தூரக் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் பல நிலைகளைத் தாக்கியழித்தபோது, தான் முதல்நாள் கூறியதற்கு நேரெதிராகப் பேசியிருந்தார். நான் இதுகுறித்து அவரிடம் கேள்வவி எழுப்பியபோது சில மணிநேரத்தில் எனது பதிவு அவரால் நீக்கப்பட்டது. இப்படித்தான் தமிழ் யூடியூப்பர்களின் நிலை. இவர்கள் வெளியிடும் காணொளிகளை உண்மையென்று நம்பும் எம்மவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பது நலம். 😊
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஈரானின் கார்க் தீவினை அமெரிக்கா கைப்பற்றலாம் என்றும், ஈரானின் கரையோரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா அழிக்கலாம் என்றும், யுரேனியத்தினை கைப்பற்ற அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவு இறக்கப்படாலாம் என்றும் கூறுகிறார்கள். இவற்றுள் ஏதோவொன்றோ அல்லது அனைத்துமோ நடக்க சந்தர்ப்பம் இருக்கிறது. போர் எதிர்பார்க்கப்பட்டதுபோல விரைவில் முடிவடையாது இழுபட்டுச் செல்வது ட்ரம்ப்பின் அரசு மீது கடுமையான அழுத்தத்தினைச் செலுத்துகிறது. ஈரானின் அரச, இராணுவ தலைமைகள் தொடர்ச்சியாக ஆழிக்கப்பட்டு வந்தாலும்கூட மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நிலைகள், இஸ்ரேல், ஏனைய வளைகுடா நாடுகள் மீதான் தாக்குதல்களை ஈரான் தொடர்ச்சியாகவே நடத்திவருகிறது. ஈரானின் தாக்குதல் வீரியம் குறைந்துவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும் ஈரானின் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது. ஆகவே நான் மேற்கூறிய திட்டங்களில் ஒன்றினையோ அல்லது அனைத்தையுமோ மிக விரைவில் ஆரம்பிக்கவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது. கார்க் தீவும் ஈரானிற்குச் சொந்தமான வர்த்தக கட்டமைப்புக்கள் கொண்டிருக்கும் இன்னொரு கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரமும் இலக்குவைக்கப்பட்டால் ஈரான் யுத்த நிறுத்தப் பேச்சுக்களுக்கு இணங்குவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது என்று மத்திய கிழக்கின் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் (ஆதாரம் : சி என் என்) நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே புரிந்தது. என்றாலும், சும்மா, பவுடிக்கிச் சுட்டிக் காட்டலாம் என்று!
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரானில் நடந்துவரும் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் செலவு எனும் தலைப்பைப் பார்த்தபோது எனக்கு மனதில் வந்த ஒரே கேள்வி, வெறும் மூன்று வாரத்திற்குள்ளாகவே அமெரிக்கா 11 பில்லியன் டொலர்களை செலவழித்து விட்டதென்றால், உக்ரேனில் நான்கு வருடங்களாக பல இலட்சம் இராணுவத்தினரை நேரடியாக அனுப்பி முற்றான ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் ரஸ்ஸியா எவ்வளவு பணத்தை விரயமாக்கியிருக்கும் என்பதுதான். ஆகவே இதுகுறித்துத் தேடியபோது எனக்குக் கிடைத்த தகவல்களை இங்கே பகிர்கிறேன். 💰 1. நேரடி இராணுவ & செயல்பாட்டு செலவு ஆரம்பத்தில் மாதத்திற்கு சுமார் $3–4 பில்லியன் ~4 ஆண்டுகளுக்கு மொத்தம்: ~$150 பில்லியன் ரஷ்யாவின் ஆண்டு போர்செலவு தற்போது: வருடத்திற்கு சுமார் $100+ பில்லியன் (2025) 👉 வெறும் போராட்ட செலவு: ~$150–300 பில்லியன்+ 🪖 2. விரிவான நேரடி போர் செலவு (ஆயுத இழப்புகள், போக்குவரத்து, பராமரிப்பு போன்றவை உட்பட) சுமார் $450+ பில்லியன் சில மதிப்பீடுகள்: ~$550 பில்லியன் 👉 பொதுவாக கூறப்படும் மொத்த நேரடி செலவு: $450–550 பில்லியன் 📉 3. முழுமையான பொருளாதார தாக்கம் (தடைச் சட்டங்கள், வர்த்தக இழப்புகள், முதலீட்டு குறைவு, வேலைவாய்ப்பு பாதிப்பு போன்றவை) அதிகபட்சமாக ~$2.5 டிரில்லியன் வரை தாக்கம் இருக்கலாம் 👉 இது உண்மையான நீண்டகால பொருளாதார சுமையை காட்டுகிறது ⚖️ முடிவு (சுருக்கமாக) இராணுவ செலவு மட்டும்: ~$150–300 பில்லியன் மொத்த நேரடி போர் செலவு: ~$450–550 பில்லியன் முழு பொருளாதார தாக்கம்: ~$2+ டிரில்லியன் 🧠 முக்கிய குறிப்புகள் ரஷ்யா இந்தச் செலவுகளை சமாளிப்பதற்கு எண்ணெய் வருவாய் மீது பெரிதும் சார்ந்துள்ளது அதன் அரசாங்க செலவில் சுமார் 40% பாதுகாப்பு/போருக்காக செலவிடப்படுகிறது நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி இழப்பு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானின் அணு நிலைகள் மீது தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை. இப்போரினை முடிவிற்குக் கொண்டுவருமுன்னர் அவற்றினையாவது அழித்தால் சிறிது காலத்திற்காவது நிம்மதியாய் இருக்கலாம். அதுகூட இல்லையென்றால், இவ்வளவு பொருட்செலவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கமெய்னி எலி கொல்லப்பட்டதைத் தவிர வேறு நல்விடயங்கள் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஸ்ஸியாவும் சீனாவும் ஈரானின் எண்ணெய்க்காகவே இப்போரில் அழிக்கப்பட்ட ஈரானிய ஆயுதங்களை புதுப்பித்துக் கொடுக்கும் என்று நம்பலாம். இஸ்லாமிய அடிப்படைவாத கொடுங்கோலாட்சியை அகற்றுதல் அணுவாயுத உற்பத்தியை தடுத்து நிறுத்தல் சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கான உதவியை நிறுத்தல் நீண்டதூர ஏவுகணை உற்பத்தியை நிறுத்தல் என்று இவை எதுவுமே இன்னமும் நடைபெறவில்லை. பார்க்கலாம், இஸ்ரேல் இருக்கிறது!
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்கிற அழுத்தம் ட்ரம்பின் மேல் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. உயர்ந்து செல்லும் மசகு எண்ணெயின் விலை, அது உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம், ஹோர்முஸ் நீரிணையினை ஈரான் தனது சகட்டுமேனித் தாக்குதல்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை என்பன எல்லாம் சேர்ந்து ட்ரம்பை யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதாகவே தெரிகிறது. இஸ்ரேல் போர் தொடரப்பட்டு, ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் அரசு கவிழும் வரை நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினாலும், அமெரிக்கா இதிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உலக பொருளாதாரம், அமெரிக்கா மீதான அழுத்தம், இஸ்ரேலின் விருப்பு என்பவற்றிற்கு அப்பால் இப்போர் முடிவேதுமின்றி நிறுத்தப்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படப்போகும் மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதுதான் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் ஆட்சியை அகற்றவேண்டி விரும்பிய, போராடிய, அமெரிக்க - இஸ்ரேல் நடவடிக்கைக்கு ஆதரவாக நின்ற ஈரானிய மக்கள். நேற்றிலிருந்து ஈரானிய அரச தொலைக்காட்சி சில நபர்களைத் தொடர்ச்சியாக பேட்டி கண்டு வெளியிட்டு வருகின்றன. ஈரானிய காவல்த்துறை அதிகாரிகள், இராணுவ தளபதிகள், சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் என்று பலர் இதில் அடக்கம். அவர்கள் எல்லோரும் கூறும் செய்தி இதுதான், "எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போரும் எதிரிகளே, ஆகவே அழிக்கப்படுவீர்கள். எமது வீரர்கள் துப்பாக்கிகளின் விசை அழுத்தியில் விரலை வைத்திருக்கிறார்கள், எந்நேரத்திலும் அவர்கள் உங்களைச் சுட்டுக் கொல்லத் தயங்கப்போவதில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் ஆதரவாக நிற்பவர்களை அடையாளம் கண்டு கொல்லப்போகிறோம், அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளியுலகில் இருந்தாலும் சரி, அவர்களின் சொத்துக்களை நாம் கையகப்படுத்துவோம், உங்களின் தாய்மார்களை உங்களின் மரணத்திற்காக வருந்தச் செய்வோம், தயவுதாட்சண்யம் இன்றிக் கொல்வோம்...." இப்படி ஏகப்பட்ட அச்சுருத்தல்களை அரச தொலைக்காட்சியில் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்கா போரை நிறுத்துவதால் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் கொடுங்கோலாட்சி நீடிக்கப்பட வாய்ப்புக்கள் பிறந்திருக்கின்றன. தமது அரசு கவிழப்போவதில்லை எனும் மமதையில் இந்த அச்சுருத்தல்களை கொடுங்கோலாட்சியாளர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மாபெரும் மக்கள் படுகொலை அரங்கேரவிருக்கிறது. ஆனாலும் என்ன, அமெரிக்கா இடைநடுவே கையைக் கழுவிவிட்டாலும்கூட, தனது இருப்பிற்காகத் தொடர்ச்சியாகப் போராடிவரும் இஸ்ரேல் நிச்சயம் ஈரானின் முல்லாக்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் முல்லாக்களின் தலைமையினைக் குறிவைத்து அழிக்கும் என்பதை நம்பலாம்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல். ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது. பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார். பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது. இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது. இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உங்களுக்கு எனது கேள்விகள் புரியவில்லை என்பது உறுதியாகிறது. ஈரான் பெண்களை அடக்கியாள்வது போல வத்திகானும் பெண்களை அடக்கியாள்கிறதா என்று கேட்டால், "ஈரானின் மீது மட்டுமே பழியைப் போட முடியாது" என்கிறீர்கள். எனது கேள்விக்குப் பதில் இதுவல்லவே? ஒன்றில், "ஆம் , வத்திகானும் பெண்களை அடிமைப்படுத்துகிறது", அல்லது, "இல்லை, வத்திக்கான் பெண்களை அடிமைப்படுத்தவில்லை" என்றுதான் உங்கள் பதில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், வழமைபோல் இங்கும் குழப்பி விட்டிருக்கிறீர்கள். மறுபடியும் அதே பித்தலாட்டமான பதில். ஈரானைப் போல் வத்திக்கானும் தனது நாட்டு மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளி கொடுங்கோலாட்சி புரிகிறதா என்று கேட்டால், "மேற்குத்தான் இதெல்லாவற்றையும் செய்கிறது" என்று பிதற்றுகிறீர்கள். ஒன்று செய்யுங்கள். முதலில் நான் உங்களிடம் என்ன கேட்டேன் என்பதை கவனமாகப் படியுங்கள். பின்னர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள். முடியவில்லையென்றால், சிரமத்தைத் தவிருங்கள்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மறுபடியும் அதே மாடும் மரமும். வத்திக்கான் பற்றிப் பேசினால், அமெரிக்காவும், பிரான்ஸும், ஜேர்மனியும் ஆயுதம் விற்கின்றனவே என்கிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்ட கேள்விகள் புரியவில்லையா, அல்லது உங்களின் பதில்களுக்கு ஏற்ற வகையில் எனது கேள்விகள் அமையவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. சரி, பரவாயில்லை, நீங்கள் கூறுவது இதுவாகத்தான் இருக்கும் என்று குத்துமதிப்பில் பதிலளிக்கிறேன். வத்திகான் என்பது தனியான ஒரு நாடு. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசரும் அவரது உதவிக் குருக்களும் வசிக்கும் ஒரு சிறிய நாடு. இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் வெறும் 0.5 சதுரக் கிலோமீட்டரே கொண்ட சின்னஞ்சிறிய இறையாண்மையுள்ள ஒரு நாடு. அவரது பாதுகாப்பிற்கென்று ஒரு சிறிய பொலீஸ் படையினை அவர்கள் வைத்திருக்கிறார்கள். வத்திக்கான் ஆயுதங்களைத் தயார் செய்வதில்லை. அவற்றை ஏற்றுமதி செய்வதில்லை. ஆயுதங்களையோ குண்டுகளையோ மக்கள் மீது தூவுவதும் இல்லை. நீங்கள் வத்திகான் நாடு, அமெரிக்கா ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஆள்வதாக நினைத்தால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை என்னவென்றால் இந்நாடுகளை வத்திக்கான் கட்டுப்படுத்துவதுமில்லை, இந்நாடுகள் வத்திக்கானைக் கட்டுப்படுத்துவதுமில்லை. *** ஈரானிய அடக்குமுறையாளர்கள் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும், இஸ்ரேலினை சின்னச் சாத்தான் என்றும் அழைப்பது பற்றியே எனது கேள்வி அமைந்திருந்தது. அதாவது ஈரான் இப்படி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அழைப்பது போல வத்திக்கானும் எந்த நாட்டையாவது "சாத்தான்" என்று அழைக்கிறதா என்று கேட்டால், "சாத்தான் எனும் சொல் கிறீஸ்த்தவத்தில் இருக்கிறது" என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்டது விளங்கவில்லை போலும், பரவாயில்லை, அதிகம் சிரமப்படாதீர்கள்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மறுபடியும் அதே மரக் கேள்வி. இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுதான் தனது ஒரே நோக்கம் என்று ஈரான் சொல்கிறது, ஆனால் வத்திக்கானுக்கு அப்படி எந்த நாட்டையும் அழிக்கும் நோக்கம் இல்லையென்று நான் கூறினால், பலஸ்த்தீனம் அரிக்கப்படுவது எனது கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறீர்கள். உங்களால் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லையென்றால் விட்டு விடுங்கள். பலஸ்த்தீனம் பற்றி வேறு ஒரு திரியில் நீட்டி விளக்கலாம். ஆக, வத்திக்கான் கிறீஸ்த்தவப் பயங்கரவாதிகளுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அயலில் உள்ள நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அந்நாடுகளை உலக வரைபடத்திலிருந்து நீக்கக் கோரி உசுப்பேற்றி வருகிறது என்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு உறுதியாகச் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம், ஆகவே தயவுசெய்து வத்திக்கான் பணம் அனுப்பி, அயல் நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் நாடுகளை இங்கே பட்டியலிட்டு விடுங்கள். இங்குள்ள அனைவருக்கும் அது பேருதவியாக இருக்கும்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஆம் , இது உண்மைதான். இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னரான காலத்தில் பல காலணித்துவ நாடுகள் விடுதலை பெற, அதுவரை ஆட்சிசெய்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆகவே இச்செயற்பாடுகள் தற்போது நடைமுறையில் இல்லை. ஆனால் ஈரான் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களை அடக்கியாளும் நடைமுறை இன்னமும் நடந்தே வருகிறது. மாட்டைப் பற்றி பேசலாம் என்றால், மாட்டை மரத்தில் கொண்டுவந்து கட்டிவிட்டு, சம்பந்தமேயில்லாமல் மரத்தைப்பற்றி பேசுகிறீர்கள். பரவாயில்லை, என்னால் முடிந்தளவில் பதில் தர முயல்கிறேன். நான் கேட்ட கேள்விகள் வத்திக்கான் பற்றியது. வத்திக்கான் அணுவாயுதம் வைத்திருக்கிறதா என்று கேட்டால், கிறீஸ்த்தவ நாடுகளிடம் இல்லையா என்று கேட்கிறீர்கள். வத்திக்கானும் கிறீஸ்த்தவ நாடுகள் ஒன்று என்று உங்களிடம் சொன்னது யார்? அடுத்ததாக, கிறீஸ்த்தவ நாடுகள் என்று நீங்கள் குறிப்பிடும் நாடுகள் எவை? அவற்றிற்கும் வத்திக்கானிற்கும் என்ன சம்பந்தம்? வத்திக்கான் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா அல்லது இந்த நாடுகள் தான் வத்திக்கானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா? அமெரிக்கா கிறீஸ்த்தவ நாடென்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்யமுடியும்? பெரும்பாலான அமெரிக்கர்கள் நாத்திகர்கள். இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவையும் அப்படித்தான். ரஸ்ஸியா வத்திகானினால் கட்டுப்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை நீங்கள் தான் விளக்கவேண்டும். சீனாவோ இந்தியாவோ வடகொரியாவோ வத்திகானின் கட்டுப்பாட்டில் இல்லையென்று எனக்குத் தெரியும்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நான் யாரை கதாநாயகனாகக் கருதுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக மத அடிப்படைவாதத்தினால் தனது நாட்டு மக்களை அடக்கியாளும் ஒருவரை இல்லை என்பது எனக்குத் தெரியும். அப்படியானால் நான் ட்ரம்ப்பையோ அல்லது நெத்தென்னியாகுவையோ கதாநாயகனாக நினைக்கிறேனா என்றால், அப்படியுமில்லை. நடந்துவரும் இப்போரில் ஈரானின் மத அடிப்படைவாத அடக்குமுறையாளர்கள் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன. அதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னின்று செய்வதனால், அவர்களின் முயற்சிகளுக்கு அதரவாக எழுதுகிறேன். இதில் கதாநாயகத்தன்மை எதுவும் இல்லை. அறிவு எல்லோரதும் பிறப்புரிமை, சரி. கண்முன்னே நடைபெறும் அடிப்படைவாத அடக்குமுறையினை எதிர்ப்பதனால் நான் ஒரு பக்கவாதியாக உங்களுக்குத் தெரிந்தால் நான் என்ன செய்வது? இந்த விடயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஈரானின் மத அடிப்படைவாதிகளை ஆதரித்தும் (எதற்கென்ற தெளிவு சற்றும் இல்லாமல்), அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களை எதிர்த்தும் எழுதினால் நான் பக்கச்சார்பற்றவனான இருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? சரித்திரம், வரலாறு, தனிப்பட்ட அனுபவங்கள், நிகழ்காலச் சம்பவங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே ஒருவர் பல விடயங்கள் தொடர்பான தனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வருகிறார். இதனால் அவர் ஏதோ ஒரு பக்கத்திற்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கத்திற்கு எதிராகவும் கருத்துக்களைக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அப்படியில்லாமல், இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு, ஒரு பிரச்சினை தொடர்பாக எந்தவித பிரக்ஞையுமற்று, பக்கச்சார்பின்றி அவர் மாறவேண்டும் என்று நீங்கள் கேட்பது சரியானதா? ஒரு உதாரணத்திற்கு, இலங்கையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் தமக்கென்று ஒரு புரிதலினைக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்புரிதல் அவர்களின் கடந்தகால வரலாறு, அனுபவங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழர்கள் இவற்றினைக் கைவிட்டு, இனப்பிரச்சினையினைப் பக்கச்சார்பின்றி அணுகினால் ஒழிய நிலைத்து நிற்கமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா? ஒருவிடயம் தொடர்பாக தனியொருவர் கொண்டிருக்கும் எண்ணம் அவருக்கே தனித்துவமானது. அதனைக் கொண்டிருப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதனை கதாநாயக விம்பத்தின பின்னால் போகிறவர்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாமே?! ஒருவர் உலக விடயங்களை எந்தெந்த வழிகளில் அறிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் வாழ்நாளில் உங்களது அனுபவங்கள் மூலம் பல விடயங்களை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். சரி, உங்களுக்கு முற்பட்ட காலத்தில் நடந்த விடயங்களை, பழைய வரலாறுகளை, முன்னைய சரித்திரங்களை எப்படி அறிந்துகொண்டீர்கள்? அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கவில்லை. ஆகவே யாராவது ஒருவரின் வாய்மொழிமூலமோ அல்லது பத்திரிக்கைகள், நூல்கள், ஆவணங்கள் மூலமோதான் இதனை அறிந்துகொள்கிறீர்கள். அந்த வழியில்த்தான் இன்றைய செயற்கை நுண்ணறிவும் வருகிறது. இன்று உங்களுக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் நீங்கள் பிறக்கும்போது உங்களது மூளையில் பதியப்பட்டிருந்தனவா? அப்படியில்லை என்றால் எவ்வாறு, எங்கிருந்து அவற்றை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்?
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்தப்பட்டியலை இணைக்கும்போது சரித்திரத்தை அறிந்துதான் இணைத்தீர்களா என்று தெரியவில்லை. அப்படியில்லாமல் அவசரத்தில் எங்கோ கொப்பியடித்து இணைத்திருந்தால், அதுதொடர்பான சில வரலாற்றுத் தகவல்களை இங்கே உங்களின் கவனத்திற்கு இணைத்து விடுகிறேன். முதலாவது ஜப்பானின் படுகொலைகள், அதாவது அமெரிக்காவினால் தாக்கப்படும்வரை Approximate civilian deaths caused by Japanese wartime actions in Asia: China: 10–20 million Indonesia: 3–4 million Vietnam famine: 1–2 million Philippines: 500,000–1 million Other regions (Korea, Burma, Malaya, Singapore): hundreds of thousands Total estimate: 15–25 million civilian deaths இரண்டாவது ஜேர்மனி நடத்திய படுகொலைகள் Approximate civilian deaths caused by Nazi Germany: Soviet Union: 13–14 million Holocaust victims: ~11–12 million Poland (non-Jewish civilians): 2–3 million Balkans: 1–1.5 million Greece: 300,000–500,000 Western Europe: hundreds of thousands Total civilian deaths: ➡️ About 17–20 million people
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உலகிலேயே மனிதாபிமானம் மிக்க வல்லரசின் நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்ற ஒரு முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையொன்றின் விபரங்கள் கீழே. நம்புங்கள், வல்லரசு எனும் பொறுப்புணர்வுடனேயே இவை யாவும் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் (1939–1945) முடிவில், குறிப்பாக 1944–1945 காலத்தில், சோவியத் Red Army ஐரோப்பாவில் முன்னேறியபோது சில இடங்களில் பெரிய அளவில் பாலியல் வன்முறைகள் நடந்ததாக பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சரியான எண்ணிக்கையை நிரூபிக்க முடியவில்லை, ஏனெனில் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் மதிப்பீடு வரலாற்றாசிரியர்கள் கூறும் முக்கியமான மதிப்பீடுகள்: ஜெர்மனி – சுமார் 14 லட்சம் முதல் 20 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மதிப்பீடு. பெர்லின் நகரம் மட்டும் – சுமார் 1 லட்சம் பெண்கள். ஹங்கேரி (புடாபெஸ்ட்) – சுமார் 50,000 பெண்கள். ஆஸ்திரியா (வியன்னா) – சுமார் 70,000 – 1,10,000 பெண்கள். ரோமேனியா – சில ஆய்வுகள் 3 லட்சம் வரை சம்பவங்கள் நடந்ததாக கூறுகின்றன. செர்பியா / யூகோஸ்லாவியா – ஆயிரக்கணக்கில் இருந்து பத்தாயிரக்கணக்கில் சம்பவங்கள். ஐரோப்பா முழுவதும் மொத்தமாக வரலாற்று ஆய்வுகள் கூறும் மதிப்பீடு: சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பெண்கள் சோவியத் படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இது மேலும் உறுதியாக தெரியாதது. இருப்பினும் சில ஆய்வுகள் கூறுவது: ஜெர்மனியில் மட்டும் சுமார் 2,40,000 பெண்கள் பலாத்காரம், காயம், நோய் அல்லது தற்கொலை காரணமாக இறந்திருக்கலாம். பெர்லின் நகரத்தில் சுமார் 10,000 பெண்கள் பலாத்காரம் தொடர்பான காரணங்களால் இறந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மரணங்களில் அடங்குவது பலாத்காரத்தின் போது கொலை செய்யப்பட்டவர்கள் கடுமையான காயங்களால் இறந்தவர்கள் மனவேதனையால் தற்கொலை செய்தவர்கள் நோய்கள் அல்லது சிகிச்சையில்லாமை காரணமாக இறந்தவர்கள்
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உலகிலேயே அதிகம் மனிதாபிமானத்தைக் காக்கும் வல்லலரசு என்றவுடன் எனது மனதில் முதலாவதாக உதித்த நாடொன்றின் மனிதாபிமான நடவடிக்கைகளின் குறிப்பு. 1945க்கு பிறகு ரஷ்யா / சோவியத் நடவடிக்கைகளால் உயிரிழந்த பொதுமக்கள் (நாடு வாரியாக) நாடு சம்பவம் / போர் பொதுமக்கள் உயிரிழப்பு (மதிப்பீடு) Afghanistan Soviet–Afghan War (1979–1989) 562,000 – 2,000,000 பொதுமக்கள் Hungary Hungarian Revolution of 1956 சுமார் 2,500 பேர் Czechoslovakia Prague Spring invasion (1968) சுமார் 137 பொதுமக்கள் Lithuania Soviet suppression (1991 Vilnius events) சுமார் 14 பொதுமக்கள் Latvia Soviet crackdown (1991 Riga events) 5 பொதுமக்கள் Germany East German uprising suppression 300,000 +பேர் 240,000 பெண்கள் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டனர் Poland Soviet-backed repression (1945–1950s) ஆயிரக்கணக்கான கைது, நூற்றுக்கணக்கான மரணங்கள் China Sino-Soviet border conflict (1969) நூற்றுக்கணக்கானோர் Afghanistan தனிப்பட்ட படுகொலைகள் (உதா: Laghman, Kunduz) சில நூறு முதல் ஆயிரம் வரை சோவியத் ஒன்றியத்துக்குள் (Russia உட்பட) பொதுமக்கள் மரணங்கள் இடம் சம்பவம் மதிப்பீடு Soviet Union (உள்ளக அடக்குமுறை) Gulag, அரசியல் அடக்குமுறை மில்லியன் கணக்கில் (பல்வேறு ஆய்வுகள்) Chechnya First Chechen War (1994–1996) 30,000–50,000 பொதுமக்கள் Chechnya Second Chechen War (1999–2009) சுமார் 30,000 பொதுமக்கள் முக்கிய நாடுகள் – மொத்தம் (rough estimate) நாடு பொதுமக்கள் உயிரிழப்பு Afghanistan 0.6 – 2 மில்லியன் Hungary ~2,500 Czechoslovakia ~137 East Germany 300,000 Lithuania 14 Latvia 5 Chechnya (Russia) ~60,000–80,000
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்த கேள்விகளுக்கு முதலில் விடையளியுங்கள், பின்னர் தொடர்ந்து பேசலாம். 1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது? 2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது? 3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது? 4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது? 5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது? 6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது? அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது? அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது?
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ரஸ்ஸியாவின் மனிதாபிமானப் பட்டியலுடன் எமது சம்பாஷணையினை ஆரம்பிக்கலாம் அண்ணை. எங்கே அந்தப் பட்டியலை இங்கே இணையுங்கள் பார்க்கலாம்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Possible Vote Share Estimate (Analytical Scenario) Alliance / Party Estimated Vote % DMK-led alliance 43–47% AIADMK-BJP-allies 35–39% TVK + smaller allies 10–15% Others (NTK, AMMK, independents etc.) 2–6%
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் செய்வது மனிதகுலத்திற்கு மிகவும் அவசியமான களையெடுக்கும் நடவடிக்கையே. இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் உந்தப்பெற்று, இஸ்லாமியர் அல்லாதவரை அழிக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டுவரும் ஈரானின் அணுக்குண்டு எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனைச் செய்வதற்கு இஸாலாமிய அடிப்படைவாத காட்டாட்சி அழிக்கப்படுவதுதான் வழியென்றால், அதனைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. ஈரான் அணுவாயுத உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமே அணுவாயுத நிலைகளை அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல் எல்லைகளுக்கு அப்பால், நிலக்கீழ் சுரங்கங்களில் அது கட்டிக் காத்து வருவதே. கையில் கிடைக்கும் எவ்வாயுதத்தைக் கொண்டும் மதவெறியில் உந்தப்பட்டு "அல்லாகு அக்குபர்" என்று கோஷமிட்டபடி தன்னையும் அழித்து ஏனையவரையும் அழிக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளிடம் அணுவாயுதம் கிடைத்தால் என்னாகும் என்பதை ஈரானின் அபிமானிகள் சிந்திப்பது நல்லது. இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்தில் இருந்து அழிப்போம், அமெரிக்காவிற்கு மரணத்தைக் கொடுப்போம் என்று கங்கணம் கட்டிச் செயற்படும், இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, பணம் என்று வாரியிறைக்கும், நீண்டதூர ஏவுகணைகளை உற்பத்திசெய்து தனது பயங்கரவாத கொடுக்குகளை உலகம் முழுக்கப் பரப்ப எத்தனிக்கும் மூர்க்கர்களின் ஆட்சி முற்றாக நிர்மூலமாக்கப்பட வேண்டும், இது காலத்தினதும், மனித இருப்பினதும் அவசியமாகும். சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக, அச்சுருத்தி வைத்துக்கொண்டு, மிருகத்தனமாக கொடுங்கோலாட்சி செய்யும் ஈரானிய மத அடிப்படைவாதிகள் சின்னாபின்னமாக்கப்பட வேண்டும். வேடிக்கை என்னவென்றால் ஈரானின் கொடுங்கோலாட்சி அகற்றப்படவேண்டும் என்று ஈரானியர்கள் கேட்கிறார்கள், கொடுங்கோலன் கமெய்னி கொல்லப்பட்டபோது வீதிகளில் ஆர்ப்பரித்து மகிழ்வதோடு அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் நன்றி கூறுகிறார்கள். ஆனால், ஈரானிற்கு எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத சிலர் ஐயோ, இது தகுமா? ஐ நா விடம் அனுமதி கிடைத்ததா? ஈரானிடம் அணுவாயுதம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? என்று கூவுகிறார்கள் 😆.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
சி என் என் இல் இன்று வந்த ஆய்வுக்கட்டுரை. கடந்த 10 நாட்களாக நடக்கும் போர்பற்றிய சாராம்சம். ஆங்கிலத்தில் இருந்து உடனடியாக தமிழில் மொழிபெயர்க்க நேரமின்மையினால் அப்படியே இணைக்கிறேன். முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். Week 2 of Iran analysis: Military momentum meets economic and political reality | CNN Politics 1. Air dominance over Iran The United States and Israel have increased air dominance across Iran. We should anticipate military operations to intensify over the coming week. This will mean a focus on not just the missiles and launchers, but the production facilities and infrastructure that produce Iran’s missiles and drones, as well as its nuclear facilities. The Trump administration has not ruled out a ground operation, perhaps focused on enriched uranium buried in Esfahan, more than 250 miles south of Tehran. That would be highly risky, and may not be possible without further degradation of Iran’s military power. In sum, the military campaign is settling in for a period of weeks — not days. This will not be a short war. 2. Iranian leadership divisions After losing dozens of its top leaders, including slain ruler Ayatollah Ali Khamenei, Iran appointed an interim leadership council under its president, chief justice and a senior cleric. Under Iran’s constitution, this council holds the reins of power until a new supreme leader is appointed. Inside the precision strikes that shattered Iran’s leadership 2:41 On Saturday, Iran’s president, Masoud Pezeshkian, released what appears to be a hastily produced video declaring that attacks on neighboring countries would stop, unless the US struck Iran from those countries. Within hours, however, attacks against the Gulf countries restarted, including a drone targeting Dubai’s airport. This suggests either a breakdown in command-and-control within Iran, a power struggle within senior circles, or a refusal within some units to follow the orders of this temporary council. Iran’s leaders later scrambled to project cohesion. Later on Saturday, Ali Larijani, the secretary of Iran’s equivalent to the US National Security Council, insisted the interim council was in charge, and early Monday in Iran, the country announced a new supreme leader. 3. Succession uncertainty (resolved— for now) Early Monday, Iranian state media announced that Khamenei’s 56-year old son, Mojtaba, was selected as Iran’s next supreme leader — its third since the 1979 revolution. This is likely to prolong the war even further. If Trump was hoping for a Venezuela-like leadership change, with a new leader willing to deal with the US, it will not be Mojtaba, who is known as an ideological hard-liner with deep ties to the Islamic Revolutionary Guards Corps. However, it’s unclear whether Mojtaba will succeed in consolidating power. He’s relatively unknown, has never spoken publicly, and has never held an official government position. The Islamic Republic also rose to power in 1979 in opposition to a hereditary monarchy, one reason Mojtaba was thought not to be a leading contender. So, while Iran has named new leader, it’s too early to predict how long Mojtaba will be able to govern — presuming he even survives this war. Vapor trails in the sky after Israel intercepted missiles launched from Iran, amid the US-Israel conflict with Iran, as seen from Tel Aviv, Israel on March 6. Dylan Martinez/Reuters 4. Missile math We spoke last week about the importance of targeting Iran’s missile launchers, without which the country is unable to prepare larger salvos of strikes. US and Israeli forces appear to have had some success in this mission. Iranian missile launches decreased by 90% over the week, according to US Central Command, and most are now being intercepted. The fewer missiles in the sky, the fewer interceptors needed to take them down. Related article The Iran war’s troubling missile math 9 min read Iran’s drones remain a challenge, they are more plentiful and easier to launch from nearly anywhere inside Iran. Drone attacks are down by 86%, according to Central Command, but some continue to sneak through air defenses. Decreasing drone launches will be a key indicator over this second week. 5. Gulf states off the sidelines Iran’s decision to attack the Gulf states has continued to backfire on Tehran. Iran had hoped that by pressuring these influential countries, they would in turn pressure Washington to stop attacks inside Iran. The opposite has happened. The prevailing view in Gulf capitals is that while these countries may not have chosen this war, now that it’s started — the US must carry the military plan to its conclusion. Firemen and rescue workers inspect the site of an explosion at the Fairmont The Palm Hotel in Dubai, United Arab Emirates, on February 28. Altaf Qadri/AP Speaking for the first time during a tour of a hospital to visit wounded, the president of United Arab Emirates warned Iran that his country has “thick skin and bitter flesh,” and vowed to “emerge victorious from this war.” Quietly, multiple militaries are now working together in the skies over the Middle East, which was not the case when the operation began. Several Gulf states have stated they reserve the right to respond against Iran in self-defense, and this week could see these countries striking back against Iran. Farther afield, Iranian attacks against British and French facilities in the region triggered Paris and London to cooperate with the US, including granting access to bases and the deployment of French and UK military assets to the region. In sum, Iran has grown more isolated over the last week, and the US has enhanced the cooperation it’s receiving from allies and partners. Given the complexity of this operation, Trump should welcome the increasing support. Berating the UK’s prime minister as too late, which Trump did on Saturday, serves no purpose. 6. Russia and China Iran for years has claimed strategic alliances with Russia and China, believing that one or both would support the country in a moment of distress. Iran has directly supported Russia’s war in Ukraine, presuming that Russia would return the favor when Tehran was in need. From public view, however, neither Moscow nor Beijing has lent more than rhetorical support to Iran. CNN reported late in the week that Russia is providing targeting information to Iran against American ships, albeit with little apparent effect. If that’s true, it should carry repercussions from Washington, perhaps with increased support for Ukraine. Trump is unlikely to do that, but it would be the best response to ensure Moscow halts whatever it might be providing to the Iranians. As for China, it is nowhere to be seen in this crisis — and given its dependence on oil through the Strait of Hormuz, cannot be happy with Iran’s decisions to threaten the passage. Trump is scheduled to visit Beijing at the end of the month — an opportunity, should he choose it, to press China on its support for Iran’s missile and drone programs. By the time Trump visits, there may be little left of those programs inside of Iran. 7. No major asymmetric response — yet To understand Iran, one must understand its so-called “Revolutionary Guards.” The IRGC — as its name implies — “guards” the revolution, including through suppression of the Iranian people who demand a new system. But the IRGC is also tasked with spreading the revolution abroad through terrorism and support for proxy groups that foment instability across the Middle East. That is the job of the IRGC’s “Quds Force,” and we should presume it’s been tasked with acts of terrorism abroad, including within our borders. Iran’s intent often outstrips its capabilities, however, and thus far we have not seen any such acts carried out. McGurk: Iran is trying to 'create this sense of mayhem and chaos' 4:14 We should hope and presume that the Department of Homeland Security, FBI and the US intelligence community are working together and with foreign counterparts to detect and disrupt any emerging threats. The UK last week arrested four operatives reportedly planning attacks on behalf of Iran. As a reminder of the threat the IRGC has posed even within our borders, a federal jury on Friday convicted an Iranian intelligence agent, Asif Merchant, tasked from Tehran with assassinating senior political leaders in the United States, including President Donald Trump. Merchant was arrested and convicted under the Biden administration. 8. Energy shock The key indicator now may not be military or political — but economic. Twenty percent of global energy trade passes each day through the Strait of Hormuz. Since this conflict began, ships have largely not transited the narrow passage due to fears of Iranian attacks. Insurance rates for these ships have skyrocketed, together with global oil prices, which surged 35% over the past week. This was one of the sharpest spikes in history. What’s at stake with the Strait of Hormuz 5:55 If this problem is not solved soon, Gulf producers will run out of storage room and be required to shut their taps — further jeopardizing future supply. We should expect prices to continue to rise this week, building political pressure on the White House to either wind down the military operation before its conclusion, or find a way to reassure shippers transiting the Strait. Cutting the military campaign short mid-stream might be the worst outcome of all — leaving behind a wounded but intact Iranian regime with residual missile and nuclear capabilities. The White House is scrambling to find solutions. Late last week, it announced a $20 billion insurance facility to backstop risk, as well as suspended sanctions on ships stranded with 140 million barrels of oil heading for India. Given the criticality of this issue, the US military may need to get involved in helping to protect the Strait and risks to slow-moving tankers. This happened before, during the Reagan administration, when the US Navy protected transit — but it’s a much harder mission now, given Iran’s armed with drones that travel over one thousand kilometers and can be launched from anywhere across Iran. So, keep a close eye on this space, perhaps the most significant strategically over the coming week. 9. Escalation dominance — not outcome dominance Briefings from US military leaders this week stressed that US military power is building as Iran’s is rapidly diminishing. That equation by the day increasingly tilts against Iran as the United States and Israel degrade its ability to project power outside of its borders. That does not, however, impact Iran’s ability to project power inside its own borders — against its own people. Thus, on the current trend line, we are likely to see an Iran with massively degraded military power but without the regime change that many are hoping to see. Changing political outcomes from air power alone is not a viable military task. President Donald Trump looks on during a roundtable discussion on college sports in the East Room of the White House in Washington, DC, on March 6. Anna Moneymaker/Getty Images 10. No natural endpoint The lack of a natural endpoint is what makes the campaign unlike anything Trump, as commander in chief, has presided over across his two terms. However, heading into the second week, we can begin to see how this might conclude. The Pentagon sought to clarify last week that it has “discrete and scoped” objectives: destroy Iran’s power projection capacity — missiles, drones, navy and nuclear facilities. It would likely take a few more weeks to prosecute all of those targets. At that point, the military campaign would have run to conclusion. The United States cannot direct political outcomes, but it can make clear that any new government — if it wants sanctions relief, for example — must agree not to restore those capabilities. All the while, US and Israeli air forces can continue patrolling Iranian skies. That may be the best case for a new normal after all of this — a weakened and contained Iran. But even that outcome is weeks away at least. Bottom line The United States together with Israel and a broader coalition in defense is now prosecuting a methodical military campaign with defined military objectives focused on Iran’s power projection in the region. Political objectives remain unclear and should be unambitious in any case. Over the coming week, it’s the economic factor and the Strait of Hormuz that might emerge as the dominant issue.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மன்னிப்பும் இல்லை ஒரு ரோமமும் இல்லை. தமது வில்லத்தனத்தை தமது அரபு நண்பர்களும் கண்டுகொடுவிட்டதால்த்தான் இந்த மன்னிப்புக் கோரும் நாடகம். ஆனால், இவர் மன்னிப்பு என்று மழுப்பும்போதே ஈரானின் ராணுவம் "அமெரிக்க இலக்குகள் எங்கிருந்தாலும் தாக்குவோம்" என்று அறிக்கை விட்டதோடு, தம்மீது தாக்குதல் நடத்தப்படாத போது கூட இந்த அரபு நாடுகளைத் தேடித் தேடித் தாக்கியது . ஆரம்பத்தில் அமெரிக்க இலக்குகள் என்றுவிட்டு பின்னர் விமான நிலையம், கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை, சிவிலியன் அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள், வீதியில் செல்லும் வாகனங்கள் என்று சிவிலியன் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இராணுவத்தின் அழுத்தத்திற்குப் பயந்துதான் தனது இரண்டாவது அறிக்கையான "அமெரிக்க இலக்குகளைத் தாக்குவோம்" என்ற இராணுவத்தின் அறிக்கையினை அப்படியே தனது டுவிட்டர் கணக்கில் பதிவுசெய்தார் ஜனாதிபதி. முன்னர் சொன்னார்கள் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் களத்தில் நிற்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. ஆகவே தான் ஏற்கனவே முடிவு செய்ததன்படி களத்திலிருப்போர் தம் விருப்பிற்குத் தாக்குகிறார்கள் என்று . இல்லையில்லை, நாமேதான் தாக்குதலை நடத்தச் சொல்லிக் கட்டளையிட்டிருக்கிறோம் என்று இப்போது சொல்கிறார்கள். வந்திருக்கும் புதிய ஆன்மீகத் தலைவரும் கடும்போக்குவாதி என்பதுடன் ஈரானின் புரட்சிகர படையின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆகவே இவர் உயிருடன் இருக்கும்வரை ஈரான் இன்னும் இன்னும் அழிவுகளைச் சந்திக்கப்போவது திண்ணம். என்னைப்பொறுத்தவரையில் ஆன்மீகத் தலைவர் என்று எவருமே இனிமேல் வரக்கூடாது. வருவோர் எல்லாம் அழிக்கப்பட வேண்டும். ஈரான் மதச் சார்பற்ற நாடாக மாறவேண்டும். மதம் ஆட்சியதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இதனால் ட்ரம்ப்பும், பிபியும் செய்யும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எனது பூரண ஆதரவு உண்டு. ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் உலக இருப்பிற்கு மிகவும் ஆபத்தானது. அதனை எவர் தடுத்து நிறுத்தினாலும் எனது ஆதரவு அவர்களுக்குண்டு. புட்டின் விசுவாசிகளுக்கு இப்போது நடக்கும் தாக்குதல்கள் கலக்கத்தைக் கொடுக்கலாம். தற்போது உலகில் இருப்பது ஒரேயொரு வல்லரசுதான் என்பதை அமெரிக்கா மீளவும் நிரூபித்திருக்கிறது. ரஸ்ஸியாவும், சீனாவும் நினைத்துக்கொண்டிருந்த "பல" வல்லரசுக் கனவினை இப்போதைய தாக்குதல்கள் முற்றாக அடித்து நொறுக்கியிருக்கின்றன. அமெரிக்காவின் இராணுவ வல்லமையும், தொழிநுட்பமும் ரஸ்ஸிய சீன தொழிநுட்பத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மகத்தானது என்பதை நடந்துவரும் தாக்குதல்கள் காட்டுகின்றன.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இவர் தனது வாயை வாடகைக்கு விடுபவர். தான் தனியாக கட்சி நடத்தியபோது தீம்காவை கிழித்துத் தள்ளினார். "வாருங்கள் நாடாளுமன்றத்தில் பதவி தருகிறோம்" என்று ஸ்டாலின் கூப்பிட்டவுடன் ஒரேயடியாகக் காலில் வீழ்ந்து பதவியை ஏற்றுக்கொண்டார். இப்போது தீம்காவும் காங்கிரஸும் போடும் தாளத்திற்கு ஆடவேண்டிய நிலை. ஆகவேதான் காங்கிரஸின் பல்லவியான "ஈரானைத் தாக்காதே" என்பதை இவர் பாடுகிறார். ஆனால், ஆள் சுத்தமான பிராமண இந்துத்துவவாதி.