Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்ய பாராளுமன்றத் தேர்தல்களைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணியும், புலிகள் பலம்பெற்று விடுவார்கள் என்பதனால் தேர்தல்களை எதிர்க்கும் இந்தியாவும் தை 12, 2004 இலங்கையில் இருந்துவரும் பிரச்சினையின் உண்மை முகத்தினை தம‌து இரகசிய காய்நகர்த்தல்கள் மூலம் சர்வதேசத்திடம் இதுவரை எடுத்துக் காட்டிவந்த புலிகள் தற்போது வெளிப்ப‌டையாகவே அதனை வெளிக்கொணரும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர். இலண்டனில் தங்கியிருக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தைச் சந்திக்கச் சென்ற மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான சந்திரசேகரனிடம் பாலசிங்கம் பேசும்போது, தமிழர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதில்லை என்பதில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு இடையே இருக்கும் போட்டியே தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது என்பதை தற்போது புலிகள் சர்வதேச நாடுகளிடமும், இலங்கையின் இனப்பிரச்சினையில் அக்கறை கொண்ட சர்வதேச அமைப்புக்களிடமும் தாம் வெளிப்படையாகத் தெரிவித்து வருவதாகக் கூறியிருந்தார். சந்திரசேகரனிடம் பேசிய பாலசிங்கம், சர்வதேச நாடுகளிடம் புலிகள் நான்கு விடயங்கள் குறித்து பேசிவருவதாகக் குறிப்பிட்டார். முதலாவது, அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறினாலும், தாம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள் என்பது. இரண்டாவது, தாம் சமாதானப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பது. மூன்றாவது பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும், சிக்கலான விடயங்கள் தொடர்பாக அழுத்தமின்றி தீர்மானங்களை எடுக்கவும் வல்லமை கொண்ட சிங்களத் தலைவருடன் மட்டுமே தம்மால் பேசமுடியும் என்பது. நான்காவது, சர்வதேசத்துடன் தாம் நெருங்கிச் செயற்பட ஆர்வ‌மாக இருக்கிறார்கள் என்பது. மேலும், தமிழர்களின் பிரச்சினையினை தேசியப் பிரச்சினையாகக் கருதி, தமது அரசியல்ப் போட்டிகளைக் கைவிட்டு, பிரச்சினைக்கான தீர்வினை இதய சுத்தியுடன் வழங்க முன்வருமாறு சிங்களத் தலைமைமீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று புலிகள் கேட்டிருந்தார்கள். சிங்களவர்களின் நலன்களைப் பேணுவதில் மற்றைய கட்சியைக் காட்டிலும் தாமே சிறந்தவர்கள் என்பதைக் காட்டுவதிலேயே சிங்களத் தலைமைகள் ஆர்வம் காட்டுவதாகவும், இதனாலேயே தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக சமாதான வழிகளில் இதுவரை எடுக்கப்பட்டுவந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் புலிகள் சர்வதேசத்திடம் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். புலிகளின் அரசியல்த்துறையின் பொறுப்பாளர் புலித்தேவன், கடந்த சனிக்கிழமை முதல் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து, கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனுடன் வருகிற வார இறுதியில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறார். "இதுவரை சாதகமான பதில்களே எமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன" என்று புலித்தேவன் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். "நாம் பேர‌ம்பேசல்களினூடாக நிரந்தர சமாதானத்தையே விரும்புகிறோம். எமது தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகளில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கான புணருத்தாபன மற்றும் மீள்கட்டுமான பணிகளை ஆரம்பிப்பதற்கு எமது கைகளில் இடைக்கால நிர்வாக சபை எனும் அமைப்பு இருப்பது ஏன் அவசியமானது என்பதையும் அவர்களிடம் எடுத்துரைத்து வருகிறோம்" என்றும் புலித்தேவன் கூறினார். ஆனால் சிங்களத் தலைமைகளோ நாட்டின் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்குக் கைகோர்ப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கிடையிலான பலப்போட்டி மேலும் மேலும் அதிகரித்தே செல்கிறது. இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினரின் முக்கிய கோரிக்கையான பாராளுமன்றத் தேர்தல்கள் குறித்தே சந்திரிக்காவும் ரணிலும் தற்போது சிந்தித்து வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது சமாதான முயற்சிகளுக்கெதிரான நிலைப்பாடு சிங்கள மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், ஆகவே தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெறவேண்டுமா - இல்லையா என்பதனை அறிந்துகொள்வதற்கான மக்கள் ஆணையாக பாராளுமன்றத் தேர்தல்கள் அமையும் என்றும் கூறினார். தற்போது பாராளுமன்றத்தில் வெறும் 16 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் இவ்வினவாதக் கட்சியினர் வருகின்ற தேர்தல்கள் ஊடாக அவ்வெண்ணிக்கையினை 35 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இதனூடாக பாராளுமன்றத்தில் அரசியல்த் தீர்மானங்களில் தாம் கணிசமான தாக்கத்தினைச் செலுத்தமுடியும் என்றும் நம்புகின்றனர். பாராளுமன்றத் தேர்தல்களை தற்போது நடத்துவதனால் நாடு கடந்த வருடம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைச் சந்திக்கும் என்று வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள் அரசை எச்சரித்து வருகின்றனர். நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைதியான சூழ்நிலைகளாலும், வர்த்தக முதல்லிடுகளில் காட்டப்பட்ட உற்சாகத்தினாலும் நாட்டின் பொருளாதாரம் 5.6 வீதத்தினால் கடந்த ஆண்டு வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இது அனைத்துமே தெற்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் போட்டியினால் கடுமையான தாக்கத்தினைச் சந்தித்திருக்கின்றன. பாராளுமன்றத் தேர்தல் ஒன்று தற்போது நடைபெறும் பட்சத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கை ஓங்கும் என்றும், இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் சர்வதேச முதலீடுகள் குறைவடையலாம் என்றும் கணிக்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதை இந்தியாவும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. புலிகளால் ஆதரவளிக்கப்படும் இணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தல்களில் அதிக ஆசனங்களைப் பெறுவதை இந்தியா விரும்பவில்லை என்றே தெரிகிறது. இந்திய உளவு அமைப்பான ரோவின் தகவல்களின்படி சுமார் 35 முதல் 40 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனூடாக புலிகளின் கை ஓங்குவதோடு, தனித்தனியாக இருக்கும் தமிழ்கட்சிகளின் ஊடாக தனது அழுத்தத்தினை இலங்கையில் செலுத்தமுடியும் என்கிற இந்தியாவின் எதிர்பார்ப்பும் இதனால் அழிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது. இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இலங்கையில் தற்போது பாராளுமன்றத் தேர்தல்கள் நடப்பதனை இந்தியா விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். வருகிற 19 ஆம் திகதி கொழும்பு வரும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி, சந்திரிக்கா, ரணில் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் பேச்சுக்களில் ஈடுபட‌விருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் 23 ஆம் திகதி இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்திலும் அவர் பங்கெடுக்கிறார். சிங்கள‌த் தலைமைகள் மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது பயன்படுத்தப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
  2. என்னதான் நடக்கிறது உங்கட ஊரில அண்ணை? கடந்த இரு வாரங்களில் நடந்த மூன்றாவது விமான விபத்து இது!
  3. போர்க்குற்றவாளிகளை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்து அழகுபார்க்கும் அநுர எனும் இனவாதியின் கைங்கரியம் தொடர்கிறது. ஆனால் இதே அநுரவை வராது வந்த மாமணியாக‌ வழிபட்டு "பாணிற்கும், பெற்றொலுக்கும் வரிசையில் நிற்க முடியாது, ஆகவே அநுரவே வர வேண்டும்" என்று கூச்சலிட்ட சிலர் இதனை அகம‌கிழ்ந்து வரவேற்கலாம். அநுர செய்தால் கொலையாக இருந்தாலும் வரவேற்கத்தானே வேண்டும், என்ன நான் சொல்லுறது???
  4. நேற்று இவரது காணொளி ஒன்று பார்த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சேர்த்து 1948 இல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் இன்று இலங்கையின் சுதந்திர‌ தினத்திற்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் பைத்தியங்கள் என்றும், அரசியல் நோக்கத்திற்காகச் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆக, தமிழர்கள் முற்றான சுதந்திரத்தைச் சிங்களவர்கள் போன்றே அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.அவரது அறிவு அவ்வளவுதான் போலும். இவர் எப்படிப் படித்து, வைத்தியராகப் பட்டம் பெற்றார் என்று எண்ணுகிறேன். இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது. இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.
  5. தன்னை சமாதானத்தின் தூதராகவும், சந்திரிக்காவை யுத்த விரும்பியாகவும் காட்ட முனைந்த ரணில் 2004, தை 12 தொடர்ந்து பேசிய ரணில், தன்னால் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தமுடியாதென்றும், சந்திரிக்காவே அதனைப் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும், சமாதானத்தை வென்றெடுக்க அயராது உழைத்துவருபவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் சந்திரிக்கா, நோர்வேயின் ஊடாக புலிகளுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்குள் வந்து, தான் முன்னர் எதிர்த்த அதே விடயங்களை புலிகளுடன் பேசி மீளவும் வழங்குவேன் என்று உறுதியளித்து, சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தட்டும் என்று அவர் கூறினார். மேலும் அங்கு பேசிய ரணில், யுத்த நிறுத்தம் செயலற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக எச்சரித்தார். அப்படி நடக்கும் பட்சத்தில் புலிகள் சர்வதேசத்திடம் இலங்கையரசினை நம்பமுடியாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். தனது தீர்மானம் குறித்து மந்திரிசபையிடம் ரணில் விளக்கினார். யுத்தநிறுத்தத்தினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவான காரணிகளில் ஒன்றான இராணுவத்தினதும், புலிகளினதும் போரிடும் அணிகளை தூரத்தே விலத்திவைத்திருப்பதன் ஊடாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதனைச் செயற்படுத்துவதற்கு இராணுவம் மீதான அதிகாரம் தன்னிடம் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த அதிகாரம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படுவஸ்நுவரவில் ரணில் ஆற்றிய பேச்சுக் குறித்து அவரை சில அமைச்சர்கள் எச்சரித்திருந்தனர். அப்பேச்சினூடாக ரணில் சமாதானப் பேச்சுக்களில் இருந்து ஓடி ஒளிந்துகொள்வதாக சர்வதேச நாடுகள் எண்ணச் சாத்தியப்பாடு இருப்பதாகவும், இதனால் அரசுமீதான நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டு விடும் என்றும் அவர்கள் கூறினர். ஆனல் இதனை ரணில் மறுத்தார். தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட மூன்று அமைச்சுக்களும் தன்னிடம் மீள கையளிக்கப்படுமாக இருந்தால் பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்திச் செல்ல தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார். ஆனால் சந்திரிக்கா அதனைத் தரமறுத்தால், அவரே சமாதானப் பேச்சுக்களுக்கான பொறுப்பினையெடுத்து நடத்திச் செல்லட்டும், தேவையானால் எனது ஆதரவையும் வழங்கலாம் என்று அவர் கூறினார். "இந்தச் செய்தி மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். நான் சமாதானத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவே இருக்கிறேன், ஒளிந்து ஓடவில்லை. சந்திரிக்கா பேச்சுக்களை பொறுப்பெடுத்து நடத்த விரும்பினால், எனது முழுமையான ஆதரவு அவருக்கு இருக்கும்" என்று அவர் கூறினார். ரணிலின் புதிய நிலைப்பாடு அவரது தந்திரமான அரசியலைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். முதலாவதாக சந்ந்திரிக்காவினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு, அக்குவேறு ஆணிவேறாக விமர்சிக்கப்பட்டு வந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தினை அவரே ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது சந்திரிக்காவை சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நோர்வேஜியர்களுடன் பேசவைப்பதன் ஊடாக அவரது புதிய நண்பர்களான ஜே வி பியினருக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே பகைமையினை உருவாக்குவது. மூன்றாவது புலிகளுடன் பேசுவதன் ஊடாக மட்டுமே அரசியல்ச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை சந்திரிக்காவிற்கு புரியவைப்பது. அரசியல் வித்தகரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ரணிலின் நிலைப்பாடு குறித்துப் பேசும்போது, "ரணிலின் நகர்வுகளை அவதானித்தால் அரசியல்ப் பலப்போட்டியில் தொடர்ந்தும் இருக்கும் அதேவேளை, சூழ்நிலையினைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்தி சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்க வைப்பதுதான் என்பது புலனாகிறது. மேலும் சந்திரிக்கா அண்மைய நாட்களில் முயன்றுவரும் மக்கள் விடுதலை முன்னணியினருடனான புதிய அரசியல்க் கூட்டணியைப் பலவீனப்படுத்துவதும் ரணிலின் நோக்கங்களில் இன்னொன்று" என்று கூறினார். புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதையோ, நோர்வேஜியர்களின் மத்தியஸ்த்தத்துடன் புலிகளுடன் பேசுவதையோ, அல்லது புலிகளின் கோரிக்கையான இடைக்கால நிர்வாக சபையினை வடக்குக் கிழக்கில் உருவாக்குவதையோ ஜே வி பி யினர் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியின் முதற்படியே இடைக்கால நிர்வாக சபை என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆகவே இடைக்கால நிர்வாக சபை எனும் புலிகளின் கோரிக்கையினை அரசு ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்று அவர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே சந்திரிக்கா சமாதானப் பேசுக்கள்;ஐப் பொறுப்பெடுத்து நடத்தத் தொடங்கினால் அரசியல்க் கூட்டணியில் இருந்து தாம் விலகப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் அவரை எச்சரித்து வருகின்றனர். ரணில் விரும்புவதும் இது நடக்க வேண்டும் என்பதைத்தான். சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்கும் அழுத்தத்தினை உருவாக்கும் ரணிலின் திட்டம் ஏற்கனவே நடந்துவிட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் ரணில் கூறுவதுபோல சந்திரிக்கா யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவில்லையென்றும், மாறாக புலிகளை தீவிரமான பேச்சுக்களுக்குள் இழுத்துவிட்டு, பிரிக்கப்படாத இலங்கைக்குள் இடைக்கால நிர்வாக சபையினை உருவாக்கும் தமது யோசனைகளை முன்வைக்கும் அழுத்தத்தினை தானே உருவாக்கியதாகவும் சந்திரிக்கா தெரிவித்திருந்தார். கடந்த ஞாயிறு அன்று பேசிய ரணில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வினை உருவாக்கும் அடித்தளம் இடப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் யுத்த நிறுத்தத்தினை கலைப்பதன் மூலம் பிரச்சினை மீளவும் திறக்கப்பட்டு நாடு இன்னுமொரு யுத்தத்திற்குள் செல்லும் என்றும் அவர் கூறினார். ஆகவே இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக உருவாகியிருக்கும் அரிதான இச்சந்தர்ப்பத்தினைச் சந்திரிக்கா பாலடித்துவிட்டதன் மூலம், நாட்டின் வளங்களை வீணடித்து, நாடு மீள முடியாத பொருளாதார பின்னடைவிற்குள்ச் செல்ல வழிசமைத்துவிட்டார் என்று அவர் மேலும் கூறினார்.
  6. ரணிலும் சந்திரிக்காவும் ஆடும் அரசியல்ச் சதுரங்கம் 2004, தை 12 இவ்வருடத்தின் முதலாவது மந்திரிசபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை மந்திரிசபை அறையில் நடைபெற்றது. ஜனாதிபதி சந்திரிக்கா இதில் கலந்துகொள்ளவில்லை. அரசியலமைப்பின்படி மந்திரிசபையின் தலைவரே அவர்தான். இவ்வாறான கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குவது வழமை. ஆனால் கார்த்திகை 4 ஆம் திகதி மூன்று முக்கிய அமைச்சுக்களை பலவந்தமாக பிடுங்கிக்கொண்டபின்னர் அவர் மந்திரிசபைக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்தே வருகிறார். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கு வருகைதந்த அமைச்சர்களுக்கு பால்ச்சோறும் இன்னும் சில இனிப்புப் பலகாரங்களையும் ரணில் வழங்கி உபசரித்தார். அப்போது அங்கு பேசிய காணியமைச்சர் ராஜித்த சேனாரத்ன, "சந்திரிக்கா கடந்த வருடம் புதுவருட தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் நடந்த மந்திரிசபைக் கூட்டத்தில் வழங்கிய உணவைக் காட்டிலும் இது எவ்வளவோ மேலானது" என்று நகைச்சுவையுடன் கூறினார். சந்திரிக்காவினால் தனது வீட்டில் நடத்தப்பட்ட சிற்றுண்டி விருந்து உண்மையாகவே அமைச்சர்களை ஏமாற்றும் நோக்கில் நடத்தப்பட்டதாகவே அவர்கள் உணர்கின்றனர். மீண்டும் மந்திரிசபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அமைச்சர்களை தேநீர் விருந்திற்கு சந்திரிக்கா அழைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆகவேதான் சந்திரிக்காவிடம் பேசிய அமைச்சர்கள், "மந்திரிசபைக் கூட்டத்தை வழமையாக அது நடக்கும் மந்திரிசபை அறையிலேயே வைத்துக்கொள்ளலாம், ஆனால் உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் வந்து உங்களின் வீட்டில் தேநீர் அருந்தி சிற்றுண்டிகளையும் உட்கொள்ளலாம்" என்று கூறினர். அமைச்சர்கள் த‌மது முடிவினை அறிவித்தபோது சந்திரிக்கா சினமடைந்தார். "அவர்களுக்கு இங்கு வர விருப்பமில்லையென்றால், எனக்கும் அங்கு செல்ல விருப்பமில்லை. அவர்களுக்கு எனது வீட்டிற்ட்கு வர விருப்பமில்லையென்றால், அவர்களுக்குப் பாற்சோறு இல்லை" என்று கடுப்புடன் கூறினார். இச்சம்பவம் சந்திரிக்காவிற்கும் ரணிலுக்கும் இடையே இருக்கும் பகைமையினைக் காட்டப் போதுமானது. இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட பகைமையே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சில அவதானிகள் கூறுகின்றனர். ரணிலும், சந்திரிக்காவின் இளைய சகோதரரான அநுரவும் ரோயல் கல்லூரியில் ஒன்றாகக் கற்றவர்கள். நண்பர்கள். ஒருவரோடு ஒருவர் நேரத்தைச் செலவிட்டுள்ளதுடன், சிறுவயதில் ஒன்றாக விளையாட்டுக்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சந்திரிக்காவும் இவ்விளையாட்டுக்களில் அவப்போது பங்குபற்றியிருக்கிறார். வேறு சில அவதானிகளோ இவர்கள் இருவருக்கும் இடையிலான பகைமை தத்தமது அரசியல் நோக்கங்களினால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். சந்திரிகாவைப் பொறுத்தவரை தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தபின்னரும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதைச் செய்வதற்கு நடப்பில் இருக்கும் அரசியலமைப்பினை மாற்றவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. இதனை 1997 இல் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு ஏதுவாக "அரசியலமைப்பிற்குள் சர்வ வல்லமை பெற்ற ஜனாதிபதிப் பதவியை இல்லாமலாக்குவது" எனும் சரத்தினை உருவாக்குவேன் என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர் செய்ய எத்தனித்து வருகிறார். அதற்காகவே 2000 இல் புதிய அரசியலமைப்பிற்கான வரைபினை அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். ஆனால் சந்திரிக்காவினால் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு வரைபினை ரணில் கடுமையாக எதிர்த்தார். இந்த உத்தேச அரசியமைப்பு வரைபு அதிகாரப் பரவலாக்கத்தினைக் கொண்டிருக்கிறது என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. மாறாக சர்வ வல்லமை பொறுந்திய ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து, பிரதமர் எனும் பதவியின் மூலம் தொடர்ந்தும் பதவியில் இருக்கவே சந்திரிக்கா முயல்கிறார் என்பதற்காகவே இதனை ரணில் எதிர்த்தார். சந்திரிக்காவை அரசியலில் இருந்து முற்றாகவே ஓரங்கட்டுவதன் ஊடாக நாட்டின் அதிகாரத்திற்கு வரும் தனது கனவினை ஈடேற்றவே ரணில் இதனைச் செய்தார். "தமது சொந்த அரசியல் எதிர்காலத்திற்காகவே அவர்கள் மோதிக்கொள்கிறார்கள், நாட்டைப்பற்றிய அக்கறையென்பது அவர்களுக்குக் கிடடையாது" என்று இவர்களின் அரசியப் பலப் போட்டியை அவதானித்துவரும் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கூறுகிறார். இவர்களின் அரசியல்ப் போட்டியென்பது தனிப்பட்ட காரணங்களினாலேயே நடத்தப்பட்டு வருகிறதென்பதை சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் மத்தியில் பேசிய ரணிலின் கூற்று மெய்ப்படுத்தியது. படுவஸ்நுவரவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணிலின் இப்பேச்சு சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்கும்படி அழுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்கூட்டத்தில் பேசிய ரணில், "சமாதானப் பேச்சுக்கள் நடதுகொண்டிருக்கும் நிலையில், மூன்று முக்கிய அமைச்சுக்களையும் தன்வசமே வைத்துக்கொள்ள சந்திரிக்கா விரும்புவாராக இருந்தால் அவர் புலிகளுடன் பேசி புதிய உடன்பாடு ஒன்றிற்கு வரட்டும். பேச்சுவார்த்தைகள் யுத்தநிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. யுத்த நிறுத்தத்தில் நாம் மேற்கொள்ளவேண்டியவற்றை ஒழுங்காகச் செய்வோம் என்கிற உறுதிப்பாட்டுடனேயே புலிகளுடன் பேச்சுக்களை நாம் அரம்பித்தோம், ஆனால் இன்றோ அதனைக் குழப்பியடிக்கும் நோக்கில் எம்மிடமிருந்து முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்திருக்கிறார். ஆகவே, இன்றிலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நாம் செய்வதாக உறுதியளித்த பல விடயங்கள் வழக்கொழிந்து போகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை மறுதலித்துக்கொண்டு நாம் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தமுடியாது" என்று அவர் கூறினார்.
  7. சந்திரிக்காவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் ஓடிய ரணிலும், தனது பதவிக்காலத்தை நீட்டிக்க சூழ்ச்சியில் இறங்கிய சந்திரிக்காவும் அரசியல் சிக்கலில் முக்கிய பங்கொன்றினையாற்றி, ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்வதற்கு மகாசங்கத்தினரை டெயிலி மிரர் அழைத்துக்கொண்டிருந்த அதே தருணத்தில், இச்சிக்கல் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. கார்த்திகை 4 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா தன்வசப்படுத்திக் கொண்டபோதே இச்சிக்கல் ஆரம்பமாகியிருந்தது. புலிகளுடன் தான் அரம்பித்திருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு இம்மூன்று அமைச்சுக்களும் தனக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தார். ஆனால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினையும் ஊடகத்துறையினையும் ரணிலிடம் கையளிக்க இணங்கிய சந்திரிக்கா, பாதுகாப்புத்துறையினை மட்டும் தன்னுடனேயே வைத்திருக்கப்போவதாகக் கூறிவிட்டார். சந்திரிக்கா தற்போது பாதுகாப்புத்துறை ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புக் கூறுவதாக வாதாடுகிறார். தனது பலத்தினை உறுதிப்படுத்த பாதுகாப்புத்துறை தன்னிடமே இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பொன்றினையும் அவர் கைவசம் எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் அரசாங்கமும், சட்ட வால்லுனர்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து கேள்வியெழுப்பி வருகின்றனர். உச்சநீதிமன்றத்திடம் பாதுகாப்புத்துறையினை தன்னிடம் வைத்திருப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதியளிக்கின்றதா என்று ஆராயுமாறு கோருவதற்குப் பதிலாக , அதனிடமிருந்து தீர்ப்பொன்றினை தனக்குச் சார்பாகப் பெற்று வைத்திருக்கிறார் என்று அவர்கள் சந்திரிக்கா மீது குற்றஞ்சுமத்துகின்றனர். பாதுகாப்புத்துறையினை தன்னிடம் பத்திரமாக வைத்திருப்பதற்கு உச்சநீதிமன்றத்தினைப் பாவித்திருக்கும் சந்திரிக்கா, இதற்கு மேலதிகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருந்த இன்னும் சில பொறுப்புக்களையும் தன்னிடம் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்திருக்கிறார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த சிறைச்சாலைகள் மீதான அதிகாரம் தற்போது பாதுகாப்புத்துறையின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்திற்கு அவசியாமானது என்று கருதப்படும் கைதிகளின் விவகாரம் தற்போது சிக்கலில் மாட்டுப்பாட்டிருப்பதாக சட்டவாளர் டெஸ்மண்ட் பெர்ணான்டோ கூறுகிறார். ரணில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இராணுவமும், பொலீஸாரும் அவரின் கீழ் கொண்டுவரப்படுவது இன்றியமையாதது என்று அவர் கூறுகிறார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி செய்வதாக ஒத்துக்கொள்ளப்பட்ட பல விடயங்களைச் செய்வதற்கு ரணில் அரசாங்கத்தின் கீழ் இராணுவம், கடற்படை, பொலீஸ் மற்றும் சிறைச்சாலைகள் மீதான அதிகாரம் இருப்பது அத்தியாவசியமானது என்றும் அவர் கூறுகிறார். கடந்த வாரம் இடம்பெற்ற வானொலி உரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சந்திரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டிருப்பதற்கான காரணத்தினை ரணிலின் மீது சுமத்தியிருந்தார். ரணில் பேசிவரும் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் என்பது அவரது கற்பனை மட்டுமே என்றும் ரணிலை அவர் விமர்சித்தார். பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை தான் ரணிலுக்குக் கொடுக்க விரும்பியபோதும், அவர் பிடிவாதமாக பாதுகாப்புத்துறை உட்பட அனைத்து அமைச்சுக்களையும் தன்னிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பது என்கிற புலிகளின் முடிவினாலேயே அவை தடைப்பட்டு நிற்பதாகவும், ஆனால் பேச்சுக்கள் தடைப்பட்டதற்கான பழியினை ரணில் தன்மீது சுமத்திவருவதாகவும் சந்திரிக்கா மேலும் கூறினார். தன்மீது சந்திரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுக்களையடுத்து ரணில் ஆத்திரமடைந்து காணப்பட்டார். தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்திய ரணில், "சந்திரிக்கா தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொண்டே போகிறார். பேச்சுவார்த்தைகள் தடைப்பாட்டு நிற்பதற்கான பழியினை அவர் என்மீது சுமத்துகிறார். மக்களை மடையர்களாக்கும் அவரது கைங்கரியத்தை நாம் இனிமேலும் அனுமதித்துக் கொண்டு இருக்கமுடியாது. நாம் திருப்பித் தாக்க ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். சந்திரிக்காவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை ரணில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஆரம்பிக்கலானார். சர்வதேசத்தில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் சந்திரிக்கா மீது சர்வதேசம் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. இதற்காக தனது அமைச்சரான மிலிந்த மொரகொடவை வோஷிங்டன், ஒஸ்லோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸ்ஸள்ஸ் ஆகிய இடங்களுக்கு பிரச்சாரப் பணிக்காக அனுப்பி வைத்தார். வோஷிங்டனில் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சேர்ட் ஆர்மிட்டேஜைச் சந்தித்த மிலிந்த மொறகொட, ரணிலினால் வழங்கப்பட்ட செய்தியொன்றை அவரிடம் கையளித்தார். இதனையடுத்து ஆர்மிட்டேஜ் உடனடியாகச் செயலில் இறங்கினார். சந்திரிக்காவிற்கு அவர் அனுப்பிய செய்தியில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். தற்போது ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் போட்டியும், அரசியலமைப்புச் சிக்கலும் சமாதான முயற்சிகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி விட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக பிரதமருக்கு இருக்கவேண்டிய அதிகாரங்களை தெளிவாக வரையறை செய்து , கையளிப்பது அவசியமானது என்றும் அவர் கூறினார். மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருக்கும் அமெரிக்கா, பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாது இழுத்தடிக்கப்படுமானால் ஏனைய உதவி வழங்கும் நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை மீள ஆர‌ம்பிப்பதற்கான வழிமுறைகள் ஆராய்ந்து அதன்படி தாம் நடக்கவேண்டியிருக்கும் என்றும் சந்திரிக்காவை மறைமுகமாக எச்சரித்திருந்தார். ஆனால் சந்திரிக்காவிற்கு தாம் அனுப்பிய மிரட்டல்ச் செய்தியுடன் மட்டுமே அமெரிக்கர்கள் நின்றுவிடவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கொலின் பவல் ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் தனித்தனியாக எழுதிய கடிதங்களில் தமக்கிடையே இருக்கும் அரசியல்ச் சிக்கலினை உடனடியாகத் தீர்த்துக்கொண்டு பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது அவசியம் என்று கேட்டிருந்தார். மேலும் சந்திரிக்காவிற்கு கொலின் பவல் அனுப்பிய கடிதத்தில் ரணிலிடமிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பலவந்தமாக கையகப்படுத்திக் கொண்டமைக்கான தனது கண்டனத்தையும் பதிவுசெய்திருந்தார். ரணிலுக்குச் சார்பான அமெரிக்கர்களின் நிலைப்பாட்டு சந்திரிக்காவுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பேச்சுக்களை எப்படியாவது நிறுத்தி, மீளவும் யுத்தத்தினை ஆரம்பிக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் சந்திரிக்காவின் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைனைக் கைச்சாத்திடுவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சிங்கள மார்க்ஸிஸ்ட் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர், அமெரிக்காவின் நிலைப்பாட்டினையடுத்து கலவரமடைந்ததுடன், உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்காவை ரணில் அநாவசியமாக இழுத்துவிட்டிருக்கிறார் என்றும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினர். மேலும் அமெரிக்காவின் உளவாளியாக ரணில் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ரணிலுடன் அரசியப் பலப்போட்டியில் ஈடுபட்டிருந்த அதேவேளை சந்திரிக்கா இன்னொரு அரசியல் சிக்கலையும் திட்டமிட்டே கட்டவிழ்த்துவிட்டார். அதுதான் தான் இரண்டாவது தடவையாகவும் 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த விடயம். 1994 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சந்திரிக்கா முதன்முதலாக ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார். அதன்படி அவரது 6 வருட கால ஆட்சி 2000 ஆம் ஆண்டு மார்கழியில் முடிவிற்கு வரவேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு மார்கழியில் ஜனாதிபதித் தேர்தலினை நடத்துவதற்கு அவர் முடிவெடுத்தார். தேர்தல் நடந்து, அவர் வெற்றிபெற்றதனையடுத்து உடனடியாகவே அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்படி 2005 ஆம் ஆண்டு மார்கழியில் அவரது பதவிக்காலம் முடிவிற்கு வருதல் வேண்டும். ஆனால் இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்திகளின்படி சந்திரிக்கா தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் மார்கழி 2000 இலேயே இரகசியமாகச் செய்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அக்காலப்பகுதியில் விவசாய அமைச்சராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த எஸ்.பி.திசாநாயக்கா கூறுகையில் இவ்வாறான இரண்டாவது இரகசிய பதவிப்பிரமாணம் ஒன்று நடந்ததுபற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் சந்திரிக்காவின் பதவிக்காலத்தை இன்னும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பதற்காகவே இவ்வாறான சூழ்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். இச்செய்திகளினையடுத்து கருத்துத் தெரிவித்த ரணில் அரசாங்கம், தம்மைப் பொறுத்தவரை சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக்காலம் மார்கழி 2005 உடன் நிறைவிற்கு வருகிறது என்றும், அதன்பின்னர் ஒரு நாளைக்கேனும் அவர் பதவியில் தொடர்ந்து இருப்பதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தது. தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தல் மார்கழி 1999 இலேயே இடம்பெற்றிருப்பதனால், சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக்காலம் மார்கழி 2005 இல் முடிவிற்கு வருவதாகத் தெரிவித்தார். "2005 மார்கழியில் நான் தேர்தலினை நடத்துவேன்" என்று அவர் மேலும் கூறினார். தன்னால் கசியவிடப்பட்ட இரண்டாவது பதவிப்பிரமாணச் சூழ்ச்சிபற்றிய தெளிவுபடுத்தலினை இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் உசிமாநாட்டின் பின்னர் நாடுவந்து செய்யவிருப்பதாக சந்திரிக்கா கூறினார். ஆகவே இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதனை அரசாங்கம் அப்போதைக்கு கிடப்பில் போட்டு, சந்திரிக்கா நாடுதிரும்பும்வரை காத்திருக்க முடிவெடுத்தது. எதிர்வரும் வாரங்கள் சுவாரசியம் மிக்கவையாக இருக்கப்போகின்றன. சந்திரிக்கா என்ன செய்யப்போகிறார்? ரணிலுடன் சமரசத்திற்கு வருவாரா? போன்ற கேள்விகள் அனைவர் மனதிலும் தற்போது எழுந்திருக்கின்றன.
  8. பெளத்த பிக்குகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ரணில் அரசும், அரசியலுக்குள் நுழைந்த மகாசங்கத்தினரும் 4 தை, 2004 கடந்தவாரம் நான் எழுதிய குறிப்பில் தென்னிலங்கையின் பெளத்த சிங்கள இனவாதிகள் மீளவும் தம்மை அரசியலின் மையத்திற்குள் கொண்டுவந்திருப்பதையும், அதனால் ஏற்படப்போகும் அபாயகரமான நிலை குறித்தும் எழுதியிருந்தேன். நான் கூறியவாறே பெளத்த துறவிகளளின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர்களின் விருப்பத்தின்படி நடக்க அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. உண்ணாவிரதம் இருந்த பெளத்த துறவிகளுக்கு, உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளான கடந்த புதன்கிழமையன்று உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்ற பெளத்த சாசன அமைச்சர் லொக்குபண்டார, அவர்களின் அருகில் அமர்வதற்கு அனுமதிகோரி இரைஞ்சியிருந்தார். "அதி வணக்கத்திற்குரிய மகான்களே, நான் உங்களின் அருகில் அமர்வதற்கு அடியேனுக்கு அனுமதி தருவீர்களா?" என்று உண்ணாவிரதத்தில் அன்று காலையே பங்குகொண்டிருந்த பிரபல பெளத்த இனவாத பிக்கு, சோபித தேரவிடம் பவ்வியமாக இரைஞ்சினார். அமைச்சரை ஏளனமாகப் பார்த்த சோபித தேரை, "அமைச்சரே, நீங்கள் அமரலாம், ஆனால் எதற்காக உங்களின் நேரத்தினை இங்கே வீணடிக்கிறீர்கள்? முதலில் சென்று மதமாற்றங்களில் ஈடுபடுவோருக்கெதிரான சட்டங்களை இயற்றுங்கள்" என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் லொக்குபண்டார, "நான் நிச்சயமாக பாராளுமன்றத்தில் இதுதொடர்பான சட்டங்களை முன்வைப்பேன். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இதற்கான தனது ஆதரவினைத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்" என்று கூறினார். ஆனால் உண்ணாவிரதத்தை முதல் நாளன்று ஆரம்பித்துவைத்த இன்னொரு இனவாதப் பிக்குவும் இனவாத பிக்குகள் அமைப்பான தேசிய பிக்குகள் முன்னணி எனும் அமைப்பின் தலைவருமான எல்லாவெல மேதானந்த தேரை, அமைச்சரின் உறுதிமொழியினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் அமைச்சரினால் சட்டவரைபு முன்வைக்கப்படும் வரை தான் உண்ணாவிரதத்தினை நிறுத்தப்போவதில்லை என்று அவர் சபதம் செய்தார். இதனையடுத்து பிரதமர் ரணிலுடன் கலந்தாலோசித்த லொக்குபண்டார, மேலும் பல முக்கிய பிக்குகளுடன் கலந்தாலோசித்து உண்ணாவிரத்த்தினை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். மதமாற்றும் விடயங்களைத் தடுப்பதற்கான சட்டத்தினைஉடனடியாகக் கொண்டுவருவேன் என்று பிக்குகளிடம் உறுதியளித்த ரணில், ஜே.வி. பி யினரும் ஏனைய இனவாத அமைப்புக்களும் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசியல் இலாபம் அடைய எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். "நாடு ஏற்கனவே இனக் குரோதத்தினால் கடுமையான விளைவுக;ளைச் சந்தித்து நிற்கின்றது. மத ரீதியிலான பிரச்சினை ஒன்றை உருவாக்குவதன் ஊடாக நிலைமையினை இன்னமும் சீரழிக்கவே சிலர் விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார். லொக்குபண்டாரவினால் வழங்கப்பட்ட வாய்மூல உறுதிமொழியினை மேதானந்த தேரை நிராகரித்துவிட்டதையடுத்து அமைச்சர் லொக்குபண்டாரவும், அமைச்சர் கரு ஜயசூரியவும் இணைந்து தேசிய பிக்குகள் முன்னணியினருடன் பேரம்பேசலில் ஈடுபட்டனர். இப்பேரம்பேசலின் ஊடாக பெளத்த விவகாரங்களுக்கான குழுவொன்றினை 14 நாட்களுக்குள் உருவாக்கவும், 60 நாட்களுக்குள் மதமாற்றத்தினைத் தடுக்கும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. பேரம்பேசலில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவேன் என்று லொக்குபண்டார எழுத்துவடிவில் உறுதிமொழியொன்றினை வழங்கினார். இதனையடுத்து பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. பெளத்த சமயம் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை ஆராய்ந்து உடனடியாகத் தீர்த்துவைக்கவென்று அமைக்கப்பட்ட பெளத்த விவகார குழு எடுக்கும் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றுவதென்று அமைச்சர் லொக்குபண்டார உறுதிவழங்கினார். நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெளத்த பீடத்தினதும் ஐந்து பிரதிநிதிகளும், தேசிய பிக்குகள் முன்னணியின் உறுப்பினர்களும் அடங்கிய பெளத்த விவகாரக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது. மதமாற்றத் தடுப்பு சட்டத்தை வரைய அமைச்சரவை உபகுழுவொன்றினை ரணில் நியமித்தார். இக்குழுவில் அமைச்சர்களான லொக்குபண்டார, ஜோன் அமரதுங்க, மகேஸ்வ‌ரன், ரவுப் ஹக்கீம் மற்றும் கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் அங்கம் வகித்தனர். அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் மதச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது மதத்தினைச் சுதந்திரமாக அனுட்டிக்க முடியும் என்று கூறும் அதேவேளை, அவர் இன்னொரு மதப்பிரிவினரிடத்தில் தனது மதத்தினைப் பலவந்தமாகத் திணிக்கமுடியாது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தொடரப்பட்ட அடிப்படி உரிமை மீறல் வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றாம் மதமாற்றத் தடைச்சட்டத்திற்கும் உடனடியாகவே அனுமதி வழங்கிவிடும் என்பதனை நாம் எதிர்பார்க்க முடியும். ஒருவரை இன்னொரு மதத்திற்கு மாற்றம் செய்வதை உச்சநீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்கப்போவதில்லை என்பது திண்ணம். "பெளத்த துறவிகளின் அழுத்தத்திற்கு உடனடியாகவும், வினைத்திறனுடனும் அரசு செயற்பட்ட விதத்தினைப் பார்க்கும் எவருக்கும் அரசியல் விவகாரங்களிலும் இனவாதப் பிக்குகள் மிக இலகுவாகத் தலையீடு செய்வதற்கான முன்னுதாரணத்தை அரசு வழங்கியிருக்கிறது என்பதனை புரிந்துகொள்ள முடியும்" என்று கொழும்பிலுள்ள அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிக்குகளின் உண்ணாவிரதமும் அதற்கு அரசு அடிபணித்த விதத்தினையும் அரசியல் அவதானிகள் விமர்சித்து வரும் அதேவேளை மகாசங்கத்தினரை அரசியலுக்குள் இழுத்துவிடும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரணிலை கடந்த வாரம் சந்தித்த பீடாதிபதிகள், ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையிலான சிக்கலை தமக்கு விளங்கப்படுத்துமாறு கோரினர். இதனையடுத்து அவர்களுக்கு விளக்காமான பதிலை அளித்த ரணில் சமாதானப் பேச்சுக்கள் சுமூகமான முறையில் நடப்பதற்கு பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட அமைச்சுக்கள் மீதான அதிகாரம் தன்னிடம் இருக்கவேண்டும் என்று கூறினார். இதனையடுத்து ரணிலுடன் பேசிய பீடாதிபதிகள், ரணிலின் விளக்கத்தினைத் தாம் புரிந்துகொள்வதாகவும், ஆனால் சந்திரிக்கா இதுகுறித்து தமக்கு வேறுவகையான விளக்கத்தினை வழங்கியிருப்பதாகவும் கூறினர். பீடாதிபதிகளில் அதிகாரம் படைத்தவராகக் காணப்படும் பெல்லன்வில விமலரத்ன தேரை பேசும்போது, "நீங்களும், சந்திரிக்காவும் நேரடியாக எங்கள் முன்னால் வந்து உங்களின் பிரச்சினையினைக் கூறுவதன் மூலமே எம்மால் இதுகுறித்த முடிவிற்கு வரமுடியும். அதன் மூலமே எம்மால் இதற்கான தீர்வினை எடுக்கமுடியும்" என்றும் கூறினார். இதனை நகைச்சுவையாக மறுதலித்த ரணில், "நாம் இருவரும் ஒரே இடத்தில் எமது பக்க நியாயங்களைப் பேசினோம் என்றால் பொறிபறக்கும்" என்று கூறினார். இதனையடுத்து பீடாதிபதிகளின் மத்தியஸ்த்திற்கான முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த டெயிலி மிரரின் ஆசிரியர்த் தலையங்கம் பீடாதிபதிகள் தொடர்ந்தும் ரணிலுக்கும் சந்திர்க்க்காவுக்கும் இடையே சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் செய்தியில், "எமது பார்வையில் பீடாதிபதிகளின் முயற்சி எளிதில் தட்டிக் கழித்துவிடும் ஒன்றல்ல. அது அவர்களின் கடமையென்றே நாம் நினைக்கிறோம். நாடு தற்போது இருக்கும் மிகவும் அபாயகரமான சூழ்நிலையில், சரித்திர காலம் தொட்டு பீடாதிபதிகள் ஆற்றிவந்த அரசியல்த்தலைவர்களுக்கான அறிவுரையினையும், வழிகாட்டலினையும் அவர்கள் தற்போதும் வழங்க வேண்டும். இதனூடாகவே நாடு எதிர்நோக்கும் சிக்கலான விடயங்களுக்கு எம்மால் தீர்வு காண‌ முடியும்" என்று கூறப்பட்டிருந்தது. மேலும் "ரணிலிற்கும், சந்திரிக்காவிற்கும் இடையிலான சிக்கலைத் தீர்ப்பதற்கு மகாசங்கத்தினர் திறமையுள்ள பிக்குகள் சிலரைக் கொண்ட குழுவொன்றினை அமைத்து, பிரச்சினையினை சரியாக ஆராய்ந்து இரு தலைவர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் அவ்வாசிரியத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  9. இந்தியாவுடன் நட்புப் பாராட்ட முயன்ற புலிகளும், வடக்குக் கிழக்கைப் பிரிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடிய ஜே.வி.பி யினரும் மார்கழி 15, 2003 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய தமிழ்ச்செல்வன், இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த புலிகள் விரும்புவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் லண்டன் மாவீரர் தின உரையில் அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவுபடுத்திய‌ தமிழ்ச்செல்வன், அதன்படி கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனது மாவீரர் தின உரையில் பேசிய பாலசிங்கம், "இந்தியாவின் பூகோள அரசியல், மூலோபாய பொருளாதார‌ நலன்களைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடப்போவதில்லை. இந்திய அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான உறவுகளை வளர்த்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். அவ்வாறே இந்தியாவும் ஈழத்தமிழர் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளவேண்டும்" என்று கேட்டிருந்தார். தனது உரையில் இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையே சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளம் குறித்து பாலசிங்கம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்தும் பேசும்போது, "நாம் இரு பகுதியினருமே முன்னைய காலங்களில் சில தவறுகளைப் புரிந்திருக்கிறோம். ஆகவே பழயனவற்றை மறந்து, முன்னோகிச் செல்ல நாம் முயல வேண்டும். எமது அமைப்புடன் நட்புரீதியான உறவுகளை உருவாக்குவதற்கு இந்தியா நவீன வழிமுறைகளையும் முயற்சிகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று நாம் இந்தியாவை வேண்டிக்கொள்கிறோம்" என்றும் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் சம்பந்தன் பேசும்போது, "இந்தியாவுடன் நட்புரீதியான உறவுகளை நாம் மேற்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். தமிழர்களையும் இந்தியாவையும் எதிரிகளாக்கும் உத்தியுடன் செயற்பட்டுவரும் சிங்களப்பேரினவாதிகளின் முயற்சிகளை நாம் தடுத்து நிறுத்துவது அவசியமானது. அதன் ஒருபடியாக இந்திய தூதுவர் நிருபன் சென் அவர்களை கொழும்பில் நாம் சந்திக்கவிருக்கிறோம்" என்று அவர் கூறினார். சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்கும் கைங்கரியங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தேசபக்தி அமைப்பு எனும் தீவிர சிங்கள இனவாதக் குழு கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் தூதுவர் நிருபன் சென்னைச் சந்தித்து கையளித்த மனுவில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கொடுப்பதானது இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் விரோதமானது என்று குறிப்பிட்டிருந்தது. ஆகவே வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்றும் அது இந்தியாவைக் கேட்டிருந்தது. ஆகவே, உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள், இந்தியா ஈழத் தமிழர்களை நசுக்கி, முற்றாக அழிப்பதற்கு உந்தித்தள்ளும் சிங்கள பேரினவாதிகளின் முயற்சிகளை முறியடிப்பது அவசியம். தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கையில் தமிழர்களின் நீதியான அபிலாசைகளை அடைவதற்கு இந்தியா சிநேகபூர்வமான நிலைப்பாட்டினையெடுத்து தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டிருந்தது. மேலும், ஈழத்தமிழர்களால் இந்தியாவின் பூகோள ஸ்த்திரத் தன்மைக்கோ, பாதுகாப்பிற்கோ அல்லது இறையாண்மைக்கொ ஒருபோது அச்சுருத்தல் ஏற்படாது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியிருந்தது. தமிழர்களின் கல்வியினை முன்கொண்டு செல்லும் சம்மேளனம் எனும் அமைப்பு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "தமிழர்கள் கெளரவத்துடனும், அமைதியாகவும் தமது சாதாரணமான வாழ்வினை வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த இந்தியா சாதகமான நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்" என்று கேட்டிருந்தது.
  10. நாங்கள் நம்பமாட்டோம். இது வடகொரியாவின் வீரர்கள் இல்லை. சீனப்படம் ஒன்றில் இருந்து எடுத்த துண்டுகளை மேற்குலகம் எடுத்துவந்து கதை விடுகிறது. ர‌ஸ்ஸியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ரஸ்ஸியாவினுள் வடகொரியா துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவே உறுதிப்படுத்தத் தவறிவிட்டது. ஆகவே புட்டின் வடகொரியாவின் உதவியில்லாமல் தனியே நின்றுதான் சண்டைபிடிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் வடகொரியாவின் ஆயுதங்களோ, ஈரானின் ட்ரோன்களோ எவையுமே ரஸ்ஸியாவினுள் கொண்டுவரப்படவில்லை. எல்லாமே மேற்குலகால் அவிழ்த்துவிடப்பட்ட பொய்கள். உக்ரேனின் 90 வீதமான பகுதிகளை ரஸ்ஸியா பிடித்துவிட்டது. செலென்ஸ்கி தப்பி ஓடிவிட்டார். இன்னும் 24 மணித்தியாலத்தில் முழு உக்ரேனும் மேன்மைதங்கிய புட்டினின் படைகளால் கைப்பற்றப்பட்டுவிடும். ‍ இப்படிக்கு, சதிக்கோட்பாட்டுத் தளபதி.
  11. வடகொரியத் துருப்புக்கள் ரஸ்ஸியப் படைகளுடன் இணைந்து கேர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனின் படைகளுக்கெதிராகப் போரிடுவது உண்மை. இங்கு சதிக்கோட்பாடுகளைக் காவித்திரியும் ஒருவரைத்தவிர ஏனையவர்கள் எல்லோருக்கும் இது தெரிந்த விடயம் தான். இரு வடகொரியப் போர்வீரர்களை தாக்குதல் ஒன்றின்போது உக்ரேன் உயிருடன் பிடித்த ஒளிப்படங்களை சர்வதேச ஊடகங்கள் காட்டியபோதும், அதனை இல்லையென்று அடம்பிடிப்பது பூனை கண்களை மூடிக்கொண்டு பால்குடிப்பதற்கு ஒப்பானது. அது அவரது தனிப்பட்ட விருப்பம், இதில் மற்றையவர்கள் சொல்வதற்கு ஏதுமில்லை. அடுத்தது தான் பத‌விக்கு வந்து 24 மணிநேரத்தில் ரஸ்ஸிய - உக்ரேன் போரினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடுவேன் என்று ட்ரம் கடந்த வருட இறுதியில் கூறியிருந்தார். ஆனால் ஜனாதிபதியாக தேர்தலில் வென்றபின் அந்த 24 மணித்தியாலங்கள் இப்போது 100 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் நினைத்ததைக் காட்டிலும் நிலைமை தீவிரமாக இருப்பதை அவரது ஆலோசகர்கள் அவருக்குக் கூறியிருக்கிறார்கள். ஆனால், புட்டினுக்குச் சார்பாகவே ட்ரம்ப் நடந்துகொள்வார் என்று நினைப்பது மடைமை. அமெரிக்காவின் நலன்களை விட்டுக் கொடுத்து, அதன் ப‌ரம வைரியான‌ ரஸ்ஸிய சர்வாதிகாரியை ஆதரிக்கவேண்டிய தேவை அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும் ட்ரப்பிற்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான். உக்ரேனிற்கு வாரியிறைக்கும் பணத்தை ட்ரம்ப் நிறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே உக்ரேனை சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவைத்து போரினை முடிவிற்குக் கொண்டுவரவே அவர் முயல்வார். ரஸ்ஸியாவினால் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதைக் காட்டிலும் உக்ரேனிற்கு இது கெளரவமானது. புட்டினுக்கும் அதிக கெளரவ இழுக்கில்லாமல் போரை நிறுத்திக்கொள்ள இது உதவும். ரஸ்ஸியாவிலிருந்து தனக்குக் கிடைக்கும் எண்ணெய், கணியவளம், பணவுதவிகள், ஏவுகணைத் தொழிநுட்பம் என்பவற்றிற்காகவே தனது படைவீரர்களை வடகொரிய சர்வாதிகாரி ரஸ்ஸியாவிற்கு அனுப்பியிருக்கிறார். ஆரம்ப கட்டமாக அனுப்பப்பட்ட 11,000 வடகொரிய வீரர்களில் இதுவரை 3,000 இற்கும் அதிகமானோர் கள‌முனையிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றனர். சிலநாட்களுக்கு முன்னர் கேர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருக்கின்றனர். ஆனாலும் தனது படைவீரர்களை ரஸ்ஸியாவிற்கு அனுப்புவதை கிம் நிறுத்தப்போவதில்லை. இன்னும் 40,000 முதல் 50,000 படைவீரர்களை கிம் விரைவில் அனுப்பிவைக்கலாம் என்று உக்ரேனிய அதிபரே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். கிறீன்லாந்து விவகாரம் தனியானது. தற்போதும் அங்கு அமெரிக்கத் தளங்கள் இருக்கின்றன. மேற்குலகின் பாதுகாப்பிற்காக அங்கு அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் முழு கிறீன்லாந்தையுமே அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்கவேண்டும் என்று ட்ர்மப் கூறுகிறார். ஐரோப்பாவின் பாதுகாப்பு முக்கியம் என்றால் அதனை என்னிடம் தாருங்கள் என்பதே அவரது வாதம். கிறீன்லாந்தின் மீது டென்மார்க் அதிகாரம் கொண்டிருக்கிறது என்பது ஓரளவிற்கே உண்மையானது. ஆனால் கிறீன்லாந்து என்ன செய்யவேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று டென்மார்க் பிரதமர் கூறியிருக்கிறார். ரஸ்ஸியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இருக்கும் நிலப்பகுதியான கிறீன்லாந்தை தன்னிடம் தரச்சொல்லி ட்ரம்ப் கோருவது ரஸ்ஸியாவுடன் விளையாட்டுப் போட்டி நடத்தவல்ல. அடுத்தது பணாமாக் கால்வாய். அமெரிக்காவின் பெரும் முதலீட்டுடன் செய்துமுடிக்கப்பட்டு 1999 இல் பணாமாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட இக்கால்வாயைச் சுற்றி சீனா தனது முதலீடுகளைச் செய்துவருகிறது. சீனச் சார்பு அரசு பணாமாவில் ஆட்சியில் இருப்பதால் அவ்வரசை தனது பணத்தால் வாங்கிவிட்ட சீனா, அமெரிக்காவின் அடிவயிற்றிலேயே தனது கோட்டைகளைக் கட்டிவருகிறது. பணமாக் கால்வாயூடாக நடைபெறும் வர்த்தகக் கப்பல்களில் சுமார் 40 இலிருந்து 60 வீதம் வரையான கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஆகவே தனது வர்த்தகத்தைத் தக்கவைக்கவும், தன்னால் கட்டிமுடிக்கப்பட்ட கால்வாய் தனது புதிய எதிரியான சீனாவின் கட்டுப்பாட்டில் செல்வதைத் தடுக்கவும் ட்ரம்ப் முயல்கிறார் என்று தெரிகிறது. இதனாலேயே பணமாக் கால்வாயினை மீளவும் பொறுப்பெடுக்கப்போகிறோம் என்று ட்ரம்ப் கூறுகிறார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்ப்பின் கூற்று நகைப்பிற்கிடமானது. தான் அதிகரிக்கவிருக்கும் வரியை (25%) நியாயப்படுத்தவே இதனை அவர் செய்கிறார். கனேடிய எல்லைகளுக்கூடாக பல தஞ்சக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவினுள் நுழைவதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருக்கலாம்.
  12. ரணிலுக்கும், சந்திரிக்காவுக்கும் இடையே தொடரும் பலப்பரீட்சையும், அதன் முடிவில் வரும் அதிகாரம் மிக்க சிங்களத் தலைவருடன் பேச்சுக்களை ஆரம்பிக்க விரும்பிய புலிகளும் மார்கழி 15, 2003 ரணில் அரசிடமிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களைப் பறித்துக்கொண்டபோது தான் இன்றிருக்கும் அசெளகரியமான நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று சந்திரிக்கா எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ரணிலின் அரசைக் கவிழ்த்து, தனது அரசை அமைக்கலாம், ரணிலின் கூட்டணியிலிருந்து சிலர் தன் பக்கம் தாவலம், குறிப்பாக முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் தன்பக்கம் வரலாம் என்று அவர் எதிர்பார்த்தார், ஆனால் இவை எதுவுமே நடக்கவில்லை. சமாதானப் பேச்சுக்களைக் குழப்புபவர் எனும் அவப்பெயரைத் துடைத்தழிக்க அவர் பகீரதப் பிரயத்தனத்தில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். தான் ரணிலுடன் இணங்கிச் செல்ல முயற்சிக்கின்றபோதிலும் ரணில் பிடிவாதமாக இருக்கிறார் என்று அவர் கூறுகிறார். வர்த்தகர் சங்கங்களின் பிரதிநிதிகளை தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த சந்திரிக்கா, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சேர்ந்து பணியாற்றலாம் வாருங்கள் என்று தான் விடுத்த அழைப்பிற்கு ரணிலின் அரசிடமிருந்து சாதகாமன பதில் எதுவும் இதுவரையில் வரவில்லை என்று கடிந்துகொண்டார். மேலும் தனது ஒரே குறிக்கோள் நாட்டின் நலன்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ரணில் அரசுடன் இணைந்து செயலாற்றுவதுதான் என்றும் கூறினார். "அனைத்து முஸ்லீம் மற்றும் தமிழ் அரசியட் கட்சிகளையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் எனது யோசனைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பிரதமர் ரணிலுக்கு எனது யோசனை மீது அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக இதற்கு இணங்க மறுக்கிறார் என்று நான் நினைக்கின்றேன்" என்று சந்திரிக்கா கூறினார். மேலும், "பிரதமருடனான சந்திப்புக்களின்போது அனைத்துக் கட்சிகளையும் இணைத்துச் செயற்படும்போது மக்கள் விடுதலை முன்னணியினரையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரினேன். ஆனால் ரணில் இதனை விரும்பவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால், தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் தனது முக்கியத்துவம் இல்லாமற்போகலாம் என்று அவர் அச்சப்படுகிறார், தனது அதிகாரங்கள் குறைக்கப்படலாம் என்று அவர் கவலைப்படுகிறார். அவரால் தனித்து முடிவுகள் எடுக்கமுடியாது போகும், என்னையும் எனது கட்சியையும் கலந்தாலோசிக்காது அவரால் எந்த முடிவையும் எடுக்கமுடியாத நிலை உருவாகும்" என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பாதுகாப்புத்துறையினை தான் கைவசப்படுத்தியிருந்தாலும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதற்காக அமைச்சின் கீழ் வரும் சில விடயங்களை ரணிலுக்கு விட்டுக் கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகவும் ஆனால் ரணிலோ அதற்கும் உடன்பட மறுக்கிறார் சந்திரிக்கா காட்டிக்கொள்கிறார். கடந்த புதனன்று சந்திரிக்காவிற்கும், ரணிலிற்கும் டையே இடமொபெற்ற நான்காவது சுற்றுப் பேச்சுக்களின்போது சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ரணிலிடம் சந்திரிக்கா தெரிவித்தார். "உங்களுக்கு வேண்டுமென்றால் பாதுகாப்பு அமைச்சினை நீங்களே வைத்துக்கொள்ளலாம். அது எனக்குத் தேவையில்லை. ஆனால் சமாதானப் பேச்சுக்களுக்கான பொறுப்பினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று ரணில் சந்திரிக்காவிடம் தெரிவித்தார். "இல்லை, அதனை நீங்களே கவனித்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்ற சில விடயங்களை பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக என்னால் விட்டுத் தர முடியும்" என்று சந்திரிக்கா பதிலளித்தார். "எந்த விடயங்களை என்னிடம் தரலாம் என்று முடிவெடுத்திருக்கிறீர்கள்" என்று ரணில் வினவவும், "வடக்குக் கிழக்கில் இருக்கும் இராணுவத்தினரும், பொலீசாரும் உங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள்" என்று சந்திரிக்கா பதிலளித்தார். இதனை ஏற்கமறுத்த ரணில், "நீங்கள் கூறுவது நடைமுறையில் சாத்தியமற்றது" என்று கூறினார். "வடக்கின் இராணுவத் தளபதிக்கு நான் ஒரு கட்டளையினை இடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உடனடியாக இராணுவத் தளபதிக்கு எனது கட்டளைக்கு முரணான கட்டளை ஒன்றினை வழங்குவீர்கள். இராணுவத் தளபதியும் அதனை அப்படியே வடக்கின் தளபதிக்கு வழங்குவார். வடக்கின் தளபதி யாரின் கட்டளையினை ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு தீர்வினை வழங்க முனையவில்லை, மாறாக இன்னும் இன்னும் குழப்பகரமான சூழ்நிலையினையே ஏற்படுத்த முயல்கிறீர்கள்" என்று சந்திரிக்காவிடம் கூறினார் ரணில். இதன்பின்னர் சந்திரிக்காவின் ஆலோசனைகளுக்கு மாற்றாக தனது யோசனையொன்றினை ரணில் முன்வைத்தார். அதன்படி பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதியே தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் முடிவெடுப்பதற்கு பாதுகாப்புக் கவுன்சில் என்று ஒரு சபை உருவாக்கப்படு, இதற்கு ஜனாதிபதியே தலைமை தாங்குவார்.இராணுவத்தினரும், புலநாய்வுத்துறையும் பிரதமரின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்பதே ரணிலால் முன்வைக்கப்பட்ட யோசனை. ஆனால் இவை அனைத்தையும் சந்திரிக்கா முற்றாக நிராகரித்தார். சந்திரிக்காவின் நிராகரிப்போடு அன்றைய ஜனாதிபதி பிரதமர் சந்திப்பு முடிவிற்கு வந்தது. ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே இணக்கப்பட்டினை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த சமரவிக்கிரம - தித்தவல குழுவினர் எந்தவித முடிவும் எடுக்கமுடியாது தமது கூட்டத்தையும் அன்றிரவு முடிவிற்குக் கொண்டுவந்தனர். மேற்கொண்டு பேச்சுக்களை தொடர்ந்து நடத்த இக்குழுவினர் வெள்ளியன்றோ அல்லது அடுத்தவாரம் திங்களிலோ அடுத்த கூட்டத்தை நடத்தலாம் என்று ஒத்துக்கொண்டனர். வெள்ளியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினரிடையே பேசிய ரணில், சந்திரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது இயலாத காரியம் என்றும், அவர் அடிக்கடி தனது முடிவுகளை மாற்றிவருகிறார் என்றும் விமர்சித்தார். வெள்ளியன்று சந்திரிக்காவைச் சந்தித்த மக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழுவும் ரணில் கூறியதை சந்திரிக்காவின் முகத்திற்கு நேராகக் கூறினர். தனது கட்சிக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல்களுக்கு தான் ஆணைவழங்கப்போவதில்லை என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடமும், பாராளுமன்ற குழுவின் தலைவர் விமல் வீரவன்சவிடம் சந்திரிக்கா கூறினார். சந்திரிக்காவின் கூற்றையடுத்து கோபமடைந்த டில்வின் சில்வா, "மடம், ரணில் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பவே நாம் உங்களுடன் கைகோர்த்திருக்கிறோம். அதனை மாகாணசபைத் தேர்தகள் மூலம் செய்யமுடியாது. நீங்கள் உங்கள் முடிவுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறீரகள்" என்று கூறினார். ஆனால் தனது கட்சியினர் இன்னொரு தேர்தலுக்கு முகம்கொடுக்கும் நிலையில் இல்லையென்பது சந்திரிக்காவிற்கு நன்கு தெரியும். ஆகவேதான் மக்கள் விடுதலை முன்னணியின் கோரிக்கையான பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடுங்கள் என்பதை சந்திரிக்காவின் கட்சியினர் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றனர். தனது கட்சியினரின் நிலைப்பாட்டினை சந்திரிக்கா அறியாதவர் அல்ல. அரசியல் அவதானிகளின் கருத்துப்படி ஐக்கிய தேசியக் கட்சியின் 49 ஆவது ஆண்டு மாநாட்டில் ரணில் புதிய தேர்தல்களை நடத்துமாறு சந்திரிக்காவிடம் கோரிக்கை முன்வைத்தது சந்திரிக்காவின் கட்சியினருக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே முறுகல் நிலையினை ஏற்படுத்தவே என்று கூறப்படுகிறது. பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் டையிலான பலப்பரீட்சை சுமார் ஒன்றரை மாத காலமாக இழுபட்டுச் செல்கிறது. இப்பலப்பரீட்சை இப்போதைக்கு முடிவடையப்போவது போன்றும் தோன்றவில்லை. இராணுவத்தின் மீது பூரண அதிகாரம் கொண்ட சிங்களத் தலைவர் ஒருவர் இப்பலப்பரீட்சையின் முடிவில் உருவாகும்வரை பேச்சுக்களை பிற்போடுவதற்கு புலிகள் முடிவெடுத்திருப்பதாகவே தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை வியாழன் அன்று சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இத்தொனிப்படவே பேசியிருந்தார்.
  13. இலங்கையின் பாதுகாப்பு, பூகோள ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பேணிக்கொண்டே தமிழர்களின் தீர்வு வழங்கப்படவேண்டும், கடற்புலிகளுக்கான அந்தஸ்த்தினை வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும் ‍- இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் ராஸ்கோத்ரா 8 மார்கழி, 2003 ரணில் விக்கிரமசிங்கவுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து, சமாதானப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையினை உருவாக்க வேண்டும் என்கிற கடுமையான அழுத்தம் சந்திரிக்காவின்மீது சர்வதேசத்தால் போடப்பட்டு வருகிறது. கொழும்பிலிருக்கும் ஐந்து சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் சந்திரிக்காவை கடந்தவாரம் சந்தித்து கொழும்பில் ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சிக்கலினை உடனடியாகத் தீர்த்துவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளே இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் ஆவர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஜப்பானியத் தூதுவர் பேசும்போது, டோக்கியோ மாநாட்டில் வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட உதவித்தொகையினை சமாதானப் பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டால் ஒழிய வழங்கமுடியாது என்று கூறினார். இந்தியத் தூதுவர் பேசும்போது இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அரசியலில் ஸ்த்திரத்தன்மை பேணப்படுவது அவசியம் என்று வலியுறுத்தினார். ஆகவே ரணிலுடன் இணைந்து பணியாற்றி ஸ்த்திரத்தன்மையினை ஏற்படுத்துமாறும், சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்குமாறும் சந்திரிக்காவிடம் அழுத்தம் கொடுத்தார். இந்தியாவை மைய்யமாகக் கொண்டியங்கும் மூலோபாயக் கற்கைகளுக்கான மையம் எனப்படும் அமைப்பினால் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட "இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்" எனும் கருப்பொருளிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள இந்தியாவிலிருது வருகை தந்திருந்த இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் எம்.கே.ராஸ்கோத்ரா பேசும்போது, இலங்கையில் ஏற்படுத்தப்பட்டும் எந்தவொரு தீர்வும் இலங்கையின் ஒருமித்த நாட்டுக் கொள்கை, பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு என்பன உறுதிசெய்யப்பட்டதுமான தீர்வுக்குள்ளேயே தமிழர்களுக்கான தீர்வு அமைதல் அவசியம் என்று வலியுறுத்தினார். கடற்புலிகளுக்கான அந்தஸ்த்தினை இலங்கை வழங்குமானால் இந்தியா அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று உறுதிபட அவர் கூறினார். அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னாள் கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தாஸும் இதே கருத்தினை வலியுறுத்திப் பேசினார். சமரவிக்கிரம - தித்தவல ஆணைக்குழு வருகிற திங்கட்கிழமையில் இருந்து புதன்கிழமை வரை மேற்கொள்ளவிருக்கும் சந்திப்புக்களின்போது ரணிலும், சந்திரிக்காவும் இணைந்து பணியாற்றக்கூடிய தீர்வினை உருவாக்கவும், அதனூடாக சமாதான முயற்சிகளை இணைந்தே முன்னெடுக்கும் சூழ்நிலையினை உருவாக்கத் தேவையான ஆலோசனைகள் பற்றியும், அரசியலமைப்பில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான பேச்சுக்கள் வெற்றியளிக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அவ்வாறு வெற்றியளிக்கும் பட்சத்தில் மீளவும் பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கும் பொருட்டு தை மாதத்தில் நோர்வே மத்தியஸ்த்தம் வகிக்க அழைக்கப்படாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையிலான பேச்சுக்கள் தோற்கும் பட்சத்தில் நாடு இன்னொரு தேர்தலுக்குப் போவதைத் தடுக்க முடியாதிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ரணிலும், சந்திரிக்காவும் தேர்தல்களை எதிர்நோக்கியே செயற்பட்டு வருவதாகத் தெரிகிறது. மாவட்ட ரீதியிலான பேரணிகளை ரணில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுக்களில் சந்திரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இன்னும் பல தடைகளைத் தாண்டவேண்டியிருக்கிறது. தம்முடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவுடன் சந்திரிக்கா உடனடியாகப் பொதுத்தேர்தலினை நடத்தவேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி நிபந்தனை விதித்து வருகிறது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினருடனான தனது கூட்டணியின் பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக மாசியில் நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தலினைப் பயன்படுத்த சந்திரிக்கா விரும்புகிறார். அதேவேளை சந்திரிக்காவின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் ஏழு கட்சிகளில் இரு கட்சிகள் கூட்டணியினரிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. லங்கா சம சமாஜக் கட்சியும், கம்மியூனிஸ்ட் கட்சியும் தமக்குக் கால அவகாசம் தேவை என்று சந்திரிக்காவிடம் கோரியிருக்கின்றன. ஆனந்தசங்கரி - சம்பந்தன் நாடகம் ஆக, இம்மாதிரியான தீவிர அரசியல் நகர்வுகள் தேசிய மட்டத்தில் நடந்துவருகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒருபக்கம் தமது நாடகத்தினை நடத்தி வருகின்றனர். கட்சியின் மத்திய குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரிக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினை நிறைவேற்றியிருக்கும் நிலையில், அதுகுறித்த கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. "நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையினை நிறைவேற்றிவிட்டோம்" என்று கட்சியின் செயலாளர் சம்பந்தன் கூறிவரும் அதேவேளை, "இல்லை, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படுமுன்னரே நான் கூட்டத்தைக் கலைத்துவிட்டேன், ஆகவே பிரேரணை செல்லுபடியாகாது" என்று கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி கூறிவருகிறார். அதுமட்டுமல்லாமல், இதுகுறித்து தான் நீதிமன்றத்தின் உதவியினை நாடவிருப்பதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார். ஆனால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் கட்சியின் அரசியல்யாப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதன்படி ஒழுக்கவியல் குழுவினை அமைப்பதுகுறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ஒழுக்கவியல் குழு மார்கழி 13 ஆம் திகது கூடி ஆனந்தசங்கரியின் அரசியல் எதிர்காலம் குறித்த முடிவினை எடுக்கவிருக்கிறது.
  14. மார்கழி 8, 2003 தென்னிலங்கை அரசியட் சிக்கல் குறித்து பேச்சுக்களில் ஈடுபட்ட ரணில் சந்திரிக்கா புத்தளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரவி கருணநாயக்க, "எமது அரசாங்கத்திடமிருந்து முக்கியமான மூன்று அமைச்சுக்களை பிடுங்கி எடுக்கும் முன்னர் புலிகளுடனான எமது சமாதான ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்று சந்திரிக்கா கூறிவந்தார். ஆனால் தற்போதோ சமாதான ஒப்பந்தத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைய ஒழுகுமாறு இராணுவத்தினரையும் ஏனைய அரச படைகளையும் அவர் கேட்டிருக்கிறார். ஆக நாம் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம் தற்போது சட்டத்திற்கு அமைவானது என்று அவர் கூறுகிறார்". தனது அடியாட்கள் சந்திரிக்காவை ஏளனம் செய்து பிரச்சாரம் செய்துவரும் வேளையில் தன்னை ஒழுக்கமானவராகவும், நாட்டிற்காக எத்தகைய தனிப்பட்ட தியாகத்தினையும் செய்யும் பொறுமையுடையவராகவும் சர்வதேசத்தின் முன்னால் காட்டும் கைங்கரியங்களில் ரணில் இறங்கியிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை புத்தளத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ரணில், "நான் ஜனாதிபதியோடு சண்டை பிடித்திருக்கலாம். ஆனால் நாட்டின் நலன்கருதி அதனைத் தவிர்த்துவிட்டேன். தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல்ச் சிக்கலில் இருந்து மீண்டு வெளியே வருவதற்கான பேச்சுக்களில் ஜனாதிபதியுடன் நான் ஈடுபட்டிருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் நாட்டிற்குத் தேவையானதும் அவசியமனாதும் என்னவென்றால் சமாதானப் பேச்சுக்களை மேலும் முன்கொண்டு செல்வதே" என்று கூறினார். "ஜனாதிபதியுடன் நான் நடத்தும் பேச்சுக்கள் பலந்தருவனவாக இருந்தால் நாடு ஒரு புதிய அரசியல்க் கலாசாரத்திற்குள் செல்லும். அவ்வாறில்லாமல் பேச்சுக்கள் தோல்வியடையுமாகவிருந்தால் முழு நாட்டு மக்களுமே மிகவும் பாரதூரமான‌ சூழ்நிலைக்குள் தள்ளப்படுவார்கள்" என்றும் கூறினார். கடந்த சனிக்கிழமை குருநாகலில் பேசும்போது, "நான் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்து அவர்களின் இலட்சியமான ஈழக்கோரிக்கையினை கைவிடப்பண்ணியிருக்கிறேன். சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வொன்றிற்கு அவர்களை இணங்கச் செய்யும் அதேவேளை, அவர்களது யோசனைகளையும் முன்வைக்கும்படி அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அதன்படி புலிகள் முதன்முதலாக தமது அரசியல் யோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள். அவற்றுள் சிலவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இறுதித் தீர்வொன்றினை அடையும் சந்தர்ப்பத்தினை இது எமக்கு வழங்கியிருக்கிறது. நான் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன சிந்தனை, நவீன நடைமுறைகளினாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது" என்று அவர் கூறினார். ஆனால் ரணிலின் உண்மையான நோக்கம் என்னவென்றால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அதற்கான முழுப் பழியினையும் சந்திரிக்காவின் மீது சுமத்திவிட்டு தான் தப்பிக்கொள்வதுதான். கொழும்பில் சர்வதேச இராஜதந்திரிகளுடனான சந்திப்பின்போது, சந்திரிக்காவினால் பலவந்தமாக தனது அரசிடமிருந்து பிடுங்கப்பட்ட மூன்று முக்கிய அமைச்சுக்களையும் மீளப்பெற்றுக்கொள்வதில் தனக்கு அக்கறையில்லை என்று அவர் கூறியிருக்கிறார். பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்திச் சென்று, எடுக்கப்படும் முடிவுகளை அமுல்ப்படுத்துவதற்கான அதிகாரம் தனக்கு இருந்தாலே போதுமானது என்று அவர் கூறினார். தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில் சந்திரிக்காவுடன் கடந்த வெள்ளியன்று 40 நிமிடங்கள் பேசிய ரணில், தனது நிலைப்பாட்டினை மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வது நாட்டின் அதிமுக்கிய தேவை என்று சந்திரிக்காவிடம் கூறிய ரணில், பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதில் ஏற்படுத்தப்படும் எந்த கால விரயமும் நாட்டிற்கு அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். பின்னர் சமாதானப் பேச்சுக்களுக்கான பொறுப்பினை சந்திரிக்காவே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அவர் கோரினார். ரணிலின் கோரிக்கையினை நிராகரித்த சந்திரிக்கா, பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்துமாறு ரணிலைக் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பேச்சுக்களை முன்னெடுக்க சம்மதித்த ரணில், பாதுகாப்புத்துறையினை சந்திரிக்கா வைத்திருக்கலாம் என்றும், ஆனால் பேச்சுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பலம் தனக்கு வழங்கப்படவேண்டும் என்றும் கோரினார். சமாதானப் பேச்சுக்களில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பேசப்படும் விடயங்களின்போது சந்திரிக்காவும் பார்வையாளராக அமரமுடியும் என்றும் ரணில் கூறினார். மேலும் பேச்சுவார்த்தைகளில் சந்திரிக்காவும் காத்திரமான பங்கினையாற்றும் பதவியொன்றினை தன்னால் உருவாக்கித்தர முடியும் என்றும் கூறினார். இதுதொடர்பாக சமரவிக்கிரம - தித்தவல ஆணைக்குழு ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். தென்னிலங்கை அரசியற் சிக்கல் தொடர்பான பேரம்பேசல்கள் நீண்டகாலம் இழுபட முடியாது என்று ரணில் சந்திரிக்காவிடம் கூறினார். இதனால் நாட்டிற்கு பாதகமான விளைவுகளே உருவாகும் என்று கூறிய ரணில், ஐக்கியதேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டினை மனதிற்கொண்டு, இவ்வரசியட் சிக்கலுக்கான தீர்வு மார்கழி 15 ஆம் திகதிக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நடைபெற்று வரும் அரசியட் பேரணிகளில் தான் கலந்துகொள்ளப்போவதாகவும், இன்னொரு தேர்தலுக்காக ஆயத்தமாகும்படி நாட்டு மக்களையும், தனது கட்சி ஆதரவாளர்களையும் தான் கேட்கப்போவதாகவும் சந்திரிக்காவிடம் அவர் கூறினார். இதற்குப் பதிலளித்த சந்திரிக்கா, அரசியட் சிக்கலுக்கான தீர்வு விரைவாக உருவாவதைத் தானும் விரும்புவதாகவும், ஏதோவொரு வழியில் இதனை அடைந்தே தீருவது என்று தான் முடிவெடுத்திருப்பதாகவும் கூறினார்.
  15. மார்கழி 8, 2003 கடந்த வாரம் மிகவும் சுவாரசியமான, முக்கியமான விடயங்கள் இலங்கையில் நடந்தேறின. முதலாவது வினோதமான விடயம் கிரிக்கெட் உலகில் வேறு எங்கிலும் இதுவரை நடந்திராதது. சர்வதேச கிரிக்கெட்ட் ஆட்டங்களில் முக்கிய அமைப்பாகக் காணப்படும் எம்.ஸி.ஸி பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்நாட்களில் இலங்கை அணியின் காலி டெஸ்ட் ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், சர்வதேசக் கிரிக்கெட் பிரமுகர்கள் வருகைதந்த இவ்வாட்டத்தினைக் கண்டுகளிக்க இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவத்தின் தலைவர் திலங்க சுமதிபால அங்கு பிரசன்னமாகி இருக்கவில்லை என்பதுதான். அவரைத்தேடி நாடு முழுவதும் பொலீஸ் விசாரணையாளர்கள் செயற்பட்டுவரும் நிலையில் அவர் தலைமறைவாகியிருக்கிறார் என்பதுதான் உண்மை. இலங்கையின் வெளியகல்வு, உள்வரவு விதிகளை மீறினார் என்கிற குற்றச்சாட்டில் அவருக்கெதிராக பிடியாணை ஒன்றினை சட்டவாளர் அலுவலகம் நீதிமன்றமூடாக விதித்திருந்தது. மிகவும் பிரபலமான பாதாள உலகக் கொலைக்குழுவின் தலைவனான தம்மிக்க அமரசிங்கவை போலியான கடவுச்சீட்டினூடாக இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல திலங்க சுமதிபால உதவினார் என்பதற்காகவே அவர்மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை உரிமைகள் மீதான மீறல் என்று திலங்க சுமதிபால தன்மீதான பிடியாணை குறித்து நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தபோதிலும், அதனை ஏற்கத் தவறிய நீதிமன்றம் இவருக்கெதிரான‌ முடிவினை விரைவில் எடுக்குமாறு சட்டவாளர் திணைக்களத்திடம் கோரியுள்ளது. அதன்படி சட்டவாளர் அலுவலகம் நீதிமன்றிற்கு வழங்கியிருக்கும் அறிவிப்பில் இதுகுறித்து தை மாதம் 8 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் அதுவரையில் சுமதிபால ஒளிந்திருக்க வேண்டும் அல்லது தானாக வந்து சரண‌டைதல் வேண்டும். சுமதிபாலவிற்கு ஆதரவாக சந்திரிக்கா செயற்படுவதாக் கூறி மக்களிடையே அதிருப்தியொன்று உருவாகி வருகிறது. அத்துடன் ஜனாதிபதிப் பாதுகாப்பு அணியில் இருக்கும் ஒரு பகுதியினர் சுமதிபாலவிற்கு பாதுகாப்பு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலீஸாரின் நடவடிக்கைகளில் தலையீடுகள் இருப்பதாகக் கூறியே ரணில் அரசிடமிருந்த பாதுகாப்புத்துறையினை சந்திரிக்கா பிடுங்கி எடுத்திருந்தார். மேலும், நாட்டில் குற்றச்செயல்கள் அதிகமாகி வருவதாகவும் அவர் தனது நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்திருந்தார். ஆனால் சண்டே லீடர் வார இறுதிப் பத்திரிக்கை வெளியிட்ட தகவல்களின்படி சந்திரிக்காவினால் பொலீஸ் உட்பட்ட பாதுகாப்புத்துறை கையகப்படுத்தப்பட்ட மூன்று வராங்களில் குற்றச்செயல்கள் குறைவடையவில்லை என்பதனையே காட்டுகின்றன. இக்காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளின் எண்ணிக்கையினை வெளியிடாத சண்டே லீடர், இக்காலப்பகுதியில் 69 பாலியல் வன்புணர்வுகளும், 103 கொள்ளைச் சம்பவங்களும், 122 வீடுடைப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் படுகொலைகள் நாள்தோறும் நடைபெற்றே வருகின்றன. கூலிக்குக் கொலை செய்யும் குழுக்களின் எண்ணிக்கை வழமைபோல அதிகரித்தே செல்கிறது. கூலிக்குக் கொலைசெய்வ‌தென்பது மக்களின் நாளாந்த வாழ்வில் வழமையானதாக மாறியிருக்கிறது. நாட்டில் குறைவடையாது நீண்டுசெல்லும் குற்றச்செயல்களைச் சுட்டிக் காட்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், தமது அரசிடமிருந்து பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, ஊடத்துறை என்பனவற்றை சந்திரிக்கா கையக்கப்படுத்தியிருப்பது அரசியல்க் காரணங்களுக்காவன்றி குற்றங்களைத் தடுக்கவல்ல என்று கூறுகின்றனர். ஓரங்கட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதி எனும் பதவியில் இருக்கும் தன்னை மீளவும் அரசியல் வட்டத்தின் மைய்யத்தில் கொண்டுவந்து நிறுத்துவதற்காகவே சந்திரிக்கா இதனைச் செய்கிறார் என்று அவர்கள் கூறுகின்றனர். ரணிலுக்கு நெருக்கமான இரு பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ண மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சந்திரிக்காவின் சூழ்ச்சிகளைப் பற்றி நாட்டு மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் நாடுமுழுதும் வலம்வருகின்றனர். இரத்திணபுரியில் இடம்பெற்ற பொதுக்கூட்டாம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ண, "எமது ஜனாதிபதியைப் பொறுத்தவரை புலிகள் இப்போது நல்லவர்களாக மாறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறையினை அவர் கைய்யகப்படுத்தியதன் பின்னர் புலிகள் நல்லொழுக்கத்துடன் நடக்கத் தொடங்கிவிட்டார்கள். இதை நான் சொல்லவில்லை, ஜனாதிபதியே சொல்கிறார். அவருக்கு வேறு வழியில்லை, இதனைச் சொல்லியே ஆகவேண்டும். அப்படிச் சொல்லாவிட்டால் அவர் புலிகளுடன் போரிற்குச் செல்லவேண்டும், ஆனால் அவரால் அது முடியாதே!" என்று எள்ளி நகையாடினார்.
  16. ரணிலை வீழ்த்த இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியுடன் கைகோர்க்கும் சந்திரிக்கா நாட்டு மக்களின் விருப்பினை அறியும் ஆணைக்குழு கடந்த திங்கள் கூடியது. ஆணைக்குழுவின் தலைவரான சமரவிக்கிரம முன்வைத்த யோசனைகளில் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் ஊடத்துறை என்பனவற்றை ரணில் அரசிடம் சந்திரிக்கா கையளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்புத்துறையினை சந்திரிக்காவே வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புத்துறை சார்ந்த விடயங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சந்திரிக்கா உதவேண்டும் என்றும் அந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாலோசனைகளை சந்திரிக்காவிடம் கொண்டுசென்று அவற்றிற்கான பதிலினை தான் பெற்றுவருவதாக தித்தவலை ஆணைக்குழுவிடம் அறிவித்தார். இதன்படி தித்தவலை புதன்கிழமை சந்திரிக்காவைத் தொடர்புகொண்டபோது இதுகுறித்து விரிவாகப் பேசுவதற்கு தன்னை வியாழன் அன்று வந்து சந்திக்குமாறு சந்திரிக்கா கோரினார். இதனையடுத்து ஆணைக்குழுவின் கூட்டத்தினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தித்தவலை சரமவிக்கிரமிடம் தெரிவித்தார். ஆணைக்குழு வெள்ளியன்று கூடுவதற்கு முன்னதாக தனது கட்டுப்பாட்டில் இருக்கு ஊடக அமைச்சினூடாக அறிவித்தல் ஒன்றினை சந்திரிக்கா மேற்கொண்டார். சமாதானப் பேச்சுக்களை கண்காணித்து வழிநடத்துவதற்கென்று ஜனாதிபதி மற்றும் பிரதமை தலைமையிலான இணைந்த சமாதான ஆணையம் ஒன்றினை நிறுவுவதற்கான ஆலோசனைகள் அவ்வூடக அறிக்கையில் காணப்பட்டது. சமாதான முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதில் அக்கறையுடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் ஏனைய தேசிய அமைப்புக்கள் இணைந்த ஆலோசனைச் சபையொன்று ஜனாதிபதி பிரதமர் தலைமையிலான ஆணைக்குழுவிற்கு உதவலாம் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறும் அரச தரப்பு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் அதிகாரம் உட்பட பேச்சுக்கள் தொடர்பான அனைத்து தீர்மான‌ங்களையும் எடுக்கும் அதிகாரம் இவ்வாணைக்குழுவிடம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளியன்று சமரவிக்கிரமவைச் சந்தித்த தித்தவலை, ஜனாதிபதி சந்திரிக்கா தனது முடிவினை மாற்றிக்கொண்டிருப்பதாகவும், தனது ஆலோசனைகளை ஆணைக்குழுவின் முன்னால் வைக்கும்படி தன்னைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சமரவிக்கிரம, "ஜனாதிபதி சந்திரிக்கா தனது முடிவினை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பாரானால் சமாதானப் பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவது அர்த்தமற்றது, ஆகவே நாட்டு மக்களிடம் அவர்களின் விருப்பினைக் கேட்டு நாம் செல்லலாம்" என்று கூறினார். வெள்ளியன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்குழு ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசனைகளை நிராகரிப்பதென்று முடிவெடுத்தது. "தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நான் அடிபணியவேண்டுமென்று சந்திரிக்கா எதிர்பார்க்கிறார்" என்று ரணில் இக்கூட்டத்தில் தெரிவித்தார். சனியன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணில் சமாதானப் பேச்சுக்களை முன்கொண்டு செல்வதற்கான அதிகார பலம் ஏதுமின்றி தான் இருப்பதாகவும், இதனால் மீளவும் போர் மூளும் சூழ்நிலை உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். "இன்று நடக்கும் அதிகாரப் போட்டி தொடருமாக இருந்தால், சமாதானப் பேச்சுக்கள் முறிவடையும், பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும். பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எவரும் இல்லாமையினால் நாம் போரிற்கே செல்கிறோம் என்று புலிகள் கூறினால் அவர்களை எவராலும் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார். ஆனால், போரினை மீள ஆரம்பிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது புலிகள் அல்ல. சமாதானத்திற்கு தான் ஆர்வமாக இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு இருக்கும் சந்திரிக்காவே போர் மீள ஆரம்பிப்பதை விரும்பிச் செயற்பட்டு வந்தார். போர்வெறியர்களாக இருப்பது யாரென்பதை சர்வதேசச் சமூகம் மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த அரசாங்கங்களிடம் சந்திரிக்காவின் உண்மையான் நோக்கங்கள் குறித்தும், ரணிலின் செயற்பாடுகள் குறித்தும் தெளிவான விபரங்களைக் கூறுவது அவசியமானது. கடந்த வியாழன் அன்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கான இரண்டாவது அமர்வின் வாக்கெடுப்பின்போதும் ரணிலைத் தோற்கடிப்பதற்கான காரியங்களில் சந்திரிக்கா ஈடுபட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கெதிராக வாக்களிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் ஈ பி டி பி கட்சியின் தலைவரான டக்கிளசுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்ட சந்திரிக்கா, வாக்கெடுப்பில் ரணிலின் அரசை எதித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் வாக்களிப்போது டக்கிளஸ் பாராளுமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. ஆனால் ரணில் அரசைக் கவிழ்த்து தனது தலைமையில் அரசாங்கமொன்றினை அமைக்க சந்திரிக்கா எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்றே தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் சந்திரிக்கா அமைக்க விரும்பும் அரசின் பிரதமராக வரப்போகின்றவர் என்று பேசப்படும் அவரது நண்பரான லக்ஸ்மண் கதிர்காமர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் கண்வைத்திருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. சந்திரிக்காவுடன் இணைந்து செயற்படலாம் என்று ரணில் வைத்திருந்த நம்பிக்கையெல்லாம் வீண்போய்விட்டது என்றே படுகிறது. இன்னொரு தேர்தலுக்கு அவரும் தயாராகி வருகிறார் போலத் தெரிகிறது. ஆனால் அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. பாராளுமன்றத்தைக் கலைத்து இன்னொரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் சந்திரிக்காவிடமே இருக்கிறது. ஆனால் அவரும் உடனடியாக இன்னொரு தேர்தலுக்குத் தயாரில்லை. அவரது மக்கள் முன்னணிக்கும் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, தேர்தலில் ரணில் மீளவும் பெருமளவு ஆதர‌வுடன் பிரதமராகும் வாய்ப்பிருப்பதாக சந்திரிக்காவின் கட்சியினரால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. மேலும், இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதில் சந்திரிக்காவுக்கு சில சிக்கல்களும் இல்லாமல் இல்லை. புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் தாம் முன்வைக்கும் நிபந்தனைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபை கோரிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அன்றி சந்திரிக்காவினால் ரணிலை வீழ்த்தும் கூட்டணியொன்றினை ஏற்படுத்துவதென்பது சுலபமானதாக இருக்கப்போவதில்லை.
  17. ரணிலின் அரசைப் பலவீனப்படுத்துவதன் ஊடாக பேச்சுக்களைக் குழப்ப முயன்ற சந்திரிக்கா பட்டேர்னிடம் பேசும்போதும், பின்னர் தனது மாவீரர் தின உரையின் மூலமும் சர்வதேசத்திற்கான செய்தியைக் கூறும்போதும் புலிகள் பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதை பிரபாகரன் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன்னதாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கீசனுடனான சந்திப்பின்போதும் "நாளை வேண்டுமானாலும் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்" என்று பிரபாகரன் தமது இயக்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். பிரபாகரனுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு கொழும்பிற்கு உலங்குவானூர்தியூடாகப் பயம்ணப்படுவதற்கு முன்னர் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய ஹெல்கீஸ்ன் பிரபாகரனின் பேச்சுக்களுக்கான விருப்பினை தெரியப்படுத்தியிருந்தார். "பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்த்திரமின்மைதான்" என்பதை பட்டேர்னிடமும், ஹெல்கீசனிடமும் பிரபாகரன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். பேச்சுக்களுடன் நேரடியாகத் தொடர்புபடக்கூடிய முக்கிய மூன்று அமைச்சுக்களை ரணில் அரசாங்கத்திடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டதன் மூலம் ரணிலைப் பலவீனமானவராக, செயற்றிறன் அற்றவராக சர்வதேசத்தின் முன்னால் சந்திரிக்கா நிறுத்தியிருந்தார். ஆனால், இந்த மூன்று அமைச்சுப் பொறுப்புக்களும் தன்வசம் இருந்த ஆறு மாத காலத்தில் ரணில் காத்திரமான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்கவில்லை, குறிப்பாக பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் ரணில் தான் ஒத்துகொண்ட பல விடயங்களை செய்யத் தவறியிருந்தார். சந்திரிக்காவிற்கு விசுவாசமானவர்களாக வலம்வந்த இராணுவத்தளபதியும், கடற்படைத் தளபதியும் ரணில் பேச்சுவார்த்தைகளின்போது ஒத்துக்கொண்ட விடயங்களை செய்ய வெளிப்படையாகவே மறுத்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் என்பபவற்றை முன்னெடுப்பதற்கு அடிப்படையாக தமிழ் மக்களின் வீடுகளில் இருந்தும், பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தனியார் காணிகளில் இருந்தும் இராணுவத்தையோ அல்லது கடற்படையினரையோ விலக்கிக்கொள்ள இத்தளபதிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். தற்போது பாதுகாப்புத் தரப்பின் அதிகாரம் சந்திரிக்காவின் கைகளுக்கு மாறியிருப்பதையடுத்து இராணுவத்தினரினதும் ஏனைய படைகளினதும் பிடிவாதம் இன்னும் இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது. சந்திரிக்காவின் சூழ்ச்சிகளையும், திட்டங்களையும் பிரபாகரன் நன்கு அறிந்திருந்தார். "சமாதானத்திற்கான போர்" எனும் மயக்கம் தரும் சுலோகத்தினூடாக சர்வதேசத்தினை நீண்ட ஏழு ஆண்டுகளாக அவர் ஏமாற்றி வந்திருந்தார். புலிகள் போரிற்குத் தயாராகி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே போர் ஒன்றை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையினை அவர் ஏற்படுத்தி வந்திருந்தார். இப்போது அவர் செய்ய முனைவதும் அதையே. ஆனால் தற்போது அவர் தனது சுருதியினை சற்றே மாற்றிக்கொண்டிருக்கிறார். சமாதானத்திற்கான தனது முயற்சிகள் உண்மையானவை என்று கூறும் அதேவேளை பிரபாகரனை நம்பமுடியாது என்று அவர் பேசிவருகிறார். தன்னை ஒரு சமாதானத்தின் தேவதையாக சர்வதேசத்தின் முன்னால் காட்டி, யுத்தநிறுத்தத்திற்கு தான் உண்மையாகவே மதிப்பளிப்பதாகக் கூறிக்கொண்டு, புலிகள் யுத்தநிறுத்தத்தினை மீறும்வகையின் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் சந்திரிக்காவின் சூழ்ச்சியினை அறிந்துகொண்ட பிரபாகரன் முந்திக்கொண்டார். ரணிலின் அரசைக் கவிழ்த்து, தனது தலைமையில் அரசொன்றினை அமைக்கும் சந்திரிக்காவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியினர் கூட்டத்தில், பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்குத் தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை தனக்குத் தராமைக்காக தனது கட்சி உறுப்பினர்களைக் கடுமையாகச் சந்திரிக்கா கடிந்துகொண்டார். மேலும், சர்வதேசச் சமூகத்திடமிருந்து தன்மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என்பதையும் அவர் கணிக்கத் தவறியிருந்தார். சர்வதேசத்தில் சரிந்துவரும் தனது பெயரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமாதான வேடம் போடவேண்டிய கட்டாயம் சந்திரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கிறது. சர்வதேசத்திலிருந்து வருகின்ற விமர்சனத்தையும், அதிருப்தியினையும் சமாளிப்பதற்காக அவர் கையில் எடுத்துக்கொண்ட துரும்புதான் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைக்கப்போகிறேன் எனும் சுலோகம். ரணில் அரசாங்கத்திடம் இருக்கும் அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவதே சந்திரிக்கா அமைக்க விரும்பும் தேசிய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம். ஆனால் சந்திரிக்காவின் தேசிய அரசாங்கத்திற்கான அறைகூவலினை முற்றாக நிராகரித்திருக்கும் ரணிலின் அரசாங்கம், முக்கியமான விடயங்கள் தொடர்பாக மக்களின் விருப்பினைக் கேட்டறியலாம் என்று கூறியிருக்கிறது. அவ்விடயங்களாவன, சமாதானப் பேச்சுவார்த்தைகள், பொருளாதார அபிவிருத்தி, தேர்தல் நடைமுறைகள் மற்றும் நல்லாட்சி ஆகியனவாகும். மேலும் மக்களின் விருப்பினை அறிவதே இன்று அவசியமானது என்று கூறியிருக்கும் ரணில் தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது குறித்து நீண்டகால நோக்கில் சிந்திக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். நாட்டு மக்களின் விருப்பினை அறிவதற்கான ஆணைக்குழு ஒன்று சமரவிக்கிரம மற்றும் தித்தவலை ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாணைக்குழுவின் உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன், ஜனாதிபதியின் ஆலோசகர் மனோ தித்தவலை மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கருணாரட்ண ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
  18. இன்னொரு பஸ்ட்டியாம்பிள்ளை உருவாகாமல் விட்டால்ச் சரிதான்
  19. நன்றி நொச்சி, இதில் உள்ள வேதனை என்னவென்றால் அன்று தலைவர் கூறிய வார்த்தைகள் இன்றும் அதேயளவு முக்கியத்துடனும், யதார்த்தனுடனும் இருக்கின்றது என்பதுதான். ஆனால் நாம் மாறிவிட்டோம். எமது இருப்பும், தாயகத்தின் இருப்பும் சிறுகச் சிறுக அரிக்கப்பட, சிங்கள இனவாதிகளை எமது தாயக மண்ணிலேயே தலையில் சுமந்து கொண்டாடி ஆர்ப்பரிக்கும் இழிவான இனமாக நாம் மாறியிருக்கிறோம். எம்மீது நடத்தப்பட்ட, இன்றும் தொடர்கின்ற திட்டமிட்ட இனவழிப்பினை பார்க்கமறுத்து, அதனை இல்லையென்று நிராகரித்து, அதனைச் செய்த, செய்ய உறுதுணையாக இருந்த மார்க்ஸிய வேடம்போட்டு ஆட்சியில் இருக்கின்ற இனவாதிகளை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கவும், தலைமையாக ஏற்கவும் நாம் விரும்புகின்றோம். பாணும், மோட்டார்சைக்கிளுக்கு பெற்றொலும் வாங்க வரிசைகளில் நிற்பதைக் காட்டிலும் இனவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று நாம் எண்ணித் துணிந்துவிட்டோம். ஏனென்றால் எமதினம் இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துப் போராடியது ஒரு இறாத்தல் பாணிற்கும், ஒரு லீட்டர் பெற்றோலிற்கும்தான் என்பது எம்மில் பலரின் கருத்தாக இருக்கிறது. எமது தாயகத்தில் தமிழுடன் சேர்ந்து தமிழினமும் மெல்லச் செத்துக்கொண்டிருக்கிறது. அன்புடன் ரஞ்சித் யாழ்ப்பாணக் குடாநாட்டினை விட்டு புலிகள் வன்னிக்குப் பின்வாங்கிய காலத்தில் (1995 ரிவிரெச / சூரியகதிர் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குப் பின்னர்) தலைவரினால் ஆற்றப்பட்ட உரை இது. இதன் முக்கியத்துவத்தினை எவருமே கண்டுகொள்ளவில்லை. நீங்கள் இணைத்த இவ்வுரையினை இதுவரையில் பார்த்தவர்கள் வெறும் 30 பேர் மட்டுமே. எமதினம் எத்திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டும்தான்.
  20. சமாதான முயற்சிகளுக்கெதிரான சந்திரிக்காவின் செயற்பாடுகளும், பிரபாகரனின் மாவீரர் தின உரையும் கடந்த 46 வருடங்களாக சிங்களத் தலைவர்கள் நடத்திவரும் இத்தெருக்கூத்துக்களை மிக அருகில் இருந்து பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது. லேக் ஹவுஸ் பத்திரிக்கை நிறுவனத்தில் ஒரு நிருபராக 1957 ஆம் ஆண்டு இணைந்துகொண்ட நான், அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் செய்தியாக்கி வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் தமிழ் நாளிதழான தினகரனிலும் பின்னர் டெயிலி நியூஸ் பத்திரிக்கையிலும் செய்தியாளராகக் கடமையாற்றியிருக்கிறேன். மேலும், முடிவற்ற அரசியல் நாடகங்களின் பிரதான கதாப் பாத்திரங்களுடன் நெருங்கிப் பயணிக்கும் அனுபவங்களும் எனக்கு நிறையவே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அவர்களுடன் நீண்டகாலமாக நெருங்கிப் பயணித்தவன் என்கிற வகையில் அவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான நோக்கம் என்னவெனில், தமிழர்களின் பிரச்சினையினை வைத்துக்கொண்டு தம்மை அரசியலில் உச்சத்திற்குக் கொண்டுவருவதேயன்றி, தமிழர்களுக்கான தீர்வினை எபோதும் வழங்குவது அல்ல என்பதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினை என்னவென்பதுபற்றிய தெளிவான விளக்கங்களோ அல்லது புரிதல்களோ இதுவரையில் சர்வதேசத்தில் வெளிக்கொணரப்படவில்லை. சர்வதேசத்தில் சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைக்கு நீதியான தீர்வைத் தர எத்தனிக்கின்றபோதிலும், தமிழர்கள், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது இலட்சியமான தனிநாட்டில் உறுதியாக நிற்கிறார்கள், அதனை இராணுவ வல்லமையினால் அடைய முயற்சிக்கிறார்கள் எனும் மிகத் தவறான புரிதல் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்தில் விதைக்கப்பட்டிருக்கும் தமிழரின் போராட்டம் தொடர்பான தவறான கற்பிதத்தினை உடைக்கும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் முயன்றிருந்தார். "முடிவற்ற துன்பியல் நாடகமாக தமிழர்களின் பிரச்சினை நீண்டுகொண்டு செல்கிறது. ஒவ்வொருமுறையும் ஆட்சியில் இருக்கும் கட்சி பிரச்சினைக்கான தீர்வினைக் காண முயற்சி செய்கின்ற அதேவேளை, அந்த முயற்சிகளையெல்லாம் தடம்புரளச் செய்துத் தோற்கடிப்பதையே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. இதே வகையான சுழற்சிமுறைச் செயற்பாடுகளை எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆளும்கட்சியில் முன்னர் இருந்தவர்கள் செய்கிறார்கள். சிங்கள அரசத் தலைமைகளால் செய்யப்பட்டு வரும் இவ்வாறான நாடகங்கள் கடந்து 50 வருடங்களாகத் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த நாடகங்களின் இயக்குநர்கள் இருபிரதான சிங்கள அரசியற் கட்சிகளின் தலைவர்கள் தான். நாடகத்தின் பிரதான கதாப் பாத்திரங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தபோதிலும், நாடகத்தின் கதை எப்போதும்போல் மாறாது காக்கப்பட்டே வருகிறது. இன்று கொழும்பில் நடந்துவரும் அரசியல்க் கூத்துக்களும் அந்த நாடகத்தின் தொடர்ச்சிதான்". "சிங்களவர்களின் இந்த நாடகத்தில் தமிழர்கள் பகடைக்காய்களாகத் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வருகிறார்கள். சிங்களத் தலைமைகளால் ஒத்துக்கொள்ளப்பட்ட பல சமாதான ஒப்பந்தங்கள் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தீர்விற்கான முயற்சிகளும், தீர்விற்கான பொதிகளும் தடம்புரளச் செய்யப்பட்டு, கிழித்தெறியப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக தமிழர்களின் இன்னல்கள் முடிவின்றித் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. எமது மக்களின் அவலவாழ்வும் முடிவின்றித் தொடர்கிறது" என்று கூறினார். தற்போதையன ஜனாதிபதி சந்திரிக்காவினால் பாதுகாப்புத்துறை, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் ஊடத்துறை ஆகிய அமைச்சுக்கள் அடாத்தாக ரணில் அரசாங்கத்திடமிருந்து பிடுங்கப்பட்டிருப்பதானது சிங்கள அரசியல்த் தலைமைகள் கடந்த 50 வருடங்களாகச் செய்துவருகின்ற அதே நாடகத்தின் தொடர்ச்சிதான் என்றால் அது மிகையில்லை. புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நாளில் இருந்து அதனை மிக வன்மையாக எதிர்த்துவரும் சந்திரிக்கா, இச்சமாதான ஒப்பந்தம் சட்டத்திற்கு முரணானது என்றும், ரணில் அரசு புலிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுத்துவிட்டதாகவும், புலிகள் தம்மைப் பலப்படுத்தி மீள போரிற்குள் செல்வதற்கான அவகாசத்தை ரணில் அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்றும் கடுமையாக பிரச்சாரம் செய்துவருகிறார். சந்திரிக்காவின் இப்பொய்ப்பிரச்சாரத்திற்கான பதிலை பிரபாகரன் தனது மாவீரர் தினை உரையில் அளித்திருந்தார். "சந்திரிக்கா செய்துவரும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை நான் ஐயம் திரிபுற‌ தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எமது விடுதலை அமைப்பின் நம்பகத்தனமையினைக் கேவலப்படுத்தும் முகமாகவும், சமாதானச் செயற்பாடுகளைத் தடம்புரளச் செய்வதற்காகவுமே சந்திரிக்கா இதனைச் செய்கிறார். எமது விடுதலை அமைப்போ அல்லது எமது மக்களோ இன்னுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை. எமது பிரச்சினைகளை சமாதான வழிமுறைகளில் தீர்த்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். சமாதானத்திற்காக நாம் ஆளமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்". சந்திரிக்காவின் இரண்டாவது குற்றச்சாட்டான ரணில் அரசாங்கம் புலிகளுக்கு தாராளமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவருகிறது என்பதற்குப் பதிலளிக்கையில், "சமாதான முயற்சிகளின் பலனாக தெற்கின் மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பலன்கள் இதுவரையில் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு வந்து சேரவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால் சந்திரிக்காவின் இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையிலேயே ரணில் அரசிடமிருந்து முக்கியமான அமைச்சுக்களைப் பறித்தெடுக்கும் தனது சூழ்ச்சிக்கான புறச்சூழலினை ஏற்படுத்துவதற்காகவே முன்வைக்கப்பட்டன என்பதனை பிரபாகரன் நன்கு அறிந்தே இருந்தார். மேலும், நாட்டை மீண்டும் இன்னொரு போருக்குள் இழுத்துவிடுவதற்கான முயற்சிகளில் சந்திரிக்கா ஈடுபட்டு வருகிறார் என்பதனையும் அவர் நன்கு அறிந்திருந்தார். கொழும்பிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் சர்வதேசப் பிரமுகர்கள், இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களின்போது புலிகள் இன்னொரு போருக்கான ஆயுதங்களை நாட்டிற்குள் கொண்டுவருகிறார்கள், சிறார்களை இயக்கத்தில் இணைத்து ஆள்ப்பலத்தைப் பெருக்கி வருகிறார்கள் என்று கடுமையான பிரச்சாரத்தை சந்திரிக்கா செய்துவருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரான கிறிஸ் பட்டேர்ன் அவர்களின் விஜயத்தின்போதும் சந்திரிக்கா இதனை கடுமையாக வலியுறுத்தியிருந்தார். புலிகளை நம்பமுடியாது, அவர்கள் இன்னுமொரு நீண்டபோரிற்குத் தயராகி வருகிறார்கள் என்று சந்திரிக்கா கிறிஸ் பட்டேர்னிடம் தெரிவித்திருந்தார். பிரபாகரனின் 50 ஆவது பிறந்ததினத்தில் அவரைச் சந்தித்த கிறிஸ் பட்டேர்ன் அவரிடம், "நீங்கள் இன்னுமொரு போரிற்குத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறதே, உண்மையாகவா?" என்று நேரடியாகவே கேட்டிருந்தார். பிரபாகரனுடனான இரு மணிநேர பேச்சுக்களின் பின்னர் கொழும்பு திரும்பிய கிறிஸ் ரணிலுடன் அதுகுறித்துப் பேசும்போது, "என்னுடனான இரு மணிநேர உரையாடலின்போது குறைந்தது ஆறு தடவைகளாவது தாம் மீளவும் யுத்தம் ஒன்றிற்குள் செல்லப்போவதில்லை என்பதை பிரபாகரன் என்னிடம் உறுதிபடக் கூறினார்" என்று தெரிவித்திருந்தார். பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பின்போதும் இதனையே கிறிஸ் தெரிவித்திருந்தார்.
  21. மார்கழி 1, 2003 இலங்கையில் நிகழ்கால நிகழ்வுகள் - பாகம் 1 1956 ஆம் ஆண்டிலிருந்து சிங்களத் தலைவர்கள் நடத்திவருகின்ற இனவாத அரசியலை நேரடியாகத் தரிசித்தவர்களில் இன்று உயிரோடு இருப்பவன் நான் மட்டுமே என்று நினைக்கிறேன். ஆனால், சிங்களத் தலைவர்களால் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட முதலாவது அக்கிரம நாடகத்தினை, அது சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுப்பதாக அமைந்திருந்தபோதும் அதனைப் பார்ப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாடகம் 1 காட்சி 1 நான் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இழந்ததும், சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையும், தமிழர்களுக்கு வருத்தத்தினையும் ஒருங்கே கொடுத்திருந்த நிகழ்வு காலி முகத் திடலில் சமஷ்ட்டிக் கட்சியின் அரசியல்த் தலைவர்கள் மீது சிங்கள அரசியல்த் தலைமைகளினால் ஏவிவிடப்பட்ட சிங்களக் காடையர்கள் நடத்திய மிருகத்தனமான தாக்குதலாகும். காலிமுகத்திடலின் முன்னால் அமைந்திருக்கும் பழைய பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மீது பண்டாரநாயக்கவினால் ஏவிவிடப்பட்ட காடையர்கள் நடத்திய தாக்குதலில் தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தோட, அதனைத் துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டே பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் அமிர்தலிங்கம். அவ்வாறு இரத்தம் தோய்ந்த தலையுடன் அவர் பாராளுமன்றம் நுழையும்போது, "யுத்தத்தின்போது அடைந்த மாண்புமிகு காயங்கள்" என்று கேலியுடன் அமிரை வரவேற்றார் பிரதமர் பண்டார‌நாயக்க. ஆனி 5 ஆம் திகதியான அன்று பாராளுமன்றம் கூட்டப்பட்டதன் ஒரே நோக்கம் தனிச் சிங்களச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவதுதான். பண்டாரநாயக்க நினைத்தவாறே அன்றே அச்சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. காட்சி 2 இரண்டாம் காட்சியாக 1957 ஆம் ஆண்டு, இதே பண்டாரநாயக்கா எனும் சிங்கள இனவாதியும் தமிழர்களின் அன்றைய தலைவரான செல்வநாயகமும் மந்திரிசபை அலுவலகத்திலிருந்து ஒன்றாக இறங்கிவந்து தமக்காகக் காத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டிருக்கிறோம் என்று கூறியவேளை நானும் அங்கு பிரசன்னமாகியிருந்தேன். காட்சி 3 மூன்றாவது காட்சியாக பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய உப தலைவராக இருந்த ஜெயார் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றமை. காட்சி 4 நான்காவது காட்சியாக பண்டா செல்வா ஒப்பந்தத்தினை எதிர்த்து பெளத்த பிக்குகள் சத்தியாக்கிரகம் இருந்தபோது பண்டா அவர்களின் முன்னே தோன்றி தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினைத் தானே கிழித்தெறிந்த‌தையும் என்னால் தரிசிக்க முடிந்தது. நாடகம் 2 காட்சி 1 சிங்களத் தலைவர்களின் இரண்டாவது நாடகம் 1960 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அதில் முதலாவது காட்சி பண்டாரநாயக்கவின் மருமகனான பீலிக்ஸ் டயஸ், செல்வநாயகத்தின் அறைக்குள் நுழைந்து, "வருகிற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவீர்களாக இருந்தால், பண்டா செல்வா ஒப்பந்தத்தினை மீளவும் நடைமுறைப்படுத்துவோம்" என்று கோரியது. ஆனால் இதனை செல்வா நிராகரித்தபோது, டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினை தேர்தலில் தோற்கடிப்பதற்காக "செல்வநாயகம் தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சி டட்லிக்கு ஆதரவளிப்பதால், தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கப்போகிறார்கள்" என்று பிரச்சாரம் செய்தது அதே சுதந்திரக் கட்சி. காட்சி 2 இந்நாடகத்தில் இரண்டாம் காட்சியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்ப் பிரச்சாரத்தின்போது, "செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் செய்து நாட்டைப் பிரித்துத் தமிழர்களுக்குக் கொடுக்கப்போகிறது சுதந்திரக் கட்சி" என்று ஐக்கியதேசியக் கட்சியினர் பேசிவந்தார்கள். காட்சி 3 இந்நாடகத்தின் மூன்றாவது காட்சியில், தேர்தலில் சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றிபெற்ற நிலையில், செல்வநாயகத்துடன் பேசிய பீலிக்ஸ், "உங்களுடன் பேசியவாறு பண்டா செல்வா ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமில்லை, ஏனென்றால் நீங்கள் ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு எதிராக நிற்கிறது" என்று கையை விரித்ததுதான். நாடகம் 3 காட்சி 1 டட்லி சேனநாயக்கவும், செல்வநாயகமும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுகிறார்கள். இவ்வொப்பந்தத்தின்படி பிராந்திய சபைகளை அமைப்பதற்கு டட்லியின் அரசு இணங்குகிறது. இதனடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் செல்வநாயகத்தின் சமஷ்ட்டிக் கட்சியும் இடம்பிடிக்கிறது. காட்சி 2 அவ்வருட மே தினப் பேரணியில் கலந்துகொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், அதன் மாக்ஸிஸ்ட் கூட்டாளிகளும் இணைந்து, "டட்லியின் வயிறு முழுவதும் தமிழர்களின் வடையினால் நிரம்பியிருக்கிறது, அதனாலேயே தமிழர்களுக்கு நாட்டை தாரைவார்க்கிறார் அவர்" என்று கூச்சலிட்டுக்கொண்டு சென்றனர். காட்சி 3 1968 ஆம் ஆண்டு செல்வநாயகத்திடம் பேசிய டட்லி, "நான் இணங்கிக்கொண்டவாறு பிராந்திய அதிகார சபைகளை என்னால் தரமுடியாது, சுதந்திரக் கட்சியினரின் எதிர்ப்புப் பலமாக இருக்கிறது" என்று கையை விரிக்கிறார். நாடகம் 4 காட்சி 1 1977 ஆம் ஆண்டு தொண்டைமானின் பிரத்தியேக‌ வாசஸ்த்தலத்தில் அமிர்தலிங்கத்தைச் சந்திக்கும் ஜெயார், தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்போவதாக உறுதியளிக்கிறார். காட்சி 2 சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வொன்றினைத் தாருங்கள் என்று தமிழர்கள் ஜெயவர்த்தனவிடம் இரைஞ்சியபோது அதற்கு பதிலளிக்கும் விதமாக 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தானே உருவாக்கிய திட்டமிட்ட இனக்கொலைகளை கட்டவிழ்த்து விடுகிறார். காட்சி 3 மத்தியிலிருக்கும் அதிகாரங்களில் சிலதை மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் கண்துடைப்பின் மூலம் பகிர்ந்தளிக்கப்போவதாக ஜெயார் பாசாங்கு செய்தபோது, "ஜெயார் தமிழர்களுக்கு நாட்டை விற்கிறார், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்றாலே தனிநாடு என்றுதான் பொருள்" என்று அந்த முயற்சியிற்கெதிராகவும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி. காட்சி 4 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குத் தான் தருவதாக உறுதியளித்த நிதியினையோ, அதிகாரங்களையோ ஜெயார் தரமறுக்கிறார் என்று வெளிப்படையாகவே கூறிக்கொண்டு தனது பதவியை இராஜினாமாச் செய்த யாழ்ப்பாண மாவட்ட அபிசிருத்திச் சபையின் தலைவர் நடராஜா. காட்சி 5 இந்திரா காந்தியிடமும், பின்னர் ரஜீவ் காந்தியிடமும்,"தமிழர்கள் கேட்கும் உரிமைகளை என்னால் ஒருபோதும் வழங்கமுடியாது, ஏனென்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அதற்கெதிராக பிரச்சாரம் செய்து சிங்கள மக்களை ஒருங்கிணைத்து வருகிறார்கள்" என்று வெளிப்படையாகவே கூறிய ஜெயார். நாடகம் 5 காட்சி 1 தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் என்று இரு பொதிகளை 1997 இலும் பின்னர் 2001 இலும் பாராளுமன்றத்தில் முன்வைக்கிறார் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க. ஆனால் , "தமிழர்களுக்கு நாட்டைத் தாரை வார்க்கிறார் சந்திரிக்கா" என்று பிரச்சாரம் செய்து இரு பொதிகளையும் தோற்கடித்த ஐக்கிய தேசியக் கட்சியினர். காட்சி 2 இன்றைய சூழ்நிலை (மார்கழி 2003). புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வொன்றிற்கு வர முயலும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் க‌ட்சியின் முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி எனும் அதிதீவிர இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களுடன் இணைந்து தோற்கடிக்கப் பிரச்சாரம் செய்யும் அதே சந்திரிக்கா.
  22. திரு த. சபாரட்ணம் அவர்கள் 2003 மார்கழி 1 ஆம் திகதியிலிருந்து 2004 ஆம் ஆண்டு புரட்டாதி 8 வரையான காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்று வந்த அரசியல் நிகழ்வுகள், பேச்சுவார்த்தையின் போக்கு மற்றும் எதிர்க்கட்சிகளில் சதிகள் குறித்து வாராந்தம் எழுதிவந்த செய்திகளின் தொகுப்பு இத்தொடரில் இடம்பெறவிருக்கிறது. இத்தொடரின் ஆங்கில மூலத்தை வாசிக்க கீழுள்ள இணைப்பை அழுத்திக்கொள்ளலாம். https://sangam.org/topics/sabaratnam/page/9/
  23. இந்தப் பொம்மையை முன்னால் வைத்துக்கொண்டே ஈழத்தில் சோனியா தனது நரவேட்டையினை ஆடி முடித்தார். தான் செய்வது என்னவென்று தெரிந்தும் சோனியாவின் தாளத்திற்கு ஆடி ஆடியே தமிழினக்கொலையிற்கான அனுமதியை, கட்டளையினை இந்தியாவின் பிரதமர் எனும் சோனியாவினால் வழங்கப்பட்ட பிச்சையைப் பாவித்து இவர் நிறைவேற்றி வந்தார். 80 களில் தனது சொந்த இனமான சீக்கியர்களைப் படுகொலை செய்த அதே இந்திரா காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலையின் சூத்திரதாரியான ரஜீவின் மனைவிக்கு சேவகம் ஆற்றியதன் மூலம் இரு தேசிய இனங்களின் இனக்கொலையில் நேரடியான பங்களிப்பை இந்த நிதித்துறை வித்துவான் வழங்கிச் சென்றிருக்கிறார். இந்தக் காணொளியில் சோனியா கைகாட்டும் இடத்தில் நிற்கவும், அமரவும் துடிக்கும் நன்றியுள்ள நாயான மன்மோகனைப் பாருங்கள். மன்மோகனை அட்டைப் பிரதமராக வைத்துக்கொண்டு அமைச்சரவையினைத் தானே முடிவெடுத்த சோனியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.