Everything posted by ரஞ்சித்
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
Kebitigollawe attack, senseless violence used for political ends - LTTE [TamilNet, Thursday, 15 June 2006, 06:34 GMT] The Claymore attack on Sinhala civilians in Kebitigollawe Thursday morning was "senseless violence used for political ends," the Liberation Tigers condemning the attack said in press release issued from Kilinochchi. Armed acts targeting civilians "cannot be justified under any circumstances," the press release said and charged Sri Lankan armed elements who have intensified their attacks on Tamil civilians for political ends, have also begun targeting Sinhala civilians with the aim of blaming the Tigers. The LTTE has urged the International media "not to fall prey for the reprehensible propaganda tactic." "The attack in Kebitigollawe timed to occur immediately after the arrival of the LTTE delegation from Europe is a reprehensible act of murders with the sole aim of blaming the LTTE for the attack," the LTTE Press release said. Since Geneva talks in February 250 civilians including 24 children have been murdered by GoSL operative forces in the NorthEast, the press release said. கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் மூலம் மகிந்த டைய நினைத்த சர்வதேச ஆதரவினை வழங்க நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தன. அதற்கான சான்று ஒன்று, Japan, Switzerland condemn claymore attack on passenger bus [TamilNet, Thursday, 15 June 2006, 11:37 GMT] Embassies of Japan and Switzerland in Colombo, in press releases issued Thursday, strongly condemned the attack on passenger bus in the region of Anuradhapura which killed several dozens of civilians including children and expressed condolences to the Sri Lankan people and the authorities. Full text of the press release from the Swiss Embassy follows: Switzerland strongly condemns the attack in Sri Lanka The Federal Department of Foreign Affairs (DFA) was shocked to learn of the attack perpetrated on Thursday morning against a bus in the region of Anuradhapura in Sri Lanka, which killed several dozen people, including a large number of children. The DFA very strongly condemns this attack which has plunged the population of the entire region into mourning and which endangers a fragile ceasefire. Switzerland expresses its condolences to the Sri Lankan population and authorities. It hopes that the perpetrators of this act will be rapidly identified and brought to justice. Switzerland is worried by the progressive deterioration of the situation in Sri Lanka, which is making the ceasefire between the Government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) increasingly fragile. The terrorist attack on a civilian bus perpetrated this Thursday is unjustifiable. As well as being a personal tragedy for many families, it is a serious violation of the ceasefire agreement. The Federal Department of Foreign Affairs calls on the parties to take urgent action to avoid an escalation that could have tragic results for the future of Sri Lanka and first and foremost for the civilian population, which is already severely affected. In this context, the DFA deplores that the LTTE's and the Sri Lankan Government's delegations did not meet in Oslo last week. The DFA reiterates its support for the Norwegian facilitator and expects the parties to return to the negotiating table as soon as possible to save the ceasefire, as this is an indispensable prerequisite for any peace talks. Full text of the press release from Japanese Embassy follows: Japan strongly condemns terrorist claymore attack on civilian bus On behalf of the Government of Japan, Ambassador Akio Suda expressed his strongest condemnation of the terrorist claymore attack on a civilian bus on the morning of 15th June 2006 at Kebitigollewa in the Anuradhapura District, deliberately targeting common people. Such dastardly terrorist attacks particularly targeting innocent common people are never accepted by any community in this country or the international community. Japan is deeply concerned about the recent increase in the incidents of violence and terrorist attacks in Sri Lanka and rejects any form of violence particularly acts of terrorism. While condemning this attack in the strongest possible terms Japan hopes that despite this provocative terrorist attack a further deterioration of the situation would be avoided by all peace loving people of Sri Lanka.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
64 killed, 94 wounded in Claymore blast in Kebitigollawe [TamilNet, Thursday, 15 June 2006, 03:30 GMT] 64 passengers, including fifteen children and a Buddhist monk, were killed and around 94 wounded when a civilian bus was caught in a claymore mine blast near Kebitigollawe, 23 km southeast of Vavuniya, around 7:50 a.m. Thursday, police sources said. Wounded survivors were rushed to Kepitigollawe and Anuradhapura hospitals. The majority of victims are Sinhalese, officials said. A Sri Lanka Army soldier and a homeguard were among the victims. Around 70 wounded persons were rushed to Anuradhapura hospital. 9 persons, including 2 children and 3 women, were transferred to Colombo hospital, medical sources said. Five children were wounded. Two claymore mines were used in the attack on the bus carrying 150 passengers, police said. Sri Lankan Government officials blamed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the deadly attack. "Denying the accusations, the Director of LTTE's Peace Secretariat, S. Puleedevan, said the LTTE condemned the attack on civilians in the strongest possible terms. Mr. Puleedevan said the deadly attack, coming just after the return of an LTTE delegation which went to Norway, was a planned act carried out by paramilitary elements to destroy efforts to resume the stalled peace process. The attack could be the work of forces seeking to create ethnic tension between Sinhalese and Tamils, as has occurred in Trincomalee, a police official in Vavuniya said". One week ago, ten Tamil civilians, including three children, were killed and ten others, including two infants aged 3 and 8 months, were wounded when a pressure mine destroyed the tractor they were riding on. The LTTE blamed deep penetration units of the Sri Lanka Army (SLA) for the attack inside a LTTE-controlled border village at Nedunkal in Vadamunai in Batticaloa. The military denied theaccusation. The Sri Lankan Air Force (SLAF) has launched retaliatory airstrikes on Mullaithivu using Kfir bombers and fired artillery and rockets from multi-barrel launchers towards LTTE controlled areas in Muttur East in Trincomalee district. கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த தினமே சில மணிநேரத்திற்குள் முல்லைத்தீவு, சம்பூர், கிளிநொச்சி ஆகிய புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்கள் நடந்த வேகத்தைப் பார்க்கின்றபோது, கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலின் விபரங்கள் முற்றாக வெளிவருமுன்னமே வன்னி மீதும், சம்பூர் மீது விமானத் தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஆக, யுத்தத்தினை வலிந்து ஆரம்பிக்கும் நோக்கத்திற்காகவே கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடத்தப்பட்டு, அது புலிகள் மீது சுமத்தப்பட்டு, பதிலடி வழங்குகிறோம் என்கிற போர்வையில் முழு அளவிலான யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இம்மாதத்திலேயே ஐரோப்பிய ஒன்றியமும் புலிகள் மீதான தடையினைக் கொண்டு வந்திருந்தது. ஆக, சர்வதேசத்தினையும், உள்நாட்டில் சிங்களவர்களையும் தனது யுத்த முஸ்தீபிற்கு சம்மதிக்க வைக்கவே மகிந்த கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலை நடத்தி அதன் பழியினை புலிகள் மீது போட்டான்.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் 1 ஆம் திகதி வெலிக்கந்தையில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த 13 சிங்கள விவசாயிகளை அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த துணை ராணுவக்குழுவினரான கருணா குழுவினரே கொன்றார்கள் என்று கூறி அம்முகாமினை அகற்றுமாறு பல சிங்களவர்கள் ஏ 11 நெடுஞ்சாலையினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் இக்கொலைகளையும் மகிந்தவின் அரசு புலிகள் மீதே அன்று போட்டது. Sinhala goons flock to A11 road in Welikanda [TamilNet, Thursday, 01 June 2006, 14:47 GMT] Hundreds of armed Sinhala goons flocked to the A-11 road in Welikanda around 7:45 p.m. Thursday, after a protest against the presence of the paramilitary group camps and the massacre of 13 Sinhala workers on Monday in the village of Omadiyamadu, once used by the paramilitary Karuna group. Senior Police officer in Batticaloa, S.M. Keerigala, has requested the police stations to block the traffic along A11 till normalcy until normalcy returned to the area, Police sources said. The traffic between Colombo and Batticaloa remains cancelled and Welikanda remains tense. Hundreds of Sinhala villagers earlier demonstrated against the presence of paramilitary camps and the killings of 13 Sinhala workers on Monday. Further details are not available at the moment.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
அரசில் அதிகாரத்தில் இன்று உள்ளவர்களும், அன்றிருந்த சில புலநாய்வார்களும் கெப்பிட்டிக்கொல்லாவை மற்றும் வெலிக்கந்தைத் தாக்குதல்களை மகிந்தவுக்காக பிள்ளையானே நடத்தினான் என்று கூறும்போதும் எம்மவர்களில் சிலர் இதனை நம்பத் தயாராக இல்லை. அதாவது புலிகளே இதனைச் செய்யக் கூடியவர்கள், அவர்களுக்கே இத்தேவை இருந்தது எனும் புலிகள் குறித்த தமது இயல்பான கணிப்பீட்டில் இருந்து இவற்றினை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பவில்லை என்பதற்காக இவை நடைபெறவில்லை என்பது ஒன்றும் கட்டாயம் இல்லை. 2019 இல் தாம் மீண்டும் பதவிக்கு வருவதற்காக 270 அப்பாவிகளைக் கொன்றவர்கள் 2006 இல் தமது யுத்தம் மூலமான தீர்விற்கு நாட்டையும், சர்வதேசத்தையும் தயார்ப்படுத்துவதற்காகவே தமது இனத்தில் பலரைக் கொன்றார்கள் என்பதை எம்மவர்களில் பலருக்கு நம்பக் கடிணமாக இருப்பது வியப்பே. நீங்கள் கேட்டுக்கொண்டமையினால் தமிழ் கார்டியன் இணையத்தில் வந்த இணைப்பினைத் தருகிறேன். இத்தாக்குதல்கள் குறித்து செய்தியாளர் நிலாம்டீன் இரு யூடியூப் காணொளிகளை அண்மையில் பதிந்திருக்கிறார். அவற்றையும் முடிந்தால் இணைத்துவிடுகிறேன். கேளுங்கள். Sri Lankan presidential media official questions LTTE’s role in 2006 massacres | Tamil Guardian https://youtu.be/uiR9yw5W3Q4?si=38FeGveyJXsjyX1V https://youtu.be/ujr1w3faxEo?si=b5hIBMPgv0md2ngl
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்தான முற்றான விலக்கு எனும் கொள்கை 2005 ஆம் ஆண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை முதல் மிக அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்கள் வரை பல படுகொலைகள் மற்றும் வன்முறைகளுடன் நேரடியான தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும்கூட இன்றுவரை பிள்ளையானினால் அரசியலில் தொடர்ச்சியாகத் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்க முடிவது குறித்து அநுருத்த கேள்வியெழுப்புகிறார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையினையடுத்து 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான் 2020 ஆம் ஆண்டு முக்கிய சாட்சியம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமையினையடுத்து சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். பின்னாட்களில் பிள்ளையானை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் குறித்து அவ்வப்போது விசாரித்திருந்தபோதிலும் ஒருபோதும் அவர்மீது சட்டபூர்வாமான குற்றச்சாட்டினைப் பதியவில்லை. "பிள்ளையான் போன்ற நபர்கள் அதிகாரத்திலுள்ளவர்களிடம் வெகு சாதாரணமாக நட்புப் பாராட்டி வரும் நிலையில் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது எப்போதும் ஒரு கனவாகவே இருக்கும். மேலும் நீதி என்பது வசதிக்காகப் பாவிக்கப்படும் கருவியாகவே தெரியும்" என்றும் அவர் கூறுகிறார். அநுருத்தவின் அறிக்கையூடாக எழுப்பப்படும் கேள்விகள். குறிப்பாக கெப்பிட்டிக்கொல்லாவைப் படுகொலைகள் குறித்த அன்றைய அரசின் வெளிப்படுத்தலினை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மிரர் பத்திரிக்கையில் எழுதிய ரொஜர் ஞானேந்திரன், "பட்டப்பகலில், முற்றான இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களப் பிரதேசத்தினுள், அதிலும் 45 நிமிட நேரத்திற்கு முன்னர்தான் இராணுவத்தினரால் சல்லடை போடப்பட்டு பரிசோதிக்கப்பட்ட வீதியின் ஓரத்தில் கிளேமோர்க் குண்டுகளை வெடிக்கவைப்பதென்பது புலிகளுக்குச் சாத்தியமானதா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், அரச இராணுவத்தினரால் அல்லது அவர்களால் இயக்கப்படும் இன்னொரு குழுவினரால் அன்றி இத்தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று அவ்வறிக்கை அன்று கூறியிருந்தது. தாக்குதல் நடந்தவிடத்திற்கு மகிந்த அதிரடியாகப் பிரசன்னமாகியிருந்தமை, கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கிற்கான செயற்பாடுகள் உடனடியாகவே செய்துகொடுக்கப்பட்டமை, தாக்குதல் நடந்தவுடன் உடனடியாகவே சர்வதேச ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை, தாக்குதல் நடந்த மறுகணமே வன்னியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரமான விமானக் குண்டுவிச்சு என்பவற்றைப் பார்க்கும்போது இத்தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலிகள் மீது வலிந்த தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தலினை கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலைத் தானே நடத்தியதன் மூலம் அரசு செய்துகொண்டது. "மேலும், இப்படுகொலைக்கான பழியினை புலிகள் மீது போட்டுவிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இத்தாக்குதலுக்கான சாட்சியங்களை முன்வைப்பதை விடுத்து, "சிங்கள மக்களைக் கொல்லும் தேவையும், அதனைச் செய்யும் ஆற்றலும் புலிகளுக்கு மட்டுமே இருப்பதால், இத்தாக்குதலினை அவர்களே செய்தார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தமையானது புலிகள் மீதான சந்தேகம் என்பது எவ்வித விசாரணைக்கும் அப்பாற்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது என்பதைத்தான் காட்டுகின்றது.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
இத்தாக்குதல்களால் பயனடைந்தது யார்? இத்தாக்குதல்களை யார் நடத்தினார்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, இத்தாக்குதல்களால் பயன்பெற்றது யாரென்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று வாசகர்களிடம் அவர் கோருகிறார் . "மகிந்தவைப் பொறுத்தவரை இத்தாக்குதல்கள் சிங்களத் தேசியவாதத்தினை உருவேற்றி விட்டதுடன், அவரது கனவான முற்றான போர் மூலம் தீர்க்கமான வெற்றி எனும் குறிக்கோளிற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆதரவினை பெருமளவில் திரட்ட முடிந்திருந்தது". "பிள்ளையானையும் அவரது துணை ராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரையில் இத்தாக்குதல்கள் அவர்களை மகிந்தவிற்கு மிகவும் விசுவாசமானவர்கள் எனும் அந்தஸ்த்தினை வழங்கியதுடன், அவர்களுக்கான அரசியல் நியாயப்பட்டினையும் பிற்காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது". "ஆனால் புலிகளைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு சர்வதேசத்தில் இருந்த நியாயப்பட்டினையும், அனுதாபத்தினையும் இத்தாக்குதல்கள் கடுமையாகச் சிதைவடையச் செய்திருந்ததுடன், அரசுசார்பான நிலைப்பாட்டினை சர்வதேசம் எடுக்கவும் காரணமாகியிருந்தது". இத்தாக்குதல்களில் பிள்ளையான் ஆற்றியிருக்கும் பங்கு என்பது அவரது திடீர் அரசியல் எழுச்சியுடனும், மகிந்தவின் மீள்வருகையின் பின்னர் பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் அந்தஸ்த்தினைப் பெற்றுக்கொண்டதுடனும் இணைத்துப் பார்க்கப்படல் அவசியம் என்று அநுருத்த கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு கொழும்பு உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றில் பிள்ளையானின் ஒருங்கிணைப்புச் செயலாளரைப் படுகொலை செய்தது, பிள்ளையானை ஒரு காலத்தில் வளர்த்துவிட்டதுமான அதே அரச புலநாய்வுக்கட்டமைப்பு தான் என்று கருதும் அநுருத்தை, அப்படுகொலையின் மூலம் அது பிள்ளையானுக்கு வழங்கிய செய்தி , "நீ எனக்குக் கீழ் சேவை செய்யலாம், ஆனால் ஒருபோதும் என்னை மீறி நடக்கமுடியாது" என்பதுதான் என்றும் அநுருத்த கூறுகிறார்.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
2006 ஆம் ஆண்டு வைகாசியில் வெலிக்கந்தைப் பகுதியில் வயல்களில் வேலைசெய்த 13 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதேயாண்டு ஆனியில் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் ஆகியவற்றில் சுமார் 75 சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இலங்கையில் அப்போது இடபெற்றுவந்த போரிற்கான சர்வதேசத்தினதும், உள்நாட்டினதும் நிலைப்பாடுகளை தீர்மானித்த மிக முக்கியமான சம்பவங்கள் என்று இவற்றைக் கூறினால் அது மிகையாகாது. இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிவித்திருந்தபோதிலும், இத்தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதற்கான சாட்சியங்களை அன்றிருந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவினால் அழுத்தம் திருத்தமாக வழங்க முடியாது போயிருந்தது. ஆனாலும், அநுருத்த இதுபற்றிக் கூறுகையில், அக்காலத்தில் இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட அமைப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் பிரமுகர்களான கருணா மற்றும் பிள்ளையானின் செயற்பாடுகள் இத்தாக்குதல்களின் பின்னால் இருந்திருக்கின்றன என்று சந்தேகிக்கின்றார். மிகவும் பாதுகாப்பானதும், இராணுவ மயப்படுத்தப்பட்டதுமான சிங்களப் பிரதேசங்களுக்குள் இராணுவத்தினரினதும், அவர்களோடு சேர்ந்தியங்கும் கருணா பிள்ளையான் ஆயுதத் தாரிகளினதும் அனுமதியின்றியோ, அவர்களின் ஆதரவு இன்றியோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலோ புலிகளாலோ அல்லது வேறு எவராலுமோ இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதென்பது மிகவும் கடிணமானது என்று அவர் வாதிடுகிறார்.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் இயக்குநர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி 2006 ஆம் ஆண்டு சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களான கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான கிளேமோர் தாக்குதல் மற்றும் வெலிக்கந்தை விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து அன்றைய அரசாங்கம் வெளியிட்ட தகவல்கள் குறித்து தமக்குக் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் இத்தாக்குதல்களின் பின்னணியில் அரச உயர்மட்டத்தின் சில புள்ளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிள்ளையான் போன்றோர் இருக்கலாம் என்று கூறியிருப்பதுடன், இத்தாக்குதல்களால் புலிகள் அடைந்த நலன்களைக் காட்டிலும் மகிந்தவும் பிள்ளையானும் மிக அதிகளவான நலன்களை அடைந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். "எல்லையோர பிரதேசத்தின் பேய்கள்" எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது குற்றங்களுக்கான தண்டனைகள் அனைத்திலும் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பிள்ளையானின் வன்முறைகள் குறித்து பேசியிருக்கும் அநுருத்த, இப்படுகொலைகளுக்கான காரணத்தை ஆராய்வதோடு இக்கொலைகளை நீண்டகாலமாகவே மகிந்த அரசு புலிகள் மீது சுமத்தியிருந்தமை குறித்தும் தனது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறார். ஜனாதிபதி அநுரவின் சர்வதேச ஊடகத்துறையின் இயக்குநராகவும், மூலோபாய தொலைத்தொடர்புப் பிரிவின் ஆலோசகராகவும் அநுருத்தை மிக அண்மையிலேயே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. "இப்படுகொலைகள் இரண்டுமே உடனடியாக புலிகள் மீது சுமத்தப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ அப்போது வரிந்திருந்த முற்றான போர் எனும் முயற்சிக்கு மிகுந்த வலுச்சேர்க்கும் காரணியாக இத்தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனாலும் இருபது வருடங்களுக்குப் பின்னர் மகிந்தவின் இத்தாக்குதல்கள் தொடர்பான விவரணங்கள் மீது மிகக் கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் நாம் எழுப்பவேண்டியிருக்கிறது.இத்தாக்குதல்களை உண்மையாகவே திட்டமிட்டது யார்? போரிற்குப் பின்னரான அரசியல் கட்டமைப்பில் இக்கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகளுக்குத் தண்டணைக்குப் பதிலாக அரசியற் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது எங்கணம்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.
-
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகளை முற்றாக அழிப்பேன் என்றும் சபதமிட்டிருந்தார். ஆரம்பத்தில் இத்தாக்குதலை புலிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு நாட்களின் பின்னர் தனது சுருதியை மாற்றி புலிகள் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தது. புலிகளோ இத்தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தனர். இலங்கை காவல்த்துறை உடனடியாகவே இத்தாக்குதலை புலிகள் மீது சுமத்தியிருந்ததுடன் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மிகப்பிரபலமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களில் அதிகாரம் அற்ற அதிகாரிகளுடன் தாம் இனிமேல் பேசப்போவதில்லை என்று புலிகள் அறிவித்த மறுநாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டமையினால் புலிகளுக்கெதிரான மேற்குலகின் நிலைப்பாட்டினை இத்தாக்குதல் மேலும் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது கொழும்பிலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ உலங்குவானூர்தியில் மகிந்த இருந்திருக்கின்றார். அதாவது தாக்குதல் நடத்தப்பட்டவேளை மகிந்தவின் வானூர்தி கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அதாவது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மகிந்த அறிந்திருக்கிறார். ஆகவேதான் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வருகை தந்த நேரத்தில் மகிந்தவும் அப்பகுதிக்கு வந்திருக்கிறார். தாக்குதல் நடந்தவிடத்தில் உடனடியாகவே மகிந்த பிரசன்னமாகியிருந்தமை அன்றைய இராணுவ மற்றும் காவல்த்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தபோதிலும் எவரும் அதுகுறித்தும் பேசும் திராணியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இனி இத்தாக்குதல் குறித்து தற்போதைய அரசின் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செயலாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம்.
-
வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!
வவுணதீவில் கொல்லப்பட்ட இரு பொலீஸாரும் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட டி 56 ரகத் துப்பாக்கி 1990 ஆம் ஆண்டு ஏறாவூர் பொலீஸ் நிலையத்திலிருந்து முஸ்லீம் ஊர்காவற்படையினன் ஒருவனால் அன்று எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அத்துப்பாக்கியே 28 வருடங்களுக்குப் பின்னர் வவுணதீவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பாவியான கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய ராசநாயகம் சர்வானந்தமே இக்கொலைகளைச் செய்ததாக பொலீஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டதுடன் கடுமையான சித்திரவதைகளுக்கும் உள்ளாகியிருந்தார். சஹ்ரான் குழுவினரே இத்தாக்குதலைச் செய்தார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் அப்பாவியான தமிழர்மீது கொலைப்பழியைச் சுமத்தி, விசாரணைகளைத் திசைதிருப்பிய வவுணதீவு ஒ ஐ சி யே இன்று கந்தளாயிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதில் வேதனை என்னவென்றால், சஹ்ரான் குழுவினருடன் தொடர்பில் இருந்துகொண்டு, இக்கொலைகளை அவர்களே செய்தார்கள் என்பதை அறிந்திருந்த கிழக்கின் மீட்பரான முரளிதரன் கூட இத்தாக்குதலை "புலிகளின் மீள் எழுச்சி" என்று வர்ணித்ததுதான். 2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவையில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து மீதான கிளைமோர் தாக்குதல் மற்றும், வெலிக்கந்தை சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதல்கள், நுகேகொடை பஸ் மீதான தாக்குதல் என்று அனைத்தையும் புலிகள் மீது மகிந்தவின் அரசு போட்டிருந்தது. நான் இதுபற்றி இங்கு எழுதியபோது சிலர் வந்து புலிகளுக்கு நான் வெள்ளையடிக்கிறேன் என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால் இன்று அவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுகுறித்து ஒரு திரியை ஆரம்பிக்க விருப்பம். நேரமிருந்தால் பார்க்கலாம்.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
அமிர்தலிங்கம் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் போகவேண்டியவர் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?
-
காசாவில் குடிநீர் விநியோகம் இடம்பெறும் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-சிறுவர்கள் உட்பட பலர் பலி
இன்று காசாவில் பலஸ்த்தீனர்களைக் கொல்வதால் யூத இனம் மீது திட்டமிட்ட இனவழிப்பை நடத்தி 8 மில்லியன் யூதர்களைக் கொன்று ஹிட்லர் செய்தது சரியென்று நீங்கள் கூறுவீர்களாகவிருந்தால், இன்று உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் படுகொலைகளைப் பார்க்கும்போது அதே இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரினால் 27 மில்லியன் ரஸ்ஸியர்கள் கொல்லப்பட்டதும் சரியென்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று ஆகிறது. காசாவில் இஸ்ரேல் செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியாதோ அவ்வாறே உக்ரேனில் ரஸ்ஸியா செய்வதையும் நியாயப்படுத்த முடியாது. 8 மில்லியன் யூதர்களை கொன்றது சரியென்றால், 27 மில்லியன் ரஸ்ஸியர்களைக் கொன்றதும் சரியே! (8 மில்லியன் யூதரை ஹிட்லர் கொன்றான் என்று அகமகிழும் குமாரசாமியண்ணை, அதே ஹிட்லர் நீங்கள் ஆதரிக்கும் ரஸ்ஸியர்களில் 27 மில்லியனைக் கொன்றான் என்று அறிந்திருக்கமாட்டீர்கள். அதிலும் 10 மில்லியன் ரஸ்ஸியர்களை இனவழிப்பு எனும் நோக்கத்திலேயே கொன்றான் என்று கூறப்பட்டிருக்கிறது.)
-
குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்
முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்தில் நடந்தன என்பது உண்மைதானே. அவற்றினை அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவே செய்வித்திருந்தாலும், அவர் அப்போது புலிகளுடந்தான் இருந்தார். நிச்சயமாகத் தலைமைக்குத் தெரிந்தே இவை நடந்திருந்தன. ஒருமுறை என்றால் பரவாயில்லை, பலமுறை முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டனவே? ஆகவே அதனைச் செய்தது கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் என்றாலும், அதனைச் செய்தது புலிகள்தான். ஆகவே செம்மணியை நாம் விசாரிக்கக் கோரும்போது முஸ்லீம்கள் தாமாகவோ அல்லது சிங்கள அரசுகளால் ஊக்குவிக்கப்பட்டோ தமது கொலைகளுக்கான விசாரணைகளைக் கோருவது தவிர்க்க முடியாதது. இதனை எதிர்கொள்வதற்கு எமக்கிருக்கும் ஒரே வழி அவ்விசாரணைகளை நாமும் ஏற்றுக்கொள்வதுதான். செம்மணியையும் விசாரியுங்கள், குருக்கள் மடத்தையும் விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நீதியின் தண்டனையினைப் பெற்றுக்கொடுங்கள் என்பதே நாம் முன்வைக்க வேண்டிய கோரிக்கை. ஏனென்றால், முஸ்லீம்கள் குருக்கள்மடக் கொலைகளை விசாரிக்கக் கோருகிறார்கள் என்பதற்காக செம்மணிக்கான விசாரணைகளை நாம் கைவிடமுடியாது அல்லவா?
-
சிஸ்ட்டர் அன்ரா
நீங்கள் குறிப்பிடும் இரு கன்னியாஸ்த்திரிகளில் கரவெட்டியைச் சேர்ந்தவர்தான் எனது அன்ரா. அவரது இயற்பெயர் செல்வராணி. கன்னியாஸ்த்திரிகள் மடத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர் கிறிஸ்ற்றபெல். யாழ்ப்பாணத்தில் 10 வருடங்களும், மட்டக்களப்பில் 15 வருடங்களும் பத்தாம் ஆண்டுவரை கணித ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் யாழ்ப்பாணக் கன்னியர் மடத்தின் மாகாணத் தலைவியாக 3 வருடங்கள் பணியாற்றியவர். அதன்பின்னர் வன்னியில்த்தான் அவரது காலம் கழிந்தது. கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் சிறுவர்களுக்கும், பெண்களுக்கும் என்று இரு சமூகநலன் அமைப்புக்களை ஆரம்பித்து வைத்தார் என்று அறிந்துகொண்டேன். பெரும்பாலும் உளநலம் தொடர்பாகவே அவரது பணிகள் அமைந்திருந்தன. இதனால் இயக்கத்தின் மருத்துவப் பிரிவினரோடு அவருக்குத் தொடர்புகள் இருந்தன என்றும் கேள்விப்பட்டேன்.
- சிஸ்ட்டர் அன்ரா
-
கிழக்கினை வெளிக்கவைக்கிறோம் என்கிற போர்வையில் இருண்ட பேய் யுகத்தை கட்டவிழ்த்த பிரதேசவாத மிருகங்கள்
கிழக்கினை வெளிக்கவைக்கிறோம் என்கிற போர்வையில் இருண்ட பேய் யுகத்தை கட்டவிழ்த்த பிரதேசவாத மிருகங்கள் சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் ரவீந்திரநாத்தைக் கொழும்பில் இருந்து கடத்திச் சென்று படுகொலை செய்த காரணத்திற்காக பிள்ளையான் என்றழைக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் மனித குலத்திற்கெதிரான பாதகன் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது நடக்கிறது. இவனது வாக்குமூலங்களுக்கு அமைவாக இவனுடன் சொந்த இனத்தின்மேலேயே இரத்தக் குளியல் நடத்திய இன்னும் பல பாதகர்கள் இப்போது வரிசையாக அரசினால் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இனியபாரதி, செழியன் என்று ஆரம்பித்து பல கோடரிக் காம்புகள் தேடித் தேடிக் கைதுசெய்யப்பட்டு வருகின்றன. இவர்களின் கைதுகளையடுத்து இவர்கள் பற்றிய விபரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் மனிதவடிவில் நடமாடிய இப்பிரதேசவாத மிருகங்களின் செயற்பாடுகள் குறித்துப் பலரும் தமது அச்சம் தவிர்த்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கிழக்கின் மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசித்துவருபவரும், பிள்ளையான் எனும் இரத்தவெறிபிடித்த பிரதேசவாதியினால் இலக்குவைக்கப்பட்டுத் தப்பி வாழ்பவருமான திரு துரைரட்ணம் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்விகள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்று வெளிவந்திருக்கின்றன. பத்திரிக்கையாளர் நடேசன் உட்பட பலரை வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொன்று தனது இச்சை தீர்த்த இம்மிருகங்கள் அக்காலத்தில் கிழக்கில் ஆடிய இரத்தக் குளியல் குறித்த சதிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
அண்மைக்காலத்தில் அமெரிக்காவை ஆண்ட ஜனாதிபதிகளில் கிளின்ரனும் ஒபாமாவும் குறிப்பிடத் தக்கவர்கள். பொஸ்னியர்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பை முடிவிற்குக் கொண்டுவந்ததில் கிளின்ரனின் பங்கு குறிப்பிடத் தக்கது. அவ்வாறே ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் நடந்துவந்த போர்களை நிறுத்தவேண்டும் என்று நடவடிக்கைகளில் இறங்கியதுடன், 2001 இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலினை நடத்தி, மூவாயிரம் அமெரிக்கர்களைப் பலியெடுத்த சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதியான பின்லாடனைத் தேடி, வேட்டையாடி, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினை ஒபாமா பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன் ஈரானின் முல்லாக்களுடன் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட்டு, பொருளாதாரத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்திருந்தார். ஈழத்தமிழர் படுகொலையில் ஒபாமாவோ அல்லது ஹிலரியோ எதனையும் செய்யவில்லை என்பது உண்மையே. இறுதிநேரத்தில் அமெரிக்கர்கள் செய்யமுயன்றதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகளை இந்தியா முன்னின்று தடுத்துவிட்டதென்பதை அன்றிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிவ் சங்கர மேனன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
இலங்கையில் பிள்ளையானுடன் இணைந்து, பலநூற்றுக்கணக்கான தமிழர்களைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த இனியபாரதி எனும் நபருக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் சாதாரணக் குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகூடிய கெளரவங்களான தேசமான்ய, தேசாபிமான என்கிற விருதுகளைக் கொடுத்து மகிழ்ந்தபோது, உலகில் நடக்கும் போர்களை 24 மணிநேரத்திற்குள் நிறுத்துவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, ரஸ்ஸிய உக்ரேன் போரில் உக்ரேனியர்களைப் பலவீனப்படுத்தி, ரஸ்ஸியாவின் சர்வாதிகாரிக்குக் கொம்பு சீவி, பலஸ்த்தீனத்தில் இனக்கொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலினை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இனக்கொலையினை நடத்தும் நெத்தன்யாகுவே நோபல் பரிசை சிபாரிசு செய்வதொன்றும் புதினமில்லை.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
நீங்கள் மாவீரர்களைக் குறிப்பிடவில்லை என்று எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால், அரசியலைத் தொழிலாகச் செய்து வயது முதிர்மையினால் மரணிப்பவர்களுக்கும், தமது இளம் வயதில், தமது வாழ்க்கையினை, தனது மக்களின் விடிவிற்காக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது.
-
செம்மணி : அதிர்ச்சி தரும் அத்தாட்சிகள்!
இந்தக் கட்டுரையின் தரவுகளில் பல தவறுகள் இருக்கின்றன. முதலாவது கிருசாந்தி குமாரசாமி கைதுசெய்யப்பட்ட இடம், கால, வயது என்பன முற்றிலும் தவறானவை. இரண்டாவது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குருக்கள்மடத்தில் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் என்று இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் என்பது ஒருபோதும் நடக்கவில்லை. ஆனால், ஜூலை 1990 இற்குப் பின்னர் முஸ்லீம்கள் மீது பல தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கின்றனர் என்பது உண்மையே. இலங்கை அரசுக்குச் சார்பாக எழுதும் முஸ்லீம் எழுத்தாளர் (எஸ் எம் எம் பஸீர்) ஒருவரால் பதியப்பட்ட முஸ்லீம்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் எனும் பட்டியலில் இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. Catalogue of LTTE atrocities on the Muslims in the East in 1990. • On 23 July 1990 5 Muslims who were staying in the Jariya Mosque in Sammanthurai were killed by the LTTE and three others injured. • On 29 of June 1990 the LTTE killed 6 Muslims including the chief Trustee of the Hijar Mosque, Oddamavadi . • On 2 July 1990 14 farmers were shot and hacked to death at Akkaraipatttu. • On the 3rd July 1990, (on the eve of Eid- Ul- Fithr) UL Dawood , the member of Citizen Committee of the Batticaloa District, and the Cluster Principal of Alighar Central school , Eravur, Al Haj M.L.A Gafoor .J.P and Quazi and his father in law U.L.Ali Mohamed were kidnapped and killed by the armed LTTE cadres. • On 7 July 1990, !7 Muslims were killed at Puthur , a border Muslim village in Polonnaruwa • On the 14th July 1990 , 69 Muslims who were on their way back from Hai pilgrimage were kidnapped and killed by the LTTE at Onthachimadam in the Battiucaloa District.. • On 19th July 1990 , Muslim passengers were abducted and killed at Ampilanthurai in the Batticaloa District. • On the 3 August 1990, 140 Worshippers at Kattankudy Meeraniya and Hussainiya mosques were murdered and sixty six were injured. • On 11th August 1990 (Early morning of 12th August 1990) 127 Muslims were massacred at Eravur. • On 12 August 1990 four farmers who were working in the paddy fields in Sammanthurai were killed by the LTTE. • 1n August 1990 eight Muslims were shot to death at Akkraipattu. Town.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
தமிழ் மக்களின் இன விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி, சம்பந்தனின் இறுதிக்காலத்தில் தேர்தலுக்கான கட்சியாகச் சுருங்கிவிட்டது வேதனை. தற்போது எவருடன் சேர்ந்தாவது ஆட்சியமைத்தால் சரியென்கிற நிலைக்கு இக்கட்சியினர் இறங்கியிருப்பது சம்பந்தரின் காலத்தின்பின்னர் இக்கட்சி மேலும் மேலும் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு வருகிறது என்பதையே காட்டுகிறது.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
சம்பந்தர் அவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய தமிழரசுக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களின் காலத்திலேயே அவர்களுடன் சேர்ந்து பயணித்தவர். இந்தியாவுடனான அக்கட்சியின் செல்வாக்கிற்கு ஒருகாலத்தில் தாமும் காரணமாக இருந்தவர். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழினச் சுத்திகரிப்பின்போது மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஆனால், அவரது வீரியமும், தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஓர்மமும் 2009 இற்குப் பின்னர் இல்லாது போயிற்று. வெற்று வாக்குறுதிகள், பசப்பலான நம்பிக்கைகள் என்பவற்றை அவ்வப்போது மக்களுக்குக் கொடுப்பது, தென்னிலங்கைக் கட்சிகளுடன் சமரசமான போக்கு, தென்னிலங்கைக் கட்சிகளுக்கான விட்டுக் கொடுப்புக்கள், போர்க்குற்றவாளிக்கான ஆதரவு, தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யாது இந்திய இலங்கை அரசுகளிடம் இரைஞ்சியபடி அரசியல் செய்தமை என்று அவர் தனது இறுதிக் காலங்களில் செய்தவை அவரைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி விட்டது. எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்காக அவர் தமிழினத்திற்குத் துரோகம் இழைத்தவர் என்றும் நினைக்கவில்லை.
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
மிகவும் நடுநிலையாக எழுதும் நீங்களே இப்படி எழுதலாமா? இஸ்ரேல் பலஸ்த்தீனர்கள் மீது நடத்துவது அப்பட்டமான இனவழிப்பு என்பதை இங்கே மறுத்தவர்கள் யார்? பலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் போரில் அதனை ஆதரித்தவர்கள் யார்? ஆனால், ஈரானுடனான இஸ்ரேலின் போரில் இஸ்ரேலினை நான் உட்பட இன்னும் சிலர் இங்கே ஆதரித்தது உண்மைதான். ஏனென்றால், மத அடிப்படைவாதிகளின் கைகளில் நாசகார ஆயுதங்கள் போய்விடக்கூடாதென்பதற்காக. மதத்திற்காக எந்தளவு தூரத்திற்கும் ஈவு இரக்கமின்றி இவர்கள் செயற்படுவார்கள் என்பதற்கான சான்றுகளை உலக வரலாற்றில் இருந்து நாம் பார்த்தே வருகிறோம், அதனால்த்தான் அந்த நிலைப்பாட்டினை எடுக்கவேண்டி இருந்தது. ஆனால் நீங்கள் இவை இரண்டையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு விட்டிருக்கிறீர்களே? அது ஏன்? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றே நினைத்து இருந்தேன், ஆனால் உங்களின் அண்மைய கருத்துக்கள் மேற்கிற்கு எதிராக இருக்கின்றன. அப்படியானால் நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? ஏனென்றால், ஈரானுடனான போரில் இஸ்ரேலை சிலர் ஆதரித்தமைக்காக அவர்களை பலஸ்த்தீனப் படுகொலையினை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் கருதும்போது, நீங்கள் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பைச் சரியென்று நினைப்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.
-
வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்
நன்றி ஜஸ்ட்டின்
-
துணுக்காயில் இருந்தது இந்திய இலங்கை படைமுகாமே! மக்களின் வாக்குமூலம்
அருண் சித்தார்த்தைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இங்கு நடந்தது என்னவென்பதை புரிந்துகொள்வதில் எந்தச் சிரமும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் தமிழர்களின் அவலங்கள் குறித்தும், அவர்களின் இழப்புக்கள் குறித்தும் பேசப்படும்போதெல்லாம் அருண் சித்தார்த் தவறாது புலிகள் செய்த கொடுமைகள் என்று போராட்டம் ஒன்றினை யாழ்ப்பாணத்திலோ அல்லது வடக்குக் கிழக்கின் வேறு ஒரு பகுதியிலுமோ நடத்துவார். இப்போராட்டங்களின் ஒற்றை நோக்கம் எமது மக்களின் அவலங்களைக் கொச்சைப்படுத்துவதும், மலிடனப்படுத்துவதும் மட்டுமே. தமிழர்களின் எந்தப் பிரச்சினை குறித்தும் அவர் பேசுவதில்லை. தமிழர்களுக்கென்று பிரச்சினை இருக்கின்றதென்பதையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை. நல்லூர்க் கோயிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று இன்றுவரை விடாப்பிடியாக இருப்பவர். இவர் குறித்து முன்னர் சிரச தொலைக்காட்சியில் வந்த நேர்காணல் ஒன்றுபற்றி எழுதியிருந்தேன். அதில் இவரது உண்மையான சுயரூபம் வெளித்தெரிந்திருந்தது. இப்போது செம்மணியில் இடம்பெற்றும் மனிதப் புதைகுழி குறித்த செய்திகள் இவரை அலைக்கழிக்கின்றன. செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்படுவதால் ஆத்திரப்பட்டு நிற்கும் சிங்களப் பேரினவாதத்தை மகிழ்விக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால்த்தான் தனது மனைவி என்று அடையாளப்படுத்தும் ஒரு பெண்ணை அழைத்துவந்து துணுக்காயில் புலிகளின் சித்திரவதை முகாம் இருந்ததென்றும் அங்கு 4,000 தமிழர்கள் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். செம்மணியில் 400 தமிழர்களைச் சிங்கள இராணுவத்தினர் புதைத்தனர் என்றால், துணுக்காயில் அதைப்போல பத்துமடங்கு தமிழர்களை புலிகள் கொன்று புதைத்தனர் என்று காட்டுவது அவருக்குத் தேவையாக இருக்கிறது. ஆகவேதான் சிங்கள மக்கள் மட்டுமே பார்க்கும் ஒரு இனவாதச் சிங்கள யூடியூப்பரைக் கூட்டிவந்து 4,000 தமிழர்கள் புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டி மகிழ்கிறார். இவரையும், இவரைப் பின்னால் நின்று இயக்கும் இனவாதிகளையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆகவே அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.