Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. தரை கடல் ஆகாயம் தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமையும், புத்திசாதுரியமும் வெளிப்பட்டிருந்த இன்னொரு முக்கிய தாக்குதல் நடவடிக்கைதான் 1991 ஆம் ஆண்டு புலிகள் ஆனையிறவு தடைமுகாம் மீது நடத்திய முற்றுகைச் சமர். "தரை - கடல் - ஆகாயம்" என்று புலிகளால் பெயரிடப்பட்டு நடத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான இம்முற்றுகைச் சமருக்கு மாத்தையா தலைமை தாங்கினார். தளபதி பால்ராஜிற்கும், தீபன் அடங்கலான அவரது போராளிகளுக்கும் வழங்கப்பட்ட பணி குறிஞ்சாத்தீவுப் பகுதியூடாக ஆனையிறவு முகாமின் கப்பரன்களை அழித்து உள்ளே நுழைவது. தனக்கு வழங்கப்பட்ட பணியைக் கச்சிதமாக நிறைவேற்றிய தளபதி பால்ராஜின் அணி, நீர்ப்படுக்கையூடாக முன்னேறி, அப்பகுதியில் இருந்த இராணுவ முகாமினை அழித்து, பிரதான முகாமின் பகுதிகளின் ஒன்றான விருந்தினர் மாளிகையினைக் கைப்பற்றி நிலையெடுத்துக்கொண்டதுடன், இம்முற்றுகைச் சமர் முடிவடையும் வரையில் அப்பகுதியில் இருந்து இராணுவம் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்தனர். இச்சமர் புலிகளுக்கு எதிர்பார்த்த வெற்றியினை வழங்காத நிலை ஏற்பட்டபோது இப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பால்ராஜின் அணி விருந்தினர் மாளிகையினைத் தகர்த்துவிட்டே வெளியேறியிருந்தது. புலிகள் எதிர்பார்த்த வெற்றியான முகாமின் முற்றான அழிப்பு என்பது நடைபெறாது போனதனால் இச்சமர் அவர்களுக்கு தோல்வியாகப் பார்க்கப்பட்டது. புலிகள், 673 போராளிகளை இச்சமரில் இழந்தபோதிலும், தளபதி பால்ராஜின் அணி தனக்கு வழங்கப்பட்ட பணியினை மிகவும் வெற்றிகரமாகவே செய்திருந்தது. தொடரும்............
  2. வன்னியின் இராணுவத் தளபதி புலிகளின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக, வன்னி மண்ணின் மைந்தனான தளபதி பால்ராஜ் அவர்கள் அந்நிலத்தின் இராணுவத் தளபதியாக 1990 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கலத்திலேயே பால்ராஜ் அவர்கள் தனது இராணுவ வல்லமையினையும், திட்டமிடலின் புத்தி சாதுரியத்தையும் சிறப்பாக வெளிக்காட்டும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஏ - 9 நெடுஞ்சாலை அல்லது யாழ் - கண்டி வீதியின் வவுனியா முதல் ஆனையிறவு வரையான பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே அக்காலத்தில் இருந்து வந்தது. இவ்வீதியின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் இராணுவம் தனது படைமுகாம்களை அமைத்திருந்தது. தளபதி பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணி கொக்காவில் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் மீது வலிந்த தாக்குதல்களை நடத்தி அவற்றைக் கைப்பற்றிக்கொண்டது. பின்னர் கிளிநொச்சி இராணுவம் முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. ஆனால் புலிகளினால் கிளிநொச்சி முகாமை அப்போது முழுமையாகக் கைப்பற்ற முடியாது போய்விட்டபோதும், சிலநாட்களின் பின்னர் இராணுவமே அம்முகாமைக் கைவிட்டு விட்டு, பரந்தன் பகுதியில் தன‌து நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டது. இத்தாக்குதல்களினால் புலிகள் அடைந்த வெற்றி அவர்களின் ஆயுதக் கைய்யிருப்பினை அதிகப்படுத்தியது. இச்சமர்களினூடாக தளபதி பால்ராஜ் அவர்கள் மிகச் சிறந்த தளபதியாக உருவெடுத்ததுடன் தனது அணிகளில் பணியாற்றிவந்த போராளிகளுக்கு உத்வேகத்தையும், நம்பிக்கையினையும் ஊட்டி, சண்டைகள் கடுமையாகும்பொழுதிலும் துணிகரமாகச் சமராடி, சமரை வெற்றிகொள்ளும் மனோபலத்தையும் அவர்களுக்கு ஊட்டி வந்தார். தொடரும்............
  3. இந்திய இராணுவம் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினூடாக இந்திய அமைதிப்படைப் படை எனும் பெயரில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் இலங்கையின் வடக்குக் கிழக்கிற்குள் வந்திறங்கியபோது அதுவரை இருந்த போர்ச்சூழலில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. ஆனால் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்த சமாதான நடவடிக்கைகள் ஐப்பசி மாதமளவில் முற்றாகத் தோல்வியடையவே இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான முழுமையான போர் ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்திய இராணுவம் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்தது. தளபதிகள் பசீலன் மற்றும் பால்ராஜ் தலைமையிலான புலிகளின் அணியொன்று இந்திய இராணுவத்துடனான சண்டைகளுக்காக புலிகளால் யாழ்க்குடநாட்டிற்கு அனுப்பப்பட்டது. இவ்வாறான சமர்களில் ஒன்றான கோப்பாய்ச் சமரில், தமது நிலைகளை நோக்கி முன்னேறிவந்த இந்திய இராணுவத்தின் தாங்கியொன்றின்மீது தான் வைத்திருந்த ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அழித்தார் பால்ராஜ். பால்ராஜின் துணிகரமான இச்செயல் போராளிகளிடையே மிகுந்த மகிழ்வையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையிலான போர் வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளுக்கும் பரவலாயிற்று. தலைவர் பிரபாகரனும், உதவித்தலைவர் மாத்தையாவும் வன்னிக்கு தமது நிலைகளை மாற்றிக்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக அடர்ந்த காட்டுப்பகுதியான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரன் தனது முகாமை அமைத்துக்கொண்டார். தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கும் லெப்டிணன்ட் கேணல் நவமே பொறுப்பாகவிருந்தார். இக்காலத்தில் தளபதி நவத்தின் உதவித்தளபதியாக பால்ராஜ் செயற்படத் தொடங்கினார். இக்காலத்திலேயே தலைவர் பிரபாகரனுடன் பால்ராஜ் அவர்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கள் உருவாகத் தொடங்கின. தளபதி பால்ராஜின் தன்னடக்கமும், அசாத்தியமான போரிடும் ஆற்றலும் தலைவர் பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தன. 1988 ஆம் ஆண்டு நித்திகைக்குளத்தில் தங்கியிருந்த தலைவரைக் கைப்பற்ற இந்திய இராணுவம் முன்னெடுத்த பாரிய இராணுவ நடவடிக்கையான ஒப்பரேஷன் செக்மேட்டிற்கெதிராக, தளபதி பால்ராஜ் அவர்கள் நடத்திய நேரடியான எதிர்ச்சமர் இந்திய இராணுவத்தின் நடவடிக்கையினை முற்றாகத் தோல்வியடையச் செய்திருந்தது. இச்சமரின்போது இந்திய இராணுவத்தின் கூர்க்கா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்தினருக்கெதிரான சண்டைகளில் சுமார் மூன்று தடவைகள் பால்ராஜ் அவர்கள் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறியதையடுத்து தலைவர் பிரபாகரன் தனது கட்டளையகத்தை மீளவும் யாழ்க்குடா நட்டிற்கே மாற்றிக்கொண்டார். அக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பினுள் சில கொள்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து இயக்கத்தில் இணைந்துகொள்ளும் போராளிகள் அப்பிரதேசத்தில் உருவாகும் தலைமைப் பொறுப்புகளுக்கு தம்மை ஈடுபடுத்தலாம் என்பதே அது. தொடரும்............
  4. கொக்குத்தொடுவாய் கந்தையா பாலசேகரன் எனும் இயறற்பெயரைக் கொண்ட தளபதி பால்ராஜ், 1965 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமமான கொக்குத்தொடுவாயில் பிறந்தார். நான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் கொண்ட அந்தக் குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக அவர் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயிலும் பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் உயர்தரக் கல்வியையும் அவர் பயின்றார். குடும்பத்தில் கல்வியில் சிறந்தவராக விளங்கிய பாலசேகரன் அவர்கள், சாதாரணதர பரீட்சையில் அதிவிசேட சித்திகளைப் பெற்றிருந்தார். அவர் கல்வியில் காட்டிய திறமையினால் பல்கலைக்கழகம் புகுவார் என்று அவரது பெற்றோரான கந்தையாவும் தாயாரான கண்ணகியும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் பாலசேகரன் தமிழ் போராளி அமைப்பு ஒன்றில் இணைந்துகொண்டார். 1984 ஆம் ஆண்டிலேயே புலிகளுடன் பாலசேகரன் இணைந்துகொண்டார். புலிகளின் ஒன்பதாவது அணியில் இடம்பெற்ற அவர் தமிழ்நாட்டில் இராணுவப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார். புலிகள் இயக்கத்தில் அவர் இணைந்துகொண்டதன் பின்னர் அவருக்கு பால்ராஜ் என்று பெயர் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தனது ஆயுதப் பயிற்சியை நிறைவுசெய்த பால்ராஜ் நாடு திரும்பினார். புலிகளின் வன்னி நடவடிக்கைகளுக்கு அக்காலத்தில் பொறுப்பாகவிருந்த கோபாலசாமி மகேந்திரராஜா எனும் இயற்பெயரைக் கொண்ட மாத்தையாவினால் புலிகள் இயக்கத்திற்குள் உள்வாங்கப்பட்ட பால்ராஜ், மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இணைக்கப்பட்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தாக்குதல் நடவடிக்கைகளில் புலிகளால் ஈடுபடுத்தப்பட்டார். பால்ராஜ் அவர்களது முதலாவது குறிப்பிடத்தக்க தாக்குதல் முயற்சி 1986 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இடம்பெற்றது. கிளிநொச்சி இராணுவ முகாமைச் சுற்றிவளைக்க மாத்தையாவினால் எடுக்கப்பட்ட முயற்சியானது தோல்வியடைந்தபோதிலும், தனக்கு வழங்கப்பட்ட பணியான கரடிப்போக்குச் சந்தியைக் கைப்பற்றும் தாக்குதலை பால்ராஜ் சிறப்பாகவே செய்துமுடித்தார். 1987 ஆம் ஆண்டு மாத்தையா தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக பதவியேற்று யாழ்க்குடாவிற்குச் சென்றார். அங்கிருந்துகொண்டு வன்னியின அனைத்து இராணுவ நடவடிக்கைகளுக்குமான பொறுப்பினை அவர் பார்த்து வந்தார் . அதேவேளை வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கான தளபதிகளாக ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பசீலனின் துணைத்தளபதியாக பொறுப்பெடுத்துக்கொண்ட பால்ராஜ் அவர்கள், முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார். இக்காலப்பகுதியில் பசீலனினாலும், பால்ராஜினாலும் மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.அதன்பின்னர் பால்ராஜ் அவர்கள் மணலாறுப் பிரதேசத்திற்கு நன்கு பரீட்சயமானவர் என்கிற அடிப்படையில் அப்பகுதியிலேயே களம் அமைத்துச் செயற்பட்டு வரலானார். தொடரும்............
  5. பிரிகேடியர் பால்ராஜ் - போராளிகளால் பூஜிக்கப்பட்ட, எதிரிகளால் வியந்து போற்றப்பட்ட‌ தமிழர்களின் ஒப்பற்ற தளபதி : டி.பி.எஸ்.ஜெயராஜ், டெயிலி மிரர் ஆங்கில இணையம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யாழ்க்குடா நாட்டில் ஒப்பரேஷன் பவான் எனும் இராணுவ நடவடிக்கையினை இந்திய இராணுவம் ஆரம்பித்தது. இந்திய இராணுவத்திற்கெதிரான சண்டைக்கு தளபதி பசீலன் தலைமையிலான புலிகளின் அணியொன்று அவசர அவசரமாக யாழ்க்குடாநாட்டில் இறக்கப்பட்டது. இச்சண்டைகளில் தளபதி பசீலனுக்கு உதவித்தளபதியாக பால்ராஜ் களமாடினார். இச்சண்டைகளில் ஒன்றின்போதே முன்னேறிவந்த இந்திய இராணுவத் தாங்கியொன்றின் மீது சர்வசாதாரணமாக ஆர் பி ஜி உந்துகணைச் செலுத்தியினால் தாக்கி அதனைச் செயலிழக்கச் செய்தார் பால்ராஜ். கோப்பாய்ப் பகுதியில் மிகவும் மூர்க்கத்தனமாக புலிகளின் நிலைகள் நோக்கி முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத் தாங்கிமீது பால்ராஜ் அவர்கள் மிகுந்த துணிவுடன் முன்னால்ச் சென்று அதனைத் தாக்கி அழித்தது அவரது வீரத்தை வெகுவாகப் பறைசாற்றியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு அடுத்த நிலை இராணுவத் தலைவரும், பிரபாகரனின் பிரதான தளபதியுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இயற்பெயர் கந்தையா பாலசேகரன் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அவர்கள் கொண்டிருந்த ஆகச்சிறந்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ்தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இராணுவத் திட்டமிடல்களில் அவருக்கிருந்த அசாத்திய புலமையும், சண்டைகளை முன்னின்று வழிநடத்தும் வல்லமையும் அவருக்கே தனித்துவமானவை. 1965 ஆம் ஆண்டு பிறந்த தளபதி பார்ராஜ் அவர்கள் 2008 ஆம் ஆண்டு வைகாசி 20 ஆம் திகதி, இற்றைக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் இருதய நோயினால் இயற்கை எய்தினார். அவரது அறுபதாவது பிறந்த தினம் இவ்வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்படும். தளபதி பால்ராஜ் தொடர்பாக முன்னர் வந்த கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, புலிகளின் ஒப்பற்ற வீரனான அவரது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இராணுவ வட்டாரங்களில் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் வைத்து தளபதி பார்லார்ஜ் பாக்கப்படுகிறார். தலைவரைப் போலவே தடுப்புச் சமர்களிலும், வலிந்த தாக்குதல்ச் சம‌ர்களிலும் மிகவும் கைதேர்ந்தவராக அவர் வலம்வந்தார். தளபதி பால்ராஜின் இராணுவ வல்லமைகள் அவரது எதிரிகளான இலங்கை இராணுவத்தினராலும் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவ‌ரை பால்ராஜ் அவர்கள் மிகச்சிறந்த இராணுவத் திட்டமிடலாளன் என்பதோடு, மிகவும் திறமையான‌ வீரன் என்றும் கருதப்படுகிறார். திட்டமிடல் மற்றும் அதனைத் திறம்படச் செயற்படுத்துதல் என்பவற்றில் பால்ராஜ் அவர்களைத் தலைவரைக் காட்டிலும் உயர்வான தானத்தில் இலங்கை இராணுவம் வைத்திருந்தது என்றும் கருதப்படுகிறது. தளபதி பால்ராஜுடன் இலங்கை இராணுவம் நடத்திய சண்டைகளின் ஒன்றின்போது போர்முனையிலிருந்து இராணுவத் தலைமைப் பீடத்திற்கு அனுப்பப்பட்ட செய்திப் பரிவர்த்தனையினை புலிகளால் கேட்க முடிந்திருந்தது. அதன்படி போர்முனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த இராணுவ அதிகாரிகள் களத்தில் தளபதி பால்ராஜ் இருக்கிறார் என்று தலைமையிடத்திற்கு அறியத் தந்தார்கள். அதற்கு தலைமையகத்திடமிருந்தது வந்த பதில் இவ்வாறு இருந்தது, "மிகுந்த க‌வனமாக இருங்கள். பிரபாகரனைக் காட்டிலும் பால்ராஜ் மிகவும் ஆபத்தானவர்" என்று கூறியது. பின்னாட்களில் இச்செய்தி குறித்து தலைவர் பிரபாகரன் அறிந்துகொண்டபோது மிகவும் மகிழ்ந்துபோனார். பால்ராஜுடன் இதுகுறித்து வேடிக்கையாகப் பேசிய தலைவர், " அவர்கள் உன்னைத்தான் முதலாவது எதிரியாகப் பார்க்கிறார்கள் போலத் தெரிகிறது, ஆகையால் நான் இனி அஞ்சத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற , பெரிதும் வெளியே தெரிந்திராத சம்பவம் ஒன்று 2003 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.நோர்வே மத்தியஸ்த்தத்தின் உதவியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முயற்சிகள் நடந்துகொண்டிருந்த காலம். இருதய நோயினால் மிகுந்த அவஸ்த்தைக்குள்ளாகியிருந்த தளபதி பால்ராஜிற்கு உடன‌டியான மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. கட்டுநாயக்கா அந்நேரத்தில் நாட்டின் சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இருந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பணியாற்றி வந்தார். நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடனான பேச்சுக்கள் அவ்வேளை நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் பால்ராஜை கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்கு அழைத்துச் செல்லும் அனுமதியினை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது. நோய்வாய்ப்பட்டிருந்த தளபதி பால்ராஜ் தனது இரு மெய்ப்பாதுகாவலர்களோடும், நோர்வேயின் அதிகாரிகளோடும் கட்டுநாயக்கவூடாக சிங்கப்பூரிற்குப் பயணமானார். அவருக்கான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து சில வாரகாலத்தின் பின்னர் அவர் மீளவும் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார். நாடுதிரும்பும் வழியில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை தளபதி பால்ராஜ் வந்தடைந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டிணன்ட் கேணல், மேஜர் தர அதிகாரிகள் உட்பட இன்னும் பதினைந்து இராணுவத்தினர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். இராணுவத்தினர் இவ்வாறு பால்ராஜைச் சூழ்ந்துகொண்டது அவரைத் தாக்குவதற்காகத்தான் என்று எண்ணிய நோர்வே அதிகாரிகள் அச்சத்தினுள் உறைந்துபோயினர். ஆனால் நடந்ததோ வேறாக இருந்தது. வடக்கில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அந்த இராணுவ அதிகாரிகள், தளபதி பால்ராஜ் புரிந்த சாகசங்களை, வியத்தகு செயல்களை நன்கு அறிந்தே இருந்தனர். ஆகவே அவர்மீது மிகுந்த மரியாதையும், கெளரவமும் அவர்களுக்கு இருந்தது. அவரை மிகச்சிறந்த போர்வீரனாக அவர்கள் கண்டுணர்ந்திருந்தனர். ஆகவே தான் பால்ராஜ் அங்கு வருகிறார் என்று அவர்கள் அறிந்த்துகொண்டபோது, களத்தில் தமக்குச் சிம்மசொப்பணமாக விளங்கிய மிகச்சிறந்த வீரனை நேரடியாகக் கண்டுவிடும் ஆர்வத்தில் அவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வதிகாரிகளில்ச் சிலர் பால்ராஜுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், மகிழ்ச்சியாகவும் உரையாடினர். அதன்பின்னர் பால்ராஜ் பத்திரமாக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றி ஏறி வன்னிக்குப் புறப்பட்டுச் சென்றார். அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடப்போகிறது என்று அஞ்சிய நோர்வே அதிகாரிக‌ள் இதனால் ஆறுதல் அடைந்தனர். https://youtu.be/iO8uYq9Fo4U?si=KZnRj8CS1FdFEPkS தொடரும்............
  6. சிங்கள இனக்கொலை இராணுவத்தின் விசேட படையணியின் பயிற்சி நிறைவு பாதியில் நிறுத்தம் ‍ ‍- மாதுரு ஓயா வானூர்தி விபத்தில் ஆறு இனக்கொலையாளிகள் பலியானது காரணமாம். சிங்கள இனக்கொலை இராணுவத்தின் விசேட படைப்பிரிவிற்கென்று இணைத்துக்கொள்ளப்பட்ட பிரிவுகள் 55 மற்றும் 56 இற்கான படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்வு பாதியில் அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இனக்கொலையாளிகளின் விசேட படைப்பிரிவு முகாமில் இன்று காலை ஏற்பட்ட உலங்கு வானூர்தி விபத்தில் ஆறு இனக்கொலையாளிகள் கொல்லப்பட்டதனால் இந்த அணிவகுப்பு நிகழ்வு சடுதியாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. ஏழாவது ஸ்குவாட்ரன் பிரிவினரால் இயக்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பான பெல் 212 உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்திற்கு உள்ளானது. மாதுரு ஓயாவில் அமைந்திருக்கும் விசேட படையணியினர் அணிவகுப்பு நிகழ்விற்கான சாகச ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோதே வானிலிருந்து கீழே திடீரென்று வீழ்ந்து வானூர்தி விபத்திற்குள்ளானது. ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது வானூர்தியில் இரு விமானமோட்டிகள், விமானப்படை வீரர்கள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் விசேட படையினர் என்று 12 பேர் பயணித்திருக்கிறார்கள். விபத்து நடந்தவுடன் சிதைவுகளில் இருந்து அனைவரும் உயிருடன்ம் மீடகப்பட்டபோதிலும் அறுவர் பின்னர் பொலன்னறுவை வைத்தியசாலையில் மரணித்திருக்கிறார்கள். Special Forces passing-out parade halted after helicopter crash - Caption Story | Daily Mirror
  7. சிலர் இவ்வாறான கருத்தாடல்களுக்கு வருவதே தமது புலியெதிர்ப்பு வக்கிரத்தைக் கொட்டுவதற்காகத்தான். என்னதான் தமிழர்களுக்கான நலன்கள் குறித்தே தாம் பேசுவதாகக் கூறினும் அவர்களின் கருத்துக்களில் மிகத்தீவிரமான புலியெதிர்ப்பு உணர்வு இழையோடியிருப்பதை அவதானிக்கலாம். புலிகளை மட்டுமல்லாமல், தமிழர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்களையொத்த சிலரைத் தவிர) இன்றும் புலிகளை ஆதரிப்பதால் ஏற்படும் இயல்பான வெறுப்பும் இவர்களை இவ்வாறு எழுதத் தோன்றுகிறது. இவர்களின் சில வருடங்களுக்கு முன்னரான கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என்றால், "தமிழ்த்தேசியம் தவறானது, தமிழருக்கென்று தனிநாடு தேவையற்றது, தமிழினத்திற்கென்று தனியேயான அடையாளம் தேவையற்றது, தமிழ்ப் பிரிவினைவாதத்தினையும், இனவாதத்தையும் உருவாக்கியவர்கள் தமிழரசுக் கட்சியும் கூட்டணியும்தான், சிறிமாவும் பண்டாரநாயக்கவும் தமிழர்களுக்கு நண்மை புரிந்தவர்கள், தமிழர்கள் அடையாளம் துறந்து இலங்கையராக தம்மை அடையாளப்படுத்துவதே சரியானது" என்று இவர்கள் வாதித்ததைப் படித்திருப்பீர்கள். தமிழர்கள் நலன் தொடர்பாக இவர்களுக்கு ஒரு உரோமம் தன்னும் அக்கறை இல்லை. புலிகளையும், பெரும்பாலான தமிழர்களையும் அவமதிக்கக் களம் திறக்கப்பட்டிருக்கிறது. அதனால் இங்கு வந்து கடை விரிக்கிறார்கள். இவர்களுடன் வாதிட்டு உங்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
  8. இந்தியாவும், பாக்கிஸ்த்தானும் எமக்கெதிரான போரில் இலங்கைக்கு உதவியவர்கள். இந்தியா ஒருபடி மேலே சென்று 2009 மே மாதாம் 18 இற்கு முன்னர் யுத்தம் முடிக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசிற்குக் கட்டளையிட்டு அதற்கான சகல உதவிகளையும் செய்திருந்தது. எந்தப் பாக்கிஸ்த்தான் இலங்கைக்குள் ஆளமாக வேரூன்றுவதைத் தான் விரும்பவில்லை என்று கூறி இலங்கைக்கான தனது இராணுவ உதவிகளை அன்று இந்தியா நியாயப்படுத்தியதோ, அதே பாக்கிஸ்த்தானுடன் இன்று சண்டையிடுகிறது. இந்தியா இப்போரில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஐந்து இல்லை ஐம்பது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட வேண்டும். வாழ்த்துக்கள் பாக்கிஸ்த்தான். Pakistan security sources say 5 Indian fighter jets, including French-made Rafales, shot down From CNN’s Sophia Saifi and Nic Robertson in Islamabad Five Indian Air Force jets and one drone were shot down by Pakistan during India’s attack, according to Pakistani security sources. In a statement released to reporters, the security sources said three French-made Rafale jets, one MiG-29 and one SU-30 fighter jets were downed “in self-defense.” An Indian Heron drone was also shot down, they added. A second senior Pakistani government official confirmed the same list of downed aircraft. The briefing did not say precisely where the jets were downed or how. Pakistani officials had earlier briefed that they shot down three aircraft and a drone. CNN cannot independently verify the claims and has reached out to the Indian government for a response. 8 people killed, dozens injured in 6 locations in Pakistan, military spokesperson says From CNN's Hira Humayun and Helen Regan Eight people were killed, including children, and 35 injured, Pakistan’s military spokesperson said after India launched military strikes on targets in Pakistan early Wednesday. India targeted six locations with 24 strikes in both Pakistan and Pakistan administered-Kashmir, spokesperson Lt. Gen. Ahmed Sharif Chaudhry said in a news conference early Wednesday. Previously, Pakistan said five locations were struck. India has said nine sites in total were targeted. Five people were killed, including a 3-year-old girl, in Ahmadpur East, in Pakistan’s Punjab Province, Chaudhry said. One man was also killed in Punjab’s Muridke, a city near Lahore, the capital of the province. In Pakistan administered-Kashmir, a 16-year-old girl and 18-year-old man were killed in the city of Kotli, he added. Mosques were targeted in the strikes, according to the military spokesperson. CNN cannot independently verify the claim.
  9. இது தனிப்பட்ட ஒருவரின் கருத்து. 2009 இற்குப் பின்னர் புலிகள் மீது ஏற்பட்ட வெறுப்பினால் உமிழப்படுவது. ஆகவே இதனை சரியா தவறா என்று அமிலப் பரிசோதனை செய்து உங்களின் நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. தமிழர் நலனில் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக அக்கறை கொண்டவர்கள் எமதினதில் முன்னரும் இருக்கவில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.
  10. தவறான முடிவினால் எடுக்கப்பட்ட உயிர். இதனைச் செய்திருக்கத் தேவையில்லை. அமெரிக்கச் சார்பு நீலன் அமெரிக்க நலன்களை முன்னிறுத்தியே தீர்வினை வரைய உதவியிருக்கலாம், இதுகூட அனுமானம் தான். இவரைக் கொன்றதால் எமக்கு சர்வதேசத்தில் ஏற்பட்ட அவப்பெயரும், பாதிப்பும் மிகக் கடுமையானது. கதிர்காமர் கொல்லப்பட்டதைக் காட்டிலும் நீலனின் கொலை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சிலவேளைகளில் கதிர்காமை சந்திரிக்காவிற்கு அறிமுகம் செய்துவைத்தவர் நீலன் என்பதாலேயே இவரை புலிகள் குறிவைத்தார்களோ என்றும் நினைப்பதுண்டு. எதுவாகவிருந்தாலும் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய கொலை. ஒரு விவாதத்திற்கு இவரைக் கொன்றதாலேயே அமெரிக்கா புலிகளை அழித்தது அல்லது அழிக்கத் துணை நின்றது என்று எடுத்துக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதுமே தர்மத்தின்பால் நின்றிருக்கிறதா என்கிற கேள்வியும் வருகிறதே? 1980 களின் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சிங்கள ஆக்கிரமிப்பிற்குத் துணையாகவே நின்றிருக்கிறது. புலிகளை அழிப்பதே இலங்கையுடனான தனது வெளியுறவுக் கொள்கை என்றளவிற்குச் செயற்பட்டு வந்திருக்கிறது. ஆகவே அமெரிக்கா, நீலனின் இறப்பின் பின்னர்தான் புலிகளை அழிக்க எண்ணியது என்று நான் நினைக்கவில்லை. தமிழர் போராட்டத்தை எவர் முன்னெடுத்திருப்பினும் அதனை அமெரிக்கா எதிர்த்தே இருக்கும். நீலனின் கொலை இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் என்று நான் கருதவில்லை.
  11. எமக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த வீரமங்கைக்கு எனது கண்ணீர் அஞ்சலி !
  12. மாமனிதர் தாரக்கி சிவராமைக் கொன்றது இனியபாரதியே - கீர்த்தி ரட்நாயக்க‌ தாரக்கி சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த விடுதியில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து உணவருந்திவிட்டு வீடு திரும்பும் வேளையில் அவரைக் கருணா குழுவினரும் இராணுவப் புலநாய்வுத்துறையும் கடத்திச்சென்று கடுமையான சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்து, பின்னர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதி அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் சதுப்பு நிலப்பகுதியில் எறிந்துவிட்டுச் சென்றார்கள் என்று டி.பி.எஸ் ஜெயராஜ் உட்பட இன்னும் சில செய்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். தாரக்கியை கருணாவே தனிப்பட்ட ரீதியில் சுட்டுக் கொன்றான் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனாக் கீர்த்தி ரட்நாயக்கவின் செவ்வியில் பிள்ளையானின் அடியாட்களில் ஒருவனான இனியபாரதியே தாரக்கி சிவராமைக் கொன்றான் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் சிவராமைக் கொன்றது கருணா குழுவினர்தான் என்பது உண்மை, ஆனால் இக்கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவன் யாரென்பதில் இதுவரை தெளிவில்லை.
  13. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பிள்ளையானினால் இரு சிறுமிகள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவரான திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷாவிற்கு வயது 8 மட்டுமே. சுமார் 50 மில்லியன் ரூபாய்கள் கப்பமாகக் கோரப்பட்டு பணம் வழங்கப்படுமுன்னரே இச்சிறுமி கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, சாக்கினுள் கட்டப்பட்ட நிலையில் திருகோணமலையின் வீதியோரக் கால்வாய்க்கு அருகில் கண்டெடுக்கப்பட்டாள் என்று கீர்த்தி கூறுகிறார். அவ்வாறே மட்டக்களப்பில் கடத்திச் செல்லப்பட்ட 11 வயதுச் சிறுமியும் பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டாள் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார். இக்கடத்தல்கள், படுகொலைகளில் ஈடுபட்ட பிள்ளையான் குழு உறுப்பினர்களைப் பின்னர் பிள்ளையானே பொலீஸாரின் உதவியுடன் சுட்டுக் கொன்றான் என்பதும் குறிப்பிடத் தக்கது.
  14. சிரச தொலைக்காட்சியின் பிரபல அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான "ட்ருத் வித் சமுதித்த" எனும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சிங்களப் பத்திரிக்கையாளரும் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பெரிதும் முரண்பட்டு வந்தவருமான கீர்த்தி ரட்நாயக்க எனும் சுதந்திர ஊடகவியலாளர் பல விடயங்கள் குறித்து தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில முக்கியமான தகவல்களை இங்கே பகிர்கிறேன். துணைவேந்தர் ரவீந்திரநாத்தைக் கருணாவுடன் சேர்ந்து பிள்ளையான் எதற்காகக் கொன்றான்? வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல்வன்புணர்விற்கு உள்ளாக்கிய பிள்ளையானையும் கருணாவையும் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். தம்மீதான விமர்சனங்களை தடுப்பதற்காகவே கருணாவும் பிள்ளையானும் இணைந்து அவரைக் கொழும்பிலிருந்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று கீர்த்தி கூறுகிறார். கருணா இலண்டனுக்குத் தப்பியோடிய காலத்தில் பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி நேவி சம்பத் என்று அழைக்கப்பட்ட கடற்படை அதிகாரியொருவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் கொழும்பில் இருந்த பல தமிழ் வியாபாரிகளைக் கப்பத்திற்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறான் என்று அவர் கூறுகிறார். 2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரி எனும் பொய்யான கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குக் கருணாவை கோத்தா அனுப்பிவைக்க, அவன் அங்கு சில மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுடன் இருந்த காலத்தில் வெறும் எடுபிடியாளாகச் செயற்பட்டு வந்த பிள்ளையான், அவர்களுக்காக உழவு இயந்திரங்களை ஓட்டுவது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வது போன்ற வேலைகளையே செய்துவந்திருக்கிறான். கருணா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கத் தொடங்கியதன் பின்னரே பிள்ளையான் எனும் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் கொடூரமானவன் என்று சில காலத்திலேயே பெயரெடுத்துவிட்ட பிள்ளையான் இராணுவ புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கி வந்தான். இலங்கையில் இருந்து கருணா லண்டனிற்குத் தப்பியோடிய இடைவெளியைப் பாவித்துக்கொண்ட பிள்ளையான், தன்னை ராஜபக்ஷ சகோதரர்களுடனும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அவ்வாறே இராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு பிரிவு இவனைத் தமது தேவைகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. கருணா மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. மாமனிதர் ரவிராஜை பிள்ளையானும் கருணாவும் எதற்காகக் கொன்றார்கள் ? கொழும்பிலிருந்த சில தமிழ் வர்த்தகர்கள் அக்காலத்தில் புலிகளுக்கு பணவுதவிகளைச் செய்துவருகின்றனர் என்பதை கோத்தாபய அறிந்துவைத்திருந்தான். ஆகவே நாட்டின் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் கொழும்பில் இயங்கிவந்த பிரபல தமிழ் வர்த்தகர்களை இலக்குவைத்து கடத்தல்களில் ஈடுபடுமாறும், கப்பம் கோருமாறும் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானையும் அவனோடு இயங்கிவந்த கருணா, சாந்த கஜநாயக்க மற்றும் ஹெட்டியாரச்சி எனும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை பணித்தார்கள். அதன்படியே கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். சிலர் பாரிய கப்பத்தொகை செலுத்தப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ பாதுகாப்புடன் பவணிவந்த பிள்ளையான் வெளிப்படையாகவே தமிழ் வர்த்தகர்களைக் கடத்திச் சென்றுகொண்டிருக்க, இதனைத் தடுப்பதற்காக பல தமிழ் வர்த்தகர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்களையும் மீறி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜிடம் பிள்ளையானின் கடத்தல் மற்றும் கப்பம் கோரல்களுடனான படுகொலைகளைப்பற்றி முறையிட்டிருந்தனர். வர்த்தகர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள், தகவல்கள் அடிப்படையில் முக்கியமான அறிக்கையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ரவிராஜ் தயாரித்து வந்திருந்தார். பாராளுமன்றத்தில் ரவிராஜினால் வெளிப்படையாகவே இத்தகவல்கள் வெளிக்கொணரப்படுமிடத்து இக்கடத்தல்களுடனான தமது தொடர்புகள் வெளிவரும் என்று அஞ்சிய கோத்தாபாயவும், பசில் ராஜபக்ஷவும் ரவிராஜைக் கொல்லுமாறு பிள்ளையானுக்கு உத்தரவிடுகின்றனர். ரவிராஜைக் கொல்வதற்காக பிள்ளையான் ஆயத்தப்படுத்தி வருகிறான் என்பதை புலநாய்வுத்துறையினரூடாக அறிந்துகொண்ட கீர்த்தி, ரவிராஜைச் சந்திப்பதற்காக பஸ்டியான் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று தான் அறிந்தவற்றைக் கூறி, "இன்னும் ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் உங்களைச் சுட்டுக் கொல்லப்போகிறான்" என்று எச்சரித்திருக்கிறார். இதற்கான சாட்சியாக சத்துரிக்கா ரணவக்க எனும் ரவிராஜின் உதவியாளர் இருக்கிறார் என்றும் கீர்த்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டவாறே சரியாக 8 நாட்களில் பிள்ளையானும், நேவி சம்பத்தும் இணைந்து கொழும்பு நகரில் தனது பிரத்தியேக வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த ரவிராஜை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றனர். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் 5000 கோடி சொத்துக்களைச் சுருட்டிய போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் உரிமையாளரான நடராஜா சிறீஸ்கந்தராஜாவைக் கடத்திச் சென்று படுகொலைசெய்து, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, 5000 கோடி பெறுமதியான சொத்துக்களை போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா வளைத்துப்போட்டிருக்கிறான் என்று கீர்த்தி கூறுகிறார். பிள்ளையான், கருணா மற்றும் நேவி சம்பத் ஆகியோர் மூலம் இக்கடத்தலினைச் செய்த சவேந்திர சில்வா, தனது பாதாள உலகக் கும்பல் ஒன்றின் தலைவனூடாக வர்த்தகரின் மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தினான் என்று கீர்த்தி மேலும் கூறுகிறார். அக்குரஸை மற்றும் கெப்பிட்டிக் கொல்லாவைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு பங்குனியில் தென்மாகாணத்தின் அக்குரசைப் பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் மத வழிபாடொன்றின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு இன்னும் 35 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்று அரசு உடனடியாக அறிவித்திருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு மகிந்தவின் ஆதரவாளரான ஜானக்க பண்டார தென்னக்கோன் எனும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வன்னியில் நடக்கும் போரின் அகோரத்தைத் திசைதிருப்பவே மகிந்த இத்தாக்குதலை தெற்கில் நடத்தியதாகவும் கீர்த்தி கூறுகிறார். 2006 ஆம் ஆண்டு ஆனிமாதம் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவை பஸ் குண்டுத் தாக்குதலை நடத்தியதும் மகிந்தவே புலிகளை முற்றாக அழிக்க தன்னை உந்தித் தள்ளிய தாக்குதல் இது என்று இத்தாக்குதல் குறித்து மகிந்த பலவிடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 2006 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்தவுடனேயே அமெரிக்காவும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இத்தாக்குதலுக்குப் புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தனர். பல சர்வதேச ஊடககங்களில் முக்கிய செய்தியாக இது வலம்வந்ததுடன் தமிழர்மீதான முற்றான போரிற்கும் இத்தாக்குதலை ஒரு காரணமாக மகிந்த காட்டிவரத் தொடங்கினான். ஆனால் இத்தாக்குதலே மகிந்தவினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கீர்த்தி கூறுகிறார். அநுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மகிந்தவின் கொலையாளிகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே மகிந்தவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதல் குறித்த தகவல்களை கவலையீனமாக வெளியே கசியவிட்டதாகவும் இதன்மூலமே மகிந்தவின் இத்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கீர்த்தி கூறுகிறார். இத்தாக்குதல் நடந்தபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறியது நினைவிருக்கலாம். உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான் இத்தாக்குதல் நடந்தவுடன் கோத்தாபாயவிற்குச் சார்பான லங்கா கார்டியன் பத்திரிக்கையும், கோத்தாவின் ஆலோசகரான ரொகாண் குணவர்த்தனவும் இத்தாக்குதலை ஐஸிஸ் அமைப்பே நடத்தியதாக கூறியிருந்தனர். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையினை இப்பத்திரிக்கையும், ரொகான் குணவர்த்தனவுமே காவி வந்தனர். 2021 இல் இவ்வறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கான முஸ்த்தீபுகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதற்காகத் தயார் செய்யப்பட்ட பிள்ளையானுக்கு மாதம் தோறும் 35 இலட்சம் ரூபாய்களை இராணுவப் புலநாய்வுத்துறை சம்பளமாகச் செலுத்திவந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை ராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் உதவியாளராகச் செயற்பட்டு வந்த ஒருவரின் மகனே ஆசாத் மெளானா. இவனுக்கும் இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்றன. இதனால் இவன் அடிக்கடி இந்தியாவிற்குப் போய்வந்திருக்கிறான். இவனூடாகவே பிள்ளையானை இத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது ரோ.. குண்டுத்தாக்குதலுக்குத் தேவையான மேலங்கிகள், குண்டுகள் என்பன இந்தியாவினாலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவப் புலநாய்வுத்துறையினரின் உதவியுடன் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டே இந்திய ரோ, இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் சுரேஷ் சாலேயின் கீழ் வழிநடத்தப்பட்ட பிள்ளையான் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலினை நடத்தினார்கள். இலங்கையில் கோத்தா ஜனாதிபதியாவைதையும், இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவதையும் உறுதிப்படுத்துவதற்காகவே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் ரணில் விக்கிரம‌சிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொழும்பில் இதுகுறித்து நடந்த ரகசியச் சந்திப்பொன்றில் ரணில், பிள்ளையானின் அடியாட்களில் மிகவும் கொடூரமானவன் என்று அறியப்படும் இனியபாரதி மற்றும் இராணுவப் புலநாய்வுத்துறையின் சுரேஷ் சாலே ஆகியோர் இத்தாக்குதல் குறித்து பேசியது குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.
  15. இதற்கெல்லாம் சாட்சியங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அண்ணா. அவை தெரிந்துகொண்டுமே இவனுக்கு ஐம்பதினாயிரம் வாக்குகளை வாரி வழங்கினார்கள். பிரதேசவாதத்தினை அபிவிருத்தி எனும் மாயைக்குள் மறைத்துக்கொண்டே இதனைச் செய்தார்கள்.
  16. பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இயங்கிவந்த வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இவனாலும், கருணாவினாலும் குறிவைத்துத் தாக்கப்பட்டோ அல்லது கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலைசெய்யப்பட்டும் வந்தனர். பத்திரிக்கையாளர் நடேசனை இவனும் கருணாவும் கொன்றதன் ஒரே காரணம் அவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். அவ்வாறே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தை நத்தார் திருப்பலியில், ஆலயத்திற்குள் இருந்து சுட்டுப்படுகொலை செய்தது அவர் கருணாவின் பிரதேசவாதத்தினை எதிர்த்து, அவன் நடத்திய கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கூட வடபகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தான். பின்னாட்களில் வடபகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பீடாதிபதியாக வருவதை சகித்துக்கொள்ள முடியாத கருணாவும், பிள்ளையானும் அவரை கொழும்பில் வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தனர். தற்போது பிள்ளையான் எனும் பெயரில் பவனி வந்த மனிதகுலத்திற்கெதிரான இந்த மிருகம் செய்த பாதகச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. 1. கிழக்கில் பணியாற்றிய வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்விமான்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான கப்பம் அறவிடல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள். 2. தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தித் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த, வடபகுதியைச் சேர்ந்த பிரேமினி எனும் பெண்மீது பிள்ளையானும் பிரதேசவாத வெறிபிடித்த, அவனுடைய இன்னும் ஏழு ஏவல் நாய்களும் இணைந்து நடத்திய கூட்டுப் பாலியல் வன்புணர்வும் அதன்பின்னர் அப்பெண்ணை துண்டங்களாக வெட்டி காட்டிற்குள் வீசியெறிந்தமையும். 3. பிரேமினியோடு இவனால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் ஆறு வடபகுதியைச் சேர்ந்த புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் அவர்களுக்கான புதைகுழிகளை அவர்களே வெட்டும்படி வற்புருத்தப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டு அக்குழிகளுக்குள்ளேயே புதைக்கப்பட்டமை. 4. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரவீந்திரநாத்தை கொழும்பிலிருந்து கடத்திவந்து கிழக்கின் காடுகளுக்குள் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை. இவரது படுகொலைக்கான காரணம் இவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, பிள்ளையானினாலும், கருணாவினாலும் வடபகுதி மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும், விசாரணைகளைக் கோரியும் வந்தமைதான் என்று சொல்லப்படுகிறது. 5. கடற்படைக் கொலைக்குழுவுடன் இணைந்து பிள்ளையான் நடத்திவந்த கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் குறித்துத் தகவல்களைச் சேகரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அருகில்ச் சென்று சுட்டுக் கொன்றமை. 6. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கோத்தாவினால் மிக் வானூர்திகள் கொள்வனவில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து தொடர்ந்தும் பேசிவந்ததனால் அவரைக் கொல்வதற்கு இவனுக்கும் கருணாவிற்கும் கொடுக்கப்பட்ட பணத்தொகை 50 மில்லியன் என்பது குறிப்பிடத் தக்கது. 7. இவனது மாபாதகச் செயல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல அமைந்தது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவன் தலைமையில் இலங்கையில் பலவிடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஆலய மற்றும் விடுதிப் படுகொலைகள். மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் நேரடியாகப் பங்காற்றியமைக்காக இவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்கிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கோத்தபாயவின் மீள்வருகைக்கான தாக்குதல் ஒன்றிற்குத் தயார்ப்படுத்தி, சிறைக்குள் இருந்தவாறே அத்தாக்குதல்களை நெறிப்படுத்தி , கோத்தாவின் வெற்றியை உறுதிப்படுத்தினான். இதற்காக இவனுக்கும் இவனது கொலைக்குழுவிற்கும் வழங்கப்பட்ட பணம் 65 மில்லியன் ரூபாய்கள். திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷா எனப்படும் சிறுமியைக் கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் படுகொலைசெய்து சாக்கினுள் அடைத்து வீதியில் வீசிச்சென்றது. பின்னர் இதில் ஈடுபட்டவர்களை பொலீசார் கைதுசெய்தபோது, தனது பெயர் வெளியே வந்துவிடும் என்பதற்காக பொலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து வாகனத்தில் பயணிக்கும்போதே சுட்டுக் கொன்றது. மட்டக்களப்பில் இன்னொரு பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, கிடைக்காது போகவே, அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கொலைசெய்து கிணற்றுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது. வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு மிரட்டியது. ஆரம்பத்தில் உஇதனை மாணவர்கள் கண்டுகொள்ளாதுவிடவே பிள்ளையானும் அவனது அடியாட்களும் மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்து மூன்று வடபகுதியைச் சேர்ந்த மாணவிகளைக் கடத்திச் சென்று கூடுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி ஏனைய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அச்சுருத்தல் விடுத்தது. இவற்றினை விடவும் இவனாலும், இவனது கொலைக்குழுவான ட்ரிபோலிப் பிளட்டூனினானும் நடத்தப்பட்ட கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் நூற்றுக்கணக்கானவை. புலிகளியகத்திலிருந்து பிரிந்து பிரதேசவாத வெறியும், பணத்தாசையும் கொண்டு இவன் புரிந்துவந்த மனிதகுலத்திற்கெதிரான செயல்களின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சில பிரபல பெயர்களையும், சம்பவங்களையும் தவிர பெயர் தெரியாத பல தமிழர்களை இவன் கொன்றிருக்கிறான். ஆனாலும், வடபகுதித் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து , கிழக்கு மாகாணத் தமிழர்களை தலை நிமிரச் செய்து, கிழக்கின் விடிவெள்ளியாக இவன் இருப்பதாக நினைத்த கிழக்குத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இவன் சிறையில் இருக்கும்போதே பாராளுமன்றத் தேர்தலில் ஐம்பதினாயிரம் வாக்குகளுக்கு மேலாக வாரி வழங்கி, இவனைத் தமது தமது வரலாற்று நாயகனான முடிசூடி அழகுபார்த்தார்கள். பிரதேசவாதம் கண்களை மறைக்க, அதனை அபிவிருத்தி எனும் வெற்றுக்கோசத்திற்குள் மறைத்து மனிதவுருவில் வலம்வந்த நச்சுப்பாம்பைத் தமது தலைமகனாக ஏற்றி அகமகிழ்ந்தார்கள். தாம் மகுடம் சூட்டி, அழகுபார்த்து, உச்சிமோர்ந்து, பரவசமடைந்து, பல்லக்குத் தூக்கிய இந்த மிருகத்தின் கொடுஞ்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன இப்போது. இனியாவது இவனும் இவனது சகாவான கருணாவும் பேசிவந்த பிரதேசவாதம் என்பது போலியானது என்பதை இவர்கள் உணர்வார்களா? https://www.youtube.com/watch?v=hQk-7Hp5EFM https://www.youtube.com/watch?v=p0cZ33gAi4c
  17. நான் அறிந்தவரையில் சுமந்திரன் உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்றங்களை விசாரிக்கலாம் என்று கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் நல்லிணக்க அரசுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் வெளியக உதவியுடனான உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கு மைத்திரி - ரணில் அரசு ஒத்துக்கொண்டபோது, அதனை சுமந்திரன் ஆதரித்தார் என்று நினைவு. இச்சந்தர்ப்பத்தைத் தவிர அவர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று கோரிவந்தார் என்று நினைக்கிறேன். இனக்கொலை எனும் பதத்தினைப் பாவிப்பதில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. நடந்தது இனக்கொலை தான் என்று நாம் நபினாலும் அதனை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரம் இல்லை அல்லது அதனை உறுதிப்படுத்தப் போய் நாம் மேலும் பலவீனமாக்கப்படுவோம் என்பதற்காக தான் அப்பதத்தினைப் பாவிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார் என்று நினைக்கிறேன். சுமந்திரனின் இவ்வாறான கொள்கைகளுக்கான அடிப்படைக் காரணம் அவர் தனிநாடு என்பதனை ஒருபோதும் ஆதரிக்கவில்லை அல்லது அது சாத்தியமில்லை என்று நினைப்பதனாலோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுமந்திரனின் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டிற்கும் அவரின் இக்கொள்கைகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்று நான் நம்பவில்லை. எமது இனத்தின் இருப்பைப் பற்றி நாமே பேசாதுவிட்டால் வேறு எவர்தான் பேசுவார்கள்?
  18. இது எனக்கும் நடந்தது. நான் பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ் யூனியனிலிருந்தும், தமிழ் மாணவர்களின் பட்ஜ் ட்ரிப் உள்ளிட்ட இன்ன பிற நிகழ்வுகளிலிருந்தும் ஒதுக்கிவிட்டார்கள். கூடவே "அன்டி" ரஞ்சித் எனும் நாமமும் எனக்குச் சூட்டப்பட்டது. கூட்டமாகக் கதைத்துக்கொண்டிருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்களே "அன்டி வாறான்" என்று பேச்சை மாற்றிய பல தருணங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு மூன்று அல்லது நான்கு சக மாணவர்களைத் தவிர வேறு எவருமே என்னுடன் பேசியதில்லை. பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. நீங்கள் கூறியதுபோலவே, என்னை பிந்தொடர்ந்து வந்து, பஸ்ஸில் ஏறி கட்டுப்பெத்தை வரை வந்து மிரட்டியவர் என்.டி.டி எனும் கற்கை நெறியைச் சார்ந்த, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தன் என்பவர். அவர் படிக்கும் கற்கை நெறிக்கும் எனது பொறியியல் கற்கை நெறிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அன்று தன்னுடன் வரவில்லையென்றால் "உனக்குக் கோஸ் வேர்க் தரமாட்டேன்" என்று கூட கூறிப்பார்த்தார். நாம் மசியவில்லை. சில வாரங்களுக்குப் பின்னர் அவரை பல்கலை வாயிலில் சந்தித்தேன். "நீ படிப்பது என்.டி.டி, நீ எப்படி எனக்கு கோஸ் வேர்க்கில் உதவுவாய்?" என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். பதில் இல்லை. இவரைப்போன்றே ரஜீவ் என்று என்னுடன் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரியில் கல்விகற்று மொறட்டுவையில் குவான்ட்டிட்டி சேவயரிங் படித்துவந்த எனது முன்னால் நண்பரும் என்னை துன்புறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். "நீ என்னுடன் படித்தவன் தானே? என்னைத் தெரியவில்லையா உனக்கு ?" என்று கேட்டேன். தெரியாதவர் போலவே நடந்து கொண்டார். ராக்கிங் காலம் முடிந்தவுடன் ஒருநாள் கன்டீனில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது வந்து முன்னால் அமர்ந்து, "மச்சான்" என்றார். "என்னட்ட அடிவாங்க முதல் போயிடு" என்று சொல்லவும், கண்கள் கலங்கி அருகில் இருந்த எனது நண்பனிடம், "பாரடா இவனை, ராக்கிங்கில செய்ததையெல்லாம் வைச்சுச் சாதிக்கிறான்" என்று முறையிட்டார். "அவனைப் போகச் சொல்லு" என்றுவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டேன். இறுதிவரை அவருடன் பேச விரும்பவில்லை. என்னுடன் பாடசாலைக் காலத்தில் படித்தவர்கள், என்னை நன்றாக அறிந்திருந்த உறவினர்கள் என்று பலர் என்னை பகிடிவதைக்கு உட்படுத்த விரும்பினார்கள். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கெல்லாம் என்னிடம் இருக்கும் ஒரே பதில் மனநோய்தான். அப்படியில்லையென்றால் இவர்களால் இதனைச் செய்ய முடியாது.
  19. பகிடிவதை என்பது இன்னொரு மனிதன் மீது, தனக்கிருக்கும் வக்கிரத்தை, சீனியர் என்ற தகுதியினை மட்டுமே வைத்துக்கொண்டு கட்டவிழ்த்துவிடுவது என்பது எனது கணிப்பு. சாதாரண சூழ்நிலையில் ஒரு மனிதன் மீது செய்ய முடியாத சில வக்கிரங்களை சீனியர் எனும் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பதவியினை வைத்து அவிழ்த்துவிட்டு சுய இன்பம் காணுவது. இது ஒரு மனோவியாதி என்பதைத்தவிர வேறு வழியில் விளக்கமுடியாது. 1995 இல் இருந்து 2000 வரை மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் நான் அனுபவித்த, நேரால் கண்ட வக்கிரங்களில் இருந்து நான் உணர்ந்துகொண்டது இதனைத்தான். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வரும் தமிழ் மாணவர்களும், தெற்கின் கிராமப் புரங்களில் இருந்து வரும் சிங்கள மாணவர்களும் பகிடிவதைக்கு அதிகம் முகம் கொடுப்பதோடு, இவர்களே அடுத்தவருடம் நடக்கும் பகிடிவதைகளுக்குத் தலைமையும் தாங்குவார்கள். நான் கொழும்பு மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தமையினால் என்மீது விசேட கவனம் செலுத்தினார்கள் எனது சீனியர்கள். "கொழும்பெண்டால் பெரிய கொழுப்போ உனக்கு, உனக்கிருக்கு, மாட்டுவாய்தானே, அப்ப பார்த்துக்கொள்ளுவோம்" என்று ன் நான் அவர்களின் பிடியில் இருந்து நழுவித் தப்பித்துச் சென்ற தருணங்களில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டுமாத காலம் அவர்களின் வக்கிரங்களைத் தாங்கிக்கொள்ளவில்லை என்பதற்காகவே வெகு சிலரைத் தவிர‌ பல தமிழ் மாணவர்கள், எனது ஆண்டில் படித்தவர்கள் உட்பட, இன்றுவரை என்னுடன் பேசுவதில்லை. பல்கலை முடிந்தவுடன் நேராக வீட்டிற்குச் சென்றுவிடும் வசதி எனக்கிருந்தது. ஆனால் வட கிழக்கில் இருந்து வந்திருந்த பல மாணவர்களுக்கு அந்த வசிதியில்லை. ஆகவே சீனியர்கள் கட்டளையிட்டதற்கு அமைய மாலை 5 மணிக்கெல்லாம் அவர்களின் சித்திரவதைக் கூடங்களில் தவறாது ஆஜராகி, வக்கிரங்களைத் தாங்கி, உடலிலும் மனதிலும் வலிகளைச் சுமந்து தமது அறைகளுக்கு வரும் பல தமிழ் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த வக்கிரங்களை வாரி வழங்குவதில் மாணவர்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதில்லை. எஞ்சினியரிங்கில் இருந்து ஆரம்பித்து, குவான்ட்டிட்டி சேவயரிங், என் டி டி என்று எல்லாப் பாடநெறிகளிலும் இது நடந்தது. சில வேளைகளில் எஞ்சினியரிங் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, அறைதிரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் மாணவர்களோ அல்லது என்.டி.டி மாணவர்களோ தமது பங்கிற்கு இழுத்துச் செல்வதும் நடந்திருக்கிறது. எஞ்சினியரிங்கிற்கு வரும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் அல்லது என்.டி.டி மாணவர்களே அதிகம் கொடுமைப்படுத்துவது நடந்திருக்கிறது. இப்படி இவர்கள் நடந்துகொள்வதற்கு தமக்குக் கிடைக்காத பொறியியல்ப் பீடம் இவனுக்குக் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையும் காரணமாக இருக்கலாம். இன்னும் சில சீனியர்களுக்கு பகிடிவதைக் காலமே பெண்களுடன் பேசுவதற்குக் கிடைத்திருக்கும் பொற்கால‌ம். ஆகவே சொற்களால் பெண்களைச் சித்திரவதை செய்து சுய இன்பம் காணுவார்கள். சாதாரண சூழ்நிலையில் தம்மைப் பெண்கள் ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை என்கிற நிலையில் பகிடிவதைக் காலத்தை தமது வக்கிரங்களைக் கொட்டும் காலமாகப் பாவிப்பது இவர்களின் வழமை. வரப்பிரகாஷின் படுகொலையின்போது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திலிருந்து பகிடிவதைக்குப் பெயெர்பெற்ற வக்கிரப் புத்தி கொண்டோர் ஒரு பேரூந்தினை வாடகைக்கு அமர்த்தி பேராதனைக்குச் சென்றுவந்தார்கள். அப்படிச் சென்றுவந்தவர்களில் எனது ஆண்டில் படித்துக்கொண்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவருமான ஒருவரும் இருந்தார். பகிடிவதையின் உச்சமான பாலியல் வதையினைப் புரிவதில் இவர் பிரசித்தமானவர். பாலியல் வன்புணர்வைத்தவிர மீதி பாலியல் வக்கிரங்கள் இவரது சித்திரவதைக் கூடத்தில் நடைபெறும். வலியில் மாணவர்கள் அலறும்போது சிரித்துக்கொண்டு அதனை அனுபவிப்பவர். இவரது பிடிக்குள் அகப்பட்ட சில மாணவர்களை பகிடிவதையினை ஆதரிக்கும் இன்னும் சில மாணவர்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறார்கள். கொழும்பிலிருந்து தெரிவான சில மாணவர்கள் மீது இவர் தெரிரியாமல் கையை வைக்க, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மயூராபதி அம்மண் கோயில் என்று பலவிடங்களில் அடிவாங்கியவர். 1990 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். முன்னர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் உயர்தரக் கணிதத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஆசிரியரான பிரேம்நாத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். பிரேம்நாத்திடம் முன்னர் கல்விகற்ற ஒரு பழைய மாணவர் அப்போது பேராதனையில் பொறியியல்ப் படித்துக்கொண்டிருந்தார். பிரேம்நாத்திற்கும் தனக்கும் இருந்த பழைய பகமை ஒன்றிற்காக அந்த புதிய மாணவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்து தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டார். பகிடிவதையின்போது இரு முழங்கால்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பார்த்தீபன் என்கிற அந்த புதிய மாணவர் அனுமதிக்கப்பட்டார். தன்னால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பார்த்தீபன் இறந்துபோகலாம் என்கிற செய்தியை தனது சகமாணவர்கள் மூலம் சித்திரவதை செய்த மாணவர் அறிந்துகொண்டபோதிலும், அவரைச் சென்று பார்க்கவோ, தனது ஈனச்செயலுக்கு மன்னிப்புக் கோரவோ அவருக்கு மனம் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பார்த்தீபன் உடல்நிலை மோசமாகி வருவதாகவும், இதற்காக சித்திரவதை செய்தவர் சிறை செல்ல நேரலாம் என்கிற செய்திகள் பரவத் தொடங்கியபோது வேறு வழியின்றி வைத்தியசாலைக்குச் சென்றார். ஆனால் மன்னிப்புக் கோர அவரது மனம் முன்வரவில்லை. சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு, கூடவிருந்த சொந்தங்களின் மனக்குமுறலை கேட்டுவிட்டு வந்துவிட்டார். பார்த்தீபன் நீண்டகால சிகிச்சையின் பின்னர் பிழைத்துக்கொண்டார். அன்று மனோவியாதியால் சக மாணவனை சித்திரவதை புரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிய அந்த மாணவர் இன்று குடும்பத்துடன் சென்று புத்த சமயத்தைத் தழுவி, கண்டியில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தையார் எனது தகப்பனாரின் சொந்தச் சகோதரன் என்பது வேறு விடயம். இவர்கள் வக்கிரம் கொண்டவர்கள். மனோவியாதியினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
  20. யுத்தம் நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல ஆரம்பித்திருக்கும் சிங்களப் பேரினவாதம் தை 21, 2004 கடந்த வாரத்தில் இரு முக்கிய விடயங்கள் இலங்கையில் நடந்தேறியிருந்தன. முதலாவது, கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் புலிகளை உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சந்தித்தனர். இரண்டாவது நிகழ்வாக சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சிக்கும் தெற்கின் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அமையப்பெற்றிருந்தது. இவ்விரு நிகழ்வுகளுமே என்னைப்பொறுத்தவரை இலங்கையின் அரசியல் வரலாற்றில், குறிப்பாகத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக இருந்தன என்று நம்புகிறேன். இவை இரண்டையும் ஒன்றாக உற்று நோக்கும்பொழுது இலங்கையில் வடக்குக் கிழக்கு என்றும் தெற்கு என்றும் இரு நிர்வாக பிராந்தியங்களாக பிரிக்கப்படும் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதாகவே என்னால் உணர முடிகிறது. தெற்கஎன்றும், இணைந்த வடக்குக் கிழக்குப் பிராந்தியம் என்றும் மக்கள் பேச ஆரம்பித்திருப்பதையும் என்னால் காணக்கூடியதாக இருக்கிறது. இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினரின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பானது சர்வதேச சமூகம் வடக்குக் கிழக்குப் பகுதியினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனிப்பட்ட நிர்வாக அலகாக ஏற்றுக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. இதுவரை காலமும் இலங்கை கை அரசாங்கத்தினூடாகவோ அல்லது இதற்கென்று உருவாக்கப்பட்ட தனியான அமைப்பு ஒன்றிற்கூடாகவோதான் இலங்கைக்கான உதவிகளைச் செய்துவந்திருந்த சர்வதேசம், தற்போது புலிகளுடன் நேரடியாகவே உதவிகள் குறித்துச் செயற்படுவதற்கு ஆயத்தமாகியிருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. சந்திரிக்காவின் கட்சிக்கும், இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்த புலிகளின் தத்துவாசிரியர் திரு அன்டன் பாலசிங்கம், "சிங்கள பெளத்த இனவாதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் பதாகையின் கீழ் மீள ஒருங்கிணைவதையே இதுகாட்டுகிறது. இதன் மூலம் நாட்டில் சமாதானம் ஏற்படுவதைக் குழப்புவதற்கும், இனப்பிரச்சினைக்கு சுமூகமான அரசியல்த் தீர்வைக் காண்பதைத் தடுப்பதற்குமே இனவாதிகள் ஒருங்கிணைகின்றனர் என்பது தெளிவாகிறது" என்று கூறினார். வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களுக்கான புணருத்தாபன பணிகளுக்கு உதவி வழங்குவதற்காக புலிகளுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படும் நோக்கிலேயே பதினொரு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும், ஏழு சர்வதேசத் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கிளிநொச்சியில் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழச்செல்வனையும் அவரது தூதுக்குழுவினரையும் சந்தித்திருந்தனர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட நாடுகளான ஜ‌ப்பான், சுவீடன், டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் , உதவி வழங்கும் சர்வதேச அமைப்புக்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, யுனிசெப், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி அமைப்பு, மற்றும் சீடா உள்ளிட்ட 7 அமைப்புக்களும் கலந்துகொண்டன. இச்சந்திப்பினை அமெரிக்காவும் இந்தியாவும் பகிஸ்கரித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. தெற்கில் சிங்களத் தலைமைகளிடையே தோன்றியிருக்கும் பலப்பரீட்சை வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தடைக்கலாக அமையக் கூடாது என்பதை கிளிநோச்சியில் தம்மைச் சந்திக்க வந்திருந்த உத‌வி வழங்கும் நாடுகளினதும், அமைப்புகளினதும் பிரதிநிதிகளிடம் புரியவைப்பதில் தமிழ்ச்செல்வன் வெற்றி கண்டிருந்தார். "தமிழ் மக்களுக்கான உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பாடாது இழுத்தடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் அதேவேளை, மீள்குடியேற்றம், புணர்வாழ்வு, மீள்கட்டுமானம் ஆகியவற்றிலும் உடனடிக் கவனம் செலுத்தப்படுவது அவசியம்" என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். "எமது மக்களும் சமாதான முயற்சிகளின் முழு ஈட்டுபாட்டோடு கலந்துகொள்வதை ஊக்குவிப்பதற்கு இவ்வாறான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியமானது. இதனை அடைந்துகொள்ளும் முகமாக நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார். உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் புலிகளுடன் நேரடியாக தொடர்புபடுவதை இலங்கையில் இருக்கும் ஐரோப்பிய உதவி வழங்கும் நாடுகளின் அமைப்பின் தலைவரான நெதர்லாந்தைச் சேர்ர்ந்த இராஜதந்திரி, வான் டியெஜ் அனுசரித்துப் பேசினார். "வடக்குக் கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்றன. தெற்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் பலப்போட்டி நிறைவடையும்வரை தமிழ் மக்களைக் காத்திருக்கும்படி கோருவது நியாயமானதல்ல. ஆகவேதான் கிளிநொச்சி சந்திப்பின்போது எமது உதவிகள் கிரமமான முறையிலும், வினைத்திறனுடனும் தமிழ் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவது பற்றிப் பேசினோம்" என்று அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் அடிப்படை நிவாரணப் பணிகளுக்கு சர்வதேச உதவிகள் நேரடியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், இவ்வுதவிகள் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய செவ்வணே பயன்படுத்தப்படுவதற்கும் ஏதுவாக திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கான செயலகம் ஒன்றினை கிளிநொச்சியில் புலிகள் நிறுவினார்கள். மேலும் மீள்குடியேற்றத் திட்டங்களை ஒருங்கமைத்தல், மீள்கட்டுமானம், புனர்வாழ்வு ஆகிய விடயங்களை துரிதமாக செயற்படுத்துதல் ஆகியவும் இச்செயலக‌த்தின் கடமைகளில் சிலவாகும். தமிழர் தாயகத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றிற்கான பொறுப்பினையும் இச்செயலகமே பார்த்துக்கொண்டது. புலிகளால் முன்வைக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் உத்தியோகபூர்வ குரலாகவும் இச்செயலகம் பணியாற்றும். சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள், உதவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிபுணத்துவ உதவிகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து தமிழர்தாயகத்தில் கட்டுமாண அபிவிருத்தியினை முன்னெடுப்பதும் இச்செயலகத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். புலிகளால் உருவாக்கப்பட்ட இச்செயலகத்தின் முக்கியத்துவத்தை சிங்கள இனவாதிகளான சிகல உறுமயவினர் உடனடியாகவே உணர்ந்துகொண்டனர். ஆகவே இச்செயலகம் இயங்குவதைத் தடுப்பதற்கான பிரச்சாரங்கள் அக்கட்சியினால் முன்னெடுக்கப்படலாயின. அக்கட்சியின் உத்தியோகபூர் அறிக்கையில், "தமிழீழத்திற்கான அடிப்படைகளை நிறுவுவதற்கான உதவிகளை உதவி வழங்கும் நாடுகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டு பணத்தினைக் கொண்டு புலிகள் தமது இராணுவப் பலத்தினை அதிகரித்து வருவதாகவும் சிகல உறுமயவின் அறிக்கை சாடியிருந்தது. "உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்திற்குக் கிடைக்காத சிறப்புரிமையும், அந்தஸ்த்தும் இதன் மூலம் புலிகளுக்குக் கிடைத்திருக்கிறது" என்றும் அவ்வறிக்கை சாடியது. தெற்கின் அரசியல் அவதானியொருவர் இச்சூழ்நிலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், தெற்கில் சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமக்குள் போட்டிகளை வளர்த்துவரும் அதேவேளை சிங்கள இனவாதிகளும் தம்மை ஒருங்கிணைத்துப் பலப்படுத்தி வருகிறார்கள். அவ்வாறே தமிழர்களும் தமது நிலைப்பாட்டினை மேலும் மேலும் உறுதிப்படுத்தி வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
  21. ஆரம்பத்திலிருந்தே பாலச்சந்திரனைக் கொல்ல இராணுவத்திடம் கோரியது கருணா என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். "இவனை விட்டால், தகப்பன் மாதிரியே மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குவான், ஆகவே கொல்லுங்கள்" என்று கருணா கூறியதாகச் செய்திகள் அப்போது வந்திருந்தன. அதேபோல ரமேஷைக் கொல்லச் சொன்னதும் கருணாதான். ஏனைய தளபதிகள் குறித்து இதுவரை நான் அறியவில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தனது இனத்தைச் சேர்ந்த சிங்களத் தளபதிகளைக் காப்பாற்றுவதாக எண்ணி தனது வளர்ப்பு நாயான கருணாவைக் காட்டிக்கொடுத்து ஈற்றில் தன்னையும் இப்பட்டியலில் சேர்க்க மகிந்த விரும்புவான் என்று நினைப்பது கடிணம். கருணா இவற்றைச் செய்யவில்லை என்று நினைப்பதற்கு அவன் ஒன்றும் உத்தமன் இல்லையே?
  22. அண்மையில் வந்த முகநூல் பதிவொன்றில் இருந்து.................................. பிரபாகரனின் மகனையும் ஏனைய 120 தளபதிகளையும் சுடச்சொன்னது கருணா தான் அவருடைய சகா ஒருவரே அவரை சுட்டார் மகிந்த தரப்பு அதிரடி அறிவிப்பு ஈழப்போர் உக்கிர கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது 120 மேற்ப்பட்ட தளபதிகள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றது. சரணடைந்த தளபதிகள் அவர்களின் பிள்ளைகள் என தனித்தனியே அழைத்து செல்லப்பட்டனர். அதன்போது வவுனியா யோசப் முகாமிற்கு அண்மித்த இரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டு பெண்களை நிர்வாணமாக்கி ஒரு அறையில் அடைத்து சித்திரவதைகள் இடம்பெற்றது மட்டும் அன்றி பாலியல் கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டது. இதன்போது குறித்த தளபதிகளை உயிரோடு விட்டால் ஆபத்து என கூறிய கருணா, அவர்களை முதலில் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டான். தளபதி ரமேஸ், நடேசன், புலித்தேவன் - இவர்களை சித்திரவதை செய்து உண்மைகளை அறிந்து பின் அனுவனுவாய் சித்திரவதை செய்து கொல்லுமாறு கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ச விற்கு தகவல் கொடுக்க பின்னர் அதன்படி நடந்தேறியது. வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் ? வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும். 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது) 6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ), 8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் ) 9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி) 10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் ) 11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை ) 12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்) 13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது), 14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் ) 15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்) 16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்) 17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் ) 18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு) 19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் ) 20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் ) 21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் ) 22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை) 23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது) 24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் ) 25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்) 26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி) 27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது ) 28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது) 29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது) 30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி ) 31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது) 32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது) 33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்) 34.இசைபிரியா ( ஊடக பிரிவு) 35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி) 36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு ) 37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்) 38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்) 39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு) 40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்) 41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் ) 42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்) 43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது) 44.குயிலன் ( இராணுவ புலனாய்வு) 45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்) 46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி) 47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்) 48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி ) 49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் ) 50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி ) 51.மலரவன் (நிர்வாக சேவை ) 52.மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி) 53.மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி) 54.மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு ) 55.மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி ) 56.மோகன் அங்கிள் (கடற்புலிகள் ) 57.முகிலன் (இராணுவ புலனாய்வு) 58.முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி ) 59.நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்) 60.நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் ) 61.நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி ) 62.நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு ) 63.நேயன் (புலனாய்வு) 64.நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை ) 65.நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் ) 66.நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்) 67.நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் ) 68.பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் ) 69.பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்) 70.Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு) 71.Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு) 72.பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு) 73.பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது) 74.பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி) 75.புலித்தேவன் (சமாதான செயலகம்) 76.புலிமைந்தன் (யோகியின் சாரதி) 77.புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க ) 78.புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு) 79.ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்) 80.ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி ) 81.ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை) 82.புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்) 83.Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை) 84.Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி) 85.ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்) 86.ரஜித்தன் (மணலாறு மாவட்டம் ) 87.ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்) 88.S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி) 89.சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்) 90.சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்) 91.செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி ) 92.சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்) 93.சின்னவன் (புலனாய்வு) 94.சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி) 95.Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு) 96.Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு) 97.திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்) 98.திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் ) 99.துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்) 100.வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது) 101.வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்) 102.Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு) 103.Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு) 104.வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி) 105.வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்) 106.வினிதா (நடேசனின் மனைவி ) 107.வீமன் (கட்டளை தளபதி) 108.விபுலேந்திரன் (நிதிப் பிரிவு) 109.யோகன் / சேமணன் (அரசியல் துறை) 110.யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)
  23. ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு முட்டாள்த்தனமான கோமாளியைத் தவிர வேறு எவரால் இயலும்? ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தையோ அதன் உண்மையான பிரதிநிதிகளையோ அழைக்காமல் ஆக்கிரமிப்பாளனுடன் இந்தியா எனும் இன்னொரு ஆக்கிரமிப்பு வல்லரசு 1987 இல் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் நிகரானது இன்று உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை ஏற்றுக்கொண்டு போரினை முடிவிற்குக் கொண்டுவர ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரியான கொடுங்கோலன் புட்டினுடன் இன்னொரு ஆக்கிரமிப்பாளனான டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை. வெகுவிரைவில் நேட்டோவிற்கு எதிரான போரில் ரஸ்ஸியாவின் பக்கத்தில் நின்றுகொண்டு டிரம்ப் எனும் கோமாளி சண்டையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் எந்தவொரு இனமும் அமெரிக்காவின் தயவில்ப் போரிடக் கூடாது என்பதற்கு உக்ரேனின் அனுபவமும் ஒரு பாடம்தான். இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது ஜப்பானியப் படை அங்கு செய்த பழிவாங்கல்ப் படுகொலகைளும், ஐஸிஸிற்கு எதிரான போரில் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் டிரம்பின் ஆட்சியில் குர்திஸ்களை துருக்கியின் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு அங்கி வெளியேறிச் சென்றதும் நினைவிற்கு வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.