Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரஞ்சித்

  1. இடைக்கால நிர்வாக சபை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடும் மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிக்கா கூட்டணி வெள்ளி, 30 வைகாசி 2003 டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு புலிகளின் பிரசன்னத்துடனோ அல்லது இன்றியோ நடைபெறுதல் அவசியம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறியிருக்கிறது. மேலும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளூடாக எட்டப்பட்ட அரசியல்த் தீர்வு அமுல்ப்படுத்தப்பட்டால் அன்றி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படல் கூடாதென்றும், அப்படி உருவாக்கப்படும் சபை கூட சில நிபந்தனைகளுடன் தான் உருவாக்கப்பட முடியும் என்றும் அது கூறியிருக்கிறது. ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருங்கிய சகாவான மங்கள சமரவீர இதுகுறித்துப் பேசும்போது, இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுதலில் தமக்கு ஆட்சேபணையில்லை, ஆனால் அது சில நிபந்தனைகளுடன் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். முதலாவது புலிகள் அரசியல் தீர்வொன்றிற்கு உடன்பட வேண்டும். மேலும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்குத் தடையாக இருக்கும் புலிகளின் ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவை இரண்டிற்குமான புலிகளின் அரசியல்த்துறையின் எழுத்துமூல உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுவது குறித்துப் பேசமுடியும் என்று அவர் கூறினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்கள், இடைக்கால நிர்வாக சபை ஆகியவற்றிற்கெதிரான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சந்திரிக்கா கட்சியினரின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பணித்துபோயுள்ள ரணில் அரசாங்கம்,நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு இடைக்கால நிர்வாக சபையின் உருவாக்கத்தினை அனுமதிக்காது என்பதை புலிகளிடம் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9091
  2. இடைக்கால நிர்வாகத்தினை முறியடித்தே தீருவோம் - மக்கள் விடுதலை முன்னணி சூளுரை திங்கள், 26 வைகாசி 2003 புலிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்தை ரணில் அரசு வழங்க முற்படுமானால் அதனை முறியடித்தே தீருவோம் என்று தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சூளுரைத்திருக்கிறது. செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பிற்கெதிராகச் சென்று புலிகளின் கோரிக்கையினை ரணில் அரசு நிறைவேற்றுமானால், அதனைத் தடுத்து நிறுத்த தனது கட்சி அனைத்து வழிகளிலும் போராடும் என்று கூறினார். வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவது, நாட்டைப் பிரிப்பதற்கு ஒப்பானது என்பதுடன் சிங்கள மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் நலன்களுக்கும் விரோதமானதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பதாகும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா, புலிகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக்கொடுக்கும் ரணில் அரசின் முடிவை முறியடித்து விடுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9072
  3. அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களை முறியடித்து, இந்தியாவின் ஸ்த்திரத்தனமையினைக் காப்பதற்காக யுத்த நிறுத்தம் முறியடிக்கப்பட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 8, வைகாசி 2003 அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைக் காக்கவும், இந்தியாவைப் பலவீனப்படுத்தவுமென்று உருவாக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது. நடந்துவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி, புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருகின்றன. தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதை முற்றாக எதிர்த்துவரும் இக்கட்சி, இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே என்றும் கூறிவருகிறது. மேலும் தமது கட்சியின் கீழ் உருவாக்கப்படும் சோசலிஸ் அரசே இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்றும் அது கூறுகிறது. சரித்திர ரீதியில் தீவிர இந்திய எதிர்ப்புவாதக் கட்சியாக அறியப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் திடீர் இந்திய விசுவாசம், அது இந்தியாவினால் களமிறக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக ரணில் அரசின் முக்கியஸ்த்தர்கள் கூறுகிறார்கள். யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி, நாட்டில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்குவதன் மூலம், சந்திரிக்காவினூடாக‌ பேச்சுக்களை நிறுத்தி, உடனடியான போரிற்குள் இலங்கையைத் தள்ள இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியூடாக முயல்வதாகவும் கருதப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8942
  4. கடற்புலிகளுக்கான சுதந்திர கடல்வழிப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது கண்காணிப்புக்குழு ‍ கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 6 வைகாசி 2003 கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டுக்கொண்டிருப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றின் கடற்படை தனது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கோருவது அந்நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் விடப்பட்டிருக்கும் சவால் என்று கூறியிருப்பதோடு இவ்வாறு செய்வது கடற்புலிகளின் தங்குதடையின்றிய கடல் வழிப் போக்குவரத்திற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு வசதிகள் செய்துகொடுத்திருப்பதாகவும் கூறுகிறது. இதேவேளை அரசால் உயர் பாதுகாப்பு வலய ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய இராணுவத் தளபதி சதீஸ் நம்பியார் தனது பரிந்துரைகளுடன் கொழும்பை வந்தடைந்திருக்கிறார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8931
  5. மூதூரில் புலிகளின் நடவடிக்கைகளால் நாடு பிளவுடபப்போகிறது என்று கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி வெள்ளி, 25 சித்திரை 2003 மூதூரில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் நாடுபிளவுபடப்போவதாகவும், ரணில் அரசாங்கமும் நோர்வே நடுநிலையாளர்களும் புலிகளின் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் கிழக்கில் முஸ்லீம்களின் பாதுகாப்பும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரான அஞ்சான் உம்மா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியும், தீவிரவாத சிங்கள பிக்குகள் அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8852
  6. கடற்புலிகள் உத்தியோகபூர்வ அமைப்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டதை கண்டித்த மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய்க்கிழமை, 22 சித்திரை 2003 புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கையரச கடற்படைக்குச் சமனாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இதுகுறித்த விவாதம் ஒன்றிற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறது. சமாதான ஊக்குவிப்பாளர்கள் என்கிற முகமூடிக்குள் ஒளிந்துநின்று கொண்டு நோர்வே அரசாங்கமும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயற்பாடு வருகிறார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார். மேலும் சீனாவுக்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல் மீதும், இலங்கை இராணுவத்திற்கான வழங்கற் கப்பல் மீதும் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் அவர் கண்டித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பிராந்தியத்திற்குள் செயற்பட்டுவரும் கடற்புலிகள் ஒரு நிழல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ படையணி என்று கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதனை ரணில் அரசு இதுவரை ஏன் மறுதலிக்கவில்லை என்றும் அவர் கேள்வி கேட்டார். மேலும் புலிகள் ஏழாம் கட்டப் பேச்சுக்களில் பங்குபற்றுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும், யுத்தம் ஒன்றிற்குத் தயாராகி வருகிறார்கள் என்பதை தான் அனுமானிப்பதாகவும் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8831
  7. மயக்கமுற்று வீழ்ந்திருந்த சிவராமை அருகிலிருந்து சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட கருணா ! தமிழினத்திற்கெதிராக ஒரு மட்டக்களப்புத் தமிழனால் இழைக்கப்பட்ட துரோகம் என்று கருணாவின் செயலை சிவராம் கடுமையாக விமர்சித்து வந்தார். கருணாவுடன் நட்பாக இருந்தகாலத்தில், புலிகளின் கட்டமைப்பிற்குள்ளேயே மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான தனியதிகாரங்களை புலிகளின் தலைமையுடன் பேசிப் பெற்றுக்கொள்ளுமாறு சிவராம் ஆலோசனை வழங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. புலிகளிடமிருந்து கருணா பிரிந்துசென்று தனியாக இயங்குவதைக் கடுமையாக எதிர்த்துவந்த சிவராம், புலிகளின் பிளவானது தமிழ்த்தேசியத்தினைப் பலவீனப்படுத்தும் என்று அஞ்சினார். சிவராம், புலிகள் ஒரு அமைப்பாக இருப்பதையே விரும்பியிருந்தார். அதனாலேயே கருணா புலிகளிடமிருந்து பிரிந்து சென்று இயங்குவதாகக் தெரிவித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தார். அதானாலேயே, கருணாவுக்கு எதிராகவும், புலிகளின் தலைமையினை ஆதரித்தும் தன்னை வெளிப்படுத்திவந்தார் சிவராம். கருணாவை எதிர்த்து நின்ற சிவராம் கருணாவின் பிரிவின்போது பெரும்பாலான கிழக்குவாசிகள் அவரை நியாயப்படுத்தியபோது, சிவராம் தனியாளாக கருணாவின் செயற்பாடுகளை விமர்சித்து வந்தார். தனது பிரிவிற்குக் காரணமாக பிரதேசவாதத்தினைக் கருணா கையிலெடுத்தபோது, கிழக்கின் மகனான சிவராம் கருணாவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், பிரதேசவாதம் என்பது கருணா தனது துரோகத்தினை நியாயப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதம் என்று நிறுவியதுடன், அதனைப் பொய்யென்றும் நிரூபித்தார். அத்துடன், புலிகளிடமிருந்து பிரிந்து தனித்துச் செயற்படுவதாகக் கருணா அறிவித்து 5 நாட்களில் கருணா தனது மனைவியின் பெயரிலும், மாமனாரின் பெயரிலும் சுமார் 25 மில்லியன்களை முதலீடாக வைத்து வியாபாரம் ஒன்றினை பங்குனி 8 ஆம் திகதி ஆரம்பித்ததை சிவராம் முதன்முதலில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். மக்களிடமிருந்து போராட்டத்திற்காகச் சேர்க்கப்பட்ட பணத்தினை கருணா தனது சொந்த நலனுக்காக கையாடியதை சிவராம் வெளிப்படுத்தியபோது கருணாவினால் அதனை சகித்துக்கொள்ளமுடியவில்லை. புலிகளின் நடவடிக்கையினையடுத்து, தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபோது, "போர்க்களத்தை விட்டோடிய ராவணன்" என்று சிவராம் கருணாவைக் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், "வாழைச்சேனையிலிருந்து துறைநீலாவணைக்கு என்னால் சுதந்திரமாகச் சென்றுவரமுடியும், எனக்கொரு பயமும் இல்லை " என்று கருணாவின் ஆதிக்கத்தை அவர் பொருட்படுத்தாமல் கருத்து வெளியிட்டு வந்தார். கருணாவினால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று வந்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்துவந்த சிவராம், "நான் கிழக்கைச் சார்ந்தவன், என்னை எவரும் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது, நான் இங்கேதான் இருப்பேன், கருணாவால் முடிந்தால் வந்து பார்க்கட்டும்" என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறியிருந்தார். மேலும், கொட்டாவைப் பகுதியில் ராணுவப் புலநாய்வுத்துறையின் பாதுகாப்பு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த கருணா கொலைக்குழு உறுப்பினர்கள் எண்மரைப் புலிகளின் உளவாளிகள் கொன்றுவிட்டுத் தலைமறைவாகியதை பொலீஸார் அறிந்துகொள்ளுமுன்னமே சிவராம் புலிகளை மேற்கோள்காட்டி செய்திவெளியிட்டது கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. கிழக்கில் கருணாவுக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்களின் கருத்துப்படி, சிவராமை கருணா தனது ஜென்ம விரோதியாகவே பார்க்கத் தொடங்கியிருந்தான். சிவராமை தானே தனது கைகளால் கொல்வேன் என்றும் அவன் சபதமெடுத்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் தனது கொலைப்படை உறுப்பினர்களுக்கு அவன் விடுத்த கட்டளையின்படி, "அவனை கிழக்கில் வைத்து எதையும் செய்யவேண்டாம், அவன் என் கையால சாக வேணும்" என்று கூறப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வெளிநாடொன்றில் பாதுகாப்பாக தங்கவைத்துவிட்டு, கருணா நாடு திரும்பியிருந்தான். தெற்கில் அரசாங்கத்தின் முற்றான பாதுகாப்பில் இருந்துகொண்டே கிழக்கில் தனது கொலைக்குழுவின் மூலம் நாசகார செயற்பாடுகளை அவன் தொடர்ந்துவந்தான். கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசு தொடர்ச்சியாக அறிவித்து வந்தபோதும், கருணாவின் நலன்களைக் கவனிக்கவென்று ராணுவ புலநாய்வுத்துறையிற்குள் சிறப்புப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டது. சிவராமைக் கொழும்பில் கொல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு தனது எஜமானர்களான ராணுவப் புலநாய்வுத்துறையினரை கருணா தொடர்ச்சியாக நச்சரித்து வந்தபோதும், அவர்கள் அதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. கொழும்பில் சுதந்திரமாக, பாதுகாப்பு எதுவும் இல்லாமல் சிவராம் நடமாடியபொழுது, அவரைக் கொல்வதற்கான பல சந்தர்ப்பங்களை கருணா இதனால் இழக்கவேண்டி வந்தது. ஆனால், கருணாவால் தான் கொல்லப்படலாம் என்பதை சிவராம் அறிந்தே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிவராமைக் கொல்வதற்குக் கருணா காத்திருந்த சந்தர்ப்பம் பொலீஸ் புலநாய்வுத்துறை அதிகாரி ஜெயரட்ணத்தின் கடத்தலோடு வந்து சேர்ந்தது. புலிகளின் புலநாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் ஜெயரட்ணம் மற்றும் இன்னும் சில அரச புலநாய்வாளர்களின் இழப்பு அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை உள்ளுக்குள் ஏற்படுத்தியது. குறிப்பாக ஜே வி பி யின் விமல் வீரவன்ச மற்றும் இனவாதப் பிக்குகள் இதுதொடர்பாக அரசுக்கெதிரான போராட்டங்களையும் நடத்தத் தொடங்கியிருந்தனர். ஆகவே, தமது புலநாய்வு உத்தியோகத்தர்கள் கடத்தப்படுவதற்குப் பதிலடியாக, பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் சிங்கள இனவாதிகளால் புலியென்று முத்திரை குத்தப்பட்ட, புலிகளுக்குச் சார்பானபத்திரிக்கையாளரான சிவராமைக் கடத்திக் கொல்வதென்று அரச ராணுவப் புலநாய்வுத்துறை முடிவெடுத்தது. இப்படுகொலையில் தமது உறுப்பினர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை விரும்பாத ராணுவப் புலநாய்வுத்துறை, கருணாவை இக்கொலைக்குப் பொறுப்பாக நியமித்ததுடன், இக்கொலைக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளை அரச ராணுவப் புலநாய்வுத்துறையூடாக வழங்குவதென்று உறுதிவழங்கியது. இத்தருணத்திற்காகக் காத்திருந்த கருணா, அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அதாவது, சிவராம் உயிருடன் தனக்குக் கிடைக்கவேண்டும் , தனது கையாலேயே அவர் கொல்லப்படவேண்டும் என்பதே அது. அதனை ஏற்றுக்கொண்ட புலநாய்வுத்துறை, இனியபாரதி, பெளசர் அடங்கலாக இன்னும் இரு சிங்கள உத்தியோகத்தர்களைக் கடத்தல் நடவடிக்கைக்குப் பாவித்தது. அதன்படி, தமிழில் பேசிக்கொண்டு பம்பலப்பிட்டியில் நடமாடிய ஆயுததாரிகள் இனியபாரதியும், பெளசரும் என்பது நிரூபணமாகிறது. இரு ராணுவப் புலநாய்வுத்துறை உறுப்பினர்களின் உதவியுடன் சிவராமை அன்றிரவு கடத்திச் சென்ற இனியபாரதியும், பெளசரும் அவரை கருணா கொழும்பில் ஒளிந்திருந்த இடத்திற்கு இழுத்துச்செல்ல, அங்கே கருணா சிவராமை அருகில் நின்று சுட்டுக்கொன்று தனது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டான்.
  8. சமாதான ஒப்பந்தத்திற்கு எதிராக பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் இருந்து போராட்டம் நடத்திய மக்கள் விடுதலை முன்னணி வெள்ளிக்கிழமை, 21 மாசிமாதம் 2003 புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தக்கோரி தீவிரவாத சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த‌ உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நிலத்தில் இருந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்னால் அலரி மாளிகை நோக்கிச் செல்ல எத்தனித்த இக்கும்பலினை பொலீஸார் அதிரடியாகக் கலைத்துப் போட்டமையினையும் கண்டித்தும் இவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தநிறுத்தத்தை இரத்துச் செய், பொலீஸ் அடாவடித்தனத்தை நிறுத்து போன்ற பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். பாராளுமன்ற அவையின் நடுவே நிலத்தில் அமர்ந்திருந்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்திருப்பதாக அவர்கள் கோஷமிட்டனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8394
  9. யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக இன்னொரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணி வியாழக்கிழமை, 20 மாசி மாதம் 2003 வியாழன் அன்று பிற்பகல் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்யப்பட்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலீஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டதனால் கொழும்பு நகரில் அமளி ஏற்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் பேரணியை முன்னின்று வழிநடத்திச் சென்றனர். "நாட்டைக் காட்டிக்கொடுத்த ரணில் - பிரபா - நோர்வே இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடம்" என்ற பதாதைகளை அவர்கள் தாங்கிச் சென்றனர். சுமார் 50,000 தீவிர சிங்கள இடதுசாரிகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பலநூற்றுக்கணக்கான தீவிரவாத பெள்த்த பிக்குகளும் கலந்துகொண்டனர். பாலிய‌கொடவில் ஆரம்பித்த இப்பேரணி பிரதமரில் வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் அலரி மாளிகை நோக்கிச் சென்றது. ஆனால் பேரணியை எதிர்பார்த்து ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் குழுமியிருந்த விசேட அதிரடிப்படையினர் பேரணியைக் கலைக்க கண்ணீர்ப்புகைத் தாக்குதலிலும், நீர்த்தாரைத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையே கைச்சாத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒருவருடத்தை அண்மித்திருக்கும் நிலையில் அதனை எதிர்க்கும் முகமாகவே மக்கள் விடுதலை முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆர்ப்பட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் பேசிய விமல் வீரவன்ச, புலிகளுக்கு ரணில் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தாம் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதாக சூளுரைத்திருந்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8390
  10. புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார் என்று கூறி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் மக்கள் விடுதலை முன்னணியும், சுதந்திரக் கட்சியும் செவ்வாய்க்கிழமை, 18 மாசி மாதம் 2003 பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. சுதந்திரக் கட்சியின் உறுப்பினல் நிமால் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை மக்கள் விடுதலை முன்னண்னியின் விமல் வீரவன்சவினால் ஆமோதிக்கப்பட்டது. "வடக்குக் கிழக்கில் புலிகளைச் சுதந்திரமாக உலாவ விட்டு, அவர்கள் தமக்கு விரும்பியவற்றையெல்லாம் செய்ய அனுமதித்திருப்பதன் ஊடாக பாதுகாப்பு அமைச்சர் திலக் மாறப்பன நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டத் தவறிவிட்டார்" என்றும், "யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு வரும் புலிகளைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டார்" என்றும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டினார். இதன்போது பேசிய விமல் வீரவன்ச, "கடந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் புலிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் காட்டிலும் தற்போது அதிகமான சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது, வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது" என்று கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8376
  11. புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதன் மூலமே நாட்டிற்கு உண்மையான சமாதானத்தைக் கொண்டுவர முடியும், மாறாக சர்வதேச அங்கீகாரத்தை நாமே ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக அல்ல - ‍ மக்கள் விடுதலை முன்னணி வெள்ளிக்கிழமை, 31 தை மாதம் 2003 ஒஸ்லோ உதவி வழங்கும் நாடுகளின் உச்சி மாநாட்டின்போது பிரதமர் ரணில் முன்வைத்த அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் வியாழனன்று விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, "தற்போது நடந்துவரும் பேச்சுக்களைப் பயன்படுத்தி எமது நாட்டில் தமக்கென்று கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றினை உருவாக்கி அதனைத் தாம் நிர்வகித்து வருவதாக சர்வதேசத்திற்கு புலிகள் இயக்கம் காட்டி வருகிறது. ஆகவே, இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானம் ஒன்று உருவாவதற்கு புலிகள் இயக்கம் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்படுவது அவசியமாகும். பல நாடுகளின் தலைநகரங்களிலும் நடந்துவரும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் ஊடாக சர்வதேச அங்கீகாரத்தைப் புலிகள் பெற்று வருகின்றனர் என்பது உறுதியாகிறது. இதன்மூலம் அவர்கள‌து பிரிவினைவாதக் கொள்கைகளை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நிலைமையும் உருவாகி வருகிறது. நோர்வேயின் அரசாங்கத்தால் புலிகளுக்கு அண்மையில் பரிசளிக்கப்பட்ட தொலைத்தொடபுச் சாதனங்களைக் கொண்டு அளவெட்டியில் விமானப்படையின் ஆளில்லா விமானத்தை அவர்களால் கீழே கொண்டுவர முடிந்திருக்கிறது. இப்பேச்சுவார்த்தைகள் ஊடாக ரணிலின் அரசாங்கம் புலிகளுக்கு சர்வதேச மேடையொன்றினை விரித்துக் கொடுத்திருப்பதுடன், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிரதேசத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தையும், நியாப்பாட்டினையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்று அவர் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8261
  12. வடக்குக் கிழக்கில் புலிகளின் நீதிமன்றங்களையோ, காவல் நிலையங்களையோ நிறுவுவதை அனுமதியோம் என்று கூறி பாராளுமன்ற நடவடிக்கைகளைக் குழப்பிய மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய்க்கிழமை, 26 கார்த்திகை 2002 நீதித்துறை, சட்டம் மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான நிதியொதுக்கீட்டு விவாத‌த்தின்போது சபையில் கடுமையான குழப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அதனுடைய கூட்டாளி இனவாதக் கட்சிகளும் ஈடுபட்டதனால் சபை நடவடடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நந்தன குணதிலக்க பேசும்போது நீதித்துறைக்கான நிதி ஒதுக்கீடு உறுப்பினர்களின் முன்னால் வாக்களிப்பிற்கு விடப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் நாட்டில் புலிகளின் நீதிமன்றங்களும், காவல் நிலையங்களும் நிறுவப்படுவதற்கு சிங்களவர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பினைக் காணமுடியும் என்றும் அறைகூவல் விடுத்தார். வடக்குக் கிழக்கில் புலிகளின் "தமிழீழ நீதிமன்றங்கள்" நிறுவப்படுவதை தமது கட்சி முழுமையாக எதிர்க்கும் என்றும், இதற்காக அரசு நடத்தும் நிதி ஒதுக்கீட்டினையும் தாம் எதிர்ப்பதாகவும் அவர் கூறினார். புலிகளின் நீதிமன்றங்களை நிறுவுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யும் நோக்கத்தின் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்கெடுப்பினை நாம் ஆதரித்தால், தமிழ் ஈழ நீதிமன்றங்களையும், காவல் நிலையங்களையும் எமது நாட்டில் நாமே ஆதரிப்பதாக‌ இருக்கும் என்று அதன் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார்.
  13. சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பிரச்சாரங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி சனிக்கிழமை, 9 கார்த்திகை 2002 "அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்பிற்குத் துணைபோகும் நோர்வே எமது நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புவது முட்டாள்த்தனமாகும். உலகத்தினை அடக்குமுறைக்குள் கொண்டுவந்து அதனை ஆளவே அமெரிக்கா முயல்கிறது. ஈராக், கியூபா, அப்கானிஸ்த்தான், எதியோப்பியா மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகள் மீது பயங்கரவாதத்தினைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது அமெரிக்காவே" என்று இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியட் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான தனது இன்னொரு ஆர்ப்பாட்டமொன்றில் கூறியிருக்கிறது. மேலும் சமாதான முயற்சிகளை உடனடியாக நிறுத்துவது ஏன் அவசியமானது என்பதை வலியுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் தெற்கின் பல கிராமங்களிலும் வீடு வீடாகச் சென்று சாதாரண சிங்கள மக்களை உணர்வூட்டி வருகின்றனர். தனது செயற்பாட்டாளர்களை பேரணிகளில் திரட்டி, பின்னர் அவர்களை சிங்கள மக்களிடையே பிரச்சாரத்திற்கு அனுப்பிவைக்கும் இக்கட்சியின் தலைமை "நோர்வேஜியன் துரோகிகள்" என்று சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் நோர்வே நாட்டையும், "துரோகிகளின் அரசாங்கம்" என்று ரணில், பீரிஸ், மொரகொட மற்றும் ஹக்கீம் ஆகியோரையும் குற்றஞ்சாட்டி வருகின்றது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=7791
  14. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம் புதன்கிழமை, 9 ஐப்பசி 2024 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. "மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான். சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. "சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன.
  15. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்திற்கான வரைபினை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமாரவின் அரசாங்கம் புதன்கிழமை, 9 ஐப்பசி 2024 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்கள‌ம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது. "மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது. மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இம்மாதத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபின் முழு வடிவமும் கீழே https://www.tamilguardian.com/content/draft-un-resolution-extend-mandate-war-crimes-evidence-gathering-mechanism-12-months திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார். தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச‌ நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார். அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான். சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. "சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட‌ தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன.
  16. சமாதானப் பேச்சுக்களை நிறுத்தவேண்டும் என்று கோரி கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய மாபெரும் கண்டனப் பேரணி புதன்கிழமை, 8 தைமாதம், 2003 விடுதலைப் புலிகளுக்கும், ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக தனது முழுப் பலத்தையும் காட்டும் வகையில் தீவிர இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பின் முக்கிய சந்தியொன்றில் சுமார் 25,000 ஆதரவாளர்களைக் கூட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகான தீர்வைத் தேடுவதாகக் கூறி நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நாட்டைப் பிளவுபடுத்து மேற்குலக ஏகதிபத்தியவாதிகளின் சதி என்று பேரணியில் பேசிய அனைத்து முக்கியஸ்த்தர்களும் குறிப்பிட்டார்கள். மாகாண நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் செந்நிறத்தில் ஆடையணிந்து கொழும்பு நகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தீவிரவாத இடதுசாரிகள் நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து நகர் மையத்தில் இருக்கும் லிப்டன் சதுக்கம் நோக்கிப் பேரணியாகச் சென்றார்கள். "புலிகளுக்கும் யானைகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் சதியைத் தோற்கடிப்போம்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆவேசமாகப் பேசினார். இப்பேரணிக்கு "ஜன பலய" (மக்கள் பலம்) என்று ஜே வி பி பெயரிட்டிருந்தது. பேரணியில் பேசிய அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, ரணிலின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக வேறு கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். நோர்வே நாட்டவர்கள் இலங்கை விடயத்தில் தேவையில்லாது தலையிட்டு வருகிறார்கள் என்று அவர் கண்டித்தார். நோர்வே நாட்டுத் தூதுவர் ஜொன் வெஸ்ட்போர்க் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்பினையடுத்து ரணில் அரசாங்கம் அதிர்ந்த்துபோய் அச்சத்தில் உறைந்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8123
  17. இராணுவத்தினரின் நடவடிக்கைகளை வெகுவாக ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, ரணிலின் அரசைக் கவிழ்த்துவிடப்போவதாகவும் மிரட்டல் திங்கட்கிழமை, 6, தை 2003 இலங்கையின் பலமான இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் ரணில் அரசின் உயர் பாதுகாப்பு வலயங்களை விட்டு நீங்கி மக்கள் அப்பகுதிகளுக்குத் திரும்ப வழிவிடவேண்டும் என்கிற கோரிக்கையினை நிராகரித்திருப்பது குறித்து இராணுவத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறது. மேலும் புலிகளுடன் இணைந்து நாட்டைப் பிளவுபடுத்தும் சதிச்செயலில் பிரதமர் ரணில் இறங்கியிருப்பதாகவும் அது பிரதமரைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. இலங்கைப் பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியே பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. கொழும்புநகரின் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினை நடத்திய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச பேசும்போது, "ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் வடக்கில் இருக்கும் உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவத்தினரை விலக்கிக்கொள்வதாக புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தார்" என்றும், "ஆட்சிக்கு வந்தவுடன் தான் அன்று செய்த ஒப்பந்தத்தினை அமுல்ப்படுத்த முனைகிறார்" என்றும் சாடினார். மேலும் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்ட நோர்வே தூதரகத்தின் அதிகாரியான ஜொன் வெஸ்ட்போர்க் தனது கட்சியினதும், ஜனாதிபதி சந்திரிக்காவினதும், பெளத்த பிக்குகளின் தொடர் போராட்ட அழுத்தங்களினாலேயே நாட்டை விட்டு விரட்டப்பட்டார் என்றும் அவர் உரிமை கோரினார். "யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவது தொடர்பான விடயத்தில், அவ்வாறு விலகுவதில்லை என்கிற மிகத்துணிவான நிலைப்பாட்டினை இராணுவத்தினர் எடுத்திருக்கிறார்கள். ஆனால், புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுக்களில் இதுதொடர்பாக எட்டப்படும் தீர்மானங்களின்படி, இராணுவத்தினரின் இந்த துணிகர நிலைப்பாடு மாற்றப்பட்ட அழுத்தம் கொடுக்கப்படுமா என்று எனக்குக் கூறத் தெரியவில்லை" என்று வீரவன்ச கூறினார். "புலிகளின் தலைவரின் பாணியைப் பின்பற்ற ரணில் விரும்புவது போல் எனக்குத் தெரிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு ரணில் உரையாற்றும்போது அவர் பின்னால் காணப்பட்ட மேடையலங்காரத்தையும், அமைப்பையும் பார்க்கும் ஒருவருக்கு கடந்த கார்த்திகை மாதத்தில் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரையின் மேடையமைப்பே நினைவிற்கு வந்திருக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். "ரணில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய விதத்தினைப் பார்க்கும்போது அவரது அரசு கடுமையான சிக்கலில் மாட்டியிருப்பதாக‌வே எனக்குத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்த கடந்த ஒருவருடத்தில் நாட்டு மக்களுக்காக அவர் எதனையும் செய்யவில்லை" என்றும் அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினால் பேச்சுவார்த்தைகளுக்கெதிராகவும், விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல் ஆகியவற்றிற்கெதிராகவும் கொழும்பில் நடக்கவிருக்கும் "ஜன பல" போராட்டம் பற்றிய தகவல்களை அறிவிக்கவே இம்மாநாடு மக்கள் விடுதலை முன்னணியினால் கூட்டப்பட்டிருந்தது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8108
  18. நோர்வேத் தூதரகத்தின் நடவடிக்கைகளில் தலையீடு செய்து நாட்டைக் காப்பற்றுங்கள், இல்லாதுவிடில் புலிகளின் பலம் அதிகரித்து விடும்‍ - சந்திரிக்காவை எச்சரித்த மக்கள் விடுதலை முன்னணி திங்கள் , 30 மார்கழி 2002 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகள், உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து படையினரை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவே இப்பேச்சுக்கள் இடம்பெற்றன. மேலும் நோர்வே தூதரகத்தினூடாக புலிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் தொலைத்தொடர்புக் கருவிகள், ஒலிபரப்புக் கருவிகள் தொடர்பாகவும் விமல் வீரவன்சவினால் கேள்வியெழுப்பப்பட்டது. புலிகளுக்கு ஆதரவாக நோர்வே தூதரகம் செயபட்டு வருவதாக இச்சந்திப்பின்போது வீரவன்ச சந்திரிக்காவிடம் முறையிட்டார். ஆகவே நாட்டைக் காப்பதற்காக, ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையீடு செய்து , புலிகள் பலம்பெறுவதைத் தடுக்க ஆவண செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  19. தீவிர சிங்கள இன‌வாத மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர அமைப்பான ஜாதிக்க சங்க சம்மேளனய அமைப்பு நோர்வே நாட்டுக் கொடியை அந்நாட்டின் கொழும்பு தூதரகத்தின் முன்னால் எரித்தது. செவ்வாய்க்கிழமை, 24 மார்கழி, 2002 தீவி சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் சகோதர அமைப்பும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கிளைகளையும் உறுப்பினர்களையும் கொண்டதுமான தேசிய பிக்குகள் முன்னணி (ஜாதிக்க சங்க சம்மேளனய) சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நோர்வே நாட்டு இராஜதந்திரியான ஜொன் வெஸ்ட்பேர்க் இனை நாட்டை விட்டு உடனடியாக விரட்ட வேண்டும் என்று கோரி கொழும்பில் இருக்கும் நோர்வேத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் நோர்வே நாட்டின் இரு கொடிகளை தூதரகத்தின் முன்னால் எரித்ததுடன், அங்கிருந்து ஜனாதிபதிச் செயலகம் நோக்கிப் பேரணியாகச் சென்று ஜனாதிபதி சந்திரிக்காவிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் பிக்கு கலேவெலகலே சந்தலோக்கவிடமிருந்து மகஜரை ஜனாதிபதிக்கான மேலதிகச் செயலாளர் பெற்றுக்கொண்டார். அண்மையில் நோர்வேயிட‌மிருந்து புலிகளுக்குத் தருவிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொலைத்தொடர்புக் கருவிகள் தொடர்பாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிக்குகள் அமைப்பு இப்போராட்டத்தை நடத்தியிருந்தது.
  20. அநுர குமார திசாநாயக்க ஒரு உறுதியான சிங்கள பெளத்த இனவாதி அனைவருக்கும் பொதுவான வேட்பாளரைக் களமிறக்குகிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறினாலும், அநுர எப்போதுமே சிங்கள பெளத்த இனவாதிகளை நோக்கியே தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அண்மையில் மகரகமவில் 1500 பெளத்த பிக்குகள் முன்னால் பேசுகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் பெளத்த மதத்திற்கு மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடும் 9 ஆவது அத்தியாயத்தினை தனது கட்சி ஒருபோதும் மாற்றாது என்று உறுதியளித்தார். பெளத்த மதத்தின் புனிதத்தனமையினை அரசுத்தலைவர் தனது தலையாய‌ கடமையாக வரிந்து பேணுதல் அவசியம் எனும் சரத்தை தான் தவறாது கடைப்பிடிப்பேன் என்று அவர் அங்கு உறுதியளித்தார். அங்கு பேசிய இன்னொரு மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் நலிந்த ஜயதிஸ்ஸ, "இது ஒரு பெரும்பான்மைச் சிங்கள பெளத்த நாடு. ஆகவே எமது கட்சி அத்தியாயம் 9 இனை முழு மூச்சுடன் பாதுகாக்கும். பெளத்த மதத்தினை மெருகூட்டி, போஷித்து, வளப்படுத்தும் நடவடிக்கைகளில் எமது அரசாங்கம் ஈடுபடும். அத்தியாயம் 9 இனைப் போற்றிப் பின்பற்றுவதென்பது இந்த நாட்டில் ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை" என்று குழுமியிருந்த 1500 பெளத்த பிக்குகளிடம் உறுதி வழங்கினார். தமிழர்களிடம் பேசும்போது எச்சரிக்கை விடுத்த அநுர குமார திசாநாயக்க‌ "எமது வெற்றியில் யாழ்ப்பாணத் தமிழர்களும் பங்குதாரர்கள் ஆக வேண்டும். இந்தப் பாரிய மாற்றத்தை எதிர்த்தவர்கள் என்று நீங்கள் அழைக்கப்படுவதைத் தவிருங்கள். இந்த மாற்றத்தின் பங்குதாரர் ஆகுங்கள்.......நீங்கள் இந்த மாற்றத்தை எதிர்ப்பீர்கள் என்று நாம் காணும் பட்சத்தில், தெற்கு மக்கள் உங்களைப்பற்றி என்னை நினைப்பார்கள் என்று சிந்தியுங்கள். யாழ்ப்பாண மக்கள் இந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று தெற்கில் அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த மாற்றத்தை எதிர்த்தவர்கள் என்று பார்க்கப்படுவதை விரும்புகிறீர்களா? வடக்கு இவ்வாறு அடையாளப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?" என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
  21. இந்திய எதிர்ப்பு நிலை மக்கள் விடுதலை முன்னணி இயல்பிலேயே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டினை உடையது. 1987 ஆம் ஆண்டு அக்கட்சி நடத்திய இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியே தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க இந்தியா வந்திருக்கிறது, ஆகவே அதனை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே நடத்தப்பட்டது. தமிழர் விரோத, இந்திய விரோத உணர்வினை தெற்கின் பாமர மக்களிடையே வளர்த்துவிட்டே 1987 முதல் 1990 வரையான இரத்தக்குளியலை மக்கள் விடுதலை முன்னணி அரங்கேற்றியது. இக்கட்சி முன்னர் மலையகத் தமிழர்களை, "இந்தியா ஆக்கிரமிப்பின் ஐந்தாவது கருவிகள்" என்றே அழைத்து வந்தது. இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் எந்த வர்த்தகச் செயற்பாடுகளையும், இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இந்தியாவினால் எடுக்கப்படும் முயற்சி என்றே இக்கட்சி பார்த்தது. இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் விடுதலை முன்னணியினர் கட்சியின் இந்திய விரோத நிலைப்பாடு அநுரவிற்கும் இருந்தது. 2008 இல் பாராளுமன்றத்தில் பேசும்போது, "கச்சதீவை இந்தியாவிற்குத் தாரை வார்க்கும் செயற்பாடுகள் நடப்பதாக உணர்கிறேன், ஆனால் எமது கட்சி இருக்கும்வரை அது ஒருபோது நடவாது, எவ்விலை கொடுத்தாவது இம்முயற்சி வெற்றிபெறுவதை நாம் தடுப்போம்" என்று சூளுரைத்திருந்தார். அண்மையில்க் கூட கச்சதீவு விவகாரம் தில்லியில் பேசப்பட்டாலும் கூட, அநுரவை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இந்தியாவிற்கு மேற்கொள்ளுமாறு இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இந்தியாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. அநுரவின் இந்திய விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் அதி தீவிர இந்திய எதிர்ப்பை சற்று களையும் அரசியல் மாற்றத்தின் அறிகுறியென்றும், இந்தியா தேவைக்கதிகமாகவே அநுரவுக்கு வளைந்துகொடுக்கிறது என்கிற தோற்றத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய விஜயத்தின்போது அநுர குமாரவும் அவரது பரிவாரங்களும் இந்தியாவின் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், வர்த்த அமைப்புக்களின் உறுப்பினர்களையும் சந்தித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீள்பரிசீலினை செய்தல் 2022 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொருளாதாரச் சிக்கலின்பொழுது, அன்றைய ஜனாதிபதியாகவிருந்த கோட்டாபயலின் அரசாங்கம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களை சிக்கலில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்தது. ஆனால், இலங்கையின் கடன் அடைக்கும் வரலாறு கத்திமுனையில் நடப்பதற்கு நிகரானது என்பதை சர்வதேச நாணய நிதியம் அறிந்தே இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் இயக்குநர், ஜூலி கொசாக் கடந்த வாரம் பேசுகையில் மூன்றாம் கட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படு முன்னர் புதிய ஜனாதிபதியுடன் பேசவேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார். ஆனால், கடன் நிபந்தனைகளை மீள அமைக்கவேண்டும் என்று அநுர குமார பேசத் தொடங்கியிருக்கிறார்.இதனையே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடனை மீளச் செலுத்தும் வரலாறு குறித்து எச்சரிக்கை செய்திருந்தது. இலங்கையின் இராஜாங்க நிதியமைச்சர் செகான் சேமசிங்க பேசும்போது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, மூன்றாவது கட்ட கடனுதவியான 350 மில்லியன் டொலர்கள் வழங்கப்படாதுவிட்டால் நாடு மீண்டும் ஒரு பொருளாதாரச் சிக்கலைச் சந்திப்பதைத் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தினை இரத்துச் செய்வதால் நாட்டில் இடம்பெற்றுவரும் சிக்கலில் இருந்து மீளுதல் முயற்சிகள் தடைப்பட்டு நின்றுவிடும் என்றும், நாடு பழையபடி 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குள் சென்றுவிடும் என்று எச்சரித்தார். "சர்வதேச நாணய நிதியத்திடம் நான் ஒத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது" என்று பத்திர்க்கையாளர்களிடம் பேசும்போது சேமசிங்க மேலும் கூறினார். "இது நடக்குமாக இருந்தால் 2022 இல் இலங்கை எதிர்கொண்ட அதே நெருக்கடிக்குள் மீண்டும் சென்றுவிடும்" என்று அவர் எச்சரித்தார். தமிழர் தாயகத்தில் நடந்துவரும் இராணுவமயமாக்கல் குறித்துப் பேச மறுக்கும் அநுர குமார திசாநாயக்க‌ அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் இராணுவமயமாக்கலினால் தமிழ் மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் குறித்து எதுவுமே பேசவில்லை. அதற்கு மாறாக காணிகளை பகிர்ந்தளிப்பதில் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளினால் அரசியல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தனியார்மயமாக்கலை மட்டுமே கருத்திற்கொண்டு பேசியிருக்கிறார். மேலும், தமது கட்சி ஆட்சிக்கு வருமிடத்து காணிப்பிரச்சினைகள் தொடர்பாக விரைவானதும், நீதியானதுமான தீர்வுகளை வழங்கும் என்று கூறுகிறார். தற்போது வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவமும், கடற்படையும் அடாத்தாக ஆக்கிரமித்து வருவதால் தமிழ் மக்கள் காணி அபகரிப்பு எனும் பிரச்சினையினை எதிர்நோக்கி வருகிறார்கள்.
  22. இனவழிப்பிற்கான மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு 2004 ஆம் ஆண்டு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளிக்கட்சியாகவிருந்த மக்கள் விடுதலை முன்னணி, தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே சரியானது என்று தொடர்ச்சியாக கோரி வந்தது. சமாதான தீர்விற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்புக்களுக்கு விடாப்பிடியாக முட்டுக்கட்டைகளைப் போட்டுவந்த இக்கட்சி ஈற்றில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. 2003 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட சமாதானத்திற்கெதிரான பேரணியில் அநுரவும் கலந்துகொண்டிருந்தார் சமாதான முயற்சிகளுக்கெதிரான கடுமையான நிலைப்பாடு, யுத்த முஸ்த்தீபுகளுக்கான தொடர்ச்சியான ஆதரவு, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்விற்கான எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்பை பிரித்தமை, சமஷ்ட்டிக்கு எதிர்ப்பு ஆகிய தீவிர தமிழர் விரோத செயற்பாடுகளால் மக்கள் விடுதலை முன்னணி தென்மாகாணங்களில் கிராமப்புர மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெறத் தொடங்கியது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நலன்காக்கும் சதியே என்று தெற்கின் சிங்கள மக்களை நம்பவைத்த ரோகண‌ விஜேவீர, ஈழத்தமிழருக்கெதிராக‌ சாதாரண சிங்கள மக்களை நீண்டகாலப்போக்கில் இனவன்மம் ஏற்றுவதில் வெற்றிகண்டார். இருமுறை அரசாங்கத்திற்கெதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கான சிங்கள இளைஞர்களின் கொலைகளுக்குக் காரணமாகவிருந்தபோதிலும் கூட மக்கள் விடுதலை முன்னணி ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்து அனுதாபத்தினையோ அல்லது அவர்களின் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவினையோ ஒருபோதும் கொடுக்க நினைத்ததில்லை. தமிழரின் போராட்டக் காலம் நெடுகிலும் மக்கள் விடுதலை முன்னணி செய்ததெல்லாம் அவர்களின் போராட்டத்தைச் சிறுமைப்படுத்தி, அவர்களுக்கான அதிகாரங்களைத் தொடர்ச்சியாகக் கொடுக்க மறுத்து வந்தமை மட்டும்தான். இக்கட்சியிலிருந்தே இலங்கையின் சரித்திரம் கண்ட பல சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வந்தார்கள் என்றால் அது மிகையில்லை. 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்தம் கைச்சாத்திட்ட‌வேளை பாராளுமன்றத்தில் இதனைக் கடுமையாகச் சாடிய ஒரு சிலரில் அநுரகுமார திசாநாயக்கவும் ஒருவர். "புலிகள் இலங்கையில் தனிநாடு ஒன்றினை நிறுவ அடித்தளம் இட்டுவிட்டார்கள்" என்று அவர் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அநுர குமார திசாநாயக்க சமாதான முயற்சிகளுக்கெதிராக கடுமையான எதிர்ப்புணர்வைக் காட்டிவந்தார். மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த பல பேரணிகளுக்குத் தலைமைதாங்கியதோடு, 2003 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினர் ஒழுங்குசெய்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக கண்டி முதல் கொழும்பு வரையான ஐந்துநாள், 116 கிலோமீட்டர்கள் கொண்ட நடைபயண ஆர்ப்பாட்டப் பேரணியை அநுர குமாரவே முன்னின்று நடத்திச் சென்றார். 2004 ஆம் ஆண்டில் யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதான முயற்சிகளுக்கெதிராக அநுரவும் அவரது கட்சியினரும் மேற்கொண்டுவந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணியொன்றினை உருவாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுத்தது. இக்கூட்டணி ஆட்சியில் அநுரவுக்கு விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசண அமைச்சுக்கள் வழங்கப்பட்டன. அவ்வருடம் இடம்பெற்ற இந்துசமுத்திர சுனாமி இயற்கை அநர்த்தத்தின்போது இலங்கையில் சுமார் 35,000 மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் மூன்றில் இரு பங்கினர் வடக்குக் கிழக்கில் வாழ்ந்த‌ தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்க புலிகளுடன் இணைந்து அமைப்பொன்றினை உருவாக்க அரசு எத்தனித்தபோது அநுர குமார திசாநாயக்க அதனைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினார். இதனால் வடக்குக் கிழக்கிற்கென்று வெளிநாடுகளில் இருந்து வழங்கப்பட்ட பெருமளவு நிதியும் நிவாரணப் பொருட்களும் கொழும்பிலேயே தங்கிவிட்டன. "நாம் அரச சார்பற்ற அமைப்புக்களை வீதியில்க் கண்டால் அவர்கள் மேல் காறி உமிழவேண்டும். உதவி வழங்கும் நாடுகளும் அவர்களது உதவி அமைப்புக்களும் எமது நாட்டை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. அவர்களே இப்போது புலிகளுடன் இணைந்து நிவாரணப் பொறிமுறை ஒன்றை அமைக்கும்படி வற்புருத்துகிறார்கள்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் அன்றைய பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச 2005 இல் கொழும்பு கூட்டமொன்றில் பேசும்போது முழங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கென்று உதவி வழங்கும் நாடுகளால் அனுப்பிவைக்கப்பட்ட நிதி மற்றும் பொருட்களை இலங்கை அரசாங்கம் போரில் ஒரு கருவியாகப் பாவித்து தமிழ் மக்களைத் தண்டிக்கிறது என்று சர்வதேசத்திடமிருந்து கடுமையான விமர்சன‌ங்கள் எழுந்திருந்தன. 2005 மார்கழியில் இலங்கைக்கு விஜயம் செய்த‌ ஐ நா செயலாளர் நாயகம் கொபி அனான் வடக்குக் கிழக்கிற்கும் செல்ல‌ முயன்றபோது மக்கள் விடுதலை முன்னணியினரின் அழுத்ததுடன் இலங்கையரசு அதற்கு அனுமதி தர மறுத்து விட்டது. நடந்துகொண்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை என்கிற காரணத்தைக் காட்டி அநுர குமாரவும் ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவருடத்தின் பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொண்டனர். பின்னர் யுத்தநிறுத்தத்தை நிறுத்தியே தீருவது, போரை மீளவும் ஆரம்பித்து இராணுவத் தீர்வு நோக்கி நகர்வது என்று மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கத் தொடங்கியபோது அநுரவும் அவரது கட்சியும் இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மகிந்தவுக்கு 2005 ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு கொடுக்க முன்வந்தனர். யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து, இராணுவ ரீதியில் புலிகளைத் தோற்கடிக்கவென்று 2006 இல் மக்கள் விடுதலை முன்னணியினால் "நாட்டைக் காக்கும் இணைந்த முன்னணி" எனும் அமைப்பின் உருவாக்கப்பட்டபோது அநுரவும் அதில் பங்காற்றியிருந்தார். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான போருக்கெதிராக மகிந்த ராஜபக்ஷ மிகப்பெரும் அளவில் யுத்தத்தினை ஆரம்பித்தபோது, மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கு பலத்த ஆதரவினை வழங்கியதோடு, சிங்கள மக்களை போருக்கு ஆதரவாக அணிதிரட்டும் கங்கரியத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. சர்வதேச மனிதவுரிமைக் கண்காணிப்பாளர்களை போர் நடக்கும் பகுதிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேசத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துகொண்டு மகிந்த போரைத் தீவிரமாக நடத்திவருகையில், அவரது அரசாங்கத்திற்கு ஆதரவாக கொழும்பில் அமைந்திருந்த அனைத்து மேற்குநாட்டு தூதரகங்களுக்கும் முன்னால் பாரிய கண்ட ஆர்ப்பாட்டங்களை அநுரவின் மக்கள் விடுதலை முன்னணி தொடர்ச்சியாக நடத்திவந்தது. 2002, 2006 மற்றும் 2007 ஆகிய வருடங்களில் சமாதானத்திற்கெதிராகவும், போரை வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்குசெய்த ஆர்ப்பாட்டங்களில் சில. இரத்திணபுரியில் இராணுவ அதிகாரிகளுக்கு முன்னிலையில் பேசும்போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரமுகர் லால்காந்த, "ஜாதிக்க ஹெல உறுமயவின் தீவிரவாத எண்ணம் கொண்ட பெளத்த பிக்குகளும், மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாமும் இணைந்து நடத்திய செயற்பாடுகளாலேயே பிரிவினைவாதிகளின் பயங்கரவாதத்தை எம்மால் முற்றாக அழிக்க முடிந்தது" என்று கூறினார். "சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, பொதுஜன பெரமுனவோ அல்லது எந்தக் கட்சியோ போரை முடிவிற்குக் கொண்டுவரவில்லை. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாமும், ஜாதிக்க ஹெல உறுமயக் கட்சிட்யினரும் இணைந்து எடுத்த தீர்மானமான "நாம் தமிழரின் பிரச்சினையினை போரின் மூலமே தீர்க்கவேண்டு, ஏனென்றால் அதற்கு வேறு தீர்வுகள் கிடையாது என்பதற்கமைய போரில் வெற்றிகொண்டோம்" என்று அவர் மேலும் கூறினார். போர்க்குற்றவாளிகளைப் பாதுகாப்பேன் என்கிற சூளுரை போர்க்குற்றவாளி அருனா ஜயசேகர‌ இலங்கை இராணுவம் ஆடிமுடித்த தமிழினக் கொலையில் 167, 679 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். போர்வலயத்தில் அகப்பட்டிருந்த மக்களுக்கான உணவையும், அத்தியாவசிய மருந்துப்பொருட்களையும் அரசு தடை செய்தது. வைத்தியசாலைகள் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் இலக்குவைக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களுக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்புணர்வுகளை பரந்துபட்ட அளவில் போர்காலம் முழுவதும் இலங்கை இராணுவம் நிகழ்த்தியது. சரணடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனக்கொலையில் நடத்தப்பட்ட பாரிய மனிதவுரிமைகள் மற்றும் மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்கள் இலங்கை அரசிற்கெதிராக நிறைவேற்றப்பட்டன. அப்படியான இன்னொரு தீர்மானம் இப்போதும் ஐ நா சபையில் கொண்டுவரப்படவிருக்கிறது. இத்தீர்மானங்களும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் சர்வதேச விசாரணைப்பொறிமுறை ஒன்றின் ஊடாக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, பாரியளவில் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வந்தன. ஆனால் சர்வதேசத்தினதும் தமிழ் மக்களினதும் இக்கோரிக்கைகளை முற்றாக நிராகரித்திருக்கும் அநுர குமார திசாநாயக்க, "போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்றோ, மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றோ எவரையுமே நாங்கள் தண்டிக்க அனுமதிக்கப்போவதில்லை" என்று ஆவணி 2024 இல் தேர்தல் பிரச்சார மேடையொன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும், அரசியல் இராணுவத் தலைமைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கோரிவரும் நிலையில் "பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட போர்க்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று கோரவில்லை" என்று சிங்கள மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தினை அநுர குமார திசாநாயக்க மேற்கொண்டார். அதேவேளை, அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, போர்க்குற்றவாளிகள் என்று அறியப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிகளை தமது பாதுகாப்புக் கொள்கை வகுப்பில் இணைத்து வருகின்றனர். உதாரணத்திற்கு இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அருன ஜயசேகர என்பவன் தமது பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதில் பிரதானியாக அநுர குமார திசாநாயக்க அமர்த்தியிருக்கிறார். இந்த அருண ஜயசேகர என்பவன் ஹெயிட்டி நாட்டிற்கு அமைதிகாக்கும் சேவையில் ஐ நா வினால் அமர்த்தப்பட்ட இலங்கை இராணுவத்தின் மூன்றாம் படையணிக்குக் கட்டளை அதிகாரியாக இருந்தவன். இவனது படைப்பிரிவே 2004 முதல் 2007 வரையான காலப்பகுதியில் சிறுவயதுச் சிறுமிகளை பாலியல்த் தொழிலுக்காகக் கடத்திவந்ததாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்திருந்தன.
  23. யார் இந்த அநுர குமார திசாநாயக்க 20 புரட்டாதி 2024 தேசிய மக்கள் சக்தி எனும் பெயரினுள் மறைந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி எனும் அதே பழைய சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்களின் தலைவரும், 2000 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஆசனத்தினூடாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் வந்தவரே இந்த அநுர குமார திசாநாயக்க எனும் நபர். ஆரம்பத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தை ஆதரித்து வந்தபோதிலும், பின்னர் தீவிர சிங்கள பெளத்த இனவாதக் கட்சிகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு 2002 இல் விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பி யுத்தத்திற்குள் நாட்டைத் தள்ளுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட போலி மார்க்ஸிஸ்ட்டுக்களின் கட்சியின் முக்கிய உறுப்பினர் இவர். யுத்த நிறுத்தத்திற்கெதிராகவும், சமாதானப் பேச்சுக்களிற்கெதிராகவும் சிங்கள மக்களிடையே பிரச்சாரம் செய்து அதனூடாக அரசியலின் முன்னணிக்கு வந்த இவரது கட்சி 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ எனும் போர்க்குற்றவாளியுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் பொதுச் சிங்கள இனவாத முன்னணியைத் தோற்றுவித்தது. இவர் தலைமை தாங்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைகளை ஆரம்பத்திலிருந்தே முற்றாக நிராகரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிரப்போவதில்லையென்று வெளிப்படையாகவே கூறிவரும் இவர்கள் தமிழ் மக்களுக்கெதிரான இனக்கொலையில் இலங்கை இராணுவத்தின் பின்னால் நின்று பூரண ஆதரவினை வழங்கியவர்கள். 13 ஆவது திருத்தத்திற்கு ஆரம்பமுதல் எதிர்ப்புத் தெரிவித்து வருபவர் அநுர குமார திசாநாயக்க பதவிக்கு வந்தவுடன் பாராளுமன்றத்தை உடனடியாகவே கலைப்பேன் என்று உறுதி வழங்கியிருந்தார். இவ்வருடம் சித்திரையில் வடக்குக் கிழக்கிற்கு தேர்தல்ப் பிரச்சாரங்களுக்காகச் சென்றிருந்தவேளை "நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக அரசியல் யாப்பில் மாற்றங்களைச் செய்வேன் என்று உங்களிடம் கூறவே வந்திருக்கிறேன். 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன் என்று உங்களிடம் உறுதியளிப்பதற்காக நான் இங்கு வரவில்லை" என்று மிகத் தெளிவாகவே தமிழ் மக்களுக்கு தனது எண்ணத்தைக் கூறிவிட்டு வந்தவர். "எனக்கு வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்க நான் இங்கு வரவில்லை. 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துவேன், அதற்குப் பிரதியுபகாரமாக எனக்கே வாக்களியுங்கள் என்று உங்களிடம் கேட்கவும் நான் இங்கு வரவில்லை. உங்களிடம் வாக்குக் கேட்பதற்காக சமஷ்ட்டி முறை தீர்வை உங்களுக்குத் தருவேன் என்று கூறுவதற்காகவும் நான் வரவில்லை. நான் வந்திருப்பது இலங்கை இன்றிருக்கும் பொருளாதாரச் சிக்கலில் இருந்து அதனை மீட்டெடுக்க என்ன செய்யலாம் என்று கலந்தாலோசிப்பதற்காகத்தான்" என்று பெரும்பாலான தமிழர்கள் வாழும் இம்மாவட்டங்களுக்கு அவர் வந்தபோது அவர் கூறினார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவர் கடுமையாக எதிர்த்து வந்தபோதிலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுடன் பேசும்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை தனது ஆட்சி நடைமுறைப்படுத்துவது குறித்துச் சிந்திக்கும் என்று கூறியிருந்தார். ஆனால், 13 ஆவது திருத்தத்தினை அது உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே எதிர்த்தும், வடக்குக் கிழக்கு இணைப்பை எதிர்த்தும், மாகாணசபைகள் அமைப்புக் கலைக்கப்படவேண்டும் என்றும் கூறி வரும் ஒரு கட்சியின் தலைவர் இவ்வாறு கூறுவது அக்கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தான 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ளாது இரு அரசுகளின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டது. இவ்வொப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகள் அமைப்பின் மூலம் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியும் என்று கூறப்பட்டது. இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணசபைகள் ஊடாக காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் அவ்வொப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. "பல ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை ஒரு அரசியற் கட்சி என்கிற வகையில் நாம் எதிர்க்கிறோம். எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டாலும்கூட இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் எமது கட்சி பாதுகாத்தே தீரும்" என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கூறியிருந்தார். "எமது இந்த நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை" என்றும் அவர் கொழும்பு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். "இந்த நாட்டின் சரித்திரத்தில் அதன் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க தொடர்ச்சியாக உறுதியான நிலைப்பாட்டினை எடுத்து வந்திருக்கிறோம். அதனைக் கட்டிக் காப்பதற்கு நாம் உறுதிபூண்டிருக்கிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றைக்குமே மாறப்போவதில்லை. எமது கொள்கைகளில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு எங்களால் உறுதியாகக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசாங்கத்திற்கெதிராக இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. முதலாவது 1970 களில், இரண்டாவது 1980 களின் இறுதிப்பகுதியில். இதில் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி முழுக்க முழுக்க இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட 13 ஆம் சட்டத்தினூடாக வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எதிராக நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் இந்தக் கிளர்ச்சியின்போது கொல்லப்பட்டார்கள். இந்த தீவிர இடதுசாரி இனவாதிகளின் தலைவரான ரோகண் விஜேவீர 1986 ஆம் ஆண்டு தான் எழுதிய "தமிழ் ஈழப் போராட்டத்திற்கான எனது தீர்வுகள்" எனும் புத்தகத்தில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையினை அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைப் பேண புனையப்பட்ட சதி என்று குறிப்பிட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளராக இருந்த விஜித்த ஹேரத் தி ஐலண்ட் எனும் சிங்கள இனவாதிகளின் ஆங்கில ஊதுகோலுக்கு வழங்கிய செவ்வியில், "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி ஆட்சிக்கு எதிரானது. தமிழ் மக்களின் இன்னல்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அதேவேளை, சமஷ்ட்டி முறையினூடாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்பதை எமது கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை எமது கட்சியே நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரித்தது. இதற்காக மூன்று தனியான வழக்குகளை நாம் தாக்கல் செய்திருந்தோம்" என்று அவர் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கல் செய்த வழக்கினையடுத்து வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்று கூறிய மூன்று நீதிபதிகளும், அவை உத்தியோகபூர்வமாக பிரிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியிருந்தனர். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து தமிழர்களின் தாயகமான வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் நிரந்தரமாகவே பிரிக்கட்டுப் போயின. அநுர திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் "இலங்கை நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் எந்தவிட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி எமது கட்சியினால் காக்கப்ப‌டும்" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவாரான சுனில் ஹந்துநெட்டி பேசும்போது "தற்போதிருக்கும் மாகாணசபை முறையினை தமது கட்சி தொடர்ந்து கடைப்பிடித்தாலும், நீண்டநாட்களுக்கு அதனை தொடரும் எண்ணம் இல்லை" என்று கூறினார். சிங்கள இனவாதிகளுடனும், தேசியத்துடனும் மக்கள் விடுதலை முன்னணி காட்டும் நெருக்கமும் தமிழர்களுக்கெதிரான அக்கட்சியின் நிலைப்பாடும் இவர்கள் குறித்த சந்தேகங்களை தமிழர்களிடையே நீண்டகாலமாகத் தோற்றுவித்து வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க பேசும்போது, தமது கட்சி "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அரசு முற்படுமாயின் தமது கட்சி அதனை எதிர்க்கும்" என்று கூறியிருந்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.