Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. தமிழர்களுக்கெதிரான யுத்தத்தின் புலநாய்வு வலையமைப்பை உருவாக்கிக் கொடுத்த இஸ்ரேலின் மொசாட் அதிகாரிகள் அன்றிரவு கொழும்பில் தன்னிடம் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் துருவித் துருவிக் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் இருந்து வேர்னன் வோல்ட்டர்ஸ் தப்பிக்க எத்தனித்தார். ஜெயாருடனான தனது பேச்சுக்கள் குறித்த இந்தியப் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளைச் சற்றும் கணக்கில் எடுக்காத வோல்ட்டர்ஸ், தமிழரின் பிரச்சினையில் இந்தியாவின் பார்த்தசராதியின் முயற்சிகளைக் கடுமையாக விமர்சித்ததுடன், இலங்கை ஜனாதிபதி இனப்பிரச்சினையினை தீர்த்துக்கொள்ளும் அனைத்து திட்டங்களையும் கைவசம் கொண்டிருந்தார் என்றும் காட்டமாகக் கூறினார். திருகோணமலை துறைமுக எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுக்கப்போகிறீர்களா? என்கிற கேள்விக்கும், நான் திருகோணமலைப் பக்கமே போகப்போவதில்லை, ஆனால் இலங்கை மக்களின் சரித்திரம் பற்றி அறிந்துகொள்ள கண்டிக்குச் சென்றிருந்தேன் என்று கூறினார். ஆனால் திருகோணமலை துறைமுக குத்தகை விவகாரம் குறித்து வோல்ட்டர்ஸ் ஜெயாருடன் பேசியிருந்தார். அத்துடன் அமெரிக்காவின் வானொலி நிலையத்திற்கான ஜெயாரின் சம்மதத்தையும் கையொப்பத்துடன் அவர் பெற்றுக்கொண்டார். இதற்கான பத்திரங்களை அவர் அமெரிக்காவிலிருந்து தயாரித்த்துக் கொண்டு வந்திருந்தார். மூன்றாவதாக வோல்ட்டர்ஸ் ஒரு விடயத்தையும் நிறைவேற்றிக்கொண்டார். அதுதான் இலங்கையில் இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தினை வழங்குவது. அதற்கும் ஜெயார் சம்மதம் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான தனது யுத்தத்திற்கு அமெரிக்காவின் சாதகமான நிலைப்பாட்டு மாற்றத்தினால் மிகுந்த உற்சாகமடைந்த ஜெயார் தனது இராணுவ ரீதியிலான தீர்வினை முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடலானார். தனது இராணுவத்தினருக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேலிய மொசாட் அதிகாரிகளை ஐரோப்பாவில் சந்திக்க தனது மந்திரிசபைச் செயலாளர் ஜி.வி.பி. சமரசிங்கவை ஜெயார் அனுப்பி வைத்தார். அம்மாத இறுதியில் இஸ்ரேலிற்கும், இலங்கைக்குமான இராணுவ உதவிகளுக்கான ஒப்பந்தம் ஐ நா சபை அமர்வுகளுக்காக ஜெயாரின் பயணத்தின்போது கைச்சாத்திடப்பட்டது. இஸ்ரேலுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. தைமாதத்தில் இஸ்ரேலுடன் தமது அரசாங்கம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திவருவதாக ஜெயார் சபையில் அறிவித்தபோது அவரது அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான மொகம்மட்டும், ஹமீதும் அதற்கு தமது ஆட்சேபணையினை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கான இராஜதந்திர அந்தஸ்த்தை இலங்கை வழங்குவது குறித்து முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு தாம் வழங்கிவந்த நிதியுதவியினை சவுதி அரேபியாவும் குவைத்தும் நிறுத்திக்கொண்டன. உள்நாட்டில் முஸ்லீம்களால் ஏற்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மிக இலகுவாக ஜெயாரினால் நசுக்க முடிந்தபோதும், இந்தியாவையும், ஏனைய முஸ்லீம் நாடுகளையும் அவரால் உதாசீனப்படுத்த முடியவில்லை. ஆகவே வேறு வழியின்றி இஸ்ரேலுக்கான முழுத் தூதரக அந்தஸ்த்தினை வழங்குவதென்ற தனது உடன்பாட்டில் இருந்து பின்வாங்கிய ஜெயார், கொழும்பில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகத்திற்குள் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு எனும் அலுவலகத்தை திறப்பதற்கு அனுமதியளித்தார். இஸ்ரேலிய நலன் காக்கும் அலுவலகம் வைகாசி 1984 இல் உருவாக்கப்பட்டது. அதனது முதலவாது அதிகாரியாக டேவிட் மட்நாய் நியமிக்கப்பட்டார். ஆவணி 1984 இல் இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் ஆறு அதிகாரிகள் இலங்கைக்கு வந்தனர். இவர்களின் வழிநடத்துதலில் தமிழர்களுக்கெதிரான உளவு வலையமைப்பை இலங்கை இராணுவம் உருவாக்கிக் கொண்டது.
  2. அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர். கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான். அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள்.
  3. முதல்நாள் சமாதானம் பற்றியும், இரண்டாம் நாள் போரின் மூலம் தமிழர்களை அடிமைப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளில் ஈடுபட்ட ஜெயவர்த்தன‌ மலையக மக்களை சட்டத்திற்குப் புறம்பாக எல்லையோரங்களில் தமிழர்கள் குடியேற்றிபவருகிறார்கள் என்கிற விசமத்தனமான அறிக்கையினை அரசாங்க‌த்தில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள் எதிர்த்தார்கள். இதற்கெதிராக தொண்டைமான் காட்டமான அறிக்கையொன்றினை வெளியிட்டதுடன், அமைச்சர் தேவநாயகம் மறுநாளான 18, ஐப்பசி 1983 இல் பத்திரிக்கையாளர் மாநாடொன்றினையும் கூட்டியிருந்தார். தொண்டைமானின் அறிக்கை தொடர்பாகவும், தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் மாநாடு தொடர்பாகவும் டெயிலி நியூஸிற்காக நான் செய்திகளை தயாரித்திருந்தேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரும், பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அரசு சாரா அமைப்புக்களும் பலநூற்றுக்கணக்கான நாடற்ற மலையகத் தமிழர்களை எல்லையோரக் கிராமங்களில் குடியேற்றிவருவதாக அறிக்கைகள் வெளிவந்ததை தொண்டைமான் கடுமையாகச் சாடியிருந்தார். சிங்களப்பகுதிகளில் பெருந்தோட்டங்களில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்கள் மீது 1977 ஆம் ஆண்டு சிங்களவர்கள் நடத்திய தாக்குதல்களாலேயே அப்பகுதிகளில் வாழ்ந்துவந்த பல தமிழர்கள் தமது பாதுகாப்புக் கருதி வடக்குக் கிழக்கிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்துவருவதாக அவர் கூறினார். மேலும், அக்காலப்பகுதியில் தான் அரசாங்கத்துடன் இணைந்திருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்த தொண்டைமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எக்கட்டத்திலும் மலையகத் தமிழர்களை வடக்குக் கிழக்கில் குடியேற்றுவதில் பங்கெடுத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட தமிழ் அகதிகளை அரசு சாரா அமைப்புக்களே பராமரித்து வருவதனால் அவர்களுக்கு தனது நன்றியையும் தொண்டைமான் தெரிவித்தார். அண்மையில் காந்தியம் பண்ணைகளில் இருந்து மலையகத் தமிழர்களை அடாத்தாக அரசாங்கம் விரட்டியடித்தமை மனித நேயத்திற்குப் புறம்பான செயல் என்றும் கண்டித்தார். அரசாங்கத்தின் கொள்கைக்குப் புறம்பாகச் சென்று மக்களைக் குடியேற்றுவதில் அதிகாரிகள் கடைப்பிடித்துவரும் போக்கு தவறானது என்றும் அவர் கண்டித்தார். மலையகத் தமிழர்களை மீளக் குடியேற்றுவதற்குப் பதிலாக அவர்களை வேண்டப்படதாகவர்களைப் போன்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அதிகாரிகள் நடத்திவருவதாக அவர் விமர்சித்தார். மேலும் காந்தியம் பண்ணைகளில் இருந்த மலையகத் தமிழர்களை இராணுவத்தினரும், பொலீஸாரும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டே விரட்டியடித்தார்கள் என்றும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார். தேவநாயகம் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தமிழரின் தாயகத்தில் எந்தப் பகுதியிலும் மலையக மக்களை மனிதக் காப்புச் சுவர்களாக தமிழர்களோ அரசியட் கட்சிகளோ குடியேற்றவில்லை என்று, இதுகுறித்து வந்தபத்திரிக்கை அறிக்கைகளைத் திட்டவட்டமாக மறுத்தார். சண் பத்திரிக்கையில் விசமத்தனமாக வெளியிடப்பட்ட அறிக்கையினை பொறுப்பற்ற ஊடக தர்மம் என்று கடிந்துகொண்ட அவர், சர்வதேசத்தில் மதிப்பிற்குரிய அமைப்பாக இயங்கும் அரசு சாரா அமைப்பொன்றின்மீது வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுவென்றும் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் மலையகத் தமிழர்கள் குடியேறுவதை சட்டத்திற்கு முரணான குடியேற்றம் என்று கூப்பாடு போடும் தெற்கின் பத்திரிக்கைகள், கிழக்கின் மாதுரு ஓயாப் பகுதியில் தமிழரின் நிலங்களில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவதை, அங்கு நடைபெற்றுவரும் நில அபகரிப்பை ஒருபோதும் கண்டிப்பதில்லை என்றும் அவர் கூறினார். தனது தொகுதியான கல்க்குடாவில் நிகழ்த்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களில் இருந்து அதனைக் காப்பற்ற தனது ச‌க அமைச்சர்களோடு முரண்படும் போக்கினை தேவநாயகம் கொண்டிருந்தார். மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம் தேவநாயகத்தின் கல்க்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத் தக்கது. காமிணி திசாநாயக்க தமிழ் அமைச்சர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதுகுறித்து மோதுவதென்று முடிவெடுத்தார். தனது தொகுதியான நுவரெலியாவில் இருந்தே தொண்டைமானும் தெரிவுசெய்யப்பட்டு வருவதால், அவரை தனது அரசியல் எதிரியாகக் கணித்தே காமிணி தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆகவே, தொண்டைமான் தனது மலையக மக்களின் நலன்கள் குறித்து மட்டுமே கவலைப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக் குறித்து தொண்டைமானுக்கு அக்கறையில்லை என்றும் வெளிப்படையாகக் கூறினார். மேலும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் பயங்கரவாதிகளின் பயிற்சிமுகாம்களாக மாற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயங்கரவாதிகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அமைச்சர் தேவநாயகத்தின் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க தனது ஊடக நண்பர்களான சண் பத்திரிக்கையை காமிணி நாடினார். மறுநாள் (19/10/1983) வெளிவந்த சண் பத்திரிக்கைச் செய்தியில் மாதுரு ஓயா குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பிரஜைகளான மக்கள் அரசாங்கத்திற்கு முறைப்படி வரிகட்டும் மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வவுனியாவில் குடியேற்றப்பட்டு வரும் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் என்றும் அச்செய்தி குறிப்பிட்டிருந்தது. மாதுரு ஓயாவில் குடியேறும் சிங்களவர்களை இலங்கையின் பிரஜைகள் என்று குறிப்பிட்டதன் ஊடாக சிங்களவர்கள் இந்த நாட்டில் எப்பகுதியிலும் குடியேறும் உரிமையினைக் கொண்டிருப்பதாக காமிணி திசாநாயக்கவினால் சண் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்ட செய்தி கூறியிருந்தது. தனது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களின் கவலைகளை ஜெயவர்த்தன உதாசீனம் செய்தார். மலையகத் தமிழர்களை காந்தியம் பண்ணைகளில் இருந்து அடித்துவிரட்டுவது எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அவர் உறுதிபூண்டார். அமெரிக்க அதிபர் ரீகனின் தொடர்பாடலதிகாரியான வேர்னன் வோல்ட்டார்ஸ் ஊடாக இஸ்ரேலியர்களுடனான தொடர்பினை தனது மகன் ரவியின் மூலம் ஜெயவர்த்தன ஏற்படுத்திக்கொண்டார். கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த வேர்னன் வோல்ட்டர்ஸ் மறுநாள் 8 ஆம் திகதி ஜெயவர்த்தனவுடன் நீண்டநேரம் பேச்சுக்களில் ஈடுபட்டார். பேச்சு முழுதும் இஸ்ரேலினூடாக இராணுவ உதவிகளை இலங்கைக்கு எப்படிப் பெற்றுக்கொடுப்பது என்பதாகவே இருந்தது. இப்பேச்சுக்களில் லலித் அதுலத் முதலியும், ரவி ஜெயவர்த்தனவும் பிரசன்னமாகியிருந்தனர். அதேவேளை ஜெயாரின் அழைப்பின்பேரில் கார்த்திகை 7 ஆம் திகதி கொழும்பு வந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் பார்த்தசாரதி ஜெயாருடன் சமாதான முயற்சிகள் குறித்து நீண்ட பேச்சுக்களில் ஈடுபட்டார். அதேவேளை இஸ்ரேலியர்களின் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை எப்படி முற்றாக அழித்துவிடுவது என்பதுபற்றிய பேச்சுக்களிலும் ஜெயவர்த்தன ஈடுபட்டிருந்தார். தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்று தான் முன்வைத்த தீர்வினை எப்படி மெருகூட்டுவது என்று பார்த்தசாரதியிடம் விளக்கிய ஜெயார், இரண்டிற்கு மேற்பட்ட மாவட்டங்களை இணைக்கலாம் என்றும் பேசினார். முதல்நாளில் சமாதானம் குறித்தும், அடுத்த நாளில் போரில் தமிழர்களை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்பது குறித்தும் பேசுமொரு ஜனாதிபதியை நம்பி தமிழர்கள் எப்படிப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களில் ஒருவரான பாலக்குமார் சென்னையில் கார்த்திகை 9 ஆம் திகதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது கேள்வியெழுப்பியிருந்தார்.
  4. இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்?
  5. மக்கள் விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே தமிழர்களின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத், அதே தமிழர்களின் பெருவிருப்பிற்குரிய பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகிய முப்பெரும் தலைவர்கள் உட்பட பல மக்கள் விடுதலை முன்னணித் தலைவர்கள் இதனை கடந்த சில தினங்களாகக் கூறி வருகிறார்கள். "தமிழருக்கு இருப்பது இனப்பிரச்சினையல்ல, நாட்டிலுள்ள ஏனைய இன மக்களுக்கிருப்பது போன்ற அதே பொருளாதாரப் பிரச்சினைகள் தான், வடக்குக் கிழக்கு இணைக்கப்படக் கூடாது, மாகாண சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லை, போர்க்குற்றவாளிகள் என்று எந்த இராணுவ வீரனையோ தளபதியையோ நாம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை, சுதந்திரமான யுத்தக் குற்ற விசாரணைகளுக்கோ அல்லது அது தொடர்பான சாட்சித் தேடல்களுக்கோ நாம் அனுமதியளிக்கப்போவதில்லை" என்கிற "தெமுழுவோ" க்களுக்கு பெரிதும் நண்மை பயக்கும் வரங்களை அள்ளி வழங்கிக்கொண்டு வருகிறார்கள். இங்கு யாழ்க்களத்தில் இந்த இனவாதிகளுக்கு அப்பட்டமாக செம்புதூக்கும் ஒருவரும் அவரின் மேலும் இரு ஆதரவாளர்களும் இத்தனை வரங்களுக்குப் பின்னரும் அக்கட்சியை ஆதரிக்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டு வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒருவர் தமிழர் என்கிற அடையாளம் வேண்டாம் , இலங்கையராக இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியுடன் பணியாற்றுவோம் என்று அழுகிறார். சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இணைந்து பணியாற்றிய முஸ்லீமான அஞ்சன் உம்மா, தமிழரான சந்திரசேகரன் மற்றும் தற்போது அநுரவின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்தவர் ஆகியோர் பேசிவந்த அல்லது பேசி வருகின்ற விடயங்களைக் கேட்பவர்களுக்கு இவ்வாறான இனத்துரோகிகளை அக்கட்சி இணைப்பது தமிழருக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவல்ல, மாறாக இவ்விரு சமூகங்களுக்குள்ளும் தமது இனவாத வேர்களை நுழையவிட்டு அவ்வினங்களைப் பலவீனப்படுத்தத்தான் என்பது இந்த செம்புதூக்கிகளுக்கு நன்கு தெரிந்தபின்னரும், அதனையே செய்யவேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். போலி மாக்ஸிஸம் பேசிக்கொண்டு, அப்பட்டமான சிங்க‌ளப் பேரினவாதம் கக்கும் ஒரு கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்ட இவர்களைப்போன்றே "தமிழ் எனும் அடையாளம் துறந்து இலங்கையராக இணைவோம்" என்று ஊளையிடும் செம்புதூக்கிகள் செய்ய விரும்புவது தமிழர்களை மேலும் மேலும் மூளைச்சலவை செய்து, அவர்களின் தாயகத்தில் சிங்கள இனவாதிகளை வேரூன்றச் செய்வதுதான். சிங்கள இனவாதிகளுக்கு தமிழர் தாயகத்தில் செங்கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கும் இப்புல்லுருவிகளின் கனா கலைக்கப்பட வேண்டுமானால், தமிழர்கள் செய்யவேண்டியது இந்த இனவாதிகளையும், அவர்களைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கத் தவமிருக்கும் புல்லுருவிகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதுதான். தமிழர்களின் பொருளாதாரத்தைச் சரிசெய்கிறோம் என்று கூவும் இதே இனவாதிகள் 1983 இல் இருந்து இன்றுவரை அதே தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டக் காரணமாக இருந்தவர்கள் என்பதை செம்புதூக்கிகள் மறக்கலாம், மறைக்கலாம், ஆனால் தமிழர்கள் இதுகுறித்து அவதானமாக‌ இருப்பதும், தாயகத்தில் சிங்கள இனவாதிகள் காலூன்றுவதைத் தடுப்பதும் காலத்தின் கட்டாயம்.
  6. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தூயவன். இஸ்ரேலியரின் வேதாகமத்தில் இன்று போர்நடக்கும் பலபகுதிகள் அன்று அவர்களின் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 1000 வருடங்களுக்கு (அண்ணளவாகத்தான்) முன்னர் அரேபியப் படையெடுப்புக்களால் இஸ்ரேலியர்கள் இங்கிருந்து விரட்டப்பட பலஸ்த்தீனர்கள் அங்கு குடியேறிவிட்டார்கள். 1948 இற்குப் பின்னரே இஸ்ரேலியர்கள் அங்கு மீளவும் குடியேறினார்கள். தமது வேதாகமத்தின்படி பலஸ்த்தீனர்கள் தற்போது வாழும் , தமது முந்தைய தாயகத்தை மீட்டு, மீள உருவாக்க முயல்கிறார்கள். அப்படியானால் அங்குவாழும் பலஸ்த்தீனர்கள் எங்கு செல்வது? கடந்த 1000 வருடங்களாக அவர்களும் அங்குதானே வாழ்கிறார்கள்? யூதரும், பலஸ்த்தீனியர்களும் இருக்கும் தாயகத்தை பகிர்ந்து வாழ்வதே சரியாக இருக்கும் என்பது எனது நிலைப்பாடு.
  7. இல்லை அண்ணை, இதெல்லாமே நடந்தது. இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. ஈஸ்ரேல் நடத்துவது ஆக்கிரமிப்பு யுத்தம்தான். ஈழத்தமிழர் மீது அவ்வாறான ஆக்கிரமிப்பொன்றினை நடத்தலாம் என்று ஜெயவர்த்தனா, காமிணிக்குச் சொல்லிக் கொடுத்ததே இஸ்ரேலிய மொஸாட்டுக்கள் தான். காஸாவிலும் மேற்குக் கரையிலும் பலஸ்த்தீனர்களை விரட்டியடித்துவிட்டு இஸ்ரேலியர்களைக் குடியேற்றி ஆயுதமயப்படுத்தியதைத்தான் இலங்கையிலும் தமிழர் தாயகத்தில் மொஸாட்டுக்கள் செய்வித்தார்கள். ஆக, ஈழத்தமிழரின் அவலங்கள் ஆரம்பிக்கப்படு முன்னமே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் ஆரம்பித்து விட்டன. நான் சொல்ல வந்தது ஹமாஸும் புலிகளும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்பட முடியாதவர்கள் என்பதைத்தான். இவ்விரு அமைப்புக்கள் மீதான சர்வதேசத் தடை என்பது தடை விதிக்கும் நாடுகளின் நலன்களைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. மாறாக இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் சரியானவையா தவறானவையா எனும் அடிப்படையில் அல்ல.
  8. ஹமாஸ் தலைவர் சின்வாரின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டே கொல்லப்பட்டிருக்கிறார் என்று அவரது சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனை செய்த இஸ்ரேலிய மருத்துவர் கூறியிருக்கிறார். இது சின்வார் தாங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் முதலில் கூறியதற்கு முரணானதாகும். ஆரம்பத்தில் அவர் இருந்த கட்டடப் பகுதியிலிருந்து இஸ்ரேலியத் தாங்கி அணி ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பதிற்தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலியர்கள் அக்கட்டடத்தை நோக்கித் தாங்கியால் சுட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் இஸ்ரேலிய ட்ரோன் ஒன்று ஒரு கை துண்டிக்கப்பட்டு, கால்கள் நடக்கமுடியாதளவிற்கு செயலிழந்துபோய், உடலில் பல குண்டுச்சிதறல்கள் பாய்ந்திருக்க அரை மயக்க நிலையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்த சின்வாரைக் கண்டது. தனது இடது கையினால் பலகையொன்றினை எடுத்து ட்ரோன் நோக்கி சின்வார் எறிய முற்படுகிறார். ஆனால், அதன் பின்னரான ஒளிப்ப‌டத்தில் சின்வாரின் இறந்த உடல் கீழே கிடக்க, சுற்றியும் இஸ்ரேலிய வீரர்கள் நிற்கிறார்கள். இந்த இடைவேளையில் அவரை உயிருடன் பிடித்து பின்னர் சுட்டுக்கொன்றோ அல்லது அருகிலிருந்து அவரைச் சுட்டுக் கொன்றோ இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சின்வார் கொல்லப்பட்டாலும் போர் தொடரும் என்று அறிவித்திருக்கும் ஹமாஸ், இஸ்ரேல் இராணுவம் காசாவிலிருந்து முற்றாக வெளியேறி, யுத்தத்தை நிறுத்தி, பலஸ்த்தீனக் கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. அதேவேளை ஹமாஸினால் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 101 பணயக் கைதிகளான இஸ்ரேலியர்களை விடுவிக்கும்வரை தனது இராணுவ நடவடிக்கையினை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. தற்போது சின்வாரின் உடலை வைத்து கைதிகள் பரிமாற்றம் என்று ஒன்று நடைபெறலாம் என்று பேசப்படுகிறது.
  9. எங்களின் தேசியத்துக்கெதிரான கருத்துக்களை ஒரு பக்கம் எடுத்து வைத்துவிட்டு இதனைப் பார்க்கலாமே. சுமந்திரன் கூறுவதுபோல 15 ஆசனங்களை அவரது கட்சி கைப்பற்றுமாக இருந்தால் நல்லது என்பதே எனது எண்ணம். தெற்கைச் சாராத, தமிழர் தாயகத்தை தளமாகக் கொண்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்வது தமிழரைப் பொறுத்தவர் நல்ல விடயமே. அதனால் எவர் தாயகத்தை அடிப்படையாக வைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் எனது ஆதரவு அவர்களுக்கே. ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். தமிழர்களின் அரசியல் நலன் தொடர்பாக உண்மையான அக்கறையும், அதுகுறித்து செயற்படும் துணிவும் இருந்தால் சுமந்திரனுக்கு வாக்களிக்கலாம். அதைச் சுமந்திரன் உறுதிப்படுத்த வேண்டும். செய்வாரா? என்னைப்பொறுத்தவரை சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி நமது தாயகத்தில் காலூன்றுவதைக் காட்டிலும் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான வேறு எவருமோ தேர்தலில் வெல்வது மேலானது. பொதுவேட்பாளர் விடயத்தில் நான் இதே நோக்கத்திற்காகத்தான் அவர்களை ஆதரித்தேன், எமது தாயகத்தில் அவருக்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த முயற்சியை எல்லோருமாகச் சேர்ந்து இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை. வாழ்த்துக்கள் சுமந்திரன், முயன்று பாருங்கள்.
  10. அண்ணை, நான் வாலிக்குச் சார்பாகக் கதைக்கிறேன் என்று எண்ணவேண்டாம். ஆனால் நீங்கள் மேற்கோள் காட்டிய அவரது கருத்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளை மட்டுமே குறிக்கிறது என்பது எனது தாழ்மையான எண்ணம். இஸ்ரேலுக்கெதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை ஹமாஸ் நிறுத்தவேண்டும். ஏனென்றால், அது இன்னும் இன்னும் பல்லாயிரக்கணக்கான பலஸ்த்தீனர்களின் படுகொலைகளில்த்தான் சென்று முடியப்போகிறது. அடுத்தது, ஹமாஸிற்கோ அல்லது ஹிஸ்புல்லாவிற்கோ தலைமையேற்க எவர் வந்தாலும் அவர்களை இஸ்ரேல் கொல்லும், இதுதான் நடக்கிறது, அதைத்தான் வாலியும் குறிப்பிடுகிறார். முன்னொருமுறை இதே பலஸ்த்தீனர்களின் அவலங்கள் தொடர்பான கருத்தில் ஹமாஸ் குறித்த அவரது கருத்தொன்றிற்கு நானும் புலிகளை இணைத்து எழுதினேன். அதற்கு அவர் தந்த விளக்கம் எனக்குச் சரியாகப் பட்டது. இன்று நடந்திருப்பதும் அதுதான். இனத்தின் விடுதலைக்காகவும், இருப்பைத் தக்கவைக்கவும் போராடும் புலிகளையும், இஸ்ரேலை அழிப்பதற்காகவே செயற்படும் ஹமாஸையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது தவறென்பதே அவரது வாதம். அது எனக்குச் சரியாகவே தெரிகிறது. பலஸ்த்தீன மக்களினதும் ஈழத்தமிழினத்தினதும் அவலங்கள் ஏறக்குறைய ஒரேமாதிரியானவை. ஆனால் ஹமாஸும் புலிகளும் ஒன்றல்ல. உங்களை ஆத்திரப்பட வைக்க எழுதவில்லை. மனதில் பட்டதை எழுதினேன், அவ்வளவுதான்.
  11. கடந்த வருடம் இஸ்ரேலின் மேல் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க தாக்குதலின் சூத்திரதாரி இவர்தான். இத்தாக்குதலின் ஊடாக பலஸ்த்தீன மக்களின் அறப்போராட்டத்தின் மீதான சர்வதேச அனுதாபத்தினை இவர் இழக்கவைத்தார். பலமுறை ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையே நடந்துவந்த பணயக் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான பேச்சுக்களில் மிகக்கடுமையாக இவர் நடந்துகொண்டார் என்றும் கூறுகிறார்கள். இவரது இழப்பால் ஹமாஸின் போராட்டம் முற்றுப்பெற்றதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பலஸ்த்தீன மக்களின் அவலங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன. பலஸ்த்தீன மக்களுக்கான சுமூக வாழ்வினை, அவர்கள் தங்கள் வாழிடத்தில் நிம்மதியாக அனுபவிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். இஸ்ரேலை அழிப்பதே தமது ஒரே குறிக்கோள் என்று கருதுவதை ஈரானின் முல்லாக்களும் அதன் கூலிகளும் இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும். இவரின் கடைசி நேர வீடியோவைப் பார்த்தேன் இடிபாடுகளுக்குள் அகப்பட்டு, காயப்பட்ட நிலையில் ஒரு கதிரையில் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி இஸ்ரேலின் ட்ரோன் ஒன்று செல்கிறது. அதனை நோக்கி அருகில் இருந்த பலகை ஒன்றினை எடுத்து எறிகிறார், ட்ரோன் விலக்கிக்கொள்கிறது. அடுத்த சில நிமிடங்களில் பூரண இராணுவ உடையில் அவரது சடலம் கீழே கிடக்க அருகில் இஸ்ரேலிய விசேட படைகள் நிற்கின்றனர். இறுதிவரை தன் மக்களுக்காகப் போரிட்டு மடிந்த தலைவர் என்று பலஸ்த்தீனர்கள் இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இவரது உடலை இஸ்ரேல் எடுத்துச் சென்று பல் ஆய்வுகளின் மூலம் இவர் சின்வார்தான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. சுமார் 20வருடங்களாக இஸ்ரேலின் சிறையில் இருந்த சின்வார் 2011 ஆம் ஆண்டில் ஹமாஸினால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனின் விடுதலைக்காக இஸ்ரேலினால் விடுவிக்கப்பட்ட 1000 ஹமாஸ் உறுப்பினர்களில் ஒருவராக வெளியில் வந்தவர் . படிப்படியாக ஹமாஸின் தலைமைப்பொறுப்புக்களைப் பெற்ற இவர் முன்னாள் தலைவரின் இறப்பிற்குப் பின்னர் பிரதான தலைமைப்பொறுப்பை எடுத்தவர். சிறையில் இருந்த காலத்தில் மூளையில் வளர்ந்துவந்த கட்டியொன்றினை இஸ்ரேலிய இராணுவ மருத்துவர்கள் அகற்றி இவரைக் காப்பாற்றியும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. https://edition.cnn.com/2024/10/17/world/video/sinwar-hamas-leader-killed-final-moments-idf-drone-lead-digvid
  12. இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான். அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா? அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா? இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது.
  13. அருமை வசி! அதிலும் ஒரு கருத்தை முன்வைக்கும் பக்குவம் இருக்கின்றதே, அருமையிலும் அருமை.
  14. இடைக்கால நிர்வாக சபையினை வழங்குவதை எதிர்த்து இன்னுமொரு ஆர்ப்பட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணி திங்கட்கிழமை, 11 ஆவணி 2003 புலிகளுக்கு வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவதை எதிர்த்தும், அந்நிய நாட்டுப்படைகளை இலங்கைக்குள் அமைதிகாக்கும் முயற்சிகளுக்காக வரவைக்கும் யோசனைகளை எதிர்த்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை செவ்வாயன்று நடத்த தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமாகி வருவதாக அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கொழும்பில் கூறினார். சுமார் 50,000 மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். …………………………………………………………………………………………………… புலிகளுக்கு வடக்குக் கிழக்கினை தாரை வார்த்து நாட்டைக் காடிக் கொடுப்பதை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணி மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது புதன்கிழமை, 20 ஆவணி, 2003 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ரணிலின் துரோகத்தை எதிர்த்து வடக்குக் கிழக்கு உட்பட, நாடளாவிய ரீதியில் பிரச்சாரப் போர் ஒன்றினை ஆரம்பிக்கவிருப்பதாக அதன் பிரச்சாரச் செயலாளர் விமர் வீரவன்ச கூறியுள்ளார். இதன்படி மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது பிரச்சாரப் போர் காலியில் ஆரம்பிக்கும் என்றும், அதன் இறுதிப் பேரணி கொழும்பு லிப்ட்டன் சதுக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். "இலங்கையை மீட்டெடுப்போம் எனும் போர்வையில் வடக்குக் கிழக்கைப் புலிகளுக்கும், தெற்கை வெளிநாடுகளுக்கும் ரணில் அரசு கொடுக்கவிருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார். ரணிலின் தவறான ஆலோசனைகளால் இலங்கை இராணுவம் போராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும், வடக்குக் கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்துவது இராணுவத்திற்குக் கடிணமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இதவேளை மக்கள் விடுதலை முன்னணியின் பங்காளிகளான வடக்குக் கிழக்கு சிங்களவர்கள் அமைப்பு சந்திரிக்காவுக்கு அனுப்பியுள்ள வேண்டுகோளில் இந்தியாவை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குள் அழைக்கவேண்டும் என்றும், இந்திய கடற்படையின் உதவியுடன் புலிகளின் கடற்போக்குவரத்தை தடுத்து, இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.மேலும், வடக்குக் கிழக்கை உடனடியாகப் பிரிப்பதும், பொலீஸ் புலநாய்வாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டு வருவதைத் தடுப்பதும் உடனடித் தேவை என்றும் அவ்வமைப்புக் கூறியிருக்கிறது. ………………………………………………………………………………………… சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரி காலியில் இருந்து கொழும்பு வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் மக்கள் விடுதலை முன்னணி ஞாயிற்றுக்கிழமை, 24 ஆவணி 2003 பேச்சுக்களை உடனடியாக நிறுத்தக்கோரியும், புலிகளிடமிருந்தும், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் இலங்கையின் இறையாண்மையினையும், ஆட்புல ஒருமைப்பாட்டினையும் காத்திடக் கோரியும் காலியில் இருந்து கொழும்புவரை நான்கு நாட்கள் பாத யாத்திரையினை அதி தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடத்துகிறது. ஆட்சியில் இருக்கும் ரணிலின் அரசு கவிழ்க்கப்பட்டு, சமாதானப் பேச்சுக்கள் நிறுத்தப்படும்வரை தமது போராட்டம் ஓயாது என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது. ………………………………………………………………….. எனது கட்சியான மக்கள் கூட்டணி தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு ஆதரவு தருகிறது, ஆனால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக இருப்பதால் அவர்களுடன் பொது இணக்கப்பட்டிற்கு வர முடியவில்லை - சந்திரிக்கா செவ்வாய்க்கிழமை, 2 புரட்டதி 2003 சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி சந்திரிக்க, தனது கட்சி தமிழர்களுடனான அதிகாரப் பகிர்வு குறித்து ஆராயத் தயாராக இருந்தபோதும், மக்கள் விடுதலை முன்னணி அதனைக் கடுமையாக எதிர்த்து வருவதால் அவர்களுடன் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவது கடிணமாகியிருக்கிறது என்று கூறினார். "ரணிலின் அரசைக் கவிழ்ப்பதில் மக்கள் விடுதலை முன்னணியினருடன் இணைந்து செயற்படுவதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் ஆர்வம் இல்லை. ஆனால், புலிகளால் சீர்கெட்டுப்போயுள்ள பாதுகாப்பு நிலவரத்தைச் சீர்செய்து நாட்டைப் பாதுக்காக வேண்டும் என்பதே எனது குறிக்கோள்" என்று அவர் மேலும் கூறினார். …………………………………………………………………………………. தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்து நின்றதனால் அக்கட்சிக்கும், சந்திரிக்காவின் கட்சிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன‌ சனிக்கிழமை, 6 புரட்டாதி 2003 ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்காக சந்திரிக்காவின் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் நடத்திவந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. இதற்கான முக்கிய காரணமாக தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறும் அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியோ அதிகாரப் பகிர்வென்கிற பேச்சிற்கே இடமில்லை, ஒற்றையாட்சியின் கீழ், ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டுமே தீர்வு அமையவேண்டும் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டது. இதுகுறித்துப் பேசிய மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, "சர்வதேச அழுத்தத்திற்குப் பயந்தே சந்திரிக்கா அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறார். ஆனால் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்கினால் நாடு பாரிய அழிவை எதிர்நோக்கும்" என்று கூறினார். மேலும், தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு எனும் சுதந்திரக் கட்சியின் தலைமையின் முடிவினை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முற்றாக எதிர்க்க முன்வரவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார். ………………………………………………………………………………….. சமாதானப் பேச்சுக்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி இரண்டாவது பாதயாத்திரைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் விடுதலை முன்னணி வியாழ‌க்கிழமை, 11 புரட்டாதி 2003 ரணில் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி இலங்கையின் இறையாண்மையினையும், ஒருமைப்பாட்டையும் காத்திடக் கோரி சிங்களத் தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இரண்டாவது - ஐந்து நாள் பாத யாத்திரைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. ரணில் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுக்களால் இலங்கையின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிக்கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதால் இப்பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு நோர்வே அனுசரணையாளர்கள் உடனடியாக நாட்டை விட்டு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறினார். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நடைபெறும் இந்த ஆர்ப்பட்ட பாத யாத்திரையில் சந்திரிக்காவின் கட்சியைச் சேர்ந்த 20 பா.உ க்களும் பங்கேற்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அநுர பண்டாரநாயக்க உட்பட பல சந்திரிக்காவின் கட்சிக்காரர்கள் புலிகளுக்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது, இடைக்கால நிர்வாக சபை கொடுக்கப்படக் கூடாது, பேச்சுக்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இந்தியாவை உதவிக்கு அழைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து தீவிர இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொண்ட கண்டியில் இருந்து கொழும்புவரையான இரண்டாவது ஐந்து நாள் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட படங்கள்
  15. வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான முழு பிரச்சார யுத்தத்தினை முன்னெடுத்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 29, ஆடி 2003 தீவிர சிங்கள இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக சபையொன்றினை உருவாக்கும் முயற்சிகளுக்கெதிராக முற்றான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சூளுரைத்திருக்கிறது. இடைக்கால நிர்வாக சபைக்கான அனுமதியென்பது நாட்டைத் துண்டாடுவதற்கான அனுமதியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆவணி 6 ஆம் திகதியிலிருந்து நாடுதழுவிய ரீதியில் இடைக்கால நிர்வாக சபைக்கெதிரான கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை முடுக்கிவிடும் நடவடிக்கைகளில் மக்கள் விடுதலை முன்னணி இறங்கியிருக்கிறது. ஏனைய எதிர்க்கட்சிகள் சிங்கள மக்களை இடைக்கால நிர்வாக சபைக்கெதிராக அணிதிரட்டத் தவறியமையினாலேயே தமது கட்சி இதனைச் செய்வதாக அவர் கூறினார். வடக்குக் கிழக்கு இடைக்கால நிர்வாக சபை இயங்குமிடத்து, அது முழு நாட்டையும் சுக்குநூறாக உடைத்துவிடும் என்று அவர் சிங்கள மக்களை எச்சரித்தார். இதேவேளை ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியினரும் இடைக்கால நிர்வாக சபையினை எதிர்த்து சிங்கள மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். அக்கட்சி சார்பாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மைத்திரிபால சிறிசேன, மூன்று மாதங்களுக்குள் முழு நாட்டிலும் இக்கருத்தரங்குகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9529
  16. யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்களை நாட்டிற்குத் திரும்பிப் போ என்று மிரட்டிய மக்கள் விடுதலை முன்னணி ஆதவாளர்கள் செவ்வாய்க்கிழமை, 15 ஆடி, 2003 திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் கூடிய மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், அவர்களை நாட்டிற்குத் திரும்ப் போ என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்காணிப்பாளர்களின் அலுவலகத்திற்கு பொலீஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். திருகோணமலை துறைமுக வீதி வழியே ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் கண்காணிப்பாளர்களின் அலுவலகத்தை அடைந்தது "புலிகளுக்கு உதவுகிறீர்கள், நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்" என்று கோஷமிட்டனர். அதேவேளை திருகோணமலை நகரில் பேச்சுவார்த்தைகளைக் கண்டித்து பூரண கடையடைப்பைச் செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி கேட்டிருந்தபோதும் பல கடைகள் திறந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9437
  17. சமாதான முயற்சிகளுக்கெதிரான தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவரும் தீவிர இனவாத இடதுசாரிகளான மக்கள் விடுதலை முன்னணியினர் புதன்கிழமை, 25 ஆனி 2003 ரணில் அரசிற்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பேச்சுக்களுக்கெதிராக தொடர்ச்சியான போராட்டங்களை தீவிர இனவாத மாக்ஸிஸ்ட்டுக்களான மக்கள் விடுதலை முன்னணியினர் நாடெங்கிலும் நடத்தி வருகின்றனர். இதன் இன்னொரு கட்டமாக கொழும்பில் இன்று அக்கட்சி சுமார் 5000 ஆதரவாளர்களை இணைத்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் ரணில் அரசைச் சாடியும், புலிகளை எதிர்த்தும் சுலோகங்களை பாடியதுடன் பதாதைகளையும் காவி வந்தனர். இன்று தமிழர்களால் "தலைவர்" என்று கொண்டாடப்படும் அதே இனவாதியான மக்கள் முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரச்சார மேடையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் மூன்றாவது பலமான கட்சியென்பதுடன், நாட்டில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ச‌மாதானப் பேச்சுக்களுக்கெதிரான சிங்கள மக்களின் உணர்வினை கிளப்பி வருகின்றது. அத்துடன் தமிழர்களுக்கான தனிநாடொன்றினை உருவாக்கவே ரணில் அரசாங்கம் முயல்வதாகவும் அது திட்டமிட்ட பரப்புரை நடவடிக்கையொன்றினையும் நடத்திவருகின்றது. யுத்தத்தினால் அழிக்கப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கினை புணருத்தானம் செய்வதற்காக புலிகளால் முன்வைக்கப்பட்டிருக்கும் இடைக்கால நிர்வாக சபைக் கட்டமைப்புக் கோரிக்கை என்பது சிங்கள மக்களை ஏமாற்றி தமிழர்களுக்கு தனிநாட்டைத் தாரைவார்க்கும் கைங்கரியமே என்று அக்கட்சி கூறுகிறது. ஆகவே இன்றைய பேரணி வடக்குக் கிழக்கு மாகாண இடைக்கால நிர்வாக சபையினை புலிகளிடம் வழங்காதே எனும் கோஷத்தினை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட்டது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9293
  18. புலிகளின் ஆயுதக் கப்பலை முல்லைத்தீவுக் கடலில் அழிக்க உத்தரவிட்டது நானே, ரணில் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது எப்படித் தவறாகும் ? சந்திரிக்கா திங்கள், 23, ஆனி, 2003 "இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்காகவே கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவுக் கடற்பரப்பில் புலிகளுக்கு ஆயுதங்களைக் கொண்டுவந்த கப்பலை அழிக்க உத்தரவிட்டேன்" என்று சந்திரிக்கா தனது கட்சியின் வருடாந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். "புலிகள் இன்னொரு போருக்குத் தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிந்திருந்தேன். எனது தளபதிகளுடனான அண்மைய கலந்தாலோசனைகளின்போது இது உண்மையென்று எனக்கு நிரூபணமானது. சமாதானப் பேச்சுக்கள் எனும் போர்வையினூடாக பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஆயுதங்களைக் கொண்டுவந்து குவிப்பதை ரணில் அரசு ஊக்குவிக்கிறது. இது இப்படியே நடந்துகொண்டுவருவதை என்னால் அனுமதிக்க முடியாது. ஆகவேதான் முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் கப்பல் வரும்போது எனது கடற்படையினை அனுப்பி அழிக்கச் செய்தேன்" என்று அவர் மேலும் கூறினார். "ரணிலின் அரசு புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவது சரியென்றால், நான் மக்கள் விடுதலை முன்னணியினருடன் கூட்டுச் சேர்வது எப்படித் தவறாக முடியும்?" என்றும் அவர் வினவினார். முல்லைத்தீவிற்கு அருகே நடுக்கடலில் அழிக்கப்பட்ட புலிகளின் கப்பல் குறித்து ரணில் அரசின் பாதுகாப்புச் செயலாளர் திலக் மாறப்பன கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை கடற்படை தெரிவிக்கும் தகவல்களுக்கும் புலிகளின் தகவல்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் புலிகளின் கப்பலை முதன்முதலாக காலை 3:15 மணிக்கு கடற்படை கண்டுவிட்டதென்றும், தாக்குதல் 5 மணிக்கு நடத்தப்பட்டபோதும், காலை 7 மணிவரை தனக்கோ அல்லது கடற்படைத் தளபதிக்கோ இத்தாக்குதல் குறித்து, தாக்குதலில் ஈடுபட்ட கடற்படையினரோ, ஜனாதிபதி சந்திர்க்காவோ தெரிவிக்கவில்லையென்றும் அவர் கூறியிருந்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9273
  19. புலிகளுக்கு இடைக்கால நிர்வாக சபையினை வழங்காதே ‍- கொழும்பில் கூடிய மக்கள் விடுதலை முன்னணியின் 10,000 ஆதரவாளர்கள் வெள்ளி, 06 ஆனி 2003 தீவிர சிங்கள இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் கொழும்பில் கூடிய 10,000 இற்கும் அதுஇகமான அக்கட்சியின் ஆதரவாளர்கள், தமிழர்களுக்கான இடைக்கால நிர்வாக சபையினை ரணிலின் அரசு வழங்கக் கூடாதென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புலிகளுக்கும் ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் சமாதானப் பேச்சுக்களுக்கெதிரான பதாதைகளையும், ரணில் அரசைக் கண்டிக்கும் பதாதைகளையும் அவர்கள் காவி வந்தனர். இப்பேரெணியில் கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9147
  20. இடைக்கால நிர்வாக சபை உருவாக்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடும் மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிக்கா கூட்டணி வெள்ளி, 30 வைகாசி 2003 டோக்கியோவில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு புலிகளின் பிரசன்னத்துடனோ அல்லது இன்றியோ நடைபெறுதல் அவசியம் என்று சந்திரிக்காவின் கட்சி கூறியிருக்கிறது. மேலும் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளூடாக எட்டப்பட்ட அரசியல்த் தீர்வு அமுல்ப்படுத்தப்பட்டால் அன்றி இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்படல் கூடாதென்றும், அப்படி உருவாக்கப்படும் சபை கூட சில நிபந்தனைகளுடன் தான் உருவாக்கப்பட முடியும் என்றும் அது கூறியிருக்கிறது. ஜனாதிபதி சந்திரிக்காவின் நெருங்கிய சகாவான மங்கள சமரவீர இதுகுறித்துப் பேசும்போது, இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுதலில் தமக்கு ஆட்சேபணையில்லை, ஆனால் அது சில நிபந்தனைகளுடன் மட்டும்தான் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். முதலாவது புலிகள் அரசியல் தீர்வொன்றிற்கு உடன்பட வேண்டும். மேலும் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்குத் தடையாக இருக்கும் புலிகளின் ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இவை இரண்டிற்குமான புலிகளின் அரசியல்த்துறையின் எழுத்துமூல உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படுவது குறித்துப் பேசமுடியும் என்று அவர் கூறினார். யுத்த நிறுத்தம், பேச்சுக்கள், இடைக்கால நிர்வாக சபை ஆகியவற்றிற்கெதிரான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சந்திரிக்கா கட்சியினரின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பணித்துபோயுள்ள ரணில் அரசாங்கம்,நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பு இடைக்கால நிர்வாக சபையின் உருவாக்கத்தினை அனுமதிக்காது என்பதை புலிகளிடம் தெரிவித்திருப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9091
  21. இடைக்கால நிர்வாகத்தினை முறியடித்தே தீருவோம் - மக்கள் விடுதலை முன்னணி சூளுரை திங்கள், 26 வைகாசி 2003 புலிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகத்தை ரணில் அரசு வழங்க முற்படுமானால் அதனை முறியடித்தே தீருவோம் என்று தீவிர இனவாத இடதுசாரிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி சூளுரைத்திருக்கிறது. செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, இலங்கையின் ஒற்றையாட்சி யாப்பிற்கெதிராகச் சென்று புலிகளின் கோரிக்கையினை ரணில் அரசு நிறைவேற்றுமானால், அதனைத் தடுத்து நிறுத்த தனது கட்சி அனைத்து வழிகளிலும் போராடும் என்று கூறினார். வடக்குக் கிழக்கிற்கான இடைக்கால நிர்வாகத்தினை வழங்குவது, நாட்டைப் பிரிப்பதற்கு ஒப்பானது என்பதுடன் சிங்கள மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் நலன்களுக்கும் விரோதமானதுடன், அவர்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பதாகும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா, புலிகளுக்கு நாட்டைத் தாரைவார்த்துக்கொடுக்கும் ரணில் அரசின் முடிவை முறியடித்து விடுவார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=9072
  22. அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களை முறியடித்து, இந்தியாவின் ஸ்த்திரத்தனமையினைக் காப்பதற்காக யுத்த நிறுத்தம் முறியடிக்கப்பட வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 8, வைகாசி 2003 அமெரிக்க ஏகதிபத்தியவாதிகளின் நலன்களைக் காக்கவும், இந்தியாவைப் பலவீனப்படுத்தவுமென்று உருவாக்கப்பட்டிருக்கும் யுத்த நிறுத்தம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கூறியிருக்கிறது. நடந்துவரும் பேச்சுக்களை உடனடியாக நிறுத்தி, புலிகளை இராணுவ ரீதியில் முற்றாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதி சந்திரிக்காவின் கட்சியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி வருகின்றன. தமிழர்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதை முற்றாக எதிர்த்துவரும் இக்கட்சி, இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், இருப்பது பொருளாதாரப் பிரச்சினையே என்றும் கூறிவருகிறது. மேலும் தமது கட்சியின் கீழ் உருவாக்கப்படும் சோசலிஸ் அரசே இப்பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என்றும் அது கூறுகிறது. சரித்திர ரீதியில் தீவிர இந்திய எதிர்ப்புவாதக் கட்சியாக அறியப்பட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் திடீர் இந்திய விசுவாசம், அது இந்தியாவினால் களமிறக்கப்பட்டிருப்பதையே காட்டுவதாக ரணில் அரசின் முக்கியஸ்த்தர்கள் கூறுகிறார்கள். யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி, நாட்டில் குழப்பகரமான நிலைமையினை உருவாக்குவதன் மூலம், சந்திரிக்காவினூடாக‌ பேச்சுக்களை நிறுத்தி, உடனடியான போரிற்குள் இலங்கையைத் தள்ள இந்தியா, மக்கள் விடுதலை முன்னணியூடாக முயல்வதாகவும் கருதப்படுகிறது. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8942
  23. கடற்புலிகளுக்கான சுதந்திர கடல்வழிப் பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது கண்காணிப்புக்குழு ‍ கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய், 6 வைகாசி 2003 கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான மோதல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு கேட்டுக்கொண்டிருப்பதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இறையாண்மையுள்ள நாடொன்றின் கடற்படை தனது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கோருவது அந்நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் விடப்பட்டிருக்கும் சவால் என்று கூறியிருப்பதோடு இவ்வாறு செய்வது கடற்புலிகளின் தங்குதடையின்றிய கடல் வழிப் போக்குவரத்திற்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு வசதிகள் செய்துகொடுத்திருப்பதாகவும் கூறுகிறது. இதேவேளை அரசால் உயர் பாதுகாப்பு வலய ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய இராணுவத் தளபதி சதீஸ் நம்பியார் தனது பரிந்துரைகளுடன் கொழும்பை வந்தடைந்திருக்கிறார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8931
  24. மூதூரில் புலிகளின் நடவடிக்கைகளால் நாடு பிளவுடபப்போகிறது என்று கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணி வெள்ளி, 25 சித்திரை 2003 மூதூரில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் நாடுபிளவுபடப்போவதாகவும், ரணில் அரசாங்கமும் நோர்வே நடுநிலையாளர்களும் புலிகளின் நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவிவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் கிழக்கில் முஸ்லீம்களின் பாதுகாப்பும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் முஸ்லீம் உறுப்பினரான அஞ்சான் உம்மா தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியும், தீவிரவாத சிங்கள பிக்குகள் அமைப்புக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8852
  25. கடற்புலிகள் உத்தியோகபூர்வ அமைப்பாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டதை கண்டித்த மக்கள் விடுதலை முன்னணி செவ்வாய்க்கிழமை, 22 சித்திரை 2003 புலிகளின் கடற்பிரிவான கடற்புலிகளை இலங்கையரச கடற்படைக்குச் சமனாக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் இதுகுறித்த விவாதம் ஒன்றிற்காக பாராளுமன்றத்தில் அனுமதி கோரி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருக்கிறது. சமாதான ஊக்குவிப்பாளர்கள் என்கிற முகமூடிக்குள் ஒளிந்துநின்று கொண்டு நோர்வே அரசாங்கமும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் புலிகளின் இன்னொரு பிரிவாகவே செயற்பாடு வருகிறார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறினார். மேலும் சீனாவுக்குச் சொந்தமான மீன்பிடிக் கப்பல் மீதும், இலங்கை இராணுவத்திற்கான வழங்கற் கப்பல் மீதும் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை பக்கச்சார்பானது என்றும் அவர் கண்டித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பிராந்தியத்திற்குள் செயற்பட்டுவரும் கடற்புலிகள் ஒரு நிழல் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ படையணி என்று கண்காணிப்புக் குழு ஏற்றுக்கொண்டுள்ளதனை ரணில் அரசு இதுவரை ஏன் மறுதலிக்கவில்லை என்றும் அவர் கேள்வி கேட்டார். மேலும் புலிகள் ஏழாம் கட்டப் பேச்சுக்களில் பங்குபற்றுவார்கள் என்று தான் நினைக்கவில்லை என்றும், யுத்தம் ஒன்றிற்குத் தயாராகி வருகிறார்கள் என்பதை தான் அனுமானிப்பதாகவும் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8831

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.