Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. சிரச தொலைக்காட்சியின் பிரபல அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான "ட்ருத் வித் சமுதித்த" எனும் நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சிங்களப் பத்திரிக்கையாளரும் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பெரிதும் முரண்பட்டு வந்தவருமான கீர்த்தி ரட்நாயக்க எனும் சுதந்திர ஊடகவியலாளர் பல விடயங்கள் குறித்து தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அவற்றில் சில முக்கியமான தகவல்களை இங்கே பகிர்கிறேன். துணைவேந்தர் ரவீந்திரநாத்தைக் கருணாவுடன் சேர்ந்து பிள்ளையான் எதற்காகக் கொன்றான்? வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவிகளைக் கடத்திச் சென்று பாலியல்வன்புணர்விற்கு உள்ளாக்கிய பிள்ளையானையும் கருணாவையும் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார். தம்மீதான விமர்சனங்களை தடுப்பதற்காகவே கருணாவும் பிள்ளையானும் இணைந்து அவரைக் கொழும்பிலிருந்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர் என்று கீர்த்தி கூறுகிறார். கருணா இலண்டனுக்குத் தப்பியோடிய காலத்தில் பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி நேவி சம்பத் என்று அழைக்கப்பட்ட கடற்படை அதிகாரியொருவருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் கொழும்பில் இருந்த பல தமிழ் வியாபாரிகளைக் கப்பத்திற்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்கிறான் என்று அவர் கூறுகிறார். 2006 ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரி எனும் பொய்யான கடவுச் சீட்டுடன் இங்கிலாந்திற்குக் கருணாவை கோத்தா அனுப்பிவைக்க, அவன் அங்கு சில மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத் தக்கது. புலிகளுடன் இருந்த காலத்தில் வெறும் எடுபிடியாளாகச் செயற்பட்டு வந்த பிள்ளையான், அவர்களுக்காக உழவு இயந்திரங்களை ஓட்டுவது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வது போன்ற வேலைகளையே செய்துவந்திருக்கிறான். கருணா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கத் தொடங்கியதன் பின்னரே பிள்ளையான் எனும் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. மிகவும் கொடூரமானவன் என்று சில காலத்திலேயே பெயரெடுத்துவிட்ட பிள்ளையான் இராணுவ புலநாய்வுத்துறையினருடன் சேர்ந்தியங்கி வந்தான். இலங்கையில் இருந்து கருணா லண்டனிற்குத் தப்பியோடிய இடைவெளியைப் பாவித்துக்கொண்ட பிள்ளையான், தன்னை ராஜபக்ஷ சகோதரர்களுடனும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். அவ்வாறே இராணுவப் புலநாய்வுத்துறையின் ஒரு பிரிவு இவனைத் தமது தேவைகளுக்காகப் பாவிக்கத் தொடங்கியிருந்தது. கருணா மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டபோது பிள்ளையான் அடைந்திருந்த அசுர வளர்ச்சி கருணாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. மாமனிதர் ரவிராஜை பிள்ளையானும் கருணாவும் எதற்காகக் கொன்றார்கள் ? கொழும்பிலிருந்த சில தமிழ் வர்த்தகர்கள் அக்காலத்தில் புலிகளுக்கு பணவுதவிகளைச் செய்துவருகின்றனர் என்பதை கோத்தாபய அறிந்துவைத்திருந்தான். ஆகவே நாட்டின் பாதுகாப்பு என்கிற போர்வைக்குள் கொழும்பில் இயங்கிவந்த பிரபல தமிழ் வர்த்தகர்களை இலக்குவைத்து கடத்தல்களில் ஈடுபடுமாறும், கப்பம் கோருமாறும் கோத்தபாயவும், பசில் ராஜபக்ஷவும் பிள்ளையானையும் அவனோடு இயங்கிவந்த கருணா, சாந்த கஜநாயக்க மற்றும் ஹெட்டியாரச்சி எனும் விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகளை பணித்தார்கள். அதன்படியே கொழும்பில் பல தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். சிலர் பாரிய கப்பத்தொகை செலுத்தப்பட்டபின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இராணுவ பாதுகாப்புடன் பவணிவந்த பிள்ளையான் வெளிப்படையாகவே தமிழ் வர்த்தகர்களைக் கடத்திச் சென்றுகொண்டிருக்க, இதனைத் தடுப்பதற்காக பல தமிழ் வர்த்தகர்கள் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்களையும் மீறி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான நடராஜா ரவிராஜிடம் பிள்ளையானின் கடத்தல் மற்றும் கப்பம் கோரல்களுடனான படுகொலைகளைப்பற்றி முறையிட்டிருந்தனர். வர்த்தகர்களின் வாக்குமூலங்கள், சாட்சியங்கள், தகவல்கள் அடிப்படையில் முக்கியமான அறிக்கையொன்றினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ரவிராஜ் தயாரித்து வந்திருந்தார். பாராளுமன்றத்தில் ரவிராஜினால் வெளிப்படையாகவே இத்தகவல்கள் வெளிக்கொணரப்படுமிடத்து இக்கடத்தல்களுடனான தமது தொடர்புகள் வெளிவரும் என்று அஞ்சிய கோத்தாபாயவும், பசில் ராஜபக்ஷவும் ரவிராஜைக் கொல்லுமாறு பிள்ளையானுக்கு உத்தரவிடுகின்றனர். ரவிராஜைக் கொல்வதற்காக பிள்ளையான் ஆயத்தப்படுத்தி வருகிறான் என்பதை புலநாய்வுத்துறையினரூடாக அறிந்துகொண்ட கீர்த்தி, ரவிராஜைச் சந்திப்பதற்காக பஸ்டியான் மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று தான் அறிந்தவற்றைக் கூறி, "இன்னும் ஒரு வாரத்திற்குள் பிள்ளையான் உங்களைச் சுட்டுக் கொல்லப்போகிறான்" என்று எச்சரித்திருக்கிறார். இதற்கான சாட்சியாக சத்துரிக்கா ரணவக்க எனும் ரவிராஜின் உதவியாளர் இருக்கிறார் என்றும் கீர்த்தி குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிட்டவாறே சரியாக 8 நாட்களில் பிள்ளையானும், நேவி சம்பத்தும் இணைந்து கொழும்பு நகரில் தனது பிரத்தியேக வாகனத்தில் அலுவலகம் சென்றுகொண்டிருந்த ரவிராஜை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்கின்றனர். கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் 5000 கோடி சொத்துக்களைச் சுருட்டிய போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா கொழும்பில் பிரபலமான தமிழ் வர்த்தக நிறுவனமான கலா ட்ரேடர்ஸின் உரிமையாளரான நடராஜா சிறீஸ்கந்தராஜாவைக் கடத்திச் சென்று படுகொலைசெய்து, அவரது மனைவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, 5000 கோடி பெறுமதியான சொத்துக்களை போர்க்குற்றவாளியான சவேந்திரசில்வா வளைத்துப்போட்டிருக்கிறான் என்று கீர்த்தி கூறுகிறார். பிள்ளையான், கருணா மற்றும் நேவி சம்பத் ஆகியோர் மூலம் இக்கடத்தலினைச் செய்த சவேந்திர சில்வா, தனது பாதாள உலகக் கும்பல் ஒன்றின் தலைவனூடாக வர்த்தகரின் மனைவியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உடபடுத்தினான் என்று கீர்த்தி மேலும் கூறுகிறார். அக்குரஸை மற்றும் கெப்பிட்டிக் கொல்லாவைக் குண்டுத்தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு பங்குனியில் தென்மாகாணத்தின் அக்குரசைப் பகுதியில் இடம்பெற்ற இஸ்லாமியர்களின் மத வழிபாடொன்றின்போது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு இன்னும் 35 பேர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்று அரசு உடனடியாக அறிவித்திருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டு மகிந்தவின் ஆதரவாளரான ஜானக்க பண்டார தென்னக்கோன் எனும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்திலிருந்தே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வன்னியில் நடக்கும் போரின் அகோரத்தைத் திசைதிருப்பவே மகிந்த இத்தாக்குதலை தெற்கில் நடத்தியதாகவும் கீர்த்தி கூறுகிறார். 2006 ஆம் ஆண்டு ஆனிமாதம் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவை பஸ் குண்டுத் தாக்குதலை நடத்தியதும் மகிந்தவே புலிகளை முற்றாக அழிக்க தன்னை உந்தித் தள்ளிய தாக்குதல் இது என்று இத்தாக்குதல் குறித்து மகிந்த பலவிடங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறான். 2006 ஆம் ஆண்டு ஆனி 15 ஆம் திகதி பயணிகள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர்த் தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடந்தவுடனேயே அமெரிக்காவும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் இத்தாக்குதலுக்குப் புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தனர். பல சர்வதேச ஊடககங்களில் முக்கிய செய்தியாக இது வலம்வந்ததுடன் தமிழர்மீதான முற்றான போரிற்கும் இத்தாக்குதலை ஒரு காரணமாக மகிந்த காட்டிவரத் தொடங்கினான். ஆனால் இத்தாக்குதலே மகிந்தவினாலேயே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கீர்த்தி கூறுகிறார். அநுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மகிந்தவின் கொலையாளிகள் இத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே மகிந்தவின் ஆதரவாளர்கள் இத்தாக்குதல் குறித்த தகவல்களை கவலையீனமாக வெளியே கசியவிட்டதாகவும் இதன்மூலமே மகிந்தவின் இத்திட்டம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் கீர்த்தி கூறுகிறார். இத்தாக்குதல் நடந்தபோது தமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறியது நினைவிருக்கலாம். உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதலுடன் பிள்ளையான் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கிறான் இத்தாக்குதல் நடந்தவுடன் கோத்தாபாயவிற்குச் சார்பான லங்கா கார்டியன் பத்திரிக்கையும், கோத்தாவின் ஆலோசகரான ரொகாண் குணவர்த்தனவும் இத்தாக்குதலை ஐஸிஸ் அமைப்பே நடத்தியதாக கூறியிருந்தனர். அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையினை இப்பத்திரிக்கையும், ரொகான் குணவர்த்தனவுமே காவி வந்தனர். 2021 இல் இவ்வறிக்கை வெளியாகியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கான முஸ்த்தீபுகள் சில வருடங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதற்காகத் தயார் செய்யப்பட்ட பிள்ளையானுக்கு மாதம் தோறும் 35 இலட்சம் ரூபாய்களை இராணுவப் புலநாய்வுத்துறை சம்பளமாகச் செலுத்திவந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய துணை ராணுவக்குழுவான ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பின் அன்றைய முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் உதவியாளராகச் செயற்பட்டு வந்த ஒருவரின் மகனே ஆசாத் மெளானா. இவனுக்கும் இந்தியாவின் ரோ அமைப்பிற்கும் இடையே நெருக்கமான உறவுகள் இருந்திருக்கின்றன. இதனால் இவன் அடிக்கடி இந்தியாவிற்குப் போய்வந்திருக்கிறான். இவனூடாகவே பிள்ளையானை இத்தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கிறது ரோ.. குண்டுத்தாக்குதலுக்குத் தேவையான மேலங்கிகள், குண்டுகள் என்பன இந்தியாவினாலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு இராணுவப் புலநாய்வுத்துறையினரின் உதவியுடன் குறித்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் நடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல்கள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டே இந்திய ரோ, இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறை மற்றும் சுரேஷ் சாலேயின் கீழ் வழிநடத்தப்பட்ட பிள்ளையான் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலினை நடத்தினார்கள். இலங்கையில் கோத்தா ஜனாதிபதியாவைதையும், இந்தியாவில் மோடி மீண்டும் பிரதமராவதையும் உறுதிப்படுத்துவதற்காகவே இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இத்தாக்குதலுடன் ரணில் விக்கிரம‌சிங்கவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. கொழும்பில் இதுகுறித்து நடந்த ரகசியச் சந்திப்பொன்றில் ரணில், பிள்ளையானின் அடியாட்களில் மிகவும் கொடூரமானவன் என்று அறியப்படும் இனியபாரதி மற்றும் இராணுவப் புலநாய்வுத்துறையின் சுரேஷ் சாலே ஆகியோர் இத்தாக்குதல் குறித்து பேசியது குறித்தும் தனக்குத் தெரியும் என்றும் கீர்த்தி மேலும் கூறுகிறார்.
  2. இதற்கெல்லாம் சாட்சியங்கள் இருக்கின்றன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் அண்ணா. அவை தெரிந்துகொண்டுமே இவனுக்கு ஐம்பதினாயிரம் வாக்குகளை வாரி வழங்கினார்கள். பிரதேசவாதத்தினை அபிவிருத்தி எனும் மாயைக்குள் மறைத்துக்கொண்டே இதனைச் செய்தார்கள்.
  3. பிள்ளையான் ‍ பிரதேசவாதத்திற்குள் மறைந்திருந்த மனித குல எதிரி புலிகளியக்கத்தில் சிறுவயதில் இணைந்ததாகவும், தனது தகப்பனார் ஆற்றங்கரையில் மட்டி சேகரித்தே தம்மை வளர்த்ததாகவும், இளமையில் வறுமையிலேயே வளர்ந்துவந்ததாகவும் தன்னை ஒரு சாதாரண எளிமையான மனிதராகக் காட்டிவந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் இயற்பெயர் கொண்ட, மனிதகுலத்திற்கெதிரான இந்த நச்சுப் பாம்பு சேகரித்து வைத்திருக்கும் சொத்துக்களின் பெறுமதி 588 கோடி ரூபாய்கள்! சமூகத்தில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்கள் மீதும், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதும் இவனுக்கிருந்த இயல்பான வெறுப்பும், பகையுணர்வும் கருணா எனும் இனத்துரோகியின் பின்னால் இவன் சிங்களப் பேரினவாதத்தின் முகாமினுள் அடைக்கலம் ஆகியபோது அடக்கமுடியாமல் பீறிட்டுக் கிளம்பியது. ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இயங்கிவந்த வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் இவனாலும், கருணாவினாலும் குறிவைத்துத் தாக்கப்பட்டோ அல்லது கடத்திச் சென்று கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் கொலைசெய்யப்பட்டும் வந்தனர். பத்திரிக்கையாளர் நடேசனை இவனும் கருணாவும் கொன்றதன் ஒரே காரணம் அவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான். அவ்வாறே தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தை நத்தார் திருப்பலியில், ஆலயத்திற்குள் இருந்து சுட்டுப்படுகொலை செய்தது அவர் கருணாவின் பிரதேசவாதத்தினை எதிர்த்து, அவன் நடத்திய கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தார் என்பதற்காக மட்டுமல்ல, அவர்கூட வடபகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதும் தான். பின்னாட்களில் வடபகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு பீடாதிபதியாக வருவதை சகித்துக்கொள்ள முடியாத கருணாவும், பிள்ளையானும் அவரை கொழும்பில் வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தனர். தற்போது பிள்ளையான் எனும் பெயரில் பவனி வந்த மனிதகுலத்திற்கெதிரான இந்த மிருகம் செய்த பாதகச் செயல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. 1. கிழக்கில் பணியாற்றிய வடபகுதியை பூர்வீகமாகக் கொண்ட வர்த்தகர்கள், கல்விமான்கள், பத்திரிக்கையாளர்கள் மீதான கப்பம் அறவிடல், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள். 2. தமிழர் புணர்வாழ்வுக் கழகத்தித் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த, வடபகுதியைச் சேர்ந்த பிரேமினி எனும் பெண்மீது பிள்ளையானும் பிரதேசவாத வெறிபிடித்த, அவனுடைய இன்னும் ஏழு ஏவல் நாய்களும் இணைந்து நடத்திய கூட்டுப் பாலியல் வன்புணர்வும் அதன்பின்னர் அப்பெண்ணை துண்டங்களாக வெட்டி காட்டிற்குள் வீசியெறிந்தமையும். 3. பிரேமினியோடு இவனால் இழுத்துச் செல்லப்பட்ட இன்னும் ஆறு வடபகுதியைச் சேர்ந்த புணர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் அவர்களுக்கான புதைகுழிகளை அவர்களே வெட்டும்படி வற்புருத்தப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் அடித்துக் கொல்லப்பட்டு அக்குழிகளுக்குள்ளேயே புதைக்கப்பட்டமை. 4. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான ரவீந்திரநாத்தை கொழும்பிலிருந்து கடத்திவந்து கிழக்கின் காடுகளுக்குள் சித்திரவதை செய்து படுகொலை செய்தமை. இவரது படுகொலைக்கான காரணம் இவர் வடபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, பிள்ளையானினாலும், கருணாவினாலும் வடபகுதி மாணவிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த கூட்டுப் பாலியல் வன்புணர்வுகள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும், விசாரணைகளைக் கோரியும் வந்தமைதான் என்று சொல்லப்படுகிறது. 5. கடற்படைக் கொலைக்குழுவுடன் இணைந்து பிள்ளையான் நடத்திவந்த கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் குறித்துத் தகவல்களைச் சேகரித்து அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜை கொழும்பில் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அருகில்ச் சென்று சுட்டுக் கொன்றமை. 6. சண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கோத்தாவினால் மிக் வானூர்திகள் கொள்வனவில் செய்யப்பட்ட ஊழல்கள் குறித்து தொடர்ந்தும் பேசிவந்ததனால் அவரைக் கொல்வதற்கு இவனுக்கும் கருணாவிற்கும் கொடுக்கப்பட்ட பணத்தொகை 50 மில்லியன் என்பது குறிப்பிடத் தக்கது. 7. இவனது மாபாதகச் செயல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல அமைந்தது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இவன் தலைமையில் இலங்கையில் பலவிடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட ஆலய மற்றும் விடுதிப் படுகொலைகள். மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் நேரடியாகப் பங்காற்றியமைக்காக இவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அங்கிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கோத்தபாயவின் மீள்வருகைக்கான தாக்குதல் ஒன்றிற்குத் தயார்ப்படுத்தி, சிறைக்குள் இருந்தவாறே அத்தாக்குதல்களை நெறிப்படுத்தி , கோத்தாவின் வெற்றியை உறுதிப்படுத்தினான். இதற்காக இவனுக்கும் இவனது கொலைக்குழுவிற்கும் வழங்கப்பட்ட பணம் 65 மில்லியன் ரூபாய்கள். திருகோணமலையைச் சேர்ந்த ஜூட் வர்ஷா எனப்படும் சிறுமியைக் கடத்திச் சென்று கப்பம் கோரி பின்னர் படுகொலைசெய்து சாக்கினுள் அடைத்து வீதியில் வீசிச்சென்றது. பின்னர் இதில் ஈடுபட்டவர்களை பொலீசார் கைதுசெய்தபோது, தனது பெயர் வெளியே வந்துவிடும் என்பதற்காக பொலீஸாருக்கு லஞ்சம் கொடுத்து வாகனத்தில் பயணிக்கும்போதே சுட்டுக் கொன்றது. மட்டக்களப்பில் இன்னொரு பெண்ணைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, கிடைக்காது போகவே, அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கொலைசெய்து கிணற்றுக்குள் எறிந்துவிட்டுச் சென்றது. வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்று வந்த தமிழ் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு மிரட்டியது. ஆரம்பத்தில் உஇதனை மாணவர்கள் கண்டுகொள்ளாதுவிடவே பிள்ளையானும் அவனது அடியாட்களும் மாணவிகளின் விடுதிக்குள் நுழைந்து மூன்று வடபகுதியைச் சேர்ந்த மாணவிகளைக் கடத்திச் சென்று கூடுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகி ஏனைய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அச்சுருத்தல் விடுத்தது. இவற்றினை விடவும் இவனாலும், இவனது கொலைக்குழுவான ட்ரிபோலிப் பிளட்டூனினானும் நடத்தப்பட்ட கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள் நூற்றுக்கணக்கானவை. புலிகளியகத்திலிருந்து பிரிந்து பிரதேசவாத வெறியும், பணத்தாசையும் கொண்டு இவன் புரிந்துவந்த மனிதகுலத்திற்கெதிரான செயல்களின் பட்டியல் மிக நீளமானது. ஒரு சில பிரபல பெயர்களையும், சம்பவங்களையும் தவிர பெயர் தெரியாத பல தமிழர்களை இவன் கொன்றிருக்கிறான். ஆனாலும், வடபகுதித் தமிழர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து , கிழக்கு மாகாணத் தமிழர்களை தலை நிமிரச் செய்து, கிழக்கின் விடிவெள்ளியாக இவன் இருப்பதாக நினைத்த கிழக்குத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இவன் சிறையில் இருக்கும்போதே பாராளுமன்றத் தேர்தலில் ஐம்பதினாயிரம் வாக்குகளுக்கு மேலாக வாரி வழங்கி, இவனைத் தமது தமது வரலாற்று நாயகனான முடிசூடி அழகுபார்த்தார்கள். பிரதேசவாதம் கண்களை மறைக்க, அதனை அபிவிருத்தி எனும் வெற்றுக்கோசத்திற்குள் மறைத்து மனிதவுருவில் வலம்வந்த நச்சுப்பாம்பைத் தமது தலைமகனாக ஏற்றி அகமகிழ்ந்தார்கள். தாம் மகுடம் சூட்டி, அழகுபார்த்து, உச்சிமோர்ந்து, பரவசமடைந்து, பல்லக்குத் தூக்கிய இந்த மிருகத்தின் கொடுஞ்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன இப்போது. இனியாவது இவனும் இவனது சகாவான கருணாவும் பேசிவந்த பிரதேசவாதம் என்பது போலியானது என்பதை இவர்கள் உணர்வார்களா? https://www.youtube.com/watch?v=hQk-7Hp5EFM https://www.youtube.com/watch?v=p0cZ33gAi4c
  4. நான் அறிந்தவரையில் சுமந்திரன் உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்றங்களை விசாரிக்கலாம் என்று கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் நல்லிணக்க அரசுடன் நெருக்கமாக இருந்த காலத்தில் வெளியக உதவியுடனான உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கு மைத்திரி - ரணில் அரசு ஒத்துக்கொண்டபோது, அதனை சுமந்திரன் ஆதரித்தார் என்று நினைவு. இச்சந்தர்ப்பத்தைத் தவிர அவர் சர்வதேச விசாரணையே வேண்டும் என்று கோரிவந்தார் என்று நினைக்கிறேன். இனக்கொலை எனும் பதத்தினைப் பாவிப்பதில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. நடந்தது இனக்கொலை தான் என்று நாம் நபினாலும் அதனை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரம் இல்லை அல்லது அதனை உறுதிப்படுத்தப் போய் நாம் மேலும் பலவீனமாக்கப்படுவோம் என்பதற்காக தான் அப்பதத்தினைப் பாவிக்கப்போவதில்லை என்று கூறியிருந்தார் என்று நினைக்கிறேன். சுமந்திரனின் இவ்வாறான கொள்கைகளுக்கான அடிப்படைக் காரணம் அவர் தனிநாடு என்பதனை ஒருபோதும் ஆதரிக்கவில்லை அல்லது அது சாத்தியமில்லை என்று நினைப்பதனாலோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுமந்திரனின் புலிகளுக்கெதிரான நிலைப்பாட்டிற்கும் அவரின் இக்கொள்கைகளுக்கும் தொடர்பிருக்கின்றது என்று நான் நம்பவில்லை. எமது இனத்தின் இருப்பைப் பற்றி நாமே பேசாதுவிட்டால் வேறு எவர்தான் பேசுவார்கள்?
  5. இது எனக்கும் நடந்தது. நான் பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக தமிழ் யூனியனிலிருந்தும், தமிழ் மாணவர்களின் பட்ஜ் ட்ரிப் உள்ளிட்ட இன்ன பிற நிகழ்வுகளிலிருந்தும் ஒதுக்கிவிட்டார்கள். கூடவே "அன்டி" ரஞ்சித் எனும் நாமமும் எனக்குச் சூட்டப்பட்டது. கூட்டமாகக் கதைத்துக்கொண்டிருக்கும் என்னுடன் கூடப்படித்தவர்களே "அன்டி வாறான்" என்று பேச்சை மாற்றிய பல தருணங்களை நான் சந்தித்திருக்கிறேன். ஒரு மூன்று அல்லது நான்கு சக மாணவர்களைத் தவிர வேறு எவருமே என்னுடன் பேசியதில்லை. பகிடிவதையினை ஏற்றுக்கொள்ளாதது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. நீங்கள் கூறியதுபோலவே, என்னை பிந்தொடர்ந்து வந்து, பஸ்ஸில் ஏறி கட்டுப்பெத்தை வரை வந்து மிரட்டியவர் என்.டி.டி எனும் கற்கை நெறியைச் சார்ந்த, மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவானந்தன் என்பவர். அவர் படிக்கும் கற்கை நெறிக்கும் எனது பொறியியல் கற்கை நெறிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அன்று தன்னுடன் வரவில்லையென்றால் "உனக்குக் கோஸ் வேர்க் தரமாட்டேன்" என்று கூட கூறிப்பார்த்தார். நாம் மசியவில்லை. சில வாரங்களுக்குப் பின்னர் அவரை பல்கலை வாயிலில் சந்தித்தேன். "நீ படிப்பது என்.டி.டி, நீ எப்படி எனக்கு கோஸ் வேர்க்கில் உதவுவாய்?" என்று அவரைப் பார்த்துக் கேட்டேன். பதில் இல்லை. இவரைப்போன்றே ரஜீவ் என்று என்னுடன் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரியில் கல்விகற்று மொறட்டுவையில் குவான்ட்டிட்டி சேவயரிங் படித்துவந்த எனது முன்னால் நண்பரும் என்னை துன்புறுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். "நீ என்னுடன் படித்தவன் தானே? என்னைத் தெரியவில்லையா உனக்கு ?" என்று கேட்டேன். தெரியாதவர் போலவே நடந்து கொண்டார். ராக்கிங் காலம் முடிந்தவுடன் ஒருநாள் கன்டீனில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது வந்து முன்னால் அமர்ந்து, "மச்சான்" என்றார். "என்னட்ட அடிவாங்க முதல் போயிடு" என்று சொல்லவும், கண்கள் கலங்கி அருகில் இருந்த எனது நண்பனிடம், "பாரடா இவனை, ராக்கிங்கில செய்ததையெல்லாம் வைச்சுச் சாதிக்கிறான்" என்று முறையிட்டார். "அவனைப் போகச் சொல்லு" என்றுவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டேன். இறுதிவரை அவருடன் பேச விரும்பவில்லை. என்னுடன் பாடசாலைக் காலத்தில் படித்தவர்கள், என்னை நன்றாக அறிந்திருந்த உறவினர்கள் என்று பலர் என்னை பகிடிவதைக்கு உட்படுத்த விரும்பினார்கள். ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இதற்கெல்லாம் என்னிடம் இருக்கும் ஒரே பதில் மனநோய்தான். அப்படியில்லையென்றால் இவர்களால் இதனைச் செய்ய முடியாது.
  6. பகிடிவதை என்பது இன்னொரு மனிதன் மீது, தனக்கிருக்கும் வக்கிரத்தை, சீனியர் என்ற தகுதியினை மட்டுமே வைத்துக்கொண்டு கட்டவிழ்த்துவிடுவது என்பது எனது கணிப்பு. சாதாரண சூழ்நிலையில் ஒரு மனிதன் மீது செய்ய முடியாத சில வக்கிரங்களை சீனியர் எனும் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட பதவியினை வைத்து அவிழ்த்துவிட்டு சுய இன்பம் காணுவது. இது ஒரு மனோவியாதி என்பதைத்தவிர வேறு வழியில் விளக்கமுடியாது. 1995 இல் இருந்து 2000 வரை மொறட்டுவை பல்கலைக் கழகத்தில் நான் அனுபவித்த, நேரால் கண்ட வக்கிரங்களில் இருந்து நான் உணர்ந்துகொண்டது இதனைத்தான். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வரும் தமிழ் மாணவர்களும், தெற்கின் கிராமப் புரங்களில் இருந்து வரும் சிங்கள மாணவர்களும் பகிடிவதைக்கு அதிகம் முகம் கொடுப்பதோடு, இவர்களே அடுத்தவருடம் நடக்கும் பகிடிவதைகளுக்குத் தலைமையும் தாங்குவார்கள். நான் கொழும்பு மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தமையினால் என்மீது விசேட கவனம் செலுத்தினார்கள் எனது சீனியர்கள். "கொழும்பெண்டால் பெரிய கொழுப்போ உனக்கு, உனக்கிருக்கு, மாட்டுவாய்தானே, அப்ப பார்த்துக்கொள்ளுவோம்" என்று ன் நான் அவர்களின் பிடியில் இருந்து நழுவித் தப்பித்துச் சென்ற தருணங்களில் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இரண்டுமாத காலம் அவர்களின் வக்கிரங்களைத் தாங்கிக்கொள்ளவில்லை என்பதற்காகவே வெகு சிலரைத் தவிர‌ பல தமிழ் மாணவர்கள், எனது ஆண்டில் படித்தவர்கள் உட்பட, இன்றுவரை என்னுடன் பேசுவதில்லை. பல்கலை முடிந்தவுடன் நேராக வீட்டிற்குச் சென்றுவிடும் வசதி எனக்கிருந்தது. ஆனால் வட கிழக்கில் இருந்து வந்திருந்த பல மாணவர்களுக்கு அந்த வசிதியில்லை. ஆகவே சீனியர்கள் கட்டளையிட்டதற்கு அமைய மாலை 5 மணிக்கெல்லாம் அவர்களின் சித்திரவதைக் கூடங்களில் தவறாது ஆஜராகி, வக்கிரங்களைத் தாங்கி, உடலிலும் மனதிலும் வலிகளைச் சுமந்து தமது அறைகளுக்கு வரும் பல தமிழ் மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த வக்கிரங்களை வாரி வழங்குவதில் மாணவர்களிடையே வர்க்க வேறுபாடு இருப்பதில்லை. எஞ்சினியரிங்கில் இருந்து ஆரம்பித்து, குவான்ட்டிட்டி சேவயரிங், என் டி டி என்று எல்லாப் பாடநெறிகளிலும் இது நடந்தது. சில வேளைகளில் எஞ்சினியரிங் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, அறைதிரும்பிக்கொண்டிருக்கும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் மாணவர்களோ அல்லது என்.டி.டி மாணவர்களோ தமது பங்கிற்கு இழுத்துச் செல்வதும் நடந்திருக்கிறது. எஞ்சினியரிங்கிற்கு வரும் மாணவர்களை குவான்ட்டிட்டி சேவயரிங் அல்லது என்.டி.டி மாணவர்களே அதிகம் கொடுமைப்படுத்துவது நடந்திருக்கிறது. இப்படி இவர்கள் நடந்துகொள்வதற்கு தமக்குக் கிடைக்காத பொறியியல்ப் பீடம் இவனுக்குக் கிடைத்துவிட்டதே என்கிற பொறாமையும் காரணமாக இருக்கலாம். இன்னும் சில சீனியர்களுக்கு பகிடிவதைக் காலமே பெண்களுடன் பேசுவதற்குக் கிடைத்திருக்கும் பொற்கால‌ம். ஆகவே சொற்களால் பெண்களைச் சித்திரவதை செய்து சுய இன்பம் காணுவார்கள். சாதாரண சூழ்நிலையில் தம்மைப் பெண்கள் ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை என்கிற நிலையில் பகிடிவதைக் காலத்தை தமது வக்கிரங்களைக் கொட்டும் காலமாகப் பாவிப்பது இவர்களின் வழமை. வரப்பிரகாஷின் படுகொலையின்போது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திலிருந்து பகிடிவதைக்குப் பெயெர்பெற்ற வக்கிரப் புத்தி கொண்டோர் ஒரு பேரூந்தினை வாடகைக்கு அமர்த்தி பேராதனைக்குச் சென்றுவந்தார்கள். அப்படிச் சென்றுவந்தவர்களில் எனது ஆண்டில் படித்துக்கொண்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவருமான ஒருவரும் இருந்தார். பகிடிவதையின் உச்சமான பாலியல் வதையினைப் புரிவதில் இவர் பிரசித்தமானவர். பாலியல் வன்புணர்வைத்தவிர மீதி பாலியல் வக்கிரங்கள் இவரது சித்திரவதைக் கூடத்தில் நடைபெறும். வலியில் மாணவர்கள் அலறும்போது சிரித்துக்கொண்டு அதனை அனுபவிப்பவர். இவரது பிடிக்குள் அகப்பட்ட சில மாணவர்களை பகிடிவதையினை ஆதரிக்கும் இன்னும் சில மாணவர்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறார்கள். கொழும்பிலிருந்து தெரிவான சில மாணவர்கள் மீது இவர் தெரிரியாமல் கையை வைக்க, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, மயூராபதி அம்மண் கோயில் என்று பலவிடங்களில் அடிவாங்கியவர். 1990 ஆம் ஆண்டில் என்று நினைக்கிறேன். முன்னர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் உயர்தரக் கணிதத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய ஆசிரியரான பிரேம்நாத்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றார். பிரேம்நாத்திடம் முன்னர் கல்விகற்ற ஒரு பழைய மாணவர் அப்போது பேராதனையில் பொறியியல்ப் படித்துக்கொண்டிருந்தார். பிரேம்நாத்திற்கும் தனக்கும் இருந்த பழைய பகமை ஒன்றிற்காக அந்த புதிய மாணவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்து தனது வக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டார். பகிடிவதையின்போது இரு முழங்கால்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பார்த்தீபன் என்கிற அந்த புதிய மாணவர் அனுமதிக்கப்பட்டார். தன்னால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்ட பார்த்தீபன் இறந்துபோகலாம் என்கிற செய்தியை தனது சகமாணவர்கள் மூலம் சித்திரவதை செய்த மாணவர் அறிந்துகொண்டபோதிலும், அவரைச் சென்று பார்க்கவோ, தனது ஈனச்செயலுக்கு மன்னிப்புக் கோரவோ அவருக்கு மனம் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல பார்த்தீபன் உடல்நிலை மோசமாகி வருவதாகவும், இதற்காக சித்திரவதை செய்தவர் சிறை செல்ல நேரலாம் என்கிற செய்திகள் பரவத் தொடங்கியபோது வேறு வழியின்றி வைத்தியசாலைக்குச் சென்றார். ஆனால் மன்னிப்புக் கோர அவரது மனம் முன்வரவில்லை. சற்றுநேரம் அமைதியாக நின்றுவிட்டு, கூடவிருந்த சொந்தங்களின் மனக்குமுறலை கேட்டுவிட்டு வந்துவிட்டார். பார்த்தீபன் நீண்டகால சிகிச்சையின் பின்னர் பிழைத்துக்கொண்டார். அன்று மனோவியாதியால் சக மாணவனை சித்திரவதை புரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிய அந்த மாணவர் இன்று குடும்பத்துடன் சென்று புத்த சமயத்தைத் தழுவி, கண்டியில் வாழ்ந்து வருகிறார். இவரது தந்தையார் எனது தகப்பனாரின் சொந்தச் சகோதரன் என்பது வேறு விடயம். இவர்கள் வக்கிரம் கொண்டவர்கள். மனோவியாதியினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
  7. யுத்தம் நோக்கி நாட்டை இழுத்துச் செல்ல ஆரம்பித்திருக்கும் சிங்களப் பேரினவாதம் தை 21, 2004 கடந்த வாரத்தில் இரு முக்கிய விடயங்கள் இலங்கையில் நடந்தேறியிருந்தன. முதலாவது, கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சியில் புலிகளை உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சந்தித்தனர். இரண்டாவது நிகழ்வாக சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சிக்கும் தெற்கின் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அமையப்பெற்றிருந்தது. இவ்விரு நிகழ்வுகளுமே என்னைப்பொறுத்தவரை இலங்கையின் அரசியல் வரலாற்றில், குறிப்பாகத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக இருந்தன என்று நம்புகிறேன். இவை இரண்டையும் ஒன்றாக உற்று நோக்கும்பொழுது இலங்கையில் வடக்குக் கிழக்கு என்றும் தெற்கு என்றும் இரு நிர்வாக பிராந்தியங்களாக பிரிக்கப்படும் சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பதாகவே என்னால் உணர முடிகிறது. தெற்கஎன்றும், இணைந்த வடக்குக் கிழக்குப் பிராந்தியம் என்றும் மக்கள் பேச ஆரம்பித்திருப்பதையும் என்னால் காணக்கூடியதாக இருக்கிறது. இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினரின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பானது சர்வதேச சமூகம் வடக்குக் கிழக்குப் பகுதியினை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனிப்பட்ட நிர்வாக அலகாக ஏற்றுக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. இதுவரை காலமும் இலங்கை கை அரசாங்கத்தினூடாகவோ அல்லது இதற்கென்று உருவாக்கப்பட்ட தனியான அமைப்பு ஒன்றிற்கூடாகவோதான் இலங்கைக்கான உதவிகளைச் செய்துவந்திருந்த சர்வதேசம், தற்போது புலிகளுடன் நேரடியாகவே உதவிகள் குறித்துச் செயற்படுவதற்கு ஆயத்தமாகியிருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. சந்திரிக்காவின் கட்சிக்கும், இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்த புலிகளின் தத்துவாசிரியர் திரு அன்டன் பாலசிங்கம், "சிங்கள பெளத்த இனவாதிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எனும் பதாகையின் கீழ் மீள ஒருங்கிணைவதையே இதுகாட்டுகிறது. இதன் மூலம் நாட்டில் சமாதானம் ஏற்படுவதைக் குழப்புவதற்கும், இனப்பிரச்சினைக்கு சுமூகமான அரசியல்த் தீர்வைக் காண்பதைத் தடுப்பதற்குமே இனவாதிகள் ஒருங்கிணைகின்றனர் என்பது தெளிவாகிறது" என்று கூறினார். வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்களுக்கான புணருத்தாபன பணிகளுக்கு உதவி வழங்குவதற்காக புலிகளுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்படும் நோக்கிலேயே பதினொரு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும், ஏழு சர்வதேசத் தொண்டர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கிளிநொச்சியில் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழச்செல்வனையும் அவரது தூதுக்குழுவினரையும் சந்தித்திருந்தனர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட நாடுகளான ஜ‌ப்பான், சுவீடன், டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, கனடா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் , உதவி வழங்கும் சர்வதேச அமைப்புக்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, யுனிசெப், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி அமைப்பு, மற்றும் சீடா உள்ளிட்ட 7 அமைப்புக்களும் கலந்துகொண்டன. இச்சந்திப்பினை அமெரிக்காவும் இந்தியாவும் பகிஸ்கரித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. தெற்கில் சிங்களத் தலைமைகளிடையே தோன்றியிருக்கும் பலப்பரீட்சை வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தடைக்கலாக அமையக் கூடாது என்பதை கிளிநோச்சியில் தம்மைச் சந்திக்க வந்திருந்த உத‌வி வழங்கும் நாடுகளினதும், அமைப்புகளினதும் பிரதிநிதிகளிடம் புரியவைப்பதில் தமிழ்ச்செல்வன் வெற்றி கண்டிருந்தார். "தமிழ் மக்களுக்கான உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பாடாது இழுத்தடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் அதேவேளை, மீள்குடியேற்றம், புணர்வாழ்வு, மீள்கட்டுமானம் ஆகியவற்றிலும் உடனடிக் கவனம் செலுத்தப்படுவது அவசியம்" என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். "எமது மக்களும் சமாதான முயற்சிகளின் முழு ஈட்டுபாட்டோடு கலந்துகொள்வதை ஊக்குவிப்பதற்கு இவ்வாறான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியமானது. இதனை அடைந்துகொள்ளும் முகமாக நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார். உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் புலிகளுடன் நேரடியாக தொடர்புபடுவதை இலங்கையில் இருக்கும் ஐரோப்பிய உதவி வழங்கும் நாடுகளின் அமைப்பின் தலைவரான நெதர்லாந்தைச் சேர்ர்ந்த இராஜதந்திரி, வான் டியெஜ் அனுசரித்துப் பேசினார். "வடக்குக் கிழக்கில் வாழும் மக்களுக்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்றன. தெற்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் பலப்போட்டி நிறைவடையும்வரை தமிழ் மக்களைக் காத்திருக்கும்படி கோருவது நியாயமானதல்ல. ஆகவேதான் கிளிநொச்சி சந்திப்பின்போது எமது உதவிகள் கிரமமான முறையிலும், வினைத்திறனுடனும் தமிழ் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவது பற்றிப் பேசினோம்" என்று அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் அடிப்படை நிவாரணப் பணிகளுக்கு சர்வதேச உதவிகள் நேரடியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், இவ்வுதவிகள் தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய செவ்வணே பயன்படுத்தப்படுவதற்கும் ஏதுவாக திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கான செயலகம் ஒன்றினை கிளிநொச்சியில் புலிகள் நிறுவினார்கள். மேலும் மீள்குடியேற்றத் திட்டங்களை ஒருங்கமைத்தல், மீள்கட்டுமானம், புனர்வாழ்வு ஆகிய விடயங்களை துரிதமாக செயற்படுத்துதல் ஆகியவும் இச்செயலக‌த்தின் கடமைகளில் சிலவாகும். தமிழர் தாயகத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றிற்கான பொறுப்பினையும் இச்செயலகமே பார்த்துக்கொண்டது. புலிகளால் முன்வைக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் உத்தியோகபூர்வ குரலாகவும் இச்செயலகம் பணியாற்றும். சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களின் ஆலோசனைகள், உதவிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நிபுணத்துவ உதவிகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து தமிழர்தாயகத்தில் கட்டுமாண அபிவிருத்தியினை முன்னெடுப்பதும் இச்செயலகத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். புலிகளால் உருவாக்கப்பட்ட இச்செயலகத்தின் முக்கியத்துவத்தை சிங்கள இனவாதிகளான சிகல உறுமயவினர் உடனடியாகவே உணர்ந்துகொண்டனர். ஆகவே இச்செயலகம் இயங்குவதைத் தடுப்பதற்கான பிரச்சாரங்கள் அக்கட்சியினால் முன்னெடுக்கப்படலாயின. அக்கட்சியின் உத்தியோகபூர் அறிக்கையில், "தமிழீழத்திற்கான அடிப்படைகளை நிறுவுவதற்கான உதவிகளை உதவி வழங்கும் நாடுகள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டு பணத்தினைக் கொண்டு புலிகள் தமது இராணுவப் பலத்தினை அதிகரித்து வருவதாகவும் சிகல உறுமயவின் அறிக்கை சாடியிருந்தது. "உலகில் எந்தவொரு பயங்கரவாத இயக்கத்திற்குக் கிடைக்காத சிறப்புரிமையும், அந்தஸ்த்தும் இதன் மூலம் புலிகளுக்குக் கிடைத்திருக்கிறது" என்றும் அவ்வறிக்கை சாடியது. தெற்கின் அரசியல் அவதானியொருவர் இச்சூழ்நிலை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், தெற்கில் சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமக்குள் போட்டிகளை வளர்த்துவரும் அதேவேளை சிங்கள இனவாதிகளும் தம்மை ஒருங்கிணைத்துப் பலப்படுத்தி வருகிறார்கள். அவ்வாறே தமிழர்களும் தமது நிலைப்பாட்டினை மேலும் மேலும் உறுதிப்படுத்தி வருகிறார்கள்" என்று குறிப்பிட்டார்.
  8. ஆரம்பத்திலிருந்தே பாலச்சந்திரனைக் கொல்ல இராணுவத்திடம் கோரியது கருணா என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். "இவனை விட்டால், தகப்பன் மாதிரியே மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குவான், ஆகவே கொல்லுங்கள்" என்று கருணா கூறியதாகச் செய்திகள் அப்போது வந்திருந்தன. அதேபோல ரமேஷைக் கொல்லச் சொன்னதும் கருணாதான். ஏனைய தளபதிகள் குறித்து இதுவரை நான் அறியவில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தனது இனத்தைச் சேர்ந்த சிங்களத் தளபதிகளைக் காப்பாற்றுவதாக எண்ணி தனது வளர்ப்பு நாயான கருணாவைக் காட்டிக்கொடுத்து ஈற்றில் தன்னையும் இப்பட்டியலில் சேர்க்க மகிந்த விரும்புவான் என்று நினைப்பது கடிணம். கருணா இவற்றைச் செய்யவில்லை என்று நினைப்பதற்கு அவன் ஒன்றும் உத்தமன் இல்லையே?
  9. அண்மையில் வந்த முகநூல் பதிவொன்றில் இருந்து.................................. பிரபாகரனின் மகனையும் ஏனைய 120 தளபதிகளையும் சுடச்சொன்னது கருணா தான் அவருடைய சகா ஒருவரே அவரை சுட்டார் மகிந்த தரப்பு அதிரடி அறிவிப்பு ஈழப்போர் உக்கிர கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது 120 மேற்ப்பட்ட தளபதிகள் சரணடைந்த சம்பவம் இடம்பெற்றது. சரணடைந்த தளபதிகள் அவர்களின் பிள்ளைகள் என தனித்தனியே அழைத்து செல்லப்பட்டனர். அதன்போது வவுனியா யோசப் முகாமிற்கு அண்மித்த இரகசிய முகாமில் அடைத்து வைக்கப்பட்ட இவர்கள் பெண்கள் வேறாகவும் ஆண்கள் வேறாகவும் பிரிக்கப்பட்டு பெண்களை நிர்வாணமாக்கி ஒரு அறையில் அடைத்து சித்திரவதைகள் இடம்பெற்றது மட்டும் அன்றி பாலியல் கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டது. இதன்போது குறித்த தளபதிகளை உயிரோடு விட்டால் ஆபத்து என கூறிய கருணா, அவர்களை முதலில் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டான். தளபதி ரமேஸ், நடேசன், புலித்தேவன் - இவர்களை சித்திரவதை செய்து உண்மைகளை அறிந்து பின் அனுவனுவாய் சித்திரவதை செய்து கொல்லுமாறு கருணா அம்மான் கோட்டபாய ராஜபக்ச விற்கு தகவல் கொடுக்க பின்னர் அதன்படி நடந்தேறியது. வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதி, போராளிகள் ? வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும். 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி), 5.ஆர்யன் ( செயற்பாடு தெரியாது) 6.பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்), 7.பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ), 8.V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் ) 9.Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி) 10.பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் ) 11.பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை ) 12.பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்) 13.பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது), 14.பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் ) 15.பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்) 16.பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்) 17.பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் ) 18.Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு) 19.எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் ) 20.எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் ) 21.வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் ) 22.கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை) 23.கரிகரன் ( செயற்பாடு தெரியாது) 24.இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் ) 25.இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்) 26.இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி) 27.இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது ) 28.இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது) 29.இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது) 30.இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி ) 31.இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது) 32.இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது) 33.இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்) 34.இசைபிரியா ( ஊடக பிரிவு) 35.ஜவான் ( புலிகளின் குரல் வானொலி) 36.ஜெயராஜ் ( நிதிப் பிரிவு ) 37.காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்) 38.கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்) 39.கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு) 40.கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்) 41கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் ) 42.கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்) 43.கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது) 44.குயிலன் ( இராணுவ புலனாய்வு) 45.குமரன் ( பால்ராஜின் மைத்துனர்) 46.குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி) 47.குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்) 48.லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி ) 49.மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் ) 50.மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி ) 51.மலரவன் (நிர்வாக சேவை ) 52.மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி) 53.மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி) 54.மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு ) 55.மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி ) 56.மோகன் அங்கிள் (கடற்புலிகள் ) 57.முகிலன் (இராணுவ புலனாய்வு) 58.முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி ) 59.நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்) 60.நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் ) 61.நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி ) 62.நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு ) 63.நேயன் (புலனாய்வு) 64.நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை ) 65.நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் ) 66.நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்) 67.நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் ) 68.பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் ) 69.பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்) 70.Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு) 71.Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு) 72.பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு) 73.பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது) 74.பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி) 75.புலித்தேவன் (சமாதான செயலகம்) 76.புலிமைந்தன் (யோகியின் சாரதி) 77.புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க ) 78.புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு) 79.ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்) 80.ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி ) 81.ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை) 82.புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்) 83.Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை) 84.Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி) 85.ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்) 86.ரஜித்தன் (மணலாறு மாவட்டம் ) 87.ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்) 88.S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி) 89.சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்) 90.சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்) 91.செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி ) 92.சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்) 93.சின்னவன் (புலனாய்வு) 94.சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி) 95.Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு) 96.Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு) 97.திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்) 98.திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் ) 99.துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்) 100.வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது) 101.வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்) 102.Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு) 103.Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு) 104.வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி) 105.வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்) 106.வினிதா (நடேசனின் மனைவி ) 107.வீமன் (கட்டளை தளபதி) 108.விபுலேந்திரன் (நிதிப் பிரிவு) 109.யோகன் / சேமணன் (அரசியல் துறை) 110.யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)
  10. ரஸ்ஸியாவின் நிலப்பரப்பை உக்ரேன் ஆக்கிரமித்து வைத்திருப்பது போல டிரம்ப் எனும் கோமாளி கருதுகிறது போலும். ஆக்கிரமிப்பவனை ஆதரித்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவனை போரிற்கான காரணம் என்று அழைப்பதற்கு ஒரு முட்டாள்த்தனமான கோமாளியைத் தவிர வேறு எவரால் இயலும்? ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தையோ அதன் உண்மையான பிரதிநிதிகளையோ அழைக்காமல் ஆக்கிரமிப்பாளனுடன் இந்தியா எனும் இன்னொரு ஆக்கிரமிப்பு வல்லரசு 1987 இல் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் ஒப்பந்தத்திற்கும் நிகரானது இன்று உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை ஏற்றுக்கொண்டு போரினை முடிவிற்குக் கொண்டுவர ஆக்கிரமிப்புச் சர்வாதிகாரியான கொடுங்கோலன் புட்டினுடன் இன்னொரு ஆக்கிரமிப்பாளனான டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை. வெகுவிரைவில் நேட்டோவிற்கு எதிரான போரில் ரஸ்ஸியாவின் பக்கத்தில் நின்றுகொண்டு டிரம்ப் எனும் கோமாளி சண்டையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடும் எந்தவொரு இனமும் அமெரிக்காவின் தயவில்ப் போரிடக் கூடாது என்பதற்கு உக்ரேனின் அனுபவமும் ஒரு பாடம்தான். இரண்டாம் உலகப் போரில் பிலிப்பைன்ஸை விட்டு அமெரிக்கா வெளியேறியபோது ஜப்பானியப் படை அங்கு செய்த பழிவாங்கல்ப் படுகொலகைளும், ஐஸிஸிற்கு எதிரான போரில் குர்திஸ் போராளிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்கா, பின்னர் டிரம்பின் ஆட்சியில் குர்திஸ்களை துருக்கியின் ஆக்கிரமிப்பில் கையளித்துவிட்டு அங்கி வெளியேறிச் சென்றதும் நினைவிற்கு வருகிறது.
  11. பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்ய பாராளுமன்றத் தேர்தல்களைக் கோரும் மக்கள் விடுதலை முன்னணியும், புலிகள் பலம்பெற்று விடுவார்கள் என்பதனால் தேர்தல்களை எதிர்க்கும் இந்தியாவும் தை 12, 2004 இலங்கையில் இருந்துவரும் பிரச்சினையின் உண்மை முகத்தினை தம‌து இரகசிய காய்நகர்த்தல்கள் மூலம் சர்வதேசத்திடம் இதுவரை எடுத்துக் காட்டிவந்த புலிகள் தற்போது வெளிப்ப‌டையாகவே அதனை வெளிக்கொணரும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர். இலண்டனில் தங்கியிருக்கும் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தைச் சந்திக்கச் சென்ற மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான சந்திரசேகரனிடம் பாலசிங்கம் பேசும்போது, தமிழர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்குவதில்லை என்பதில் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு இடையே இருக்கும் போட்டியே தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது என்பதை தற்போது புலிகள் சர்வதேச நாடுகளிடமும், இலங்கையின் இனப்பிரச்சினையில் அக்கறை கொண்ட சர்வதேச அமைப்புக்களிடமும் தாம் வெளிப்படையாகத் தெரிவித்து வருவதாகக் கூறியிருந்தார். சந்திரசேகரனிடம் பேசிய பாலசிங்கம், சர்வதேச நாடுகளிடம் புலிகள் நான்கு விடயங்கள் குறித்து பேசிவருவதாகக் குறிப்பிட்டார். முதலாவது, அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறினாலும், தாம் தொடர்ந்தும் அதனைக் கடைப்பிடிக்க விரும்புகிறார்கள் என்பது. இரண்டாவது, தாம் சமாதானப் பேச்சுக்களை மீளவும் ஆரம்பிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பது. மூன்றாவது பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும், சிக்கலான விடயங்கள் தொடர்பாக அழுத்தமின்றி தீர்மானங்களை எடுக்கவும் வல்லமை கொண்ட சிங்களத் தலைவருடன் மட்டுமே தம்மால் பேசமுடியும் என்பது. நான்காவது, சர்வதேசத்துடன் தாம் நெருங்கிச் செயற்பட ஆர்வ‌மாக இருக்கிறார்கள் என்பது. மேலும், தமிழர்களின் பிரச்சினையினை தேசியப் பிரச்சினையாகக் கருதி, தமது அரசியல்ப் போட்டிகளைக் கைவிட்டு, பிரச்சினைக்கான தீர்வினை இதய சுத்தியுடன் வழங்க முன்வருமாறு சிங்களத் தலைமைமீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று புலிகள் கேட்டிருந்தார்கள். சிங்களவர்களின் நலன்களைப் பேணுவதில் மற்றைய கட்சியைக் காட்டிலும் தாமே சிறந்தவர்கள் என்பதைக் காட்டுவதிலேயே சிங்களத் தலைமைகள் ஆர்வம் காட்டுவதாகவும், இதனாலேயே தமிழர்களின் பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக சமாதான வழிகளில் இதுவரை எடுக்கப்பட்டுவந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் புலிகள் சர்வதேசத்திடம் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். புலிகளின் அரசியல்த்துறையின் பொறுப்பாளர் புலித்தேவன், கடந்த சனிக்கிழமை முதல் கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து, கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனுடன் வருகிற வார இறுதியில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதற்கான அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறார். "இதுவரை சாதகமான பதில்களே எமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன" என்று புலித்தேவன் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். "நாம் பேர‌ம்பேசல்களினூடாக நிரந்தர சமாதானத்தையே விரும்புகிறோம். எமது தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகளில் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்கான புணருத்தாபன மற்றும் மீள்கட்டுமான பணிகளை ஆரம்பிப்பதற்கு எமது கைகளில் இடைக்கால நிர்வாக சபை எனும் அமைப்பு இருப்பது ஏன் அவசியமானது என்பதையும் அவர்களிடம் எடுத்துரைத்து வருகிறோம்" என்றும் புலித்தேவன் கூறினார். ஆனால் சிங்களத் தலைமைகளோ நாட்டின் இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்குக் கைகோர்ப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்கிடையிலான பலப்போட்டி மேலும் மேலும் அதிகரித்தே செல்கிறது. இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினரின் முக்கிய கோரிக்கையான பாராளுமன்றத் தேர்தல்கள் குறித்தே சந்திரிக்காவும் ரணிலும் தற்போது சிந்தித்து வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் பிரச்சரச் செயலாளர் விமல் வீரவன்ச கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது சமாதான முயற்சிகளுக்கெதிரான நிலைப்பாடு சிங்கள மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், ஆகவே தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெறவேண்டுமா - இல்லையா என்பதனை அறிந்துகொள்வதற்கான மக்கள் ஆணையாக பாராளுமன்றத் தேர்தல்கள் அமையும் என்றும் கூறினார். தற்போது பாராளுமன்றத்தில் வெறும் 16 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கும் இவ்வினவாதக் கட்சியினர் வருகின்ற தேர்தல்கள் ஊடாக அவ்வெண்ணிக்கையினை 35 ஆக உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இதனூடாக பாராளுமன்றத்தில் அரசியல்த் தீர்மானங்களில் தாம் கணிசமான தாக்கத்தினைச் செலுத்தமுடியும் என்றும் நம்புகின்றனர். பாராளுமன்றத் தேர்தல்களை தற்போது நடத்துவதனால் நாடு கடந்த வருடம் அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி கடுமையான சரிவைச் சந்திக்கும் என்று வர்த்தக அமைப்புக்களின் தலைவர்கள் அரசை எச்சரித்து வருகின்றனர். நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைதியான சூழ்நிலைகளாலும், வர்த்தக முதல்லிடுகளில் காட்டப்பட்ட உற்சாகத்தினாலும் நாட்டின் பொருளாதாரம் 5.6 வீதத்தினால் கடந்த ஆண்டு வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இது அனைத்துமே தெற்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் போட்டியினால் கடுமையான தாக்கத்தினைச் சந்தித்திருக்கின்றன. பாராளுமன்றத் தேர்தல் ஒன்று தற்போது நடைபெறும் பட்சத்தில் மக்கள் விடுதலை முன்னணியினரின் கை ஓங்கும் என்றும், இதனால் இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் சர்வதேச முதலீடுகள் குறைவடையலாம் என்றும் கணிக்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதை இந்தியாவும் விரும்பவில்லை என்றே தெரிகிறது. புலிகளால் ஆதரவளிக்கப்படும் இணைந்த தமிழ்க் கட்சிகளின் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தல்களில் அதிக ஆசனங்களைப் பெறுவதை இந்தியா விரும்பவில்லை என்றே தெரிகிறது. இந்திய உளவு அமைப்பான ரோவின் தகவல்களின்படி சுமார் 35 முதல் 40 வரையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனூடாக புலிகளின் கை ஓங்குவதோடு, தனித்தனியாக இருக்கும் தமிழ்கட்சிகளின் ஊடாக தனது அழுத்தத்தினை இலங்கையில் செலுத்தமுடியும் என்கிற இந்தியாவின் எதிர்பார்ப்பும் இதனால் அழிந்துபோகும் வாய்ப்பிருக்கிறது. இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி சந்திரிக்காவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இலங்கையில் தற்போது பாராளுமன்றத் தேர்தல்கள் நடப்பதனை இந்தியா விரும்பவில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார். வருகிற 19 ஆம் திகதி கொழும்பு வரும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி, சந்திரிக்கா, ரணில் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் பேச்சுக்களில் ஈடுபட‌விருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் 23 ஆம் திகதி இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்திலும் அவர் பங்கெடுக்கிறார். சிங்கள‌த் தலைமைகள் மீது சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது பயன்படுத்தப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
  12. என்னதான் நடக்கிறது உங்கட ஊரில அண்ணை? கடந்த இரு வாரங்களில் நடந்த மூன்றாவது விமான விபத்து இது!
  13. போர்க்குற்றவாளிகளை வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமித்து அழகுபார்க்கும் அநுர எனும் இனவாதியின் கைங்கரியம் தொடர்கிறது. ஆனால் இதே அநுரவை வராது வந்த மாமணியாக‌ வழிபட்டு "பாணிற்கும், பெற்றொலுக்கும் வரிசையில் நிற்க முடியாது, ஆகவே அநுரவே வர வேண்டும்" என்று கூச்சலிட்ட சிலர் இதனை அகம‌கிழ்ந்து வரவேற்கலாம். அநுர செய்தால் கொலையாக இருந்தாலும் வரவேற்கத்தானே வேண்டும், என்ன நான் சொல்லுறது???
  14. நேற்று இவரது காணொளி ஒன்று பார்த்தேன். இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சேர்த்து 1948 இல் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும் இன்று இலங்கையின் சுதந்திர‌ தினத்திற்குக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துபவர்கள் பைத்தியங்கள் என்றும், அரசியல் நோக்கத்திற்காகச் செய்வதாகவும் கூறியிருந்தார். ஆக, தமிழர்கள் முற்றான சுதந்திரத்தைச் சிங்களவர்கள் போன்றே அனுபவித்து வருவதாகக் கூறுகிறார்.அவரது அறிவு அவ்வளவுதான் போலும். இவர் எப்படிப் படித்து, வைத்தியராகப் பட்டம் பெற்றார் என்று எண்ணுகிறேன். இவருக்கு உதவவென்று புலம்பெயர் நாட்டில் பலர் இருக்கிறார்கள். இவரால் குறிப்பிடப்பட்ட பல வங்கிக் கண‌க்குகளுக்கு இவர்களால் பணம் அனுப்பப்பட்டே வருகிறது. இவரைத் தலையில்த் தூக்கிக் கொண்டாடிய தமிழடியான் என்பவரின் ஆரம்ப காலக் காணொளிகளைப் பார்த்திருக்கிறேன். பின்னர் அவர் அநுர விசுவாசியாக மாறிப்போனதால் அவரது காணொளிகளைப் பார்ப்பது இல்லை. தற்போது அருச்சுணா பற்றி என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை.
  15. தன்னை சமாதானத்தின் தூதராகவும், சந்திரிக்காவை யுத்த விரும்பியாகவும் காட்ட முனைந்த ரணில் 2004, தை 12 தொடர்ந்து பேசிய ரணில், தன்னால் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தமுடியாதென்றும், சந்திரிக்காவே அதனைப் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும், சமாதானத்தை வென்றெடுக்க அயராது உழைத்துவருபவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் சந்திரிக்கா, நோர்வேயின் ஊடாக புலிகளுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிற்குள் வந்து, தான் முன்னர் எதிர்த்த அதே விடயங்களை புலிகளுடன் பேசி மீளவும் வழங்குவேன் என்று உறுதியளித்து, சமாதானப் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்தட்டும் என்று அவர் கூறினார். மேலும் அங்கு பேசிய ரணில், யுத்த நிறுத்தம் செயலற்றுப் போவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக எச்சரித்தார். அப்படி நடக்கும் பட்சத்தில் புலிகள் சர்வதேசத்திடம் இலங்கையரசினை நம்பமுடியாது என்று பிரச்சாரம் செய்யலாம் என்றும் அவர் கூறினார். தனது தீர்மானம் குறித்து மந்திரிசபையிடம் ரணில் விளக்கினார். யுத்தநிறுத்தத்தினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவான காரணிகளில் ஒன்றான இராணுவத்தினதும், புலிகளினதும் போரிடும் அணிகளை தூரத்தே விலத்திவைத்திருப்பதன் ஊடாக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துக்கொள்ளலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டதாகவும், இதனைச் செயற்படுத்துவதற்கு இராணுவம் மீதான அதிகாரம் தன்னிடம் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். ஆனால் இந்த அதிகாரம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படுவஸ்நுவரவில் ரணில் ஆற்றிய பேச்சுக் குறித்து அவரை சில அமைச்சர்கள் எச்சரித்திருந்தனர். அப்பேச்சினூடாக ரணில் சமாதானப் பேச்சுக்களில் இருந்து ஓடி ஒளிந்துகொள்வதாக சர்வதேச நாடுகள் எண்ணச் சாத்தியப்பாடு இருப்பதாகவும், இதனால் அரசுமீதான நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டு விடும் என்றும் அவர்கள் கூறினர். ஆனல் இதனை ரணில் மறுத்தார். தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட மூன்று அமைச்சுக்களும் தன்னிடம் மீள கையளிக்கப்படுமாக இருந்தால் பேச்சுக்களைத் தொடர்ந்தும் நடத்திச் செல்ல தான் தயாராக இருப்பதாக அவர் கூறினார். ஆனால் சந்திரிக்கா அதனைத் தரமறுத்தால், அவரே சமாதானப் பேச்சுக்களுக்கான பொறுப்பினையெடுத்து நடத்திச் செல்லட்டும், தேவையானால் எனது ஆதரவையும் வழங்கலாம் என்று அவர் கூறினார். "இந்தச் செய்தி மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். நான் சமாதானத்திற்கு முழு அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகவே இருக்கிறேன், ஒளிந்து ஓடவில்லை. சந்திரிக்கா பேச்சுக்களை பொறுப்பெடுத்து நடத்த விரும்பினால், எனது முழுமையான ஆதரவு அவருக்கு இருக்கும்" என்று அவர் கூறினார். ரணிலின் புதிய நிலைப்பாடு அவரது தந்திரமான அரசியலைக் காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். முதலாவதாக சந்ந்திரிக்காவினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு, அக்குவேறு ஆணிவேறாக விமர்சிக்கப்பட்டு வந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தினை அவரே ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது சந்திரிக்காவை சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நோர்வேஜியர்களுடன் பேசவைப்பதன் ஊடாக அவரது புதிய நண்பர்களான ஜே வி பியினருக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே பகைமையினை உருவாக்குவது. மூன்றாவது புலிகளுடன் பேசுவதன் ஊடாக மட்டுமே அரசியல்ச் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதை சந்திரிக்காவிற்கு புரியவைப்பது. அரசியல் வித்தகரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ரணிலின் நிலைப்பாடு குறித்துப் பேசும்போது, "ரணிலின் நகர்வுகளை அவதானித்தால் அரசியல்ப் பலப்போட்டியில் தொடர்ந்தும் இருக்கும் அதேவேளை, சூழ்நிலையினைத் தனக்குச் சார்பாகப் பயன்படுத்தி சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்க வைப்பதுதான் என்பது புலனாகிறது. மேலும் சந்திரிக்கா அண்மைய நாட்களில் முயன்றுவரும் மக்கள் விடுதலை முன்னணியினருடனான புதிய அரசியல்க் கூட்டணியைப் பலவீனப்படுத்துவதும் ரணிலின் நோக்கங்களில் இன்னொன்று" என்று கூறினார். புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதையோ, நோர்வேஜியர்களின் மத்தியஸ்த்தத்துடன் புலிகளுடன் பேசுவதையோ, அல்லது புலிகளின் கோரிக்கையான இடைக்கால நிர்வாக சபையினை வடக்குக் கிழக்கில் உருவாக்குவதையோ ஜே வி பி யினர் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியின் முதற்படியே இடைக்கால நிர்வாக சபை என்று அவர்கள் வாதிடுகின்றனர். ஆகவே இடைக்கால நிர்வாக சபை எனும் புலிகளின் கோரிக்கையினை அரசு ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்று அவர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே சந்திரிக்கா சமாதானப் பேசுக்கள்;ஐப் பொறுப்பெடுத்து நடத்தத் தொடங்கினால் அரசியல்க் கூட்டணியில் இருந்து தாம் விலகப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் அவரை எச்சரித்து வருகின்றனர். ரணில் விரும்புவதும் இது நடக்க வேண்டும் என்பதைத்தான். சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்கும் அழுத்தத்தினை உருவாக்கும் ரணிலின் திட்டம் ஏற்கனவே நடந்துவிட்டது. இதனை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதிச் செயலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் ரணில் கூறுவதுபோல சந்திரிக்கா யுத்த நிறுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவில்லையென்றும், மாறாக புலிகளை தீவிரமான பேச்சுக்களுக்குள் இழுத்துவிட்டு, பிரிக்கப்படாத இலங்கைக்குள் இடைக்கால நிர்வாக சபையினை உருவாக்கும் தமது யோசனைகளை முன்வைக்கும் அழுத்தத்தினை தானே உருவாக்கியதாகவும் சந்திரிக்கா தெரிவித்திருந்தார். கடந்த ஞாயிறு அன்று பேசிய ரணில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வினை உருவாக்கும் அடித்தளம் இடப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் யுத்த நிறுத்தத்தினை கலைப்பதன் மூலம் பிரச்சினை மீளவும் திறக்கப்பட்டு நாடு இன்னுமொரு யுத்தத்திற்குள் செல்லும் என்றும் அவர் கூறினார். ஆகவே இனப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்காக உருவாகியிருக்கும் அரிதான இச்சந்தர்ப்பத்தினைச் சந்திரிக்கா பாலடித்துவிட்டதன் மூலம், நாட்டின் வளங்களை வீணடித்து, நாடு மீள முடியாத பொருளாதார பின்னடைவிற்குள்ச் செல்ல வழிசமைத்துவிட்டார் என்று அவர் மேலும் கூறினார்.
  16. ரணிலும் சந்திரிக்காவும் ஆடும் அரசியல்ச் சதுரங்கம் 2004, தை 12 இவ்வருடத்தின் முதலாவது மந்திரிசபைக் கூட்டம் கடந்த புதன்கிழமை மந்திரிசபை அறையில் நடைபெற்றது. ஜனாதிபதி சந்திரிக்கா இதில் கலந்துகொள்ளவில்லை. அரசியலமைப்பின்படி மந்திரிசபையின் தலைவரே அவர்தான். இவ்வாறான கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்குவது வழமை. ஆனால் கார்த்திகை 4 ஆம் திகதி மூன்று முக்கிய அமைச்சுக்களை பலவந்தமாக பிடுங்கிக்கொண்டபின்னர் அவர் மந்திரிசபைக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்தே வருகிறார். கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் அங்கு வருகைதந்த அமைச்சர்களுக்கு பால்ச்சோறும் இன்னும் சில இனிப்புப் பலகாரங்களையும் ரணில் வழங்கி உபசரித்தார். அப்போது அங்கு பேசிய காணியமைச்சர் ராஜித்த சேனாரத்ன, "சந்திரிக்கா கடந்த வருடம் புதுவருட தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னர் நடந்த மந்திரிசபைக் கூட்டத்தில் வழங்கிய உணவைக் காட்டிலும் இது எவ்வளவோ மேலானது" என்று நகைச்சுவையுடன் கூறினார். சந்திரிக்காவினால் தனது வீட்டில் நடத்தப்பட்ட சிற்றுண்டி விருந்து உண்மையாகவே அமைச்சர்களை ஏமாற்றும் நோக்கில் நடத்தப்பட்டதாகவே அவர்கள் உணர்கின்றனர். மீண்டும் மந்திரிசபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அமைச்சர்களை தேநீர் விருந்திற்கு சந்திரிக்கா அழைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆகவேதான் சந்திரிக்காவிடம் பேசிய அமைச்சர்கள், "மந்திரிசபைக் கூட்டத்தை வழமையாக அது நடக்கும் மந்திரிசபை அறையிலேயே வைத்துக்கொள்ளலாம், ஆனால் உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் வந்து உங்களின் வீட்டில் தேநீர் அருந்தி சிற்றுண்டிகளையும் உட்கொள்ளலாம்" என்று கூறினர். அமைச்சர்கள் த‌மது முடிவினை அறிவித்தபோது சந்திரிக்கா சினமடைந்தார். "அவர்களுக்கு இங்கு வர விருப்பமில்லையென்றால், எனக்கும் அங்கு செல்ல விருப்பமில்லை. அவர்களுக்கு எனது வீட்டிற்ட்கு வர விருப்பமில்லையென்றால், அவர்களுக்குப் பாற்சோறு இல்லை" என்று கடுப்புடன் கூறினார். இச்சம்பவம் சந்திரிக்காவிற்கும் ரணிலுக்கும் இடையே இருக்கும் பகைமையினைக் காட்டப் போதுமானது. இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட பகைமையே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று சில அவதானிகள் கூறுகின்றனர். ரணிலும், சந்திரிக்காவின் இளைய சகோதரரான அநுரவும் ரோயல் கல்லூரியில் ஒன்றாகக் கற்றவர்கள். நண்பர்கள். ஒருவரோடு ஒருவர் நேரத்தைச் செலவிட்டுள்ளதுடன், சிறுவயதில் ஒன்றாக விளையாட்டுக்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சந்திரிக்காவும் இவ்விளையாட்டுக்களில் அவப்போது பங்குபற்றியிருக்கிறார். வேறு சில அவதானிகளோ இவர்கள் இருவருக்கும் இடையிலான பகைமை தத்தமது அரசியல் நோக்கங்களினால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். சந்திரிகாவைப் பொறுத்தவரை தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைந்தபின்னரும் ஆட்சியில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதைச் செய்வதற்கு நடப்பில் இருக்கும் அரசியலமைப்பினை மாற்றவேண்டிய தேவை அவருக்கு இருக்கிறது. இதனை 1997 இல் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு ஏதுவாக "அரசியலமைப்பிற்குள் சர்வ வல்லமை பெற்ற ஜனாதிபதிப் பதவியை இல்லாமலாக்குவது" எனும் சரத்தினை உருவாக்குவேன் என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர் செய்ய எத்தனித்து வருகிறார். அதற்காகவே 2000 இல் புதிய அரசியலமைப்பிற்கான வரைபினை அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். ஆனால் சந்திரிக்காவினால் முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு வரைபினை ரணில் கடுமையாக எதிர்த்தார். இந்த உத்தேச அரசியமைப்பு வரைபு அதிகாரப் பரவலாக்கத்தினைக் கொண்டிருக்கிறது என்பதற்காக அவர் எதிர்க்கவில்லை. மாறாக சர்வ வல்லமை பொறுந்திய ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழித்து, பிரதமர் எனும் பதவியின் மூலம் தொடர்ந்தும் பதவியில் இருக்கவே சந்திரிக்கா முயல்கிறார் என்பதற்காகவே இதனை ரணில் எதிர்த்தார். சந்திரிக்காவை அரசியலில் இருந்து முற்றாகவே ஓரங்கட்டுவதன் ஊடாக நாட்டின் அதிகாரத்திற்கு வரும் தனது கனவினை ஈடேற்றவே ரணில் இதனைச் செய்தார். "தமது சொந்த அரசியல் எதிர்காலத்திற்காகவே அவர்கள் மோதிக்கொள்கிறார்கள், நாட்டைப்பற்றிய அக்கறையென்பது அவர்களுக்குக் கிடடையாது" என்று இவர்களின் அரசியப் பலப் போட்டியை அவதானித்துவரும் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கூறுகிறார். இவர்களின் அரசியல்ப் போட்டியென்பது தனிப்பட்ட காரணங்களினாலேயே நடத்தப்பட்டு வருகிறதென்பதை சமாதானப் பேச்சுக்கள் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து அமைச்சர்கள் மத்தியில் பேசிய ரணிலின் கூற்று மெய்ப்படுத்தியது. படுவஸ்நுவரவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ரணிலின் இப்பேச்சு சந்திரிக்காவை தற்காப்பு நிலையெடுக்கும்படி அழுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. அக்கூட்டத்தில் பேசிய ரணில், "சமாதானப் பேச்சுக்கள் நடதுகொண்டிருக்கும் நிலையில், மூன்று முக்கிய அமைச்சுக்களையும் தன்வசமே வைத்துக்கொள்ள சந்திரிக்கா விரும்புவாராக இருந்தால் அவர் புலிகளுடன் பேசி புதிய உடன்பாடு ஒன்றிற்கு வரட்டும். பேச்சுவார்த்தைகள் யுத்தநிறுத்த உடன்பாட்டின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. யுத்த நிறுத்தத்தில் நாம் மேற்கொள்ளவேண்டியவற்றை ஒழுங்காகச் செய்வோம் என்கிற உறுதிப்பாட்டுடனேயே புலிகளுடன் பேச்சுக்களை நாம் அரம்பித்தோம், ஆனால் இன்றோ அதனைக் குழப்பியடிக்கும் நோக்கில் எம்மிடமிருந்து முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பறித்திருக்கிறார். ஆகவே, இன்றிலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி நாம் செய்வதாக உறுதியளித்த பல விடயங்கள் வழக்கொழிந்து போகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை மறுதலித்துக்கொண்டு நாம் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தமுடியாது" என்று அவர் கூறினார்.
  17. சந்திரிக்காவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் ஓடிய ரணிலும், தனது பதவிக்காலத்தை நீட்டிக்க சூழ்ச்சியில் இறங்கிய சந்திரிக்காவும் அரசியல் சிக்கலில் முக்கிய பங்கொன்றினையாற்றி, ரணிலுக்கும் சந்திரிக்காவுக்கும் இடையே சமரசம் செய்வதற்கு மகாசங்கத்தினரை டெயிலி மிரர் அழைத்துக்கொண்டிருந்த அதே தருணத்தில், இச்சிக்கல் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது. கார்த்திகை 4 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா தன்வசப்படுத்திக் கொண்டபோதே இச்சிக்கல் ஆரம்பமாகியிருந்தது. புலிகளுடன் தான் அரம்பித்திருந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு இம்மூன்று அமைச்சுக்களும் தனக்கு மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தார். ஆனால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினையும் ஊடகத்துறையினையும் ரணிலிடம் கையளிக்க இணங்கிய சந்திரிக்கா, பாதுகாப்புத்துறையினை மட்டும் தன்னுடனேயே வைத்திருக்கப்போவதாகக் கூறிவிட்டார். சந்திரிக்கா தற்போது பாதுகாப்புத்துறை ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புக் கூறுவதாக வாதாடுகிறார். தனது பலத்தினை உறுதிப்படுத்த பாதுகாப்புத்துறை தன்னிடமே இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பொன்றினையும் அவர் கைவசம் எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் அரசாங்கமும், சட்ட வால்லுனர்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து கேள்வியெழுப்பி வருகின்றனர். உச்சநீதிமன்றத்திடம் பாதுகாப்புத்துறையினை தன்னிடம் வைத்திருப்பதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதியளிக்கின்றதா என்று ஆராயுமாறு கோருவதற்குப் பதிலாக , அதனிடமிருந்து தீர்ப்பொன்றினை தனக்குச் சார்பாகப் பெற்று வைத்திருக்கிறார் என்று அவர்கள் சந்திரிக்கா மீது குற்றஞ்சுமத்துகின்றனர். பாதுகாப்புத்துறையினை தன்னிடம் பத்திரமாக வைத்திருப்பதற்கு உச்சநீதிமன்றத்தினைப் பாவித்திருக்கும் சந்திரிக்கா, இதற்கு மேலதிகமாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருந்த இன்னும் சில பொறுப்புக்களையும் தன்னிடம் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்திருக்கிறார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த சிறைச்சாலைகள் மீதான அதிகாரம் தற்போது பாதுகாப்புத்துறையின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்திற்கு அவசியாமானது என்று கருதப்படும் கைதிகளின் விவகாரம் தற்போது சிக்கலில் மாட்டுப்பாட்டிருப்பதாக சட்டவாளர் டெஸ்மண்ட் பெர்ணான்டோ கூறுகிறார். ரணில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு இராணுவமும், பொலீஸாரும் அவரின் கீழ் கொண்டுவரப்படுவது இன்றியமையாதது என்று அவர் கூறுகிறார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி செய்வதாக ஒத்துக்கொள்ளப்பட்ட பல விடயங்களைச் செய்வதற்கு ரணில் அரசாங்கத்தின் கீழ் இராணுவம், கடற்படை, பொலீஸ் மற்றும் சிறைச்சாலைகள் மீதான அதிகாரம் இருப்பது அத்தியாவசியமானது என்றும் அவர் கூறுகிறார். கடந்த வாரம் இடம்பெற்ற வானொலி உரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சந்திரிக்கா, சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டிருப்பதற்கான காரணத்தினை ரணிலின் மீது சுமத்தியிருந்தார். ரணில் பேசிவரும் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் என்பது அவரது கற்பனை மட்டுமே என்றும் ரணிலை அவர் விமர்சித்தார். பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை தான் ரணிலுக்குக் கொடுக்க விரும்பியபோதும், அவர் பிடிவாதமாக பாதுகாப்புத்துறை உட்பட அனைத்து அமைச்சுக்களையும் தன்னிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் அடம்பிடிப்பதாக அவர் கூறினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தற்காலிகமாக விலகியிருப்பது என்கிற புலிகளின் முடிவினாலேயே அவை தடைப்பட்டு நிற்பதாகவும், ஆனால் பேச்சுக்கள் தடைப்பட்டதற்கான பழியினை ரணில் தன்மீது சுமத்திவருவதாகவும் சந்திரிக்கா மேலும் கூறினார். தன்மீது சந்திரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டுக்களையடுத்து ரணில் ஆத்திரமடைந்து காணப்பட்டார். தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் சந்திப்பொன்றினை ஏற்படுத்திய ரணில், "சந்திரிக்கா தனது அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொண்டே போகிறார். பேச்சுவார்த்தைகள் தடைப்பாட்டு நிற்பதற்கான பழியினை அவர் என்மீது சுமத்துகிறார். மக்களை மடையர்களாக்கும் அவரது கைங்கரியத்தை நாம் இனிமேலும் அனுமதித்துக் கொண்டு இருக்கமுடியாது. நாம் திருப்பித் தாக்க ஆரம்பிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். சந்திரிக்காவிற்கு எதிரான தனது நடவடிக்கைகளை ரணில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஆரம்பிக்கலானார். சர்வதேசத்தில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் சந்திரிக்கா மீது சர்வதேசம் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு. இதற்காக தனது அமைச்சரான மிலிந்த மொரகொடவை வோஷிங்டன், ஒஸ்லோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸ்ஸள்ஸ் ஆகிய இடங்களுக்கு பிரச்சாரப் பணிக்காக அனுப்பி வைத்தார். வோஷிங்டனில் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சேர்ட் ஆர்மிட்டேஜைச் சந்தித்த மிலிந்த மொறகொட, ரணிலினால் வழங்கப்பட்ட செய்தியொன்றை அவரிடம் கையளித்தார். இதனையடுத்து ஆர்மிட்டேஜ் உடனடியாகச் செயலில் இறங்கினார். சந்திரிக்காவிற்கு அவர் அனுப்பிய செய்தியில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். தற்போது ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் அரசியல்ப் போட்டியும், அரசியலமைப்புச் சிக்கலும் சமாதான முயற்சிகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி விட்டிருப்பதாக அவர் கூறினார். மேலும், பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஏதுவாக பிரதமருக்கு இருக்கவேண்டிய அதிகாரங்களை தெளிவாக வரையறை செய்து , கையளிப்பது அவசியமானது என்றும் அவர் கூறினார். மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருக்கும் அமெரிக்கா, பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படாது இழுத்தடிக்கப்படுமானால் ஏனைய உதவி வழங்கும் நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை மீள ஆர‌ம்பிப்பதற்கான வழிமுறைகள் ஆராய்ந்து அதன்படி தாம் நடக்கவேண்டியிருக்கும் என்றும் சந்திரிக்காவை மறைமுகமாக எச்சரித்திருந்தார். ஆனால் சந்திரிக்காவிற்கு தாம் அனுப்பிய மிரட்டல்ச் செய்தியுடன் மட்டுமே அமெரிக்கர்கள் நின்றுவிடவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் கொலின் பவல் ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் தனித்தனியாக எழுதிய கடிதங்களில் தமக்கிடையே இருக்கும் அரசியல்ச் சிக்கலினை உடனடியாகத் தீர்த்துக்கொண்டு பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பது அவசியம் என்று கேட்டிருந்தார். மேலும் சந்திரிக்காவிற்கு கொலின் பவல் அனுப்பிய கடிதத்தில் ரணிலிடமிருந்து மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிக்கா பலவந்தமாக கையகப்படுத்திக் கொண்டமைக்கான தனது கண்டனத்தையும் பதிவுசெய்திருந்தார். ரணிலுக்குச் சார்பான அமெரிக்கர்களின் நிலைப்பாட்டு சந்திரிக்காவுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பேச்சுக்களை எப்படியாவது நிறுத்தி, மீளவும் யுத்தத்தினை ஆரம்பிக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் சந்திரிக்காவின் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைனைக் கைச்சாத்திடுவதற்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சிங்கள மார்க்ஸிஸ்ட் இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணியினர், அமெரிக்காவின் நிலைப்பாட்டினையடுத்து கலவரமடைந்ததுடன், உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்காவை ரணில் அநாவசியமாக இழுத்துவிட்டிருக்கிறார் என்றும் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கினர். மேலும் அமெரிக்காவின் உளவாளியாக ரணில் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். ரணிலுடன் அரசியப் பலப்போட்டியில் ஈடுபட்டிருந்த அதேவேளை சந்திரிக்கா இன்னொரு அரசியல் சிக்கலையும் திட்டமிட்டே கட்டவிழ்த்துவிட்டார். அதுதான் தான் இரண்டாவது தடவையாகவும் 2000 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த விடயம். 1994 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சந்திரிக்கா முதன்முதலாக ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தார். அதன்படி அவரது 6 வருட கால ஆட்சி 2000 ஆம் ஆண்டு மார்கழியில் முடிவிற்கு வரவேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு மார்கழியில் ஜனாதிபதித் தேர்தலினை நடத்துவதற்கு அவர் முடிவெடுத்தார். தேர்தல் நடந்து, அவர் வெற்றிபெற்றதனையடுத்து உடனடியாகவே அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்படி 2005 ஆம் ஆண்டு மார்கழியில் அவரது பதவிக்காலம் முடிவிற்கு வருதல் வேண்டும். ஆனால் இரு வாரங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்திகளின்படி சந்திரிக்கா தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணத்தை பிரதம நீதியரசர் சரத் என் சில்வா முன்னிலையில் மார்கழி 2000 இலேயே இரகசியமாகச் செய்துகொண்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அக்காலப்பகுதியில் விவசாய அமைச்சராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த எஸ்.பி.திசாநாயக்கா கூறுகையில் இவ்வாறான இரண்டாவது இரகசிய பதவிப்பிரமாணம் ஒன்று நடந்ததுபற்றி தான் அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் சந்திரிக்காவின் பதவிக்காலத்தை இன்னும் ஒருவருடத்திற்கு நீட்டிப்பதற்காகவே இவ்வாறான சூழ்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். இச்செய்திகளினையடுத்து கருத்துத் தெரிவித்த ரணில் அரசாங்கம், தம்மைப் பொறுத்தவரை சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக்காலம் மார்கழி 2005 உடன் நிறைவிற்கு வருகிறது என்றும், அதன்பின்னர் ஒரு நாளைக்கேனும் அவர் பதவியில் தொடர்ந்து இருப்பதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறியிருந்தது. தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்க இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தல் மார்கழி 1999 இலேயே இடம்பெற்றிருப்பதனால், சந்திரிக்காவின் இரண்டாவது பதவிக்காலம் மார்கழி 2005 இல் முடிவிற்கு வருவதாகத் தெரிவித்தார். "2005 மார்கழியில் நான் தேர்தலினை நடத்துவேன்" என்று அவர் மேலும் கூறினார். தன்னால் கசியவிடப்பட்ட இரண்டாவது பதவிப்பிரமாணச் சூழ்ச்சிபற்றிய தெளிவுபடுத்தலினை இஸ்லாமாபாத்தில் நடக்கும் சார்க் உசிமாநாட்டின் பின்னர் நாடுவந்து செய்யவிருப்பதாக சந்திரிக்கா கூறினார். ஆகவே இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதனை அரசாங்கம் அப்போதைக்கு கிடப்பில் போட்டு, சந்திரிக்கா நாடுதிரும்பும்வரை காத்திருக்க முடிவெடுத்தது. எதிர்வரும் வாரங்கள் சுவாரசியம் மிக்கவையாக இருக்கப்போகின்றன. சந்திரிக்கா என்ன செய்யப்போகிறார்? ரணிலுடன் சமரசத்திற்கு வருவாரா? போன்ற கேள்விகள் அனைவர் மனதிலும் தற்போது எழுந்திருக்கின்றன.
  18. பெளத்த பிக்குகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்த ரணில் அரசும், அரசியலுக்குள் நுழைந்த மகாசங்கத்தினரும் 4 தை, 2004 கடந்தவாரம் நான் எழுதிய குறிப்பில் தென்னிலங்கையின் பெளத்த சிங்கள இனவாதிகள் மீளவும் தம்மை அரசியலின் மையத்திற்குள் கொண்டுவந்திருப்பதையும், அதனால் ஏற்படப்போகும் அபாயகரமான நிலை குறித்தும் எழுதியிருந்தேன். நான் கூறியவாறே பெளத்த துறவிகளளின் அழுத்தத்திற்குப் பணிந்து அவர்களின் விருப்பத்தின்படி நடக்க அரசாங்கம் ஒத்துக்கொண்டிருக்கிறது. உண்ணாவிரதம் இருந்த பெளத்த துறவிகளுக்கு, உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளான கடந்த புதன்கிழமையன்று உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்ற பெளத்த சாசன அமைச்சர் லொக்குபண்டார, அவர்களின் அருகில் அமர்வதற்கு அனுமதிகோரி இரைஞ்சியிருந்தார். "அதி வணக்கத்திற்குரிய மகான்களே, நான் உங்களின் அருகில் அமர்வதற்கு அடியேனுக்கு அனுமதி தருவீர்களா?" என்று உண்ணாவிரதத்தில் அன்று காலையே பங்குகொண்டிருந்த பிரபல பெளத்த இனவாத பிக்கு, சோபித தேரவிடம் பவ்வியமாக இரைஞ்சினார். அமைச்சரை ஏளனமாகப் பார்த்த சோபித தேரை, "அமைச்சரே, நீங்கள் அமரலாம், ஆனால் எதற்காக உங்களின் நேரத்தினை இங்கே வீணடிக்கிறீர்கள்? முதலில் சென்று மதமாற்றங்களில் ஈடுபடுவோருக்கெதிரான சட்டங்களை இயற்றுங்கள்" என்று கூறினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் லொக்குபண்டார, "நான் நிச்சயமாக பாராளுமன்றத்தில் இதுதொடர்பான சட்டங்களை முன்வைப்பேன். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் இதற்கான தனது ஆதரவினைத் தருவதாக உறுதியளித்திருக்கிறார்" என்று கூறினார். ஆனால் உண்ணாவிரதத்தை முதல் நாளன்று ஆரம்பித்துவைத்த இன்னொரு இனவாதப் பிக்குவும் இனவாத பிக்குகள் அமைப்பான தேசிய பிக்குகள் முன்னணி எனும் அமைப்பின் தலைவருமான எல்லாவெல மேதானந்த தேரை, அமைச்சரின் உறுதிமொழியினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் அமைச்சரினால் சட்டவரைபு முன்வைக்கப்படும் வரை தான் உண்ணாவிரதத்தினை நிறுத்தப்போவதில்லை என்று அவர் சபதம் செய்தார். இதனையடுத்து பிரதமர் ரணிலுடன் கலந்தாலோசித்த லொக்குபண்டார, மேலும் பல முக்கிய பிக்குகளுடன் கலந்தாலோசித்து உண்ணாவிரத்த்தினை முடிவிற்குக் கொண்டுவரும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். மதமாற்றும் விடயங்களைத் தடுப்பதற்கான சட்டத்தினைஉடனடியாகக் கொண்டுவருவேன் என்று பிக்குகளிடம் உறுதியளித்த ரணில், ஜே.வி. பி யினரும் ஏனைய இனவாத அமைப்புக்களும் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அரசியல் இலாபம் அடைய எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். "நாடு ஏற்கனவே இனக் குரோதத்தினால் கடுமையான விளைவுக;ளைச் சந்தித்து நிற்கின்றது. மத ரீதியிலான பிரச்சினை ஒன்றை உருவாக்குவதன் ஊடாக நிலைமையினை இன்னமும் சீரழிக்கவே சிலர் விரும்புகின்றனர்" என்று அவர் கூறினார். லொக்குபண்டாரவினால் வழங்கப்பட்ட வாய்மூல உறுதிமொழியினை மேதானந்த தேரை நிராகரித்துவிட்டதையடுத்து அமைச்சர் லொக்குபண்டாரவும், அமைச்சர் கரு ஜயசூரியவும் இணைந்து தேசிய பிக்குகள் முன்னணியினருடன் பேரம்பேசலில் ஈடுபட்டனர். இப்பேரம்பேசலின் ஊடாக பெளத்த விவகாரங்களுக்கான குழுவொன்றினை 14 நாட்களுக்குள் உருவாக்கவும், 60 நாட்களுக்குள் மதமாற்றத்தினைத் தடுக்கும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. பேரம்பேசலில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவேன் என்று லொக்குபண்டார எழுத்துவடிவில் உறுதிமொழியொன்றினை வழங்கினார். இதனையடுத்து பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. பெளத்த சமயம் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளை ஆராய்ந்து உடனடியாகத் தீர்த்துவைக்கவென்று அமைக்கப்பட்ட பெளத்த விவகார குழு எடுக்கும் தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றுவதென்று அமைச்சர் லொக்குபண்டார உறுதிவழங்கினார். நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெளத்த பீடத்தினதும் ஐந்து பிரதிநிதிகளும், தேசிய பிக்குகள் முன்னணியின் உறுப்பினர்களும் அடங்கிய பெளத்த விவகாரக் குழு உடனடியாக அமைக்கப்பட்டது. மதமாற்றத் தடுப்பு சட்டத்தை வரைய அமைச்சரவை உபகுழுவொன்றினை ரணில் நியமித்தார். இக்குழுவில் அமைச்சர்களான லொக்குபண்டார, ஜோன் அமரதுங்க, மகேஸ்வ‌ரன், ரவுப் ஹக்கீம் மற்றும் கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் அங்கம் வகித்தனர். அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் மதச் சுதந்திரம் என்பது ஒருவர் தனது மதத்தினைச் சுதந்திரமாக அனுட்டிக்க முடியும் என்று கூறும் அதேவேளை, அவர் இன்னொரு மதப்பிரிவினரிடத்தில் தனது மதத்தினைப் பலவந்தமாகத் திணிக்கமுடியாது என்று கூறப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் தொடரப்பட்ட அடிப்படி உரிமை மீறல் வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றாம் மதமாற்றத் தடைச்சட்டத்திற்கும் உடனடியாகவே அனுமதி வழங்கிவிடும் என்பதனை நாம் எதிர்பார்க்க முடியும். ஒருவரை இன்னொரு மதத்திற்கு மாற்றம் செய்வதை உச்சநீதிமன்றம் நிச்சயம் அனுமதிக்கப்போவதில்லை என்பது திண்ணம். "பெளத்த துறவிகளின் அழுத்தத்திற்கு உடனடியாகவும், வினைத்திறனுடனும் அரசு செயற்பட்ட விதத்தினைப் பார்க்கும் எவருக்கும் அரசியல் விவகாரங்களிலும் இனவாதப் பிக்குகள் மிக இலகுவாகத் தலையீடு செய்வதற்கான முன்னுதாரணத்தை அரசு வழங்கியிருக்கிறது என்பதனை புரிந்துகொள்ள முடியும்" என்று கொழும்பிலுள்ள அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். பிக்குகளின் உண்ணாவிரதமும் அதற்கு அரசு அடிபணித்த விதத்தினையும் அரசியல் அவதானிகள் விமர்சித்து வரும் அதேவேளை மகாசங்கத்தினரை அரசியலுக்குள் இழுத்துவிடும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரணிலை கடந்த வாரம் சந்தித்த பீடாதிபதிகள், ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையிலான சிக்கலை தமக்கு விளங்கப்படுத்துமாறு கோரினர். இதனையடுத்து அவர்களுக்கு விளக்காமான பதிலை அளித்த ரணில் சமாதானப் பேச்சுக்கள் சுமூகமான முறையில் நடப்பதற்கு பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட அமைச்சுக்கள் மீதான அதிகாரம் தன்னிடம் இருக்கவேண்டும் என்று கூறினார். இதனையடுத்து ரணிலுடன் பேசிய பீடாதிபதிகள், ரணிலின் விளக்கத்தினைத் தாம் புரிந்துகொள்வதாகவும், ஆனால் சந்திரிக்கா இதுகுறித்து தமக்கு வேறுவகையான விளக்கத்தினை வழங்கியிருப்பதாகவும் கூறினர். பீடாதிபதிகளில் அதிகாரம் படைத்தவராகக் காணப்படும் பெல்லன்வில விமலரத்ன தேரை பேசும்போது, "நீங்களும், சந்திரிக்காவும் நேரடியாக எங்கள் முன்னால் வந்து உங்களின் பிரச்சினையினைக் கூறுவதன் மூலமே எம்மால் இதுகுறித்த முடிவிற்கு வரமுடியும். அதன் மூலமே எம்மால் இதற்கான தீர்வினை எடுக்கமுடியும்" என்றும் கூறினார். இதனை நகைச்சுவையாக மறுதலித்த ரணில், "நாம் இருவரும் ஒரே இடத்தில் எமது பக்க நியாயங்களைப் பேசினோம் என்றால் பொறிபறக்கும்" என்று கூறினார். இதனையடுத்து பீடாதிபதிகளின் மத்தியஸ்த்திற்கான முயற்சி கைவிடப்பட்டது. ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த டெயிலி மிரரின் ஆசிரியர்த் தலையங்கம் பீடாதிபதிகள் தொடர்ந்தும் ரணிலுக்கும் சந்திர்க்க்காவுக்கும் இடையே சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டிருந்தது. அப்பத்திரிக்கையின் செய்தியில், "எமது பார்வையில் பீடாதிபதிகளின் முயற்சி எளிதில் தட்டிக் கழித்துவிடும் ஒன்றல்ல. அது அவர்களின் கடமையென்றே நாம் நினைக்கிறோம். நாடு தற்போது இருக்கும் மிகவும் அபாயகரமான சூழ்நிலையில், சரித்திர காலம் தொட்டு பீடாதிபதிகள் ஆற்றிவந்த அரசியல்த்தலைவர்களுக்கான அறிவுரையினையும், வழிகாட்டலினையும் அவர்கள் தற்போதும் வழங்க வேண்டும். இதனூடாகவே நாடு எதிர்நோக்கும் சிக்கலான விடயங்களுக்கு எம்மால் தீர்வு காண‌ முடியும்" என்று கூறப்பட்டிருந்தது. மேலும் "ரணிலிற்கும், சந்திரிக்காவிற்கும் இடையிலான சிக்கலைத் தீர்ப்பதற்கு மகாசங்கத்தினர் திறமையுள்ள பிக்குகள் சிலரைக் கொண்ட குழுவொன்றினை அமைத்து, பிரச்சினையினை சரியாக ஆராய்ந்து இரு தலைவர்களும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் அவ்வாசிரியத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  19. இந்தியாவுடன் நட்புப் பாராட்ட முயன்ற புலிகளும், வடக்குக் கிழக்கைப் பிரிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடிய ஜே.வி.பி யினரும் மார்கழி 15, 2003 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசிய தமிழ்ச்செல்வன், இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்த புலிகள் விரும்புவதாகவும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் லண்டன் மாவீரர் தின உரையில் அன்டன் பாலசிங்கம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவுபடுத்திய‌ தமிழ்ச்செல்வன், அதன்படி கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தனது மாவீரர் தின உரையில் பேசிய பாலசிங்கம், "இந்தியாவின் பூகோள அரசியல், மூலோபாய பொருளாதார‌ நலன்களைப் பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபடப்போவதில்லை. இந்திய அரசாங்கத்துடன் சிநேகபூர்வமான உறவுகளை வளர்த்துக்கொள்ளவே நாம் விரும்புகிறோம். அவ்வாறே இந்தியாவும் ஈழத்தமிழர் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளவேண்டும்" என்று கேட்டிருந்தார். தனது உரையில் இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையே சிநேகபூர்வமான உறவுகளை ஏற்படுத்துவதற்கான அடித்தளம் குறித்து பாலசிங்கம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் தொடர்ந்தும் பேசும்போது, "நாம் இரு பகுதியினருமே முன்னைய காலங்களில் சில தவறுகளைப் புரிந்திருக்கிறோம். ஆகவே பழயனவற்றை மறந்து, முன்னோகிச் செல்ல நாம் முயல வேண்டும். எமது அமைப்புடன் நட்புரீதியான உறவுகளை உருவாக்குவதற்கு இந்தியா நவீன வழிமுறைகளையும் முயற்சிகளையும் கைக்கொள்ளவேண்டும் என்று நாம் இந்தியாவை வேண்டிக்கொள்கிறோம்" என்றும் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் சம்பந்தன் பேசும்போது, "இந்தியாவுடன் நட்புரீதியான உறவுகளை நாம் மேற்கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன். தமிழர்களையும் இந்தியாவையும் எதிரிகளாக்கும் உத்தியுடன் செயற்பட்டுவரும் சிங்களப்பேரினவாதிகளின் முயற்சிகளை நாம் தடுத்து நிறுத்துவது அவசியமானது. அதன் ஒருபடியாக இந்திய தூதுவர் நிருபன் சென் அவர்களை கொழும்பில் நாம் சந்திக்கவிருக்கிறோம்" என்று அவர் கூறினார். சிங்களப் பேரினவாதிகள் இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்கும் கைங்கரியங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய தேசபக்தி அமைப்பு எனும் தீவிர சிங்கள இனவாதக் குழு கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் தூதுவர் நிருபன் சென்னைச் சந்தித்து கையளித்த மனுவில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் கொடுப்பதானது இந்தியாவின் நலன்களுக்கு மிகவும் விரோதமானது என்று குறிப்பிட்டிருந்தது. ஆகவே வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்றும் அது இந்தியாவைக் கேட்டிருந்தது. ஆகவே, உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள், இந்தியா ஈழத் தமிழர்களை நசுக்கி, முற்றாக அழிப்பதற்கு உந்தித்தள்ளும் சிங்கள பேரினவாதிகளின் முயற்சிகளை முறியடிப்பது அவசியம். தமிழ் ஈழத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கையில் தமிழர்களின் நீதியான அபிலாசைகளை அடைவதற்கு இந்தியா சிநேகபூர்வமான நிலைப்பாட்டினையெடுத்து தமிழர்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டிருந்தது. மேலும், ஈழத்தமிழர்களால் இந்தியாவின் பூகோள ஸ்த்திரத் தன்மைக்கோ, பாதுகாப்பிற்கோ அல்லது இறையாண்மைக்கொ ஒருபோது அச்சுருத்தல் ஏற்படாது என்றும் அவ்வறிக்கை மேலும் கூறியிருந்தது. தமிழர்களின் கல்வியினை முன்கொண்டு செல்லும் சம்மேளனம் எனும் அமைப்பு இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "தமிழர்கள் கெளரவத்துடனும், அமைதியாகவும் தமது சாதாரணமான வாழ்வினை வாழ்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்த இந்தியா சாதகமான நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும்" என்று கேட்டிருந்தது.
  20. நாங்கள் நம்பமாட்டோம். இது வடகொரியாவின் வீரர்கள் இல்லை. சீனப்படம் ஒன்றில் இருந்து எடுத்த துண்டுகளை மேற்குலகம் எடுத்துவந்து கதை விடுகிறது. ர‌ஸ்ஸியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. ரஸ்ஸியாவினுள் வடகொரியா துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவே உறுதிப்படுத்தத் தவறிவிட்டது. ஆகவே புட்டின் வடகொரியாவின் உதவியில்லாமல் தனியே நின்றுதான் சண்டைபிடிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் வடகொரியாவின் ஆயுதங்களோ, ஈரானின் ட்ரோன்களோ எவையுமே ரஸ்ஸியாவினுள் கொண்டுவரப்படவில்லை. எல்லாமே மேற்குலகால் அவிழ்த்துவிடப்பட்ட பொய்கள். உக்ரேனின் 90 வீதமான பகுதிகளை ரஸ்ஸியா பிடித்துவிட்டது. செலென்ஸ்கி தப்பி ஓடிவிட்டார். இன்னும் 24 மணித்தியாலத்தில் முழு உக்ரேனும் மேன்மைதங்கிய புட்டினின் படைகளால் கைப்பற்றப்பட்டுவிடும். ‍ இப்படிக்கு, சதிக்கோட்பாட்டுத் தளபதி.
  21. வடகொரியத் துருப்புக்கள் ரஸ்ஸியப் படைகளுடன் இணைந்து கேர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனின் படைகளுக்கெதிராகப் போரிடுவது உண்மை. இங்கு சதிக்கோட்பாடுகளைக் காவித்திரியும் ஒருவரைத்தவிர ஏனையவர்கள் எல்லோருக்கும் இது தெரிந்த விடயம் தான். இரு வடகொரியப் போர்வீரர்களை தாக்குதல் ஒன்றின்போது உக்ரேன் உயிருடன் பிடித்த ஒளிப்படங்களை சர்வதேச ஊடகங்கள் காட்டியபோதும், அதனை இல்லையென்று அடம்பிடிப்பது பூனை கண்களை மூடிக்கொண்டு பால்குடிப்பதற்கு ஒப்பானது. அது அவரது தனிப்பட்ட விருப்பம், இதில் மற்றையவர்கள் சொல்வதற்கு ஏதுமில்லை. அடுத்தது தான் பத‌விக்கு வந்து 24 மணிநேரத்தில் ரஸ்ஸிய - உக்ரேன் போரினை முடிவிற்குக் கொண்டுவந்துவிடுவேன் என்று ட்ரம் கடந்த வருட இறுதியில் கூறியிருந்தார். ஆனால் ஜனாதிபதியாக தேர்தலில் வென்றபின் அந்த 24 மணித்தியாலங்கள் இப்போது 100 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர் நினைத்ததைக் காட்டிலும் நிலைமை தீவிரமாக இருப்பதை அவரது ஆலோசகர்கள் அவருக்குக் கூறியிருக்கிறார்கள். ஆனால், புட்டினுக்குச் சார்பாகவே ட்ரம்ப் நடந்துகொள்வார் என்று நினைப்பது மடைமை. அமெரிக்காவின் நலன்களை விட்டுக் கொடுத்து, அதன் ப‌ரம வைரியான‌ ரஸ்ஸிய சர்வாதிகாரியை ஆதரிக்கவேண்டிய தேவை அமெரிக்காவை முன்னிலைப்படுத்தும் ட்ரப்பிற்கு இருக்குமா என்பது கேள்விக்குறிதான். உக்ரேனிற்கு வாரியிறைக்கும் பணத்தை ட்ரம்ப் நிறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே உக்ரேனை சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவைத்து போரினை முடிவிற்குக் கொண்டுவரவே அவர் முயல்வார். ரஸ்ஸியாவினால் முற்றாக ஆக்கிரமிக்கப்படுவதைக் காட்டிலும் உக்ரேனிற்கு இது கெளரவமானது. புட்டினுக்கும் அதிக கெளரவ இழுக்கில்லாமல் போரை நிறுத்திக்கொள்ள இது உதவும். ரஸ்ஸியாவிலிருந்து தனக்குக் கிடைக்கும் எண்ணெய், கணியவளம், பணவுதவிகள், ஏவுகணைத் தொழிநுட்பம் என்பவற்றிற்காகவே தனது படைவீரர்களை வடகொரிய சர்வாதிகாரி ரஸ்ஸியாவிற்கு அனுப்பியிருக்கிறார். ஆரம்ப கட்டமாக அனுப்பப்பட்ட 11,000 வடகொரிய வீரர்களில் இதுவரை 3,000 இற்கும் அதிகமானோர் கள‌முனையிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றனர். சிலநாட்களுக்கு முன்னர் கேர்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான வடகொரிய வீரர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் இருக்கின்றனர். ஆனாலும் தனது படைவீரர்களை ரஸ்ஸியாவிற்கு அனுப்புவதை கிம் நிறுத்தப்போவதில்லை. இன்னும் 40,000 முதல் 50,000 படைவீரர்களை கிம் விரைவில் அனுப்பிவைக்கலாம் என்று உக்ரேனிய அதிபரே பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். கிறீன்லாந்து விவகாரம் தனியானது. தற்போதும் அங்கு அமெரிக்கத் தளங்கள் இருக்கின்றன. மேற்குலகின் பாதுகாப்பிற்காக அங்கு அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் முழு கிறீன்லாந்தையுமே அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்கவேண்டும் என்று ட்ர்மப் கூறுகிறார். ஐரோப்பாவின் பாதுகாப்பு முக்கியம் என்றால் அதனை என்னிடம் தாருங்கள் என்பதே அவரது வாதம். கிறீன்லாந்தின் மீது டென்மார்க் அதிகாரம் கொண்டிருக்கிறது என்பது ஓரளவிற்கே உண்மையானது. ஆனால் கிறீன்லாந்து என்ன செய்யவேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று டென்மார்க் பிரதமர் கூறியிருக்கிறார். ரஸ்ஸியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இருக்கும் நிலப்பகுதியான கிறீன்லாந்தை தன்னிடம் தரச்சொல்லி ட்ரம்ப் கோருவது ரஸ்ஸியாவுடன் விளையாட்டுப் போட்டி நடத்தவல்ல. அடுத்தது பணாமாக் கால்வாய். அமெரிக்காவின் பெரும் முதலீட்டுடன் செய்துமுடிக்கப்பட்டு 1999 இல் பணாமாவிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்ட இக்கால்வாயைச் சுற்றி சீனா தனது முதலீடுகளைச் செய்துவருகிறது. சீனச் சார்பு அரசு பணாமாவில் ஆட்சியில் இருப்பதால் அவ்வரசை தனது பணத்தால் வாங்கிவிட்ட சீனா, அமெரிக்காவின் அடிவயிற்றிலேயே தனது கோட்டைகளைக் கட்டிவருகிறது. பணமாக் கால்வாயூடாக நடைபெறும் வர்த்தகக் கப்பல்களில் சுமார் 40 இலிருந்து 60 வீதம் வரையான கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. ஆகவே தனது வர்த்தகத்தைத் தக்கவைக்கவும், தன்னால் கட்டிமுடிக்கப்பட்ட கால்வாய் தனது புதிய எதிரியான சீனாவின் கட்டுப்பாட்டில் செல்வதைத் தடுக்கவும் ட்ரம்ப் முயல்கிறார் என்று தெரிகிறது. இதனாலேயே பணமாக் கால்வாயினை மீளவும் பொறுப்பெடுக்கப்போகிறோம் என்று ட்ரம்ப் கூறுகிறார். கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் ட்ரம்ப்பின் கூற்று நகைப்பிற்கிடமானது. தான் அதிகரிக்கவிருக்கும் வரியை (25%) நியாயப்படுத்தவே இதனை அவர் செய்கிறார். கனேடிய எல்லைகளுக்கூடாக பல தஞ்சக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவினுள் நுழைவதைத் தடுப்பதே அவரது நோக்கமாக இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.