ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: 90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
பெரும்பாலான தமிழ் யூடியூப்பர்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர்கள் தாம் பேசுவது தெரிந்துதான் பேசுகிறார்களா அல்லது தமிழ்பேசும் இஸ்லாமியர்களைக் குளிர்விக்க இப்படிப் பிதற்றுகிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது. இஸ்ரேல் சுக்குநூறாகியது, மரண அடி, அழிந்தான் யூதன், அமெரிக்கா பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடுகிறது, அமெரிக்காவின் விமானத் தாங்கிக் கப்பல்களை ஈரானின் ட்ரோன்கள் நிர்மூலமாக்கின, இஸ்ரேல் பிரதமர் நெத்தென்யாகு ஈரானினால் துல்லியமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று தாம் விரும்பியவாறு தலைப்பிட்டு தமது மனம் போன போக்கில் எடுத்துவிடுகிறார்கள். இதிலும் சில ஈழத்தமிழர்கள் மதில்மேல் பூனைபோல இருந்துகொண்டு ஒரு நாள் அமெரிக்காவிற்குச் சார்பாகவும் மறுநாள் ஈரானுக்குச் சார்பாகவும் பேசுகிறார்கள். தமிழ் அடியான் என்கிற யூடியூப்பர் ஒருநாள் அமெரிக்காவை போர்க்களத்தில் இருந்து ஈரான் அகற்றிவிட்டது, அமெரிக்கப் படைகள் முற்றாக மத்திய கிழக்கில் இருந்து காணமலாக்கப்பட்டிருக்கின்றன என்று செய்தி வெளியிட்டார். மறுநாள் அமெரிக்காவின் பாரிய நெடுந்தூரக் குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் பல நிலைகளைத் தாக்கியழித்தபோது, தான் முதல்நாள் கூறியதற்கு நேரெதிராகப் பேசியிருந்தார். நான் இதுகுறித்து அவரிடம் கேள்வவி எழுப்பியபோது சில மணிநேரத்தில் எனது பதிவு அவரால் நீக்கப்பட்டது. இப்படித்தான் தமிழ் யூடியூப்பர்களின் நிலை. இவர்கள் வெளியிடும் காணொளிகளை உண்மையென்று நம்பும் எம்மவர்கள் இதுகுறித்துச் சிந்திப்பது நலம். 😊
-
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை
ஈரானின் கார்க் தீவினை அமெரிக்கா கைப்பற்றலாம் என்றும், ஈரானின் கரையோரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா அழிக்கலாம் என்றும், யுரேனியத்தினை கைப்பற்ற அமெரிக்காவின் சிறப்புப் படைப்பிரிவு இறக்கப்படாலாம் என்றும் கூறுகிறார்கள். இவற்றுள் ஏதோவொன்றோ அல்லது அனைத்துமோ நடக்க சந்தர்ப்பம் இருக்கிறது. போர் எதிர்பார்க்கப்பட்டதுபோல விரைவில் முடிவடையாது இழுபட்டுச் செல்வது ட்ரம்ப்பின் அரசு மீது கடுமையான அழுத்தத்தினைச் செலுத்துகிறது. ஈரானின் அரச, இராணுவ தலைமைகள் தொடர்ச்சியாக ஆழிக்கப்பட்டு வந்தாலும்கூட மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நிலைகள், இஸ்ரேல், ஏனைய வளைகுடா நாடுகள் மீதான் தாக்குதல்களை ஈரான் தொடர்ச்சியாகவே நடத்திவருகிறது. ஈரானின் தாக்குதல் வீரியம் குறைந்துவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாகக் கூறிவந்தபோதிலும் ஈரானின் தாக்குதல்கள் இன்றும் தொடர்கிறது. ஆகவே நான் மேற்கூறிய திட்டங்களில் ஒன்றினையோ அல்லது அனைத்தையுமோ மிக விரைவில் ஆரம்பிக்கவேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது. கார்க் தீவும் ஈரானிற்குச் சொந்தமான வர்த்தக கட்டமைப்புக்கள் கொண்டிருக்கும் இன்னொரு கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரமும் இலக்குவைக்கப்பட்டால் ஈரான் யுத்த நிறுத்தப் பேச்சுக்களுக்கு இணங்குவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது என்று மத்திய கிழக்கின் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கிறார் (ஆதாரம் : சி என் என்) நீங்கள் காமெடி கீமடி ஒன்றும் பண்ணவில்லயே? என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது நன்றாகவே புரிந்தது. என்றாலும், சும்மா, பவுடிக்கிச் சுட்டிக் காட்டலாம் என்று!
-
ஈரானுக்கு எதிரான போர் - அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு
ஈரானில் நடந்துவரும் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் செலவு எனும் தலைப்பைப் பார்த்தபோது எனக்கு மனதில் வந்த ஒரே கேள்வி, வெறும் மூன்று வாரத்திற்குள்ளாகவே அமெரிக்கா 11 பில்லியன் டொலர்களை செலவழித்து விட்டதென்றால், உக்ரேனில் நான்கு வருடங்களாக பல இலட்சம் இராணுவத்தினரை நேரடியாக அனுப்பி முற்றான ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் ரஸ்ஸியா எவ்வளவு பணத்தை விரயமாக்கியிருக்கும் என்பதுதான். ஆகவே இதுகுறித்துத் தேடியபோது எனக்குக் கிடைத்த தகவல்களை இங்கே பகிர்கிறேன். 💰 1. நேரடி இராணுவ & செயல்பாட்டு செலவு ஆரம்பத்தில் மாதத்திற்கு சுமார் $3–4 பில்லியன் ~4 ஆண்டுகளுக்கு மொத்தம்: ~$150 பில்லியன் ரஷ்யாவின் ஆண்டு போர்செலவு தற்போது: வருடத்திற்கு சுமார் $100+ பில்லியன் (2025) 👉 வெறும் போராட்ட செலவு: ~$150–300 பில்லியன்+ 🪖 2. விரிவான நேரடி போர் செலவு (ஆயுத இழப்புகள், போக்குவரத்து, பராமரிப்பு போன்றவை உட்பட) சுமார் $450+ பில்லியன் சில மதிப்பீடுகள்: ~$550 பில்லியன் 👉 பொதுவாக கூறப்படும் மொத்த நேரடி செலவு: $450–550 பில்லியன் 📉 3. முழுமையான பொருளாதார தாக்கம் (தடைச் சட்டங்கள், வர்த்தக இழப்புகள், முதலீட்டு குறைவு, வேலைவாய்ப்பு பாதிப்பு போன்றவை) அதிகபட்சமாக ~$2.5 டிரில்லியன் வரை தாக்கம் இருக்கலாம் 👉 இது உண்மையான நீண்டகால பொருளாதார சுமையை காட்டுகிறது ⚖️ முடிவு (சுருக்கமாக) இராணுவ செலவு மட்டும்: ~$150–300 பில்லியன் மொத்த நேரடி போர் செலவு: ~$450–550 பில்லியன் முழு பொருளாதார தாக்கம்: ~$2+ டிரில்லியன் 🧠 முக்கிய குறிப்புகள் ரஷ்யா இந்தச் செலவுகளை சமாளிப்பதற்கு எண்ணெய் வருவாய் மீது பெரிதும் சார்ந்துள்ளது அதன் அரசாங்க செலவில் சுமார் 40% பாதுகாப்பு/போருக்காக செலவிடப்படுகிறது நீண்டகாலத்தில் பொருளாதார வளர்ச்சி இழப்பு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும்
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
ஈரானின் அணு நிலைகள் மீது தாக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன், ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை. இப்போரினை முடிவிற்குக் கொண்டுவருமுன்னர் அவற்றினையாவது அழித்தால் சிறிது காலத்திற்காவது நிம்மதியாய் இருக்கலாம். அதுகூட இல்லையென்றால், இவ்வளவு பொருட்செலவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கமெய்னி எலி கொல்லப்பட்டதைத் தவிர வேறு நல்விடயங்கள் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. ரஸ்ஸியாவும் சீனாவும் ஈரானின் எண்ணெய்க்காகவே இப்போரில் அழிக்கப்பட்ட ஈரானிய ஆயுதங்களை புதுப்பித்துக் கொடுக்கும் என்று நம்பலாம். இஸ்லாமிய அடிப்படைவாத கொடுங்கோலாட்சியை அகற்றுதல் அணுவாயுத உற்பத்தியை தடுத்து நிறுத்தல் சர்வதேசப் பயங்கரவாதிகளுக்கான உதவியை நிறுத்தல் நீண்டதூர ஏவுகணை உற்பத்தியை நிறுத்தல் என்று இவை எதுவுமே இன்னமும் நடைபெறவில்லை. பார்க்கலாம், இஸ்ரேல் இருக்கிறது!
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நடந்துவரும் போரினை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்கிற அழுத்தம் ட்ரம்பின் மேல் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. உயர்ந்து செல்லும் மசகு எண்ணெயின் விலை, அது உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம், ஹோர்முஸ் நீரிணையினை ஈரான் தனது சகட்டுமேனித் தாக்குதல்கள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலை என்பன எல்லாம் சேர்ந்து ட்ரம்பை யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவரவேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதாகவே தெரிகிறது. இஸ்ரேல் போர் தொடரப்பட்டு, ஈரானிய அடிப்படைவாத முல்லாக்களின் அரசு கவிழும் வரை நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினாலும், அமெரிக்கா இதிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உலக பொருளாதாரம், அமெரிக்கா மீதான அழுத்தம், இஸ்ரேலின் விருப்பு என்பவற்றிற்கு அப்பால் இப்போர் முடிவேதுமின்றி நிறுத்தப்பட்டால் கடுமையாகப் பாதிக்கப்படப்போகும் மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது. அதுதான் ஈரானில் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் ஆட்சியை அகற்றவேண்டி விரும்பிய, போராடிய, அமெரிக்க - இஸ்ரேல் நடவடிக்கைக்கு ஆதரவாக நின்ற ஈரானிய மக்கள். நேற்றிலிருந்து ஈரானிய அரச தொலைக்காட்சி சில நபர்களைத் தொடர்ச்சியாக பேட்டி கண்டு வெளியிட்டு வருகின்றன. ஈரானிய காவல்த்துறை அதிகாரிகள், இராணுவ தளபதிகள், சட்டம் ஒழுங்கு அதிகாரிகள் என்று பலர் இதில் அடக்கம். அவர்கள் எல்லோரும் கூறும் செய்தி இதுதான், "எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போரும் எதிரிகளே, ஆகவே அழிக்கப்படுவீர்கள். எமது வீரர்கள் துப்பாக்கிகளின் விசை அழுத்தியில் விரலை வைத்திருக்கிறார்கள், எந்நேரத்திலும் அவர்கள் உங்களைச் சுட்டுக் கொல்லத் தயங்கப்போவதில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் ஆதரவாக நிற்பவர்களை அடையாளம் கண்டு கொல்லப்போகிறோம், அவர்கள் உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளியுலகில் இருந்தாலும் சரி, அவர்களின் சொத்துக்களை நாம் கையகப்படுத்துவோம், உங்களின் தாய்மார்களை உங்களின் மரணத்திற்காக வருந்தச் செய்வோம், தயவுதாட்சண்யம் இன்றிக் கொல்வோம்...." இப்படி ஏகப்பட்ட அச்சுருத்தல்களை அரச தொலைக்காட்சியில் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்கா போரை நிறுத்துவதால் இஸ்லாமிய அடிப்படைவாத முல்லாக்களின் கொடுங்கோலாட்சி நீடிக்கப்பட வாய்ப்புக்கள் பிறந்திருக்கின்றன. தமது அரசு கவிழப்போவதில்லை எனும் மமதையில் இந்த அச்சுருத்தல்களை கொடுங்கோலாட்சியாளர்கள் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு மாபெரும் மக்கள் படுகொலை அரங்கேரவிருக்கிறது. ஆனாலும் என்ன, அமெரிக்கா இடைநடுவே கையைக் கழுவிவிட்டாலும்கூட, தனது இருப்பிற்காகத் தொடர்ச்சியாகப் போராடிவரும் இஸ்ரேல் நிச்சயம் ஈரானின் முல்லாக்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் முல்லாக்களின் தலைமையினைக் குறிவைத்து அழிக்கும் என்பதை நம்பலாம்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஒரு நாட்டினை உலக வரைபடத்திலிருந்தே அழிப்போம் என்று சொல்வதற்கும், அதை நடைமுறையில் சாதிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. இங்கே ஈரான் செய்வது இரண்டாவது வகை, அதாவது இஸ்ரேலினை முழுவதுமாக அழித்தல். ஆகவே, தன்னை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் விரோத அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு நாடு நிச்சயம் தனது பாதுகாப்புக் குறித்து அதீத கவனம் செலுத்தும், தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்தும் உச்சத்தில் வைத்திருக்கும், தனது எல்லைகளுக்கு அப்பால் எதிரிகளை தடுத்து நிறுத்த தன்னால் ஆன அனைத்தையும் செய்யும். அதைத்தான் இஸ்ரேல் இன்று செய்கிறது. பலஸ்த்தீனம் என்பது இஸ்ரேல் எனும் நாட்டிற்குள் ஆக்கிரமிப்பின் மூலம் உட்பிரவேசித்த அரேபியர்களின் வழித்தோன்றல்களால் வலிந்து உருவாக்கப்பட்ட ஒரு பகுதி. பலஸ்த்தீனர்களுக்கு இஸ்ரேலுடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டே வந்தன. இரு தேச யோசனை முதன்முதலாக 1947 ஆம் (1) ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் முன்வைக்கப்பட்டபோது பலஸ்த்தீனிய அரபுத் தலைமை அதனை முற்றாக நிராகரித்தது. பின்னர் 2000 ஆண்டில் (2) அமெரிக்காவின் காம்ப் டேவிட் பேச்சுக்களின்போது இஸ்ரேலின் பிரதமர் இகுட் பராக்கினால் பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் காஸா உட்பட்ட பகுதியைப் பலஸ்த்தீன தேசம் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஜெருசலேத்தை இரு தேசங்களும் பொதுவான பகுதியாகப் பயன்படுத்தலாம் என்றும் பிரகடனம் செய்தபோது அன்றைய பலஸ்த்தீனத் தலைவர் யாசீர் அரபாத் அதனை நிராகரித்தார். பின்னர் 2008 இல் (3) இஸ்ரேலியப் பிரதமர் இகுட் ஒல்மேர்ட் 75 வீதமான மேற்குக்கரையினையும், கிழக்கு ஜெருசலேத்தின் பல பகுதிகளையும், இதற்கு மேலதிகமாக பலஸ்த்தீனர்கள் இழக்கும் பகுதிகளுக்குப் பதிலாக இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மாற்று நிலப்பரப்பினைத் தருவதாகவும் அறிவித்தபோது அன்றைய பலஸ்த்தீன ஜனாதிபதி மகுமூட் அப்பாஸ் அதனை நிராகரித்தார். பலஸ்த்தீனர்கள் 1993 ஆம் ஆண்டிலிருந்து இரு தேசக் கொள்கைக்கு ஆதரவானவர்கள் என்று வெளியுலகில் அவ்வப்போது காட்டி வந்தாலும்கூட, இஸ்ரேல் அதனை வெளிப்படையாக தர முன்வந்தபோது அகதிகள், இறையாண்மை, எல்லைகள் என்று சாட்டுக்களைக் கூறி நிராகரித்தே வந்திருக்கின்றார்கள். ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளால் இஸ்ரேலின் அணுகுமுறையும் இறுக்கமடையத் தொடங்கியது. குறிப்பாக 2024 ஐப்பசி 7 ஆம் திகதியன்று ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் இரு தேசக் கொள்கையென்பதை இஸ்ரேல் முற்றாகக் கைவிட்டு விட்டது. இன்று தனது இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல இஸ்ரேல் தயாராகியிருப்பதாகவே தெரிகிறது. இரு தேசக் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுடன் ஒரு நாட்டில் சமத்துவமாக வாழ்வதை விரும்பாது, ஆயுதம் மூலம் இஸ்ரேலினை அழித்து வெற்றி காணலாம் என்கிற மமதையில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பலஸ்த்தீனர்களின் (இல்லாத) தேசம் அரிக்கப்பட்டு வருவது எனக்கு வியப்பளிக்கவில்லை.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உங்களுக்கு எனது கேள்விகள் புரியவில்லை என்பது உறுதியாகிறது. ஈரான் பெண்களை அடக்கியாள்வது போல வத்திகானும் பெண்களை அடக்கியாள்கிறதா என்று கேட்டால், "ஈரானின் மீது மட்டுமே பழியைப் போட முடியாது" என்கிறீர்கள். எனது கேள்விக்குப் பதில் இதுவல்லவே? ஒன்றில், "ஆம் , வத்திகானும் பெண்களை அடிமைப்படுத்துகிறது", அல்லது, "இல்லை, வத்திக்கான் பெண்களை அடிமைப்படுத்தவில்லை" என்றுதான் உங்கள் பதில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், வழமைபோல் இங்கும் குழப்பி விட்டிருக்கிறீர்கள். மறுபடியும் அதே பித்தலாட்டமான பதில். ஈரானைப் போல் வத்திக்கானும் தனது நாட்டு மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று தள்ளி கொடுங்கோலாட்சி புரிகிறதா என்று கேட்டால், "மேற்குத்தான் இதெல்லாவற்றையும் செய்கிறது" என்று பிதற்றுகிறீர்கள். ஒன்று செய்யுங்கள். முதலில் நான் உங்களிடம் என்ன கேட்டேன் என்பதை கவனமாகப் படியுங்கள். பின்னர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள். முடியவில்லையென்றால், சிரமத்தைத் தவிருங்கள்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மறுபடியும் அதே மாடும் மரமும். வத்திக்கான் பற்றிப் பேசினால், அமெரிக்காவும், பிரான்ஸும், ஜேர்மனியும் ஆயுதம் விற்கின்றனவே என்கிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்ட கேள்விகள் புரியவில்லையா, அல்லது உங்களின் பதில்களுக்கு ஏற்ற வகையில் எனது கேள்விகள் அமையவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. சரி, பரவாயில்லை, நீங்கள் கூறுவது இதுவாகத்தான் இருக்கும் என்று குத்துமதிப்பில் பதிலளிக்கிறேன். வத்திகான் என்பது தனியான ஒரு நாடு. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசரும் அவரது உதவிக் குருக்களும் வசிக்கும் ஒரு சிறிய நாடு. இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்திருக்கும் வெறும் 0.5 சதுரக் கிலோமீட்டரே கொண்ட சின்னஞ்சிறிய இறையாண்மையுள்ள ஒரு நாடு. அவரது பாதுகாப்பிற்கென்று ஒரு சிறிய பொலீஸ் படையினை அவர்கள் வைத்திருக்கிறார்கள். வத்திக்கான் ஆயுதங்களைத் தயார் செய்வதில்லை. அவற்றை ஏற்றுமதி செய்வதில்லை. ஆயுதங்களையோ குண்டுகளையோ மக்கள் மீது தூவுவதும் இல்லை. நீங்கள் வத்திகான் நாடு, அமெரிக்கா ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளை ஆள்வதாக நினைத்தால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உண்மை என்னவென்றால் இந்நாடுகளை வத்திக்கான் கட்டுப்படுத்துவதுமில்லை, இந்நாடுகள் வத்திக்கானைக் கட்டுப்படுத்துவதுமில்லை. *** ஈரானிய அடக்குமுறையாளர்கள் அமெரிக்காவை பெரிய சாத்தான் என்றும், இஸ்ரேலினை சின்னச் சாத்தான் என்றும் அழைப்பது பற்றியே எனது கேள்வி அமைந்திருந்தது. அதாவது ஈரான் இப்படி அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அழைப்பது போல வத்திக்கானும் எந்த நாட்டையாவது "சாத்தான்" என்று அழைக்கிறதா என்று கேட்டால், "சாத்தான் எனும் சொல் கிறீஸ்த்தவத்தில் இருக்கிறது" என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு உண்மையாகவே நான் கேட்டது விளங்கவில்லை போலும், பரவாயில்லை, அதிகம் சிரமப்படாதீர்கள்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மறுபடியும் அதே மரக் கேள்வி. இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுதான் தனது ஒரே நோக்கம் என்று ஈரான் சொல்கிறது, ஆனால் வத்திக்கானுக்கு அப்படி எந்த நாட்டையும் அழிக்கும் நோக்கம் இல்லையென்று நான் கூறினால், பலஸ்த்தீனம் அரிக்கப்படுவது எனது கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறீர்கள். உங்களால் நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லையென்றால் விட்டு விடுங்கள். பலஸ்த்தீனம் பற்றி வேறு ஒரு திரியில் நீட்டி விளக்கலாம். ஆக, வத்திக்கான் கிறீஸ்த்தவப் பயங்கரவாதிகளுக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அயலில் உள்ள நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, அந்நாடுகளை உலக வரைபடத்திலிருந்து நீக்கக் கோரி உசுப்பேற்றி வருகிறது என்கிறீர்கள். நீங்கள் இவ்வளவு உறுதியாகச் சொல்வதால் அது உண்மையாக இருக்கலாம், ஆகவே தயவுசெய்து வத்திக்கான் பணம் அனுப்பி, அயல் நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் நாடுகளை இங்கே பட்டியலிட்டு விடுங்கள். இங்குள்ள அனைவருக்கும் அது பேருதவியாக இருக்கும்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஆம் , இது உண்மைதான். இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னரான காலத்தில் பல காலணித்துவ நாடுகள் விடுதலை பெற, அதுவரை ஆட்சிசெய்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆகவே இச்செயற்பாடுகள் தற்போது நடைமுறையில் இல்லை. ஆனால் ஈரான் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடுகளில் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களை அடக்கியாளும் நடைமுறை இன்னமும் நடந்தே வருகிறது. மாட்டைப் பற்றி பேசலாம் என்றால், மாட்டை மரத்தில் கொண்டுவந்து கட்டிவிட்டு, சம்பந்தமேயில்லாமல் மரத்தைப்பற்றி பேசுகிறீர்கள். பரவாயில்லை, என்னால் முடிந்தளவில் பதில் தர முயல்கிறேன். நான் கேட்ட கேள்விகள் வத்திக்கான் பற்றியது. வத்திக்கான் அணுவாயுதம் வைத்திருக்கிறதா என்று கேட்டால், கிறீஸ்த்தவ நாடுகளிடம் இல்லையா என்று கேட்கிறீர்கள். வத்திக்கானும் கிறீஸ்த்தவ நாடுகள் ஒன்று என்று உங்களிடம் சொன்னது யார்? அடுத்ததாக, கிறீஸ்த்தவ நாடுகள் என்று நீங்கள் குறிப்பிடும் நாடுகள் எவை? அவற்றிற்கும் வத்திக்கானிற்கும் என்ன சம்பந்தம்? வத்திக்கான் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா அல்லது இந்த நாடுகள் தான் வத்திக்கானின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா? அமெரிக்கா கிறீஸ்த்தவ நாடென்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்யமுடியும்? பெரும்பாலான அமெரிக்கர்கள் நாத்திகர்கள். இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவையும் அப்படித்தான். ரஸ்ஸியா வத்திகானினால் கட்டுப்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை நீங்கள் தான் விளக்கவேண்டும். சீனாவோ இந்தியாவோ வடகொரியாவோ வத்திகானின் கட்டுப்பாட்டில் இல்லையென்று எனக்குத் தெரியும்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நான் யாரை கதாநாயகனாகக் கருதுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக மத அடிப்படைவாதத்தினால் தனது நாட்டு மக்களை அடக்கியாளும் ஒருவரை இல்லை என்பது எனக்குத் தெரியும். அப்படியானால் நான் ட்ரம்ப்பையோ அல்லது நெத்தென்னியாகுவையோ கதாநாயகனாக நினைக்கிறேனா என்றால், அப்படியுமில்லை. நடந்துவரும் இப்போரில் ஈரானின் மத அடிப்படைவாத அடக்குமுறையாளர்கள் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன. அதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னின்று செய்வதனால், அவர்களின் முயற்சிகளுக்கு அதரவாக எழுதுகிறேன். இதில் கதாநாயகத்தன்மை எதுவும் இல்லை. அறிவு எல்லோரதும் பிறப்புரிமை, சரி. கண்முன்னே நடைபெறும் அடிப்படைவாத அடக்குமுறையினை எதிர்ப்பதனால் நான் ஒரு பக்கவாதியாக உங்களுக்குத் தெரிந்தால் நான் என்ன செய்வது? இந்த விடயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஈரானின் மத அடிப்படைவாதிகளை ஆதரித்தும் (எதற்கென்ற தெளிவு சற்றும் இல்லாமல்), அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களை எதிர்த்தும் எழுதினால் நான் பக்கச்சார்பற்றவனான இருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? சரித்திரம், வரலாறு, தனிப்பட்ட அனுபவங்கள், நிகழ்காலச் சம்பவங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே ஒருவர் பல விடயங்கள் தொடர்பான தனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வருகிறார். இதனால் அவர் ஏதோ ஒரு பக்கத்திற்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கத்திற்கு எதிராகவும் கருத்துக்களைக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அப்படியில்லாமல், இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு, ஒரு பிரச்சினை தொடர்பாக எந்தவித பிரக்ஞையுமற்று, பக்கச்சார்பின்றி அவர் மாறவேண்டும் என்று நீங்கள் கேட்பது சரியானதா? ஒரு உதாரணத்திற்கு, இலங்கையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் தமக்கென்று ஒரு புரிதலினைக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்புரிதல் அவர்களின் கடந்தகால வரலாறு, அனுபவங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழர்கள் இவற்றினைக் கைவிட்டு, இனப்பிரச்சினையினைப் பக்கச்சார்பின்றி அணுகினால் ஒழிய நிலைத்து நிற்கமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா? ஒருவிடயம் தொடர்பாக தனியொருவர் கொண்டிருக்கும் எண்ணம் அவருக்கே தனித்துவமானது. அதனைக் கொண்டிருப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதனை கதாநாயக விம்பத்தின பின்னால் போகிறவர்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாமே?! ஒருவர் உலக விடயங்களை எந்தெந்த வழிகளில் அறிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் வாழ்நாளில் உங்களது அனுபவங்கள் மூலம் பல விடயங்களை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். சரி, உங்களுக்கு முற்பட்ட காலத்தில் நடந்த விடயங்களை, பழைய வரலாறுகளை, முன்னைய சரித்திரங்களை எப்படி அறிந்துகொண்டீர்கள்? அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கவில்லை. ஆகவே யாராவது ஒருவரின் வாய்மொழிமூலமோ அல்லது பத்திரிக்கைகள், நூல்கள், ஆவணங்கள் மூலமோதான் இதனை அறிந்துகொள்கிறீர்கள். அந்த வழியில்த்தான் இன்றைய செயற்கை நுண்ணறிவும் வருகிறது. இன்று உங்களுக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் நீங்கள் பிறக்கும்போது உங்களது மூளையில் பதியப்பட்டிருந்தனவா? அப்படியில்லை என்றால் எவ்வாறு, எங்கிருந்து அவற்றை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்?
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்தப்பட்டியலை இணைக்கும்போது சரித்திரத்தை அறிந்துதான் இணைத்தீர்களா என்று தெரியவில்லை. அப்படியில்லாமல் அவசரத்தில் எங்கோ கொப்பியடித்து இணைத்திருந்தால், அதுதொடர்பான சில வரலாற்றுத் தகவல்களை இங்கே உங்களின் கவனத்திற்கு இணைத்து விடுகிறேன். முதலாவது ஜப்பானின் படுகொலைகள், அதாவது அமெரிக்காவினால் தாக்கப்படும்வரை Approximate civilian deaths caused by Japanese wartime actions in Asia: China: 10–20 million Indonesia: 3–4 million Vietnam famine: 1–2 million Philippines: 500,000–1 million Other regions (Korea, Burma, Malaya, Singapore): hundreds of thousands Total estimate: 15–25 million civilian deaths இரண்டாவது ஜேர்மனி நடத்திய படுகொலைகள் Approximate civilian deaths caused by Nazi Germany: Soviet Union: 13–14 million Holocaust victims: ~11–12 million Poland (non-Jewish civilians): 2–3 million Balkans: 1–1.5 million Greece: 300,000–500,000 Western Europe: hundreds of thousands Total civilian deaths: ➡️ About 17–20 million people
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உலகிலேயே மனிதாபிமானம் மிக்க வல்லரசின் நடவடிக்கைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போன்ற ஒரு முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையொன்றின் விபரங்கள் கீழே. நம்புங்கள், வல்லரசு எனும் பொறுப்புணர்வுடனேயே இவை யாவும் நடத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போர் (1939–1945) முடிவில், குறிப்பாக 1944–1945 காலத்தில், சோவியத் Red Army ஐரோப்பாவில் முன்னேறியபோது சில இடங்களில் பெரிய அளவில் பாலியல் வன்முறைகள் நடந்ததாக பல வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சரியான எண்ணிக்கையை நிரூபிக்க முடியவில்லை, ஏனெனில் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் மதிப்பீடு வரலாற்றாசிரியர்கள் கூறும் முக்கியமான மதிப்பீடுகள்: ஜெர்மனி – சுமார் 14 லட்சம் முதல் 20 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மதிப்பீடு. பெர்லின் நகரம் மட்டும் – சுமார் 1 லட்சம் பெண்கள். ஹங்கேரி (புடாபெஸ்ட்) – சுமார் 50,000 பெண்கள். ஆஸ்திரியா (வியன்னா) – சுமார் 70,000 – 1,10,000 பெண்கள். ரோமேனியா – சில ஆய்வுகள் 3 லட்சம் வரை சம்பவங்கள் நடந்ததாக கூறுகின்றன. செர்பியா / யூகோஸ்லாவியா – ஆயிரக்கணக்கில் இருந்து பத்தாயிரக்கணக்கில் சம்பவங்கள். ஐரோப்பா முழுவதும் மொத்தமாக வரலாற்று ஆய்வுகள் கூறும் மதிப்பீடு: சுமார் 20 லட்சம் முதல் 30 லட்சம் பெண்கள் சோவியத் படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம். கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இது மேலும் உறுதியாக தெரியாதது. இருப்பினும் சில ஆய்வுகள் கூறுவது: ஜெர்மனியில் மட்டும் சுமார் 2,40,000 பெண்கள் பலாத்காரம், காயம், நோய் அல்லது தற்கொலை காரணமாக இறந்திருக்கலாம். பெர்லின் நகரத்தில் சுமார் 10,000 பெண்கள் பலாத்காரம் தொடர்பான காரணங்களால் இறந்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த மரணங்களில் அடங்குவது பலாத்காரத்தின் போது கொலை செய்யப்பட்டவர்கள் கடுமையான காயங்களால் இறந்தவர்கள் மனவேதனையால் தற்கொலை செய்தவர்கள் நோய்கள் அல்லது சிகிச்சையில்லாமை காரணமாக இறந்தவர்கள்
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
உலகிலேயே அதிகம் மனிதாபிமானத்தைக் காக்கும் வல்லலரசு என்றவுடன் எனது மனதில் முதலாவதாக உதித்த நாடொன்றின் மனிதாபிமான நடவடிக்கைகளின் குறிப்பு. 1945க்கு பிறகு ரஷ்யா / சோவியத் நடவடிக்கைகளால் உயிரிழந்த பொதுமக்கள் (நாடு வாரியாக) நாடு சம்பவம் / போர் பொதுமக்கள் உயிரிழப்பு (மதிப்பீடு) Afghanistan Soviet–Afghan War (1979–1989) 562,000 – 2,000,000 பொதுமக்கள் Hungary Hungarian Revolution of 1956 சுமார் 2,500 பேர் Czechoslovakia Prague Spring invasion (1968) சுமார் 137 பொதுமக்கள் Lithuania Soviet suppression (1991 Vilnius events) சுமார் 14 பொதுமக்கள் Latvia Soviet crackdown (1991 Riga events) 5 பொதுமக்கள் Germany East German uprising suppression 300,000 +பேர் 240,000 பெண்கள் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டனர் Poland Soviet-backed repression (1945–1950s) ஆயிரக்கணக்கான கைது, நூற்றுக்கணக்கான மரணங்கள் China Sino-Soviet border conflict (1969) நூற்றுக்கணக்கானோர் Afghanistan தனிப்பட்ட படுகொலைகள் (உதா: Laghman, Kunduz) சில நூறு முதல் ஆயிரம் வரை சோவியத் ஒன்றியத்துக்குள் (Russia உட்பட) பொதுமக்கள் மரணங்கள் இடம் சம்பவம் மதிப்பீடு Soviet Union (உள்ளக அடக்குமுறை) Gulag, அரசியல் அடக்குமுறை மில்லியன் கணக்கில் (பல்வேறு ஆய்வுகள்) Chechnya First Chechen War (1994–1996) 30,000–50,000 பொதுமக்கள் Chechnya Second Chechen War (1999–2009) சுமார் 30,000 பொதுமக்கள் முக்கிய நாடுகள் – மொத்தம் (rough estimate) நாடு பொதுமக்கள் உயிரிழப்பு Afghanistan 0.6 – 2 மில்லியன் Hungary ~2,500 Czechoslovakia ~137 East Germany 300,000 Lithuania 14 Latvia 5 Chechnya (Russia) ~60,000–80,000
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இந்த கேள்விகளுக்கு முதலில் விடையளியுங்கள், பின்னர் தொடர்ந்து பேசலாம். 1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது? 2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது? 3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது? 4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது? 5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது? 6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது? அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது? அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது?