Everything posted by vanangaamudi
-
கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றதற்காக city hardware மீது அண்மையில் பா.உ இளங்குமரன் செய்த பொலிஸ் முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட வந்த அமைச்சர் சந்திரசேகர் இதுபோன்ற மணல் திருட்டுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்ற நிலையில் இந்த விவகாரத்தில் எதுவித சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கான தகவல் உண்டா?
-
அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தற்போது நாட்டில் உள்ள அரசியல் கைதிகள் எத்தனைபேர் என்பதை அரசாங்கத்தின் தரப்பில் இருந்து பெற்றுகொள்வது சாத்தியமா?
-
யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
கொட்டடி என்ன பருத்தித்துறையிலா இருக்கு? அப்படியானால் இரண்டும் வெவ்வேறு சம்பவங்களா ?
-
கந்த சஷ்டி கவசத்தை ஒலிப்பதிவு செய்ய... சூலமங்கலம் சகோதரிகள் பட்ட சிரமங்கள்.
இந்தியாவில் தொண்டை நாட்டில் வாழ்ந்த ஶ்ரீ தேவராய சுவாமிகள் என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட தேவராயபிள்ளை என்ற தமிழ்ப்புலவர் அருளிச்செய்த கந்த சஷ்டி கவச பாடலின் அருள் சொட்டும் இனிய வரிகளை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்கும்போது அது தேனிலும் இனிமை. தேவராய சுவாமிகள் முருகனின் ஆறுபடை வீடுகள் அனைத்துக்கும் தனித்தனியாக கந்த சஷ்டி கவசங்களை இயற்றியிருந்தாலும் திருச்செந்தூர் வேலவன் மீது பாடப்பட்ட "சஷ்டியை நோக்க சரவணபவனார் ..." என்ற பாடல்தான் அதிக பிரசித்தமானது. புலவர் இந்தபாடலை சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அரங்கேற்றம் செய்தார். குறள் வெண்பா, காப்பு, சரணம் உள்ளடக்கிய 244 கவச வரிகளையும் முருகன் அடியார்களில் பலர் தாமாகவே மனனம் செய்துகொண்டு ஓதுவர். மூலப்பாடலின் வரும் ஒரு வரியை (வரி 84) சூலமங்கலம் சகோதரிகள் வேண்டுமென்றே மாற்றிபாடியதாகவும் சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த பாடல் ஐந்து இராகங்கள் அடங்கிய ஒரு இராக மாலிகையாக அமைந்திருப்பதும் இங்கு விசேடம்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
விமானங்களில் பறப்பின் போது தலைமை விமானி மற்றும் துணை விமானிகளுக்கு பெரும்பாலும் வெவ்வேறு உணவுகளே பரிமாறப்படும். இந்த நடைமுறை "crew meal segregation" என்று அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கான முக்கிய காரணம், மாசடைந்த அல்லது நோய் தொற்று உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் பரவும் வியாதிகளால் ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதாகும்/குறைப்பதாகும்.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
பா.உ இளங்குமரன் நடந்துகொண்டவிதம் முற்றிலும் சரியானதே. மக்களின் பிரதிநிதியாக திருடர்களை தப்பிக்கவிடாமல் உடனடியாக செயல்பட்டு கனிமம் கடத்திய லாரிகளை கைப்பற்றி பொலிசாரிடம் அவற்றை ஒப்படைத்தார். பொது மக்களே திரண்டுவந்து இதே போல் செயற்பட்டிருந்தால் அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அதேபோலத்தான் இதுவும். அவசர நேரத்தில் குற்றச்செயலை தடுப்பதற்கு அவர் நடந்துகொண்டவிதம் பாராட்டுக்குரியது.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
City hadware நிறுவனம் சுண்ணக்கல் அகழ்வு செய்து விற்பனை செய்யும் தொழிலை நீண்ட காலமாக ஒரு இரகசிய பக்க வியாபாரமாக(side business) செய்து வந்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது. மேற்படி நிறுவனத்தின் இணயத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ள வர்த்தக பொருட்களில் சுண்ணக்கல் ஒரு வியாபர பொருளாக எங்குமே குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. பெருஞ்சுரங்கத் தொழில் மற்றும் பாரிய கனிம அகழ்வுகளுக்காக வழங்கப்படும் அரச அனுமதி மட்டும் தான் கம்பனிகள் அகழ்வு செய்த தாதுப்பொருட்களை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கான அனுமதியையும் உள்ளடக்கியிருக்கிறது. மற்ற வகையான கனிம அகழ்வுகள் செய்பவர்கள் கனிமங்களை பார ஊர்திகளில் ஏற்றிச்செல்ல தனிப்பட்ட அனுமதி பெறவேண்டும். எனவே மேற்குறித்த சம்பவத்தினூடாக இஸ்தாபனத்தின் தாதுபொருட்கள் ஏற்றிசெல்வதற்கான அனுமதி பற்றிய புரிதல் உட்பட அவர்களின் கனிம அகழ்வுக்கான தற்போதுள்ள அனுமதி அனைத்தும் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. இஸ்தாபனத்தின் உரிமையாளர் சோ. பிரகதீஸ்வரன் இந்த தொழிலை 14 வருடங்களாக செய்துவருவதாக கூறியிருக்கிறார். எனவே அவருக்கு வழங்கப்பட்ட கனிம அகழ்வுக்கானஅனுமதி சரியான முறையில் புதுப்பிக்கப்படுள்ளதா என்பதும் இங்கு ஆராயப்படவேண்டிய ஒன்று.
-
இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
தாதுப்பொருள் மற்றும் கனிமம் உள்ளடங்கலாக இயற்கை வளங்கள் எதுவானாலும் அவற்றை அகழ்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் வேண்டிய அரசின் அனுமதி குறித்த உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கும் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு அனுப்புவதற்கும் தனித்தனியான அனுமதிகள் உண்டு. இவ்வாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தில் அது செல்லும் பாதையில் சோதனைக்கு ஆயத்தமாக உரிய அனுமதி பத்திரங்களின் பிரதிகள் வாகனத்தின் சாரதியின் பொறுப்பில் பாதுகாத்து வைக்கப்படவேண்டும்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
இந்த திட்டம் நாட்டின் அனைத்து மக்களுக்குமானது எனவே அதை நடைமுறைப்படுத்துவதற்கு உழைக்கவேண்டிய கடமை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம் உட்பட நாட்டின் அனைத்து பொதுமக்களும்தானே. அனைத்து இன மக்களும் இணைந்து ஒரே கண்ணோட்டத்துடனும் ஈடுபாட்டுடனும் செயலாற்றுவது தான் முக்கியம். https://cleansrilanka.gov.lk
-
போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!
சில வேளைகளில் நாங்கள் சில காரியங்களை செய்யும்போது அது பிழையாகி போனால் அதை அப்படியே சரி செய்யாமல் முதலில் இருந்து தொடங்குவோம். அப்படி ஒரு நாடு தான் இந்தியா. இந்தியாவை திருத்த முடியாது அழித்து தான் முதலில் இருந்து கட்டவேண்டும். எனவே 3-ஆம் உலகப்போர் என்று ஒன்று வந்தால் அதை சரியாக பயன்படுத்தி இந்தியர்கள் முயன்றுபார்க்கலாம்.
-
தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் தார்ப்பரியத்தை இந்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் நன்கு புரிந்துகொண்டுதான் செயற்பட்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். இலங்கையிலிருந்து அனுப்பப்படும் குரங்குகள் சீனாவில் மிருகக் காட்சிசாலைக்கு போகாது சீனர்களின் சமயலறைக்குதான் போகும் என்பதை மனதில் வைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே இங்கு ஜீவகாருண்யத்திற்குத்தான் முதலிடம்.
-
திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு !
இந்த வகை (Shikra Target) ஆளில்லா வான்வழி இலக்கு விமானங்கள் (Aerial Target Unmanned Airgraft) இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள ANADRONE என்ற தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. முன்பும் ஒருமுறை(2022 ஆம் ஆண்டில்) இலங்கையை அண்டிய கடற்பிரதேசத்தில் இதுபோன்ற ஆளில்லா விமானத்தை மீனவர்கள் கண்டுபிடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக 2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி சுரங்கவழிப்பாதையில் இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான விஞ்ஞான தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால் மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5) சாத்தியமாகலாம்.
-
2028 ஆம் ஆண்டும் எமது ஆட்சியே - ஜனாதிபதி அநுர
அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள். இது போன்று ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஆளும் தரப்பிலிருந்து விடப்படும் அறிவிப்புகள் வரப்போகும் சீர்கேட்ட ஆட்சிக்கு பிள்ளையார் சுழி போடாமல் பார்த்து நடந்தால் அனைவருக்கும் நல்லது.
-
12 முறை மீண்டும் மீண்டும் விவாகரத்து செய்து இணைந்த தம்பதி; தெரியவந்த அதிர்ச்சி தகவல்
இந்த செய்தியில் கிடைத்த மேலதிக தகவல்> மேற்படி பெண்ணின் கணவர் ஒரு லாரி டிரைவராதலால் அவர் அதிகம் வீட்டில் இருப்பதில்லை என்றும் அதனால் தனக்கு கடுமையான மனவுளைச்சல் ஏற்படுவதாக கூறி மணமுறிவு பெற்றதுடன் ஒவ்வொருதரமும் சுமார் 28000 டாலர் இழப்பீட்டு தொகையையும் அரசிடமிருந்து பெற்றிருக்கிறார். பின்னர் அரசு நிறுத்தி வைத்த கைம்பெண் உதவி தொகையையும் மீளப்பெறுவதற்கான அனுமதியையும் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால் மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அர்ச்சுனா அவசரப்பட்டு இப்போது பாதை மாறி பயணிப்பதாகவே எனக்கு படுகிறது. தான்தோன்றித்தனமாக யாழ் வைத்தியசாலைக்கு சென்று சத்திய மூர்த்தியை சந்தித்ததும், அங்கு ஊழியர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதும் தப்பு. எதிராளிகளை பழிவாங்குவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் பெற்றுக்கொண்டாதாக எண்ணத்தோன்றுகிறது. அநீதியை தட்டிக்கேட்பதற்கு சரியான வழிமுறைகளை பின்பற்றாமல், தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அனைத்தையும் ஒரு நாளிலேயே சரிசெய்துவிடலாம் என்று எண்ணி செயலாற்றுவது முற்றிலும் மடமை. அர்ச்சுனாவின் இந்த வக்கிர போக்கும் ஒரு அதிகார துஷ்பிரயோகம் தான். நீதியை நிலைநாட்ட புறப்பட்டவர் எக்காலக்கட்டத்திலும் பண்பு தவறி நடக்கவோ அராஜகத்தை கையில் எடுக்கவோ கூடாது. அதைத் தமிழ் மக்களும் நீண்டகாலத்துக்கு சகித்துக்கொள்வார்கள் என்று கூறமுடியாது.
-
டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
ஆமா இல்லெ.
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
இலங்கை மதுபான இலாகாவின் இணையத்தளத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு வரையிலான மதுபான அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்களுடன் பல்வேறு தரப்பட்ட மதுபான லைசென்சுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய விபரங்கள் எதுவும் தரவேற்றப்படவில்லை. https://www.excise.gov.lk
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் வழங்கிய தகவலுக்கு மிக்க நன்றி. ஏற்பட்ட தடங்கலுக்கு வேறு காரணங்கள் ஏதும் உண்டா என்பதை தொடர்ந்து ஆராய்கின்றேன்.
-
சம்பந்தனின் இல்லம் கையளிப்பு
இன்று டிசெம்பெர் 2 ஆம் திகதி, டிசெம்பெர் 12 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் உள்ளதே.
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
ஆசாமி டக்ளசின் ஆளாக இருப்பாரோ. இலங்கையில் ஆட்சி மாறி கடல்தொழில் அமைச்சு வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டு விட்டதை அறியாமல் எஜமானின் சொத்தை பாதுகாக்க பூட்டும் கையுமாக வந்திருப்பார்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்கள நிர்வாகிகளுக்கு அன்புடன் வணங்காமுடி எழுதுவது, கடந்த சில நாட்களாக யாழ் களத்தில் பதிவிடவோ பார்வையிடவோ முடியாத நிலை. யாழ்களத்தின் IP இலக்கத்தை ஆய்வுக்குட்படுத்தி பார்த்ததில் இந்த இலக்கம் 46.202.92.177 என்பதும் அது UKRAINE (KYIV) நாட்டை தளமாக கொண்டு இயங்குவதாகவும் கண்டறிந்தேன். https://ifconfig.co/?ip=46.202.92.177 எனது வீட்டின் இணைய பாதுகாப்பில் (Firewall) சில நாடுகளுக்கான இணையவழி தொடர்பாடல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதில் UKRAINE நாடும் அடங்கும். தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து UKRAINE நாட்டை விலக்கினால் மட்டுமே எனக்கு யாழ் இணையதளத்தை பார்வையிட முடியும். இந்த நிலை சில நாட்களாகவே எனக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது. யாழ் இணையம் புதிய தளத்துக்கு அண்மைக்காலத்தில் மாற்றம்செய்யப்பட்டு அதன் ஐ.பி இலக்கம் உக்ரைன் நாட்டை அல்லது அதைத் தளமாக கொண்டியங்கும் ஒரு நிறுவனத்தைச் சுட்டி நிற்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தால் UKRAINE நாட்டில் போர்சூழல் தொடரும் பட்சத்தில் யாழின் இயக்கத்தை எதிர்வரும் காலங்களில் உறுதி செய்வதுடன் தங்கு தடங்கல் இன்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய முன் ஏற்பாடுகளுடன் அதற்கு தேவையான வழிவகை செய்துள்ளீர்களா?
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
வர்த்தகம் செய்பவர்கள் தங்கள் கொடுப்பனவுகளுக்காக காசோலை பரிமற்றம் செய்வதில் என்ன தப்பு?. 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகள் வழங்குவதில் ஏன் டக்கி வழக்கு போடவேண்டும்? நீதிமன்றம் போவதென்றால் நம்மாளுக்கு கொஞ்சம் அலர்ஜி என்பது தெரிந்ததுதானே. மற்றவங்களுக்கு நாமளே தான் தீர்ப்பு கொடுப்போம்.