-
Posts
2106 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by vanangaamudi
-
யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!
vanangaamudi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இது ஒரு முன் உதாரணமானதும் மிகவும் அவசியமானதுமானதுமான நடவடிக்கை. இந்தத் தடை யாழ் மாவட்டத்துக்கு மட்டும் தான் என்று இல்லாமல் முற்று முழு இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வனவிலங்குகள் எதையும் எச்சந்தர்ப்பத்திலும் மக்கள் வாழ்விடங்களில் அனுமதித்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்விடங்களிலும், சமய திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் உட்பட அனைத்திலும் ஆபத்தான விலங்குகளை பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும். இதுபோன்ற விலங்குகள் காடுகளிலும் மிருகக்காட்சிச் சாலைகளில் மட்டும் இருக்கவேண்டுமேயன்றி மக்களின் வாழ்விடங்களில் இருப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. யானைகள் கால்நடை என்ற பிரிவுக்குள் வகைப்படுத்தக்கூடிய மிருகங்கள் அல்ல. யானைகளை வைத்து அவற்றின் அசாதாரண உடல்பலம் காரணமாக இழுவை, பாரம் தூக்குதல் போன்ற கடினமான வேலைகளை செய்யப் பழகிக்கொண்ட மனிதன் நாளடைவில் தனது வாழ்விடங்களிலும் அவற்றை கொண்டுவந்து வைத்து காட்சிப் பொருளாக்கிவிட்டான். -
யமுனா நதியில் வெள்ளப் பெருக்கு: திணறும் தலைநகர் டெல்லி
vanangaamudi replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
யமுனை வெள்ளத்தில் சிக்கி அல்லலுறும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இருப்பினும் ஜமுனை நதி பற்றி நானறிந்த சிறிய தகவல் ஒன்றையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இமயமலையில் இருந்து புறப்படும் யமுனைஆற்றில் ஓடும் நீர் அலகாபாத் என்ற இடத்தில் கங்கை நதியில் கலக்கிறது. இந்த நதியின் நீர் இறுதியில் கடலில் சென்று கலந்தாலும் யமுனை கடலில் சென்று முடிவதில்லை. (இதுபோலவே கங்கை நதியும் கடலைச் சென்றடைவதில்லை. அதாவது கங்கை நதி வங்கதேசத்தின் எல்லையை கடக்கும்போது பத்மா நதி என்ற பெயருடன்தான் கடலைச் சென்றடைகிறது! ). யமுனை புது டில்லியின் மையப்பகுதியை சுமார் 5 கி.மீ தொலைவில் கடந்து செல்கிறது. எனவே யமுனைதான் இப்பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நீரை கடலுக்குக் கொண்டுசெல்லும் முக்கிய வடிகால்வாயாகவும் செயல்படுகிறது. இந்த நதிக்கு பல கிளை நதிகள் இடையில் வந்து இணைந்து கொள்வதும், இதன் ஓடுபாதை பாம்புபோல் வளைந்து வளைந்து செல்வதும், பல இடங்களில் நதியின் அகலம் குறுகலாக இருப்பதும் நீரோட்டத்தின் வேகத்தை கணிசமான அளவு குறைக்கும் காரணிகளாகும். இவை அனைத்துக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணி எது என்று பார்த்தால் நதியின் புவியியல் சாய்வு விகிதம் பல இடங்களில் மிக மிக குறைவான அளவில் இருப்பதுதான். உதாரணமாக புது டில்லியில் (கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாள 215 மீ) இருந்து அலகாபாத் (கடல் மட்டத்தில் இருந்து 98 மீ) வரை நதியின் பாதை சுமார் 1100 கி.மீ. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையில் உள்ள உயர வித்தியாசம் வெறும் 117 மீட்டர்கள். வேறுவிதமாக சொல்வதாயின் புது டில்லிக்கும்(New Delhi) அலகாபாத்துக்கும் (Allahabad) இடையில் யமுனை நதியின் சாய்வு விகிதம் (slope ratio) சராசரியாக 1 கிலோ மீட்டருக்கு 10 செண்டி மீட்டர்கள். எண் குறியீட்டில் காட்டுவதாயின் 1:10000 என்ற இந்த சாய்வு விகிதம் ஒரு நதியில் குறிப்பிடத்தக்க நீரோட்ட வேகத்தை ஏற்படுத்தப் போதுமானதல்ல. இதன் காரணமாக அடிமழை காலங்களில் மழை நீர் பல நாட்களுக்கு நதியில் தேங்குவதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அதன் கரையையும் மேவிச்செல்லும் அபாயம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. -
எனக்கு இங்கு ஊரில் சனங்களுடன் அறிமுகம் சராசரிக்கும் கொஞ்சம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதை நினைத்து பெருமையுடன் இருந்த எனக்கு அதுவே நாளடைவில் அன்புத்தொல்லையாகும் என்று கனவிலும் நினைத்ததில்லை. நல்ல பெடியள் இருந்தால் சொல்லுங்கோ என்பவர் ஒருபுறம், நல்ல பொம்பிளைபிள்ளை எங்கேயும் இருக்கினமோ என்று கேட்கும் பெற்றோர் மறுபுறம், உங்கடை இடத்திலையிருந்து பேச்சு வந்திருக்கு ஊரிலை ஒருக்கா விசாரித்து சொல்றியளோ என்று நேரிலும் தொலைபேசியிலும் தொலைதூர நண்பர்களின் வேண்டுகோள் இன்னொருபுறம். இதற்குமேல் கோவில் திருவிழா, கொண்டாட்டங்களும் விதிவிலக்கல்ல. முன்பின் அறிமுகமில்லாதவர்களைக்கூட பெற்றோர்கள் அணுகி வந்து கேட்கும்படியாக இந்த விடயம் எமது புலம்பெயர் சமூகத்தில் உருவாகிவிட்டதுபோல் தெரிகிறது. அதைப் பிழை என்றுசொல்வதற்கில்லை. பெற்றோரின் கடமையை அவர்கள் செய்கிறார்கள் என்றுதான் நான் இதை புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒன்றுமட்டும் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. பிள்ளைகள் 20-25 வயதிற்குள் தாங்களாகவே துணையை தேடிக்கொண்டால் ஒருவரிடம் ஒருவர் அதிகம் எதிர்பார்பில்லாமலே சோடி சேர்ந்துவிடுகிறார்கள். தாமதித்தால், உதாரணமாக 25 வயதிற்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் அனுபவமும் பட்டறிவும் அதிகரிக்க அப்படி வேண்டும், இப்படி வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்பது மட்டுமில்லாமல் மனதில் பல எதிர்பார்ப்புகளையும் கற்பனைகளையும் வளர்த்துக்கொள்வதால் எந்த ஜோடியும் அவர்களுக்கு சரியாக அமைவது கடினமாகிவிடும். பிள்ளைகள் இந்த வட்டத்துக்குள் மாட்டிக்கொண்டுவிட்டால் அவர்களின் வயதும் ஏறிக்கொண்டே போகப் போக அதுவே இறுதில் (30க்கு மேல்) புதிய பிரச்சனை ஒன்றை உருவாக்குவதுடன் அவர்களுக்கு முன்னால் உள்ள தெரிவுகளும் சுருங்கி குறைந்துவிடும். அதற்குமேல் தாமாக முயற்சிப்பதை கைவிட்டு, விரக்தியில் விழிம்பில் வந்து நிற்கும் அவர்கள் பெற்றோரிடம் உதவிகேட்டு வரவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
-
ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா
vanangaamudi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சர்வதேசத்தை நம்பி பயனில்லை என்று ஆரம்பதிலேயே தெரிந்து தானே எமது தேசியத்தலைவர் இறுதியாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார். இதே சர்வதேசம் இடையில் வந்து நயவஞ்சகத்தால் எங்கள் போராட்டத்தை நசுக்கி தமிழினத்தை நிர்க்கதியாக்கிய வரலாற்றை மறந்துவிட்டுப் பேசினால் மனிததன்மை இல்லாதவர்களால் தான் அது முடியும்! இதே சர்வதேசம் ஆயுதப்போராட்டம் கூடாது பேச்சுவார்தையால் பிரச்சனையை தீருங்கள் என்று உபதேசம் செய்ய வருவார்கள். அப்படியென்றால் உக்கிரேன் நாட்டு நெருக்கடியிலும் அதே கொள்கையைக் கடைப்பிடித்து ரசியாவுடன் பிரச்சனையை பேசி தீர்க்க ஏன் சர்வதேசத்தால் முடியவில்லை. சர்வதேச நாடுகளின் குறிப்பாக நேட்டோ முண்டுகோடுக்க அமெரிக்காவின் தலைமையில் ஐரோப்பிய நாடுகள் கொண்டுள்ள போர் ஆர்வத்தால் உலக யுத்தம் ஒன்று மூளுமோ என்ற ஏக்கத்துடன் எப்போது வாழ்க்கை செலவுகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் எத்தனையோ வறிய நாடுகள் இப்போது திண்டாடுகின்றன. இப்போது அமெரிக்கனுக்காக டக்கியரின் ஊதுகுழல் பறைதட்ட புறப்பட்டது சந்தர்ப்பவாதம். போதாக்குறைக்கு தமது கட்சித்தலைவரை தீர்க்கதரிசி என்றும் அவரின் கட்சிதான் ஜன நாயக பாரம்பரியத்தை நடைமுறப்படுத்துவதில் தமிழ் கட்சிகளில் முதன்மையானது என்ற தொனியில் சொல்ல வந்தததும் நகைப்பிற்கிடமானது. சிங்கள இனவாத அரசு விட்டெறியும் எலும்புத்துண்டை பொறுக்கும் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படும் இணக்க அரசியலைப் போதிக்கும் இவர் இனவாத அரசுடன் கைகோர்த்து இனப்பிரச்சனைக்கு தீர்வாக இதுவரை என்னத்தை சாதித்தார். 13-ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக இந்தியாவின் பங்கை வரவேற்கும் டக்கியர் இந்தியாவும் ஒரு அன்னிய நாடு என்பதை மறந்துவிட்டார். உண்மையில் எங்கள் பிரச்சனையை நாமே தீர்க்க புறப்பட்டால் இந்தியா கூட எமக்குத் தேவையில்லை. -
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம்
vanangaamudi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நண்பர் ஒருவர் சுமார் 5-6 வருடங்களுக்கு முன் கடலட்டை பண்ணை தொடங்குவதற்கு என்று ஊருக்கு புறப்பட்டுசென்றார். அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் கொடுத்த டீலுக்கு ஒத்துபோகாததால் போன வேகத்தில் திரும்பியும் வந்தார். அவர் சொன்னதன்படி மூலதனத்தின் அளவைப்பொறுத்து சில கோடிகளை முற்பணமாகவும் பின்னர் வியாபாரத்தில் 40% பங்கு என்பது அப்போதிருந்த நடைமுறை. -
குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் சொல்வது என்ன?
vanangaamudi replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
பயிற்சிப் பட்டறையை ஒழுங்குபடுத்திக்கொடுத்த அந்த இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே இந்த மக்களின் வாழ்க்கைத்தராதரம் பற்றி சரியான புரிதல் இல்லை என்பதுடன் அங்குள்ள மக்கள் இந்த பயிற்சி நெறியால் என்ன பயனை அடையமுடியும் என்பதற்கான குறைந்த பட்ச விளக்கம் கூட இல்லாமலே கட்டுரையாளரை பணிக்கு அமர்த்தியுள்ளதாகவே இதை நான் பார்க்கிறேன். புறக்கணிக்கப்பட்ட இந்த சிங்கள குடியேற்றவாசிகளுக்கு சமூகம் – ஊடகம் – தலைமைத்துவம் பற்றி ஒரு தமிழ் ஊடகவியலாளர் மூலம் வகுப்பெடுக்க வைத்ததன் உள் நோக்கமும் சரியாக புரியவில்லை. ஆக மொத்தம் இந்த பயிற்சி பட்டறை அடிமட்ட சிங்கள மக்களை குறிவைத்து அவர்களுக்குள் இருந்து புதிய சிங்கள இனவாதிகளை தயார்படுத்த நடத்தப்பட்டதாக இருக்ககூடாது. -
வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?
vanangaamudi replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
On 5/7/2023 at 07:51, vanangaamudi said: தமிழனின் விருப்பு, வெறுப்பு அவர்களின் தொன்று தொட்டு வந்த அனைத்து பழக்க வழக்கங்கள் இப்படி அனைத்தையுமே எங்களுக்கு எதிராக திருப்பி தமது நோக்கத்தை அடைவதற்கும் இலங்கையில் தமிழரின் இனபரம்பலை குறைப்பதற்கும் பல சூட்சுமமான திட்டங்களுடன் சிங்கள இனவாதிகள் முன்னேறி வெற்றிகண்டுவருகிறனர். எனவே இந்தக் காலகட்டத்தில் வெளி நாட்டு வேலைவைப்புக்காக தாய்நாட்டைவிட்டு வெளியேறுவது தனக்கும் தனது தாய் நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் எப்படி நன்மையாகும் என்பது தீர்க்கமாக முடிவெடுத்து செய்யவேண்டிய ஒரு விடயம். -
தமிழனின் விருப்பு, வெறுப்பு அவர்களின் தொன்று தொட்டு வந்த அனைத்து பழக்க வழக்கங்கள் இப்படி அனைத்தையுமே எங்களுக்கு எதிராக திருப்பி தமது நோக்கத்தை அடைவதற்கும் இலங்கையில் தமிழரின் இனபரம்பலை குறைப்பதற்கும் பல சூட்சுமமான திட்டங்களுடன் சிங்கள இனவாதிகள் முன்னேறி வெற்றிகண்டுவருகிறனர். எனவே இந்தக் காலகட்டத்தில் வெளி நாட்டு வேலைவைப்புக்காக தாய்நாட்டைவிட்டு வெளியேறுவது தனக்கும் தனது தாய் நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் எப்படி நன்மையாகும் என்பது தீர்க்கமாக முடிவெடுத்து செய்யவேண்டிய ஒரு விடயம். இருக்க யார் இந்த சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள், ஊரில் கண்டதில்லை.
-
ஒரு நாட்டின் பொருளாதாரமும் அந்த நாட்டின் சராசரி மனிதனின் பொருளாதாரமும் வேறுபடும். ஒரு வருடத்தில் நாட்டின் உற்பத்தியின் (products and services) மொத்த மதிப்பு (gross) என்ன என்பது முதலாவது, அந்த உற்பத்தி பெறுமதியில் ஒரு குடிமனுக்கு (Per Head) பங்கு என்ன என்பது இரண்டாவது. நாட்டில் விலைவாசிகள் உயரும்போது இதில் இரண்டாவது தான் சரியான அளவுகோல். அப்படி பார்க்கும்போது சுவிஸ் - 7, நோர்வே - 3, சுவீடன் - 10 , ஆகிய இடங்களில் உள்ளன. யூகே - 22 ஆவது இடத்தில். சிறு உதரணத்துக்கு இரண்டு குடும்பங்களை எடுத்துக்கொள்வோம். அதில் முதலாவதில் 5 அங்கத்தவர்களும் இரண்டாவதில் 3 அங்கத்தவர்களும் உள்ளனர். முதலாவது குடும்பத்தின் ஆண்டு வருமானம் 100 இலட்சம் இரண்டாவதற்கு 75 இலட்சம் என்றும் வைத்துக்கொள்ளுவோம். முதலாவது குடும்பம் அதிக வருட வருமானத்தை கொண்டிருந்தாலும் இங்கு இரண்டாவது குடும்பத்தவர்களைத்தான் பணக்காரர்கள் என்று கொள்ளவேண்டும்.
-
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து முற்றாக எரிந்தது!
vanangaamudi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஊருக்கு போறவை கவனமா பார்த்து பயணம் செய்யுங்கோ. இது ஈஸ்வரன் எக்ஸ்பிரஸ் கம்பனியின் பஸ் எல்லோ? -
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு
vanangaamudi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மெக்கனிக் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சேர்ந்து பயணம் செய்வதாயின் பழைய நினைவுகள் திரும்புகின்றன. ஓடும்போது மட்டும் தெரியும் பிழை ஒன்றை மெக்கனிக்கிக்கு காட்டுவதற்கு அல்லது அவர் சைக்கிளில் பெரிய பிழை ஒன்றை பழுது பார்த்து திருத்தி முடிந்ததும் அவர் எங்களை சைக்கிளில் வைத்து ஒரு ஓட்டம் அழைத்து செல்வார். அந்தகாலத்தில் நாங்கள் ஒழுங்கைகள், சன நடமாட்டமில்லாத வீதிகளை பார்த்து ஓட்டுவோம். இப்போது ஹைவேயிலை ஒட்டுறாங்கள். -
எந்த அடிப்படையில் காஞ்சிமடம் ராஜீவுக்கு திடீர் என்று அவரின் இறப்புக்கு முன்பாக பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தது? ராஜீவின் உயிர் பிரியபோகிறது, அவரின் ஆயுள் கெட்டி இல்லை, இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதும் முன்கூட்டியே காஞ்சி மடத்துக்கு தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். வெறும் சாத்திரம் ஜோதிடக் கணிப்பு என்பனவற்றை மட்டும் நம்பி நாட்டின் பிரதமருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்றால் இந்திய தேசிய பாதுகாப்பு மற்றும் வி.ஐ.பி காவல் சேவைகள் பிரிவில் காஞ்சி மடத்திலிருந்தும் ஆட்களை இணைத்துக்கொண்டால் சிறப்பாக செயற்படலாம். ராஜீவ் கொலை வழக்கில் ரி.என். சேசனையும் காஞ்சி மடத்து பெரியவர்களையும் அழைத்து விசாரித்திருந்தால் எல்லா உண்மைகளும் தெரிந்திருக்கும்.
-
இன அழைப்பு +தையிட்டி +அரசியல் தீர்வு
vanangaamudi replied to Kuna kaviyalahan's topic in அரசியல் அலசல்
தலையங்கம் சரியா. பிழை என்றால் எழுத்து சரிபார்த்து திருத்தி விடவும். -
மாலி குண்டுவெடிப்பில் நான்கு இலங்கை அமைதிப்படை வீரர்கள் காயம் – ஐ.நா
vanangaamudi replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) என்றால் என்ன என்று பலமாக யோசிக்கவேண்டாம். இது கையில் கிடைத்த பொருட்களை வைத்து உள்ளுரில் தயாரிக்கப்பட்ட வெறும் நாட்டு வெடிகுண்டுதான். -
"வடக்கில் பௌத்தர்கள் இவ்வளவு குறைவாக இருக்கிறார்களே" என்று இந்தப் பிக்கு அங்கலாய்ப்பது போலத்தான் எனக்கு தெரிகிறது. பிக்குகள் தமிழ் பேசினால் கேட்கலாம் ஆனால் அதை அப்படியே நம்புவது அடி முட்டாள்தனம். ஒரு அரசியல்வாதிக்கு இருக்கும் அதே நரித்தனத்துடன் இந்த பிக்கு தமிழன் எதைக் கேட்க விரும்புவானோ அதைப் பேசி தனது காரியத்தை கொண்டுபோகுது. இந்த வார்த்தைகள் எமக்கு உதவாது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற தமிழர்களின் பழமொழி சிங்கள பௌத்தர்களுக்கும் பொருந்தாமலா போகும். இப்போதுதானே விகாரைகள் நிறுவப்படுகின்றன குடிகள் பின்னர் வந்து சேருவார்கள் என்பதுதானே சிங்கள இனவாதிகளின் நோக்கம். அது தெரியாமலா இந்த பிக்கு தமிழனுக்கு கதை சொல்கிறார். "வடக்கில் பௌத்தர்கள் குறைவாக இருக்கிறார்கள் " என்றால் இவர் எந்த காலப்பகுதியை இங்கு ஒப்பிடுகிறார். வடக்கில் இப்போது பௌத்தர்கள் தேவைக்கும் அதிகமாகவே கொண்டுவரப்பட்டு அல்லது நிர்ப்பந்த்தத்தின் பேரில் குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள். தமிழ் பிரதேசங்கள் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
-
நடந்த துர்ப்பாக்கிய சம்பவத்திற்கு சந்தேக நபரின் போதைபொருள் பாவனை தான் காரணம் என்று பிரச்சினையை சீக்கிரமாகவே முடித்துவிட போலீசார் முயற்சிப்பது போலுள்ளது. இறந்த பெண் வயதில் குறைந்த ஒரு இளம் யுவதி என்பதும் அவர் மருந்தகத்தில் வேலை செய்பவர் என்பதும் தெரிந்த குற்றவாளி அவரை குறிவைத்து பின்தொடர்ந்து சென்று அவர் தனது வழிக்கு வராததால் அவரை கொலை செய்துள்ளார் என்பதை ஊகிக்க முடிகிறது. மருந்தகங்களில் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் போதைபொருள் எதையாவது இறந்த யுவதியின் ஊடாக பெற்றுகொள்ள சந்தேக நபர் முயற்சித்தாரா என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும். சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டால் போதைபொருள் விற்பவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க இதுபோன்ற சம்பவங்கள் வழிசெய்யும் என்பது நிச்சயம்.
-
கார்பன்-டை-அக்சைடை நீக்கும் அதேவேளையில், எஞ்சியிருக்கும் கரியமில வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது சவாலான ஒன்று என்பதையும் ஐ.பி.சி.சி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கட்டுரையில் பல இடங்களில் கார்பன்-டை-அக்சைடை இயும் கரியமில வாயுவையும் வெவ் வேறான வாயுக்களாகவே விமர்சிக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களின் இயற்கையான சமனிலையை மாற்றம்செய்தால் அது பூமியில் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தாகவே முடியும். கார்பன்-டை-அக்சைட் (கரியமிலவாயு) உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் மிக அவசியம் தேவையான வாயு. வளிமண்டலத்தில் அளவுக்கதிகமாக இருக்கும் வாயுக்களை அகற்றவேண்டுமேதவிர அவற்றை முற்றிலும் அகற்றுதல் கூடாது. இதை கட்டுரையாளர் புரிந்துகொண்டு கட்டுரையை எழுதியதாகத் தெரியவில்லை. வளிமண்டலத்தின் சமனிலை பாதிப்புக்குள்ளானால் அல்லது ஏதாவது ஒரு வாயு இல்லாமல் போனால் பிறகு பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்காது.