Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vanangaamudi

  1. இங்கேயும் தொல்லியல் திணைக்களம் தனது கைவரிசையை காட்ட புறப்பட்டுட்டு விட்டதா.? புத்தர் சிலையை ஆலய வீதியில் புதைத்துவிட்டு அதை காரணம் காட்டி இந்து கோவில்களை கையகப்படுத்தும் திட்டம் தெரிந்ததுதானே. இரண்டு இடங்களிலும் ஆதி சிவன் கோவில்களே இருப்பதாக தெரிகிறது. பிள்ளையார் கோவில் இருப்பது கெளதாரி முனைக்கு அருகாமையில் உள்ள கிராமம். https://www.google.com/maps/place/Manniththalai+Ancient+Lord+Shiva+Temple+மண்ணித்தலை+ஆதி+சிவன்+கோவில்/@9.5899824,80.094724,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPIlC0JYeXvgUoRjvAA29ODbBWZnvuNIxQsXqdF!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPIlC0JYeXvgUoRjvAA29ODbBWZnvuNIxQsXqdF%3Dw92-h86-k-no!7i3236!8i3006!4m11!1m2!2m1!1smannithalai+sivan!3m7!1s0x3afe57fcf14fba79:0x7fc426f2d343fd6!8m2!3d9.5896462!4d80.0943979!10e5!15sChFtYW5uaXRoYWxhaSBzaXZhbloTIhFtYW5uaXRoYWxhaSBzaXZhbpIBDGhpbmR1X3RlbXBsZZoBJENoZERTVWhOTUc5blMwVkpRMEZuU1VOMWEyWjJYM05CUlJBQuABAA!16s%2Fg%2F11c52l1yvp?entry=ttu# https://www.google.com/maps/place/Kawtharimunai+Aathi+Sivan+Kovil/@9.5710781,80.1175347,3a,80.4y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPtjl95mvs3N5Domo12EvmQg-wQAPBo9ZYJDrj4!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPtjl95mvs3N5Domo12EvmQg-wQAPBo9ZYJDrj4%3Dw122-h86-k-no!7i969!8i683!4m7!3m6!1s0x3afef7113abd172f:0xa7f510f64a014f0d!8m2!3d9.5710781!4d80.1175347!10e5!16s%2Fg%2F11gmcb7pz6?entry=ttu#
  2. முக்கியமான விசயம் பற்றி எவரும் கதைக்கயில்லை. ஆலயச் சூழலில் மாமிசம் பயன்படுத்துவதுபற்றி எந்த தடையும் இல்லையோ. அப்ப இந்த வருசம் திருவிழாவில் கொத்து ரொட்டி அமோகமாக விலைப்படும்.
  3. இதுவும் ஆச்சரியம் தான். விண்கலம் அல்ல விண்கல் என்றுதான் இங்கு குறிக்கப்பட்டிருக்கவேண்டும்.
  4. இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.
  5. இறந்த சிறுவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இஸ்லாமிய ஆண்களின் முக்கிய சடங்கான சுன்னத் என்பதை அறுவை சிகிச்சை என அழைப்பது சரியா பிழையா என்பது கேள்விக்கிடமானது. சுன்னத் என்பதை ஆங்கிலத்தில் Circumcision என்று தான் அழைப்பார்கள். இதற்கு தமிழில் சரியான மொழிபெயர்ப்பு "விருத்தசேதனம்" என சொல்கிறது கூகிள்.
  6. கட்டுரையாளர் "தேச நிர்மாணம்" என்று குறிப்பிடுவது எந்த தேசம்?. தமிழர் தேசமா அல்லது முழு இலங்கை தேசமா?
  7. ஒரு நாட்டின் இராணுவம் (military) என்பது தரைப்படை மட்டுமா. அல்லது தரை, ஆகாய, கடல் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதா?. இலங்கை நாட்டின் ஆயுதப்படை சுமார் 3.5 இலட்சம் பேராக இருக்கையில் 1.5 இலட்சம் பேரைக்கொண்ட தரைப்படையின் எண்ணிக்கையை மட்டும் குறைக்கும்படியா IMF கேட்டது? குளறுபடியான தமிழாக்கத்தில் செய்தியின் முக்கியத்துவம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளது.
  8. பாஸ்போர்ட் பெறுபவர் பெயர் வாக்களர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் வாக்குகளை இலங்கை அரசே ஆள்வைத்து போட்டுகொள்வார்கள். மக்கள் அங்கு போய்தான் அதை போடவேண்டும் என்பதில்லை. 40 வருடங்கள் என்பது ஒருவரின் வாழ்க்கையில் நீண்ட காலம். இத்தனை ஆண்டுகளுக்கு பின் அகதிகளைஇலங்கைக்கு திருப்பி அழைத்து அவர்களுக்கு அவர்களின் பழைய வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பி மறுவாழ்வு கொடுப்பதே சிறந்தது. இன்னிலையில் இலங்கை அரசு அவர்களுக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது அந்த மக்களின் இருப்பை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கு தள்ளி விடுவது மட்டுமன்றி அவர்களின் இஸ்திரமற்ற அகதி வாழ்க்கையை மேலும் நீடிக்கவே வழிவகுக்கும். சொந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கே சுதந்திரமே உறுதிசெயப்படாமல் இருக்கும்போது அடுத்த நாட்டில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவேன் என்பது நகைப்புக்குரியது. செந்தில் தொண்டைமானுக்கு இதில் என்ன அக்கறை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை உள்ளீர்க்கும் பல திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளதாக அண்மையில் செய்திவந்ததும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமே இது போன்ற முட்டாள் தனமான காரியம் சாத்தியம். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் இதை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி.
  9. பிந்திக்கிடைத்த செய்திகளின்படி பாக்கிஸ்தான் இன்று வியாழன் காலை இரானின் எல்லைப் பகுதியில் உள்ள சரவான் நகர்பகுதியை ஏவுகணை கொண்டு தாக்கி பதிலடி வழங்கியுள்ளது. பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு எதிராக தான் தாக்குதல் தொடுத்ததாகவும் அறிவித்துள்ளது. இவ்விரண்டு ஆயுதக் குழுக்களும் இரானை தளமாக பயன்படுத்தி பாக்கிஸ்தானின் தென்பகுதில் உள்ள மாநிலமான பலுசிஸ்தானின் விடுதலைக்காக போராடுகின்றன. https://edition.cnn.com/2024/01/18/middleeast/pakistan-targets-locations-iran-intl-hnk/index.html
  10. ஈழப்போரில் சரித்திரமாகிவிட்ட பல போராளிகள் சம்பந்தப்பட்ட உண்மை நிகழ்வுகளை போ.நி.க.கு பாதிக்கு பாதி தான் பதிந்து வைத்திருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் தான் எனது கருத்தை இந்த திரியில் எழுதினேன். மற்றும்படி திரியை திசை திருப்பவதோ அல்லது கேள்விக்குட்படுத்துவதோ எனது எண்ணமில்லை. நீங்கள் குறிப்பிட்டபடி திகதிகளை சரி பார்த்தேன். போ.நி.க.குவை தடுத்து வைத்த சம்பவம் (ஜூன் 2002) நிகழ்ந்தது வேறு திகதிதான். இரு சம்பவங்களையும் இணைத்து கருத்து பதிவிட்ட தவறுக்கு வருந்துகிறேன். இவ்விரு சம்பவங்களும் பத்திரிகை, தொலைகாட்சி செய்தியாக்கப்பட்டு முக்கிய பேசுபொருளாகவும் அந்த காலகட்டத்தில் இருந்தது. நீங்கள் இங்கு பதிவிட்டுகொண்டிருக்கும் கடற்கரும்புலிகள் பற்றிய இந்த திரி தொடரட்டும்.
  11. போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் இறுதி அறிக்கையில் இந்த நிகழ்வு வேறுவிதமாக உள்ளது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் இருந்த ஒரு மீன்பிடிப்படகை தாங்கள் சோதனைகுட்படுத்தியபோது அதில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் 23 மிமி சுடுகலம் ஒன்று இருந்ததை தாங்கள் கண்டறிந்ததாகவும் புலிகள் இரண்டு கண்காணிப்பு உத்தியோகத்தர்களையும் அவர்களின் சொந்த விருப்பத்துக்கு மாறாக படகில் நீண்ட நேரம் தடுத்து வைத்து இறுதியில் புலி வீரர்கள் தாங்களும் தற்கொலை செய்து படகையும் அழித்த தருணத்தில் தமது உயிரை காப்பற்ற கடலில் குதித்து கடற்படையினரின் படகில் ஏறி கரை சேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. Suicide Ship: While inspecting a LTTE fishing boat, weapons were uncovered; minutes later the SLMM monitors had to jump ship to save their lives, before the LTTE cadres blew up the boat, committing suicide. நன்றி: The SLMM report 2002–2008 Compiled by the Sri Lanka Monitoring Mission (SLMM) as the final report from the Head of Mission (HOM) to the Royal Norwegian government as Facilitator, and for public distribution. Copenhagen Helsinki Oslo Reykjavik Stockholm 2008–2009 Published by the Ministry of Foreign Affairs (MFA), Oslo, October 2010
  12. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இப்படி எல்லாம் பேசலாம் என்றால் அதுதான் கர்வம்.
  13. தமிழ் தரப்பினர் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதைப்பற்றி பரிசீலித்தல் மிக மிக அவசியம். அதே வேளை தேர்தலுக்கு முந்திய சிங்களக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் அதை ஒரு தந்திரோபாய ஆயுதமாகவும் பயன்படுத்தலாம். சிங்கள கட்சிகளுடன் திருப்திகரமான உடன்பாடு எதுவும் எட்டமுடியாவிடின் தமிழ் தரப்பினர் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தழினத்தின் அரசியல் அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்டு அவர் தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெற்றுக்கொள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் களமிறங்கி செயல்படுதல்வேண்டும்.
  14. நாகபட்டினம் / காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவைக்கு என்ன நடந்தது. இப்போது சரக்கு கப்பல் வரும் என்றால் மக்களும் அதில்தான் பயணிக்கவேண்டுமா?
  15. இதேபோன்ற அலங்காரங்களுடன் ஒரு மிதவை இரண்டுவருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கரையொதுங்கியதாக தகவல் உண்டு. அடிப்பாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காற்றடைக்கப்பட்ட சுமார் 12 உலோகத்திலான பீப்பாய்கள் (barrels) இந்த மிதவையை நீண்ட கடற்பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
  16. அப்படி இல்லை அக்கா நான் லண்டனில் (யூகே யில்) வசிப்பவன் அல்ல. நீங்கள் பதிவிட்ட வீடு இருக்கும் இடத்துக்கு நான் ஒருபோதும் வந்ததுமில்லை. மேலும் சொல்லப்போனால் அங்கு எனக்கு தெரிந்தவர்கள்கூட கிடையாது. உண்மையில் உங்கள் கதை மிகவும் சுவாரஸ்யமா இருந்தது எனினும் நீங்கள் எடுத்துக்காட்டாக பதிவிட்ட வீட்டின் படத்தை பல கள உறவுகள் கமெண்ட் பண்ணவும் தவறவில்லை. அந்த வகையில் நீங்கள் பதிவிட்ட படத்தை ஆராய்ந்து சில தகவல்களை கண்டறிந்தேன் அவ்வளவுதான். இதுபோன்ற தரவுகள் தீய சக்திகளிடம் சிக்காமல் இருக்க நாங்கள் தான் பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பதை மட்டும் தான் நான் சொல்லவந்தேன்.
  17. அதுதானே பார்த்தேன், நீங்க காட்டின(சுட்ட) வீட்டின் இலக்கத்துடன் ஒப்பிடும்போது எதிர்பக்கத்தில 47 ஆம் நம்பர் மட்டுமல்ல வேறு எந்த வீடும் வர்றத்துக்கு சான்ஸே இல்ல என்பதால் தான் அக்கா நான் அப்படி எழுதினேன்.
  18. நான் ஒத்துக்க மாட்டேன் பாஸ். நீங்க இடம் மாறி சொல்வதாக தெரிகிறது. அக்கா வந்துதான் இதை கிளியர் பண்ணணும்.
  19. இது உங்க வீடாக்கா, அல்லது இந்த படம் எங்காவது சுட்டதா. காலம் கெட்டு கிடக்கு நீங்கவேற. சொந்த வீட்டு படத்தை இணையத்தில இணைக்கிறது உங்க விலாசத்தை கொடுக்கிறதுக்கு சமனானது. நான் உங்க இடத்தை சேர்ந்தவன் கிடையாது ஆனாலும் இந்த படத்தை வைச்சு நீங்க இருக்கிற இடத்தை என்னால் சொல்ல முடியும். இனிமேல் பாத்து பண்ணுங்கக்கா.
  20. மண்ணிற்காக போராடிய எங்கள் மைந்தர்கள் தம் விலைமதிப்பற்ற உயிரை நேசித்தே களமாடியவர்கள். அவ்ர்கள் நேசித்த ஒன்றை எமக்கு கொடையாக தந்தார்கள். வெறுத்த உயிரைத்தான் அவர்கள் ஈகம் செய்தார்கள் என்பது மாவீரர்களின் தியாகங்களுக்கு பெருமைசேர்க்காது..
  21. இணையத்தில் வைரலாகும் காணொளிகளில் சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகியுள்ளது. விமானம் தரையை நோக்கி விழும் விதத்தை நோக்கும்போது ஆகாயத்தில் வைத்தே விமானம் தாக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டிருப்பதும் அதன் இறக்கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டபின் விமானிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வீழ்வதையும் காணக்கூடியதாயுள்ளது. அண்மையில் புட்டினுக்கு எதிராக இராணுவக்கிளர்ச்சி செய்த பிரிகொஜினுடன் வாக்னரின் நிறுவனர் உற்கின் என்பவரும் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்யாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையாகின் வாக்னர் கூலிப்படையின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது ஊர்ஜிதமாகிறது. இருப்பினும் இந்த விமான விபத்தில் சிக்கி வாக்னர் தலைமைகள் இறந்துவிட்டதாக ஒரு செய்தியை வேண்டும் என்றே பரப்ப பொய் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வாக்னரின் தலைமைகள் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றும் அப்படி செய்திருந்தால் தாங்கள் புட்டினின் சதிவலையில் இலகுவாக விழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை முன் கூட்டியே கணிக்கத் தெரியாத முட்டாள்கள் இல்லை என்றும் வேறொரு இணையசெய்தி சந்தேகத்தை விதைக்கிறது. புட்டினுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததையடுத்து திரைக்குப்பின்னால் சமாதான ஒப்பந்தம் உருவானபோது வாக்னர் தலைவர்களுக்கு முடிவுகட்டும் இரகசிய ஏற்பாடுகளும் சமகாலத்தில் செய்யப்பட்டதாக இன்னொருதகவல் கூறுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.