-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன் ஜீக்கும், துல்லியமான கணிப்புகள் மூலம் முதல் மூன்று இடங்களை பிடித்துக் கொண்ட @Newbalance, @கந்தப்பு , @நியாயம் ஆகியோருக்கும்… போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்ட கள உறவுகளுக்கும் பாராட்டுக்கள். 👏🏻👏🏻👏🏻
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
- கருத்து படங்கள்
- தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெறுமா? நிலாந்தன்!
தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெறுமா? நிலாந்தன்! தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவை ஈடுபட்டிருக்கிறது. இது தொடர்பாக வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்களின்படி ஒரு புதிய யாப்பை அரசாங்கம் உருவாக்குமாக இருந்தால் அந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக எப்படிப்பட்ட ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று கூறப்படுகிறது.குறிப்பாக சமஸ்டி தீர்வு ஒன்றை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கம் இதில் உண்டு என்பதனை அந்த உத்தியோகபூர்வ அறிக்கை காட்டுகிறது. இந்த ஒருங்கிணைப்பு முயற்சிக்குள் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை என்று ஈபிடிபி கூறியுள்ளது.தங்களைப் போலவே மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் கட்சியின் உட்பட தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு வெளியில் காணப்படும் கட்சிகள் இங்கே அழைக்கப்படவில்லை என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இதுதொடர்பான கேள்விகளுக்கு தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவைதான் பதில் கூறவேண்டும். கடந்த 16 ஆண்டுகளிலும் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை பெருமளவுக்கு சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து முன்னெடுத்தனர்.சிலசமயங்களில் இந்த முயற்சிகளில் பின்னணியில் சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தூதரகங்கள் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது. அண்மையில்கூட சுவிஸ் தூதரகம் அவ்வாறான சந்திப்பு ஒன்றுக்கு அனுசரணை புரிய முன்வந்தது. எனினும் அந்தச் சந்திப்பு பின்னர் இடம்பெறவில்லை. இவ்வாறு சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் பெரும்பாலானவை தோல்வியுற்ற ஒரு பின்னணிக்குள்,அல்லது தற்காலிகமான சில வெற்றிகளை பெற்றபின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாத ஒரு பின்னணிக்குள், இப்பொழுது தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பகுதி சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் இணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்தும் அமைப்பாகச் செயல்பட்டார்கள். அந்தத் தேர்தல் முடிந்தபின் சிவில் சமூகங்கள் தொடர்ந்து ஓர் அமைப்பாக இயங்க முடியாத ஒரு நிலைமை தோன்றியது. இப்பொழுது சிவில் சமூகங்களுக்கு இடையே வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பு இல்லை. தவிர,ஒரு சிவில் அமைப்பைத் தவிர ஏனைய சிவில் சமூகங்கள், கட்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற முயற்சிகளில் பெரியளவு ஆர்வத்தோடு காணப்படவில்லை. அதாவது கடந்த ஒராண்டுக்கு மேலாக பெரும்பாலான சிவில் சமூகங்கள் கருத்துருவாக்கிகள் போன்றோர் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதில் இருந்து விலகியிருப்பது தெரிகிறது.இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான் மேற்படி தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இந்த முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது. இந்த அடிப்படையில் மேற்படி முயற்சி தொடர்பில் மிக அடிப்படையான ஒரு கேள்விக்கு விடை முக்கியம். கடந்த 16 ஆண்டுகளிலும் சிவில் சமூகங்களும் கருத்துருவாக்கிகளும் முன்னெடுத்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஏன் பொருத்தமான வெற்றிகளை அல்லது தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறத் தவறின? இக்கேள்விக்குப் பதில் காண்பதென்றால்,பேச்சுவார்த்தைகள்,சமரச முயற்சிகள் தொடர்பில் உலகில் உள்ள மூன்று முக்கிய பொறி முறைகள் தொடர்பாக இங்கு பார்க்க வேண்டும். முதலாவது பொறிமுறை, அழுத்தங்களை, நிர்பந்தங்களைப் பிரயோகிப்பது.ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஈடுபடும் தரப்பு பலப் பிரயோகத்தை மேற்கொள்வது அல்லது ஏதோ ஒருவகை அழுத்தத்தைப் பிரயோகிப்பது. இரண்டாவது பொறிமுறை,பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளை நீக்கும் நோக்கத்தோடும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி மேற்படி தரப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் தந்திரமான, நிர்ணயகரமான தலையீட்டை செய்வது.இது அனுசரணைப் பொறிமுறை. மூன்றாவது, சம்பந்தப்பட்ட தரப்புகள் சந்திப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது. அதற்குரிய போக்குவரத்து வசதிகளை,இட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது. கடந்த 16 ஆண்டுகளாக சிவில் சமூகங்கள், முரண்படும் கட்சிகளுக்கு இடையே அனுசரணையாளர்களாகத்தான் செயல்பட்டன.எந்த ஒர் ஒருங்கிணைப்பு முயற்சியிலும் சிவில் சமூகங்கள் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஒரு தரப்பாகச் செயல்படவில்லை.அவ்வாறு செயல்படுவதற்கு சிவில் சமூகங்களால் முடியாது. ஏனென்றால் அதற்கு ஏதோ ஒரு பலம் இருக்க வேண்டும்.ஏதோ ஒரு அங்கீகாரம் இருக்கவேண்டும். ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தரப்புகள் அதாவது கட்சிகள் சிவில் சமூகங்களை மதிக்க வேண்டும். அது பிரயோகிக்கும் அழுத்தங்களுக்குப் பணிய வேண்டும்.ஆனால் அப்படிப்பட்ட பலத்தோடு காணப்படும் சிவில் அமைப்புகள் எதனையும் அரங்கில் கடந்த 16 ஆண்டுகளாகக் காண முடியவில்லை. குறிப்பாக முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் அவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்கவல்ல துணிச்சலான,ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் ஆளுமையாகக் கருதப்பட்டார்.ஆனால் 2014ஆம் ஆண்டு அவருடைய தலைமையில் மன்னாரில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்றின் போது சம்பந்தர் ஆயரைப் பார்த்து என்ன சொன்னார்? “பிஷப் நீங்கள் சொல்றதச் சொல்லுங்கோ.ஆனால் நாங்கள்தான் கடைசி முடிவு எடுப்பம்” என்று. சம்பந்தர் ஏன் அப்படிச் சொன்னார் ? ஏனென்றால், அப்பொழுது உள்ளதில் பெரிய கட்சியாக கூட்டமைப்பு காணப்பட்டது. அதன் தலைவராக இருந்த சம்மந்தர் பிஷப்பைப் பார்த்து அவ்வாறு அழுத்தமாக திமிரோடு கூறக் கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை அது. இப்பொழுது சம்பந்தர் இல்லை.பிஷப்பும் இல்லை. கூட்டமைப்பும் இல்லை. ஆனாலும் தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் இருப்பவற்றில் பெரிய கட்சியாகக் காணப்படுகிறது. அதன் தலைமைக்கான போட்டி கட்சியை உருக்குலைத்து விட்டது. எனினும் அதுதான் உள்ளதில் பெரிய கட்சி. தனக்குத்தான் மக்கள் ஆணை அதிகம் என்று அது கூறும். அதுமட்டுமல்ல சம்பந்தர் முன்னாள் மன்னார் பிஷப் தலைமையிலான ஒருங்கிணைப்பு முயற்சிகளை ஒருவித ஒவ்வாமையோடு பார்த்ததற்குக் காரணம், அந்த முயற்சிகளின் பின்னணியில் கஜேந்திரக்குமாருக்கு ஆதரவான சிவில் சமூகப் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்று நம்பியதுதான்.இதை மறுவளமாகச் சொன்னால்,கூட்டமைப்பில் இருந்து விலகி தேர்தலில் தோல்வியுற்ற கஜேந்திரக்குமாரைப் பலப்படுத்துவதற்கு சிவில் சமூகங்கள் முயற்சிக்கின்றன என்று சம்பந்தர் கருதினார். இப்பொழுதும் தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி அப்படித்தான் நம்புகிறது. இப்பொழுதும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி சிவில் சமூகங்களை ஒவ்வாமையோடுதான் பார்க்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சுமந்திரன் சிவில் சமூகங்களுக்கு எதிராக வன்மத்தோடு கருத்துக்களைத் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய அரசியல்வாதி ஒருவர் அவ்வாறு சிவில் சமூகங்களை முன்னரும் தாக்கியிருக்கவில்லை.பின்னரும் தாக்கியிருக்கவில்லை.அந்த தேர்தலில் சிவில் சமூகங்களின் முயற்சியை எதிர்த்த சுமந்திரன் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். சஜித் இப்பொழுது சிங்கள பௌத்த தீவிர நிலைப்பாட்டை எடுக்கும் பிக்குகளுக்குச் சாமரம் வீசுகிறார். இப்படிப்பட்டதோர் பின்னணியில், மேற்கண்ட இறந்தகால அனுபவத்தின் பின்னணியில்,தொகுத்துக் கேட்டால்,இப்பொழுது ஒருங்கிணைப்பு முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையானது கட்சிகளின்மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய பலத்தோடு இருக்கிறதா? அல்லது அனுசரனை மட்டும்தான் செய்கின்றதா? இந்தக் கேள்வியை அதன் பிரயோக நிலையில் கேட்டால், தமிழரசுக் கட்சியின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க சக்தி அல்லது பலம் மேற்படி சட்டத்தரணிகள் அமைப்புக்கு உண்டா?ஏனென்றால் கடந்த ஆண்டு முழுவதிலும் இவ்வாறான ஒருங்கிணைப்பு முயற்சிகளை கஜேந்திரக்குமார் முன்னெடுத்த பொழுது, அதனைக் குழப்பியது தமிழரசுக் கட்சிதான். குறிப்பாக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முன்னெடுப்பையும் குழப்பியதில் அந்தக் கட்சிக்கு பங்கு உண்டு. எனவே ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு இப்பொழுது தடையாக இருப்பது தமிழரசுக்கட்சி. அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்தால் மட்டும்தான் எந்த ஒருங்கிணைப்பு முயற்சியும் வெற்றிபெறும். அப்படிப்பட்ட அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தேவையான பலம் சட்டத்தரணிகள் அமைப்புக்கு உண்டா? அந்த அமைப்புக்குள் பிரதானியாகக் காணப்படும் சட்டத்தரணி ரட்ணவேல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரே பலமான சட்டச் செயற்பாட்டு அமைப்பாகிய “மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின்” பணிப்பாளராக இருக்கிறார்.வடக்குக் கிழக்கில் காணப்படும் சட்டச் செயற்பாட்டு ஆளுமைகளுக்குள் அவர் முக்கியமானவர், மதிப்புக்குரியவர். ஆனால் தனது துறையைச் சேர்ந்த ஒரு மூத்த செயற்பாட்டாளரை சுமந்திரன் மதிப்பாரா? அப்படி மதிக்கத்தக்க உறவு இருவருக்கும் இடையில் உண்டா? இந்தக் கேள்விக்கான விடை மிக முக்கியம்.ஏனென்றால் சட்டத்தரணிகள் அமைப்பின் முயற்சிகளின் பின்னணியிலும் கஜேந்திரக்குமாருக்கு ஆதரவான சிவில் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இருக்கலாம் என்று தமிழரசுக் கட்சி சந்தேகிக்க இடமுண்டு. தமிழரசுக் கட்சியை குறிப்பாக சுமந்திரன் அணியை ஒருவழிக்குக் கொண்டு வந்தால் மட்டுமே ஒருங்கிணைப்பு முயற்சிகள் வெற்றிபெறும். இதுதான் கடந்த 16 ஆண்டு கால அனுபவம்.எனவே சுமந்திரனை இந்த விடயத்தில் சம்மதிக்கச் செய்வதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையால் முடியுமா? https://athavannews.com/2026/1467602- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கிழங்கன் வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடை ! டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தநிலையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கான அவமரியாதை ஏற்படுத்தபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்ரஸினால் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நோர்வூட் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் பி.தமேந்தி பெர்னாண்டோவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவில் 106(01) இன் படி டிக்கோயா ஆதார மருதாதுவமனை நூழைவாயில் ஹட்டன் நோர்வூட் பிரதான வீதி அல்லது வேறு ஏதேனும் பொதுமக்கள் கூடும் இடத்தில் எந்த ஒரு சட்டவிரோத ஊர்வலம் ஆர்ப்பாட்டம் அல்லது ஒன்றுகூடலையும் நடத்துவதை தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் துனைமேயர் பெருமாள் சுரேந்திரன் ஆகியோருக்கு இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவிக்கையில் இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடபடுகிறது ஆனால் நாங்கள் அங்கு சென்றது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அல்ல டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் யுவதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே நாங்கள் அங்கு சென்றோம் ஆனால் நோர்வூட் பொலிஸார் மற்றும் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலை நிர்வாகமும் இனைந்து நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று இதனை தடை செய்துள்ளார்கள் ஆனால் இந்த யுவதிக்கு நடந்த அசாம்பவிதம் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம் பெறவில்லை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிட்டார் . https://athavannews.com/2026/1467594- பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்! இன்றையதினம் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் தொகுதி திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது அதிலிருந்து 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து சோதனையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்: “தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஹெரோயின் மற்றும் கொக்கைனின் மொத்த அளவை உறுதிப்படுத்தியுள்ளது. 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கைன் காணப்படுகின்றது. இதன் பெறுமதி 2.08 பில்லியன் ரூபாவாகும். இது ஒரு மிகப்பெரிய அளவாகும். அத்துடன், இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.” https://athavannews.com/2026/1467616- ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்!
ரஷ்ய எண்ணெய் மீதான தள்ளுபடி; ட்ரம்புக்கு கமல் கடும் கண்டனம்! ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் தொடர்பான தற்காலிக விலக்கு அளிக்கும் வொஷிங்டனின் நடவடிக்கை குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அது வெளிநாட்டு அரசாங்கங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது என்றும் அவர் கூறினார். இது குறித்து சமூக ஊடக தளமான எக்ஸில் பகிரப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் கமல்ஹாசன் அமெரிக்க ஜனாதிபதியிடம் இந்தியாவின் கொள்கை முடிவுகளில் சுதந்திரத்தை மதிக்குமாறு கேட்டுக் கொண்டார். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எரிசக்தியை தொடர்ந்து வாங்குவதற்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளன. https://athavannews.com/2026/1467571- குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்
முட்டாள் பயலுகளே… எந்த முகாமுக்கு அவங்களை கொண்டு போய் வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லாதீங்க. நிண்ட வெள்ளத்தை, வந்த வெள்ளம் கொண்டு போன மாதிரி… முழு முகாமையும் இஸ்ரேல்காரன் குண்டு போட்டு அழிக்கப் போறான். 😂- ஈரானுடனான போரில் பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு!
ஈரானுடனான போரில் பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானுடனான போரில் வெற்றி பெற அமெரிக்காவிற்கு பிரித்தானியாவின் உதவி அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மிகவும் தாமதமாக மோதலில் இணைவதைப் பற்றி யோசித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பதிவிட்ட ட்ரம்ப், ஒரு காலத்தில் நமது சிறந்த நட்பு நாடாகவும், அனைத்திலும் சிறந்ததாகவும் இருந்த ஐக்கிய இராச்சியம் இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது. எனினும், எமக்கு அத்தகைய உதவி இனி அவசியமில்லை பிரதமர் ஸ்டார்மர், நாம் ஏற்கனவே வெற்றி பெற்ற பின்னர் போர்களில் இணைபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை – என்று கூறினார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தொடர்பாக வாஷிங்டனுக்கும் லண்டனுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இங்கிலாந்து தளங்களைப் பயன்படுத்துவதை பிரித்தானியா ஆரம்பத்தில் தடுத்ததை அடுத்து, ஸ்டார்மரை ட்ரம்ப் விமர்சித்தார். பின்னர் இங்கிலாந்து அரசாங்கம் அமெரிக்கப் படைகள் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு பிரிட்டிஸ் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்தது. https://athavannews.com/2026/1467557- நோர்வேயில் அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு
இனி இப்படியான குண்டு வெடிப்புகள் உலகம் எங்கும் நடக்கும். என்று எதிர்பார்க்கலாம்.- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மன்னிப்பு கேட்டு விட்டு… சில மணித்தியாலத்துக்கு முன்பு, உலகின் இரண்டாவது பெரிய பயணிகள் விமான நிலையமான… டுபாய் விமான நிலையத்தின் மீது, தாக்குதல் நடத்தி உள்ளார்கள் போலுள்ளது. அல்லது… இஸ்ரேல் கோத்து விட்டு, சந்திலை சிந்து பாடுதோ தெரியவில்லை. 🤣- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
பிணங்களை, மிருகங்களை புணர்வது கூட… ஒரு வகை நோய் என்கிறார்கள். இந்த நோய்.. சிங்களவர்களில் பரவலாக தொற்று வியாதி போல் தெரிகின்றது. ஒரு சிங்களவர், கழுதையுடன் உறவு வைக்கப் போக… அது, பின்னங்காலால் அடித்து, முழங்கால் சில்லு பெயர்ந்த சம்பவமும் உண்டு. 😂 முன்பெல்லாம்… மனித முகத்துடன் ஆடு, குட்டி போட்டு இறப்பதையும் செய்திகளில் வாசித்து இருப்போம். அது எல்லாம்… இந்த வியாதி பிடித்தவர்களின் வேலையாகத்தான் இருக்கும். 🤣- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
உக்ரைன் போர் ஆரம்பித்த சில நாட்களிலேயே…. வெளி நாடுகளில் இருந்து வரும் பணம் மற்றும் ஆயுத தளபாடங்களில் பெரும் ஊழல் நடப்பதாக செய்திகள் வந்தது. அதில் செலென்ஸ்கி கூட சம்பந்தப் பட்டு இருந்ததாக கூறி இருந்தார்கள். கடந்த நான்கு வருடங்களில்… எவ்வளவு பில்லியன் பணம் திருடப் பட்டிருக்கும் என்று ஊகிப்பது கடினம் அல்ல. போரை… வைத்தே மகிந்த ராஜபக்ச குடும்பம் பணக்காரர் ஆகிய மாதிரி, செலென்ஸ்கியும் அதே… செயலைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்.- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
செலென்ஸ்கி Black Mail பண்ணி... 90 பில்லியன் ஐரோ வாங்குகின்ற பிளான் போலுள்ளது.- அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்
இவர்களின் வாய்தான், இவர்களுக்கு முதல் எதிரி. - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.