Everything posted by தமிழ் சிறி
-
மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது!
- யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு! யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக,மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் அப்பகுதி மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடைகின்றது. அந்த வகையில் பௌர்ணமி தினமான இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424997- சிறுநீரக தினத்தை முன்னிட்டு வெளியான அதிர்ச்சி தகவல்!
சிறுநீரக தினத்தை முன்னிட்டு வெளியான அதிர்ச்சி தகவல்! இலங்கையில் தினசரி சிறுநீரக நோயாளிகள் ஐவர் உயிரிழப்பதாகத் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாட்டில் நாள்பட்ட சிறுநீரக நோய்க்குள்ளானவர்கள் 213,448 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதே ஆண்டில் 1,626 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய சிறுநீரக நோய்த் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 – 2024 ஆம் ஆண்டில் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 6,582 ஆக காணப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 300 ஆக இருப்பதாகவும் வடமத்திய மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 2006 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் “விழிப்புடன் இருங்கள், ஆரம்பத்திலேயே கண்டறியுங்கள், சிறுநீரகங்களைக் காப்பாற்றுங்கள்” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாக காணப்படுகிறது. https://athavannews.com/2025/1425006- துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்!
மித்தெனிய துப்பாக்கி சூடு; மேலும் ஒருவர் கைது! மித்தேனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் துபாய்க்கு செல்ல முயன்றபோது கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளனர். பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு மித்தேனியாவில் உள்ள கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற “கஜ்ஜா” என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும் மகளும் படுகாயமடைந்த நிலையில் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்தார், அதே நேரத்தில் ஒன்பது வயது மகன் மறுநாள் இறந்தார். “பேக்கோ சமன்” என்று பிரபலமாக அறியப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் கஞ்சா பொதியை திருடியதற்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424944- பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
பெண் வைத்தியர் மீதான பாலியல் வன்புணர்வு; சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது! அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, 37 வயதுடைய பெண்ணும், 27 வயதுடைய ஆணும் நேற்றிரவு இரவு கல்னேவவின் நிதிகும்பயாய பகுதியில் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபரான கல்னேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர், இன்று (13) அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கல்னேவ பொலிஸாரும் அனுராதபுரம் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, கல்னேவ காட்டுப் பகுதியில் மறைந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தாக்குதலின் போது பெண் மருத்துவரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை பொலிஸார் மீட்டனர். சந்தேக நபர் தற்போது அனுராதபுரம் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1424959- பாகிஸ்தான் ரயிலில் பயங்கரவாத தாக்குதல்: 104 பணயக்கைதிகள் மீட்பு!
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல்: பாகிஸ்தான் படையினரின் வெற்றிகரமான மீட்பு! பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாள் நீடித்த தீவிர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், சிறைபிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர், முற்றுகை முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை (12) மாலை தெரிவித்துள்ளது. எனினும், பலூச் விடுதலை இராணுவத்தால் (BLA) இருபத்தொரு பயணிகளும் நான்கு துணை இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்த 33 கிளர்ச்சியாளர்களையும் அழித்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பாகிஸ்தான் ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளார். “அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்று, மீதமுள்ள பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டதன் மூலம் (புதன்கிழமை) மாலையில் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன” என்று லெப்டினன்ட் ஜெனரல் அகமட் ஷெரீப் கூறினார். கிளர்ச்சியாளர்கள் 60 பணயக்கைதிகளைக் கொலை செய்ததாக கூறிய சிறிது நேரத்திலேயே இராணுவத்தின் அறிக்கை வந்தது. மேலும், இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படாவிட்டால் மேலும் பலரைக் கொலை செய்வதாக பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்தனர். பணயக்கைதிகளுக்கு ஈடாக பலூச் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வந்தனர். செவ்வாய்க்கிழமை (11) ஒன்பது பெட்டிகளில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில், குவெட்டாவிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள மலைப்பகுதிகளில் வெடிபொருட்களால் குறி வைத்து தாக்கப்பட்டது. இதையடுத்து, பலூச் விடுதலை இராணுவத்தால் பயணிகள் சிறைபிடிக்கப்பட்டனர். ரயில் தாக்குதலைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் உட்பட பல முனை தாக்குதலை பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். மீட்கப்பட்ட நபர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அவர்களை கிளர்ச்சியாளர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தினர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட உள்ளாடைகளை அணிந்த கிளர்ச்சியாளர்கள், பெண்களையும் குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து அருகில் உட்கார வைத்தனர், இதனால் மீட்பு நடவடிக்கை கடினமாக இருந்தது என்று அதிகாரிகள் முன்பு தெரிவித்தனர். எவ்வாறெனினும், பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்ட பயணிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்கள் மாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய பாதுகாப்பு அதிகாரிகள், நடவடிக்கை முடிவடைந்ததால் 300 க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மீது பலூச் கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அவர்கள் பயணிகள் ரயிலை குறிவைத்து தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை. பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற வேண்டும் என்று வாதிடும் பல்வேறு எதிர்ப்புக் குழுக்கள், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக புதிய தீவிரமான தாக்குதலை அறிவித்து, பலூச் தேசிய இராணுவம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் நடந்தது. ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையாக அமைந்துள்ள பலூசிஸ்தான், பல ஆண்டுகளாக கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அண்மையில் பல பயங்கரவாத தாக்குதல்களையும் சந்தித்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்கள் பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பலூசிஸ்தானின் சுதந்திரத்தை நாடுகின்றன. பாகிஸ்தான் அரசாங்கத்தால் தாங்கள் பாகுபாடு மற்றும் சுரண்டலை எதிர்கொள்வதாக பலூச் சிறுபான்மையினர் கூறுகின்றனர். https://athavannews.com/2025/1424951- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான பணி தாமதம்! சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவை ஏவுவதற்கான எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) புதன்கிழமை (12) ஒத்திவைத்துள்ளது. போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செய்த பின்னர் ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதற்கான ஒரு பணியில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான மாற்றுக் குழுவினரை ஏற்றிக்கொண்டு புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டை நாசா ஏவத் திட்டமிட்டிருந்தது. எனினும் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஏவுதல் ஹைட்ராலிக் தரைப் பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருந்தாலும், அடுத்த ஏவுதல் வாய்ப்பு அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை (13) மாலை 7:26 மணிக்கு முன்னதாக (23.26 GMT) இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையின் மறுஆய்வு நிலுவையில் உள்ளது. வியாழக்கிழமை க்ரூ-10 ஏவுதலுடன், க்ரூ-9 பணி மார்ச் 17 திங்கள் அன்று விண்வெளி நிலையத்திலிருந்து புறப்படும் என்றும் நாசா கூறியது. நாசா திட்டமிட்டதை விட முன்னதாகவே வில்மோர் மற்றும் வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வருமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர் ஸ்பேஸ்எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஆகியோர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க விண்வெளி நிறுவனம் இந்த பணியை இரண்டு வாரங்களுக்கு விரிவுபடுத்தியது. அமெரிக்க கடற்படையின் சோதனை விமானிகளும், மூத்த விண்வெளி வீரர்களுமான வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோருக்கு, சுற்றுப்பாதை நிலையத்தில் எட்டு நாட்கள் தங்க திட்டமிடப்பட்டிருந்த திட்டம் தாமதமாகியுள்ளது. கடந்த ஆண்டு அவர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பியது. https://athavannews.com/2025/1424979- பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது
சர்வதேச விசாரணைக்காக நெதர்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்ட பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி! சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) புதன்கிழமை (12) நெதர்லாந்தின் ஹேக் வந்தடைந்தார். அங்கு அவர் பதவியில் இருந்தபோது மேற்பார்வையிட்ட போதைப்பொருள் மீதான கொடிய ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். ஹாங்கொங்கிற்கான ஒரு பயணத்திலிருந்து துபாய்க்கு திரும்பிய டுடெர்ட்டேவை மணிலா விமான நிலையத்தில் வைத்து செவ்வாயன்று (11) பொலிஸார் கைது செய்தனர். 79 வயதான அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படும் முதல் ஆசிய முன்னாள் அரச தலைவராக மாறியுள்ளார். தனது நாடுகடத்தலை எதிர்த்துப் போராடிய டுடெர்ட்டே, 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸை வழிநடத்தினார். பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். https://athavannews.com/2025/1424970- கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
மருதங்கேணியின் 10 வருட காத்திருப்பு, ஒரு மாதிரி நிறைவுக்கு வருகின்றது. 😂 அவர் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும், ஹிருனிகாவை கொத்திக் கொண்டு போக பலர் காத்திருக்கின்றார்கள். சட்டு புட்டு என்று மருதர்... ஹிருணிகா கழுத்திலை மஞ்சள் கயிறு கட்டிப் போட்டு... அமெரிக்காவுக்கு கூட்டிக் கொண்டு போயிட வேணும். 🤣- விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பிணையில் விடுதலை
தெல்லிப்பளை வைத்தியசாலையில் மன நோயாளி மீது, பாலியல் வன்முறை. அனுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியர் மீது பாலியல் வன்முறை. இது போதாதென்று…. விமானத்தில் வைத்து 65 வயது இரட்டை குடியுரிமை பெற்ற தமிழர், விமான பணிப் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் என்று எல்லோருக்கும் காமம் தலைக்கேறி அலைகிறார்கள். நாளைக்கு இவர்கள் எந்த முகத்துடன் சமூகத்தில் நடமாடப் போகின்றார்கள்.- பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
சந்தேகநபர் இரண்டு நாட்களுக்கு முன்புதான்… விளக்கமறியலில் இருந்து வந்த முன்னாள் இராணுவ வீரராம். இப்படிப் பட்டவர்களை வெளியில் நடமாட விடுவதே ஆபத்தானது.- கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
நீங்கள்தான்... மலையாள மாந்திரீகம் செய்து, ஹிருணிகாவை வசியம் பண்ணி இருக்கின்றீர்கள் என்று சந்தேகமாய் இருக்கு. 😂- சிம்பொனி என்றால் என்ன?
இளையராஜா இசையில் சாதனைகள் படைத்த திறமைசாலி. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்... இந்திய ஊடகங்கள் செய்யும் அலப்பறை... தாங்க முடியாது. கிரிக்கெட் என்றாலும், ஒலிம்பிக்கில் ஒற்றை பதக்கம் வாங்கினாலும், ரஜனி இமயமலைக்குப் போனாலும்... வாசிப்பவர்களை அலுப்புத் தட்டும் அளவிற்கு டமாரம் அடித்துக் கொண்டு திரிவதை பார்க்கதான் சகிக்க முடியவில்லை. இந்திய பத்திரிகைகளே... கப்ஸா கதைகளை விடுவது வழமைதானே. 😂- கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
தமிழ் முறைப்படியா... சிங்கள முறைப்படியா கலியாணம். 😂- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- சிம்பொனி என்றால் என்ன?
இதுவரை.... மிகச் சிலரே சிம்பொனி இசை அமைத்து இருந்தார்கள் என நினைத்து இருந்தேன். நீங்கள் பதிந்த பட்டியலைப் பார்க்க... மிகப் பெரிதாக உள்ளது. இந்தப் பட்டியலை இந்திய தமிழ் ஊடகங்கள் இதுவரை பார்த்ததே இல்லைப் போலுள்ளது. பார்த்திருந்தால்... இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றேன். 😂- அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!
அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்! வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர் அதன்படி அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேடட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன் இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர் மற்றும் பீடாதிபதிகள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை கடந்த 11 ஆம் திகதி முதல் நாளை 13 ஆம் திகதி வரை வடக்குக்கு மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதரகக் குழுவினர் காங்கேசன்துறையில் அமைந்துள்ள துறைமுகங்கள் அதிகாரசபையின் வதிவிட முகாமையாளர் மற்றும் இலங்கைக் கடற்படையின் வடபிராந்திய அதிகாரிகளுடனும், மன்னாரில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சின் காற்றாலை மின்னுற்பத்தி செயற்றிட்ட அதிகாரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://athavannews.com/2025/1424934- மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு பயணத் தடை!
மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு பயணத் தடை! மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும், அவர் அந்த அறிவிப்பை புறக்கணித்து ஆஜராகத் தவறிவிட்டதாக NCPA தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றுக்கு அறிவிக்பப்ட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி ஆசிரியருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பலர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். இதன் விளைவாக, சந்தேக நபர் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக NCPA குறிப்பிட்டுள்ளது. தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர், ஒரு ஆண் மாணவனை முழு வகுப்பு முன்பும் மண்டியிடச் செய்ததையும், மற்றொரு மாணவியை மண்டியிட்ட மாணவனை பிரம்பால் தாக்கச் சொன்னதையும் காட்டும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது. மாணவர்களை அவர் தாக்கும் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவலாக வைரல் ஆகியுள்ளன. https://athavannews.com/2025/1424925- ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
ட்ரம்ப்பின் உலோக வர்த்தக வரிகள் அமுல்! அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் அனைத்திற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்த வரிகள் புதன்கிழமை (12) முதல் அமலுக்கு வந்தன. இது அமெரிக்காவிற்கு ஆதரவாக உலகளாவிய வர்த்தகத்தை மறுசீரமைக்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதுடன் ஐரோப்பாவிலிருந்து விரைவான பதிலடியைப் பெற்றது. அமெரிக்க எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்களுக்கான பாதுகாப்புகளை மொத்தமாக அதிகரிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை, உலோகங்களின் அனைத்து இறக்குமதிகளுக்கும் 25% உலகளாவிய வரிகளை மீண்டும் விதிக்கிறது. மேலும், உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படும் நூற்றுக்கணக்கான கீழ்நிலை பொருட்களுக்கு வரிகளை விரிவுபடுத்துகிறது. ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து ட்ரம்ப்பின் வரி விதிப்புகள் முதலீட்டாளர்கள், நுகர்வோர் மற்றும் வணிக நம்பிக்கையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலகப் பொருளாதாரத்தில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை முழுமையான வரிகளை விமர்சித்தன. அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய வெளிநாட்டு நாடான கனடா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் தென் கொரியா ஆகியவை வரிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாகும். அமெரிக்காவிற்கு எஃகு மற்றும் அலுமினியம் ஏற்றுமதி செய்வதற்கான வரியை 50% ஆக இரட்டிப்பாக்குவதாக ட்ரம்ப் ஆரம்பத்தில் கனடாவை அச்சுறுத்தினார். ஆனால், மினசோட்டா, மிச்சிகன் மற்றும் நியூயோர்க் மாநிலங்களுக்கு மின்சார ஏற்றுமதிக்கு 25% கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை ஒன்ராறியோ மாகாணம் நிறுத்தி வைத்த பின்னர் பின்வாங்கியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424912- கருத்து படங்கள்
- பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
- பட்லந்த வதை முகாம் குறித்த குற்றச்சாட்டுகள் - அல்ஜசீரா பேட்டியில் மறுத்தார் ரணில்
- பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லை – GMOA அறிவிப்பு. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424889- போலியான கிரிப்டோ மோசடி; அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை!
போலியான கிரிப்டோ மோசடி; அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஏனைய முக்கிய இலங்கை பிரமுகர்களை தவறாக சித்தரித்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் போலியான கிரிப்டோகரன்சி மோசடி விளம்பரங்களை பிரதமர் அலுவலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களால் இயக்கப்படும் இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதையும், நன்கு அறியப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய நம்பிக்கையைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. லிதுவேனியாவை தளமாகக் கொண்ட மோசடி கணக்குகளிலிருந்து உருவாகும் இந்த மோசடி பிரச்சாரங்கள், இலங்கையில் உள்ள பேஸ்புக் பயனர்களை தீவிரமாக குறிவைத்து செயல்படுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதேபோன்ற விளம்பரங்களில் அண்மையில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் எம்.பி. கிரிஷாந்த அபேசேன, பிரபல பத்திரிகையாளர்கள் அமந்த பெரேரா மற்றும் சுனந்த தேசப்பிரிய மற்றும் முந்தைய சந்தர்ப்பங்களில் இலங்கையின் பிற பொது நபர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, கிரிப்டோகரன்சி முதலீடுகளை ஊக்குவிக்கும் ஆன்லைன் விளம்பரங்களை, குறிப்பாக அரசு அதிகாரிகள் மற்றும் பொது நபர்களிடமிருந்து ஒப்புதல்களைப் பெற்றதாக பொய்யாகக் கூறும் விளம்பரங்களை எதிர்கொள்ளும்போது, குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு அரசு அதிகாரியோ அல்லது அமைச்சகமோ எந்தவொரு கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை. கூடுதலாக, அறிக்கைகள் மற்றும் நீக்குதல் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த மோசடிகளின் மாறுபாடுகள் சமூக ஊடக தளங்களில் தொடர்ந்து தோன்றுகின்றன, இது மோசடி விளம்பரங்களை திறம்பட கட்டுப்படுத்த பேஸ்புக்கின் இயலாமை குறித்த கடுமையான கவலைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஏமாற்று பிரச்சாரங்கள் பரவுவதைத் தடுக்கவும், இலங்கை பயனர்களை நிதி மோசடியிலிருந்து பாதுகாக்கவும் உடனடி மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்குமாறு மெட்டா (Facebook இன் தாய் நிறுவனம்)-ஐ நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் – என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி: பொது நபர்களிடமிருந்து ஒப்புதல்களைப் பெறும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களில் ஈடுபடவோ அல்லது கிளிக் செய்யவோ வேண்டாம் மோசடியான விளம்பரங்களை நேரடியாக Facebook மற்றும் Instagram இல் புகாரளிக்கவும் முதலீடு செய்வதற்கு முன் அனைத்து நிதி வாய்ப்புகளையும் முறையான ஆதாரங்கள் மூலம் சரிபார்க்கவும் https://athavannews.com/2025/1424855 - யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.