Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு.
  2. இதுவே எனது இறுதி இருப்பிடம் இதிலிருந்து என்னால் ஒரு அடிகூட இனி நகரமுடியாது. தலைவர் உறுதியாக கூறிவிட்டார். பெரும் ஊடறுப்பு தாக்குதலுக்கு தயாராக இருந்த அனைத்து அணிகளும் தயார்நிலையில் விடப்பட்டுவிட்டன. தலைவரின் இருப்பிடத்தை அண்மித்தே அனைத்து தளபதிகளது கட்டளை நிலையங்களும் போடப்பட்டிருந்தது. உள்ளே நகர்ந்த அணியின் இறுதிவேவுத் தகவலுக்காக காத்திருந்தவேளை அது. தீடீரென எதிர்பாராத விதமாக இராணுவம் முன்னேற்றத்தை மேற்கொண்டது.எங்கோ தகவல் கசிவு ஏற்பட்டதை விளங்கிக்கொண்டோம். இராணுவத்தின் முன்னேற்றம் எடுத்த எடுப்பிலே தலைவரின் இருப்பிடத்திற்கு நேரே தொடங்கப்பட்டதுதான் தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்திருந்தது. தலைவர் இருந்த இடத்தைக் கடந்து இராணுவம் ஊடறுத்துவிட்டது. நச்சுக்குண்டுகளின் தாக்கத்தாலும் எறிகணைகளின் சிதறல்களாலும் காயத்திற்குள்ளான போராளிகள் சமராட முடியாது மயங்கி விழுந்தனர். எங்களுக்கு உடம்பெல்லாம் எரிகாயமாக இருக்கிறது மூச்சுவிட மூக்கெல்லாம் எரியிது கண்ணால் பார்க்க முடியாதிருக்கிறது.உடனடியாக உதவிக்கு வாங்கோ. தலைவரின் பாதுகாப்பு அணியின் வோக்கி......கட்டளையிட்டு அடங்கியது. ராங்கோ வண்....ராங்கோ வண். லீமா சேரா......! பலமுறை அழைத்தும் தொடர்பில்லை. ரூ எய்ற்.....ரூ எய்ற்..... பப்பா நவம்பர்....! கடாபி அண்ணை எடுத்தார். நான் கிட்ட போய்ட்டேன்.ஆனால் அடி பின்னுக்கு இருந்தும் வருகிது.box பண்ணிற்றான் என நினைக்கிறேன். அந்தப்பக்கம் மணியின்ர பெடியள்தான் வெளியால உடைக்கிறதைவிட உள்ளால உடைக்கிறதுதான் சரி.இன்னும் ஆள் உள்ளுக்கதான்......! ராங்கோவின் கட்டளை இறுக்கமாக கிடைத்தது. தலைவரைச்சுற்றி இராணுவம் போட்ட முற்றுகை box ற்குள் ஒரு சிறிய பாதுகாப்பு box எமது அணிகளால் போடப்பட்டது.இப்பொழுது அந்த box க்குள் இருந்து,நகரும் box ஆக களமுனை மாறியது. சாரங்களை கிழித்து முகங்களில் இறுக்கமாக கட்டியபடி ஒவ்வொருவரது சண்டை அணிகளும் தலைவரின் இருப்பிடத்தை நோக்கிப் பாய்ந்தது. வெளியில் இருந்து மூன்று பக்கங்களால் எமது box ஐ நோக்கி எமது ஏனைய அணிகள் நகர்ந்து இராணுவத் தடுப்பை உடைத்து உள்நுழைந்து பாதுகாப்பாக தலைவரை மீட்டெடுத்தது. ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேற தலைவர் மறுத்தபோதும் அவரது கட்டளையை அந்தச்சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ளாது ஒருவாறு தட்டுத்தடுமாறி பலருடைய வேண்டுதல்களின் பின்னர் முழு விருப்பின்றி தலைவர் சம்மதிக்க ஆனந்தபுரத்திலிருந்து தலைவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தன அணிகள். தொடர்ந்துவந்த நாட்கள்.....உள்ளே அகப்பட்ட இராசயனக் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான போராளிகளை மீட்பதற்கான களமாகவே விரிந்தது.இப்போது இராணுவத்தின் தாக்குதல் அடங்கிவிட்டது கொல்லப்பட்ட இராணுவத்தின் உடல்களைக் கடந்து சண்டையணிகள் பழைய நிலைகளுக்குச் சென்று விட்டது.நூற்றுக்கணக்கான இராணுவத்தின் உடலங்கள் சிதறிக்கிடந்தது.பின்வாங்கிய இராணுவம் சிறிது நேரத்தில் பலமான விமானக்குண்டுவீச்சுகளை மேற்கொண்டது.மீண்டும் போராளிகள் இராசயனக்குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகினர்.இருபது தடவைக்கு மேலாக தொடர் விமானக் குண்டுத்தாக்குதல்களையும் அதேவேளை தொடர் எறிகணைத்தாக்குதலையும் சரமாரியாக மேற்கொண்ட சிங்களப்படை இராசயன முகக்கவசங்களுடன் முன்னேறியது. மயக்கத்துடனும்கூட போராளிகள் துப்பாக்கிகளைக் கைவிடாது சமராடினர். எதிரியிடம் எமது ஆட்லறிகள் பிடிபட்டுவிடக்கூடாதென்பதற்காக அதனை குண்டுவைத்து அழிப்பதில்கூட தம்மை வெடிமருந்தோடு அழித்தனர் சில போராளிகள்.ஊடறப்புக்களில் ஈடுபட்டபடி மயங்கிவிழுந்துகொண்டிருந்தனர். எல்லோருடைய வோக்கிகளும் கட்டளைகளைக் கொடுத்தபடியே ஆனாலும் வெளியிலிருந்து உதவிக்கு அணிகள் அவசர அவசரமாக அப்பொழுதுதான் அனுப்பப்பட்டுகொண்டிருந்தது. களச்சண்டைகள் கைகலப்புச் சண்டையாக மாறிப்போக போராளிகள் இராணுவத்தோடு நேரடியாகவே மோதும் நிலை உருவானது. வெளியிலிருந்து அணிகள் சென்று உள்நுழைந்து சண்டையை தீவிரப்படுத்தியபோதும்.இராசயனத் தாக்குதலுக்கு உள்ளான அணிகள் அனைத்துமே செயலிழந்துபோய்விட்டன. இன்னொரு பக்க முன்னரங்கை பலவீனப்படுத்தி அடுத்த பக்கத்தை பலப்படுத்துவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. 04/04/2009 விடியாத நாளாக இருளாகிப்போனது. கவிப்புயல் சரண்
  3. நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தியர் தம்பி நீ சாக மாட்டாடா கத்தாத என்றார். இல்லை நான் செத்திடுவன் எனக்கு தேசிக்கா தண்ணி கொடுங்க என மீண்டும் மீண்டும் கத்தினேன். முதல் 3 நாட்கள் உணவும் தண்ணியும் இல்லை கடும் தாகம் எனக்கு தேசிக்காய் தண்ணி குடிக்கனும் என்று கத்தினன். வைத்தியர் சொன்னார் தம்பி உடல் முழுவதும் காயம் நீ தண்ணீர் கூட குடிக்க கூடாது என்றார். வேதனை தாங்க முடியாது கடும் கெட்ட வார்த்தையால் வைத்தியரை திட்டினேன் வைத்தியரின் மாமா அங்கு இருந்தார் வைத்தியரின் மனைவியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினேன். அப்போது அவரின் மாமா தம்பி நீ தண்ணி குடிச்சா செத்திடுவா என்றார் நான் செத்தாலும் பரவாயில்லை தண்ணீர் தாருங்கள் என்று கதறினேன் பின் ஏதோ ஒரு துளி ஆ என்று சொல்லி அடி தொண்டைக்குள் விட்டார்கள். ஆனால் என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு தூசனம் பேசியும் யாரும் என்னை கண்டிக்கவில்லை. சேலேன் ஏற்றப்பட்டது கொஞ்சம் அமைதியாக இருந்தேன் நன்றாக இருட்டி விட்டது சேலேனை கடித்து மட மட என குடித்துவிட்டேன் சிறிது நேரத்தில் எனக்கு பக்கத்தில் இருந்தவர் இறந்து விட்டார் என தூக்கி சென்றார்கள். பின் வைத்தியர் என்னை வந்து செக் பன்னினார் இவ்வளவு வேகமாக சேலேன் முடிந்துவிட்டதை பார்த்தவுடன் சேலேன் குழாயை செக் பன்னினார் நான் அதை கடித்து குடித்தது அவருக்கு தெரிந்து விட்டது. இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டது ஆனால் அவர்கள் என்னை அடிக்கவில்லை, பின் மயக்கம் தெளிந்து பார்த்தவுடன் வைத்தியசாலையாக இயங்கி கொண்டு இருந்த ஒரு பாடசாலை காயப்பட்டவர்களுடன் படுத்திருந்தேன், பக்கத்தில் ஒருவன் பெரிய சத்தமாக கதிறி அழுதுகொண்டு இருந்தான் அண்ணேக்கு கையில காயம் எல்லாமே போய்ற்று எனி எதுவும் செய்ய முடியாது என இடை விடாமல் கத்தினார். எனக்கு எதுவும் புரியவில்லை பிறகு ஆறுதலாக கேட்டேன் அதன் பிறகு ஆனந்தபுரத்தில் நடந்தது பற்றி தெளிவாக கூறி கூறி அழுதார், அவர் ஓர் பொருப்பாளராக இருந்திருப்பார் ஆனால் அழுகையை நிறுத்தவில்லை. உண்மையிலேயே நான் போராட்டத்திற்கு புதுசு ஆனந்த புரத்தில் சிக்குண்டு கிடந்த நேரம் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, எங்களுக்கு அது பற்றி விளக்கமும் இல்லை, என் போன்ற பலர் அங்கு இருந்தார்கள் கோபித் அண்ணா வீரச்சாவு அடையும் வரை நாங்கள் அமைதியாகதான் இருந்தோம். வைத்தியசாலையில் என்னால் எழுந்து நிற்க முடியாது உடல் முழுவதும் 8 இடங்களில் காயம் கட்டிலில் கிடக்கும் க,எனக்கு ஒட்டு துனியும் இருக்காது அந்தரங்கம் ஒரு துண்டு துனியால் மூடப்பட்டு இருக்கும் சலம் மலம் எல்லாம் அப்படியே போகும். ஒரு ஐயாவும் ஒரு சின்ன தம்பியும் என்னை சுத்தம் செய்வார்கள். இப்படி சில நாள் சென்றவுடன் தம்பி எனி நீ நடக்க பழக வேண்டும் என்றார்கள். நானும் கட்டிலில் இருந்து எழுந்து கீழ் கால் வைக்கும்போது விழுந்து விட்டேன் அப்படி பலமுறை நடந்தது. எனியும் நடக்காமல் இருந்தால் சரி வராது என்று தடியை ஊண்டிக்கொண்டு டொய்லெட் போய் அங்கு விழுந்து எழும்ப முடியாமல் பல மணிநேரம் அதற்குள்ளே கிடந்தது என்னும் கண்களுக்குள் நிற்கிறது. இந்த படத்தில் கிடப்பது நானா என்பது எனக்கு தெரியாது ஆனால் கையில் சிவப்பு நூல் வெடிபட்ட இடம் அந்த வைத்தியர் அவர் பக்கத்தில் ஒரு ஐயா இது எல்லாம் என் கண்களுக்குள் வந்து போகிறது. தாயக விடுதலை போராட்டத்தில் எப்போதுமே நடக்காத பாரிய இழப்பு ஆனந்த புரத்தில் நடந்தேறியது. தேசிய தலைவர் கூறிய போன்று பலமுறை நூல் இழையில் உயிர் தப்பியது காலம் என்னும் ஏதோ ஒரு விடையத்தை செய்து முடிப்பதற்காக என்னை தயார் படுத்துகிறது என உணர்கிறேன் ... இது நான் இல்லை 2009 முன் வாழ்ந்த போராளி கார்மேகனின் நினைவுகளில் இருந்து... Malaravan Uthayaseelan
  4. இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று இரவு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது. அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியவையும் தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார். இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1427490
  5. https://scontent-fra5-2.xx.fbcdn.net/v/t39.30808-6/488540425_1079003887597916_4582371838532950754_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=fZEDcLJVXGwQ7kNvwElzNRj&_nc_oc=AdnjKej2bE_6YMX-U5iQjI8bIOwOPZjCUQyb509DmQRU5IDGj13KxQjvuWBqFrXpvvY&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-2.xx&_nc_gid=P2Iuo4Hp-HGn6le7H9HTnQ&oh=00_AYHOYL81ogb3GVZRRpIFWlHf7gcFBEo5Citkjsb-OCN39A&oe=67F583A0
  6. பூசா சிறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தமிழ் கைதி உயிரிழப்பு! காலி, பூசா சிறைச்சாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி, சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் உடலில் 11 இடங்களில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய நந்த குமார் சிவானந்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறையில் அண்மையில் நடந்த சோதனை அல்லது போதைப்பொருள் தொடர்பான மோதல் இந்த மரணத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். https://athavannews.com/2025/1427440
  7. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் அறிவிப்பு! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதுள்ளது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுக்களை ஆராய்ந்த பின்னர் பெர்னாண்டோ இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது அதன் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 26 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றில் கொத்மலை மற்றும் மஸ்கெலிய பிரதேச சபைகளுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமர்ப்பித்த இரண்டு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மாத்தளையில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்,மன்னார் மாவட்டத்தில் 08 வேட்பு மனுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1427382
  8. குருக்கள், அதிகப் பிரசங்கித் தனத்தால்... தன் உயிரை இழந்து விட்டார்.
  9. இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைய உள்ளது. இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏப்ரல் 5 ஆம் திகதி காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதோடு இருதரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும். இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்லைன் ஊடாக ஆரம்பித்து வைக்க உள்ளார். அதேபோல், இந்தியப் பிரதமர் அனுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு இந்தியப் பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார். கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் சாலையிலும், ஏப்ரல் 05 ஆம் திகதி காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், குறித்த வீதிகள் அவ்வப்போது பொதுப் பயன்பாட்டுக்காக அவ்வப்போது மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார். கூடுதலாக, இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வரும் நபர்கள் தற்காலிக வீதி மூடல்களைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாளை கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அப்பேகாம வளாகத்தின் வீதிகளும் அவ்வப்போது மூடப்படும் என்று அவர் மேலும் கூறினார். இந்த சிறப்பு போக்குவரத்துத் திட்டத்தை அனைத்து சாரதிகளும் பொதுமக்களும் பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2025/1427346
  10. வீதி விபத்துக்களால் இந்த ஆண்டு 592 பேர் உயிரிழப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 590 க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே போக்குவரத்துப் பிரிவின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 565 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். எதிர்வரும தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில், வீதி விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் வீதி விபத்துகளில் சராசரியாக தினமும் 7 முதல் 8 பேர் வரை இறக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மோட்டார் போக்குவரத்துத் துறையின் தவலின்படி, 2024 டிசம்பர் நிலவரப்படி, இலங்கையில் 8,454,513 பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவை தோராயமாக 4.92 மில்லியன் ஆகும், அதே நேரத்தில் முச்சக்கர வண்டிகள் சுமார் 1.185 மில்லியன் பதிவுகளுடன் இரண்டாவது பெரிய வகையாகும். நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் 72% ஆக உள்ளன. இதனால், அவை அதிக எண்ணிக்கையிலான வீதி விபத்துக்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார். ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் 2,231 விபத்துக்கள் நிகழ்ந்தன, இதன் விளைவாக 2,341 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டில், ஏற்கனவே 2,403 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன இதன் மூலம் 2,521 பேர் உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2025/1427352
  11. பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வு; 07 நபர்கள் கைது! 15 வயது பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தமை தொடர்பில் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் மாணவி மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிறுவன் அவளை ஹோமகமவில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், சிறுவன் அவளை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை தனது மூன்று நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றதாகவும், அந்த நேரத்தில் சிறுவனும் அவனது நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹோமாகமவில் உள்ள ஒரு பாடசாலை மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்களில் ஐந்து பாடசாலை மாணவர்கள் 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், மற்ற இரண்டு சந்தேக நபர்கள் 17 முதல் 19 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் சிறுமியை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். https://athavannews.com/2025/1427416
  12. நந்திக்கடல் களப்பில் குழப்பநிலை: கைவிலங்குடன் ஒருவர் தப்பியோட்டம். நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்ற நிலையில் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது நேற்று குழப்பநிலை ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் ஒரு சந்தேக நபர் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார். நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம், வட்டுவாகல் கடற்படை, கடற்தொழில் இணையம், கடற்தொழில் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வட்டுவாகல் களப்பில் நேற்று 50 வலை தொகுதிகளும், 9 படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வலை, படகுகளின் உரிமையாளர்கள் 50க்கு மேற்பட்டோர் வட்டுவாகல் பாலத்தடியில் ஒன்று கூடியதனை தொடர்ந்து குறித்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அத்தோடு கைது செய்யப்பட்ட ஒரு நபர் கைவிலங்குடன் தப்பியோடியுள்ளார். இதனையடுத்தே இன்றையதினம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அவ்விடத்திற்கு பொலிஸார், விஷேட அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மந்துவில், வலைஞர்மடம் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஐவரையும் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு கைவிலங்குடன் ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427432
  13. 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு… சிக்கிய செவிலியர். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றச் சாட்டில் செவிலியர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி வசந்தம் நகர் பகுதியில், சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சுற்றிவளைப்பின் போதே குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது. இதன்போது குறித்த செவிலியருடன் தொடர்பை பேணி வந்த மேலும் இருவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427438
  14. அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு! அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது. அமெரிக்காவுடன் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை வரவிருக்கும் முதலீடுகள் அல்லது அண்மைய வாரங்களில் அறிவிக்கப்பட்ட முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு தொழில்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மக்ரோன் கூறினார். பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM, அமெரிக்காவில் கப்பல் தளவாடங்கள் மற்றும் முனையங்களை கட்ட 20 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. அந்தத் திட்டத்தை அப்போது ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டினார். பிரெஞ்சு மின் உபகரண விநியகேஸ்தர் ஷ்னைடர் எலக்ட்ரிக் (SCHN.PA), அமெரிக்காவில் புதிய தாவலைத் திறக்கிறது. கடந்த மாத இறுதியில் அமெரிக்க எரிசக்தி உள்கட்டமைப்பை ஆதரிக்க நாட்டில் 700 மில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகக் கூறியது. மக்ரோனின் திட்டம் குறித்த கருத்துக்கான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கோரிக்கைகளுக்கு இரு நிறுவனங்களும் உடனடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்று மக்ரோன் கூறினார். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஒரு கருவியான வற்புறுத்தல் எதிர்ப்பு பொறிமுறையைப் பயன்படுத்தவும், அமெரிக்க பொருளாதாரத்தின் டிஜிட்டல் சேவைகள் மற்றும் நிதி வழிமுறைகளை இலக்காகக் கொண்ட பதில்களைப் பயன்படுத்தவும் பரிந்துரைத்தார். https://athavannews.com/2025/1427422
  15. அமெரிக்காவுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் கனடா பிரதமர்! “அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக் கொண்டுவந்தார். கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிய வர்த்தக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்றாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு, அலுமினியம் மற்றும் வாகனங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது ‘எமது வாகனங்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எமது வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணங்காத அனைத்து அமெரிக்க வாகன உதிரி பாகங்களுக்கும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும். அதன்மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் கனடா வாகன உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைக்காக பயன்படுத்தப்படும். ட்ரம்ப் விதித்த வரியைப் போன்று எங்களின் வரி வாகன உதிரி பாகங்களை பாதிக்காது. எங்களின் விநியோகச் சங்கிலியின் நன்மைகள் எங்களுக்குத் தெரியும். கனடாவில் உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் உதிரி பாக உற்பத்தியாளர்களுக்கு ஆதரவான கட்டமைப்பை கனடா உருவாக்கும்’ இவ்வாறு மார்க் கார்னி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1427376
  16. மியன்மாரில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடந்தது! மியன்மாரில், கடந்த மாதம் 29ம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், இந் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளதுடன், ‘4,589 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 221 பேர் காணாமற் போயுள்ளனர் எனவும், இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, உணவு மற்றும் தங்குமிடங்களை, அரசுடன் இணைந்து பல தனியார் நிறுவனங்கள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போதும் வீதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427359
  17. இலங்கையின் பொருட்களுக்கு 44% அதிக வரியை விதித்தது அமெரிக்கா… 2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. வியட்நாமுக்கு 46%, சீனாவுக்கு 34%, இந்தியாவுக்கு 26%, பிலிப்பைன்ஸுக்கு 17% மற்றும் சிங்கப்பூருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்க சந்தை பெரும் பங்கை வகிக்கிறது அதன் மீது ட்ரம்ப் விதித்த 44% வரியானது இலங்கையின் மொத்த வருவாயில் தாக்கம் செலுத்துவதால் மீண்டும் மக்களிடம் இருந்தே வரியாக அறவிட IMF நிர்பந்திக்கும் அப்போது அரசு அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது மேலும் வரியை விதிக்காமல் மக்கள் மீதே வரியை விதிப்பார்கள். உலக வர்த்தகப் போர் ஆரம்பமாகிவிட்டது; எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். • United Kingdom 10% • Singapore 10% • Australia 10% • Chile 10% • Brazil 10% • Turkey 10% • Colombia 10% • Israel 17% • Philippines 17% • European Union 20% • Japan 24% • Malaysia 24% • South Korea 25% • India 26% • Pakistan 29% • South Africa 30% • Switzerland 31% • Taiwan 32% • Indonesia 32% • China 34% • Thailand 36% • Bangladesh 37% • Sri Lanka 44% • Vietnam 46% • Cambodia 49% யாழ்ப்பாணம்.com
  18. நாய்களை இவர்கள் நேசிப்பது என்றால்... தங்கள் வீடுகளில், கட்டி வளர்க்கட்டும். சும்மா தெருவில் அவிட்டு விடுவதால்... அதுகள் போறவன், வாறவன் எல்லாரையும் திரத்திக் கொண்டு போய் கடிக்கின்றது அல்லது விபத்தை ஏற்படுத்துகின்றது. மோட்டார் சைக்கிள், துவிச் சக்கரவண்டிகளில் போனவர்கள் எத்தனை பேர் கை கால் முறிந்து இருக்கின்றார்கள் என்று இந்த ஆர்வலர்களுக்கு தெரியுமா? அரசாங்கம் நன்மை செய்ய வெளிக்கிட்டால், சில வெருளிகள்.... வேண்டாம் என்று மட்டையை தூக்கிக் கொண்டு வந்து தெருவில் நிற்குதுகள். அதிலை... இரண்டு மூன்று வெள்ளையளும் நிற்குதுகள். இதுகளை தெருநாய் உள்ள இடத்தில் கொண்டு போய் விட்டு.. கடி வாங்க விடவேணும். பிறகு பொக்கிளை சுத்தி 21 ஊசி போடும் போதுதான் புத்தி வரும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.