Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. விடுதலைப் புலிகளை ஒழித்தது போல் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்! -சரத் பொன்சேகா. ”தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்தது போல, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலிருந்து இலஞ்சம், மற்றும் ஊழலையும் முற்றாக ஒழிப்பேன்” என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி மற்றும் கட்சியின் களனி அமைப்பாளர் பதவிகளில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நான் சுயாதீன வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளேன். இந்நாட்டின் கட்சி அரசியல் என்பது ஊழல், மோசடிகளால் நிரம்பியுள்ளது என்பதை நான் பல தடவைகள் கூறியுள்ளேன். கட்சி அரசியல் என்பது ஜனநாயக ரீதியாக இருக்க வேண்டும். ஆனால், எமது நாட்டில் மோசடியாளர்கள்தான் கட்சிகளை வழிநடத்தி செல்கிறார்கள். இந்தக் கட்சிகளில் உள்ள பெரும்பாலானோரும் மோசடியாளர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனைய உறுப்பினர்களுக்கு நாட்டை வழிநடத்தும் அளவுக்கு போதிய அறிவும் தெளிவும் திட்டங்களும் கிடையாது. நான் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் இன்று விலகியுள்ளேன். எனினும், எனக்கு வாக்களித்து நாடாளுமன்றுக்கு அனுப்பிய களனி மக்களுக்காக தொடர்ந்தும் சேவை செய்தத் தயாராகவே உள்ளேன். நாட்டை வழிநடத்தக்கூடிய சரியான தலைவரை மக்கள் இம்முறை தெரிவு செய்ய வேண்டும். இராஜதந்திர ரீதியாக தலைமைத்துவம் வகிக்கக்கூடிய ஒருவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக நான் பெரும் பங்காற்றியிருந்தேன். எனினும், இந்தக் கட்சியின் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பாக என்னால் திருப்தியடைய முடியாது. பொருளாதார நெருக்கடி காலத்தில், அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது, நான் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அவருக்கு வலியுறுத்தினோம். ஆனால், சிறுபான்மையான உறுப்பினர்களுடன் அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முடியாது என அவர் அதை தட்டிக் கழித்தார். ஆனால், 2015 இல், 44 உறுப்பினர்களுடன் தான் அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தோம். அந்த அரசாங்கத்தை ஒரு வருடம் கொண்டும் சென்றிருந்தோம். நாட்டில் எல்லாம் சரியான பின்னர், முழுமையான அரசாங்கமொன்றை தானா நீங்கள் பொறுப்பேற்பீர்கள் என்று வினவியிருந்தேன். ஏனெனில், எதிர்க்கட்சி என்றால் வீழ்ந்துக் கிடக்கும் நாட்டை தான் பொறுப்பேற்க வேண்டும். எனினும், இந்த சவாலை அவர் அன்று ஏற்கவில்லை. பின்னர், நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடந்தபோது, அநுரகுமார திஸாநாயக்க 3 உறுப்பினர்களுடன் போட்டியிட்டிருந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரோ அந்தப் போட்டியிலிருந்தும் விலகினார். இறுதிவரை இதில் போட்டியிடுவேன் என்று அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வாக்கெடுப்பு தினத்தன்று காலையில் தனது முடிவை மாற்றி டளஸ் அழகப்பெருமவை வேட்பாளராக நிறுத்தினார். அப்போதே நான், சவாலை ஏற்றுக் கொள்ளாத இப்படியான தலைவர்களால் பயனில்லை என்று நினைத்தேன். இப்படியான தலைவர்தான் இன்று பாடசாலைகளுக்கு சென்று பேருந்துகளையும் உபகரணங்களையும் வழங்கி வருகிறார். இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது? பொதுஜன பெரமுனவுக்கு நிதி வழங்கிய கொழும்பின் கெஷினோ வியாபாரிகள்தான் இவருக்கும் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாக மக்களும் சிந்திக்க வேண்டும். எல்.டி.டி.ஈ. அமைப்பை முற்றாக அழிப்பேன் என கூறியபோது, யாரும் நம்பவில்லை. இறுதியில் செய்துக் காண்பித்தேன். அதேபோல, நாட்டின் ஊழல் மோசடிகளையும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் இல்லாதொழிப்பேன். ஒழுக்கமான ஒரு நிர்வாகக் கட்டமைப்பை ஸ்தாபிப்பேன் என்றும் மக்களிடம் இவ்வேளையில் உறுதியளிக்கிறேன்” இவ்வாறு பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395250
  2. முருங்கைக்காய் விலையில் வீழ்ச்சி! விவசாயிகள் பாதிப்பு. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்காக முருங்கைக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சந்தையில் முருங்கைக்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் தமது வாழ்வாதாரத் தேவைக்காக முருங்கை பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்பொழுது 40 ரூபாய் 50 ரூபாய்க்கும் என மொத்த விலையில் கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த நிலையில், முருங்கைக்காய்க்கு உரிய விலை சந்தையில் கிடைக்காத காரணத்தினால் இந்த பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடமும் இதே போன்று தாங்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டதாக முருங்கை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இரவு நேரங்களில் குரங்குகள் மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளமையினால், இந்த பயிர்செய்கை ஊடாக எந்தவொரு லாபமும் நன்மையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அறுவடை செய்யும்போது அதற்கான கூலி பணத்தை கூட பெற முடியாத நிலையில் சந்தையில் முருங்கையின் விலை காணப்படுவதால், அறுவடைக்கு தயாராக உள்ள முருங்கைக்காய்களைக்கூட அறுவடை செய்யாது கைவிடும் நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் விவசாயிகள் நஷ்டமடையாத வகையிலும் சந்தையில் பொருட்களின் விலைகள் மாற்றமடைய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395246
  3. 2009’ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த கட்சியை… இந்த கையாலாகதவர்கள் 12 ஆக சிறுக்கப் பண்ணி இருக்கின்றார்கள். ஆனால்… இந்த உருப்படாதவங்களின் வாய் மட்டும் பயங்கர நீளம். கிலிசு கெட்டவர்கள். 😂
  4. சுமந்திரன்... ஒரு பொய்யன் என்று, ஊரில் பேசிக் கொள்கிறார்கள். அது, உண்மை என்றுதான் நானும் நினைக்கின்றேன். 🙂
  5. சுமந்திரன் மீது நடவடிக்கைகள் எடுக்க... மாவைக்கு "தில்" இல்லை என்றால், அரியநேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்காமல், மாவை... 🤫 மூடிக் கொண்டு இருக்க வேணும். 😂
  6. மாவைக்கு, என்ன விசரே..... காலம் முழுக்க சுமந்திரன் என்பவர் கட்சி கட்டுப்பாடுகளை மீறி தனித்தவில் வாசித்துக் கொண்டு இருக்கிறார். அவர் மீது, மாவை... என்ன நடவடிக்கை எடுத்தவர் எண்டு ஒருக்கால் சொல்லட்டும் பாப்பம். 😂
  7. ஹரின் இடத்திற்கு ஹிருணிகாவா? கட்சிக்குள் கோரிக்கை! சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியை, ராஜினாமா செய்த ஹரின் பெர்ணான்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை கட்சி நீக்கியமை, சட்டத்திற்குட்பட்டது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, ஹரின் பெர்ணான்டோ அமைச்சு பதவியை, ராஜினாமா செய்ததிருந்தார். இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395234 @Maruthankerny உங்கடை ஆளுக்கு, பதவி உயர்வு கிடைக்கப் போகுது. 😂
  8. அரியநேத்திரனுக்கு எதிராக நடவடிக்கை…? கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள அரியநேத்திரன் தொடர்பாக, எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவென்றை எடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சி இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது வேட்பாளராக போட்டியிட தீர்மானித்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1395215
  9. பிரமிடுகள் இயற்னையாவே உருவானவை – மனிதர்களால் கட்டப்படவில்லை. பிரமிடுகள் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது எகிப்துதான். இங்குள்ள பழமையான பிரமிடுகள் கி.மு 2,630ல் மன்னர் ஜோசர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக இடம்பிடித்துள்ளது. இதனிடையே இந்தோனேசிய அறிவியல் கழகத்தை சேர்ந்த டேனி ஹில்மன் நடவிட்ஜாஜா தலைமையிலான ஆராய்ச்சிக் குழு அண்மையில் தொல்பொருள் ஆய்வு குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, இந்தேனேசியாவின் குனாங்க் படாங் பகுதியில் இருக்கும் பிரமிடின் மையப்பகுதி சிக்கலான் மிகப்பெரிய எரிமலையால் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இயற்கையான எரிமலை குன்றாக இருந்த பகுதியை பிரமிடின் மையப் பகுதியாக வைத்து, சிற்பம் மற்றும் கட்டிடக் கலையின் மூலம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் முந்தைய காலகட்டத்தின் அதிநவீன தொழில்நுட்பங்களை விளக்குவதாக கூறியுள்ள ஆராய்ச்சிக் குழு, சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தின் தொடக்கத்தில்தான் மனித நாகரிகம் வளரத் தொடங்கியதாகவும், கட்டுமானத் திறன்களை மனித இனம் பெற்றது என்ற கருத்துகளையும் கேள்விக்குறியாக்கிள்ளது. எனவே, துருக்கியில் இருக்கும் சான்றுகளை விட, விவசாயம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே மேம்பட்ட கட்டுமான நடைமுறைகள் இருந்ததாக கூறுவது ஆராய்ச்சியாளர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது. இதனிடையே, பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஃபிளிண்ட் டிபிள் அளித்துள்ள பேட்டியில், புதைக்கப்பட்ட அடுக்குகளில் மனித கட்டுமானத்தை குறிக்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மனித தலையீடு இல்லாம மலையில் இருந்து உருளும் பொருட்கள் இயற்கையாகவே தங்களை திசை திருப்பி முனைந்திருக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சதர்ன் கனெக்டிகட் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பில் பார்லி, குனாங்க் படாங்கில் இருந்து 27,000 ஆண்டுகள் பழமையான மண் மாதிரிகள், எலும்பு துண்டுகள் எடுக்கப்படவில்லை என்றும், இது வழக்கமான மனித செயல்பாடு குறியீடுகளை கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395214
  10. மீண்டும் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா! பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசீத் ஜாய் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சஜீப் வசீத் குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பங்களாதேஷின் நிலைமையில் வெளிநாட்டு தலையீடுகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஐ. எஸ் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2024/1395208
  11. நல்லூர் கொடியேற்றத்துக்கு பொருத்தமான பக்திப் பாடல் சுவியர். ஊரில் உள்ள தண்ணீர் பந்தல்களில் இந்தப் பாடலும் ஒலி பரப்பப்படும்.
  12. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீர்மானித்துள்ளார்.
  13. ஜனாதிபதித் தேர்தல் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமைச்சர் பவித்ரா ஆதரவு! ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் தீர்மானித்துள்ளார். மொட்டுக் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் பவித்ராவும் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பலர் தொடர்ச்சியாக ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தன்னுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பலருடன் நீண்ட ஆலோசனைகளை நடத்திய பின்னரே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்திரமற்ற நிலையில் பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்தமையை அனைவரும் அறிவார்கள் என்றும் அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலானோரின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். அன்று எடுக்கப்பட்ட தீர்மானத்தால் நாம் நம்பியது போல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருக்கின்றார் என்றும் எனவே ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆதரவாளர்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டனர் என்றும் அமைச்சர் பவித்திரா கூறியுள்ளார். எனவே, தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினராக இருந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1395136 ################### ############### ################# @குமாரசாமி 😂 🤣
  14. நல்லுாரானின் கொடியேற்றம் – பெருந்திருவிழா ஆரம்பம். வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி மஞ்சத் திருவிழாவும் ஓகஸ்ட் 31ம் திகதி சப்பரமும் செப்டம்பர் 1ம் திகதி தேர்த் திருவிழாவும் செப்டம்பர் 2ம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன. இந்த ஆண்டு அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1395165
  15. தமிழ் புதல்வன் திட்டம் இன்று ஆரம்பம். அரசு பாடசாலைகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும், 1000 ரூபாய் வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.15 க்கு கோவையில் ஆரம்பித்து வைத்துள்ளார். கோவை அரச கலைக்கல்லூரி மைதானத்தில் இதற்கான பிரமாண்ட விழா இன்று நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் தேர்வான மாணவர்களின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1000 செலுத்தப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதன்மூலம், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.360 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிக்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரச பாடசாலைகளில் படித்து விட்டு பின்னர் உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395162
  16. ஹவாய் பயணக் கட்டுரைக்கு நன்றி. 🙏 ஹவாயிலை ஒரு சின்ன வீடு வைத்திருக்கலாம் என்றால்... எரிமலை பயப்பிடுத்துது. 😂
  17. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையேயான முதல் விவாதம் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தனது X கணக்கில் பதிவிட்டு, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பாளரைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதற்குப் பதிலளித்துள்ள ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்புடன் விவாதம் செய்யத் தயார் என்றும், செப்டம்பர் 10ஆம் தேதியை அதற்குப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395155
  18. இந்த ஒற்றை மாங்காய்க்கு இருக்கும் பாதுகாப்பு போதுமா. 😂
  19. தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன். 🙂 கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்க.. கடற்கரை பக்கம் போகவில்லையா. 😂
  20. இந்த இடத்தில்… வெப்பம் எத்தனை பாகை?
  21. பையா... இந்தியா போனமுறை துப்பாக்கி சுடுதலில்.. ஒரே ஒரு வெண்கல பதக்கம் எடுத்தது. இம்முறை.. மூன்று எடுத்து எரப்பன் முன்னேறி இருக்கு. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.