Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி இன்றைய தினமும் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் ஆரம்பமாகியுள்ளது. தெற்காசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும். இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதான பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயம். ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டி ஆகியவை நடைபெறுகிறது. பிற்பகலில் தொடங்கும் பிரதான பந்தயங்கள் இரவு 10.30 மணிக்கு நிறைவடையவுள்ளமை குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1397685
  2. தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளநிலையில் இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இம்மாதம் 1 ஆம் திகதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397690
  3. உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம். உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால், அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397688
  4. அடேங்கப்பா... தமிழீழம் எங்கும், சங்கு சின்னத்துக்கு ஆதரவு. 😂 சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு. 💪
  5. தம்பி... கீதநாத் காசிலிங்கம், உங்கடை நல்லிணக்கத்தைத்தானே பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு இருக்கிறம். 😎 இனி... அது பாதிக்கிறதுக்கு, என்ன இழவு கிடக்குது. 😂 போய்... வேறை வேலை இருந்தால் பாருங்கப்பு. 🤣
  6. இலங்கை தீவின் பொருளாதாரத்தை சிதைத்து விட்ட 16 மோசடிகள். நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி மோசடியில் திறைசேரிக்கு ரூபா 19.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன இறக்குமதிக்கான வரி சலுகை மோசடியால் பொது நிதிக்கு ரூபா 7 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. கோத்தபாயா ராஜபக்சேவின் வரி சீரமைப்பு மோசடிகளால் திறைசேரியின் வருமானம் ரூபா 600 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது. கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது நடந்த சீனி இறக்குமதி வரி மோசடியில் ரூபா 16 பில்லியன் வருமான இழப்பு அரசுக்கு ஏற்பட்டது. அதே கோத்தபாயா ராஜாபக்ச அதிகாரத்தின் கீழ் வெள்ளை பூடு இறக்குமதி (Garlic) மோசடியில் ரூபா 7.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. கோத்தபாயா ராஜாபக்ச அதிகாரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உர இறக்குமதி காரணமாக 6.9 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் இழப்பீடாக செலுத்தப்பட்டது. கோத்தபாய ராஜபக்சவின் 100,000 KM நீளமானவீதிகள் புனரமைப்பு திட்டத்தில் அரச நிதிக்கு 30,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. X-Press Pearl இழப்பீட்டு நடைமுறைகளில் நடைபெற்றசடிகளில் 6.2 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டது. மக்கள் வங்கியில் கடன்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் திரு தயா கமகே, திரு அர்ஜுன் அலோசியஸ் உட்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் அரசியலுக்கு நெருக்கமான வியபாரிகளின் ரூபா 54 பில்லியன் கடன்கள் (Bad Loans) மீள செலுத்தப்படவில்லை. திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திற்கு வந்த பின்னர் நடைபெற்ற சீனி இறக்குமதி மோசடியில் ரூபா 1,000 மில்லியன் இழப்பு அரச திறைசேரிக்கு ஏற்பட்டது. திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்கம் $0.0488 per KW கேள்வி மனுவை சமர்ப்பித்த Windforce நிறுவனத்தை தவிர்த்து $0.0826 கேள்வி மன்னுகோரலை சமர்ப்பித்த Adani யின் நிறுவனத்தோடு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்த காரணத் தினால் திறைசேரிக்கு US cents 3.38 per KW (69% over cost) இழப்பு ஏற்பட்டது. திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் எவகேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் விசா சேவையை வழங்க VFS Global அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் 2.6 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. இது தவிர,மஹிந்த ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது நடைபெற்ற மிஹின் லங்கா விமான மோசடியில் ரூபா 13 பில்லியன் நஷ்டம் இலங்கை பொது நிதிக்கு ஏற்பட்டது. அதே காலப்பகுதியில் நடந்த Airbus மோசடியில் ரூபா 14,000 மில்லியன் இழப்பு அரச திறைசேரிக்கு ஏற்பட்டது கட்டுநாயக்க விரைவு சாலை நிர்மாணத்தில் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் தலா ரூபா 1பில்லியன் இழப்பும் Kandy- Colombo விரைவுச்சாலை நிர்மாணத்தில் ரூபா 50 பில்லியன் இழப்பும் பொது நிதிக்கு ஏற்பட்டது. இது தவிர ராஜபக்சே குடும்பம் நேரடியாக தொடர்புபட்ட Mattala Rajapaksa International Airport ,Hambantota Port Project,Divineguma Fund Misuse,Stock Market Manipulation.Misappropriation of Tsunami Funds,Lotus Tower Project,Military Procurement Scandals போன்ற தளங்களில் நடைபெற்ற மோசடிகளில் ரூபா பல பில்லியன் இழப்பு திறைசேரிக்கு ஏற்பட்டது. ஆனால் மேற்படி மோசடிகள் தொடர்பானவர்கள் மிக தெளிவாக அடையாளம் காணப்பட்ட போதும் யாருமே இதுவரை நீதி கட்டமைப்பின் முன் நிறுத்தப்படவில்லை. திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் ஊழல் மோசடி வழக்குகளில் சிக்கியிருந்த ராஜபக்சே குடும்பத்தை மிகவும் தெளிவாக காப்பாற்றியிருந்தார். குறிப்பாக அவன்காட் மோசடி வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்சே அவர்களை திரு ரணில் விக்ரமசிங்கே காப்பாற்றியதால் தான் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியானார். அதே போல நாமல் ராஜபக்சே சிக்கியிருந்த பல்வேறு Money Laundering வழக்குகளிலிருந்து அவரை திரு ரணில் விக்ரமசிங்கே காப்பாற்றியதால் தான் அவர் தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றார். மறுபுறம் திரு ரணில் விக்ரமசிங்கே தொடர்புபட்ட பிணைமுறி மோசடி விசாரணைகளை ராஜபக்சே குடும்பம் நீர்த்து போக செய்த காரணத்தினால் அவர் ஜனாதிபதியாகி தற்போது 2 ஆம் தடவை போட்டியிடுகின்றார். ஆகவே இந்த கூட்டு களவாணிகளை அரசியல் அரங்கிலிருந்து தோற்கடிக்காமல் இங்கு Goverance Reforms க்கு வாய்ப்பில்லை. Goverance Reforms வின்றி இலங்கை தீவும் முன்னேற போவதில்லை. இனமொன்றின் குரல்
  7. அரச ஊழியர்களின் சம்பளம், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அதிகரிக்கப் படும். - அனுர- எனது அரசாங்கம்... சர்வதேச சந்தைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும். - அனுர.-
  8. நல்லுாரில் சஜித் பிரேமதாசா. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித் பிரேமதாசா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397652
  9. தேர்தலை இலக்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார். இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். https://athavannews.com/2024/1397649
  10. பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு... வடக்கு, கிழக்கு தமிழரசு கட்சியின் கிளைகள் பலவும் ஆதரவு கொடுத்துள்ளன. 💪 போற போக்கிலை... சுமந்திரனும், சாணக்கியனும் வழக்கம் போல, தனித்துப் போயுள்ளார்கள்.
  11. 👇 தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்கள் – அரியநேத்திரனுக்கு ஆதரவு. 😂 சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சிலரின் மைண்ட் வாய்ஸ்: ஐயோ.. எரியுதடி மாலா. 😂 🤣
  12. தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்கள் – அரியநேத்திரனுக்கு ஆதரவு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தங்களது தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் முன்வைப்பதற்கும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தங்களது தீர்மானத்தை அறிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் ஒன்றையும் அவர்கள் அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளனர். எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை கூடவுள்ளது. இந்தநிலையிலேயே கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். https://athavannews.com/2024/1397640
  13. கடந்த 70 ஆண்டுகளில்.... நடந்த ஸ்ரீலங்கா அரசின் பயங்கரவாதத்தால், நிகழ்ந்த எந்த ஒரு அழிவிற்கும் ஸ்ரீலங்கா அரசால் நீதி வழங்கப் படாது இருக்கும் போது... உங்களது அமைப்பையும், உங்களையும் நம்பி காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்கள் எப்படி தங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வர். அதற்காகாகத்தான் தமிழர் தரப்பு உங்களை நம்பாமல் சர்வதேச விசாரணையை கோருகின்றார்கள். அந்த சர்வதேச விசாரணைக்கும் சுமந்திரன் என்பவர்... உள்ளக விசாரணையே போதும் என்று சொல்லி அதனையும் வலுவிழக்க செய்துவிட்டு.. தமிழருக்காக அரசியல் செய்கின்றேன் என்று ஒரு ஆளாக திரிகின்றார். எங்கடையளே பயங்கர சுத்துமாத்து அரசியல் செய்து கொண்டு இருக்கும் போது... மற்றவனை நொந்து என்ன பயன்.
  14. என் வீட்டில் திருடன் வந்து திருடினான். நான் “திருடன்” “திருடன்” என்று கத்தினேன். உடனே பொலிசார் என்னை கைது செய்தார்கள். நான் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது ஒரு கவிஞரின் கவிதை வரிகள். ஆனால் இதே போன்ற சம்பவங்கள் உண்மையாகவே எம் நிலத்தில் நடக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2500 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை அவர்களுக்கு எந்த அரசும் பதில் வழங்கவில்லை. நீதி வழங்கவில்லை. ஆனால் அவர்களின் அடையாள நிகழ்வில் பங்குபற்றியவர்களை கைது செய்து மிரட்டுகின்றனர். திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிகழ்வில் பங்குபற்றிய ராஜீவ்காந்த் என்பவரை கைது செய்துள்ளனர். இதற்கு முன்னரும் இவர் கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்க முனைகிறது சிங்கள அரசு. தோழர் பாலன்
  15. மணலும் கடத்தல், மரக் குற்றியும் கடத்தல். ஓரு நாளில் 25 வாகனங்கள் அம்பிட்டு இருக்கின்றது என்றால்… இது கனகாலமாக காவல் துறையின் ஆதரவுடன் நடந்திருக்கின்ற தொழில். இப்போ ஏதோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிணக்கில்… பொலிஸ் கைது பண்ணி இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்.
  16. ஏனப்பா... கந்தையா அண்ணைக்கு, சில்க் சிமிதா மாதிரி ஆட்களை கொடுங்களேன். 😂
  17. இது பாரிஸ்´இல், எடுத்த படமாம்.
  18. நான்... ஜனாதிபதியானால், எரி பொருள் 200 ரூபாவினாலும், மதுபானம் 25 வீதத்தினாலும் குறைக்கப்படும். - ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க. - குடிமக்களின் மனம் கவர்ந்த, நாட்டின் முதல் குடிமகன். 😂
  19. வங்கியில் கடன் வாங்கி, உலக பணக்கார ஆகும் திறமை குஜராத்தி மாடலுக்கே சாத்தியம்.... அந்த கடனும் தள்ளுபடி ஆகும் அதுவும் குஜராத் மாடல் சாதனைகளில் வரும். ரிஷி சேகர் கடனளிக்க கமிஷன் வாங்கிய அதிகாரிகளை, அரசியல்வாதிகள் காப்பாற்றிவிடுவார்கள். மக்களை யார் காப்பது. வங்கி மேல் உள்ள நம்பிக்கை போய் வெகுகாலமாச்சி. Bharathi ஐயா ஏர்டெல் ன் இந்தியாவுக்கு தரவேண்டிய கடன் இரண்டு லட்சம் கோடி ரூபாய் இருக்கு... வோடபோன் ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கு. Sarvajit K Rajendiran அந்த வாரா கடனெல்லாம்..., வரியாக நம் மீதுதான் சுமையாக ஏறும்....
  20. யுத்தத்தை முடித்த... மகிந்தவுக்காக, நாமலுக்கு வாக்குப் போட வேண்டும். - திஸ்ஸ குட்டியாராச்சி - நாடாளுமன்ற உறுப்பினர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.