Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 👉 https://www.facebook.com/100082190631746/videos/520679163453432 👈 மீன் பிடித்தவருக்கு.... நடந்த துயரச் சம்பவம்.
  2. ATM இயந்திரம் வைத்திருந்த இடத்தின், வாடகையை... வங்கி, இடத்தின் உரிமையாளருக்கு கொடுக்காததால், ATM இயந்திரத்தை உள்ளே வைத்து, பூட்டி விட்டார். 😁
  3. ஒரு காதை, கட் பண்ணினால், மற்றக் காதால் கேட்கலாம் தானே.... 🤣
  4. யாழ்ப்பாணத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பேருக்கு, வடிகாலமைப்பு பிரச்சினைகளுக்கு.. புலம்பெயர்ந்தோரே முக்கிய காரணம். 85 வீதமான வீடுகளில்... சுற்றுமதில், கொங்கிரீட் முற்றங்கள் வடிகாலமைப்புகளை சிதைத்த கட்டுமானங்களை, அங்கிருந்து பணமனுப்பி அரங்கேற்றிய கொடுமையை செய்தவர்கள் புலம்பெயர்ந்தோரே. - நீதிபதி இளஞ்செழியன்.-
  5. தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் – 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு! பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகம் உள்ளவர்களிடம் இருந்து இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தினேஷ் ஷாஃப்டரை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் தினேஷ் ஷாப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்குச் சென்று கொண்டிருந்ததுடன், உணவகம் ஒன்றில் இரண்டு பேருக்கு பாரியளவு சிற்றுண்டிகளை எடுத்துச் சென்றமை தொடர்பிலும் விசாரணைக் குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளன. மயானத்திற்குச் செல்வதற்கு முன் வேறு இடத்தில் தினேஷ் ஷாப்டர் தின்பண்டங்களை உண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், தினேஷ் ஷாஃப்டரின் அனைத்து வணிக நடவடிக்கைகளும் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போதைய விசாரணைகளில், தினேஷ் ஷாப்டரின் வர்த்தக விவகாரங்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கியவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபரின் நடத்தை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் நான்கு பேரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று உத்தரவிட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1316570
  6. மேற்கு ஊடகங்களின் பார்வையில், இது மட்டும்.. பொய் செய்தி. 🤣
  7. தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்? பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பொரளை பொலிஸார் நேற்று (செவ்வாய்கிழமை) விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இதேவேளை, பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2022/1316460
  8. நடமாடும் சுடுகாடு. உங்கள் வீட்டிற்கே வந்து, பிணத்தை எரித்து... ஒரு மணி நேரத்தில் சாம்பலையும் தந்து விடுவார்களாம்.
  9. சிலர் சும்மா பகிடிக்கு, சில கூத்துக்களை செய்கிறார்கள் என நினைத்தேன். ஆனால்… நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது. அதே… காணொளியில், ஒரு தகப்பன் இரண்டு பாடசாலை செல்லும் வயதுடைய பிள்ளைகளையும் கூட்டி வந்து கோசம் போடுகின்றார். 😂
  10. 👉 https://www.facebook.com/watch?v=808110850288721 👈 ரசனிகாந்து வீட்டிலை இல்லை என்று சொன்ன உடனே... தேம்பி அழுத பெண். 😂 🤣
  11. ஒரு ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. “இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து அலைகிறேன். மீந்து போன பழைய உணவே கிடைக்கிறது. உப்பு சப்பில்லாத அதைச் சாப்பிட்டு சாப்பிட்டுச் சலித்து விட்டது. இவர்களுடன் சேர்ந்து திருட வேண்டும். வளமாக வாழ வேண்டும்’ என்று நினைத்தான் அவன். தன் எண்ணத்தை அவர்களிடம் சொன்னான். அதற்குத் திருடர் தலைவன், “திருடுவது எளிது அல்ல. அதற்குத் திறமை வேண்டும். நீ எங்களுடன் சேர்ந்து திருட வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறோம்,” என்றான். “எதுவும் எனக்கு இனாமாக வேண்டாம். நீங்கள் திருடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்கிறேன். நானாக எதையும் செய்ய மாட்டேன்,” என்றான் அவன். “இன்றிரவு பண்ணையார் மந்தையில் ஆடுகளைத் திருடப் போகிறோம். நீயும் வா,” என்றான் திருடர் தலைவன். இரவு நேரம், திருடுவதற்கு அவர்கள் புறப்பட்டனர். இடுப்பில் சங்கை கட்டிக் கொண்டு அவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். எங்கும் இருட்டாக இருந்தது. அவர்கள் அனைவரும் பண்ணையாரின் மந்தைக்குள் நுழைந்தனர். திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்டின் கழுத்தைப் பிடித்து தூக்கினர். அப்படித் தூக்கினால் ஆடு கத்தாது. திருடிப் பழக்கம் இல்லாத அவன் ஆட்டின் காலைப் பிடித்துத் தூக்கினான். அதனால் அந்த ஆடு கத்தியது. ஆட்டின் கத்தலைக் கேட்ட திருடர் தலைவன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கு. அது கத்தாது என்று சொல்ல நினைத்தான். கழுத்தை “சங்கு’ என்று சொல்வது வழக்கம். “சங்கைப் பிடி! சங்கைப் பிடி,” என்று மெல்லியதாக குரல் கொடுத்தான். இதைக் கேட்ட பிச்சைக்காரன், சங்கை ஊதும்படி சொல்கிறான் திருடர் தலைவன். சங்கு ஊதும் திறமையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தான். ஆட்டைக் கீழே விட்ட அவன் இடுப்பில் இருந்த சங்கை எடுத்தான். வலிமையாக ஊதினான். சங்கோசை எங்கும் கேட்டது. அங்கே காவல் இருந்தவர்கள் விழித்து கொண்டனர். பிறகு என்ன? பிச்சைக்காரனை கூட்டு சேர்த்த திருடர்கள் சிறைக்குச் சென்றனர். இதிலிருந்து வந்ததுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழி. Sreenivasan T
  12. பிக்குவும், அரசியல்வாதியும்... ஆடம்பர வாகனத்தில் போதைப் பொருளை கடத்த... மாணவர்களின்... புத்தகப் பையில், போதைப் பொருள் உள்ளதா என சோதனையிடும் காவல்துறை.
  13. என்ஜினுக்கும், எஞ்சினியருக்கும்... என்ன வித்தியாசம்? 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.