Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. அவன் : டேய்.. முதுகு சொறியுது கொஞ்சம் சொறிஞ்சு விட்ரா.. இவன் : எங்க ? அவன் : ஆப்கானிஸ்தானுக்கு மேல டா
  2. காரைக்காலில் அய்யா உன் அருள்
  3. டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு, இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள். கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு. மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு. இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். மனைவி : பேசாம படுங்க...காலைல எழுந்ததும் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும். சுடுகாட்ல புக் பண்ணனும். உங்களுக்கென்ன காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல. ஜாலியா போயிருவீங்க!! கணவன்:
  4. ஓங்கார பிரணவ விநாயகனே சரணம் பங்கா இணுவை
  5. இங்க இந்த இடத்தில் இருந்தாலே ஒரு நல்ல மனநிலை கிடைக்கும் போலை ,இன்றய லைக் எல்லாம் முடிஞ்சுது நாளை ..உண்மையில் ,அழகான ,அமைதியான இடம் போன்று இருக்கின்றது..
  6. காவடிகள் கோடி வந்து ஆடுதம்மா காவடிகள் கோடி வந்து ஆடுதம்மா மாறி உன்னழகு திருவடிகள் தேடுதம்மா
  7. ஆஹா,குரங்குப்புத்தி,குங்கிட்ட நிறையவே இருக்கு ..
  8. " படித்ததில் ரசித்த நகைச் சுவை. . . கணவன் மனைவி விவாகரத்து வழக்கு" நீதிபதி : "உங்க மனைவியை விவாரத்து செய்ய காரணம் என்ன?" அப்பாவி கணவர்: "அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும் முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க.அப்பரம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க. சரி என்று நீதிபதி கூற,அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை அந்த பெண்ணிடம் ஆரம்பித்தார். வக்கீல் : அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை? பெண் : அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க. வக்கீல் : அது இல்ல மேடம், உங்களுக்கிடையில் என்ன தகராறு?" பெண் : எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது? வக்கீல் : அடடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது. பெண் : தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம். வக்கீல் : உங்கள் கணவர் மீது கருத்து வேறுபாடு ஏதாவது இருக்கா? பெண் : அவரு கருப்புதாங்க.நானும் கறுப்புதான்.அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க. வக்கீல் : உங்க வீட்டுக்காரரோட என்ன சண்டை? பெண் : வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை? மாசம் ஒன்னாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கு போயிடறாரு. வக்கீல் : (கோபத்துடன்) இதோ பாருமா,உனக்கு விவாகரத்து வேணுமா? பெண் : அய்யோ வேணாங்க.எங்கிட்ட ஏற்கனவே மூனு "விவாஹா பட்டு" இருக்குங்க.நீங்க வேற வாங்கி தந்தா என் கணவர் சந்தேக படுவாருங்க. இதற்கு மேல் வக்கீலால் தாங்க முடியவில்லை. (மிகவும் சத்தமாக கோவத்துடன்) “உங்க வீட்டுக்காரர் எதுக்காக விவாகரத்து கேட்கிறார்?" பெண் : ஓ..அதுவா? என்னோட பேசறப்ப எல்லாம் மாரடைப்பு வந்துடுதாம்.நீங்க இப்ப எங்கூட நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.உங்களுக்கென்ன மாரடைப்பா வந்திரிச்சு? இதுக்கு போயி விவாகரத்து கேக்குறாருங்க. கடைசியில் அந்த வக்கீல் நெஞ்சில் கை வைத்தபடி மாரடைப்பால் கீழே விழுந்தார்.
  9. எனக்கு உன் அகத்தில் ஒரு இடமில்லையே தேவி மனக்குறை அகற்றிடும் மாதா மனோன்மணி
  10. பாம்பும் இசையும் ஓஷோ. இந்தியர்கள் ஓராயிரம் ஆண்டுகளாக பாம்புகளை வணங்கிவருகிறார்கள். இந்தியா முழுவதும் ஆங்காங்கே வாழும் பாம்பாட்டிகள், ஒரு குறிப்பிட்ட ராகத்தை மகுடியில் வாசிக்கும்போது, புற்றிலிருந்து நாகங்கள் வெளிவருகின்றன . அப்போது முற்றிலுமாக அந்த ராகத்தினால் தன் நச்சுத்தன்மையை இழக்கின்றன. பின்பு மகுடியின் ராகத்திற்கு தகுந்த மாதிரி நடனமாடுகின்றன. முதன்முறையாக இந்தியா வந்த பிரிட்டிஷார் இதை பார்த்து திகைத்தனர். அவர்கள் அறிவியல் அறிஞர்களை கேட்டபோது, பாம்புகளுக்கு நிச்சயம் காதுகள் கிடையாது எனவும்... கேட்பதற்குண்டான செவிப்பறை கிடையாது எனவும் ... உடலியல் ரீதியாக இதை திட்டவட்டமாக அறிஞர்கள் மறுத்தனர். ஆனால் பாம்புகள் இசையைக் கேட்கின்றன. அதோடு இசைக்கேற்ப நடனமாடவும் செய்கின்றன. ஒரு பாம்பு அல்ல.எல்லா பாம்புகளும் இசைக்காக நடனமாடுகின்றன. காதில்லாமலே....!! இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பினர். எப்படி காதில்லாமலே இசையை பாம்புகள் உணர்கின்றன.அதோடு புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றன... என ஆங்கில அறிஞர்கள் குழப்பமடைந்தனர். இது ஏதோ இந்தியாவில் ஒரு மூலையில் மட்டும் நடக்கின்ற செயலன்று. இந்தியா முழுமைக்கும் இது எப்படி சாத்தியமாகின்றது. இந்தியர்கள் இளவேனிர்காலம் ஆரம்பித்தவுடன் பாம்புகளுக்கு திருவிழாக்களை ஆரம்பிக்கின்றனர். பூக்களின் நறுமணம் சில்லென்ற காற்று பச்சை போர்த்திய அழகுடன் கூடிய மாதத்தில். பாம்புகளுக்கென்று ஒரு நாளை ஒதுக்குகின்றனர். அந்த நாளில் பாம்புகளைக் கொல்லமாட்டார்கள். பாம்புகளை தெய்வீகமாக வணங்கி, பாலை ஊற்றி வணங்கி மகிழ்கின்றனர். ஒரு இடத்தில் கூடி, பாம்பு நடனத்தைக் கண்டு ரசிக்கின்றனர். இறுதியாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது. ஆனால், உடலிலுள்ள மொத்த தோலுமே இசையை உணர்கின்றது என்று ! தோல்களில் இசை அலைகள் பட்டவுடன், அவை நெளிகின்றன.. ரசிக்கின்றன... பின்பு நடனமும் ஆடுகின்றன. காதால் கேட்கவில்லை என்றாலும் உடல் முழுமைக்கும் அது கேட்க ஆரம்பிக்கின்றன . பாம்புகளுக்கு காதில்லை... அது கேட்பதில்லை என்பது முட்டாள்தனமானது. மனிதனுக்கு சிறிய காது மட்டுமே உண்டு. சிறிதளவே அவனால் கேட்கமுடியும். ஆனால் பாம்புகளுக்கு உடலே காதாக உணர்வாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் , காதுக்குள்தான் பாம்புகளுக்கு உடலே உள்ளது ! பாம்புகள் புற்றை விட்டு வெளியே வருவது ஆபத்து என அவைகளுக்குத் தெரியும் ! நஞ்சில்லாமல் வெளிவருவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும் ! மக்கள் மத்தியில் நடனமாடுவது ஆபத்து என அவைகளுக்கு தெரியும் ! ஆனால் இசையைக் கேட்டவுடன், பயமற்றுப் போகின்றன. பயமில்லாமல் போவதால் நஞ்சு அதற்குத் தேவையில்லாமல் போகிறது. அது, தன்னை யாரும் கொல்ல மாட்டார்கள் என நம்பிக்கை கொள்கிறது. சந்தைப் பகுதிகளில் பாம்பை வைத்து வித்தை காட்டுவது மோசமானதாகும். பாம்புகளுக்கு பயம் தொற்றிக்கொள்ளும் தருணம் மனிதனைத் தாக்க ஆரம்பித்துவிடும். அப்படிதான் பிரபஞ்சமும்... அதற்குக் கைகளோ, கால்களோ, மற்ற அவையங்களோ கிடையாது. ஆனால் மொத்த பிரபஞ்சமே கடவுள் தன்மையால் நிரம்பியுள்ளது ! இந்த பிரபஞ்சத்திற்கு இணக்கமாகப் போனால் கடவுளோடு இணங்குவதாக அர்த்தம் !!!! ஓஷோ மகான்
  11. குபேர குசேலா 1943 ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
  12. எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு ‘ஆழிக்குமரன்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு; சாதனை 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது. சாதனை 1978 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது. சாதனை 1979 ஆம் ஆண்டில் 1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை. சாதனை 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை. சாதனை 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை. சாதனை 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups). சாதனை 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை. சாதனை 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை. ஓர் மோட்டார் சைக்கிள் விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின் வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார். சாதனை முயற்சியின் போது “குளிர்ந்த கடலே கவலை தருகிறது” அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை” என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை. ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது. ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். வரலாற்றுத் தகவல்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.