-
Posts
6937 -
Joined
-
Days Won
45
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by ராசவன்னியன்
-
இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13.
- 32 replies
-
- 15
-
-
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ராசவன்னியன் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
ஊசி ஏத்தியும், வயசுக்கொடுமை தாங்க முடியலை.. சாமியோவ்! -
நாங்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு தமிழை சுத்தமாக, அதிலும் வெகு சரளமாக பேசுபவர்கள் ஈழத்தமிழர்கள்..! அதில் கலப்படம் செய்து ஈழத்தவர்கள் பேசுவது, சுத்தமாக சகிக்கவில்லை, மனம் பொறுக்கவும் இல்லை.
-
ஒருவரை முதல்முறையாக பார்க்கும்போதே தோற்றத்தால் அல்லது ஏதோ ஒருவகையில் நம்மளை கவர்ந்துவிட வேண்டும். (First Impression is the best impression) காணொளியில் வருபவரை தவிர்த்து, சுட்டியினால் காணொளியை தள்ளி சிலநொடிகள்தான் பார்த்தேன்.. இந்த "வேறை லெவெல்" என்றதுமே காணொளியை மூடிவிட்டேன்..!
-
அதற்கு "சுவை ரொம்ப நன்றாக இருக்கு..!" என சொல்லிவிட்டு செல்லலாமே! அதென்ன "வேறை லெவெல், புண்ணாக்கு லெவெல்"னு..?
-
திரிக்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒரு விடயத்தை இங்கே சொல்ல விழைகிறேன். பெரும்பாலும் சரியாக முகச்சவரம் செய்யாமல், இந்த தாடி வைத்த ஆட்களை பார்த்தாலே ஒரு அருவருப்பு உண்டு. எனது அலுவலகத்திற்கு வேலை தேடி வரும் 'சுய விவரணை'களில்(CVs) இம்மாதிரி தாடி வைத்த அல்லது எந்த ஸ்டைலில் தாடி(eg: French Beard etc) வைத்திருந்தாலும், முதல் சோதனையிலேயே கழித்து கட்டி ஒதுக்கிவிடுவோம் (உள்ளூர் இஸ்லாமியர்களை தவிர்த்து). சுயவிவரணைகள் அடுத்த கட்டத்திற்கே செல்லாது.
-
இந்த "வேறை லெவெல்.. வேறை லெவெல்.." அப்படீனு சொல்றீங்களே..? அப்படீனா எந்த "லெவெல்"..? ஒரு இருபது அடி 'லெவெல்' இருக்குமா? சரியாக விளக்கினால், நாங்களும் அந்த "லெவெல்"லை அறிந்துகொள்வோம், ப்ளீஸ்..!
-
நேரமிருந்தால், அடுத்த வாரம் இந்த மியூசியத்திற்கு சென்று வரலாமென உள்ளேன். அதற்கு முன், இந்த கட்டிடக் கலை பற்றிய விவரங்கள் கீழேயுள்ள காணொளியில்.. புதுவிதமான ஹெலிகாப்டர் இதற்கென வடிவமைத்தது என எண்ணுகிறேன்.
-
'விதி' மேல் நம்பிக்கை என்றும் இருந்ததில்லை, ஆனால் மேலேயுள்ளவற்றை படிக்கும்போது 'அதுவும் இருக்கலாமோ?' என மனதில் நெருடலை ஏற்படுத்திய தருணம். என்னத்தை சொல்ல..!
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், குழந்தாய்.
-
145/3.67 = $ 39.50
-
துபையின் வானுயர்ந்த கட்டிடங்களைக் கொண்ட சாலையான ஷேக் சையத் சாலையில் ரொம்ப காலமாக கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுதான் முடிவிற்கு வந்துள்ளது போல. நான் ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ள, இக்கட்டிடத்தின் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்குதான் சென்று வந்தேன். தமிழில்..
-
துபையின் புது வரவு "மியூசியம் ஆஃப் தி ஃபுயூச்சர் (Museum of the Future)" வரும் 22ம் திகதி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது. நுழைவுக் கட்டணம்: 145 திர்ஹாம்கள். இணையதளம்: https://museumofthefuture.ae/en
-
நம்ப முடியவில்லை..!
-
முன்பெல்லாம் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்குவது கொஞ்சம் எளிதான காரியமாக இருக்கும். தொழிற்நுட்ப அம்சங்கள், அதனால் கிட்டும் வசதிகள் என பட்டியலிட சிறப்பம்சங்கள் அவ்வளவாக இருக்காது. நுகர்வோரை எளிதில் குழப்பாமல் திரையில் தோன்றும் படத்தின் துல்லியத்தை மட்டும் கருத்தில்கொண்டு தீர்மானித்து வாங்குவோம். ஆனால் தற்கால தொலைக்காட்சி திரைகளை (பெட்டி அல்ல ) தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஒப்பீடு செய்து செலவழிக்கும் பணத்திற்கு மதிப்பாக நெடுநாள் உழைக்கும் தொலைக்காட்சி திரைகளை தெரிவு செய்து வாங்குவது இமாலய சோதனை. கண்ணையும் கருத்தையும் கவரும் விளம்பரங்கள், நம்மை எளிதாக குழப்பிவிடுகின்றன. அதுவும் மிக வேகமாக முன்னேறிவரும் தொழிற்நுணுக்கங்கள், வியாபார போட்டிகள்.. அப்பப்பா..! இந்த காணொளியில் வரும் தொறிநுட்ப அம்சங்களை காட்சிபடுத்தியிருக்கும் விதம் அற்புதம்..! (ஆனால், நான் தொலைக்காட்சி திரையை வாங்கினால், நிச்சயம் எனது தெரிவு சோனி (Sony) தான்..!)
-
"ஆஹா" (Aha) என்ற ஒரு புதிய ஓ.டி.டி(OTT) தளம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளது. இதில் தெலுங்கு படங்களும் உள்ளன. சில தமிழ் படங்கள் இலவசமாகவும், சிலவற்றை கட்டணம் செலுத்தியும் பார்க்க வசதியும் உள்ளது. இணைப்பு கீழே.. https://www.aha.video/all
-
இந்த வெள்ளையோட நடனத்தை பாருங்கள்..!
-
மனுசர் கடலை விற்கும்போது, பாடலின் முடிவில் "கா ஆ ஆ... ச்சா... பதம்.." என் இழுத்து முடிப்பது நல்ல வேடிக்கை.
-
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
நன்றி திரு.கிருபன். 80 களின் மத்திய பகுதியில் நான் யுனிக்ஸ்(UNIX) இயங்கு தளம் மற்று நாவல் நெட்வேர்(Novell NetWare) போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது விண்டோஸ்(Windows) தனி இயங்குதளமாக இல்லை. இது எம்.எஸ்-தாஸ்(MS-DOS) இயங்குதளத்தின் மேல் இயங்கும் ஒரு ஊடுதள பாவனை மென்பொருளாகவே(GUI) இருந்தது. கணிபொறி வன்பொருளின்(Hardware) உள்ளே இருக்கும் சில பாகங்களை சரியாக நிறுவ, இந்த அய்யார் க்யூ(IRQ)விற்காக ஜம்ப்பர்(Jumper)களை மாற்றி மாற்றி, இயங்குதளத்தை கணிப்பொறியில் வெற்றிகரமாக இயக்க அப்பொழுது நான் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. -
இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
ராசவன்னியன் replied to ராசவன்னியன்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
கணிப்பொறியின் முக்கிய பகுதி இதயமாக செயல்படும் இந்த நுண்செயலி (Micro Processor) என்றால் என்ன..? நுண்செயலி (Micro Processor) அல்லது முத்துச் சிப்பி என்பது ஒரு கணினியின் மைய செயல் அலகின் (CPU-Central Processing Unit) பெரும்பாலான அல்லது அனைத்து செயல்பாடுகளையும் ஓர் ஒற்றை ஒருங்கிணைந்த சுற்றில் (IC -Integrated Circuit அல்லது மைக்ரோ சிப்) தன்னகத்தே கொண்டதாகும். மைக்ரோ சிப் முதல் நுண்செயலி 1970 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டு அதை மின்கணிப்பான்களில் பயன்படுத்தினர். அதில் 4 பிட் (Bit) வார்த்தைகளில் இரட்டைக் குறியீட்டு முறையில் குறியீடு செய்யப்பட்ட தசம(BCD) எண்கணிதம் பயன்படுத்தப்பட்டது. டெர்மினல்கள்(Terminals), அச்சுப்பொறிகள், பல்வேறு வகையான தானியங்கு முறைமைகள் போன்ற 4 பிட் மற்றும் 8 பிட் நுண்செயலிகளின் பிற பல உட்பொதிக்கப்பட்ட பயன்பாடுகள் விரைவில் அதைத் தொடர்ந்து உருவாயின. 16 பிட் அணுகலம்சம் கொண்ட செலவு குறைந்த 8-பிட் நுண்செயலிகள் 1970களின் மத்தியில் மைக்ரோ கணினிகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. கணினி செயலிகள் சில எண்ணிக்கை முதல் சில நூறுகள் வரையிலான டிரான்சிஸ்டர்களுக்கு சமமான சிறிய மற்றும் நடுத்தர அளவு கொண்ட IC களைக் கொண்டே நீண்டகாலமாக கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மொத்த CPU அலகையும் ஒரு சிப்பில் ஒருங்கிணைத்ததால், செயலாக்கத் திறனின் செலவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. எளிய அமைப்பில் இருந்த தொடக்க காலத்திலிருந்து நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதீத அதிகரிப்பானது, மிகச் சிறிய உட்பொதிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கையடக்க சாதனங்களில் இருந்து மிகப் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரையிலான அனைத்திலும் ஒன்று அல்லது அதற்கதிகமான நுண்செயலிகள் செயல் அலகுகளாக அமைந்து புரட்சி செய்ததால், பிற வகை கணினிகள் அநேகமாக வழக்கழிந்துபோக வழிவகுத்தது. 1970களின் தொடக்கத்திலிருந்து, நுண்செயலிகளின் திறனில் ஏற்பட்ட அதிகரிப்பானது மூரி விதியைப் பின்பற்றியே அமைந்துள்ளதாக தெரிகிறது, குறைந்தபட்ச செலவிலான உபகரணச் செலவைப் பொறுத்து, ஓர் ஒருங்கிணைந்த சுற்றின் சிக்கலான தன்மையானது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிறது என அவ்விதி கூறுகிறது. மூலம்: விக்கிப் பீடியா -
சந்தையில் கிட்டும் கணிப்பொறியின் இதயமான முத்து சிப்பி(Micro Processor) பெரும்பாலும் அமெரிக்காவிலுள்ள இன்டெல்(Intel) என்ற நிறுவனத்தால் வடிவமைத்து உற்பத்தி செய்து, இன்றுவரை பல வகை திறன் கொண்ட சிப்பிகள் (ப்ராசசர்) சந்தைப்படுத்தபடுகின்றன. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் முதல் இவற்றை தொழில்வாரியாக பயன்படுத்த ஆரம்பித்து இன்றுவரை பல முத்து சிப்பிகளை கண்டுள்ளேன். அதில் முக்கியமானது இன்டெல் பென்டியம்(Intel Pentium) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ப்ராசசர் மிக முதன்மையாக அதிக திறன் கொண்டது. அந்த வகை சிப்பியைக் கொண்டு நான் வடிமைத்த கணிப்பொறியை பற்றிய கட்டுரையை உங்களுக்கு சிறிய தொகுப்பாக இங்கே எழுதலாமென உள்ளேன்..
-
இனிய பிறந்ததாள் நல் வாழ்த்துக்கள், அகஸ்தியன் & நுணா.