Jump to content

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7331
  • Joined

  • Days Won

    45

Everything posted by ராசவன்னியன்

  1. என்னத்தை சொல்ல..?🥰 முதன் முதலில் நான் 'மன்கெய்ம்' (Mannheim) வந்து சேர்ந்து, தமிழ் சிறியை தொலைப்பேசியில் அழைத்தபோது, "என்ன வன்னியர் சுகமா இருக்கிறீங்களோ..?" எனக் கேட்டுவிட்டு அடிக்கடி வார்த்தைகளின் இடையே 'என்ன' என்ற சொல்லை சேர்த்து கதைத்தார். சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ்..! அவரை நேரில் சந்திக்க இயலவில்லை, ஆனால் 12 வருடங்களானாலும் இன்னமும் அவரின் குரலும், முகமும் ஞாபகம் உள்ளது. பாஞ் அவர்கள் மாதிரியே தமிழ் சிறியும் பழக இனிமையான மனிதர். வாழ்க நலமுடன்..!
  2. அன்றொரு நாள்..! பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.. ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..! இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!! 'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க.. எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண... நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு "ஐ லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல... 'டீ' யும் வந்துச்சு...! எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக, பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக... கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து.. 'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..! என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ.. திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க.. *..Rest is history.....!* 😛 - ட்விட்டரில் ரசித்தது.
  3. இந்த பதிவை பாதிக்கு மேல் வாசிக்க மனமில்லை, ஏனெனில் குடும்பம் என்றால் என்னவென்றே தெரியாத அல்லது தெரிந்தும் வாழ வக்கற்ற ஒரு மனநலமில்லாத நோயாளியின் புலம்பல்களாகவே அனைத்தும் உள்ளன. அபிலாஷ் ஒரு நல்ல மனநல மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையெனில் இப்படி புலம்பியே பரலோகம் செல்ல வேண்டியதுதான். இம்மாதிரி “குப்பைகளை” பதியும் ஏறாளனுக்கு என் கண்டனங்கள்! 😜😎😡
  4. "மனைவிக்கு ஊத்திக் கொடுக்கலாமா..?" என கண்ணாடி போடாமல் தலைப்பை வாசித்துவிட்டு மலைத்தேன். 😜
  5. ஏனுங்க படத்தை இணைக்க இப்படி அல்லாடுறீங்க? நாம் நேரடியாக படத்தை யாழ்களத்தில் தரவேற்றம் செய்வதால், யாழ்கள செர்வருக்கு அதிக பளுவும், இடப்பற்றாக்குறையும் வரக்கூடாதல்லவா? 😔 இணைக்கப்படவேண்டிய படத்தை இந்த இணையதளத்தில் தரவேற்றம் செய்துவிட்டு, அதில் கிட்டும் இணைய இணைப்பை(Direct Link) யாழ்கள பெட்டியில் பதிந்தால், களத்தில் படம் தெரியும். https://postimages.org/ உதாரணம் கீழே..! முதல் பக்கம் இரண்டாம் பக்கம்
  6. இன்றிருக்கும் நிலையில் ஆதாயம் தேடி குழப்பாமல், மக்களை நிம்மதியாக அரசியல்வாதிகள் வாழ விட்டாலே பெரிய உதவி.
  7. ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி.👌 வயசு போன காலத்தில், "அங்கே ..இங்கே"ன்னு பராக்கு பார்க்காமல், சிரத்தையுடன் அலுவலக அறைக்குள் வேலையில் கவனம் செலுத்தவும். 😜
  8. தாயைப் போல் தன்னை நாடி வந்த பெண்ணையும் மதித்து வாழ தெரியாதவரின் வெற்று புலம்பல்களாகவே மேலுள்ள கட்டுரைகளை நோக்குகிறேன். பெண்ணிற்கு சம உரிமை கொடுத்து வாழ இவருக்கு ஏன் ஆற்றாமையாகவும், அவர்களின் மேன்மையில் இவருக்கு ஏன் பொறாமையாகவும் இருக்கிறதென புரியவில்லை. 😲 குடும்பத்தில், மனைவியுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், அதன் பின் கூடல்கள்.. என்ன அற்புதமான வாழ்க்கை.. ஒவ்வொரு தருணமும் அனுபவித்து வாழுமையா.. 😍 ஐயா அபிலேஷ், நீங்கள் சுத்த வேஸ்ட்..! 😠
  9. கடந்த வருடம் போன்று உறவுகள் கம்முன்னு இருக்காமல், வத்தலோ.. தொத்தலோ.. முத்தலோ.. சுய படைப்புகளை வாசித்து ஊக்கப்படுத்த வேண்டிக் கொல்(ள்)கிறேன்..! 😜🤝
  10. 80 ரூபாய்க்கு மாமா வாரார்..! இந்தக் காணொளி நகைச்சுவையாக இருந்தாலும் கோவை, திருப்பூர் பகுதிகளில் கள யதார்த்தமும் அப்படித்தான் உள்ளது.
  11. ஆழ்ந்த இரங்கல்கள்.. என்ன இனிமையான குரல்வளம்..! ❤️
  12. கு.சா, அம்பை (அன்பை) மணியன் மேல் எறிவதற்கு பதில் எம்மேல் எறிந்துவிட்டீர்களோ? என்ற ஐயப்பாடு உள்ளது. எனக்கு யாழ்ப்பாணம், பருத்திதுறை, லச்சுமி தியேட்டர் போன்றவை எங்கே இருக்கிறதென்றே தெரியாது. முடிந்தளவு திரியை வரம்புக்குள் கலகலப்பாக வைத்திருக்கலாம்.😜
  13. நாள் கழிச்சி வந்தாலும், எப்படியோ சமாளிச்சு போட்டியள் கு.சா..! நல்ல சுழியன் தான்..! 🤝
  14. உங்களுக்கு புரியாது.. கணவன் சம்பாதிக்கும் வரைதான் வீட்டில் புலியாக இருக்க முடியும், எப்போ ஓய்வு பெற்று மனைவியை சார்ந்து வீட்டில் இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போதே எலியாக மாறிவிடும் நிலை வந்துவிடும். அப்புறம் நாமாக விரும்பி அவர்களுக்கு ஒத்தாசை செய்வது, நமக்கு அதுவே நிரந்தர வேலையாக மாறிவிடும். 'உத்தியோகம் புருச லட்சணம்' என பெரியோர்கள் சும்மா சொல்லவில்லை, அவை ஆயிரம் பொன் வார்த்தைகள்..! 🤗😂 சரி, மற்ற உறவுகளின் கருத்தை எதிர்நோக்குவோம்..! 😜
  15. ஒரு சின்ன விடயம்: (டிஸ்கி) திரியின் தலைப்பு ஈழத் தமிழனின் எதிர்கால புலம்பெயர் வாழ்க்கை பற்றியது.. ஆனால் நானோ, தமிழ்நாடு தமிழன். 'ஒரு அனுபவ பகிர்வாக இருக்கட்டுமே!' என எனது கருத்தை பதிந்தேன்..😋
  16. அரசாங்க வேலையிலிருந்து மனம் வெறுத்து, 'நம்மிடம் இருக்கும் திறமைக்கு வெளிநாடு சென்று பொருளீட்டலாமே.!' என முடிவெடுத்து இங்கே வந்தேன். இங்கும் அரசாங்க வேலைதான், ஆனால் திறமைக்கும், நிபுணத்துவ அனுபவத்திற்கும் இன்னும் மதிப்பிருந்து கொண்டிருக்கிறது. வயது ஏற ஏற, அடுத்த நகர்வை நிறுவனம் மேற்கொள்ளும், அறிவாற்றலையும், அனுபவத்தையும் இளையோரிடம் பகிர்ந்துகொள்ளுங்கள் என ஆலோசனைகள் வரும். ஆனாலும், பட்டறிவையும், சில நுணுக்கங்களையும் முழுமையாக கடத்த இயலாதுதானே? அதுவே என்னை இங்கே இறுத்தி வைத்துள்ளது.. இன்னும் எத்தனை வருடங்கள் செல்கிறதென பார்ப்போமே..! 😜 வேண்டிய பொருளீட்டும் எல்லையை நெருங்கியவுடன் இங்கிருந்து விடை பெற உத்தேசம். ஆனால் ஒய்வு பெற்று தமிழ்நாடு திரும்பியவுடன் மின் துறை சார்ந்த பகுதி நேர ஆலோசனை சொல்லும் தொழிலை செய்யலாம். ஏற்கனவே மாதந்தோறும் வருமானம் பெறும் வண்ணம் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தாயிற்று. நமக்கும், எம்மை நம்பி வாழ்க்கையில் இணைந்த மனைவிக்கும் முதிய காலத்தில் யாரிடமும் எதிர்நோக்காமல் வாழும் அளவிற்கு நம்மிடம் செல்வம் மிக முக்கியமாக இருக்கவேண்டும். அதுவே நோயுறும் காலத்தில் இருவருக்கும் உதவும். பிள்ளைகள் அவரவர் வழிகளில் செல்ல நாம் தடையாக இருக்கக் கூடாது. அது அவர்களின் வாழ்க்கை, செம்மையாக வாழட்டும்..! ஒரு வயதிற்கு மேல் உடல் உழைப்பைவிட, மூளைக்கு வேலை கொடுக்கும் பணியை ஓரளவு செய்துகொண்டே பேரப் பிள்ளைகளுடன் விளையாடி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், அதுவே இன்பமயமான கொடுப்பினையாகும். ஓய்வுடன் வீட்டில் சும்மா இருந்தால் மனம் கறள் பிடித்துவிடும், அப்புறம் வீட்டில் மனைவிக்கு சமையலில் உதவி, துவைத்த துணிகளை காயபோடும் உதவி என நேரத்தை செலவழிக்க நேரிடும்..! 😍🤣
  17. நான் எமிரேட்ஸ் பிசினஸ் கிளாஸ்(Bushiness Class) லவுஞ்சில் பயணத்திற்கு முன் ஓய்வெடுத்திருக்கிறேன். வசதிகள், உணவுகள் மிக நன்றாக இருக்கும். ஆனால் கட்டணம் மிக அதிகம். கீழுள்ள அட்டவணையை பார்த்தால் புரியும். முதல் தர (First Class) வகுப்பென்றால் அமெரிக்க நாணயப்படி ஒரு ஆளுக்கு $300 கட்டணம் செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயத்தில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கணக்கீடு சொல்கிறது. 😲 https://www.emirates.com/ae/english/experience/our-lounges/paid-lounge-access/
  18. இந்த கடல் அட்டைகள், மக்கள் உண்ணும் உணவாக பயன்படுகிறதா? தமிழ் நாட்டில் நான் இவற்றை எந்த மீன்கடைகளிலும் பார்த்ததே இல்லையே? 🤔
  19. பரிமளத்தின் ஏக்கத்தை, குரலை பதிவிட்டு அனுப்புகிறேன் குமாரசாமி, பதில் போடவும்..! 🤗 - மணியன். 😉
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.