Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. வணக்கம் கல்யாணசுந்தரம். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பெயரைக் கொண்டிருக்கின்றீர்கள். தொடருங்கள்...........................❤️.
  2. மோகன் அண்ணாவிற்கும், பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
  3. வெட்கமற்றவையும் வெட்கமற்றவர்களும் ------------------------------------------------------------------ தேசங்கள் வெட்கம் அற்றவை மெலிந்த தேசங்களை கொளுத்தி குளிர் காய்ந்து சூறையாடும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை ஏழைகளிடமும் ஏலாதவர்களிடமும் அடித்துப் பிடுங்கும் சக மனிதர்கள் போல அடித்து பிடுங்கி அழித்துக் கொண்டே தர்மம் போதிக்கும் தேசங்கள் வெட்கம் அற்றவை போலிச் சாமியார்கள் போல கலப்பட வியாபாரிகள் போல வெட்கம் அற்ற ஏமாற்றுக்கார தேசங்கள் நியாயவான் மனிதாபிமானி முகமூடிகளுடன் வந்து வந்த பின் முகமூடியை கழட்டி எறிந்து விட்டு குதறி குற்றுயிராக சுடுகாடாக விட்டுச் செல்லும் எல்லா தேசங்களுமே வெட்கம் அற்றவை அயலவரை நேசிக்கின்றோம் என்று கொண்டே பயமுறுத்தும் ஆக்கிரமிக்கும் வெட்கமற்ற பெரும் தேசங்கள் ஆயிரம் ஆயிரம் காரணங்கள் சொல்லும் அத்தனையும் கடைந்தெடுத்த பொய்கள் ஒரு ஆக்கிரமிப்பை எதிர்த்தும் இன்னொரு ஆக்கிரமிப்பை ஆதரித்தும் ஒரு கண் மூடி மறு கண் திறக்கும் மனிதர்களும் வெட்கமற்ற தேசங்கள் போலவே அபிமானிகளும் வெட்கம் அற்றவர்கள்.
  4. ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் அவர்களுக்கும், எனக்கும் இன்று ஒரே விடயம் பற்றியே கவலை என்பதும், அத்துடன் நாங்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே இதை மறந்து விட்டு, எங்களின் அடுத்த வேலையை பார்க்க போய் விடுவோம் என்பதும் நம்ப முடியாத ஒற்றுமையாக இருக்கின்றது. எத்தனை எத்தனை காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளர்களும் இன்னும் அதிக அழிவுகளையும், அவலங்களையும் அன்றி வேறு எதையும் ஆக்கிரமிக்கப்படும் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் வழங்குவதில்லை. அந்த நாடுகளின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டுதல் அன்றி, இங்கு வேறு எதுவுமே ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் அல்ல. ஆக்கிரமிப்பை அந்த நாட்டு மக்களே விரும்பினார்கள், அந்த நாட்டின் அதிபர் ஒரு சர்வாதிகாரி, அந்த நாடு போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது, அந்த நாட்டினால் எங்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றெல்லாம் காரணங்களை இட்டுக் கட்டிக் கொண்டே ஒரு வலிய நாடு ஒரு மெலிய நாட்டை அடித்துப் பிடிக்கலாம் என்னும் மன்னர் ஆட்சி காலம் நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அடிமைத்தளையும், அடக்குமுறையும் சொல்லொணா துன்பங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கும் ஒரேயொரு வாழ்வையும் இவை அழித்துவிடுகின்றன. இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், இவை எவ்வடிவில் வந்தாலும் அவற்றை ஆதரிக்காமல் விடுவதும், ஒவ்வொரு சாதாரண மனிதனும் நிச்சயம் செய்ய வேண்டியவை. ஐநா பொதுச் செயலாளரே அவ்வளவு தான் செய்கின்றார், அவரால் கூட அவ்வளவு தான் செய்யமுடியும்.
  5. நான் இவரை முன்னர் அறிந்திருக்கவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஜஸ்டின். உங்களின் மிகச் சுருக்கமான வடிவத்தில் இருந்து, இந்த நாவல் மிகவும் பக்கச் சார்பாகவும், அடிப்படையிலேயே தவறுகள் உள்ளது போன்றும் தெரிகின்றது. ஆனாலும் நேரம் கிடைக்கும் போது இதை வாசிக்க வேண்டும் என்றிருக்கின்றேன். எவ்வளவு தான் மொழிகளில் ஆற்றல்கள் இருந்தாலும், மண்ணுடனும் அங்கிருந்த மனிதர்களுடனும் ஒட்டி ஒட்டி வாழ்ந்திருக்கா விட்டால், பல விடயங்களை என்றுமே புரிந்துகொள்ள முடியாது என்றே நினைக்கின்றேன்.
  6. 🤣............... வேலையில் சில வேளைகளில் ஹிந்தியில் ஏதாவது சொல்லி விட்டு, 'ஓ.............. உங்களுக்கு ஹிந்தி தெரியும் தானே...............' என்றும் அவர்களே சொல்லிக்கொள்வார்கள்.......... 🤣................ எல்லா ஆத்துக்கார அம்மாக்களுக்கும் இருக்கும் சந்தேகம் தான் என் வீட்டிலும் இருக்கின்றது................ அந்தச் சந்தேகம்: இது பிறந்ததில் இருந்தே இப்படித்தானா.......................🤣.
  7. 🤣............. ஆபிரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் தூரம் கொஞ்சம் அதிகமே...................🤣. இங்கு சில மெக்சிகோ நாட்டவர்கள் என்னை அவர்களில் ஒருவன் என்று நினைப்பதுண்டு........... என்னுடைய நிறத்துக்கு என்னை எப்படி அப்படி அவர்கள் நினைக்கின்றார்கள் என்று நினைத்தேன்............... பின்னர் தான் தெரிந்தது, அவர்களில் ஒரு பகுதியினரும் கடும் நிறத்தில் இருக்கின்றார்கள் என்று........................
  8. முதல் நாளே அவ்வளவு கடுமையான விதிகள் தேவையில்லை தானே, வசீ.................. மேலும் அப்படி எல்லாம் உங்களை உடனே நீக்கி விடமுடியாது............ வசீ இருக்கின்றார் தானே என்ற துணிவில் தான் என்னைப் போல சிலர் போட்டியில் கலந்து கொள்ளுகின்றோம்............🤣. ❤️...............
  9. புதனும், வெள்ளியும் நல்ல மழை அண்ணா. இன்றும், நாளையும் வெயில். பின்னர் மீண்டும் மழை வருகின்றது. மலை அடிவார வீடுகளுக்கு ஆபத்தாகும் நிலை அடுத்த வாரம். பொதுவாக இவ்வளவு மழை இந்த லாஸ் ஏஞ்சலீஸ் பாலைநிலத்தில் பெய்வதில்லை. மழை கொண்டு வரும் யாரோ ஒரு நல்லவர் இங்கே வந்து தங்கியிருக்கின்றதாக தகவலும் இல்லை.................. அமெரிக்க அதிபர் இந்தப் பக்கம் வருவதேயில்லை........... அது தான் அடைமழைக்கு காரணமோ தெரியவில்லை...................🤣. 🤣............. அடிக்கிற மழையில் ஆடுகள் குழை தேட.............. நீங்கள் வாழையை தேடுகின்றீர்கள்............😜.
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @ஏராளன் !
  11. தேசங்களின் குரல்கள் ---------------------------------- இலங்கையிலும், மும்பையிலும் இப்பொழுது ஒரே நேரம் தானே என்று அவர் கேட்கும் போது, ஆமாம் என்று தாமதிக்காமல் சொல்லிய பின் தான் அவரது கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் அப்படிக் கேட்டது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மும்பையிலிருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மும்பையில் ஒரு கிளை இருக்கின்றது. இப்பொழுது அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்வதை முடிந்த வரை குறைக்கும் அல்லது முற்றாகவே தவிர்க்கும் முயற்சிகளை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். மும்பையில் அவர்களில் சிலர் தினமும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வேலைக்காக பயணம் செய்கின்றோம் என்று மிகவும் அலுப்புடன் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அவர்கள களைத்து வீடு போய்ச் சேரும் நேரத்தில் அமெரிக்க மேற்கு கரையில் விடிந்து நாங்கள் வேலைகளை ஆரம்பிப்போம். மீண்டும் தொடங்கும் மிடுக்கு என்பது போல அவர்கள் மீண்டும் எங்களுடன் சேர்ந்தும் ஆரம்பிக்கவேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றன, ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் இந்தியாவில் சமீபத்தில் உள்ளூர் விமான சேவை முற்றாக நிலைகுலைந்தது போலவே நிலவரம் ஆகக்கூடும். இலங்கை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று அவர்களாக அடையாளம் கண்டு கொண்டது இதுவரை கிடையாது என்றே நினைக்கின்றேன். நீங்கள் இந்தியாவா என்றே வழமையாகக் கேட்பார்கள். ஒவ்வொரு பிரதேசங்களிலும் எங்களுக்குள் நாங்களே கண்டு கொள்ளும் சிறிய, பெரிய வித்தியாசங்கள் தோற்றங்களில், தொனிகளில் இருக்கின்றன, ஆனால் அவை பிறருக்கு தெரிவதில்லை போல. 140 கோடி இந்தியர்களும் ஒரே மாதிரியே இருக்கின்றீர்களே என்று ஆச்சரியப்படும் ஜப்பானியர்கள் இருக்கின்றார்கள். ஷாருக்கான், சல்மான்கான், கமல், அஜித், நாங்கள் இப்படி எல்லோரும் ஒன்றாக அவர்களுக்குத் தெரிவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. 140 கோடி சீன மக்களும் எங்களுக்கு ஒன்றாகவே தெரிகின்றார்கள். ஆனால் அவர்களோ தெற்கு சீனர், வடக்கு சீனர், மங்கோலிய சீனர் என்று தங்களுக்குள்ளே மிக இலகுவாக அடையாளப்படுத்தி கண்டு கொள்கின்றனர். தன்னுடைய மனைவி ஒரு மங்கோலிய சீனர், ஆகவே நான் தன்னுடைய வீட்டுக்கு வருவது அவ்வளவு உசிதமான ஒரு செயல் அல்ல என்று சிரித்துக் கொண்டே ஒரு தென் சீன நண்பன் ஒரு தடவை சொல்லியிருக்கின்றான். ஜெங்கிஸ்கான் மீது இன்னமும் அவர்களுக்கு ஒரு பயம் இருக்கின்றது போல. ஆட்களை அடித்து குழம்பு வைத்து விடுவார்கள் என்று ஒரு வரலாற்றை அவர்களே சொல்லிக் கொள்ளுகின்றார்கள். நான் அமெரிக்கா வந்த முதல் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேசம் என்று அந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளில் இருந்து சிலரும் அந்தப் பல்கலைக்கு வந்திருந்தார்கள். பங்களாதேசத்தை சேர்ந்தவர் ஆங்கிலத்தில் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கே வந்திருந்தார். ஆங்கில மேற்படிப்பு என்ற விசயமே அவரைப் பற்றிய பெரிய ஆச்சரியமாக இருக்கையில், அவர் இந்தியா மீது கொண்டிருந்த கடும் ஒவ்வாமை இன்னும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்த அந்த வெறுப்புணர்வு மிகவும் அதிகமாக இருந்தது. முதல் வருடம் பனிக்காலம் ஆரம்பித்த பின் ஒரு நாள் நடந்த ஒரு விடயம். அந்தப் பிரதேசத்தில் பனி மலை மலையாகக் கொட்டும். காலை கண் விழித்துப் பார்த்தால் புது வெள்ளை மலை ஒன்று வீட்டின் முன் நிற்கும். ஐந்து ஆறு மாதங்களுக்கு அந்த மலைகள் அவைகளின் இடத்தில் உறுதியாக நிற்கும். ஏற்கனவே பிடரி அடிபட ஒரு தடவை பனியில் வழுக்கி விழுந்திருந்தேன். பிடரி பலமாக அடிபட்டாலும், எதுவும் ஆகவில்லை, தலை குழம்பவில்லை என்று தான் இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கின்றேன். அன்று காலை வகுப்புக்கு மெது மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். தூரத்தில், வீதியின் ஓரங்களில் அள்ளிக் குவித்துப் போடப்பட்டிருந்த பனிமலைகளின் நடுவிற்குள் இருவர் நின்று கொண்டிருந்தார்கள். ஒருவர் மிகவும் சத்தமாக கோபத்துடன் நின்று கொண்டிருந்தார், மற்றவர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அருகில் போன பின் ஆங்கிலத்தில் சத்தம் போட்டவர் ஆங்கில மேற்படிப்பிற்காக வந்தவர் என்று தெரிந்தது. அமைதியாக நின்றவர் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாடுகளில் அவர் ஏதோ ஒரு நாடு. அந்த ஆசிய நாட்டவர் நீங்கள் இந்தியாவா என்று பங்களாதேசத்தை சேர்ந்தவரிடம் கேட்டிருக்கின்றார். அங்கே இந்தியா தான் ஒரே ஒரு நாடா, இந்தியர்கள் மட்டும் தான் இங்கே வருவார்களா என்று ஆரம்பித்து விறைக்கும் பனிக் குளிரிலும் அங்கே அனல் பறந்து கொண்டிருந்தது. நான் எப்படி அவரை நீங்கள் இந்தியாவா என்று அவரைச் சந்தித்த முதல் நாள் கேட்காமல் விட்டேன் என்று தெரியவில்லை. இப்படி ஒரு பிரச்சனை கொட்டிக் குவிந்து கிடக்கும் பனிக்குள் ஒரு நாள் வரும் என்று காந்தி தாத்தா அன்று நினைத்திருக்கவேமாட்டார். தான் மிகவும் சமீபத்தில் இலங்கைக்கு விடுமுறைக்காக வந்திருந்தேன் என்றார் மும்பைக்காரர். இலங்கையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு அவர் போய் வந்ததாகச் சொன்னார். நான் பேசும் ஆங்கிலத்தில் அவர் இலங்கையில் கேட்ட சிங்கள மொழியின் தொனியும், சாயலும் இருப்பதாகச் சொன்னார். அதனாலேயே நான் இலங்கையில் இருக்கின்றேன் என்று கண்டு பிடித்ததாகச் சொன்னார். ஆனால் என்னுடைய முழுப் பெயர் கேரளாவில் இருக்கும் பெயர்கள் போன்றும் இருப்பதால் ஒரு சந்தேகம் இருந்தது என்றார். இவ்வளவு விவரமும், நுண்ணுணர்வும் உள்ளவர்களை தொழில்நுட்பத் துறையில் காண்பது அரிது. கணினிக்கு எழுதப்படும் நிரல்கள் அல்லது புரோகிராம் போல சில குறிப்பிட்ட செயல்களை மட்டுமே திரும்ப திரும்ப பெரும்பாலும் செய்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். அக்கம் பக்கம் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. தான் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றார். ஹரியானாவில் யாரையாவது தெரியுமா என்று கேட்டார். கபில் தேவை மிகவும் பிடிக்கும் என்றேன். அவரை எப்படித் தெரியும் என்று ஆச்சரியம் காட்டினார். இருவருக்குமிடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது தெரிந்தது. கபிலுக்கு விளையாடும் நாட்களில் ஆங்கிலம் அவ்வளவாக வராது என்று சொல்வார்கள். அத்துடன் அந்த நாட்களில் இந்திய கிரிக்கெட் அணியில் பம்பாயைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். கவாஸ்கர், வெங்சர்க்கார் இன்னும் சிலர். கபிலிடம் மிகவும் அதிக திறமையும், அவருக்கு மாற்றீடாக அன்று வேறு ஒருவரும் இல்லாததாலும் அவரால் இந்திய அணியில் நிலைத்து நிற்க முடிந்தது. ஆனாலும் இவர்கள் எல்லோரும், கபில் உட்பட, ஒரே குரலில், ஒரே தொனியில் பேசினார்கள் என்றே எனக்கு ஞாபகம். கிழக்கு ஐரோப்பியர்கள் மற்றும் ரஷ்யர்களின் ஆங்கில உச்சரிப்பும் தனித்துவமானது. இவர்களில் நான் சந்தித்தவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஆனால் அதற்கும் மேலே போய், தங்களை பெரிய விஞ்ஞானிகளாகவே அவர்களில் பலரும் தங்களை நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே மற்றவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இது இரட்டை வரி விதிப்பு போல. இதனால் வேலை இடங்களில் அவர்களுடன் முரண்படுபவர்களை நிறையவே பார்த்திருக்கின்றேன். ஆனால் வாக்குவாதத்தில் பேசப்படும் மொழியின் தொனி போலந்தா, ஹங்கேரியா, ருமேனியாவா, அந்த நாடுகளில் எந்த நாடு என்று தெரிவதில்லை. ருமேனியாவில் இருந்து வந்த ஒருவர் என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் தான் ஹங்கேரியன் என்றே சொல்லிக்கொண்டார். அங்கேயும் ஒரு இனப் பிரச்சனை இருந்தது. ஒரு தடவை இன்று பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று என்று இவரிடம் ஏதோ கதையோடு கதையாக சொல்லி மாட்டுப்பட்டேன். அவர் பின்னர் சொன்னதை, விவாதித்ததை வைத்துப் பார்த்தால், இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவருடைய ஹங்கேரி மொழி தோன்றியிருக்க வேண்டும். எங்களைப் போலவே நிறைய ஆட்கள் இந்தப் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கள மொழியின் தொனி என்னிடம் இருப்பதாக மும்பைக்காரர் சொன்னது வியப்பாக இருந்தது. சிங்கள மக்கள் ஆங்கிலம் பேசும் போது அவர்களின் தாய் மொழி சிங்களம் என்று அறியக் கூடியதாக இருந்தது. அவர்களுக்கு என்று ஒரு தனியியல்பு இருக்கின்றது என்பதை அனுபவத்தில் நான் கண்டு கொண்டிருக்கின்றேன். ஆனால் கூட்டுக்குள் வாழும் ஒரு கோழி போல இருபது வருடங்கள் ஊரிலேயே தனித் தமிழுடன் வாழ்ந்த எனக்கும் அதே இயல்பு இருக்கின்றது என்பதை நம்புவது கஷ்டமாக இருந்தது. ஆனால் முமபைக்காரர் என்னை முன்னே பின்னே பார்த்ததில்லை, ஆகவே அவர் சொல்வது சரியாகவே இருக்கவேண்டும். இங்கு ஆட்டிறைச்சி வாங்குவதற்கு மெக்சிகோ அல்லது தென் அமெரிக்க மக்கள் நடத்தும் கடைகளுக்கே நாங்கள் போவோம். அங்கு பல பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் அநேகமாக ஒருவருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருக்கும். இன்னும் ஓரிருவருக்கு சில சொற்கள் - ஆடு, கால், சிறிய துண்டுகள் போன்றன - ஆங்கிலத்தில் தெரிந்திருக்கும். நடிகர் சிவாஜியைப் பார்த்து வளர்ந்த படியால், எதையும் நடித்துக் காட்டுவதும் எங்களுக்கு ஓரளவுக்கு இலகுவாக வருவதால், அன்று அங்கு ஆங்கிலம் பேசுபவர் இல்லையென்றாலும் சமாளித்துவிடலாம். இவர்களில் ஆங்கிலம் தெரிந்தவர் பேசும் போது சரியாக உற்றுக் கவனிக்கா விட்டால், தென் அமெரிக்க ஸ்பானிஷ் போன்றே இருக்கும். தென் அமெரிக்க ஸ்பானிஷ் மொழிக்கும், ஐரோப்பிய ஸ்பானிஷ் மொழிக்கும் இடைவெளி இருக்கின்றது என்கின்றார்கள். இந்தியத் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் இடையே இடைவெளி இருக்கின்றது தானே. மத்திய மற்றும் தென் அமெரிக்க மக்களில் எவரின் குரலும் ஒன்று போலவே காதில் விழுகின்றது. அவர்கள் பேசும் ஸ்பானிஷ் மொழியும், அவர்களின் ஆங்கிலமும் அவித்த மரவள்ளிக் கிழங்குகளை பிசைந்தது போல ஒன்றுடன் ஒன்று நன்றாக முயங்கி இருக்கின்றன. இன்றும் காலை ஆறு மணிக்கு ஆரம்பித்த வேலை இரவு பத்து மணியாகியும் இன்னமும் முடியவில்லை, உங்களுடனான இந்தக் கலந்தாய்வை முடிவெடுத்து விட்டால், மிகுதியை நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை மீண்டும் ஆறு மணிக்கு சந்திப்புகள் இருக்கின்ற என்றார் மும்பைக்காரர். உங்களையும் இந்த இரவு வேளையில் சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும் என்றார். 'இல்லை................ அப்படி ஒரு சிரமமும் இல்லை.......... அத்துடன் எனக்கு இப்பொழுது காலை..............' 'என்ன........... காலையா........... நீங்கள் இலங்கையில் இல்லையா.............' 'நான் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கின்றேன்....................' 'ஓ................. பணி நிமித்தமாக அங்கு தற்காலிகமாக சென்றிருக்கிறீர்களா.................' இல்லை 30 வருடங்களுக்கும் மேலாக இங்கே அமெரிக்காவில் தான் இருக்கின்றேன் என்றேன். அப்படியே ஒரு கணம் அமைதியானவர், பின்னர் சுதாகரித்துக் கொண்டே உங்களின் தாய்மொழியின் தாக்கம் உங்களில் அப்படியே இன்னமும் இருக்கின்றது என்றார். ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த அவரை இன்னும் காக்க வைப்பது சரியல்ல என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்.
  12. மிக்க நன்றி கவிஞரே. இந்தப் படத்தை ஏஐ வரைந்தவுடன் இது ஒரு பிரபலமான படத்தின் பிரதி போல இருக்கின்றது என்றே நினைத்தேன். இப்பொழுது நீங்கள் சொன்னவுடன் அந்தப் பிரபலமான படம் ஞாபகம் வந்தது.
  13. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களின் அரசியலை கடந்து போய்விட்டார்கள். ஒரு மாற்று அரசியல் செய்கின்றோம் என்று முன்நிற்கும் ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் இவை பற்றி அங்கே ஒரு பொருட்டாக பேசுவது கூடக் கிடையாது. மாற்று அரசியல் செய்பவர்களும் தங்களின் சுயலாபம் கருதியே ஈழ அரசியலை பேசுகின்றார்களோ ஒழிய, திராவிடத்தை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக கையில் எடுக்கின்றார்களே ஒழிய, ஈழ மக்களுக்கான ஒரு தீர்வாக அவர்கள் எதையும் முன்னெடுப்பதில்லை. இவர்களில் எவருக்கும் சரியான புரிதல் கூட இவர்களுக்கு கிடையாது என்பதை மீனவர்களின் பிரச்சனையிலேயே காண்கின்றோம். அங்கே தேர்தல் விஞ்ஞாபனங்களில் பத்தோடு ஒன்றாக ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எழுதி வைத்துக் கொள்வார்கள். அவர்களின் விஞ்ஞாபனத்தை கனமாக்குவதற்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும். எங்கள் நாட்டில் முதல் பாராளுமன்றப் பேச்சில் வடக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, மலையக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்குமாக நான் குரல் கொடுப்பேன் என்று பேசி விட்டு, பாராளுமன்ற உணவு விடுதியில் சோறும், சொதியும் மட்டுமே உள்ளது என்று அதற்காகப் போராடும் எங்கள் அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஒன்றே தான். இவர்களின் பேச்சுகளை கேட்டு நாங்கள் அவசரப்பட்டு ஆனந்தப்படுகின்றோம், பின்னர் வசதியாக மறந்து விடுகின்றோம். இவர்களின் இந்த பேச்சுகள் விடிந்தால் போச்சு.............. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் மத்திய அரசின் ஒரு நீட் பரீட்சையை கூட அசைக்க முடியாது என்பதே உண்மை. இதில் எங்களுக்கு இவர்கள் சமஷ்டி பெற்றுத் தருவார்களா. ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளினதும் இன்றைய பிரச்சனை பாஜகவிடம் இருந்து எப்படித் தப்பி, அவர்களின் வாரிசு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பதே. தமிழ்நாட்டின் நலனும் அங்கே இல்லை, ஈழத்தின் நலனும் அங்கே இல்லை. மாற்று என்று வந்திருப்பவர்கள் அதைவிடக் கீழே. 'யார் அந்த ஏழு பேர்கள்..................' என்று ரஜனி கேட்டதை விட விஜய்யின் நிலை மோசம். யாரோ எழுதிக் கொடுக்க, அதை விஜய் பாடமாக்கிய பின் இவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு வாரமாவது எடுக்காதா................. தமிழ்நாட்டில் இன்னமும் அகதிகளாக இருக்கும் எம் மக்களை பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேசலாம். அங்கே எம் மக்கள் மூன்றாவது தலைமுறையாக முடங்கிக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு அரச வேலைகளில் ஒரு சிறிய பகுதியை சில வருடங்களுக்காகவது அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம். இந்தியக் குடியுரிமை கொடுங்கள் என்று கேட்கலாம். கியூ பிராஞ்சின் கெடுபிடிகளை அகற்றுங்கள் என்று கேட்கலாம். இப்படியான விடயங்கள் தான் நடைமுறையில் ஓரளவு சாத்தியமானதும், பலன் தருவதும் ஆகும்.
  14. நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால் ஒரு மூலையில் ஒதுங்கினால் உயிர் தப்பி பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர் சாய்ந்து நிற்பவர்கள் உயிர் விட்ட பின்னும் நிலமாகப் பரந்து நீராக ஓடி அங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........? உங்கள் வீட்டுக்குள்ளும் ஒரு பலசாலி வரும் போது பணிந்து குனிந்து வழிவிடுவீர்களா...............?
  15. அண்ணா, சில நாட்களின் முன் கிருபன் ஒரு கட்டுரையை இங்கு இணைத்திருந்தார். பா. ரவீந்திரன் என்பவரால் அது எழுதப்பட்டது. அவர் அதை ரஷ்யாவுக்கு ஆதரவாக ஒரு வக்கீல் வாதம் செய்வது போன்று எழுதியிருக்கின்றார். அதில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உக்ரேன் நேட்டோவில் இணைய விரும்புவது ஒரு முக்கிய காரணம் அல்ல, பத்தோடு சேர்ந்த ஒன்றே அது என்று அவர் சொல்லியிருக்கின்றார். உக்ரேனியர்கள் உக்ரேனின் வாழும் ரஷ்ய வழி வந்தவர்களை கொடுமைப்படுத்துகின்றார்கள், கொலை செய்கின்றார்கள் என்று கூட அவர் சொல்லுகின்றார். 70 வீதம், 30 வீதம் என்ற ஒரு கணக்கும் அதில் இருந்தது என்று ஒரு ஞாபகம். ஆகவே சொல்லப்படும் காரணங்கள் எதுவுமே நம்பப்பட வேண்டியவை அல்ல என்று நினைக்கின்றேன். நான்கு புள்ளிகள் கண்களுக்குத் தெரிகின்றன, சிலர் அதை ஒரு நாற்கோணி என்கின்றார்கள், சிலர் அதை ஒரு வட்டம் என்கின்றார்கள்......... அதை நாலு டைனோசர்கள் என்றும் சொல்லலாம் போல.............🤣. எனக்கும், உங்களுக்கும் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிப்பது போலவே தெரிகின்றது என்று நினைக்கின்றேன்.
  16. 🤣................ உடன்பிறப்பே பகையானால் அது கொஞ்சம் பொல்லாமை கூடியது தான் போல...................
  17. இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதம் வெறும் வாய்ப்பேச்சு என்றே நான் நினைக்கின்றேன், வசீ. இதை அமெரிக்காவும், மற்றைய நேட்டோ நாடுகளும் உக்ரேனுக்கு வழங்கினால், ரஷ்யாவின் மொத்த முயற்சிகளுமே வீண் என்றாகிவிடும். அதிபர் புடின் அவருக்கு சுயநினைவு இருக்கும் வரை இதற்கு ஒத்துக்கொள்ளப் போவதில்லை. அதே போலவே அதிபர் ட்ரம்பும். இவர் சும்மா சும்மா எதையாவது வெறும் திண்ணைப் பேச்சு போல எடுத்து விட்டுக் கொண்டிருக்கின்றார். மறு நாளே 180 பாகைகளில் திரும்பிவிடுவார். ஒரு பொறுப்பான பேச்சுகளாக பலதும் இல்லை. நீங்கள் உக்ரேனுக்கு இந்த இருபக்க சண்டையால் எவ்வளவு குறுகிய கால மற்றும் நீண்ட கால இழப்புகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். சொல்லப்பட்டிருக்கும் கணக்குகளும், எண்களும் பிழையாக, மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் எந்த யுத்தத்தாலும் அதில் பங்குபற்றும் நாடுகளுக்கு மனித வளமும், மற்றய வளமும் இழப்பாகும் என்பது உண்மையே. உக்ரேன் போலவே ரஷ்யாவும் மிகப் பெரிய இழப்புகளை சந்தித்துக் கொண்டிடுருக்கின்றது. அங்கும் ஒரு தலைமுறை இல்லாமலேயே போய்க் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய வரவு செலவில் மூன்றில் ஒரு பங்கு இந்த சண்டைக்காக போய்க் கொண்டிருக்கின்றது என்று சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார்கள். இது எவ்வளவு பெரிய ஒரு தொகை.................... இறந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையையும் மிகப் பெரிதாகச் சொல்கின்றார்கள். இந்த உலகிற்கும், இன்றைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கும் பயனுள்ளவற்றை கொடுக்கக்கூடிய வலுவும், திறமையும் மிகச் சில நாடுகளுக்கு மட்டுமே உள்ளது. அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக ரஷ்யா இந்த வரிசையில் இருக்கவேண்டும். ஆனால் ரஷ்யா பாதாளத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றது. அங்கிருந்து எதுவும் இந்த உலகிற்கு கிடைக்கப் போவதில்லை. மலிவு விலை எண்ணெயை மட்டுமே அவரவர் இலாபங்கள் கருதி சிலர் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றார்கள். அந்த மலிவு விலை வர்த்தகத்தில் கூட ரஷ்யா பலவீனமான பக்கமாகவே இருக்கின்றது என்பது வேதனையான விடயம். இந்த உக்ரேன் சண்டை ஆரம்பித்த பின், சீனா - ரஷ்யா இடையான வர்த்தகம் பற்றிய கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள் தானே. அது மிகவும் ஒரு தலைப்பட்சமாக சீனாவுக்கு மிகவும் சாதகமாகவே இருக்கின்ற்து. அத்துடன் சீனாவுக்கு ரஷ்யா தேவையில்லை, ரஷ்யாவுக்கே சீனா தேவையாக இருக்கின்றது. இது ஒரு தலைகீழ் மாற்றம் அல்லவா. தனிப்பட்ட ரீதியில் ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் இதை மறுக்கலாம், ஆனால் இது ஒரு ஆக்கிரமிப்பாகவே என்றும் எனக்குத் தெரிகின்றது. உக்ரேன் ஒரு சுதந்திரநாடாகவே இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்றோ அல்லது பலவீனமாக்கப்பட வேண்டுமோ என்று நான் எண்ணவில்லை. ஆனால் அதிபர் புடின் போன்ற ஒற்றைத் தலைமைகளின் வரலாறும், முடிவும் எக்காலத்திலும் ஒன்றே, அவர் உக்ரேனில் இல்லாவிட்டாலும், வேறு எங்கேயோ அவருடைய முடிவில் அதைச் சந்திக்கவே போகின்றார்.
  18. மிக்க நன்றி வில்லவன். அவரை கடைசியில் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது போல, ஆனால் பழைய சங்கதிகள் எதையும் மனதில் வைத்து அப்படிக் கேட்கவில்லை. 🤣............. எக் காலத்திலும் உங்களை அவருக்கு நான் அறிமுகப்படுத்தி வைப்பதாக இல்லை, அண்ணா................. நீங்கள் சொல்வதைக் கேட்டால், அவர் ஒரு வழக்கே தாக்கல் செய்துவிடுவார்..................🤣.
  19. அடுத்ததாக 'உங்கள் பாவம்.......' என்ற தலைப்பில் ஒன்றை எழுதலாம் என்று நினைக்கின்றேன்......................🤣. இதற்கு முன்னர் எழுதிய சில ஆக்கங்கள் இறுதியில் துயரமாக முடிந்து இருந்ததால், இந்த ஆக்கத்தை ஒரு இலகுவானதாக எழுத வேண்டும் என்று நினைத்தே இப்படியான ஒன்றை தெரிவு செய்திருந்தேன்..............
  20. மரங்களை பராமரிப்பது கடினமானதும், உடனடிப் பிரயோசனம் அற்றதுமான ஒன்று என்றே பலரும் நினைக்கின்றார்கள் போல. வீடுகளில் முன்னும், பின்னும் இருக்கும் நிலங்களை காங்கிரீட் அல்லது டைல்ஸ் அல்லது அழகான கற்களால் மூடி விடுவதும் இங்கு ஒரு வழமையாகிவிட்டது. நிலமும் மூச்சு விடக்கூடாது.............🤣. இந்தப் பக்கம் முழுவதும் வீட்டுத்தோட்ட வேலைகளை செய்வதும் அவர்களே. அவர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தேவையில்லை என்று கூடி முடிவெடுத்து இருக்கின்றார்கள் போல. முன்னர் ஒரு அயலவர் இருந்தார். அப்பவே வயதான ஒரு இந்தியர். அவர் எந்த மரத்தை, செடியை அவர் வீட்டில் வைத்தாலும், அது வளருவதேயில்லை. ஆனால் அங்கு தோட்டவேலைகள் செய்பவர் அந்த வீட்டில் எதை வைத்தாலும் அது நன்றாக வளர்ந்தது. அவர்கள் ஒரு செடியை அல்லது மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை துளிர்க்கும், அவர்களின் கைராசி அப்படி என்று அவர் அடிக்கடி சொல்லுவார். என் வீட்டில் மனைவி சில செடிகளை அங்கிருந்து இங்கு, இங்கிருந்து அங்கு என்று இடம் மாற்றுவார். ஒரு நாள் அந்த அயலவர் என்னைக் கூப்பிட்டு, 'மரங்களும் மனிதர்கள் போலவே. மண்ணுடன் ஒட்டினால் மட்டுமே அவை பிழைக்கும். அடிக்கடி இடம் மாற்றினால் அவை எங்கும் ஒட்டாமல் போய் விடும்................' என்றார். அவர் செடிகளைத் தான் சொன்னார், ஆனால் அதுவே எங்கள் வாழ்க்கையின் பாடமும் கூட.................
  21. அவர் சொல்லாமலேயே போய் விட்டார், ஏராளன். முறைக்காமல் விட்டதே பெரிய விசயம் போல..................🤣. நாக்கு இடைக்கிடை புத்தியை முந்தி விடுகின்றது.............😜. பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவம் மட்டும் என்னவாம் என்று பாண்டியராஜன் ஒரு படம் எடுத்தார். மரப்பாவம் மட்டும் சும்மாவா.............. அவருடைய காரை காப்புறுதி நிறுவனம் திருத்திக் கொடுத்தார்கள் என்று நினைக்கின்றேன்.............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.