Everything posted by ரசோதரன்
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
அண்ணா, கால ஓட்டத்தில் மேலும் மேலும் நாகரிகமானவர்களாக மாற வேண்டும் என்பது தான் இங்கு ஆறு அறிவுகள் உள்ள ஒரேயொரு உயிரினமாக இருக்கும் மனிதர்களின் சரியான பாதை. மனிதர்கள் தொடர்ந்தும் பாமரர்களாக இருக்க, அவர்கள் வேறு சிலரால் அந்த சில மனிதர்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் தவறு; சக மனிதர்களை கொன்றழிப்பதும் தப்பு. இவை இரண்டுமே மனிதர்களின் தெரிவாக இருக்கக்கூடாது. பெண்ணடிமை வாதமும் மிகப் பெரிய கொடுமை அல்லவா.................. நூறு வருடங்களின் முன் எங்கள் சமூகம் இருந்த நிலையில் இருந்து நாங்கள் எங்கேயோ வந்துவிட்டோம். எங்கள் சமூகங்களில் ஐம்பது வருடங்களின் முன் இருந்த நிலை கூட பாகுபாடுகளும், போலி நம்பிக்கைகளும் நிறைந்தவையே. உலகில் எல்லா சமூகங்களும் முன்னோக்கியே போக வேண்டும், ஏனென்றால் காலம் ஒரு போதும் பின்னோக்கிப் போவதில்லை. பாமரத்தனமும், போலி நம்பிக்கைகளும் வலிந்து உருவாக்கப்பட்டவையும், திணிக்கப்பட்டவையும், சிலரின் சுயநலன்களுக்காக. உலகிலேயே மிகப் பெரிய உரிமை தனிமனித சுதந்திரம். அங்கிருந்தே எல்லாம் உருவாகின்றது. தனிமனித சுதந்திரத்தில் இருந்தே சமூகம், நாடு, தேசம், உலகம் என்று சுதந்திரம் விரிகின்றது. இந்த சுதந்திரம் கிடைக்காத மனிதன் கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு பூனைக் குட்டி போலவே. பூனைக் குட்டி கூட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கின்றது என்று நினைப்பதை விட, அதன் வாழ்வையே அது இழந்து விட்டது என்று நினைப்பதே இங்கு சரியான பார்வையாக இருக்கும். நாகரீக மனிதர்களில்/நாடுகளில் எத்தனை நாடுகள் இன்று போரில் ஈடுபடுகின்றார்கள் என்று பார்த்தால், மிகச் சில நாடுகளே அதைச் செய்கின்றன. அமெரிக்காவும், இஸ்ரேலும் முதலாவது. அதன் பின்னர் ரஷ்யா. இன்னும் சில நாடுகள். முடிந்த வரை எல்லோரும் போர்களையும், முரண்பாடுகளையும் தவிர்க்கவே விரும்புகின்றார்கள். சீனா நல்ல ஒரு உதாரணம். இன்றைய அமெரிக்க அரசை ஒரு உதாரணமான அரசாக நாங்கள் எடுக்க முடியாது. மிகவும் தவறான அடிப்படையில் அமைந்த அரசு அது. இந்த அரசை தேர்ந்தெடுத்த ஆதரவாளர்களும் ஒரு வகையில் பாமரத்தனமும், போலி நம்பிக்கைகளும் கொண்டவர்களே. அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து இத்தகைய தலைவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு நிராகரிக்கவேண்டும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
🤣............... பிரளயக் கிருமி, விவிலியக் கிருமி போன்ற சொற்பதங்களை இனி வாழ்நாளில் மறக்க முடியாது............... கடஞ்சா சொந்தமாக எழுதுவது மட்டும் இல்லாமல், சொந்தமாக சொற்களையே உருவாக்குகின்றாரே, அதற்காகவாவது அவருடன் யாராவது இடையிடையேயாவது உரையாட வேண்டும் என்று நினைத்தேன்................. அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பா.ரவீந்திரனின் கட்டுரைகளின் தலைப்புகள் என்னவாக இருக்கும், கடஞ்சா என்ன கதைகள் சொல்வார் என்று ஒரு புதிய எதிர்பார்ப்பு இப்பொழுது என்னிடம் வந்திருக்கின்றது..................🤣............. இருவரின் எழுத்துநடைகளில் தான் வித்தியாசம், மற்றபடி பொருள் ஒன்றே தான்....................
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
கடஞ்சா, நீங்கள் எல்லா தரப்புகளையும் பார்ப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால், ஒரு தரப்பையும், மறு தரப்பையும் நீங்கள் ஒரே மாதிரி விளிப்பதில்லையே. நீங்கள் ஆதரிக்கும் தரப்பை மிகவும் மரியாதையுடனும், மறு தரப்பை மிகவும் இழிவாகவுமே குறிப்பிடுகின்றீர்கள். கருத்துகள் எழுதும் பலரும் இப்படியே செய்கின்றார்கள். இதன் அடிப்படையே நீங்கள் அல்லது அவ்வகையான கருத்துகள் எழுதுபவர்கள் ஏற்கனவே ஒரு பக்க சார்பானவர்கள் என்பதே. அவ்வாறான இடங்களிலிருந்து நடுநிலையான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. உங்களின் கருத்துகளும் அப்படியான ஒரு பக்க சார்பானதே, ஆனால் அவை நடுநிலையானவை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஈரானிய சுப்ரீம் லீடர் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா என்று கேட்கின்றீர்கள். ஹிட்லர் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா................ இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா...................... அதிபர் ட்ரம்ப் எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா...............மஹிந்த எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா............ இந்திய பிரதமர் மோடி எனக்கு ஏதாவது தீங்கு செய்தாரா......................... ஆனாலும் இங்கு நானும், வேறு பலரும் இவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கின்றோம். அதே போலவே ஈரானிய சுப்ரீம் லீடரின் நடவடிக்கைகளுக்கும் எதிராக கருத்துகளை சொல்லுகின்றோம். ஒரு சாதாரண உலகக் குடிமகன் என்றே ஒரே ஒரு தகுதியே அதற்கு போதும். உலகில் எந்த தலைவரின் இறப்புக்கு மக்கள் கூடவில்லை, துக்கம் அனுசரிக்கவில்லை.......... ஹிட்லரின் மரணத்திற்காக கூட இன்றும் துக்கம் அனுசரிப்பவர்களும் இருக்கின்றார்கள். அவர் செய்தது சரி என்று வாதிடுபவர்களும் இருக்கின்றார்கள். அதன் அர்த்தம் அவர் ஒரு நல்ல தலைவர் என்பது அல்ல. எந்த நாடும் எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பதோ அல்லது அதன் தலைவர்களையோ அல்லது மக்களையோ கொல்வதையோ நாங்கள் ஆதரிக்கவில்லை. அதை மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றோம். அது எந்த நாடு என்றாலும் - அமெரிக்காவோ, ரஷ்யாவோ, இந்தியாவோ எது என்றாலும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
@Kadancha , நீங்கள் சமீபத்திய நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள் போல தெரிகின்றது. ஏதாவது சில வகைகளில் ஆறுதல் அடைய முயற்சி செய்யுங்கள். இந்த தலைவர்கள் எவருமே நாங்கள் எங்கள் வாழ்க்கைகளை தொலைத்து இவர்களுக்காக துக்கம் அனுசரிக்கும் அளவுக்கு புனிதர்களோ அல்லது நல்ல மனிதர்களோ கிடையாது. நீங்கள் தொடர்ந்தும் தமிழில் எழுத முயற்சி செய்வது பாராட்டுக்குரிய ஒரு விடயம்............👍.
-
காங்கிரசுக்கு 28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து!
ராகுல், கிரிஷ் சோடங்கர், கே சி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் போட்ட கூத்துகளால் காங்கிரஸுக்கு கடைசியில் போன தடவையை விட இந்த தடவை மூன்று இடங்கள் அதிகமாக கிடைத்திருக்கின்றது. இந்த மூன்று இடங்களையும் இவ்வளவு முரண்பாடுகள் இல்லாமல், நட்பாகக் கேட்டே பெற்றிருக்கலாம். திமுகவிற்கு மட்டும் இந்த தேர்தலில் ஒரு பெரிய ஆதரவு கிடைத்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெளியே தான்................... ஜெயலலிதா ஒரு தடவை பெரிய கட்சிகளின் துணையின்றி தனியவே நின்றார். தோற்கப் போகின்றார் போல என்று நினைக்க, அவர் அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். 'அது ஒரு காலம்................' என்று சொல்லும் நிலைக்கு தமிழகத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் மிக விரைவாக வந்துவிட்டார்கள்..................................🫣.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அண்ணா, ஏற்கனவே ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து அவை எதிர்பார்க்கப்பட்ட பலன்களை அல்லது விளைவுகளை கொடுக்கவில்லை என்ற நிலையிலேயே பொருளாதார தடைகளை அமல்படுத்த ஆரம்பிக்கின்றார்கள். ஈரான், ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளின் மேல் ஒரே இரவில் பொருளாதார தடைகளை எவரும் விதிக்கவில்லை. அப்படியான தடைகள் கூட படிப்படியாகவே அதிகரிக்கப்பட்டன. 40 வருடங்களாக பொருளாதார தடைகள் போடப்பட்டிருக்கின்றன என்றால், 50 வருடங்கள் அளவில் முரண்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று சொல்லலாம். பேச்சுவார்த்தைகளுக்கு அடுத்ததாக அழிவுகள் குறைந்த தெரிவாக இருப்பது பொருளாதார தடைகள். இராணுவ, பொருளாதார இலக்குகளை நேரடியாக தாக்குதல் என்பது மிக அரிதாகவே நடைபெறும் ஒரு விடயம். ஒரு நாட்டின் தலைவரை, அவருக்கு வயது 82 ஆகி விட்டதா அல்லது 28 மட்டுமே என்பது முக்கியம் அல்ல, கைது செய்வது அல்லது கொல்வது என்பது எதற்கும் தயாரான இறுதிக் கட்ட நடவடிக்கை போல. நாற்பது அல்லது ஐம்பது வருடங்களாக அமெரிக்காவும், அதன் நட்பு மேற்கு நாடுகளும் பெரும்பாலும் நிதானமாகவே நடந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதிபர் ட்ரம்ப் மிகப் பெரிய விதிவிலக்கு. ஒரு பக்கம் நோபல் சமாதானப் பரிசு வேண்டும் என்று அடம் பிடிக்கின்றார், இன்னொரு பக்கம் இடைக்காலத் தேர்தல் வெற்றிக்காக இன்னொரு நாட்டின் தலைவரை கொன்று, அந்த நாட்டை அழிக்கின்றார். இவர் போன்றோர் இப்படியானவர்களே. எந்த விதமான தூரநோக்கும் அற்ற, நிகரில்லாத தன்முனைப்பும், ஆணவமும் கொண்டவர்கள். இவர் போன்றோரால் குறுகிய கால அழிவுகள் மட்டும் இன்றி, நீண்ட கால அழிவுகளும் உலகம் முழுவதும் உண்டாகின்றன. இவை பட்டுத் தெளியும் விசயங்கள் அல்ல. இவர் போன்றோரை அதிகாரத்தில் அமர்த்தும் முன் அமெரிக்கர்கள் நன்கு சிந்தித்து இருக்க வேண்டும். உலகெங்கும் உள்ள பெரும்பாலான ஈழத் தமிழர்கள் அதிபர் ட்ரம்பிற்கு காட்டிய ஆதரவு கூட வெறும் உணர்ச்சி வயப்பட்டதே. ஆனால் அதிபர் ட்ரம்ப் எவ்வளவு தான் விரும்பினாலும், கனடாவையோ அல்லது கிரீன்லாந்தையோ தொடமுடியாது. உலகமும், அமெரிக்க மக்களும் இந்த விடயத்தில் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதே நேரத்தில் ஈரான், ரஷ்யா, வட கொரியா, வெனிசுவேலா, சிரியா போன்ற நாடுகளின் விடயங்களில் கண்டும் காணாதது போலவே உலகம் போய்க் கொண்டிருக்கின்றது. இந்த நாடுகளுடன் அணுகிப் போக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உலகெங்கும் பலர் இல்லை. அதற்கான காரணம் அந்த நாடுகளின் செயற்பாடுகளே.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்களது போராட்டத்திற்கு எதிராக ஈரான் செயற்பட்டது, அதனால் அது அழிய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையிலும் பொருட்படுத்தக்க ஒரு நிலைப்பாடு அல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்களது போராட்டத்திற்கும் எதிராக பலமான, பலமில்லாத நாடுகள் என்று ஏராளமானவை செயற்பட்டன, அத்துடன் இலங்கை அரசுக்கும் அந்த நாடுகள் உதவிகள் செய்தன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று எத்தனை, எத்தனை. இஸ்லாமியர் என்ற அடையாளத்துக்காக ஒரு தொகுதி மக்கள் மேல் காட்டப்படும் வெறுப்பும் பூமராங் போன்றதே. எங்களை எங்கள் அடையாளத்துக்காக வெறுத்து ஒதுக்கும் நிலை இருந்தது. அது இன்றும் கூட இலைமறை காயாக அங்கங்கே இருக்கலாம். அதிபர் ட்ரம்ப் அவரசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும், சாதாரண தனிநபர் ஒருவர் காட்டும் இந்த வகையான வெறுப்புகளுக்கும் இடையே, அவருக்கு அதிகாரமும் பலமும் இருக்கின்றது, சாதாரண மனிதனுக்கு அவை இல்லை என்பதை விட வேறு ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா.......... ஈரான் ஆட்சியாளர்கள் போன்ற அடிப்படைவாதிகள், ரஷ்யாவின் அதிபர், வட கொரியாவின் அதிபர் போன்ற சார்வாதிகாரிகள், மாஃபியா அரசாங்கம் நடத்தும் தலைவர்கள் போன்றவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அடுத்த கட்டம் என்னவென்ற ஓரளவேனும் உறுதியான திட்டங்கள் இல்லாத நடவடிக்கைகளால் பயன்களை விட அதிக பாதிப்புகள் உண்டாகின்ற என்பதே வரலாறு. மிக முக்கியாக அடிப்படை உரிமைகள் இன்றி அடக்குமுறைக்குள் வாழும் அந்த மக்கள் மீண்டும் மீண்டும் அதை விட சிக்கலான நிலைக்குள்ளேயே தள்ளப்படுகின்றார்கள். சமீப காலங்களில் ஈரான் எந்த விதத்திலும் ஒரு பலமான நாடு அல்ல என்றே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகின்றது. இயற்கை ஒரு பக்கம், அமெரிக்கா இன்னொரு பக்கம் ஈரானை வலுவிழக்கச் செய்துவிட்டன. எங்களின் யூ டியூப்பர்களும், கருத்தாளர்களும் அமெரிக்கா வலுவிழந்து விட்டது என்றும், ஈரான் ரஷ்யா போன்றன வலுவாக உள்ளன என்றும் மீண்டும் மீண்டும் சொல்வதன் அல்லது எழுதுவதன் பிரதான காரணம் அவர்களின் அமெரிக்க வெறுப்பே. நீண்ட ஒரு தொடராக எவரின் கருத்துகளையும் வாசித்து, கிரகித்து, நினைவில் வைத்திருந்தால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா நேரடியான இராணுவ தாக்குதல்கள் அன்றி, ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு இன்னும் பலமான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. ஈரானின் சுப்ரீம் லீடர் மற்றும் முக்கியஸ்தர்கள் இறந்து போனது பற்றி என் மனதில் எந்த உணர்வுமே இல்லை. ஆனால் கடந்த வருடம் மனநோயாளி என்று ஈரான் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண் உயிருடன் இருக்கின்றாரா, இப்போதாவது வெளியில் வருவாரா, அவருடைய மண்ணில் அவர் சுதந்திரமாக நடமாடுவாரா என்ற நினைப்பே ஈரான் என்னும் பெயரைக் கேட்டவுடன் மனதில் வருகின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
படிக்கல்ல, படிக்கல்ல என்று 100 எடுத்து விட்டார் அவர்....................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம் போல...................🤣. 'வீடு நோக்கி ஓடி வந்த என்னையே நாடி நிற்குதே அநேக நன்மையே..........................'
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சில் இறந்துள்ளதாகவும் செய்திகளில் சொல்லுகின்றார்கள். சுப்ரீம் லீடருக்கும், அமைச்சர்களுக்கும், தளபதிகளுக்கும், பாடசாலை பிள்ளைகளுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா.................. இந்தக் கொடுமைகளை கேட்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ உலகில் ஒரு நல்ல நாடும் இல்லை, ஒரு தலைவரும் இல்லை................... ஈராக், ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் எல்லாமே வெற்றுக் கோதுகள் போன்றன. வெறும் வாய் வீச்சு மட்டுமே என்றே தோன்றுகின்றது. ரஷ்யாவையும், சீனாவையும் தங்கள் பாதுகாப்புக்கு நம்பும் எந்த தலைவர்களினதும், நாடுகளினதும் நிலைமை கடைசியில் அந்தோ பரிதாபம் என்றே முடிந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் ரஷ்யாவிடமும், சீனாவிடமும் என்ன வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றார்கள்? அடிப்பதற்கு குண்டுகளும் இல்லை, குடிப்பதற்கு தண்ணியும் இல்லை என்று வந்து நிற்கின்றது ஈரான்.............................. ரஷ்யாவும், சீனாவும் நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என்று சொல்வதை தவிர, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடமாட்டார்கள். அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இந்த தாக்குதல்கள் நல்ல ஒரு மடை மாற்றும் வாய்ப்புகள். முன்னர் ஓபாமா ஈரான் மேல் தாக்குதல்கள் செய்யப் போகின்றார், அது அநீதி என்று சொன்ன அதிபர் ட்ரம்ப் இன்று ஈரான் மேல் ஒரு தலைப்பட்சமாக தாக்குதல்கள் மேற்கொள்ளுகின்றார். அதிகாரமும், ஆணவமும் உள்ள சில மனிதர்களால் அப்பாவி மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... அல்வாயன் எனக்கு சீனியர்................ இங்கு களத்தில் மட்டும் இல்லை, பாடசாலையிலும் கூட.....................😜.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
15 கோடி தான் கொடுக்க முடியும், 50 கோடி கொடுக்க முடியாது என்று விஜய் - சங்கீதா இழுபறிப்படுகின்றார்கள் என்ற செய்தி சிரிப்பாக இருக்கின்றது. விஜய்க்கு எந்த ஆழமும் புரியவில்லை. ஒரு கூட்டுப்புழுவை விட விஜய்யின் நிலை மோசம்.................. வருகின்ற தேர்தலுக்கு இரண்டு பெரிய கூட்டணிகளும் தலா 6000 ஆயிரம் கோடி அளவில் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு 100 கோடியை சங்கீதாவுக்கு கொடுத்து விஜய்யை போட்டியில் இருந்து வெளியேற்றலாம் என்றால், சொந்தப் பணத்தை வெளியில் விட தயங்கும் எடப்பட்டியாரே அதில் 50 கோடி கொடுப்பார்......................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
களத்தில் ஏதோ பிழையோ என்று ஒரு கணம் திகைத்துப் போனேன்....................🤣.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜய் தான் நீதிமன்றம் போகலாம், அப்படியே பிரிந்து விடலாம் என்று சொன்னதாக ஒரு செய்தி போகின்றது. ஜீவனாம்சம் மற்றும் இழப்பீடு தொகையில் இருவருடைய கணக்குகளும் ஒத்து வராததால் நீதிமன்றம் போகலாம் என்று முடிவெடுத்து இருக்கின்றார்கள். ஆனால் சங்கீதா கடைசியில் சினந்தெழுந்துவிட்டார். இது எதிர்பாராதது என்கின்றார்கள். செந்தில் பாலாஜியே போதுமே செய்து முடிக்க....................🫣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
❤️........................ மிக்க நன்றி செம்பாட்டான். களத்தில் போட்டிகளை எப்போதும் நடத்தும் கிருபனுக்கும், கந்தப்புவுக்கும் ஒரு உதவும் கரம் கிடைத்திருப்பது நல்லதொரு விடயம்.................👍.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. சினிமாவில் இது சாதாரணம் மற்றும் இது தட்டில் கிடந்த முழுப் பூசணிக்காய்............ எப்பவோ தெரிந்தது தான்................ ஆனால் முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.............. 100 ரூபாக்கள் கொடுத்து 50,000 ரசிகர்கள் தேர்தலுக்கு தவெகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றார்கள். அதில் 500 பேர் மட்டுமே அதை நிரப்பி திருப்பிக் கொடுத்தார்கள்......................🫣. சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமே விஜய் ரசிகர்களின் பிரதான நோக்கம்................ இன்று வரை ஒரு அரசியல் சக்தியாக அவர்கள் திரள்வதற்கான அறிகுறிகளே இல்லை.............. தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளுக்கு போவார்களா என்பதே சந்தேகம் தான்............................. வீட்டிலிருந்து கூட திரிஷா மட்டும் தான் போவார் போல.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... ஆப்கானுக்கு தாலி கட்டியது போல ஆகி விட்டது என் நிலை....................🤣. முடியவில்லை, இன்னும் இருக்கின்றது, அண்ணா.................. சூப்பர் எட்டில் ஒரு குரூப்பில் முதலாவதாக வருவார்கள் என்று கூட தெரிவு செய்திருக்கின்றேன்................🤭. .... புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகி .... ... ஆப்கானை தெரிந்து.......................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அந்த வீடியோவை பார்க்க முயலவில்லை, வசீ, ஆனால் அவர்கள் நிற்கும் நிலைகளைப் பார்த்தாலே அவர்களின் போக்குகள் புரிகின்றன........... பொதுவாகவே எவ்வகையான கடும் போக்காளர்களிடமும் அவர்களுக்கு சார்பானவற்றை அன்றி வேறு எவற்றையும் பேச முடிவதில்லை............ அவர்களும் இறுதி வரை தாண்டி வெளியே வருவதில்லை................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
❤️.................. 'ஃபீல் குட்' நிகழ்வுகள்............... இவற்றை பார்க்கும் போது அதிக சந்தோசம் வருவதால், வயது அதிகமாகி விட்டது என்று நினைக்கின்றேன்......................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையன் சார், எந்த நிலைமையிலும் நீங்கள் பாசிட்டிவாக இருப்பதும், எங்களுடன் இணைந்திருப்பதும் உங்களின் உறுதியைக் காட்டுகின்றது......................👍. சுகமாகி விடுவீர்கள்................🙏.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............. இன்று நடந்த இலங்கை - நியூசிலாந்து போட்டியில் நான் ஆப்கானை தெரிவு செய்ததால் நாளைய போட்டியில் ஆப்கானை தெரிவு செய்ய முடியாமல் போய் விட்டது, அண்ணா................... ஆப்கான் நல்ல அணி தான்.......... அதற்காக அவர்கள் தினமும் விளையாட முடியுமா......................🤣. சகுனியின் நாடு தான் இன்றைய ஆப்கான், அன்றைய காந்தாரம்............. நான் இந்த வழியில் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று இப்ப தோன்றுகின்றது.................🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣............... 👍.............. சனங்களுக்கு சாமியும் வேண்டும், பூசாரிகளும் வேண்டும்.....................🤣. சாமி - பையன் சார் பூசாரிகள் - வசீ, கோஷான், செம்பாட்டான் 'சாமியே எழும்பி தலை தெறிக்க ஓடினாலும், பூசாரிகள் விட மாட்டார்கள்............' என்று நேற்று இதையே குறிப்பிட்டிருந்தேன்................🤣. பிரமிளின் தாக்கம். இந்த வரியை நேற்று எழுதும் போது பிரமிளின் 'மேல் நோக்கிய பயணம்' கவிதை மனதில் வந்து அடக்க முடியாத சிரிப்பு: ......... ஜடையில் கங்கையின் இமயப் பனிமூச்சு அனலாய் அடிக்கிறது நதிநாக்கு வரண்டு அவள் நீர்கேட்டுத் தவிக்கிறாள். அர்த்த நாரிஇவள் பாரிச வாதத்தில் பின்னே இழுக்கிறாள். ஜடை இருளுள் பிறைகவிழ்ந்து விவேகப் பித்தம் கோஷப் புயலில் கலைந்து புத்தி தெளிந்து பிழைக்கும் வழிதேட இடிஒலி எழுப்பிய உடுக்கை பொத்தல் விழுந்து 'பொத் பொத்' என்றொலிக்க திரிசூலம் துருப்பிடித்து கையைக் கடிக்க மறுகையில் மானின் கால் எலும்பும் இன்னொரு கைநெருப்பு அணைந்து புகைந்து அரனார் இருமவும் பின்தொடர்வோர் கல்லடியில் படம் ஒடுங்கி பாதிசெத்த பாம்புமாலை புழுவாகிப் புரள ஊழித்தீ தீவரண்டு நெற்றிக்கண் குழிவிழுந்து திருதிரு எனவிழிக்க அறந்து பறக்கும் பூணூலை பொடிமட்டையில் சுருட்டி பொத்திப் பிடித்தபடி அரனார் ஓடுகிறார்............ ...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏன், என்ன ஆனது பையன் சாருக்கு ( @வீரப் பையன்26 )............................ பல்லில்லாத இலங்கை அணி பற்பொடி மிச்சம் என்று வாழலாம்............ ஆனால் பையன் சார் இல்லாமல் இங்கு போட்டியே இருக்காது.............. பையன் சார், நீங்கள் வந்து இந்த இலங்கை அணியை கீரை விற்க அனுப்புங்கோ....................
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
ஆழ்ந்த இரங்கல்கள்.................😢
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
அருமை சுவி ஐயா................❤️.