Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
மலரும் நினைவுகள் ..
தாயக பள்ளி நாட்களில் இப்படியான அனுபவம் ஏற்பட்டதுண்டா..? 😄
-
நான் ரசித்த விளம்பரம் .
என்ன பழைய விளம்பரம் .. யட்டியோடு குதிக்கினம். ☺️
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : வாழ்க்கை வாழ்வதற்கே(1964) இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி வரிகள்:கண்ணதாசன் பாடியோர்:PB சீனிவாஸ் & P சுசீலா
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
தனுசின்ர தினுசுகள்.. 😄- உணவு செய்முறையை ரசிப்போம் !
உந்த பாகிஸ்தான்காரர் எவ்வளவு வேகமா சோடா உடைத்து யூஸ் போடுகிறார்..👌- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- நகைச்சுவைக் காட்சிகள்
கரகாட்டம் எப்படி வெஸ்ரன் ரான்ஸ் ஆனது.? - MR ராதா மரண பகிடி.! 😊- நான் ரசித்த விளம்பரம் .
யாழ்பாணம் - (1966)- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
ஒம்.. நிறைய உண்டு தோழர்..! 😄 தாயக பள்ளி நாட்களில் இப்படி நொந்து நூடுல்ஸ் ஆகி போனதுண்டா..? 😄- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படம் : துலாபாரம் (1968) இசை :G தேவராஜன் பாடியோர் :TMS & P சுசீலா வரிகள் : கண்ணதாசன் பூச்சிட்டு கன்னங்கள் பொன் மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னிரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் தெரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணிலே இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே (பூச்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் ) செல்வர் இல்லத்தில் சீருட்டும் பிள்ளைக்கு பொன் வண்ணக் கின்னத்தில் பால் கஞ்சி தண்ணீர் உப்பிட்டு காவேரி தண்ணிட்டு கவலைகள் ஆடுது சோரினிலே இதயங்கள் ஏங்குது. வாழ்வினிலே கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்டு காணும் வரை கண்ணுறங்கு கண்ணுறங்கு ( பூச்சிட்டு கன்னங்கள் பொன் மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னிரிலே) மாணிக்க தேர் போலே மையிட்டு பொட்டிட்டு மகாராஜன் செல்வர்கள் விளையாடும் கண்ணாடி வளையலும் காகித பூக்களும் கண்ணீர் நீரில் விளையாடும் கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்டு காணும் வரை (பூச் சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது தண்ணீரிலே)- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
விளையாட்டுகளில் கவனம் செலுத்திய கீழடி தமிழர்கள்.! பொதுவாக ஒரு சமூகம் சிறந்த வாழ்வியலைக் கொண்டதாக இருக்கின்றது அல்லது இருந்தது என்பதினை அறிய அச்சமூதாயத்தின் வாழ்வியலின் வழிமுறைகளை அறிவதின் மூலம் தெரிந்து கொள்ளலாம்! அந்த வாழ்வியலில் உழைப்பு, உணவு, உறக்கம் போன்றவற்றோடு சேர்ந்து விளையாட்டும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகின்றது. இந்த நூற்றாண்டின் மிக உன்னதமான கண்டுபிடிப்பான கீழடி அகழாய்வுகளில் எத்தனையோ தகவல்கள் தினம் தினம் அன்றைய மக்களின் வாழ்வியலான கட்டடக்கலை, வணிகம், விவசாயத்திற்கான கால்நடை வளர்ப்பு, உணவுக்கான விலங்கு வளர்ப்பு போன்றவற்றை தன்னிடமிருந்த எச்சங்களை வெளிபடுத்திக் கொண்டிருப்பதின் வாயிலாக உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபொருட்களான வட்டச்சில்லுகள், ஆட்டக்காய்கள், சதுரங்கக் கட்டைகள் மூலம் அன்றைய சமுதாயம் பொழுதுபோக்கு அம்சங்களையும் சிறப்பாகக் கொண்டிருந்ததை அறிய முடிகின்றது. பெண்களையும் சக மனிதராக கருதும் மனப்பான்மை கீழடி அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற பொருட்களில் அதிகமான வட்டச்சில்லுகள் 600 எண்ணிக்கையில் (தற்போதும் இவ்விளையாட்டு ‘பாண்டி’ என்ற பெயரில் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது) கிடைத்திருக்கின்றது. மேலும் தாய உருட்டி விளையாட்டுக்கான பகடைக்காய்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பெண்களையும் ஆண்களுக்கு சமமாகக் கருதும் மனப்பான்மை உடையவர்கள் கீழடி நகர நாகரீகத்தினர் என்பது அறிந்து கொள்ளலாம். பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று இருக்கின்றதா இல்லையா என்ற கேள்வி உலக நாகரீகத்தின் ஊற்றுக்கண்ணாகக் கருதபடும் கிரேக்கத்திலேயே எழுந்த அதே காலகட்டத்தில், தமிழ்ச் சமூகமான கீழடியில் பெண்களையும் சமமாகக் கருதி, அவர்களும் தங்கள் களைப்பு நீங்க விளையாட வேண்டும் என்ற அடிப்படையில் விளையாட்டுப் பொருட்களை இருப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் உலகத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்த சமூகமாகவே இருந்திருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் அகழாய்வில் சிறுவர்கள் கயிறு கட்டி விளையாடும் சுடுமண்ணாலான வட்டச்சுற்றிகள், வண்டி இழுத்து விளையாடும் சக்கரங்களும், பெரியவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் விளையாடும் சதுரங்க விளையாட்டுக் காய்களும் பல்வேறு அளவில் 80 எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இதன் மூலம் ஒரு நகர நாகரீகத்தினர் தன்னுடைய சக மாந்தர்கள் எப்படி தங்களின் வாழ்வியலின் பொழுதுகளை திறம்படக் கழித்திட வேண்டும் என்பதை கீழடி பாடம் நடத்துகின்றது. நம்முடைய நிலை கீழடியில் அதிக அளவில் கிடைத்துள்ள இந்தத் தொல்பொருட்களின் மூலம் தமிழர் வரலாறு நமக்கு பாடம் ஒன்றை நடத்துகின்றது. நாகரீகமற்றவர்கள் எனக் கிண்டலடிக்கப்படும் ஆதி கால மக்கள் தத்தமது வாழ்வியலை சிறப்பாக அமைத்திருக்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளை பூர்த்தியாக்கி வாழ்வியலை செம்மையாக்கி வேலை, ஊண், உறக்கம், ஓய்வு என திட்டமிட்டு வாழ்ந்து, தமது எச்சங்களை பின்பு ஒரு காலத்தில் சிறப்பாக வெளிப்படும் வண்ணம் தரமாக்கி நமக்கு அறிவுப்பாடம் எடுத்திருக்கின்றனர். நாம் நமது அண்டை வீட்டில் வசிக்கும் நெடுநாள் குடியானவனையும் கூட அறியாது ஒரு அவசர கால வாழ்க்கையினை வாழ்ந்து நமது சிறப்பான வாழ்வினை அழித்துக் கொண்டு வருகின்றோம். இயந்திரத்தனமான கார்ப்ரேட் வாழ்வு, அதில் பிழைக்கத் தெரிந்தவனைத் தவிர மீதம் உள்ளவனை மிதித்துச் சென்றிடும் போக்கு, தமது பெற்றோர்களுக்கும் - பெற்றவர்களுக்கும் - கரம் பிடித்தவளுக்கும் சிறிது நேரம் கூட ஒதுக்க இயலாத நிலை என ஒவ்வொன்றாக நாம் இழந்து கொண்டிருக்கும் விசயங்கள் ஏராளம். - நவாஸ் https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38710-2019-10-03-08-24-38- தமிழனின் சிற்பக் கலை.
நோகாமல் நோன்பு கும்பிடுதல் ..- உணவு செய்முறையை ரசிப்போம் !
சோம்பு + பல் குத்தும் குச்சி எல்லாம் அங்கயே இருக்கும் தோழர்..👍- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
ஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்.! சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியை இன்று ஒரேநாளில் பத்தாயிரம் பேர் பார்வையிட்டுளளனர். கடந்த ஜூன் 13 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் ஐந்தாம் கட்ட அகழ்வராய்ச்சிப் பணிகளால் 2600 ஆண்டுகள் தொன்மையான மனிதர்கள் பயன்படுத்திய இரட்டைச்சுவர், நேர் சுவர், வட்டச்சுவர், நீர் வழிப்பாதை, தங்க அணிமணிகள், உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட பொருட்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன. பழந்தமிழர் பெருமையை உலகுக்கு உரைக்கும் வகையில் வெளிப்படும் கீழடி கண்டுபிடிப்புகளை நேரில் காண நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவிக்கிறார்கள். http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/72533-more-than-10-thousand-people-visit-in-keezhadi-in-single-day.html- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ம்ம்.. மச்சகார மனுசன் நல்லா வாழ்ந்திருக்கான்..ஒரே கில்மாதான் .. 😄 டிஸ்கி: காந்தி சயந்தி- நகைச்சுவைக் காட்சிகள்
சித்தி(1966) திரைப்படம் -- மேல்நாட்டு மோகம் -- M R ராதா மரண பகிடி.. ☺️- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மரம் காப்போம்.. 😄
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.