Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. படம் : மகளே உன் சமர்த்து(1964) இசை :Gk வெங்கடேஷ் வரிகள்:கண்ணதாசன் பாடியோர்:PB ஸ்ரீநிவாஸ் & P சுசீலா அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே.. தேனமுதூறும் செவ்விதழ் ஓரம் சிங்கார கலை காட்டும் ஓவியமே ஆ..ஆ..வானகம் மேலே மாமுகில் போலே வாழ்வில் உறவாடும் காவியமே தனிமை நாடுதே.........(அன்பில்) உல்லாச தென்றல் ஓடோடி வந்தே சொல்லாத கதை ஒன்று சொல்லுதே ஆ...ஆ...உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே நிலவின் துணையோடு செல்லுதே தனிமை நாடுதே.........(அன்பில்) பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே இதயம் பேசுதே இணைந்துறவாடுதே இன்பம் நம் சொந்தம் ஆனதே தனிமை நாடுதே.........(அன்பில்)
  2. `தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது!' - கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா .! கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தவேண்டும் என அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நேற்றுடன் (அக்டோபர் 13ம் தேதி) நிறைவுபெற்றது. மேலும், கீழடி, கொந்தகை, பள்ளிச்சந்தை, மணலூர் என்று கீழடியில் சுற்றியுள்ள பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி, வரும் ஜனவரி 2, 3வது வாரங்களில் தொடங்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. தற்போது கீழடி 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணி நடைபெற்ற பகுதியில் கிடைக்கபெற்ற பொருள்களை வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலமாக ஆவணப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கீழடியின் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்ற 52 குழிகளை மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை அவர் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணா, ``தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்ட 4 மற்றும் 5ம் கட்ட ஆகழாய்வை மிகச்சரியாகச் செய்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். தற்போதைய ஆய்வு தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் விரைவாகப் பணிகள் நடத்த முடியும்'' என்றார். இந்தநிலையில், கீழடியில் நடைபெற்ற 5ம் கட்ட அகழாய்வை ஆவணப்படுத்தும் பணிகளை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேரில் பார்வையிட்டார். அவர், தொல்லியல்துறை அதிகாரிகளிடம் கீழடியில் கிடைக்கப்பெற்ற ஓடுகள், பவளம், பண்டையகால தமிழி எழுத்து உருவங்கள் அடங்கிய பானைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். https://www.vikatan.com/news/tamilnadu/archaeology-official-amarnath-ramakrishna-visits-keezhadi-excavation-site
  3. http://onlinesrilankan.blogspot.com/2016/01/blog-post_2.html?m=1 இந்த இணைப்பில் தண்டனை விபரம் உள்ளது தோழர்..!
  4. கீழடி அகழ்வாராய்ச்சியில், பழங்கால கல்திட்டை கண்டுபிடிப்பு...! சிவகங்கை மாவட்டம், கீழடி இரண்டாயிரத்து 600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி பணியில், கிடைத்த ஒவ்வொரு பொருட்களும் ஆதி தமிழரின் பெருமையை வெளிச்சம் போட்டுகாட்டியது. முதல் மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி முடிந்த நிலையில், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக தொல்லியல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடக்கப்படவுள்ள நிலையில், 110 ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் கட்டட தொழில்நுட்பம், வேளாண்மை, நெசவு உள்ளிட்டவற்றில் தமிழர்கள் மேம்பட்டவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், கீழடியில் பழங்கால மனிதர்கள் தங்குமிடமாக பயன்படுத்தும் கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது. பாறைகளின் மறைவில் மழை, வெயில் போன்றவற்றிற்காக கல்திட்டை அமைத்து அதில் பண்டைய கால மனிதர்கள் வசிப்பிடமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார். அப்போது, அங்கு நடைபெற்று வரும் ஆய்வு பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 16 ஆயிரம் பொருட்களை கொண்ட ஆய்வின் மூலமாக, எழுத்தறிவு பெற்ற மக்கள் வாழ்ந்து உள்ளதை அறிய முடிகிறது என குறிப்பிட்டார். அவ்வாறு கண்டறியப்பட்ட பொருட்களை, கீழடி பகுதியில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனவும், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் மட்டுமே என்பதை உலகம் மக்கள் விரைவில் ஏற்றுக் கொள்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வரும் இடங்களை உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். இதன்மூலம் கீழடியின் பெருமை சர்வதேச அளவிற்கும் பரவியுள்ளது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். https://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/11/10/2019/excavation-discovery-ancient-palette?fbclid=IwAR1h_asC4D1LKzygZULH0nsZL1dPINp17oM7kWsuHMJNqkMvp8KWkIOQGug
  5. மணி ஆபரணங்கள், கையில் கத்தியோடு இவர் எங்கு கிளம்புறார்..? நெல்லையப்பர் கோவில் - திருநெல்வேலி
  6. காதல் தோல்வியோ.? எந்த பிரச்சனை என்டாலும் கதைத்து தீர்த்துக்கலாம் .. இறங்கி வாம்மா..😢
  7. தாயக பள்ளி நாட்களில் இப்படியான அனுபவம் ஏற்பட்டதுண்டா..? 😄
  8. என்ன பழைய விளம்பரம் .. யட்டியோடு குதிக்கினம். ☺️
  9. படம் : வாழ்க்கை வாழ்வதற்கே(1964) இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி வரிகள்:கண்ணதாசன் பாடியோர்:PB சீனிவாஸ் & P சுசீலா
  10. உந்த பாகிஸ்தான்காரர் எவ்வளவு வேகமா சோடா உடைத்து யூஸ் போடுகிறார்..👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.