Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தேரழகாய் நிற்பவளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சக்தியின் வடிவம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மலையாளும் தணிகேசனே முருகா மனம் வாழும் வேலவனே கெளரி மனோகரி சிவன் மைந்தனே குறவள்ளிக் கொடியோடு திகழ்பவனே என் குறைதீர்க்கும் வனவேட குருபரனே முருகா சண்முகா குமரா . . . திருப்புகழை நான் பாடி படியேறுவேன் முருகா உன் இசையாலே மனம் மாறுவேன் முகம் ஆறும் ஒன்றாகும் நிலை காணுவேன் அதில் ஊடுவேன் இசை பாடுவேன் மயிலோடு விளையாடும் வடிவேலவா எந்தன் குடியேறி விளையாட வருவாயப்பா வள்ளி மணாளா வரம் தரும் வேலா சிவ பாலா உந்தன் அருள் வேண்டுமே இசை பாயும் திருநாமம் கொண்டவனே கந்தா ஈசன் முகச் சுடராய் இதம் தரும் வேலவா வள்ளி மணாளா தணிகையின் தலைவா வரம் வார்க்க வா வா வடிவேலவா மறவாமல் பாடும் வரம் சேர்க்க வா தணிகாசலா முருகா தணிகாசலா முருகா முருகா சண்முகா சண்முகா குமரா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விண்ணப்பத்தை கேட்பவரே அன்பே, அன்பே, அன்பே ஆருயிர் உறவே! ஆனந்தம் ஆனந்தமே ஒரு நாள் உம் தயை கண்டேனையா அந்நாள் என்னை வெறுத்தேனையா உம் தயை பெரிதையா – என் மேல் உம் தயை பெரிதையா – அன்பே அலைந்தேன் பலநாள் உமையும் அறியா மறந்தே திரிந்த துரோகி ஐயா அணைத்தீர் அன்பாலே – எனையும் அணைத்தீர் அன்பாலே – அன்பே பூலோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் பூவைப் போல வாடாதே ஐயா – அன்பு வாடாதே ஐயா – அன்பே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை 3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சுத்தாங்கத்து நற்சபையே சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின் ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை 4. சிங்காரக் கன்னிமாரே – உம் அலங்காரக் கும்மி அடித்துப் படித்து சிங்காரக் கன்னிமாரே மங்காத உம் மணவாளன் இயேசுதனை வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லோரும் ஹஜ் செய்யலாம்... வல்லோனின் காபாவை காணலாம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அப்துல் ஹாலிக் (யுவன் சங்கர் ராஜா) வின் பாடல்
-
களைத்த மனசு களிப்புற ......!
கிளித்தட்டு விளையாடுவோமா?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
10 நிமிடத்தில் முள்ளங்கி பக்கோடா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் இன்ப மயம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம்கார வடிவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆராரோ ஆரிராரோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லோரும் வேண்டிடுவோம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏகனே யாஅல்லாஹ்... நாயனே யாஅல்லாஹ்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
லெப். கேணல் விசு
லெப். கேணல் விசு வாழ்வினைக் கரைத்து வீரம் விதைத்தவன்: புலனாய்வுத்துறை தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் விசு / அருமை கனகராசா குலேந்திரன் மல்லாகம், யாழ்ப்பாணம். 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம்இ இந்தியப்படை வருகை என பல வரலாற்றுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு. இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல். சுருங்கக் கூறின் ‘கண்ணையும் பாதுகாக்க வேண்டும், இமையையும் பாதுகாக்க வேண்டும்’ அதேநேரம் பார்க்கவும் வேண்டும். ‘கல்மடு’, ‘இராமநாதபுரம்’; கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு ஊர்கள் அவை. காட்டுப்புறங்களை ஒரு பகுதியாகவும், நீர்த்தேக்கங்கள், மக்கள் குடியிருப்புக்களை மறுபகுதியாகவும் உள்ளடக்கிய புதிய வரவு அற்ற அம்மக்களின் வாழ்க்கைக்கான ‘ஆதாரம்’ நிறைந்த அந்தக் கிராமங்கள். புலிகளின் வரவினால் புளங்காகிதம் அடைந்தன. புலிகளை “எங்கட பொடியள்” என ஒருபகுதி மக்களும், “பெரிசு” என இன்னொரு பகுதி மக்களும் உரிமையுடன் அழைத்தனர். விசுவுக்கு அந்த ஊர் மக்கள் வைத்த பெயர் ‘சின்ன விசு’. புலிகளின் அசைவுகளை எப்படியோ இந்தியப் படையினர் மோப்பம் பிடித்துவிடுவர். இருப்பினும் இந்தியப் படையினருக்கு ‘தண்ணி காட்டிவிட்டு’ காட்டுக்குள் உள்ள தமது அணிகளுக்கு உணவுப் பொருட்களையும், வேறு தேவையான பொருட்களையும் எடுத்துச் செல்லும் ஒருசில போராளிகளுள் விசுவும் ஒருவன். ஒரு தொகுதிப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமெனில் இந்தியப்படையினருடன் பல சண்டைகள் பிடித்தே செல்ல வேண்டியிருக்கும். சிலவேளை பல சண்டைகளுக்குப் பிறகு அப்பொருட்களை இழக்க வேண்டியும் இருக்கும். அதற்கும் மேலாக பல உயிர்களை விலையாகக் கொடுக்கவும் நேரிடும். இப்படித்தான் ஒருநாள் நெத்தலியாற்றுக் கரையிலிருந்து அறுபதுபேர் கொண்ட பெண்கள் அணி ஒன்றிற்கு உணவுப் பொருட்கள் தீரும் நிலையில் உள்ளது என விசுவுக்குத் தகவல் வந்தது. இராமநாதபுரத்திலுள்ள ஆதரவாளர் ஒருவரின் மாட்டு வண்டியைப் பெற்றுக் கொண்டு ஜேம்சுடனும் இன்னொரு போராளியுடனும் சேர்ந்து உணவுப் பொருட்களை வண்டியில் ஏற்றிக் காட்டுவழியே நீண்ட தூரம் பயணித்து, பெண் போராளிகளின் தளத்தை அண்மித்த போது, இந்தியப் படையினர் அம்முகாமைத் தாக்க காட்டுக்குள் இறங்கிவிட்டனர் என அறிந்த பெண் போராளிகள் தமது தளத்தினை கைவிட்டுச் சென்றிருந்தனர். அத்தளத்தினுள் பிரவேசித்தவர்களுக்கு விடயம் விளங்கிவிட்டது. கிணற்றடிவரை சென்ற விசுவுக்கு, மரம் செடிகளின் முறிவு ஒலியும், குரங்குகளின் கத்தல் ஒலியும் நிகழப்போகின்ற அனர்த்தத்தை உணர்த்தி நின்றன. நிலைமையை விளங்கிக் கொண்டு சுதாகரித்துக் கொண்ட விசு “ஜேம்ஸ் வாற ஜூனியஸ் பொடியள் பசியோட வருவாங்கள். உடன் எடுத்துவந்த பொருட்களை இறக்கி சமைக்கத் தொடங்குங்கோ”. விசுவின் பேச்சிலிருந்த மறைபொருளைத் தெளிவாக விளங்கிக் கொண்ட ஜேம்ஸ் வண்டிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். பின் மூவரும் வண்டிலை வந்தடைந்தனர். இவர்களின் நகர்வினைக் கண்காணித்துக் கொண்டிருந்த இந்தியப் படையினர் வண்டிலுக்குப் பின்னால் பின்தொடரத் தொடங்கினர். இதனை மூவரும் நன்கறிந்தனர். பல துன்பங்களுக்கு மத்தியில் எடுத்து வந்த இவ் உணவுப் பொருட்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பு அவர்களுக்கு; “எங்களைப் பின்தொடருறாங்கள் மச்சான், கடைசிவரைக்கும் இப்ப எங்களைச் சுடமாட்டாங்கள். எங்கட தளத்தை அறிவதுதான் அவங்களின்ரை நோக்கம்” விசு கூறியபோது, “வண்டிலை விட்டிட்டு இறங்கித் தப்பி ஓடுவம்” ஜேம்ஸ் கூறினான். மற்றப் போராளியும் அதற்கு ஆமோதிக்க வண்டில் நிறுத்தப்பட்டது. இந்தியப் படையினரின் துப்பாக்கிகள் ‘சடசட’க்கத் தொடங்கின. துப்பாக்கியால் சுட்டபடியே அவர்கள் மூவரும் இறங்கி ஒரு பக்கமாக ஓடினர். இடையில் விசு காட்டுக்குள் பாதை மாறிவிட்டான். ஜேம்சும் மற்றப்போராளியும் தொட்டியடியில் ஏறியபோது விசுவைக் காணவில்லை. இரண்டு நாட்களின் பின்னர் முல்லைத்தீவுக் காட்டுப்புறத்தில் உள்ள சிறு ஊர் ஒன்றில் தனியாக விசு ஏறினான். பின் அவர்கள் ஒன்று சேர்ந்தபோது “உங்களை நம்ப ஏலாது மச்சான். என்ர G – 3 துப்பாக்கியைத்தான் நம்பவேணும்” எனத் தனது துப்பாக்கியை முத்தமிட்டபடியே கூறினான் விசு. “சும்மா இரு மச்சான் மாடுகளை அவிட்டுவிட்டவங்கள் மாடு போற திசையை நோக்கிப் பின்னாலேயே போய் எங்களுக்கு மாடும் வண்டிலும் தந்தவங்களைப் பிடிச்சிட்டாங்களாம். இனி சனம் என்னத்தைத் தந்தாலும் மாடுகளை மட்டும் தராது” ஜேம்ஸ் கூறினான். “அதுக்கென்ன மணிகளுக்குப் பதிலாக இனி சயனைட்டைக் கட்டிவிடுவம்” விசு கூறியபோது அந்த இடம் சிரிப்பொலியால் நிறைந்திருந்தது. இன்னும் ஒரு நாள், 1988ம் ஆண்டு வைகாசி மாதம் பழைய கண்டி வீதியினை இணைக்கும் கொக்காவில் சந்தியில் இந்தியப் படையினர் பதுங்கித் தாக்கியதில் புலிவீரன் ஒருவனுக்கு கால் முறிந்துவிட்டது. வீதிவழியே ‘அம்புலன்ஸ்’ வண்டியில் எடுத்துச் செல்ல முடியுமா என்ன? இல்லையே. காட்டுவழியேதான் பாதை முறிக்க வேண்டும். கால் முறிந்தவனுக்கு உடனடிச் சிகிச்சையளிப்பதாயின் வட்டக்கச்சி செல்ல வேண்டும். போகும் வழியில் இன்னொருவனுக்குக்கூட இன்னொரு இடத்தில் ‘கால் முறியலாம்’. எப்படியும் போய்ச் சேர்ந்தாலும் மருத்துவரை அழைத்து வருவதென்பது கடினமான காரியம். ஒவ்வொரு உள்ளூர் மருத்துவரையும் இந்தியப்படையினர் தமது கண்காணிப்பில் வைத்திருந்தனர். தோள் கொடுத்தவனை, சிலவேளை உயிர் தந்தவனை, தப்பியோட வழியிருந்தும் நண்பனுக்காகச் சண்டையிட்டவனை, உணவு தனக்குக் கிடைக்கும் வேளை நண்பனுக்காக ஒருபிடி சோற்றை காற்சட்டைப் பையினுள் வைத்து எடுத்து வருபவனை, அந்தப் புலிவீரனை விட்டுச் செல்ல முடியுமா என்ன? “மச்சான் இவனுடன் நான் நிக்கிறன். நீங்கள் போய் ‘டொக்ரர்’ யாரையாவது கூட்டிக்கொண்டு வாங்கோ” என விசு கூறியபோது அவனின் G – 3 துப்பாக்கியையும், அவனையும் நம்பி காயப்பட்ட போராளியை அவனுடன் விட்டுவிட்டுச் சக தோழர்கள் காட்டுவழியே நகர்ந்தனர். யாரோ பாதகன் எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிட்டான். அன்று அந்த ஊர் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது… விசுவும், காயப்பட்ட போராளியும் சிறு பற்றையொன்றினுள் சருகுகளால் தம்மை உருமறைத்த படியே அன்று முழுவதும் கிடந்தனர். இந்தியப் படையினரின் ‘அந்த மணம்’ மூக்கை அரித்தது. ‘பீடிப்புகை’ உணவு, நீர் இன்றியிருந்த வயிற்றைக் குமட்டியது. “அண்ணை என்னாலை இனியும் வேதனையைத் தாங்கிக் கொண்டிருக்க ஏலாமல் கிடக்கு”. விசுவின் காதோரம் காயப்பட்ட போராளி கூறியபோது, விசு அவனின் ‘சயனைட்’ குப்பியை வேண்டித் தன்னுடன் வைத்துக் கொண்டான். “என்ர G -3 யில இருக்கிற ரவைகள் முடிஞ்சபிறகு நீ வேணுமெண்டா குப்பியைக் கடி”. விசு கூறினான். இந்தியப் படையின் கண்களில் அவர்கள் அகப்படாமல் போகவே தமது சுற்றிவளைப்பைக் கைவிட்டு இரவே இந்தியப் படையினர் தளம் திரும்பிவிட்டனர். இரவானதால் நிலமை அறிவதில் சிக்கல்கள் எழவே, காலையானதும் மருத்துவருடன் வந்த சகபோராளிகளுக்கு முழுநாளும் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்களின் கண்கள் சொல்லி நின்றன. இக்காலப்பகுதியில் விசுவுடன் தளத்தில் நின்ற ஜேம்ஸ் அவர்கள் நினைவு கூறுகையில், “கடலில் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு படகு எமக்கு அருகால் வந்துகொண்டிருக்குமானால் எமக்கு எவ்வளவு பாதுகாப்பு உணர்வு ஏற்படுமோ அப்படியோர் உணர்வு, விசு எம்முடன் கூடவந்தால் ஏற்படும்… நாங்கள் எல்லோரும் நல்லாச் சண்டை பிடிப்பம். ஆனால் எங்களுக்கு எப்ப வாய்க்குள் சயனைட் குப்பியை வைக்கலாம் என்ற எண்ணம்தான் அலைகளாய் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் விவேகத்துடனும், கூடுதலான சகிப்புத் தன்மையுடனும் தன்னையும் துப்பாக்கியையும் நம்பி, ‘வெல்வதற்காகவே சண்டையிடுகின்றோம்’ என்ற உணர்வுடன் சண்டையிட்டுக்கொண்டிருப்பார் விசு” என்றார் மெல்லிய சிரிப்புடன். அந்த ஊர்களில் புலிகள் அணியின் வரவு என்பதும், நடவடிக்கைகள் என்பவையும் புதியவர்கள் பலரை போராளிகளாகப் புலிகள் அமைப்பில் இணைத்தன. ஓர் இடத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் இருந்தாலே இந்தியப்படைகள் மோப்பம் பிடித்துவிடுவர். இருந்தும் முப்பது புதியவர்களுக்கு அடிப்படைப் பயிற்சிகள் கொடுத்துப் போராளிகளாக்கும் பொறுப்பு விசுவிடம் வழங்கப்பட்டது. ஆயுதப்பயிற்சி, அரசியல் கல்வி, அடிப்படைத்தேவைகள் எல்லாமே விசுவின் கைகளில்தான். புதியவர்களுக்கு பயிற்சி முடியும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. “காட்டுக்குள்ள மீண்டும் இந்தியப் படைகள் இறங்கப் போறாங்களாம்” விரைவாகச் செய்தி ஒன்று கிடைத்தது. “ஒரு தளத்தினை அமைப்பதென்பது அவ்வளவு இலகுவான பணியா? இல்லையே. கிணற்றில் இருந்து மண்சுமந்த நோவே முள்ளந்தண்டிலிருந்து இன்னமும் போகவில்லை. காட்டுக்குள் பொருட்களைச் சுமந்தெடுத்த சுமைகள் சுகமானதல்ல… எப்படியும் எதிரியின் நகர்வைத் தடுக்க வேண்டும். அல்லது எதிரி எம்மை அண்மிப்பதையாவது தெரிந்துகொள்ள வேண்டும்…” சிந்தித்த விசுவுக்கு மணலாற்றுக் காட்டிலிருந்து வந்த ‘ஜொனி’ மிதிவெடிகள் நினைவுக்குவர 1988 ஆவணி 26 அன்று புதிய போராளிகள் சிலரை அழைத்து, “மிதிவெடிகளை எடுத்துக் கொண்டு வாங்கோ” என்று கூறியவன் தன் புதிய போராளி அணியுடன் ‘எதிரி வரலாம்’ என எதிர்பார்த்த காட்டின் பாதைகளினூடே குறிப்பிட்ட தூரம்வரை நடந்திருந்தான். “உங்களுக்குப் பயிற்சியாகவும் இருக்கட்டும். அதேநேரம் எதிரிக்கு நீங்கள் வைக்கின்ற முதற் பொறியாகவும் இருக்கட்டும்” என புதிய போராளிகளிடம் கூறிய விசு, மிதிவெடி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தவனை அருகில் நின்று அவதானித்துக் கொண்டிருந்தான். மிதிவெடி ஒன்றினைப் புதைத்த சிவம் அதனை உருமறைத்துவிட்டு எழுந்தபோது மரவேர் ஒன்றில் கால் இடறுப்பட தான் மறைத்து வைத்த மிதிவெடியின் மேலேயே தவறுதலாக விழ… “நான் ஓர் ஆபத்தான நண்பன்” என்பதை மிதிவெடி சொல்லியது. மிதிவெடியின் மேல் சிவம் விழப்போகிறான் எனத் தெரிந்தும் சிவத்தைப் பிடிக்கப்போன விசுவின் வலக்கை முழங்கைக்குச் சற்றுக்கீழ் துண்டாடப்பட்டது. இடக்கையில் விரல்கள் அனைத்தும் சிதறின. உடல் முழுவதும் காயங்கள். சிவம் சாவுடன் போராடிக்கொண்டிருக்க காயமின்றித் தப்பிய ஒருவன் தளத்துக்கு ஓடிச்சென்று தோழர்களுடன் திரும்பி வந்துகொண்டிருந்த போது தன் தோழர்களைப் பார்த்து ‘கைகளிரண்டும் இல்லை மச்சான்’, கைகளிரண்டும் இல்லை மச்சான்’, என அரை மயக்கத்துடன் கூறத் தொடங்கினான். முகத்தில் வேதனையைக் காட்டிக் கொள்ளவில்லை. மனதில் வேதனைகள் இல்லாதிருக்குமா என்ன? நாற்பது கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் வடமராட்சிக் கரையோர எல்லையை நோக்கி காயப்பட்ட தம் சகதோழர்களுடன் கல்மடுவிலிருந்து புலிகள் அணி ஒன்று புறப்பட்டது. மெல்லிய உடற்கட்டையுடைய விசுவைச் சுமந்தவாறே போராளி ஒருவன் வேகமாக முன்னே நடந்து கொண்டிருந்தான். ‘தமிழ்நாடு’… அறுவைச் சிகிச்சைகள் முடிவடைந்து கைகளுக்குப் போடப்பட்டிருந்த கட்டுக்களை அவிழ்க்கும் நாளும் வந்தது. விரல்கள் இல்லாத இடக்கையின் பெருவிரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையே காணப்படும் பகுதியை வெட்டி விரல்போன்ற ஒன்றை மருத்துவர் உருவாக்கியிருந்தார். “டொக்ரர் எனக்கொரு விரல் எப்படியும் உருவாக்கித்தர வேண்டும்” என அவன் மருத்துவரிடம் கேட்டது வீண் போகவில்லை. 1989 இன் நடுப்பகுதியில் அந்தப் பனை மரத்தின் ஓலைகள் மீண்டும் அவனுக்குத் தெரிந்தன. பிரிந்து சென்ற அனைத்தோடும் மீண்டும் சேரும் நாள் “நான் எவ்வளவோ நாட்டுக்காகச் செய்ய வேண்டிக்கிடக்கு” தனக்கென உருவாக்கிய விரலை மீண்டுமொரு தடவை பார்க்கிறான். அந்தப் பனை மரங்கள் முழுமையாகத் தெரிந்தன. கரைசேர்ந்த படகிலிருந்து “தூக்கவா விசு அண்ணை” போராளி ஒருவன் கேட்க “என்னால் முடியும் மச்சான்” என்று கூறிவிட்டுக் கரையேறினான். அந்தப் பனைமரமும், ஓயாத அந்தக் கடலின் அலைகளும் தங்களுடன் அவனையும் தொடர்படுத்திப் பார்த்திருக்கும். மீண்டும் வன்னியில் விசு 3.7 எனும் குறியீட்டுப் பெயருடைய தளத்தில் போராளி அணி ஒன்றிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். இங்கு அவன் துப்பாக்கி எடுத்துக் குறிபார்த்து தன் இலக்கை வீழ்த்தியபோது மருத்துவருக்கு மீண்டுமொருமுறை நன்றி கூறியிருப்பான். 1990 இல் போராட்டத்தின் பட்டறிவு புலிகளின் புலனாய்வுச் செயற்பாட்டை நிறுவனப்படுத்த வேண்டிய தேவையினை தலைவர் அவர்களுக்கு ஏற்படுத்தியபோது அதற்காகத் தேர்வு செய்யப்பட்ட அணியில் விசுவும் இருந்தான். 1990 யூன், இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் யாழ் – வன்னிக்கான தரைத்தொடர்பை சிங்களப்படையினர் ஆனையிறவில் துண்டித்தனர். கொம்படிப் பாதையே வன்னிக்கான தொடர்பானபோது, புலனாய்வுத்துறைப் போராளிகளின் போக்குவரத்து வேலைகளினையும், பொருள் மாற்றும் வேலையினையும் விசுவே பொறுபெடுத்திருந்தான். இக்காலப்பகுதியில் புலனாய்வு வேலை ஒன்றினை பொறுப்பெடுக்கும்படி புலனாய்வுப் பொறுப்பாளர் அவர்கள் கேட்டபோது, “நான் சண்டைக்கெண்டாப் போறன் அம்மான். எனக்குப் புலனாய்வு வேலை சரிவருதில்லை”. விசுவின் இம்மனநிலை பற்றி புலனாய்வுப் பொறுப்பாளர் கூறியபோது, “விசுவுக்கு புலனாய்வு அறிவு என்பது இயற்கையாகவே இருந்தது. தன்நம்பிக்கை என்பது அதைவிடப் பெரிதாக இருந்தது. ஆனால், அவன் ஏன் புலனாய்வு வேலைகளில் அதிக நாட்டம் கொள்ளவில்லை? இது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. எமது விடுதலைப் போரை நாம் வெல்ல வேண்டும் என்றால் புலனாய்வுச் செயற்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் சண்டைக்கான துறையில் அவன் இருந்ததால் அவன் முடிவு சரியானதுதான்”. ஏன்றார். விசுவின் மனநிலையறிந்த பொறுப்பாளர் விசுவுக்கு சண்டைக் களத்துடன் தொடர்புடைய பணியைக் கொடுக்கத் தொடங்கினார். 1993 நவம்பர் 11 இல் பூநகரி தரைப்படை மற்றும் கடற்படைக் கூட்டுத்தளங்கள் மீது ‘தவளைப் பாய்ச்சல்’ நடவடிக்கையைப் புலிகள் மேற்கொள்ளத் தீர்மானித்த போது வழங்கல் பணியை மேற்கொள்ளும் நடவடிக்கைப் பகுதி ஒன்றிற்கு விசு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். அன்று நீரேரியைக் கிழித்தவாறே அவனின் படகு விரைந்து வந்துகொண்டிருந்தது… திடீரென வானில் தோன்றிய எதிரியின் ‘புக்காரா’ வானூர்தி ஒன்று படகை நோக்கி வேகமாய்க் குத்திப் பதிந்தது. “டேய் அடிக்கப் போறான்ரா” எல்லோரும் நீருள் பாய்ந்து நீந்தத் தொடங்கினர். படகு நீருள் அமிழ்ந்து கொண்டிருந்தது. இல்லாத கைகளுடன் விசு கரையேறுவதற்காய் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தான். அவனின் ‘கோல் கொமாண்டோ’ நீரினுள் அவனை விட்டுப் பிரிந்து கொண்டிருந்தது. கப்டன் வண்ணன் நீரோட்டத்துடன் போராடித் தோற்றுக் கொண்டிருந்தான். விசு வருவானா? என்பதைவிட ‘அட விசுவுக்கு நீந்தக் கைகள் இல்லையே’ என ஏங்கிய உள்ளங்களே அதிகம். “இதயம் வெடித்து மீன்களே அக்கடலேரியில் மிதந்து கொண்டிருந்த போதும், அந்திசாயும் நேரம் அவன் வந்து கரையேறினான். பின் இன்னுமோர் புதிய பணி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. “வணிகம்” ஐம்பது வீதம் பணம் இலாபம், ஐம்பது வீதம் புலனாய்வு இலாபம். அவன் தன் போராட்ட வாழ்வில் கண்டிராத புதிய பணி. சாரம், அரைக்கைசேட், அரும்பிய தாடி அவனை வணிகனாகக் காட்டிக் கொண்டிருக்க, ஒட்டிய உடலும், வெட்டிய கைகளும் அவனைப் போராளியாகவே காட்டிக் கொண்டிருந்தன. இக்காலப்பகுதியில் விசுவுடன் பணியாற்றிய பணியாளர் ஒருவர் நினைவு கூறுகையில், “இந்த மனிசனிட்ட ஒரு குணமிருக்கு, அவரின் தனிப்பட்ட தேவைகளுக்காக எந்த உதவியை நாம் செய்து கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஒருநாள் நான் மலசலகூடத்துக்கு தண்ணீர் அள்ளிவைத்தேன். அத்தண்ணீரைக் கீழே உற்றிய அவர் சற்றுக் கோபத்துடன், “உங்களுக்குத் தருகிற ஊதியத்துக்கு இயக்கத்துக்கு வேலை செய்யுங்கோ, எனக்குக் கைகள் இருக்கின்றன. நீங்கள்தான் கைகள் இல்லை என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறியள்” அதுக்குப்பிறகு நான் எந்தப் பணிகளும் செய்து கொடுக்கிறதில்லை. அப்படி ஏதாவது செய்யத் தொடங்கினாலே ‘பாணி’ ஒட்டப்போகுது என அறுக்கவும் தொடங்கிவிடுவார்” என்றார். இக்காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் தன் ஆயுதமான ‘கோல்கொமாண்டோ’வை இழந்த துயர் விசுவை வாட்டிக் கொண்டிருக்க போகுமிடங்கள் எல்லாம் கோல்கொமாண்டோ ஒன்றினைப் பொருத்தி எடுப்பதற்காக அதன் உதிரிப்பாகங்களைத் தேடிப்பெற்றுக் கொண்டான். “அண்ணை, உங்களுக்குக் கைகளும் இல்லை பிறகேன் ஆயுதம்” கேட்கக்கூடாத கேள்வியை போராளி ஒருவன் கேட்டுவிட்டான். “டேய் என்னதான் இருந்தாலும் சண்டையிட்டுத்தான் நாங்கள் நாட்டைப் பிடிக்க வேண்டும்… நாட்டைப் பிடித்த பிறகும் துவக்குத் தேவைப்படும்”. ‘வலிமையே வாழும்’ என்ற பொதுவிதி விசுவின் உணர்வுகளுடன் பிரதிபலித்தது. யூன் 05 விளக்குவைத்தகுளம் நோக்கிய சிங்களப்படைகளின் ஜெயசிக்குறு தாக்குதலில் மேஜர் குட்டி வீரச்சாவு அடைய, பின்கள வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசுவுக்கு புலனாய்வுப் பொறுப்பாளரிடமிருந்து செய்தி வந்திருந்தது. “புலனாய்வுத்துறைப் படையணியைப் பொறுப்பெடுக்கவும்”. அணிப் பொறுப்பினை எடுக்கும் போது விசுவின் முன்னே எதிரியின் பாரிய நகர்வினைத் தடுக்கும் பொறுப்புடன் இன்னுமொரு பாரிய பொறுப்புமிருந்தது. புலனாய்வை மட்டுமே பட்டறிவாகக் கொண்ட போராளிகள். ‘துணிவு’ மட்டுமே அவர்களுக்கான தகுதியாய் இருந்தது. ஏனைய அணிகள் தொடர்ச்சியாக சண்டைக் களங்களில் நின்றமையால் கூடுதலான சண்டை அனுபவம் கொண்ட போராளிகளைக் கொண்டிருந்தன. எனவே, தன் அணிக்கும் உறுதியான ஓர் அடித்தளத்தை இட்டு சண்டைக்களங்களில் காத்திரமான பங்கைக் கொடுக்கவேண்டிய மற்றுமோர் முக்கிய பொறுப்பினையும் அவன் நன்கு விளங்கியிருந்தான். சிறந்த படையணிக்கு அடித்தளமிடுவதற்கான ஒவ்வொரு சிறு விடயங்களையும் தலைவர் அவர்கள் கூறுவதுபோல் தன்னிலிருந்தே ஆரம்பித்தான். விசுவின் கைகளுக்கிடையேயும் ஒரு மண்வெட்டி இருக்கும். அந்த மண்வெட்டியும் தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும். ஒரு இரவு. வேவுக்காரன் பின்னால் வந்து அடிக்க எத்தனித்தபோது முதலில் தன் துப்பாக்கியை இயக்கிச் சண்டையிட்ட அந்தப் போராளி, “தம்பி உன்ர கோல்சரை கட்டிக்கொண்டு படு”. அடிக்கடி விசு கூறுவதை நினைவுபடுத்திக் கொள்கிறான். “அண்ணா, எங்களுக்கு ஒரு சண்டையும் கொழுவுது இல்லை”. காவலரணில் நிற்கும் போராளி ஒருவன் கேட்டான். “ஆமி என்ன வேவு பார்க்காமலேயே சண்டைக்கு வாறான்? நீங்கள் பலமாக இருந்தால் அவன் எப்படி வருவான்”. தனக்குள்ளும் அந்தக் கேள்வி இருப்பதை மறைத்தபடியே இயல்பாகக் கூறுவான். “டேய் விசுவண்ணைக்கு காய்ச்சல்” காவலரணுக்குப் பொறுப்பான போராளி கூறுவான். “தம்பி இரண்டு பேரையும் பின்னுக்கு அனுப்பிவிட்டு அதை டம்மிப் பொயின்ற் ஆக்கு”. “அதால ஆமி உடைச்சா?” “டேய், ஆமி உடச்சா நாங்கள் மூடி அடிப்பமடா” விசு கூறுவான். “அண்ணை இவன் மாறி எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில சேர்ந்திட்டான்”. ஒரு போராளி குத்தலாய்ச் சொல்ல, “மச்சான் சின்னச் சத்தம் கேட்டாலும் என்ன என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கோ” கூறியவாறே விசு மறுகாவலரணுக்குச் செல்வான். “கனகாலத்துக்குப்பிறகு ஊருக்குள்ள வந்திருக்கிறம்”. பின்னால் இருந்த அறிவிடம் விசு கூறினான். வீதியில் கண்ட தெரிந்தவர் அவனை மறித்து, “என்ன விசு கண்கள் எல்லாம் உள்ள போயிட்டுது” “எங்கட கண்கள் உள்ள போனதால்தான் ஆமியும் உள்ளவராமல் இருக்கிறான்” அதில் நிறைந்திருந்த ஆயிரம் கருத்துக்களை அந்தப் பொதுமகனால் அந்தக் கணத்தில் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஊருக்குள்ள வந்த அவன் அன்று மாலையே தன் வாழ்விடத்திற்குத் திரும்பி விடுவான். தன் பிள்ளைகளுக்கென கச்சான் கூட வாங்கிச் செல்ல அவன் கையில் பணம் இருக்காது. அன்று அந்தப் பழைய உந்துருளிக்குக் காற்றுப் போனது. ரியூப்புக்கு ஒட்டுப் போட பணம் வேண்டும் என்ன செய்வது? அவன் தோற்றத்தைப் பார்த்தே அவன் யார் என விளங்கிக்கொண்ட அந்த ஒட்டுவேலை ஐயா அவனிடம் பணம் கேட்கவுமில்லை. “விசு அண்ணை வந்திட்டார்” தொலைத்தொடர்பு சாதனங்களினூடாக போராளிகள் கதைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் இனம்புரியாத தெம்பு ஏற்படும். 1997 டிசம்பர் 03 மன்னகுளப் பகுதியினூடாக எதிரி நகர்வதற்கான சாத்தியத்தை அடுத்து விசுவின் அணிகள் மன்னகுளப் பகுதிக்கு மாற்றப்பட்டன. வீதியின் வலது பக்கத்திலிருந்து குளத்தின் அணைக்கட்டை ஒரு பக்கம் பாதுகாப்பு வேலியாக்கி அதில் ஓர் அணியையும், வீதியின் இடப்பக்கமாக (கனகராயன்குளப் பகுதி) இன்னொரு அணியையும் விசு பிரித்து விட்டிருந்தான். வீதிக்குக் குறுக்காக மாலதி படையணி நிலை கொண்டிருந்தது. அடுத்த நாள் 1997 டிசம்பர் 04, சூரியன் மேலெழுந்து கொண்டிருந்த நேரம் மன்னகுள வீதியை ஊடறுத்த சிங்களத்தின் அதி சிறப்பு கொமாண்டோ அணியினர் வீதிக்கு அருகாக ஒரு கிலோமீற்றர்வரை முன்னேறி இருந்தனர். “எங்களுடைய முதற்கட்டப் பணி முடிவடைந்துவிட்டது. கண்டி வீதியில் ஏறப்போகின்றோம்” சிங்களத் தளபதி ஒருவன் தன் கட்டளைப் பீடத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தான். எதிரி ஊடுருவிய பிரதேசத்தினுள் ஒரு காவலரண் மட்டும் பிடிபடாமல் இருந்தது. அக்காவலரணில் இருந்த மேஜர் நீலாம்பரி தனியாக நின்று எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். “சாண்டிலியன், நான் விசு கதைக்கிறன். உடைத்த காவலரண்களை மீண்டும் பிடித்து மற்ற அணிகளோட லிங் பண்ணுங்கோ…” “ஒரு காவலரண் ஆமியிட்ட பிடிபடாமல் இருக்கு. அதில எங்கட பிள்ளை ஒன்று தனியாக நின்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கு. ரவையைப் பார்த்து அடியுங்கடா” முன்னே சென்று கொண்டிருந்த அணிகளுக்கு விசு கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். “மறுபுறத்தில், ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் வந்த இடம் சொல்லவே வழிதெரியாதிருந்த சிங்களத்தின் 53ஆவது படையணி கொமாண்டோக்களுக்கு அமெரிக்காவின் “கிரீன்பரே” படையணி கொடுத்த பயிற்சிகள் புலிகளின் தாக்குதலின் முன்னே கைகொடுக்கவில்லை. ஒரு கல் வீட்டின் உள்ளேயே சுற்றிச்சுற்றி ஓடிக்கொண்டிருந்த கொமாண்டோக்களுக்கு அந்தக் கல்வீடே கல்லறையானது. “உதவிக்கு படைகள் அனுப்புகிறோம்” என சிங்களத் தளபதிகளிடமிருந்து பதில் வந்ததே தவிர படைகள் வரவேயில்லை. எங்கிருந்தோ வந்த குண்டின் சிதறல்கள் விசுவின் தோள்மூட்டிலும் காலிலும் காயத்தை ஏற்படுத்தின. உதவித் தளபதி அறிவின் குரல் வோக்கியில் கேட்கத் தொடங்கியது. உதவிக்கு வந்த சக அணிகளுடன் இணைந்து எதிரியால் பிடிக்கப்பட்ட காவலரண்கள் அனைத்தும் மீளவும் கைப்பற்றப்பட்டன. ஒன்பது மணிநேர சண்டையின் முடிவில் தனது நாநூறு அதிசிறப்புக் கொமாண்டோக்களை சிங்களத்தின் 53ஆவது படையணி இழந்திருந்தது. அந்த நாள் சிங்களத் தளபதி சிறிலால் வீரசூரியாவுக்கு மட்டுமல்ல, சிங்களத்தின் புகழ்பூத்த 53ஆவது படையணிக்கு என்றுமே மறக்கமுடியாத நாள். “அறிவண்ணை விளக்குவைத்தகுளத்தில் G.P.M.Gயை எதிரியிடம் பறிகொடுத்த அவமானத்தை எங்கட இரத்தத்தால் கழுவியிருக்கிறம்”. மருத்துவமனையில் வைத்து அறிவிடம் விசு இப்படித்தான் கூறினான். மீண்டும் படைவேலி வாழ்க்கை. மழையும் தன்வீச்சைக் கடுமையாக்கி இருந்தது. “பதுங்குகுழி வெட்டினா நனையத்தான் வேண்டும். அது வியர்வையாலா? மழையாலா? என்பதைக் காலநிலைதான் தீர்மானிக்க வேண்டும்” தெப்பலாய்த் தோய்ந்திருந்த போராளி ஒருவன் கூறிக்கொண்டிருந்தான். சின்ன வயதில் தலைக்கு பௌடர் போட்டு அதற்கும் ஈரம் காய்ந்திருக்காது என எண்ணி சாம்பிராணிப் புகை போடும் எங்கள் அம்மாக்களின் அந்தப் பிள்ளைகள் தலைதுடைக்க சிறு துண்டுகூட இல்லாமல் தாய்நாட்டிற்காக நனைந்து கொண்டிருந்தார்கள். விசுவும் காய்வான், நனைவான். தலை துடைக்க சிறு துண்டல்ல கைகள் இன்றியும் சிரமப்படுவான். தொடர்ச்சியாகக் கஞ்சி அல்லது கத்தரிக்காயும் சோறும் தான் உணவாக வந்து கொண்டிருக்கும். “மச்சான், எலும்பெல்லாம் தெரியுது. காயப்பட்டாலும் எக்ஸ்ரே எடுக்க செலவு மிச்சம்தான்” என்றவாறே, “ஏதாவது அயிற்றம் போடுவம்” விசு கூறுவான். ஏதாவது மிருகங்களை வேட்டையாடுவதற்காக இருவர் புறப்படுவார்கள். சிலநேரம் மான் வரும் சிலநேரம் “அண்ணை, சுட்டம் ஓடிற்றுது” என்ற பதில் வரும். “டேய் அது மானடா, அதுக்கு நாலுகாலடா, சுட்டுப் படாட்டா அது ஓடும் தானடா”. எங்கும் சிரிப்பொலி எழும். கொம்பனி மேலாளர் என்ற நிலையிலிருந்து மாங்குளப் பகுதிக்கான முழுமையான பொறுப்பாளராகக் கட்டளைப் பீடத்தினால் அவன் நியமிக்கப்பட்டான். ஒருசில மறிப்பு வேலியை மட்டும் பாதுகாக்கக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தவனுக்கு பல கிலோ மீற்றர்கள் மறிப்பு வேலியை எதிரி உடைக்காமல் பாதுகாக்கக் கட்டளையிட வேண்டிய முக்கிய பொறுப்பு…… அவன் ஒரு பொதுவான பொறுப்பாளனாக மாறியிருந்தான். 1998 யூன் 05, அன்றிரவு ‘எல்’ வடிவில் ஒலுமடுப் பக்கமாகத் திரும்பும் புலனாய்வுத்துறைப் படையணி பாதுகாத்த மறிப்பு வேலியில் அமைக்கப்பட்டிருந்த போலிக் காவலரணின் உள்ளே (டம்மிப் பொயின்ற்) எதிரிப்படையின் வேவுகாரர் வந்து சென்ற தடயங்கள் தெரிந்தன. விடயம் உடனடியாக விசுவுக்கு தெரியப்படுத்தப்பட்டது. “கவனமாக இருங்கோ, அதுக்குள்ளால எப்படியும் நுழையப் பார்ப்பான்” 1998 யூன் 06; பட்டப்பகல் பொழுதில்… அலட்சியமாக இருக்கும் அந்த ஒரு நிமிடமே எதிரி உன்னைத் தேடிவரும் நேரமாக இருக்கலாம். தலைவர் அவர்கள் கூறியதை பட்டறிவில் அன்று புரிந்துகொண்டார்கள். வளைவாகச் சென்ற நகர்வு அகழிக்கு மையத்தில் அந்தப் போலிக் காவலரண் அமைந்திருந்தது. எதிரிக்கு வாய்ப்பாக போய்விட்டது. குறிப்பிட்ட தூரம் வரை சென்று வளைவுப் பகுதியில் நின்று துப்பாக்கியை நீட்டினால் எதிரியின் துப்பாக்கி சடசடக்கத் தொடங்கிவிடும். எதிரி கடுமையாக நின்று போரிட்டுக் கொண்டிருந்தான். அறிவுக்கு விசுவிடம் இருந்து கட்டளைகள் வந்து கொண்டிருந்தன. களநிலைமை போராளிகளுக்குச் சாதகமாக மாறியது. பகல் பொழுதில் புலிகளின் துப்பாக்கிக் குறியில் இருந்து தப்பியோடுவதே எதிரிக்குக் கடினமான பணியாக இருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் வரலாற்றில் அந்த முப்பது நிமிடச் சண்டையும் முக்கிய இடத்தைப் பெற்றது. ஜெயசிக்குறுப் படைகள் 1998 பெப்ரவரி 04க்குள் கண்டிவீதியைப் பிடித்து யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப் படைகளுக்கான விநியோகத்தை ஏற்படுத்திவிடுவர் என்ற பதில் பாதுகாப்பு அமைச்சரின் காலக்கெடுவை ஏழு மாதங்கள் கடந்திருந்தன. மாங்குள நகரினைக்கூட கைப்பற்ற முடியாமல் சிங்களப் படைகள் திணறிக் கொண்டிருந்தன. சிங்களப் படைகள் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சி நகரினை மீண்டும் கைப்பற்ற நாள் குறித்தபோது, அதற்கான பயிற்சிகளில் விசுவின் அணியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிளிநொச்சிப் படைத்தளம் ஏறக்குறைய 20 கிலோமீற்றர் சுற்றுவட்டத்தினைக் கொண்டிருந்தது. கண்டி வீதியைத் தன்னகத்தே உள்ளடக்கி முப்பது மீற்றருக்கு ஒரு காவலரண், நகர்வு அகழிகள், முட்கம்பி வேலிகள், பதுங்கு குழிகள் எனப் பதினாறுக்கும் மேற்பட்ட மினிமுகாம்களையும் தன்னகத்தே கொண்டு சிங்களத்தின் புகழ்பூத்த 54அவது படையணியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த பெரும் படைத்தளமாக அது விளங்கியது. இந்தப் படைத்தளத்தை அழிக்க வேண்டுமாயின் படைத்தளத்தின் விநியோக வழியை அடைக்க வேண்டும். விநியோக வழியை அடைக்க வேண்டுமாயின் பரந்தன் பகுதியில் கண்டி வீதியைத் துண்டாட வேண்டும். கண்டி வீதியைத் துண்டாடும் பணியை பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் தலைமையிலான அணிகள் பொறுப்பெடுத்திருந்தன. அவரின் அணிகளைக் கண்டி வீதிக்கு அனுப்ப பாதை உடைத்துக் கொடுக்க வேண்டும். பாதை உடைத்தெடுத்து அகட்டிக் கொடுக்கும் பணி விசு தலைமையிலான புலனாய்வுத்துறைப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. ‘ஓயாத அலைகள் – 02’ 1998 செப்ரெம்பர் 27, அதிகாலை 1.20, டோபிடோ வெடிக்க, முட்கம்பி வேலி துண்டாடப்படுகிறது. முட்கம்பி வேலிகளை அகற்றி உள்ளே புகுந்த அணிகளில் ஒரு அணி விசு தலைமையில் வலப்பக்கமாகவும் (டிப்போ வீதிப்பக்கம்) இன்னுமோர் அணி அறிவு தலைமையில் இடப்பக்கமாகவும் (பரந்தன் பகுதி) பிரிந்து சென்று பத்தே நிமிடங்களில் தடைகள் உடைக்கப்பட்டு பின் இடம் வலமாக ஒரு கிலோமீற்றர் தூரமான படைவேலிகள் உடைக்கப்பட்டுப் பாதை கொடுக்கப்பட கண்டி வீதியைத் துண்டாடும் அணி தனது வேலையைச் சரிவரச் செய்தது. நாலு திசைகளிலிருந்தும் புலி அணிகளின் பாச்சலாலும், எறிகணை வீச்சாலும் படைத்தளம் சிதைந்து கொண்டிருந்தது. வெட்டையான இடங்களினூடாக முன்னேறிய விசுவின் அணி உருத்திரபுர வீதியின் அருகே இருந்த அந்த மாடிவீட்டின் பக்கத்து காவலரணையும் கைப்பற்றி இருந்தது. நேரம் பகல் 1.30 மணி. முதல் நாள் இரவு முழுவதும் விழித்திருந்து சண்டையிட்டகளைப்பு ஒவ்வொரு போராளியின் முகத்திலும் தெரிந்தது. விசு காவலரண் ஒன்றிற்குள் இருந்தான். எதிரியின் துப்பாக்கி ரவைகள் காவலரணில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. காவலரணின் ஓட்டையினூடே, உள்ளே ரவை ஒன்று பட்டுத் தெறித்து விசுவின் மார்பினைத் துளைத்து நின்றது. அந்த நிமிடம் நடக்கப்போவதை விசு உணர்ந்தான். தன் கோல்கொமாண்டோ துப்பாக்கியை அருகில் நின்ற போராளியிடம் கொடுத்தான். “தம்பி பிடிச்ச இடங்கள திருப்பி அவன் பிடிக்க விடாதீங்கோ, நிலைமையை அறிவுக்குத் தெரியப்படுத்துங்கோ” அவன் கூறிக்கொண்டிருந்த போதே மெல்லமெல்ல அவன் உடல் இயக்கம் அந்தப் படைத்தள அழிப்பின் வெற்றிச் செய்தியை கேட்காமலேயே நின்று விட்டது. என்ன திடீர் முடிவு என நினைக்கிறீர்களா? என்ன செய்வது, அவன் வாழ்விலும் தொடரிசைக் குறிக்குப் பதிலாய் முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. விளக்குவைத்த குளத்தில் அணியைப் பொறுப்பெடுத்த போது தன் முன்னே இருந்த இரண்டு பொறுப்புக்களையும் செய்துமுடித்த நிறைவு அவன் முகத்தில் தெரிந்தது. பதினைந்து வருடங்கள் விடுதலைக்காக உழைத்த அந்தத் தீக்குச்சி வெளிச்சத்தை ஏற்றிவிட்டு மறைந்துவிட்டது. அவன் பெயரால் அவன் போன்றவர்களுக்கு புலனாய்வுத்துறையில் ஓர் அறிவுக்கூடம் எழுந்து நிற்கின்றது. வன்னி மண்ணில் ஆலங்குளம் துயிலுமில்லம் பிள்ளையென அவனைச் சுமந்து நிற்கின்றது. உங்கள் சுவாசக் காற்றையே இனிவரும் சந்ததியும் சுவாசிக்கப் போவதால் கால நதியில் உங்கள் வரலாறே தமிழன் வரலாறாய் என்றும் நிலைக்கும். “தோழனே சாவுக்குள் நின்று உழைப்பவர்களுக்கு சாவின் பின்னும் நிச்சயமாவது இலக்கின் வெற்றி மட்டுமே”. நினைவுப்பகிர்வு – சி.மாதுளா விடுதலைப்புலிகள் இதழ் (கார்த்திகை, 2002). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-visu-arumai/
-
சமர்க் களங்களில் ‘கமரா’க்கள்
சமர்க் களங்களில் ‘கமரா’க்கள் சமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள் நடாத்திய வீரச்சமர் பிரசித்தி பெற்றது. அந்த வரலாற்றுச் சமரைத் தத்ரூபமாகப் படம்பிடித்த இரண்டு புலிவீரர்களை, அண்மையில் தலைவர் அவர்கள் பரிசளித்துப் பாராட்டினார். புலிப்படை வீரர்களின் ஆக்ரோசத் தாக்குதலில் சுருண்டு விழுகின்ற எதிரியின் படையாட்கள். தப்பினோம் பிழைத்தோமென சகாக்களையும் தளபாடங்களையும் கைவிட்டோடுகின்ற சிங்கள வீரர்கள். தகர்த்தழிக்கப்படுகின்ற பகைவனின் நம்பிக்கை நட்சத்திரமான போர் டாங்கிகள். குண்டுவீசவீசக் குமுறியெழுந்து போரிடும் புலிப்படை வீரர்கள். கை ஒன்றை முற்றாக இழந்த நிலையிலும், களத்தில் வீழும்வரை வீரமுடன் சண்டையிட்டு முன்னேறுகின்ற தமிழ்மறவன் என்ற கப்டன் கல்கத். சமரின் ஒரு முனையை வழி நடாத்தி, எதிரியின் குண்டுச் சிதறல்களால் களப்பலியாகின்ற நாயகன் எனும் லெப்டினன்ட் கேணல் நரேஸ். இப்படியாக, முழுமையான அந்தச் சமரையே அதன் வீரத்தன்மையையும் தியாகத் தன்மையையும் குறையாத உயிரோட்டத்தோடு கமராக்களினால் பதிவுசெய்துகொண்டு வந்திருந்தார்கள் அந்தப் புலிவீரர்கள். பரிசு பெற்றவர்களில் ஒருவர் சுதாகர். இவர் விடியோ படப்பிடிப்பாளர். அடுத்தவர் சுதாகரன். புகைப்படமெடுக்கும்போது படுகாயமடைந்ததால் ஊன்றுகோல்களின் உதவியுடன் நடந்துவந்த அவருக்கு, மேடையிலிருந்து இறங்கிவந்து தலைவர் பரிசை வழங்கினார். “முன்னே இருந்து சுட்டுக்கொண்டு இருக்கும் எதிரிக்கு முன்னால் நின்று, திருப்பிச்சுட முடியாத ஒரு கருவியுடன் படமெடுப்பது என்பது ஒரு சாதாரண காரியமல்ல. சண்டை முனைகளில் படமெடுப்பதற்கு வித்தியாசமான ஒரு மனத்துணிச்சல் தேவை” என, அந்தப் பரிசளிப்பு நிகழ்வில் கருத்துரை வழங்கும்போது கூறிய தலைவர் அவர்கள், “சண்டைகளில் படமெடுக்கும் போராளிகளை, எமது வேவு வீரர்களைப் போன்றவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் எந்த நொடியிலும், பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பம் குறைந்த சாவு அவர்களுக்கு ஏற்படலாம். அண்மைக் காலத்தில்கூட, புலோப்பளைச் சமரில் குமணன் என்ற போராளியையும், பூநகரிச் சமரில் ஈழப்பிரியா என்ற பெண் போராளியையும், படம் பிடிக்கும் பணியில் நாம் இழந்திருக்கிறோம்” என அவர்களை நினைவுகூர்ந்தார். லெப்டினன்ட் குமணன், மன்னார் முருங்கனைச் சேர்ந்தவன். செல்வரட்ணம் குணரட்ணம் என்பது அவனது இயற்பெயர். மன்னார் மாவட்ட தாக்குதற் படையணியில் வீடியோ படப்பிடிப்பாளனாக அவன் இருந்தான். கடந்த யூன் மாதத்தில், புத்தளம் மாவட்டத்திற்குள் எதிரியின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தினுள் ஊடுருவி, பகைவன் சற்றும் எதிர்பாராத மையமான இலவன்குளம் என்ற இடத்திலிருந்த காவற்படையின் அரண்கள் மீது புலிவீரர்கள் நடாத்திய இருவேறு அதிரடித் தாக்குதல்களை, குமணன் முழுமையாகப் படம்பிடித்திருந்தான். அந்த வெற்றிகரமான நேரடிச் சண்டைகளின் படங்கள், எமதியக்கத்தின் ‘நிதர்சனம்’ தயாரிப்பான ‘ஓளிவீச்சு’ வீடியோ சஞ்சிகையின் யூன் மாத வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன. 2ம் லெப்டினன்ட் ஈழப்பிரியா யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவள். நவரட்ணம் மதிவதனி என்பது அவளது இயற்பெயர். வீடியோ படைத்துறைக்கு அவள் புதியவள். ஏமதியக்கத்தின் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவள். ‘ஒப்பறேசன் தவளை’ அவளுடைய முதற்களம். ஆதில் வீடியோ படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு, அச்சமரிலேயே களப்பலியாகினாள் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ படமாகினும் சரி, அல்லது புகைப்படமாகினும் சரி, போர்க்களங்களைப் படம் பிடிப்பதென்பது ஒரு அசாதாரணமான காரியம்தான். உயிராபத்து நிறைந்த அபாயகரமான ஒரு முயற்சி அது. வெளி ஆட்களைப் பொறுத்தவரை இது ஒரு பிரமிப்பூட்டும் வீரச்செயல். சண்டையிடும் அணிகளுள் ஒருவராக தானும் ஒரு போர் வீரராக ஆனால், துப்பாக்கிக்குப் பதிலாக ‘கமரா’வினைக் கையிலெடுத்து, படம் பிடிப்பதற்காக ஒரு போராளி களத்தில் இறங்குகிறார். சமர்க்களம் ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்கும். ஒரு இம்மியும் பிசகாமல் எதிரியின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அவதானித்து, அதற்கமைய அதி துரிதமாக் செயற்பட வேண்டிய சூழ்நிலை அது. காற்றுக்குப் பதிலாக துவக்கு ரவைகளும் பீரங்கிக் குண்டுகளும் வீசும் அந்த ரணகளத்தில், ‘கமராவை’வை கண்ணுக்குள் நுழைத்துக்கொண்டு படம் பிடிப்பது எத்தகைய ஆபத்தான பணி என்பதை விபரிக்கத் தேவையில்லை. புலோப்பளையில் புகைப்படமெடுக்கும்போது பலத்த காயத்துக்குள்ளாகி, சுய நினைவு அற்ற நிலையில் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சுதாகரன் சொன்னார்: “எமது தோழர்கள் ஆக்ரோசமாகப் போரிட்டு, வெற்றிக் கூக்குரலோடு களத்தில் முன்னேறும்போது எமக்குள் பிரசவகிக்கும் உற்சாகம், எங்களுக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டுமென எம்மைத் தூண்டுகிறது. அந்த நேரத்தில் வேறெதுவும் மனதை ஈர்க்காது.” புலோப்பளைச் சமரைத் திறம்பட வீடியோ படம்பிடித்த சுதாகர் கூறினார்: “போரிடும்போது எங்கள் படைவீரர்கள், வெளி ஆட்களால் நம்புதற்கரிய விதமாகப் படைக்கின்ற வீர சாதனைகளையும், அவர்கள் புரியும் உயரிய தியாகங்களையும் நேரடித் தரிசனங்களாக உலகிற்குக் காட்டவேண்டும் என்ற உணர்வு மட்டுமே, அந்த நேரங்களில் மேலோங்கி நிற்கும்; குண்டுகளைப் பற்றி யோசிக்க அங்கு நேரமிருக்காது” சாதரணமாக ஒரு போர் விமானம் எமக்கு மேலே வட்டமிடுவதைக் கண்டாலே, தன்னிச்சியாக எம் கால்கள் பதுங்குகுழி நோக்கியோடுகின்றன. கணிசமான ஒரு தூரத்தில் நிகழும் ஒரு குண்டு வீச்சின் அதிர்விற்கே, நிற்கும் இடத்திலேயே விழுந்து படுத்து நாம் பாதுகாப்புத் தேடுகின்றோம். எமது சுய எண்ணப்பாடுகளுக்கு அவகாசமில்லாமல், இயல்பு உந்துதலாக இவை நடந்துவிடுகின்றன. இத்தகைய ஒரு நிலையிலிருந்து, கையில் ஆயுதங்களும் இன்றி சண்டைகளில் அவர்கள் ஆற்றும் பணியை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். இந்தப் பணியில் ஈடுபட்டு வீரச்சாவை அணைத்துக் கொண்ட நண்பர்களைக் தவிர, பலர் படுகாயமடைந்துள்ளார்கள்: சிலது உடலில் அங்கங்களையும் இழந்துவிட்டார்கள். சதா குண்டுகள் அதிரும் இரத்தக்களத்தில் பதற்றமின்றி, தளர்வின்றி, நிதானமாக, செயற்திறன்மிக்க விவேகத்துடன் அபாரமான துணிச்சலோடும், அர்ப்பண உணர்வோடும் அந்த அரிய பணியை ஆற்றுகின்ற எங்கள் நண்பர்கள் போற்றுதற்குரியவர்கள். சர்வதேச மட்டத்தில் செய்திப்பரம்பல் உலகில் போர்முனைகளை நேரடியாகக் களத்தில் நின்று படம்பிடிப்பது, மிகப் பிரபல்யமான ஒரு துறைசார் செயற்பாடு. உலகின் பல்வேறு காலங்களில் நடந்த பிரசித்திபெற்ற போர்க்களையெல்லாம், இப்போது அதே உயிரோட்டத்துடன் நாம் பார்க்கக்கூடியதாக, படத்துறை வல்லுனர்கள் எடுத்துத்தந்துள்ளார். அங்கெல்லாம் நடந்த ஆச்சரியமான சம்பவங்களை வெளி உலகிற்குத் தந்தவர்கள் படப்பிடிப்பாளர்கள்தான் என்று சொல்லலாம். நிகழ்காலத்திலும் அவர்கள் தந்துகொண்டே இருக்கின்றார்கள். அதேபோலவே, இன்றைய காலத்தில் தமிழீழத்தில் நடக்கின்ற சுதந்திரப் போரட்டத்தை மரணத்தின் விளிம்படியில் நின்று எங்கள் வீரர்கள் படங்களாக உருவாக்குகின்றார்கள். இருப்பினும், எங்கள் வீரர்களை சர்வதேச படப்பிடிப்பாளர்களோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால், எம்மவர்கள் ஒரு ஆயத பாணியைப் போல யுத்தத்தின் உச்சமுனையில் நிற்பார்கள். ஆனால், வெளிநாடுகளில் கணிசமான தொலைவில்தான் நிற்பார்கள். சில சமயங்களில் அது கி.மீ. அளவிலும் இருக்கும். ஏனெனில், எம்மவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மிகச் சாதாரணமான ‘ஆகக்குறைந்ததூர உள்வாங்கும் சத்திகொண்ட’ கமராக்களுடன்தான் களத்தில் இறங்குகின்றார்கள் ஆனால் வெளிநாடுகளில், அதி சக்திவாய்ந்த நவீன தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்ட ‘மிகக் கூடியதூர உள்வாங்கும் சக்தி கொண்ட’ படப்பிடிப்புக் கருவிகளுடன் சண்டையின் உச்சமுனைக்குப் பின்னே நின்றுதான், போர் அரங்கைப் படம் பிடிப்பார்கள். ஆனால், உயிர் ஊசலாடும் அபாயகரமான சூழ்நிலையில் நின்று எம்மவர்கள் பணியாற்றுகின்றார்கள். இவர்கள் எடுக்கும் படங்கள் எல்லாம், கிடைக்கக்கூடிய வசதிகளுடன், இயலுமான அளவுக்கு நல்லமுறையில் பேணப்பட்டு வருகின்றன. வருங்கால சந்ததிகளுக்கு, இன்றைய கால போராட்டத்தின் கனபரிமாணத்தையும் பெற்றெடுக்கும் விடுதலையின் பெறுமதியையும் அவை உணர்த்தும். குண்டு மழையில் குளித்து, வெடிமருந்துப் புகையைச் சுவாசித்து, சாவு விளையாடும் சண்டைமுனைகளிலிருந்து எம் போராளிகள் எடுத்துத்தந்த படங்கள், காலநதியில் கரைந்து போகாதவை; எக்காலத்திலும் உயிர்த்துடிப்போடு விளங்கப் போகின்றவை. வீடியோ நாடாக்களாகவும் புகைப்படச் சுருள்களாகவும் உள்ள அவை தலைசிறந்த ‘யுத்த ஆவணங்களா’கப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய காலத்தில் எங்கள் தாயக மண்ணில் நிகழும் வீர சுதந்திரப் போராட்டத்தை எங்கள் வீரர்கள் படைக்கும் தீர சாதனைகளை வேறெங்குமே காணமுடியாத அதி உன்னத அர்ப்பணிப்புகளையெல்லாம் கமராக்களிற்குள் குவியச் செய்து, எமது போராளிகள் படங்களாக உருக்கொடுக்கின்றார்கள். இவை இக்காலத்திலும் எக்காலத்திலும் எங்கள் பெருமைகளை உரத்துச் சொல்லும்! நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 1994). https://thesakkatru.com/cameras-in-the-field/
-
லெப். கேணல் நரேஸ்
லெப். கேணல் நரேஸ் தென்றலாக வீசிய புயல்: கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன். பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று, புலிகளின் போர்த் திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும். பட்டப்பகற் பொழுதில், கவசங்களற்ற வெட்டவெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும் கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்த போது, உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது. டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க்கலங்களும் மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்டன. சாவுக்கு அஞ்சாத துணிவுக்கு முன்னால், பகைவனின் படை துவம்சமாகிப் போனது. நுட்ப தந்திரோபாயமான போர் வியூகத்திற்குள் சிக்கி, சிங்களச் சேனை சிதைந்தழித்தது. டாங்கிகளும், கவச வண்டிகளும் நொருங்கின. ‘எக்கச்சக்கமான’ ஆயுதங்களை எதிரி பறிகொடுத்தான். வரலாறு காணாத படுதோல்வியைப் பரிசளித்து, புறப்பட்ட இடத்திற்கே பகைவனைத் திருப்பியனுப்பி வைத்தனர் புலிகள். யாழ். குடாநாட்டின் உயிருக்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த அந்தச் சண்டைக் களத்தில்தான் வன்னி நிலத்தின் போர் மறவன், எங்கள் நரேஸ் வீழ்ந்தான். புலோப்பளையில் – பெருவெற்றியை பெற்றுத்தந்த, ஒரு சண்டை முனையை வழிநடாத்திக்கொண்டிருந்த போது நரேசுக்கு முன்னால் விழுந்த எதிரியின் பீரங்கிக் குண்டொன்று அந்த வீரத்தளபதியை எங்களமிடமிருந்து பிரித்துக் கொண்டது. அவனோடு கூட இன்னும் 85 தோழர்கள், அந்த வெற்றிக்கு விறகானார்கள். அப்போது அவனுக்குப் பதினாறு வயது. புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தாய்நாட்டிற்காக அவன் துப்பாக்கியைத் தூக்கினான். எட்டு வருடங்களுக்கு முன்னர்; ஒரு மாலைப்பொழுது மங்கிக்கொண்டிருந்தது. காலையிலேயே வந்துவிட்டதால், பொறுமையை அடக்க முடியாமல் அவன் காத்துக்கொண்டிருந்தான். “எப்படியாவது போய்விட வேண்டும்” கூட்டிச்செல்பவரைக் காணவேயில்லை. புதுக்குடியிருப்பில் ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த வீடுதான் புலிகள் இயக்கத்தின் தொடர்பு இடம். திடீரென படலையடியில் கேட்ட சத்தத்தில் “அவர்தானா……?” என ஆவலோடு எட்டிப்பார்த்தவன் அதிர்ந்து போனான். வந்து கொண்டிருந்தது இவனது அண்ணன். தன்னைக்கூட்டிச் செல்லத்தான் அவர் வருகின்றார் என்பதை ஊகிக்க அவனுக்கு நேரமெடுக்கவில்லை. இலேசாகப் பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் மனதுக்குள் பொருமினான். “தாங்களும் போகமாட்டினம், போற ஆட்களையும் விடமாட்டினம்” அப்படியே சொல்லித் திருப்பி அனுப்பி விட வேண்டும். நினைத்துக் கொண்டான். ஆனால், விசயம் தலைகரணமாக நடந்தபோது, அவனால் நம்பமுடியவில்லை. வந்த அண்ணனும் வீட்டின் ஒரு மூலையில் போய்க் குந்திக்கொண்டார். கண்கள் சந்தித்த போது, ஆளையாள் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டார்கள். யாராவது ஒரு ஆள் வீட்டுக்குத் திரும்பியே ஆக வேண்டும் என்றது இயக்கம். “நீ சின்னப் பையன் தானே வயசு வரட்டும்.” என்று நரேசைத்தான் வீட்டுக்குப் போகச் சொன்னான் அண்ணன். தம்பி மறுத்து விட்டான்; “வீட்டுக்கு ஆள் வேணுமென்டால் நீயே போ” என்று அண்ணனுக்குச் சொன்னான். அண்ணன் மறுத்துவிட்டான். இருவருமே பிடிவாதமாக இருந்தார்கள். முடிவெடுக்க முடியாத சிக்கலில் முகாம் பொறுப்பாளர் மாட்டிக்கொண்டார். கடைசியில், வன்னியின் ‘ஜீவன்’ பயிற்சி முகாமின் முதலாவது அணியில், அண்ணனும் – தம்பியும் ஒன்றாகவேதான் பயிற்சி எடுத்து, முடித்து வெளியேறினார்கள். நரேசின் போராட்ட வாழ்வு இப்படித்தான் ஆரம்பித்தது. துடிதுடிப்பாகத் துள்ளித்திரிந்த அந்தப் பொடியனை ஊரில் எல்லோரும் ‘குரு’ என்று தான் செல்லமாகக் கூப்பிடுவார்கள். 07.11.1969 அன்று, சிங்கராஜா – மேரிகமலீன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக அவன் கண்திறந்தபோது, பெற்றவரும், பேரர்களும், சுற்றவரும் சேர்ந்து வைத்த ‘அருள்நாயகம்’ என்ற பெயர் பள்ளிக்கூட பதிவுக்கு மட்டும் செல்லுபடியானது. அந்தச் சின்னவன் குறும்புத்தனம் அதிகமானவனாக இருந்த போதும், பசுமையாகப் பழகும் பண்பும், இலகுவில் இரக்கப்பட்டுவிடும் சுபாவமும், கோபம் வந்தால்கூட எவரையும் அளவுக்கதிகமாகக் கோபித்துக் கொள்ளாத இயல்பும் அவனிடம் குடிகொண்டிருந்தன. கதைகளுக்கு அவ்வளவு இடம் கொடுக்காது, காரியங்களில் மட்டும் கண்ணான ஒரு குணாம்சமும், எதனையும் துருவித்துருவி ஆராய்ந்து விடயங்களை அறிய விழையும் ஆர்வமும் அவனிலிருந்த சிறப்பான தன்மைகள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியையும், நிறைவெய்தும் வரை நிறுத்திக்கொள்ளாத உழைப்பாளி அவன். பிஞ்சுப் பருவத்திலேயே அறிவும், ஆற்றலும் அவனுக்குள் விதைபோட்டு வளரத் துவங்கியிருந்தன. அவனுக்குள் ஊறிப்புரையோடியிருந்த இத்தகைய உயர்ந்த தன்மைகள்தான் படிப்படியாகப் பரிணமித்து பிற்காலத்தில், சண்டைக் களங்களின் அதிபதியாகச் செயற்படக்கூடிய தகமைக்கும்; நிர்வாகப் பொறுப்பாளனாகப் பணியாற்றக்கூடிய தகுதிக்கும் அவனை வளர்த்துச் சென்றன என்று சொல்லலாம். இந்திய ஆக்கிரமிப்புப் பூதம் எங்கள் நிலமகள் மேனியில் கோரத் தாண்டவமாடிய ஆரம்ப நாட்களில் ஒன்று அது. புதுக்குடியிருப்பில், சிற்றூர்ப் பொறுப்பாளனாக, நரேஸ் அப்போது அரசியல் வேலை செய்துகொண்டிருந்தான். அடிக்கடி மேலால் பறந்து இலக்கற்றுச் சுட்டுக்கொண்டு திரிந்த இந்திய வல்லூறு ஒன்று, அன்றும் வந்து சுட்டுக்கொண்டுபோனது. இலக்கு வைத்துச் சுட்டதோ, இலக்கின்றித்தான் சுட்டுவிட்டுப் போனதோ தெரியவில்லை. ஆனால், அதன் ரவைச் சன்னங்கள், நரேசின் நாரியையும் உடைத்து, இடது காலையும் துளைத்துச் சென்றுவிட்டன. அருகிலேதான் வீடு. யாரோ ஓடிச்சென்று சொல்லிவிட பெற்றெடுத்த தாய் மனது ஓலமிட்டது. ஓடோடி வந்த அன்னை, ஊறிப்போகாமல் நிலத்தில் தேங்கிநின்ற குருதியில் விழுந்து, விம்மி வெடித்துக் கதறிக் கொண்டிருக்க, வைத்தியசாலைக் கட்டிலில் தனது காயத்துக்குக் கட்டுப்போடுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான் மைந்தன். காயம் மாறி வந்தவன் கண்ணிவெடிக்கு இலக்குத்தேடினான். வைக்கக்கூடிய இடத்தையும் தேடினான். வசதியான இடம் அவனது சொந்த வீட்டிற்கு அருகில்தான் இருந்தது. வேவு பார்த்து, நேரம் குறித்து, படை வண்டித் தொடரில் இத்தனையாவதுக்கு என இலக்கு வைத்து, கண்ணிவெடி புதைத்து, வயரிழுத்து, பற்றைக்குள் பதுங்கி அவன் அமத்தக் காத்திருந்தபோது காட்டிக் கொடுப்பவன் காரியம் பார்த்துவிட்டான். அந்த “நல்ல வேலையை” செய்தவன் நரேசின் வீட்டையும், குடும்பத்தையும் சேர்த்தே காட்டிக்கொடுத்தான். இந்தியர்கள் வளைத்துப் பாய்ந்தார்கள். இந்த விடுதலைப்புலி தப்பிவிட்டான். அம்மாவும் பிள்ளைகளும்கூடத் தப்பிவிட்டார்கள். ஆனால், அப்பா சிக்கிக்கொண்டு விட்டார். அவரது கையாலேயே தீ மூட்ட வைத்து, அனல் வாய்கள் அவர்களது குடிசையைத் தின்று தீர்த்துச் சாம்பாராக்கும் அக்கிரமத்தைக் கண்களாலும் காணவேண்டிய கொடுமைக்கு அப்பாவை உள்ளாக்கிய இந்தியர்கள், அவரை இழுத்துக் கொண்டு போனார்கள். அன்று கொண்டு போனவர்கள்தான் அதன் பிறகு அப்பா வரவில்லை; இன்றுவரை…. வரவேயில்லை. அப்பா இனி வரவே மாட்டார் என்பது தெரிந்தபோது, அம்மா துவண்டு போனாள். அப்பாவைப் பறிகொடுத்த சோகம் பெரும் சுமையாய் அம்மாவை அழுத்திக் கொண்டது. அப்பா உயிரிழந்ததோடு, அம்மா உயிரிருந்தும் இல்லாதது போலாகிவிட்டார். கொஞ்ச காலத்திற்கு முன்னர்தான் ஆசைத்தங்கை கனிஸ்ராவை இயற்கையிடம் இழந்து போயிருந்தது அந்தக் குடும்பம். இது அடுத்த இடி. இந்த வேதனையின் தொடர் இத்தோடு முடிந்ததா? இல்லையே! அம்மாவின் ஆத்மாவைப் பிழிந்த கொடுந்துயர் நீளத்தானே செய்தது; இதன் பிறகு அவள் பாசத்தைக் கொட்டி வளர்த்த குழந்தைகள் இருவரை அம்மா அடுத்தடுத்து இழந்த துன்பம் நிகழ்ந்தது! லூர்து நாயகத்தையும், மரிஸ்ரலாவையும் கொடிய நோய்கள் பிரித்துக் கொண்டு போனபோது அம்மாவை நடைப்பிணமாக்கிய அந்தச் சோகத்தை! அம்மாவின் மனநிலைக்கு உருக்கொடுக்க வார்த்தைகள் கிடையா. இந்தியப்படையின் இடைவிடாத நெருக்கடி; அம்மாவுக்கும் தம்பி தங்கைக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றிவிட்டு நரேஸ் தலைமறைவாகி விட்டான். இந்தியாவை எதிர்த்துப் புலிகள் நிகழ்த்திய ஆச்சரியமரமான வரலாற்றுப் போரில் அதன் பிறகு அவனது பணி அடர்ந்த காடுகளுக்குள் தொடர்ந்தது. “சூரியஒளி உட்புகாத வளங்களில் புலிகளைத் தேடுகிறோம்” என இந்தியர்கள் வர்ணித்த இடங்களிலெல்லாம், அவன் இந்தியர்களைத் தேடினான். எதிரிகளுக்காகக் காத்துக் கிடந்தான். அவர்களது அசைவுகளையெல்லாம் வேவு பார்த்தான். கேட்டுக் கேள்வியின்றிப் புகுந்தவர்களுக்குப் புலிகள் புதைகுழி தோண்டிய சண்டைகளில் அவனது துப்பாக்கி இலக்குத் தவறாமல் இயங்கியது. குமுழமுனையில் ஒரு சண்டை இதே இடத்தில் வைத்து எங்கள் வீரர்கள் மீது இந்தியர்கள் பதுங்கியிருந்து தாக்கியதற்குப் பதிலடியாக அது நடாத்தப்பட்டது. அன்று, வீழ்ந்துபோன எங்கள் தோழன் ஒருவனின் தலையை இந்தியர்கள் அறுத்தெடுத்துப் போய்விட்டார்கள். ‘அவர்களுடைய பாணியில் அவர்களுக்குப் பதிலளிப்பேன்’ என்று சொல்லிச் சென்ற நரேஸ் சொன்னதைச் செய்தான். போர் புரிவதன் நவீன வழிமுறைகள் பற்றி, பிரபாகரனின் படைகளிடம் பாடம் கற்றுக்கொண்டு, இந்திய வல்லாதிக்கத்தின் பட்டாளங்கள் வெளியேறியபின் மீண்டும் போரோசை அதிர, ‘இரண்டாவது ஈழ யுத்தம்’ ஆரம்பித்தபோது, வன்னியின் சண்டைமுனைகளில் ஒரு முன்னணிச் சண்டைக்காரனாக நரேஸ் முழங்கத்துவங்கினான். இராணுவத்தினரைத் தாக்கி முகாம்களுக்குள் முடக்கிய புலிகள், படிப்படியாக முகாம்களைத் தாக்கி அழிக்கத் துவங்கிய போது, போர் புதிய பரிமாணத்தைப் பெற்றது. கொக்காவில் படை முகாமை நிர்மூலமாக்கிய போது, ரவைகள், நரேசின் இடதுகாலில் துளையிட்டன. மாங்குளம் முகாமைத் தகர்த்தழித்த தாக்குதலின் போது, காயம் இடது கையில் பட்டது. முல்லைத்தீவு முகாம் முற்றுகைக்குள், முடக்கப்பட்டவர்களுக்கு முண்டு கொடுக்க, கடல்வழியாகத் தரையிறங்கி வந்தவர்களை எதிர்கொண்ட சண்டையில், இயந்திரத் துப்பாக்கியின் சன்னங்கள் இடுப்பை உடைத்துச் சென்றன. இப்படியிருக்கையில் 1991 இன் முடிவுப்பகுதியில் அது ஒரு துயர நாள். படையினரின் பதுங்கித் தாக்குதல் ஒன்றில் எமது முல்லைத்தீவு மாவட்டச் சிறப்பத் தளபதி மேஜர் காந்தனை நாங்கள் இழந்துபோனோம். அதன் பிறகு, அவனின் இடத்திற்கு, ஆற்றலும், ஆளுமையும் கொண்ட நரேஸ், தளபதி பால்ராஜின் பரிந்துரையின் பேரால் நியமிக்கப்பட்டான். மக்களின் குடிசைக்குள்ளேதான் அந்த விடுதலைப்புலி குடியிருந்தான். அவர்களின் மேல் அளவுகடந்த பாசத்தைப் பொழிந்து நின்று, அவர்களது இன்பங்களிலும், துன்பங்களிலும் பங்காளியானான். முகாமில் கூடியிருக்கும் போது, “அந்த ஊர்ச்சனங்கள் சரியாகக் கஸ்டப்படுதுகள்” என எங்களுக்குள் கதைத்துக்கொள்வது அவனது காதில் விழுந்ததனால் அடுத்த நாள் கையிலுள்ளவற்றை எல்லாம் கொண்டுபோய் வைத்துக் கொண்டு அந்தக் கிராமத்தில் நரேஸ் நிற்பான். மக்களது குறைகளை நிவர்த்தி செய்ய, தன்னால் இயலுமானவரைக்கும் வழிசெய்து கொடுத்தான். மக்களை அணிதிரட்டித் துணைப்படையை உருவாக்கி, போர் அரங்குகளில் மெச்சத்தக்க விதமாகச் சேவையாற்ற வைத்தான். எதிரி நகரக்கூடும் என அரவம் தெரிந்த இடங்களிலெல்லாம், அந்தத் தளபதி ஊன் உறக்கமின்றிக் கிடந்தான். ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ‘நிலை’ காட்டினான். அல்லும் பகலும் ஓய்வின்றி நின்று, அரண்களுக்கு அமைவிடம் சொன்னான். அந்த நாட்களில் லெப்ரினன்ற் கேணல் நவநீதனின் உற்ற துணையோடு அவன் செய்து முடித்த பணிகள் ஏராளமானவை. அன்றொருநாள், வற்றாப்பளை அம்மன் கோவிலில் கொடியேறி திருவிழா ஆரம்பித்திருந்தது. சிங்களப் படையிடம் அனுமதி வாங்கி, செஞ்சிலுவைச் சங்கத்திடம் அனுசரனை பெற்று, வன்னி நில மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிய அந்தப் பெருவிழா மீது, சிங்கள வெறியர்கள் பீரங்கிக் குண்டு பொழிந்து நாசப்படுத்திய கொடூரம் நடந்தது. செய்தியறிந்தபோது நரேஸ் கொதித்தான். அந்தத் துயரம் அவனது இதயத்தில் அம்புகளாய்த் தைத்தது. “பதிலடி கொடுத்தே தீருவேன்” அந்த மணித்துளியிலேயே சொல்லிவைத்தான். காயமடைந்தவர்களுக்கு உதவவென அவன் அவன் அனுப்பி வைத்த வாகனங்கள், கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருக்க, முல்லைத்தீவு முகாமின் கரையோரக் காவல் வியூகத்தை வேவுபார்க்க ஆட்களை ஒழுங்கு செய்துகொண்டிருந்தான் அந்தத் தளபதி. இருள் விலகாத ஒரு அதிகாலையில் அந்தப் பதிலடித் தாக்குதல் நடந்தது. முன்னணி வீரர்களுள் ஒருவனாக நரேஸ் களத்திலிறங்கினான். பகைவனுக்கு அடி பிடரியில் விழுந்த, அதிசயமான தாக்குதல் அது. எப்படி அது சாத்தியமானது என்பதை, இன்றுவரை எதிரியால் ஊகிக்க முடியவில்லை. 25 சிங்களப் படையாட்களைக் கொன்று, ‘பிப்ரிகலிப’ரோடு ஆயுதங்களையும் எடுத்து வந்த அந்தத் தாக்குதலில் இழப்பேதுமில்லைப் புலிகளுக்கு. ‘புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் சிங்களப் படை அகலக்கால் வைத்தால், அது மிக ஆபத்தாகவே முடியும் என்பதையே இத்தாக்குதல் உணர்த்துகிறது” என்று சொன்னது பி.பி.சி. முல்லைத்தீவு பழைய இராணுவ முகாமுக்கு அருகிலிருந்த மினி முகாமைத் தாக்கி, 9 படையினரின் உடல்களையும், ஆயுதங்களையும் எடுத்து வந்த சண்டை, கடற்கரையோர ரோந்து அணியொன்றினைத் தாக்கி 6 படையினரைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றிய சண்டை. முல்லைத்தீவிலிருந்து அலம்பில் நோக்கி நகர்ந்த படையினரை எதிர்கொண்டு, ஓய்வு உறக்கமின்றி பதினொரு நாட்கள் மோதிய தொடர்ச் சண்டை என, அந்த வீரனின் சாதனை வரிசை நீளமானது. இப்போது, கிளிநொச்சிக் கோட்டச் சிறப்புத் தளபதியாகப் பணி. எவருக்குத் தெரியும் இதுதான் நாங்கள் அவனோடு வாழப்போகும் கடைசி வருடம் என்று? அந்த மக்களின் உயர்வுக்காக, அந்தப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்காக அவனது நாட்கள் உரமாகின. ஏற்கெனவே பட்ட வெடிகளினால் இயற்கை அமைப்பு மாறிப் போன இடது காலுடன், ஆனையிறவுப் படைத்தளத்தின் தென்பகுதி அரண்களைச் சுற்றிச் சுற்றி நடந்து தாக்குதலுக்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த பொழுதுகளிலும் – சமூக மேம்பாட்டுப் பணிகளில் நேரமொதுக்கி ஈடுபட்டான். துவங்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்குத் தடங்கல்கள் வந்தபோது, நீக்கி நிவர்த்தி செய்தான். உதவிகேட்டு வந்தவர்கள் கைநீட்டி, நின்றபோது, கைகொடுத்தான். “செய்து தருவேன்” எனக் கொடுத்த வாக்குறுதிகளை, தலைமேல் வைத்து செய்து முடித்தான். ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும், அந்தத் தளபதி, மக்களின் குறை துடைக்க நடந்தான். பாடசாலைக்குச் செல்லாத பள்ளிச் சிறுவர்களுக்கு, படிப்பின் முக்கியத்துவத்தைப் பரிவோடு எடுத்துரைத்தான். குப்பையாகத் திரிந்த பையன்களைக் கூப்பிட்டு அணைத்து, துப்புரவைப்பற்றிச் சொல்லிக் கொடுத்தான். நகம்வெட்டி, தலைக்கு எண்ணை தேய்த்து, சுத்தமாய் இருக்கச் சொல்லி அனுப்பி வைத்தான். காஞ்சிபுரம் கிராமத்தில், இராணுவத்தின் மிதிவெடியில் காலை இழந்த ஒரு ஏழைச் சிறுவன், பள்ளிக்கூடம் செல்லாமல் முடங்கிக் கிடக்கும் நிலை அறிந்த போது, நரேஸ் துடித்துப் போனான். செயற்கைக்கால் செய்து அனுப்பி வைத்துவிட்டு, பொருத்திக்கொண்டு பையன் படிக்கப்போவதை, மகிழ்வோடு பார்த்துச் சிரித்து நின்றது அந்த உள்ளம். நாயகன்! தமிழல்லாத பெயர்களை மாற்றச் சொன்ன போது, வன்னி மாநிலத்தின் அந்த நாயகனுக்கு, ஆசையோடு நாங்கள் இட்ட பெயர் அதுதான். எவ்வளவு அற்புதமாக அந்தப் பெயர் அவனுக்குப் பொருந்தியிருந்தது. தாய்பிள்ளை ஆகி இருந்து எங்களை நல்வழிப்படுத்தினானே, தவறிழைக்கும் போதெல்லாம் சின்னக் குழந்தைக்குப்போல பாசத்தைக் கொட்டியல்வலா சொல்லித் திருத்தினான்… எங்கே போய்விட்டான்? காலையிலிருந்து இருளும்வரை, உணவு உடையிலிருந்து உறங்கும் வரை எங்கள் ஒவ்வொரு அசைவுகளிலும் கண்ணுக்கு இமையாக இருந்தானே…. ஏன் இப்படித் திடீரென இல்லாமல் போனான்? தலைவனின் சிந்தனைக்கெல்லாம் செயல் வடிவம் கொடுத்து வென்று, தளபதி தீபனின் தோளுக்குத் தோள் கொடுத்து நின்று, வன்னி மண்ணுக்குப் பெயரையும் புகழையும், பெருமையையும் சேர்த்துத் தந்தானே…. இனி வரவேமாட்டானா? கறுத்த மேனி, கவர்ந்திழுக்கும் வசீகரம், வட்ட முகத்தில் பளிச்சிடும் சிரிப்பு. உருளும் விழிகளால் கதைபேசி, எங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட அந்த நாயகனை, இனி நாங்கள் பார்க்கவே முடியாதா? அந்த நாள் 28.08.1993. நம்ப முடியாமலல்லவா இருந்தது!……… இடியென மோதி, எங்கள் நெஞ்சங்களைப் பிளந்து சென்ற அந்தச் செய்தி பொய்யாகிப் போகாதா என்று நாங்கள் ஏங்கினோமே. கிளாலிக்கு எதிரி படையெடுக்கப் போகிறானாம் என்றபோது, விழி சிவந்தல்லவா நின்றான்! “எங்கள் மக்கள் பாதை வழியே எதிரி வந்து தடுத்து நிற்பதா?” என்று பொங்கினானே. போருக்குப் புறப்படும்போது கூட, “வென்றுவருவேன்” என்று தானே சொல்லிவிட்டுச் சென்றான்!…….. வெற்றியைத் தந்துவிட்டு வராமலே பொய்விட்டானே…… யாழ். குடாநாட்டின் உயிரிற்கு உயிர் கொடுத்த, யாழ்ப்பாண மக்களின் வாழ்வுக்கு வாழ்வளித்த புலோப்பளைச் சமரில், வன்னி நிலத்தின் அந்தப் போர்த் தளபதி, எங்கள் நரேஸ் வீழ்ந்து போனான்! எதிரி ஏவிவிட்ட பீரங்கிக் குண்டொன்று எங்களிடமிருந்து அவனைப் பிரித்துக் கொள்ளும் அந்தக் கணப்பொழுதை ‘ஒளிவீச்சு’ எங்களுக்குக் காட்டியது. நெஞ்சு தவிக்க நாங்கள் பார்த்தோம். தென்றலாக வீசிய அந்தப் புயல் ஓய்ந்து போனது! நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, 1994). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-nares/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏகனே யா அல்லாஹ் நாயனே யா அல்லாஹ் அஹதான் அவனே யா அல்லாஹ் சமதான் அவனே யா அல்லாஹ் அழிந்த உடலை மீண்டும் உயிர் தந்தெழுப்பிடுவோனே யா அல்லாஹ் லாயிலாஹா இல்லல்லாஹ் லாயிலாஹா இல்லல்லாஹ் நாளை என்றொரு கேள்வி அமைத்து நாளை கடத்து யா அல்லாஹ் நானும் ஒருநாள் அங்கே வருவே நலமளிப்பாயே யா அல்லாஹ் வாழும் உலகில் நாளும் உன்னை மறந்தவனில்லை யா அல்லாஹ் .. சூது துன்பம் சூழ்ந்த போதும் சுகமளிப்பாயே யா அல்லாஹ்.. பச்சைகுழந்தை பாதம் பட்டதும் பரிசளித்தாய் ஜம்ஜம் தண்ணீரை பாவிகள் நாங்கள் பதருகிறோம் போக்கிடு எங்கள் கண்ணீரை இச்சைகள் யாவும் உன்னை தவிர வேறொன்றுமில்லை யா அல்லாஹ். இதயம் கனிந்து இசை போடுகிறேன் ஏற்றுக் கொள்வாயே யா அல்லாஹ். லாயிலாஹா இல்லல்லாஹ் லாயிலாஹா இல்லல்லாஹ் ( அஹதான்.... ) ஒடிந்த நெஞ்சில் அரும்பும் பிஞ்சாய் மலராய் மலர்ந்த யா அல்லாஹ் ஒவலைகள் என்போம் குல்குவல்லாஹு அஹதான் அவனே யா அல்லாஹ்.. அடியார் வடிக்கும் கண்ணீரெல்லாம் பன்னீருக்கு யா அல்லாஹ். அடியேன்தாசன் கவிதை என்றும் அலங்கரிப்பாயே யா அல்லாஹ். (அஹதான்....) அன்பினை தருவாய் யா அல்லாஹ். உழைத்திட வருவாய் யா அல்லாஹ். பண்பினை நாளும் பணிவிடை நெஞ்ஞில் பரிசளிப்பாயே யா அல்லாஹ்... லாயிலாஹா இல்லல்லாஹ் லாயிலாஹா இல்லல்லாஹ்....
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாழை பொழுதில்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ நீரஜதளநயணி மகாலக்ஷ்மி மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் மாறி மாறி வருவது உன் செயலன்றோ || எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது உன் அடி வணங்காமல் நிலைபெறுமோ உன்னருள் பார்வை இல்லாதவற்கு உலகிலே வாழ வழியேது அம்மா ||
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சந்தணமும் செவ்வாதும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாடல்: புல்லாய் பிறவி தர வேணும் பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடியவர்: சுதா ரகுநாதன் ராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி . பல்லவி : புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா புனிதமான பலகோடி பிறவி தந்தாலும் பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்…. அனுபல்லவி : புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால் கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா, கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம், புலகித முற்றிடும் பவ மத்திடுமென சரணம் : ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே மரு கணம் நான் உயர்வேன் மென் மேலே திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே, திருமகளென மலரடி பெய்துன்னை தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே, திசை திசை எங்கினும் பரவிடும் குழலிசை மயங்கி வரும் பல கோபியருடனே சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும், ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும், திளைப்பிலே வரும் களிப்பிலே, எனக்கு இணை யாரென மகிழ்வேனே ! தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா, தனித்த பெரும் பேரு அடிவேனே, எவ்வுயிர்க்கும் உள் கலக்கும், இறைவனே யமுனைத் துறைவனே எனக்கு ஒரு புல்லாய்…
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாத விவனேஸ்வறர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவை காண்போம் நெஞ்சமெல்லாம்