Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே
  2. கர்த்தார் தாமே என்னை மறவாதவரே
  3. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 பாசி பட்டினம் சிமானே வலியோரின் கோமான்னே
  4. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  5. ஈழத் தமிழர்கள் உலக அரசியலில், தமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் -இரா. மணிவண்ணன் 63 Views சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம் இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயக விழுமியங்களை எவ்வகையில் பாதிக்கும் என்ற வினாவை எழுப்புகின்றது. இலங்கையில் ஜனநாயகம் என்பதே மிகப் பெரிய சவாலான விடயம். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம். தமிழர்கள், வேறு சமூகத்தினருக்கு வேறு ஒரு சட்டம் என்ற பன்முக சட்டங்களை அங்கு நாங்கள் பார்க்கின்றோம். பொதுவாக நோக்கின், இந்த 20ஆவது சட்டத் திருத்தம் என்பது அரசியலை மீண்டும் 1978ஆம் ஆண்டிற்கே திரும்ப அழைத்துச் செல்கின்றது என்று தான் பார்க்கின்றேன். காரணம் என்னவெனில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னதான ஜே.ஆர். காலத்திற்கே ராஜபக்ஸ குடும்பத்தினரும் அதாவது பிரதமரான மகிந்த ராஜபக்ஸவும், அவரின் சகோதரரான ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவும் திரும்பவும் செல்கின்ற நிலையை அழுத்தம் திருத்தமாகப் பார்க்க முடிகின்றது. இந்த திருத்தச் சட்டத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதியின் அதிகாரம் உட்பட முழு அதிகாரத்தையும் ஒரு தலைமையின்(பிரதமரின்) கீழ் கொண்டு வருவது என்பது தான். ஜே.ஆரிற்கு இரண்டு வகையில் எதிர்நிலைகள் இருந்தன. ஒன்று தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு இருந்தது. மற்றையது சிங்களவர்கள் தரப்பில் ஜே. ஆரிற்கு மிகப் பெரிய எதிரலை ஒன்று இருந்தது உண்மை. சோசலிச தத்துவாத்தம் மற்றும் உழைப்பாளர் சங்கங்கள் போன்ற அனைத்துமே அவருக்கு எதிரான நிலையில் இருந்தன. ஒரு முதலாளித்துவ அடிப்படையிலான அதிகாரத் தன்மையை அக்காலகட்டத்தில் பார்க்க முடிந்தது. சிங்களப் பேரினவாதம் என்பது ஜே.ஆரிற்கும், ராஜபக்ஸ குடும்பத்தினருக்கும் பொருந்தும். இந்த 20ஆவது திருத்தச் சட்டமானது நீதித்துறை, காவல்துறை ஜனநாயக அரசியல் கட்டமைப்பு என்பவற்றை அதிகாரமற்ற ஒரு நிலைப்பாட்டிற்கே கொண்டு போகும். 18ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஒரு சில நிலைப்பாடுகள் 20ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைத் திரும்பப் பெறுவது, அத்துடன் பாராளுமன்ற அதிகாரம், நீதித்துறை அதிகாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் தேசிய அதிகாரத்தை பிரதமருக்கு கொடுக்கப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது ஜனநாயகத்திற்கு பாதிப்பு என்பதுடன், ஒரு குடும்ப அரசியல் அதாவது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒரு தனிநபர், ஒரு கட்சி, ஒரு குடும்பத்திடம் உள்ளதை நாங்கள் பார்க்கிறோம். கட்சி என்பதுகூட ஒரு குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. பௌத்த குருமார்கள்கூட இதை எதிர்ப்பதாக சாட்சியங்கள் உருவாகியிருக்கும் நிலையிலும், இவற்றை எல்லாம் கடந்து இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை நாங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியலில் நிலைபெறுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம். அத்துடன் அவர்களுக்குத் தேவையான நேரங்களில், அவர்களுக்குத் தேவையான சட்டத் திருத்தங்களை புதிதாக கொண்டுவரக் கூடிய வாய்ப்புகளும் இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் அதிகாரம் ஒரு உச்ச நிலையில் இருப்பதை நாங்கள் பார்க்க முடிகிறது. வெளிநாட்டு இராஜதந்திர உறவுகளைப் பார்த்தால், அவை இவர்களுடன் புதியதொரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலை இந்தியாவிற்கு சாதகம் என்பதை விட பாதகம்கூட உள்ளது. ஏனெனில், முழு அதிகாரமும் ராஜபக்ஸ குடும்பத்தினரிடம் இருக்கும் போது, அவர்கள் எந்தவொரு முடிவையும் உரியவர்களிடம் கலந்தாலோசிக்காது; அதாவது பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியினரிடம், வடக்கு கிழக்கு தமிழர்களுடன் ஆலோசிக்காது, குடும்ப ஆதிக்கத்தைப் பயன்படுத்தி எடுப்பார்கள். தமிழர்களின் அபிப்பிராயங்களை அவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயக அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களுக்காக நாங்கள் இந்தக் கருத்தை முன்வைக்க வேண்டும். அப்படியான தன்னிச்சையான ஒரு முடிவை ஜனாதிபதியின் அதிகாரத்துடன் எடுக்கும் போது, இந்தியா இவை அனைத்தையும் கவனத்தில் எடுக்கும் என நாம் நினைக்கின்றோம். அத்துடன் புவிசார் அரசியலில் இராஜதந்திர முடிவுகளை எடுக்கும் போது, அது கொழும்புத் துறைமுகமாக இருக்கட்டும், அல்லது திருகோணமலைத் துறைமுக விவகாரமாக இருக்கட்டும், புவிசார் அரசியலாக இருக்கட்டும், மேற்கத்தைய நாடுகளுடனான உறவுகளாக இருக்கட்டும் இவை அனைத்தையும் இந்தியா உன்னிப்பாகவும், கவனமாகவும் நோக்கும் என்று நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் அமெரிக்கா, மேற்குலக நாடுகள் போன்றவை இலங்கையின் போக்கிற்கு துணை நிற்குமா? அல்லது எதிர்வினை ஆற்றுமா? என்று சிந்திக்கும் பொழுது, இதில் மனித உரிமை சார்ந்த விடயங்கள்கூட நிறைய அடங்கியிருக்கின்றன. இவை என்னவெனில், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு, அரசியலில் உள்ள நீதித்துறை, அரசு அதிகாரம் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கும் பொழுது, அதாவது இலங்கை ஒற்றைப் பண்பைக் கையாளும் பொழுது -ஒரே குடும்பம், ஒற்றைத் தலைமை, ஒற்றை அரசியல் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொழுது – ஒரு சர்வாதிகாரம் தான் இலங்கையில் ஓங்கும் என்பதை சர்வதேசம் உணரும். அதை இந்தியாவும் உணரும் என நான் நம்புகின்றேன். இந்த நிலையிலிருந்து அடிப்படையான மனித உரிமைகளை எடுத்துரைப்பதற்கும், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கையாள்வதற்கும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இதைக் கவனத்தில் கொள்வதற்கான முக்கிய காரணமும் இருக்கின்றது. தற்போது இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்பில் இருக்கின்ற, அவர்களுக்கு எதிரான தீர்மானங்களில், தீர்ப்பாயங்கள், விசாரணைகளில் தேக்க நிலை இருக்கும் போது அமெரிக்க, மற்றும் மேற்குலக நாடுகள் இந்த தேக்க நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்றும் நாம் நம்புகின்றோம். சிங்களப் பேரினவாதம், குடும்ப அரசியல் இவை அனைத்தும் தமிழ் மக்களின் தேசிய உரிமையை முற்றாக நசுக்கி விடும் என்பதுடன், இதற்கான எதிரலை தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் என்றும் நாம் அவதானிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம், தனிநபர் அரசு அதிகாரம், ஒற்றை அரசியல் பண்பு இவை அனைத்தும் தமிழ் மக்களை ஒரு புதிய அரசியல் களத்தினை உருவாக்கவும், மற்றும் எழுச்சிகரமான அரசியல் தளத்தை உருவாக்குவதற்கும் வாய்ப்பாக உள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். எல்லாவிதமான சோதனைகளான காலங்களும் நமது சமூகத்தை ஒருங்கிணைக்கின்றன. இந்த 20ஆவது திருத்தச் சட்டம், இலங்கை அரசியலில் சிங்கள பேரினவாதத்திற்கு சாதகமாக இருந்தாலும், சிங்கள மக்களிடையேயும் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றதை நாங்கள் பார்க்கின்றோம். இந்தச் சட்டத் திருத்தம் இருந்தாலும், இல்லா விட்டாலும் தமிழர்களின் நிலைகளை பார்த்தால். தமிழ் மக்களுக்கு உள்ள உரிமை, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள், அரசியல் சூழ்நிலைகளில் இன்றைய நிலையில் 20ஆவது சட்டத் திருத்தத்தின் பின் தமிழர்களுக்கு எவ்வாறான ஒரு நிலைப்பாடு இருக்கின்றது என்பதை நோக்குவதுடன், அரசியலில் ஒரு புதிய களத்தினையும் தளத்தினையும், வாய்ப்புக்களையும் உருவாக்க சிந்திக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தாகும். 20ஆவது சட்டத் திருத்தம் இலங்கை அரசியலில் ஒரு புதிய மாற்றமாக இருக்கும் என நான் பார்க்கவில்லை. ஜே.ஆர். காலத்தில் 1978இல் கொண்டுவரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் அடங்கிய அரசியலை மகிந்த குடும்பத்தினர் மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர், ஆனால் இப்போது மிகவும் ஆழமான சிங்களப் பேரினவாதம் ஒரு உச்ச நிலையில் உள்ளது. தனி ஒரு மனிதனுக்குரிய – ஜனாதிபதிக்கு உரிய – அதிகாரம், அனைத்து அரசியல் அமைப்புகளின் அதிகாரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு சர்வாதிகாரப் போக்கான அரசியலில் இலங்கை சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழர்கள் உலக அரசியலிலும், உலக அரசியல் மேடைகளிலும் தமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான கருவிகளைத் தேட வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற கருத்தினைத் தான் முன்வைக்க விரும்புகின்றேன்... https://www.ilakku.org/ஈழத்-தமிழர்கள்-உலக-அரசிய/
  6. ஐயப்பமாரே எம் தெய்வங்களே
  7. பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் பரம குயவனே என்னை வனையுமே உம் சித்தம் போல் என்னை வனையுமே (2) உமக்காக என்னை வனையுமே களிமண்ணான என்னை வனைந்திடுமே (2) உம்கரத்தாலே மண்ணை பிசைந்து மனிதனை உருவாக்கினீர் எந்தனையும் தொட்டு -உம் சாயலாக வனையும் உம்மைப்போல மாற்றிடுமே –என்னை (2) உமக்குகந்ததாய் உடைத்து என்னை உம்முடைமை ஆக்கிடுமே விருப்பம்போல என்னை திருத்தும் உந்தன் கரத்தால் அருமையாக வனைந்திடுமே - உமக்கு உமது சித்தத்தின் மையத்திலென்னை வைத்து என்றும் வழிநடத்திடும் உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன் முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  10. உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே
  11. லெப். கேணல் ஜீவன் டிசம்பர் 6, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து ஜீவனுள்ள நினைவுகள்… “மட்டக்களப்பு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி” தளபதி லெப். கேணல் ஜீவன். கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை. தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்தது, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம் மாறிவைத்தவர்களைக் காலம் மட்டுமல்ல காடுகூட கைகழுவி விடும். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு ரோட்டிற்குக் குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன்தான் வழிநடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்த்ததும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும். தவறு செய்து தண்டனை பெற்றதும். உயிரைப் பணயம் வைத்து உறுதியை நிலை நாட்டியதும் எல்லாமே இந்தக் கொழும்பு ரோட்டில் தான். அதன் இருமருங்கிலும் நிற்கும் மரங்கள் வயல்வரம்புகள், மின்கோபுரங்கள், மண்மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுள் அடக்கம். அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக்கோடு மீண்டும் நகர ஆரம்பித்தது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்துகொண்டிருக்கிறான். “நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் சிப்பாயின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதேபோல எனக்குரிய ரவையையும் ஒரு சிப்பாய் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது” சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வது வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டில் மையிருளிலே ஈழயுத்தத்தின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த சிப்பாய் ஒருவனின் ஆரம்ப ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை. இது ஜீவனின் வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாகவிட்டு பின்னே செல்லும்போது உண்டாகும் சங்கடம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச்செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர சம்பவம் ஒரு சிறந்த உதாரணம். சிங்கபுர விடுதிப்பகுதி சிப்பாய்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரே இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம்பெற்றது. அதிலே ஜீவன் களத்தளபதி. இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக்கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச்சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் தொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் ஆரம்பித்தது. எதிரியின் கவச வண்டியை நோக்கி RPG கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவல் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் இயந்திர உறுமலும் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகியபோது பவலின் மிகச் சமீபத்தில் ஜீவன் T55 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாகத் தும்மியபடி பவல் பின்வாங்கி ஓடுவதையும் காணக்கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்தப்பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். எங்கும் செல்வோம் என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் எதிலும் வெல்வோம் என்று சூழ்கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலேயே அன்றி வேறு வழிகளில் அல்ல. ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்ற போது, ஆர்ப்பாட்டம் இன்றி தனிமையிலிருந்து கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றிக் கேட்டு வந்ததையும் அறியாத சிலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடைபாவனைகளில்கூட ஜீவன் எளிமையானவன். போராளிகளுடன் சேர்ந்து பங்கர் வெட்டிக்கொண்டிருந்த ஜீவன் சற்றுக்களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத ஒரு புதிய போராளி தொடர்ந்து வேலை செய்யும்படி ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவெளி வரை ஜீவன் மௌனமாக பங்கர் வெட்டியதும் மங்கிப்போக முடியாத மனப்பதிவுகள். வன்னியிலே நிகழ்ந்த பல மறிப்புச்சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் “ஓயாத அலைகள் 2” நடவடிக்கையிலும் முக்கிய பங்குகளை வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்டத்தின் இணைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் ஏறத்தாழ பதினைற்தாண்டு கால வெடிப்புகையையும் சமர்ப்புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற்தடவையாக ஈழைநோயால் பாதிக்கப்பட்டபின் நிகழ்கிறது இச்சம்பவம். இந்த எளிமை கலந்த அர்ப்பண உழைப்புக்களாலேயே பெருவெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 1987இன் ஆரம்பத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90 இன் பிற்பகுதியிலே ஒரு தனிச்சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழிநடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது. எதிரியின் மீது தாக்குதல், ஆயுதம் அபகரிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம் அத்தாக்குதல்களின் தன்மைகளை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கின்றன என்று பேசுகின்ற அளவிற்கு சிறுதாக்குதல்களில் தனிமுத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு. மூன்றாம் ஈழயுத்த ஆரம்பத்திற்கும் 1997இன் ஆரம்பத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரைப் பிரதேச கட்டளை அதிகாரியாக இருந்த போதே பலசிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக்கூடிய பெரிய அனுகூலங்கள் அவனால் நிரூபிக்கப்பட்டன. கதிரவெளி வரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து, காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர்பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரைப் பிரதான வீதியோரமாக (திருமலை வீதி) மாவீரர் துயிலுமில்லம் நிறுவப்பட்டது. அங்கே நிகழ்ந்த போர்ச்சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப்பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு 05.03.1999) மாவடி முன்மாரிப் பகுதியில் விசேட அதிரடிப்படையுடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச விசாலகன் படையணி சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளிலே நிகழ்ந்த நான்கு பெரும் தாக்குதல்களிலும், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதியில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340 ற்கும் மேற்பட்ட படைக்கலன்களை கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.” சாதனைகள் பொதிந்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாச்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான். “ஜீவன் உண்ட குப்பியையும் தகட்டையும் வாங்கிப்போட்டு தண்டித்து சமைக்க விடும்படி சிறப்புத் தளபதி சொல்லியிருக்கிறார்” இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமை கருதி, தவிர்க்க வேண்டிய பாதையொன்றினூடாக வழிநடத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தயபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது “சரி நிறைவேற்றுங்கள்” அதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் போராளியைப்போல புளுகுணாவை முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற்சுருங்கி முட்கள் முழங்காலிலும் முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன. தன்னைத் தோள்பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன். முன்நடந்து வீரம்காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தோய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளரின் மனம் விம்முகின்றது. “ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்துபோய் சற்று ஓய்வு எடுக்கலாம்” புலிக்குறோலில் போய்க்கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகிறது. “எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்” இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சிப் பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து விழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான். “பயிற்சிப்புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய உத்தரவு நீங்கள் எழும்பலாம்” இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்கவைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கின்றார்கள் ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள். ஜீவனுடைய எளிமையையும் அர்ப்பணிப்பையும் போலவே குறும்புகளையும் குறைவான பக்கங்களையும்கூட தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பதைப் போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாதது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவரின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளியவைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைத்தன. ரோட்டிலே ஜீவன் கம்பீரமாகக் கால்பாவிநிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு பாரம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள்தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாகச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்றுவைத்ததற்கான பிரதான காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது. ஜீவனின் நினைவுகளை மீட்டும்போது, தனக்குக் கீழுள்ள படைத்தலைவர்களின் உணவுத்தட்டுக்களைக்கூட கழுவிவைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையோ, அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும்போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா, எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்தபோது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற கம்பீரமனமே காரணம். பிறப்பினால் எவருக்கும் பெருமை வருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நட்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிரவைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே சோகம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலைகுனிந்து நின்றது. ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் என்றோ ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத சுதந்திர திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருத்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் என்றுமே அது ஒரு செஞ்சாலை. நினைவுப்பகிர்வு: இராசமைந்தன் நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (தை, மாசி 2005). https://thesakkatru.com/batticaloa-ampara-district-deputy-commander-lieutenant-colonel-jeevan/
  12. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன் 🙏 சிந்திக்கும் ஆற்றலை பெற்றவரே
  13. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.