Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. சாதத்திற்கு அருமையான மலபார் முட்டை கறி அ-அ+ தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மலபார் முட்டை கறி. இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை - 6, வெங்காயம் - 2, இஞ்சி - சிறிய துண்டு, தக்காளி - 2, ப. மிளகாய் - 4, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, கரம் மசாலா - அரை தேக்கரண்டி, முதல் தேங்காய் பால் - ஒரு கப், இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப், எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு செய்முறை : முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும். சுவையான மலபார் முட்டை கறி தயார். https://www.maalaimalar.com/
  2. உடலுக்கு வலிமை தரும் சிக்கன் எலும்பு ரசம் அ-அ+ உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி சிக்கன் எலும்பு ரசம் வைத்து குடிப்பது உடலுக்கு வலிமை தரும். இன்று இந்த ரசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் எலும்புடன் - 1/4 கிலோ (தோல் நீக்கியது) மஞ்சள் பொடி - 1 ஸ்பூன் தனி மிளகாய் பொடி - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு தக்காளி - 1 வெங்காயம் - 1 எண்ணெய் - 2 ஸ்பூன் தண்ணீர் - 4 டம்ளர் கொத்தமல்லி தழை - சிறிதளவு ரசப் பொடி செய்ய : மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 2 ஸ்பூன் பூண்டு - 2 தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் - 1, கறிவேப்பிலை செய்முறை : சிக்கன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். புளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும். ரசப்பொடி செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் சிக்கன் எலும்பை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், தக்காளி, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு போட்டு வேக வைக்கவும். இருப்புச்சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய்1, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் உள்ள சிக்கன் எலும்பு சாற்றை ஊற்றி, அதனுடம் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி, நுணுக்கி வைத்திருக்கும் ரசப்பொடியை அதில் போட்டு, ரசம் நுரைத்துக்கொண்டு வரும் பொழுது கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிட வேண்டும். இந்த ரசத்தை சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது அப்படியேயும் குடிக்கலாம். https://www.maalaimalar.com
  3. சூப்பரான ஸ்நாக்ஸ் இறால் சீஸ் ரோல் அ-அ+ குழந்தைகளுக்கு சீஸ், இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு - தேவைக்கு. இறால் - 200 கிராம், சீஸ் - 100 கிராம், வெங்காயம் - 2, பெங்களூர் தக்காளி - 1, குடைமிளகாய் - 1/4 கப், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும். சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி. https://www.maalaimalar.com
  4. செம்ம டேஸ்டி பூண்டு சட்னி தேவையான பொருள்கள்: தக்காளி-10 உரித்தப் பூண்டு-100 கிராம் காய்ந்த மிளகாய்-2 உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு - 1 தேக்கரண்டி வெள்ளை உளுந்து - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது செய்முறை: முதலில் மிக்ஸியில் பூண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். பின்னர், அரைத்த விழுதை ஊற்றி சுமார் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். சுவையான பூண்டு சட்னி ரெடி. http://www.dinamani.com
  5. சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள் சோயா சங்ஸ் கிரேவி தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 , கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் பாதாம் - 6. செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கிச் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து, குக்கரை மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா ஸ்டப்ஃடு சப்பாத்தி தேவை- மேல் மாவு செய்ய: கோதுமை மாவு - ஒரு கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. ஸ்டஃபிங் செய்ய: சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 15, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் எண்ணெய் உப்பு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசி வடியவிட்டு, மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த சோயா, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிசைந்த கோதுமை மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்க்கவும். நடுவே சிறிதளவு சோயா கலவையை வைத்துப் பரப்பி, மூடி மீண்டும் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சோயா பீன்ஸ் பருப்பு உசிலி தேவை: பொடியாக நறுக்கிய பீன்ஸ் - ஒரு கப், காய்ந்த சோயா பயறு, துவரம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: காய்ந்த சோயாவுடன் துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும். பீன்ஸையும், அரைத்த பருப்புக் கலவையையும் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த பருப்பை ஆறியதும் உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உதிர்த்த பருப்பு, வேகவைத்த பீன்ஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். சோயா அடை தேவை: பச்சரிசி, இட்லி அரிசி - தலா அரை கப், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா கால் கப், பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சோயா பெசரட் தேவை: காய்ந்த சோயா, முளைகட்டிய பச்சைப் பயறு - தலா அரை கப், பச்சரிசி - கால் கப், பச்சை மிளகாய் - 3, தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, கேரட் துருவல் - தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோயாவை 4 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சோயாவுடன் அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிதளவு கேரட் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சோயா பருப்பு வடை தேவை: காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோயாவுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து தண்ணீரை வடியவிடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்த மாவுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சோயா தால் தேவை: சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப், சீரகம், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். குக்கரில் சோயா உருண்டைகள், முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, சீரகம், மிளகுத்தூள், பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த சோயா கலவை, உப்பு சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா கட்லெட் தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், பிரெட் தூள் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். அதனுடன் சோயா கலவையைச் சேர்த்துச் சுருள வதக்கி இறக்கவும். ஆறியவுடன் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, விருப்பமான வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு கட்லெட்டுகளை வைத்து, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சோயா கார சப்பாத்தி தேவை: கோதுமை மாவு, சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்), அரைத்த விழுது - தலா அரை கப் , மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் அரைத்த சோயா விழுது, மிளகாய்த்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். அரை மணி நேரம் கழித்து, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டு, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சில்லி சோயா தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தக்காளி, குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துத் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். இதனுடன் தக்காளி விழுது, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, பிசிறிய சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா பெப்பர் ஃப்ரை தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - ஒன்று தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் முந்திரி - 6. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, நறுக்கிய சோயா உருண்டைகள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். சோயா லட்டு தேவை: சோயா மாவு - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், குளுக்கோஸ் பவுடர், பால் பவுடர் - தலா கால் கப், நெய் - தேவையான அளவு, முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்தெடுக்கவும். சோயா மாவுடன் வெல்லத்தூள், குளுக்கோஸ் பவுடர், பால் பவுடர், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கலக்கவும். நெய்யை உருக்கி மாவுக் கலவையில் சேர்த்துக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். சோயா ஸ்டஃப்டு பூரி தேவை: மேல் மாவு செய்ய: கோதுமை மாவு - ஒரு கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. ஸ்டஃபிங் செய்ய: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 15, உருளைக் கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி விழுது - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கு, சோயா உருண்டைகள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இதுவே ஸ்டஃபிங். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாகத் தேய்க்கவும். அதன் நடுவே சிறிதளவு சோயா கலவையைப் பரப்பி, மூடி மீண்டும் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, திரட்டிய பூரிகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சோயா பர்ஃபி தேவை: சோயா மாவு - ஒரு கப், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி - 10, வறுத்த பாசிப்பருப்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் சோயா மாவைச் சேர்த்து வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி நன்கு கரைந்ததும் வடிகட்டவும். அதனுடன் வறுத்த மாவு சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும். கலவைப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது பாசிப்பருப்பு மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து நெய் தடவிய தட்டில் கொட்டி, சற்று ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும். சோயா பாயசம் தேவை: சோயா மாவு - அரை கப் , காய்ச்சி ஆறவைத்த பால் - 3 கப் , பொடித்த வெல்லம் - ஒரு கப் , நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி - 6, திராட்சை - 6, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு அதே பாத்திரத்தில் சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதனுடன் 2 கப் பாலை ஊற்றி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவிடவும். மாவு வெந்ததும் வெல்லக் கரைசல், மீதமுள்ள பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும். சோயா பாலக் கிரேவி தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, பாலக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பூண்டு - 10 பல், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, ஜாதிபத்திரி - சிறிய துண்டு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்விட்டுச் சூடாக்கி, கொதிக்கும்போது பாலக்கீரையைச் சேர்த்து மூடி இறக்கவும். ஆறியதும் இலைகளை மட்டும் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா உருண்டைகள், அரைத்த பாலக்கீரை விழுது, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். சோயா குணுக்கு தேவை: இட்லி மாவு - ஒரு கப், சோயா சங்ஸ் (பவுடராக அரைத்தது) - ஒரு கப், பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த சோயா பொடி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவைக் கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும். சோயா அவியல் தேவை: உரித்த சோயா பீன்ஸ் - அரை கப், கேரட், வாழைக்காய், முருங்கைக்காய் - தலா ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்), புளிக்காத தயிர் - ஒரு கப், ஓமம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் , கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் பச்சை மிளகாய் - 2 சீரகம் - ஒரு டீஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் சோயா பீன்ஸ் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் கேரட் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கழித்து, முருங்கைக்காய் சேர்க்கவும். பிறகு 2 நிமிடங்கள் கழித்து வாழைக்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது, தயிர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே ஓமம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும். தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பரிமாறலாம். சோயா பயறு பூசணி விதை இட்லி மிளகாய்ப் பொடி தேவை: காய்ந்த சோயா பயறு - அரை கப், பூசணி விதை - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 15, உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மிளகாயை வறுத்தெடுக்கவும். பிறகு சோயா, பூசணி விதை, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் வறுத்த பொருள்களை மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து பவுடராக அரைத்தெடுக்கவும். சோயா வடகறி தேவை: காய்ந்த சோயா பயறு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4 , சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சோயா உருண்டைகள் - 20 , சீரகம் - ஒரு டீஸ்பூன், குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன் முந்திரி - 10 தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு. செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். சோயா பயறுடன் கடலைப்பருப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்க வும். அதனுடன் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் சோம்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், அரைத்த விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் வடைத் துண்டுகள், சோயா உருண்டைகள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா பீன்ஸ் கூட்டு தேவை: சோயா பீன்ஸ் (உரித்தது) - ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 2, சீரகம், பூசணி விதை - தலா ஒரு டீஸ்பூன். தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் சோயா பீன்ஸுடன் 2 கப் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து, சோயாவுடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கூட்டுடன் கலந்து பரிமாறவும். சோயா உருண்டை புலாவ் தேவை: பாசுமதி அரிசி - ஒரு கப் சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, ஜாதிபத்திரி - சிறிய துண்டு, பிரியாணி இலை - ஒன்று, வெங்காயம், தக்காளி, கேரட் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் கேரட், பச்சைப் பட்டாணி, சோயா உருண்டைகள், அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா இட்லி தேவை: இட்லி அரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த சோயா - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியைத் தனியாகவும், உளுத்தம்பருப்பு, சோயா, வெந்தயம் ஆகியவற்றைத் தனியாகவும் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித்தனியாக அரைத்தெடுக்கவும். மாவுகளை ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டுக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். மறுநாள் மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சோயா அல்வா தேவை: சோயா மாவு – ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன் , முந்திரி – 6. செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். அடிகனமான வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். பிறகு சோயா மாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். மேலே வறுத்த முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும். சோயா ஓட்ஸ் பான் கேக் தேவை: சோயா மாவு, ஓட்ஸ் மாவு - தலா அரை கப், கோதுமை மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - முக்கால் கப், கனிந்த வாழைப்பழம் - ஒன்று, முந்திரி -10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன் , தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - தேவையான அளவு. செய்முறை: வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் சோயா மாவுடன், ஓட்ஸ் மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், முந்திரி, ஏலக்காய்த்தூள், பால் பவுடர், தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் சேர்த்து, கெட்டியாகக் கரைக்கவும் (தோசை மாவு பதத்தைவிடக் கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்). தோசைக்கல்லைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைக் கரண்டியில் எடுத்துச் சற்று கனமாக ஊற்றி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சோயா சன்னா மசாலா தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, வெள்ளைக் கொண்டைக்கடலை - ஒரு கப், தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புளிக்கரைசல் - அரை கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, ஜாதிபத்திரி - சிறிய துண்டு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு சோயா உருண்டைகள், வேகவைத்த கொண்டைக்கடலை, உப்பு, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும் (நீர்க்க இருந்தால் சிறிதளவு கொண்டைக்கடலையை மிக்ஸியில் அரைத்தும் சேர்க்கலாம்). மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா வெஜ் குருமா தேவை: சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) - 20, கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்), பீன்ஸ் – 10, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, ஜாதிபத்திரி - சிறிய துண்டு , பிரியாணி இலை - ஒன்று. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப் முந்திரி – 5 பச்சை மிளகாய் – 2 பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா மட்டர் கிரேவி தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) 20, பச்சைப் பட்டாணி - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பச்சைப் பட்டாணியை வேகவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சோயா உருண்டைகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, அதே எண்ணெயில் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மேலும் வதக்கவும். பிறகு சோயா உருண்டைகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். சோயா பக்கோடா தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20, கடலை மாவு - அரை கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) , பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். பிறகு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி மாவைப் பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும். சோயா புளிக்குழம்பு தேவை: சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) – 20, சின்ன வெங்காயம் – 15 (தோல் உரிக்கவும்), பூண்டு – 10, கறிவேப்பிலை – சிறிதளவு, தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்), சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: வெந்தயம், மிளகு – தலா 5 கடுகு - ஒரு டீஸ்பூன் சீரகம், ஓமம் – தலா அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு வெந்தயம், மிளகு, கடுகு தாளிக்கவும். அதனுடன் சீரகம், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, புளிக்கரைசல், சோயா உருண்டைகள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்த..! `பசி எடுக்கும்போது வயிற்றை நிரப்பத் தேவைப்படுவது உணவு’ என்கிற எளிய எண்ணத்தை மீறி, உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன, அவை நம் உடல் இயக்கத்துக்கு எவ்வாறு பயன்படுகின்றன, எத்தகைய உணவுகள் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் போன்ற கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதில்களின் அடிப்படையில் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் போக்கு, சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உடல் இயக்கத்துக்கு இன்றியமையாதது புரதம். இது இறைச்சியில் அதிகம் உள்ளது. சைவ உணவுகளைப் பொறுத்தவரை சோயாவில்தான் புரதம் மிக அதிக அளவில் இருக்கிறது. அத்துடன் கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உள்படப் பல்வேறு சத்துகளும் உள்ளன. இத்தகைய தனிச்சிறப்புமிக்க சோயாவில் இட்லி, சப்பாத்தி, கிரேவி, வடை, பாயசம், லட்டு, புலாவ், பான்கேக் என விதவிதமான ரெசிப்பிகளை இங்கே வழங்கும் மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் பிருந்தா இரமணி, ``அளப்பரிய பெருமைகள் கொண்ட சோயாவில், சுவையான சத்துமிக்க ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறி, குடும்பத்தினரை குஷியில் ஆழ்த்துங்கள்’’ என்று அன்புடனும், அக்கறையுடனும் கூறுகிறார். https://www.vikatan.com https://www.vikatan.com
  6. ஈழப்பிரியன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. சூப்பரான ஸ்நாக்ஸ் பாசிப்பருப்பு பக்கோடா அ-அ+ பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 1/2 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - சிறிய துண்டு தனியா - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை : பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார். https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/06/25150739/1172516/moong-dal-pakora.vpf
  8. ஜீரண சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம் அ-அ+ காய்ச்சல், சளி உள்ளவர்கள் புதினா ரசம் செய்து குடித்தால் உடலுக்கு தொம்பு கிடைக்கும். இன்று இந்த ரசத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புதினா - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகு, நெய் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : வாணலியில் நெய் விட்டு புதினாவை லேசாக வதக்கவும். மிளகு, தனியா, சீரகம், துவரம்பருப்பை ஊற வைக்கவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். ஊற வைத்த பொருட்களுடன் புதினாவை சேர்த்து நைஸாக அரைக்கவும். புளித் தண்ணீர் கொதித்ததும், அரைத்த புதினா கலவையை சேர்த்து, ஒரு கொதி வந்ததும், தண்ணீர், உப்பு சேர்த்து, நுரைத்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். https://www.maalaimalar.com
  9. சப்பாத்திக்கு அருமையான முட்டை உருளைக்கிழங்கு கறி அ-அ+ சப்பாத்தி, பூரி, சாதம், புலாவ், நாண், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை உருளைக்கிழங்கு கறி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருள்கள் முட்டை - 4 உருளைக்கிழங்கு - 1 தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் துருவல் - 100 கிராம் அரைக்க இஞ்சி - 1/2 இன்ச் அளவு பூண்டு - 3 பல் கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி தாளிக்க எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி பட்டை - 1 இன்ச் அளவு கிராம்பு - 2 வெங்காயம் - 1/4 பங்கு கறிவேப்பிலை - சிறிது செய்முறை : உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும். இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித்தழையை அரைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, கொத்தமல்லித்தழை அரைத்த கலவையை போட்டு வதக்கவும். அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும். அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி. https://www.maalaimalar.com
  10. தயிர் சாதத்திற்கு அருமையான இஞ்சி - புளி ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இஞ்சி புளி ஊறுகாய். இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க : தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை : புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி சிறிது வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். சூப்பரான இஞ்சி - புளி ஊறுகாய் ரெடி. குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். https://www.maalaimalar.com
  11. ஐயங்கார் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி அனைவருக்கும் பெருமாள் கோவில் புளியோதரை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பெருமாள் கோவில் புளியோதரை / ஐயங்கார் புளியோதரை செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சாதம் - 2 கப் புளிக்காய்ச்சல்... நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு பொடி செய்வதற்கு... எண்ணெய் - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் மல்லி (தனியா) - 1/2 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் எள் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். புளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, உப்பு சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிய பின் கடைசியாக பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், சூப்பரான ஐயங்கார் புளியோதரை ரெடி!!! https://www.maalaimalar.com/
  12. சம்மர் ஸ்பெஷல்: 30 வகை ஊறுகாய் & தொக்கு ஊறுகாய்ப் பொடி தேவை: காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 25 கிராம், பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன் , கடுகு - 2 டீஸ்பூன் (விரும்பினால்). செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள், கடுகு ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறுகாய் செய்யும்போது இந்தப் பொடியில் தேவையான அளவு சேர்க்கலாம். சிறப்பு: இந்தப் பொடி மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும். மாங்காய் இஞ்சி ஊறுகாய் தேவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம் (கழுவி, தோல் சீவி, வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4 (வட்டமாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்) , மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து இறக்கி ஆறவிடவும் நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து ஊறவிடவும். ஒருநாள் கழித்துப் பயன்படுத்தலாம். நன்றாக ஊறியதும் ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். மாங்காய் இஞ்சி - மாங்காய்த் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சித் துருவல், மாங்காய்த் துருவல் - தலா ஒரு கப் (250 மில்லி கப்), நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் , கடுகு - முக்கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், மாங்காய் இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்துச் சுருள வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். தோசைக்காய் ஆவக்காய் ஊறுகாய் தேவை: விதைகள் நீக்கி நறுக்கிய தோசைக்காய்த்துண்டுகள் (மஞ்சள் வெள்ளரிக்காய்) - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: உப்புடன் மிளகாய்த்தூள், கடுகு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அகலமான பீங்கான் பவுலில் தோசைக்காய்த் துண்டுகள், அரைத்த பொடி, நல்லெண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 24 மணி நேரம் ஊறியதும் பரிமாறவும். இதைச் சாதம், சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். சிறப்பு: ஆந்திராவில் மாங்காய் கிடைக்காத சீஸனில் தோசைக்காய் வைத்து ஆவக்காய் ஊறுகாய் செய்வார்கள். இது ஆவக்காய் ஊறுகாய் போலவே இருக்கும். இந்த ஊறுகாயைச் சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம். எலுமிச்சை ஊறுகாய் தேவை: சதுரத்துண்டுகளாக நறுக்கிய எலுமிச்சைப்பழம் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - முக்கால் கப். செய்முறை: எலுமிச்சைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். பிறகு, இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மறுநாள் வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: உடனடியாக எலுமிச்சை ஊறுகாய் தேவையானால் எலுமிச்சைப்பழத் துண்டுகளைத் தண்ணீரில் வேகவைத்தும் செய்யலாம். மிளகாய்த் தூளுக்குப் பதிலாக காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்தும் சேர்க்கலாம். பச்சை மிளகு ஊறுகாய் தேவை: பச்சை மிளகு - 50 கிராம் (அரை இன்ச் துண்டுகளாக்கவும்), எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ஒன்றரை டீஸ்பூன். செய்முறை: எலுமிச்சைச் சாற்றுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் பச்சை மிளகுத்துண்டுகளைச் சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவைத்துப் பயன்படுத்தலாம். மாகாளிக்கிழங்கு ஊறுகாய் தேவை: மாகாளிக்கிழங்கு - 300 கிராம், எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), கடுகு, மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6 , கடைந்த தயிர் - 125 மில்லி (அரை கப்) , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாகாளிக்கிழங்கை மண்போக கழுவி, 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊறவைக்கவும். மறுநாள் தோல் சீவி, நடுவில் உள்ள தடிமனான வேரை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். கடுகுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரத்தில் மாகாளிக்கிழங்கு, அரைத்த பொடி, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். சிறப்பு: இது நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும். மாவடு தேவை: மாவடு - அரை கிலோ, விளக்கெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். அரைக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 20, உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாவடுவின் காம்பை நீக்கி, கழுவித் துடைக்கவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்துப் பிசிறவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். இதை மாவடுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (தேவையானால் சிறிதளவு தண்ணீரைச் சூடாக்கி ஆறவைத்துச் சேர்க்கலாம்). இதை இரண்டு நாள்கள் வெயிலில் வைக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். குறிப்பு: காம்புள்ள வடுவாக வாங்கவும். அப்போதுதான் ஊறுகாய் நன்றாக இருக்கும். ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - இரண்டரை கப், உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப், கடுகு - 2 டீஸ்பூன், வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (தேவையானால்), கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு. செய்முறை: மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊறவைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காயவைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். அதனுடன் காயவைத்த மாங்காய்த்துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும். குஜராத்தி ஸ்வீட் மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த் துருவல் - 2 கப், சர்க்கரை - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பட்டைத்தூள், லவங்கத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த் துருவலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும். (மாங்காயில் சிறிதளவு தண்ணீர் விட்டிருக்கும்). அதனுடன் சர்க்கரை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பட்டைத்தூள், லவங்கத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைக்கவும் (ஏழு நாள்கள் வெயிலில் வைக்கவும்). காலையும் மாலையும் ஊறுகாயை நன்றாகக் கிளறிவிடவும். சர்க்கரைப்பாகு இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் வெயிலில் வைப்பதை நிறுத்திவிடவும். மற்றொரு முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் வைத்து இரண்டு கம்பிப் பதம் பாகு வரும் வரை கிளறி இறக்கவும். இந்த ஊறுகாயைச் சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: பட்டைத்தூள், லவங்கத்தூள் ஆகியவற்றை விருப்பப்பட்டால் சேர்க்கலாம். ஃப்ரெஷ் மஞ்சள் ஊறுகாய் (குஜராத்தி ஹல்டி பிக்கிள்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய எலுமிச்சைப்பழம் 4 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - முக்கால் டீஸ்பூன். செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் எடுத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த ஊறுகாயை நான்கு நாள்கள் வெளியே வைத்து உபயோகிக்கலாம். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இது மாங்காய் இஞ்சி ஊறுகாய் போல இருக்கும். ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஃப்ரெஷ் மஞ்சள் - இஞ்சி ஊறுகாய் (குஜராத்) தேவை: ஃப்ரெஷ் மஞ்சள் (பசும் மஞ்சள்) - 100 கிராம் (தோல் சீவி, வட்டமான வில்லைகளாக நறுக்கவும்), தோல் சீவிய இஞ்சி - 2 இன்ச் துண்டு (வட்டமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சை - 3 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் எலுமிச்சைச்சாற்றுடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒருநாள் முழுவதும் ஊறவிடவும். மறுநாள் பயன்படுத்தலாம். பூண்டு ஊறுகாய் தேவை: தோலுரித்த பூண்டு - 250 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்), எலுமிச்சைப்பழம் - 6 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), மல்லி (தனியா), வெந்தயம், சீரகம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 25, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் தனியா, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு சிறிதளவு வதங்கியதும் அரைத்த பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து வேகவிடவும். பூண்டு முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறி வேகவிட்டு இறக்கவும். குறிப்பு: அவரவர் விருப்பத்துக்கேற்ப மிளகாயைக் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம். கடா நார்த்தங்காய் ஊறுகாய் தேவை: கழுவி, விதை நீக்கி நறுக்கிய கடா நார்த்தங்காய்த்துண்டுகள் (கிடாரங்காய்) - 3 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 12 வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் ,நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை கப். செய்முறை: கடா நார்த்தங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊறவிடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஊறவைத்த நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும். நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - 10 (கொட்டைகளை நீக்கி, நீளவாக்கில் நறுக்கவும்), சர்க்கரை - அரை கப் , குங்குமப்பூ - 2 சிட்டிகை, மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், கறுப்பு உப்பு - தலா கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் நெல்லிக்காயுடன் சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நெல்லிக்காய் பாதியளவு வெந்ததும் குங்குமப்பூ, மிளகுத்தூள், கறுப்பு உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். இதை வெளியிலேயே வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து உதிர்த்தும் சேர்க்கலாம். சிறப்பு: சப்பாத்தி, தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நெல்லிக்காய் கார ஊறுகாய் தேவை: நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்துக் கொட்டைகளை நீக்கி, சுளைகளாகத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் நெல்லிக்காய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு இறக்கி தயிர் சாதத்துடன் பரிமாறவும். ஆவக்காய் ஊறுகாய் தேவை: மாங்காய் - அரை கிலோ, கடுகு - 30 கிராம் (3 டேபிள்ஸ்பூன்), காய்ந்த மிளகாய் - 30 கிராம் (20), வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளைக் கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காயைக் கழுவி தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை எடுத்துவிடவும்). வெறும் வாணலியில் பாதியளவு வெந்தயத்தைச் சேர்த்து வறுத்து அரைத்தெடுக்கவும். காய்ந்த மிளகாய், கடுகை வெயிலில் காயவைத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். ஜாடியில் வெந்தயப்பொடி, மிளகாய் - கடுகுப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் மீதமுள்ள வெந்தயம், வெள்ளைக் கொண்டைக்கடலை, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக மாங்காய்த் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வெயிலில் மூன்று நாள்கள் வைக்கவும். தினமும் ஊறுகாயைக் கிளறிவிடவும். அப்போதுதான் மாங்காய் நன்றாக மசாலாவுடன் கலந்து ஊறும். 10 நாள்கள் ஊறிய பிறகு பயன்படுத்தலாம். பிரண்டைத் தொக்கு தேவை: இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்). இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாரத்தை இலைப்பொடி (வேப்பிலைக் கட்டி) தேவை: இளசான நாரத்தை இலை - 25 (நடு நரம்பை நீக்கவும்), காய்ந்த மிளகாய் - 15, ஓமம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - அரை டேபிள்ஸ்பூன். செய்முறை: நாரத்தை இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் அரைத்தெடுக்கவும். இந்தப் பொடியைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்துச் சேகரிக்கவும். தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். குறிப்பு: நாரத்தை இலை கிடைக்காவிட்டால், எலுமிச்சை இலையிலும் செய்யலாம். உப்பு எலுமிச்சை ஊறுகாய் தேவை: எலுமிச்சைப்பழம் - 10 (ப்ளஸ் போல நான்கு துண்டுகளாக லேசாக நறுக்கவும்; முழுவதுமாக நறுக்க வேண்டாம்), உப்பு - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: எலுமிச்சைப்பழத்துக்குள் உப்பை அடைக்கவும். இதை பாட்டில் (அ) ஜாடியில் சேகரித்து மெல்லிய துணியால் மூடி வெயிலில் வைத்து எடுக்கவும். (வீட்டின் உள்ளேயும் வைக்கலாம்). பழம் நன்றாக ஊறிவிடும். இந்த ஊறுகாய் இரண்டு வருடங்கள் வரை நன்றாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்து எலுமிச்சைத் தொக்கு செய்துகொள்ளலாம். நன்றாக ஊறியதும் எலுமிச்சையில் இருந்து உப்பு நீர் கசிந்து மிருதுவாக இருக்கும். குறிப்பு: இதேபோல நாரத்தங்காயிலும் செய்யலாம். நன்றாக ஊறியவுடன் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். இரண்டு வருடங்கள் நன்றாக இருக்கும். இஞ்சி - புளி ஊறுகாய் தேவை: தோல் சீவி வட்டமாக நறுக்கிய இஞ்சி - ஒரு கப், பச்சை மிளகாய் - 7 (வட்டமாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை , வெல்லம் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து வேகவைக்கவும். அதனுடன் வெல்லம், வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். குறிப்பு: தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். சிம்பிள் மாங்காய் ஊறுகாய் தேவை: கிளிமூக்கு மாங்காய் - 2 (தோலுடன் சிறிய துண்டுகளாக்கவும்) மிளகாய்த்தூள், கல் உப்பு - தலா 2 டீஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து வெயிலில் மூன்று முதல் நான்கு நாள்கள் வரை வைத்தெடுக்கவும். பிறகு, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். தேவையானால் கடுகு தாளித்துச் சேர்க்கலாம். குறிப்பு: கிளிமூக்கு மாங்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் வெளியே வைத்தால் கெட்டுவிடும். சிறப்பு: இது கேழ்வரகு கூழ், கம்பு கூழுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆரஞ்சுத்தோல் பச்சடி தேவை: ஆரஞ்சுத்தோல் - ஒரு கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) , கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன் , மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், ஆரஞ்சுத்தோல் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல் ஊற்றி நன்கு வேகவிடவும். இறுதியாக வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மாங்காய் இஞ்சித் தொக்கு தேவை: மாங்காய் இஞ்சி - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்) , எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்), மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் , மஞ்சள்தூள், வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், கடுகு - முக்கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் , உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொக்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நாரத்தங்காய் ஊறுகாய் தேவை: நாரத்தங்காய் - 3 (சதுரத்துண்டுகளாக்கி, விதைகளை நீக்கவும்), மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் , வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் , உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: ஜாடியில் நாரத்தைத்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும். தக்காளித் தொக்கு தேவை: தக்காளி - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இறுதியாக வெல்லம் சேர்த்து, கலவை சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேகரிக்கவும். செட்டிநாட்டு வெந்தய மாங்காய் தேவை: புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 15, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - 4 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: மாங்காயைத்தோல், கொட்டையுடன் சதுரத்துண்டுகளாக நறுக்கவும் (உள்ளிருக்கும் பருப்புப் பகுதியை நீக்கவும்). மிளகாய், உப்பைத் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மாங்காய்த்துண்டுகளுடன் வெந்தயப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வெயிலில் 10 முதல் 15 நாள்கள் வரை வைத்து எடுத்துப் பயன்படுத்தலாம். செட்டிநாட்டுப் பல ஊறுகாய் தேவை: பிஞ்சு வெள்ளை மிளகாய், தோலுரித்த பூண்டு, பிஞ்சு சுண்டைக்காய் - தலா 50 கிராம், எலுமிச்சைப்பழம் - 3 (சாறு பிழிந்து விதைகளை நீக்கவும்), காய்ச்சி ஆறவைத்த நீர் - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் (தேவையானால்), உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெள்ளை மிளகாய், சுண்டைக்காயின் காம்பை நீக்கி கீறிவிடவும். பீங்கான் ஜாடியில் எலுமிச்சைச்சாறு, காய்ச்சி ஆறவைத்த நீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து உப்பு கரையும் வரை கலக்கவும். அதனுடன் சுண்டைக்காய், பூண்டு, வெள்ளை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, ஜாடியின் வாய்ப்பகுதியை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் நான்கு நாள்கள் வைத்து எடுக்கவும். குறிப்பு: இதனுடன் பிஞ்சு முருங்கைக்காய், பிஞ்சு கொத்தவரங்காய் ஆகியவற்றை அரை இன்ச் அளவுக்கு நறுக்கி சேர்க்கலாம். செட்டிநாட்டு மாங்காய் ஊறுகாய் தேவை: மாங்காய்த்துண்டுகள் - 4 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன் , கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: மாங்காய்த்துண்டுகளுடன் உப்பு சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவிடவும். மூன்றாவது நாள் அதனுடன் மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்து ஊறுகாயுடன் சேர்க்கவும். ஆப்பிள் ஊறுகாய் தேவை: ஆப்பிள் - ஒன்று (விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்), மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் , மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன் , கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ஆப்பிள் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும். குறிப்பு: கிரீன் ஆப்பிள் பயன்படுத்தினால் எலுமிச்சைச்சாறு குறைவாகச் சேர்க்கவும். ஊறுகாய் இல்லாத உணவு மேஜையா? நினைக்கும்போதே நாவில் நீர் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே `சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. உணவு காம்பினேஷன்களில் தயிர் சாதம் - ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. ஊறுகாய்களில் ஒரு வாரம் முதல் இரண்டாண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய வகைகள் உள்ளன. ஊறுகாய், தொக்கு வகைகளை சப்பாத்தி, தோசைக்கும்கூட சைடிஷ்ஷாகப் பயன்படுத்தலாம். இப்படி உணவு மேஜையில் ஆபத்பாந்தவனாக விளங்கும் ஊறுகாய், தொக்கு வகைகள் பலவற்றை இந்த இணைப்பிதழில் படங்களுடன் வழங்குகிறார் சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்... ``மாங்காய், மாவடு, எலுமிச்சை, மாங்காய் இஞ்சி, கடாரங்காய், தோசைக் காய், பூண்டு, மாகாளிக்கிழங்கு, நெல்லிக்காய், பச்சை மிளகு, தக்காளி, பிரண்டை எனப் பலவற்றிலும் தயார் செய்யக் கூடிய ஊறுகாய், தொக்கு வகைகளின் ரெசிப்பிகளை வழங்கியுள்ளேன். இவை உங்கள் டைனிங் அறையை `யம்மி ஏரியா’வாக மாற்ற உதவும். சாப்பாட்டு நேரத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அழைப்பு விடுக்காமலே அங்கு ஆஜராகிவிடுவார்கள்’’ என்று உற்சாகம் பொங்கக் கூறுகிறார். ஹேப்பி ஈட்டிங்! https://www.vikatan.com
  13. காரசாராமான பச்சை மிளகாய் ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஆம்சூர்பொடி - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார். இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். https://www.maalaimalar.com
  14. சாதத்திற்கு அருமையான காராமணி குழம்பு அ-அ+ காராமணி குழம்பை சாதம், தோசை அல்லது சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காராமணி - 1 கப் புளி - 1 எலுமிச்சை அளவு தக்காளி - 1 வெங்காயம் - 1 உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 சோம்பு - 1/2 டீஸ்பூன் வர மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காராமணியை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த காராமணியை போட்டு, அதில் 2 கப் தண்ணீர் விட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும். மற்றொரு வாணயிலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, வரமிளகாய், சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்க வேண்டும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, புளித் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி விட வேண்டும். நன்றாக கொதித்து வரும் போது வேக வைத்துள்ள காராமணியை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இப்போது அருமையான காராமணி கறி ரெடி! https://www.maalaimalar.com/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.