Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்அ-அ+ விடுமுறை நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது முட்டை சப்பாத்தி ரோல் செய்து எடுத்து சென்றால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் - 2 முட்டை - 3 மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 மிளகு தூள் - 2 ஸ்பூன் சப்பாத்தி - 4 லெமன் ஜூஸ் - தேவையான அளவு எண்ணெய் - 4 ஸ்பூன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - கொஞ்சம் உப்பு - தேவையான அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு செய்முறை : வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும். முட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் சிறிது முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்து பரிமாறவும். இவ்வாறு அனைத்து சப்பாத்தியிலும் செய்யவும். சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி. https://www.maalaimalar.com
  2. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ??
  3. சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கூனி இறால் (Baby Prawns / Kooni) - 1 கப் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 6 பல் ப.மிளகாய் - 2 வெங்காயம் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும். சூப்பரான கூனி இறால் ரெடி. https://www.maalaimalar.com
  4. உடுப்பி முதல் உலகம் வரை! - கர்நாடகா தெருக்கடை ஸ்பெஷல் பாரம்பர்ய சைவ உணவுகளுக்குப் பெரும்புகழ் பெற்றது உடுப்பி. நவீன உணவுகளுக்குப் பெருமை சேர்ப்பது பெங்களூரு. இப்படி கலாசாரமும் புதுமையும் கலந்த உணவு வகைகளைக் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள தெருக்கடைகளில் ருசிக்கலாம். உலகத் தெருக்கடை உணவு வரிசையில் கர்நாடக மாநில ஸ்பெஷல் உணவுகளை எளிதாகச் செய்யும் விதத்தில் அழகிய படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். வெண் மைசூர் மசாலா தோசையோ, மங்களூரு பன்னோ, மதுர் வடையோ, கோலி பஜ்ஜியோ... இனி நம் வீட்டிலேயே மணக்கும்... ருசிக்கும்! மசாலா பிரெட் தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 10 (ஓரங்களை நீக்கவும்) கேரட் துருவல் – அரை கப் குடமிளகாய், வெங்காயம், முட்டைகோஸ் - தலா அரை கப் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் டொமேடோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், குடமிளகாய், முட்டைகோஸ், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், டொமேட்டோ கெட்சப், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட்டைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன் மீது காய்கறிக் கலவையைப் பரப்பி பரிமாறவும். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். கோலி பஜ்ஜி தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் புளித்த தயிர் - அரை கப் சமையல் சோடா - அரை டீஸ்பூன் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: மைதா மாவுடன் புளித்த தயிர், சமையல் சோடா, உப்பு, சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைத்து மூன்று மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து மாவைக் கையால் நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய போண்டாக்கள் போல கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். பிஸ்கட் ரொட்டி தேவையானவை - மேல் மாவு செய்ய: மைதா மாவு - ஒரு கப் உப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் ஸ்டஃபிங் செய்ய: ரவை, தேங்காய்த் துருவல் - தலா அரை கப் உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (அரை மணி நேரம் ஊறவைக்கவும்) பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மைதா மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவைவிடச் சற்று கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, ரவையை சேர்த்து கிளறி இறக்கவும். இதுவே ஸ்டஃபிங். பிசைந்த மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் திரட்டவும். அதன் நடுவே சிறிதளவு ஸ்டஃப்பிங் வைத்து மூடி மீண்டும் சற்று கனமான பூரிகளாகத் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, திரட்டிய பூரிகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். மங்களூர் பன்ஸ் தேவையானவை: மைதா மாவு - ஒரு கப் பழுத்த வாழைப்பழம் (பெரியது) - ஒன்று தயிர் - 2 டேபிள்ஸ்பூன் நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - கால் கப் சமையல் சோடா - கால் டீஸ்பூன் உப்பு - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஃபோர்க்கின் பின்பகுதியால் நன்கு மசிக்கவும். அதனுடன் மைதா மாவு, தயிர், சர்க்கரை, உப்பு, நெய், சமையல் சோடா சேர்த்துப் பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர்விட்டுப் பிசையவும்). மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி ஐந்து மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் திரட்டிய பூரிகளைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதிகம் சிவக்காமல் பொரித்தெடுக்கவும். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். பேளே ஹோளிகே தேவையானவை: மேல் மாவு செய்ய: மைதா மாவு - ஒரு கப் உப்பு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் தண்ணீர் - அரை கப் அரிசி மாவு - கால் கப் பூரணம் செய்ய: கடலைப்பருப்பு - ஒரு கப் வெல்லம் - ஒரு கப் ஏலக்காய்த்தூள், நெய் - தலா கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் செய்முறை: மைதா மாவுடன் அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரோட்டா மாவு பதத்துக்குப் பிசையவும். மேலே எண்ணெய்விட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதுவே மேல் மாவு. கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து மலர வேகவிடவும். வாணலியில் கடலைப்பருப்புடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவில் சிறிதளவு எடுத்துத் தட்டி நடுவே பூரண உருண்டை வைத்து மூடவும். இதை அரிசி மாவில் புரட்டி எடுத்து போளிகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி போளிகளைப் போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பேளே ஹோளிகே தயார். இந்தப் போளிகளின் மேலே சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். மைசூர் மசாலா தோசை தேவையானவை: தோசை மாவு - 2 கப் உருளைக்கிழங்கு பால்யா - அரை கப் மிளகாய் சட்னி - கால் கப் எண்ணெய் - தேவையான அளவு தோசை மாவு அரைக்க: பச்சரிசி - அரை கப் புழுங்கல் அரிசி - அரை கப் உளுத்தம்பருப்பு - கால் கப் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் அவல் - கால் கப் உப்பு - தேவையான அலவு உருளைக்கிழங்கு பால்யா செய்ய: உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்) வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு - 4 பல் முந்திரி - 5 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு மிளகாய் சட்னி செய்ய: காய்ந்த மிளகாய் - 10 வறுத்த கடலைப்பருப்பு - கால் கப் பூண்டு - 5 பல் புளிக்கரைசல் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: தோசை மாவு அரைக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, 2 மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். மிளகாய் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை முந்திரி சேர்த்து தாளிக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சற்று வெந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் தடவவும். நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். சுற்றிலும் தேவையான அளவு எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் இரண்டாக மடித்து எடுக்கவும். மைசூர் மசாலா தோசை தயார். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். மதுர் வடை தேவையானவை: ரவை, மைதா மாவு - அரை கப் அரிசி மாவு - ஒரு கப் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு உப்பு - ஒன்றரை டீஸ்பூன் செய்முறை: ரவையுடன் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், சூடான எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைப் பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டிப் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடைகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம். https://www.vikatan.com
  5. ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட் அ-அ+ கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முருங்கைக்கீரை - ஒரு கப் முட்டை - 3 வெங்காயம் - ஒன்று உப்பு, எண்ணெய் - தேவையான அளவு அரைக்க: தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு இணுக்கு சீரகம் - கால் தேக்கரண்டி செய்முறை : வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கீரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட் தயார். https://www.maalaimalar.com
  6. புட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு தேவை: கோதுமை - ஒரு கப் நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு நெய் - சிறிதளவு தேங்காய்த் துருவல் - தேவையான அளவு. செய்முறை: கோதுமையை 10 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டவும். முளைத்த கோதுமையைச் சுத்தமான துணியில் பரப்பி வெயிலில் நன்கு காயவிடவும். வெறும் வாணலியில் கோதுமையைச் சிறிது சிறிதாகப் போட்டு, படபடவென வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்துப் புட்டு மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறவும். புதினா பொடி புலாவ் தேவை: புதினா பொடி செய்ய: புதினா - ஒரு கட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு - 100 கிராம் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை காய்ந்த மிளகாய் – தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. புலாவ் செய்ய: பாசுமதி அரிசி சாதம் - ஒரு கப் வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு நெய் - ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினாவை நன்கு அலசி ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலரவிடவும். வாணலியில் கறுப்பு உளுந்தைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுக்கவும். அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு புதினா சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும். ஆறியதும் உளுந்து கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். புதினா பொடி ரெடி. அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்த்து இறக்கவும். இதை ஆறிய சாதத்துடன் சேர்த்து உப்பு, புதினா பொடி சேர்த்து சாதம் உடையாமல் நன்கு புரட்டிவிடவும். குறிப்பு: பொடியில் உப்பு இருப்பதால் சாதத்துடன் உப்பைக் கவனமாகச் சேர்க்கவும். பொடியை அவரவர் விருப்பத்துக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். முருங்கைக்கீரை சூப் தேவை: சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 5 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை, மஞ்சள்தூள் - சிறிதளவு தேங்காய்ப்பால் - ஒரு கப் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெங்காயம், சீரகம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். குக்கரில் கழுவிய முருங்கைக்கீரை, அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரின் மூடியைத் திறந்து நன்கு மசித்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், மிளகுத்தூள் சேர்த்துச் சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கிப் பரிமாறவும். முருங்கைக்காய் சூப் தேவை: முருங்கைக்காய் - 4 (சிறிய துண்டுகளாக்கவும்) பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக அரைத்தது) சாம்பார் பொடி - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை தேங்காய்ப்பால் (ஒரு மூடியில் எடுத்தது) - ஒரு கப் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: முருங்கைக்காயை நன்கு வேகவிட்டு, சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து நன்றாக மசிக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு முருங்கைக்காயின் சதைப்பகுதி, உப்பு சேர்த்து வேகவிடவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்தால் இரும்புச் சத்து நிறைந்த முருங்கைக்காய் சூப் ரெடி. காலிஃப்ளவர் - புதினா ரைஸ் தேவை: ஆய்ந்த காலிஃப்ளவர், சாதம் - தலா ஒரு கப் பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - தேவையான அளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் புதினா - ஒரு கைப்பிடி அளவு எண்ணெய், நெய் - தலா 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். இதனுடன் சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் - புதினா ரைஸ் ரெடி. முள்ளங்கி - சீரக சாதம் தேவை: முள்ளங்கி - ஒன்று (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) சாதம் - ஒரு கப் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: முள்ளங்கியுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துத் தனியாக வேகவைத்து எடுக்கவும். சாதத்தை உதிர் உதிராக வேகவிட்டு ஆறவைக்கவும். வாணலியில் நெய் - எண்ணெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பூண்டு, முள்ளங்கி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு சாதம், மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். சிவப்பரிசி ஆப்பம் தேவை: சிவப்பரிசி, பச்சரிசி - தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும். குறிப்பு: சிவப்பரிசி சேர்ப்பதால் ஆப்ப சோடா தேவையில்லை. நன்கு மிருதுவாக வரும். ருசியாகவும் இருக்கும். சிவப்பரிசியில் சத்துகள் பல அடங்கியுள்ளன. பசும் மஞ்சள் சூப் தேவை: பசும் மஞ்சள் - ஒன்றரை இன்ச் அளவு துண்டு ஓமவல்லி இலைகள் - 4 துளசி இலைகள் - 10 சீரகம் - அரை டீஸ்பூன் மிளகு - 4 பூண்டு - 2 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 3 தண்ணீர் - ஒரு லிட்டர் உப்பு - தேவையான அளவு. செய்முறை: பசும் மஞ்சளைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். அதனுடன் ஓமவல்லி, துளசி, மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்தெடுக்கவும். பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீருடன் அரைத்த விழுது சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்து முக்கால் லிட்டர் ஆன பிறகு இறக்கவும். தேவையானபோது லேசாக சூடாக்கி உப்பு சேர்த்துப் பருகலாம். குறிப்பு: இந்த சூப் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம். முளைகட்டிய பயறு கொழுக்கட்டை தேவை: கொழுக்கட்டை மாவு - 200 கிராம் முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் - தலா 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய்த் துருவல் (அ) பல்லு பல்லாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கொழுக்கட்டை மாவுடன் வதக்கிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிறகு மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான பயறு கொழுக்கட்டை ரெடி. குறிப்பு: இடியாப்ப மாவு (அ) சிவப்பரிசி புட்டு மாவிலும் தயாரிக்கலாம். சிவப்பரிசிக் கஞ்சி தேவை: சிவப்பரிசி - 100 கிராம் பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சன்ன ரவையாக உடைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். மொசுமொசு அவரைக் கறி தேவை: மொசுமொசு அவரை - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு (வட்டமாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் (வட்டமாக நறுக்கவும்) சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். குறிப்பு: மொசுமொசு அவரை மருத்துவக் குணம் கொண்டது. இந்த அவரைக்காய் கிடைக்காதவர்கள் சாதாரண அவரைக்காயிலும் இதேபோல் செய்யலாம். முள்ளங்கி பருப்புப் பச்சடி தேவை: முள்ளங்கி - 2 (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) துவரம்பருப்பு - 100 கிராம் தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி – தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை மஞ்சள்தூள் - சிறிதளவு எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் துவரம்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும். குறிப்பு: இது சாதம், டிபனுக்கு ஏற்ற சைடிஷ். பீட்ரூட் ஜூஸ் தேவை: பீட்ரூட், நெல்லிக்காய் - தலா ஒன்று தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (துருவவும்) மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு. செய்முறை: பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி, பொடியாக நறுக்கவும். பீட்ரூட்டுடன் நெல்லிக்காய் துண்டுகள், இஞ்சித் துருவல், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும் (வடிகட்டும்போது சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்க்கவும்). அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பருகலாம். குறிப்பு: இதை அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். செங்கீரைக் கூட்டு தேவை: நறுக்கிய சிவப்பு தண்டுக்கீரை - ஒரு கப் பாசிப்பருப்பு - 100 கிராம் (வேகவைக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி - தேவையான அளவு மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பூண்டுடன் சீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு - சீரக விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, கீரை சேர்த்து நன்கு வதக்கி சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும். அதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான கீரைக் கூட்டு ரெடி. குறிப்பு: சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். மற்ற கீரைகளிலும் இதேபோல் செய்யலாம். குடமிளகாய் சம்பல் தேவை: குடமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 2 (சதுர துண்டுகளாக நறுக்கவும்) பூண்டு - 10 பல் (ஒன்றிரண்டாகத் தட்டவும்) சீரகத்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, பூண்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு குடமிளகாய், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். குறிப்பு: தக்காளி சேர்த்தும் செய்யலாம். தண்ணீர் தேவையில்லை. நன்கு சுருள வதக்குவதிலேயே வெந்துவிடும். பூண்டு - வெங்காய வதக்கல் தேவை: பூண்டு - 100 கிராம் (தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தேவையான அளவு கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி, கலவை சுருண்டு வந்த பிறகு இறக்கவும். குறிப்பு: இது தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக் தேவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் - தேவையான அளவு காய்ச்சி ஆறவைத்த பால் - 200 மில்லி நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி துருவவும். பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடிக்கவும். அதனுடன் துருவிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து அரைத்தெடுக்கவும். அதில் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் நுரை பொங்க அடித்துப் பரிமாறவும். குறிப்பு: இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம். சிவப்பரிசி கார சேவை தேவை: சிவப்பரிசி - 250 கிராம் தக்காளி - 6 (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - தேவையான அளவு மஞ்சள்தூள் - சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு சோம்பு - கால் டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சிவப்பரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்துக்கு நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு மாவை இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லிகள் சூடாக இருக்கும்போதே சேவை அச்சில் போட்டுப் பிழிந்தெடுத்து ஆறவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்து ஆறிய சேவை சேர்த்து நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மிகவும் சத்தான டிபன் ரெடி. குறிப்பு: தேங்காய்த் துருவல், நெய், நாட்டுச் சர்க்கரை சேர்த்து இனிப்பு சேவையும் செய்யலாம். இந்த சேவையைச் ‘சந்தவை’ என்றும் சொல்வார்கள். பீட்ரூட் தயிர்ப் பச்சடி தேவை: பீட்ரூட் - 200 கிராம் (தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்) தயிர் - 200 மில்லி கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பீட்ரூட் துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தயிர்க்கலவையுடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். தானிய தோசை தேவை: ராகி, கம்பு, கோதுமை, வரகு - தலா 100 கிராம் கொள்ளு - 50 கிராம் கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி அளவு கறுப்பு உளுந்து - 100 கிராம் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதனுடன் கொண்டைக்கடலை சேர்த்துக் களைந்து தோசை மாவுப் பதத்துக்கு அரைத்தெடுக்கவும். உப்பு சேர்த்துக் கரைத்து மூன்று மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். குறிப்பு: மாவைச் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி, மேலே வெங்காயம் தூவி சுட்டெடுக்கலாம். கொத்தமல்லி - புதினாத் தொக்கு தேவை: கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, பச்சைப் பட்டாணி - தலா 2 கைப்பிடி அளவு குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – தேவையான அளவு பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை கடுகு - ஒரு டீஸ்பூன் புளி - சிறிதளவு நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொத்தமல்லித்தழையுடன் புதினா, கறிவேப்பிலை, குடமிளகாய், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும். இதை சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். சிவப்பு அவல் - நட்ஸ் மசாலா தேவை: சுத்தம் செய்த சிவப்பு அவல் - ஒரு கப் கொத்தமல்லித்தழை - சிறிதளவு இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி, பச்சை மிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நெய் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் நெய்விட்டு வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை, வறுத்த நட்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கிப் பரிமாறவும். வரகு - கொள்ளு பொங்கல் தேவை: வரகு அரிசி - 200 கிராம் கொள்ளு - 50 கிராம் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 15 நெய் - 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - ஒன்று கொத்தமல்லித்தழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கறிவேப்பிலையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை விழுது சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானி யங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். ராகி - பருப்பு அடை தேவை: ராகி (கேழ்வரகு) - 100 கிராம் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம் சோம்பு - ஒரு டீஸ்பூன் பூண்டு - 4 பல் காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - சிறிதளவு முருங்கை இலை - சிறிதளவு. மேலே தூவ: வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு செய்முறை: ராகி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து மாவுடன் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிடவும். மேலே வேர்க்கடலைப் பொடி, கொத்தமல்லித்தழை தூவி எடுத்துப் பரிமாறவும். மிக்ஸட் வெஜ் புர்ஜி தேவை: நறுக்கிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், காலிஃப்ளவர்) - ஒரு கப் பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்) கரம் மசாலாத்தூள் - சிறிதளவு பெரிய வெங்காயம், தக்காளி - தலா 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - தேவையான அளவு தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். தினை - கேரட் ரைஸ் தேவை: தினை - 200 கிராம் கேரட் - 4 (துருவவும்) பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப் பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தினையை நன்கு களைந்து ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கி ஆறவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் கேரட் துருவல் சேர்த்துக் கலந்து, ஒரு நிமிடத்துக்குப் பிறகு ஆறிய தினை சாதம், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து உடையாமல் புரட்டி, நன்கு சூடேறியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். காராமணி - தேங்காய் - மாங்காய் சுண்டல் தேவை: காராமணி - 200 கிராம் தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது) சீரகத்தூள் - கால் டீஸ்பூன் இஞ்சித் துருவல் - சிறிதளவு பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் - சிறிதளவு, கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: காராமணியை ஒரு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிட்டு எடுத்து வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறி, காராமணி, சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு புரட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, ஐந்து நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து, இறுதியாக தேங்காய், மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். முப்பருப்புப் பாயசம் தேவை: பாசிப்பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் துவரம்பருப்பு - 50 கிராம் வெல்லம் - 200 கிராம் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் - 3 முந்திரி, திராட்சை - தேவையான அளவு நெய் - 2 டீஸ்பூன் பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும். பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும். பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம். பச்சைப் பயறு - கொத்தமல்லி பெசரட் தேவை: பச்சைப் பயறு - 100 கிராம் பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழை - தேவையான அளவு சீரகம் - 2 சிட்டிகை பச்சை மிளகாய் - ஒன்று எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சைப் பயறு, பச்சரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும். வேர்க்கடலை - அவல் உப்புமா தேவை: கெட்டி அவல் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு (வேகவைக்கவும்) பச்சை மிளகாய் - 2 சீரகத்தூள் - 2 சிட்டிகை தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையை 12 மணி நேரம் ஊறவைத்து வேகவைக்கவும். அவலை நன்கு அலசி தண்ணீரை வடியவிடவும். பிறகு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அவலைச் சேர்த்து மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு புரட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு வேகவைத்த வேர்க்கடலை, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு புரட்டி இறக்கிப் பரிமாறவும். தினம் தினம் வித்தியாசம்! காலையில் வழக்கமான சில டிபன் வகைகள் அல்லது பிரெட் ஜாம்; மதியம் சாதம், சாம்பார், ரசம், பொரியல்; இரவில் சாதம் அல்லது சாப்பாத்தி... இதுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டு மெனு கார்டில் இடம்பெறும் உணவு அயிட்டங்கள். சாய்ஸா... மூச்! என்னதான் மெனக்கெட்டுச் சமைத்தாலும், ருசியாக இருந்தாலும்... ‘நிரந்தர மெனுதான் சாத்தியம்’ என்ற சமையலறைக் கொள்கை, குடும்ப உறுப்பினர்களை சில நேரங்களில் சலிப்படைய வைத்துவிடுகிறது; சாப்பாடு மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. ``இதற்காக, இத்தாலியன், அமெரிக்கன், மெக்ஸிகன், சைனீஸ் என அகில உலக டிஷ்களைச் செய்து குவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நம்மிடம் கைவசம் உள்ள மளிகைப் பொருள்கள், அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள், ஆரோக்கியத்துக்கு உறுதுணை புரியும் சில தானியங்கள் ஆகியவற்றைக்கொண்டு சற்று வித்தியாசமான ரெசிப்பிகளைச் செய்து பரிமாறலாம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன்... காலிஃப்ளவர் - புதினா ரைஸ், சிவப்பரிசி ஆப்பம், முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு, பீட்ரூட் ஜூஸ், பசும் மஞ்சள் சூப், ஸ்வீட் பொட்டேட்டோ - நட்ஸ் மில்க் ஷேக், மிக்ஸ்டு வெஜ் புர்ஜி, கொத்தமல்லி - புதினாத் தொக்கு எனப் பல்வேறு சுவையான, சத்தான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார். https://www.vikatan.com/
  7. சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி அ-அ+ கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கூனி இறால் (Baby Prawns / Kooni) - 1 கப் தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு பூண்டு - 6 பல் ப.மிளகாய் - 2 வெங்காயம் - 2 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும். சூப்பரான கூனி இறால் ரெடி. https://www.maalaimalar.com
  8. வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு தோசை, இட்லி, சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சிக்கன் குழம்பு. இன்று இந்த சிக்கன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ தேங்காய் (துருவியது) - 1 கப் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 6 பச்சை மிளகாய் - 6 தேங்காய் எண்ணெய் சின்ன வெங்காயம் -1 பெரிய வெங்காயம் -1 தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி வெந்தயத்தூள் - 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்- ½ தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சின்னவெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய் துருவலை போட்டு வறுத்த பின்னர் அதோடு கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா பொடி, மஞ்சள் தூள் யாவும் போட்டு சிறிது கிளறி விடவும். கலவை பொன்னிறமாக வந்ததும் அதனை விழுதாக அரைத்துத் தனியாக வைத்து கொள்ளவும். அதே கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். இப்போது சிக்கன் துண்டுகளைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து மெதுவாக கிளறவும். பின்னர் இரண்டு கப் நீர் ஊற்றி மெதுவாக கிளறி விடவும். இப்போது பாத்திரத்தை மூடி சிக்கனை வேக விடவும். பாத்திரத்தைத் திறந்து நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு மேலும் சிறிது தண்ணீர் ஊற்றவும். இப்போது பாத்திரத்தை மூடி 20 நிமிடங்கள் மறுபடியும் வேக வைக்கவும். பின்னர் மூடியைத் திறந்து அரைத்து வைத்த தேங்காய் மசாலா விழுதினை போட்டு நீர் ஊற்றி நன்கு கிளறி விடவும். சிறிது கறிவேப்பிலை போட்டு குறைவான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போது சுவையான மணக்கும் சிக்கன் குழம்பு ரெடி. https://www.maalaimalar.com/
  9. காரசாரமான சிக்கன் மிளகு வறுவல் சிலர் காரசாரமாக சாப்பிட விரும்புவார்கள். இன்று சிக்கனில், மிளகு சேர்த்து காரசாரமான வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருள்கள் : சிக்கன் - அரை கிலோ மிளகு - 1 ஸ்பூன் மிளகுத் தூள் - 3 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 காய்ந்த மிளகாய் - 2 வெங்காயம் - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன் எண்ணெய் - 4 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வெங்காயத்தை அரைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிதளவு உப்பு, 2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து, பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு 10 நிமிடம் நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளிந்து கடாயை மூடி வைத்து, சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும். காரசாரமான சிக்கன் மிளகு வறுவல் ரெடி. https://www.maalaimalar.com
  10. கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கிராமத்து ஸ்டைலில் நண்டு மசாலா செய்தால் அருமையாக இருக்கும். இன்று நண்டு மசாலா செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பிரியாணி இலை - 1 பட்டை - 1 ஏலக்காய் - 4 சோம்பு - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லித் தூள் - 2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... துருவிய தேங்காய் - 1/2 கப் சோம்பு - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 5 செய்முறை : நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்சியில் துருவிய தேங்காய், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.. பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும். நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா ரெடி!!! https://www.maalaimalar.com/
  11. சூப்பரான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் அ-அ+ குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மீனை வைத்து ஆந்திரா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் - 8 துண்டுகள் (துண்டு மீன்) கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலாவிற்கு… வெங்காயம் - 1 பூண்டு - 5 பல் இஞ்சி - 1 இன்ச் சீரகம் - 1 டீஸ்பூன் தனியா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் வர மிளகாய் - 4 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீனை துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மசாலாவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து மீனின் மீது தடவி, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும். பின்பு ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை அந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் பிரட்டி பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். வறுத்த மீனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் பொரித்த கறிவேப்பிலையை போட்டு பரிமாறவும். இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி! https://www.maalaimalar.com
  12. வெள்ளை கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி வெள்ளை கொண்டைக்கடலை மசாலா, சுண்டல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம் வெங்காயம் பெரியது - 1 தக்காளி - 2 இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பல் உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்துள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் தயிர் - 1 குழிக்கரண்டி புதினா இலை - சிறிது பாசுமதி அரிசி - 200 கிராம் தாளிக்க பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி, நெய் - 1 ஸ்பூன், எண்ணைய் - தேவைக்கு செய்முறை : பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேகவைத்து கொள்ளவும். வெள்ளை கொண்டைக்கடலை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் லவங்கம், பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும். விழுது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து தயிர் சேர்க்கவும். அடுத்து அதில் புதினா, வேகவைத்த சென்னா சேர்த்து கிளறி, இறுதியில் சாதம் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து இறக்கி பரிமாறவும். சூப்பரான வெள்ளை கொண்டைக்கடலை பிரியாணி ரெடி. https://www.maalaimalar.com
  13. நீங்கள் வேறு பயப்படுத்தி கொண்டு ஆத்தா அது இது என்று. இன்று ஈஸ்ட்டர் அதுக்காகதான் அது ஆத்தா புரிந்து கொள்ளும். என்றாலும் நீங்கள் சொன்னபடியால் ஒரு சைவபுரியாணி பதிவு தேடி பிடித்து போடுகிறேன். ஆத்தா இந்த பக்கம் வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
  14. பிரியமான பிரியாணியே! இந்திய அளவில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள உணவு பிரியாணி. பண்டிகை கால உணவாகக் கருதப்பட்ட பிரியாணி இப்போது அன்றாட உணவுகளில் ஒன்றாகி விட்டது. வீட்டில் சமைப்பதைவிட ஹோட்டல் பிரியாணி வகைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம். அதிலும், ‘இந்த இடத்தில், இந்தப் பிரியாணியின் சுவையே தனி’ என்கிற வகையில் பிரியாணிக்குத் தனி முத்திரையும் அளிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட பிரியாணி வகைகளுடன் துணை உணவுகளையும் வீட்டிலேயே சமைக்கும்விதமாக எளிய ரெசிப்பிகளை நமக்களிக்கிறார் மதுரை BBQ Bistro ரெஸ்டாரென்ட்டின் பொது மேலாளரும் எக்ஸிக்யூட்டிவ் செஃப்புமான அஸ்வின் நாச்சியப்பன். செட்டிநாடு சிக்கன் பிரியாணி தேவையானவை: சிக்கன் துண்டுகள் – ஒரு கிலோ சீரக சம்பா அரிசி – ஒரு கிலோ மிளகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 சீரகம் – ஒரு டீஸ்பூன் பட்டை – சிறிய துண்டு ஏலக்காய் – 4 கிராம்பு – 5 முந்திரி – 25 கிராம் கசகசா – ஒரு டீஸ்பூன் தேங்காய்ப்பால் – 3 கப் வெங்காயம், தக்காளி – தலா கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) எலுமிச்சைப் பழம் – 2 (சாறு பிழியவும்) நெய் – 100 கிராம் எண்ணெய் – 100 மில்லி சோம்பு – அரை டீஸ்பூன் புதினா - ஒரு கட்டு (ஆயவும்) கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிக்க: பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை – தேவையான அளவு செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மிளகுடன் காய்ந்த மிளகாய், சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, முந்திரி, கசகசா, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த விழுது, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து மசாலா போல வதக்கவும். அதனுடன் 3 கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு, அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவிடவும். மேலே நெய், சிறிதளவு கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைச் சேர்த்து இறக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை `தம்’ போடவும். பிறகு மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும். மட்டன் பிரியாணி தேவையானவை: மட்டன் – ஒரு கிலோ பாசுமதி அரிசி – ஒரு கிலோ தயிர் – ஒரு கப் காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் நறுக்கவும்) புதினா – ஒரு கட்டு (ஆயவும்) கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்) பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 25 கிராம் வறுத்து அரைத்த முந்திரி விழுது - 2 டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்) வெங்காயம் – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்) தக்காளி – 150 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன் தோலுரித்த சின்ன வெங்காயம் – 100 கிராம் வாழை இலை - 2 எண்ணெய் – 100 மில்லி நெய் – 75 மில்லி கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு அலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லித்தழை, வறுத்த சின்ன வெங்காயம் – தேவையான அளவு செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழையைத் தனியாக எடுத்து வைக்கவும். மட்டனுடன் தயிர், காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், முந்திரி விழுது, எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், சின்ன வெங்காயம் சேர்த்து ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு மிருதுவாக வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீருடன் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசி சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும். தவாவைச் சூடாக்கி, மட்டன் பாத்திரத்தை வைத்து, வடித்த சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் நெய், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் சேர்த்து வாழை இலையால் மூடி 20 நிமிடங்கள் வரை சிறு தீயில் வேகவிட்டு இறக்கவும். அதன்மீது வறுத்த வெங்காயம், கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும். வந்தவாசி கோழி வறுத்த மசாலா தேவையானவை: சிக்கன் – அரை கிலோ வெங்காயம் – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் குடமிளகாய் (பச்சை) – ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்) தக்காளி – 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் நறுக்கவும்) கறிவேப்பிலை – 2 ஆர்க்கு கொத்தமல்லித்தழை - தேவையான அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம் சோள மாவு (கார்ன் ஃப்ளார்), மைதா மாவு – தலா ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்) சோம்புத்தூள், சீரகத்தூள், பொடித்த மிளகு – தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 பூண்டு – 6 பல் (தட்டவும்) எண்ணெய், உப்பு – தேவையான அளவு அலங்கரிக்க: வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு செய்முறை: சிக்கனுடன் எலுமிச்சைச் சாறு, சிறிதளவு உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பாதியளவு மிளகாய்த்தூள், சோள மாவு, மைதா மாவு சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி சிக்கன் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து, அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, தக்காளி, காய்ந்த மிளகாய், குடமிளகாய், உப்பு, தனியாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு வறுத்த சிக்கன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சீரகத்தூள், பொடித்த மிளகு, சோம்புத்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும். புதுச்சேரி கேஷ்யூ கிரேவி தேவையானவை: பனீர் – 200 கிராம் (சதுர துண்டுகளாக்கவும்) வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 4 முந்திரி – 50 கிராம் க்ரீம் – 2 டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம் கறிவேப்பிலை – சிறிதளவு நெய் – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 50 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: பனீர் துண்டுகளை வெந்நீரில் போட்டு நன்கு அலசி எடுக்கவும். முந்திரியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து விழுதாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு, அரைத்த முந்திரி விழுது சேர்த்து கிரேவி பதத்துக்குக் கொதிக்கவிடவும். பிறகு பனீர் துண்டுகள், க்ரீம், நெய், கொத்தமல்லித்தழைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். கோழி மிளகு மசாலா தேவையானவை: சிக்கன் – 500 கிராம் வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்) தக்காளி – 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – 25 கிராம் பட்டை, கிராம்பு, ஏலக்காய் கலவை – 15 கிராம் கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு மிளகு – 2 டீஸ்பூன் தனியா (மல்லி) – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 சோம்பு – அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிக்க: தேங்காய் எண்ணெய், சோம்பு, காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு - சிறிதளவு. செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, கறிவேப்பிலை, மிளகு, பாதியளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வறுத்து பவுடராக அரைத்தெடுக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, சிக்கன் சேர்த்து வதக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிக்கன் மிருதுவாகவும் வரை வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவிக் கிளறி இறக்கி, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி சூடாகப் பரிமாறவும். ஹைதராபாத் வெஜ் தம் பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி – கால் கிலோ வெங்காயம் – 200 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) தக்காளி – 100 கிராம் (நீளவாக்கில் நறுக்கவும்) புதினா இலைகள் – சிறிதளவு பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் நறுக்கவும்) தயிர் – 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை கலவை – 10 கிராம் எண்ணெய் – 25 மில்லி காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர்) – கால் கிலோ இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் – சிறிதளவு நெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, காஷ்மீர் மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்கறிக் கலவை சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் அரிசியைச் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து வடிக்கவும், அதனுடன் வதக்கிய காய்கறிக் கலவை சேர்த்துக் கலக்கவும். பிறகு நெய், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், ரோஸ் வாட்டர் சேர்த்துக் கலக்கி மூடி போடவும். தவாவைச் சூடாக்கி அதன்மீது பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறு தீயில் 15 நிமிடங்கள் வரை தம் போடவும். பிறகு ராய்த்தாவுடன் பிரியாணியைச் சூடாகப் பரிமாறவும். சிக்கன் ஃப்ராங்கி வித் ஸ்பைஸி மயோ தேவையானவை: கோதுமை மாவு - 250 கிராம் முட்டை – 2 சிக்கன் – 150 கிராம் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெண்ணெய் – தேவையான அளவு இஞ்சி - பூண்டு விழுது – அரை டீஸ்பூன் மயோனைஸ் – 3 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தொட்டுக்கொள்ள டிப் (dip) செய்ய... மயோனைஸ், சில்லி பேஸ்ட், மிளகாய்த்தூள் - தேவையான அளவு செய்முறை கோதுமை மாவில் சப்பாத்திகள் தயாரிக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் சிக்கன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து வதக்கி வேகவைக்கவும். மேலே கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய்விட்டு சப்பாத்தியைச் சூடாக்கவும். முட்டையை உடைத்து நன்கு அடித்துக்கொள்ளவும். சப்பாத்தியின் மேல் சிறிதளவு அடித்த முட்டை சேர்த்து வேகவிடவும். அதன் மேல் சிறிதளவு மயோனைஸ் தடவி, சிறிதளவு மசாலா கலவை வைத்து வேகவிட்டுத் திருப்பிப்போடவும். வெந்ததும் பாய் போல சுருட்டவும். அதை பட்டர் பேப்பரில் வைத்துச் சுருட்டவும். சிக்கன் ஃப்ராங்கி தயார். `டிப்’ (dip) செய்ய கொடுத்துள்ள பொருள்களை நன்கு கலந்து `சிக்கன் ஃப்ராங்கி’க்கு தொட்டுக்கொள்ளவும். பிரிஞ்சால் மசாலா தேவையானவை: கத்திரிக்காய் - கால் கிலோ வறுத்த வேர்க்கடலை - 20 கிராம் வெள்ளை எள் - 10 கிராம் உலர் தேங்காய்த்தூள் - 50 கிராம் வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 எண்ணெய் - 50 மில்லி புளி விழுது - 50 மில்லி உப்பு - தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய்விட்டு சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய கத்திரிக்காய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், புளி விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். உலர் தேங்காய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலையை விழுதாக அரைத்துக் கொதிக்கும் கலவையில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கவும். https://www.vikatan.com
  15. சாதத்திற்கு அருமையான இறால் வறுவல் அ-அ+ சாதம், சப்பாத்தி, புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள இறால் வறுவல் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் இறால் - 1/4 கிலோ வெங்காயம் - 2 (பெரியது). இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சோம்பு - ஒரு தேக்கரண்டி. சீரகம் - ஒரு தேக்கரண்டி. தக்காளி - 2 பழம். தேங்காய் - கால் மூடி (துருவியது). உப்பு - 1 தேக்கரண்டி. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி. எண்ணெய் - 2 தேக்கரண்டி. கறிவேப்பிலை - ஒரு கையளவு. வத்தல் மிளகாய் - 20 (பெரியது) செய்முறை: வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தோல், ஓடு நீக்கி இறாலை நன்கு சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும். தேங்காய் துருவலையும் 15 வத்தல் மிளகாயையும் சோம்பு, சீரகத்துடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் இறாலை போட்டு 5 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும். இறாலில் மசால் பிடித்தவுடன் தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு 5 வத்தல் மிளகாயை வெட்டிப் போட்டு கொஞ்சம் கறிவேப்பிலை தூவி தாளித்தபின் அதனை இறக்கி வைத்துள்ள இறால் வறுவலின் மேல் ஊற்றி சிறிது நேரம் கழித்து பரிமாறவும். சூப்பரான இறால் வறுவல் ரெடி. https://www.maalaimalar.com
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி !
  17. சாதத்திற்கு அருமையான முருங்கைக்காய் மசாலா சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முருங்கைக்காய் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கைக்காய் - 5 பூண்டு - 5 பற்கள் பெரிய வெங்காயம் - 1 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு அரைப்பதற்கு... தேங்காய் - 1/4 கப் சோம்பு - 1/2 டீஸ்பூன் தாளிப்பதற்கு... எண்ணெய் - 2 டீஸ்பூன் பட்டை - 1/2 இன்ச் கிராம்பு - 2 ஏலக்காய் - 2 கறிவேப்பிலை - சிறிது செய்முறை: முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்பு பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் முருங்கைக்காய், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். முருங்கைகாயானது நன்கு வெந்த பின், அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் மசாலா ரெடி!!! https://www.maalaimalar.com
  18. 30 வகை டேஸ்ட்டி & ஹெல்த்தி டூ இன் ஒன் சமையல் கறிவேப்பிலைப் பச்சடி தேவை: ஆய்ந்த கறிவேப்பிலை - 2 கப் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு. வறுக்க: எள் - ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் - அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் தனியா (மல்லி) - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 எண்ணெய் - ஒரு டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை இலைகள் - 6 காய்ந்த மிளகாய் - ஒன்று மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் பூண்டு - 3 பல் (தோலுடன் தட்டவும்) கடுகு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் கறிவேப்பிலையைச் சேர்த்து மொறுமொறுப்பாக வறுக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புளி சேர்த்து வறுத்து இறக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் அரைத்த பொடி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்விட்டுக் காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கி இறக்கவும். கறிவேப்பிலைப் பச்சடி தயார். இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: கறிவேப்பிலையில் இரும்புச் சத்து உள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கும், தலைமுடி கருமைக்கும் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதற்கும் கறிவேப்பிலைப் பச்சடி உதவும். வாரத்தில் இரு முறையாவது இந்தக் கறிவேப்பிலைப் பச்சடியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி தால் தேவை: தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்) குழைய வேகவைத்த பாசிப்பருப்பு - 8 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 6 (நறுக்கவும்) பூண்டு - 3 பல் (நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) கடுகு - ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து பச்சை மிளகாய், சாம்பார் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து மேலும் வதக்கி, ஒரு கப் நீர்விட்டு நன்கு வேகவிடவும். பிறகு, வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதிவந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி நன்றாகக் கலக்கிவிடவும். சப்பாத்தி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும் இந்தத் தக்காளி தால் ஏற்றது. குறிப்பு: தக்காளிக்கு உடல் எடையைக் குறைப்பதில் பங்கு உண்டு. சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். சிறுநீரகங்களில் கல் சேருவதைத் தடுக்கிறது. பிண்டி மசாலா தேவை: வெண்டைக்காய் - 200 கிராம் (ஒரு இன்ச் நீள துண்டுகளாக்கவும்) பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 தயிர் - கால் கப் ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன் சீரகம், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 25 கிராம் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காய்த் துருவலுடன் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெண்டைக்காய் துண்டுகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தனியாக வைக்கவும். அதே வாணலியில் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தயிர், ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த வெண்டைக்காய் சேர்த்து 2 கொதிவிட்டு இறக்கவும். இது சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குறிப்பு: வெண்டைக்காய் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும். கேரட் லட்டு தேவை: கேரட் துருவல் - 4 கப் தேங்காய்த் துருவல் - ஒரு கப் சர்க்கரை - 2 கப் நெய் - 6 டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் முந்திரி, பாதாம் - தலா 10 பாசிப்பருப்பு - 10 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பவுடராக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் பாதாம், முந்திரி சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அதே வாணலியில் நெய்யை ஊற்றி கேரட் துருவலைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறி, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடி போடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். நன்கு ஆறியதும் பாசிப்பருப்பு மாவு, பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு லட்டுகளாகப் பிடிக்கவும். மற்ற லட்டுகள் மாதிரி இது நீண்ட நாள்கள் இருக்காது. விரைவிலேயே பயன்படுத்திவிட வேண்டும். குறிப்பு: கேரட் பிரகாசமான பார்வைக்கு வழிவகுப்பதுடன் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. புதினா தவா கட்லெட் தேவை: புதினா இலைகள் - 2 கப் குழைவாக வேகவைத்த சாதம் - ஒரு கப் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் - அரை கப் சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - 4 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் ஓமம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: புதினாவுடன் கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். சாதத்தை நன்கு மசிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், சோள மாவு சேர்த்துப் பிசையவும். பிறகு விரும்பிய வடிவில் கட்லெட்டுகளாகத் தட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை அடுக்கி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. குறிப்பு: வாய் துர்நாற்றத்தைப் போக்குவதுடன் பற்கள் மற்றும் ஈறுகளின் உறுதிக்கும் உதவுகிறது. தொண்டையில் தொற்று ஏற்பட்டால் நீக்கி மீண்டும் வராமல் தடுக்கும். பொன்னாங்கண்ணிக்கீரை ரசம் தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கப் புளிக்கரைசல் - கால் கப் தக்காளி - பாதியளவு (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 2 பல் (தட்டவும்) மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுக்க: துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று மிளகு, தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்தெடுக்கவும். புளிக்கரைசலுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பொன்னாங் கண்ணிக்கீரையைச் சேர்த்து வேகவிடவும். கீரை அரை வேக்காடு பதத்தில் வெந்த பிறகு தக்காளி, பூண்டு சேர்த்து வேகவிடவும். பிறகு, பொடித்த பொடியைத் தூவி, நுரை வரும்போது இறக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். இதை டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்; சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். குறிப்பு: இதைத் தொடர்ந்து 45 நாள்கள் சாப்பிட்டு வர... தோல் பளபளப்பாகும். நல்ல நிறம் கிடைக்கும். கண்களும் நல்ல ஒளியுடன் மின்னும். மணத்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு தேவை: நறுக்கிய மணத்தக்காளிக்கீரை - 2 கப் தேங்காய்ப்பால் - அரை கப் பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் நெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் நெய்விட்டு உருக்கி மிளகு - சீரகத்தூள் சேர்த்து வறுக்கவும். இரண்டு கப் தண்ணீருடன் உப்பு, வெங்காயம், மணத்தக்காளிக்கீரை சேர்த்து வேகவிடவும். அதனுடன் வறுத்த மிளகு - சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கவும். இதுவே மணத்தக்காளிக்கீரை தண்ணிச்சாறு. பாத்திரத்தில் மணத்தக்காளிக்கீரைத் தண்ணிச்சாற்றை ஊற்றவும். ஸ்பூனால் கீரையை எடுத்து நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு சாற்றைக் குடிக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். குறிப்பு: இதைத் தொடர்ந்து ஒரு வாரம் அருந்தி வர... வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய்ப்பாலுக்குப் பதிலாகப் பால் சேர்த்தும் அருந்தலாம். சுரைக்காய் பொரியல் தேவை: தோல், விதை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய சுரைக்காய் - 2 கப் தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சுரைக்காய் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும். எட்டு நிமிடங்களில் வெந்துவிடும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். இதை சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளலாம்; சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் உள்ள பாஸ்பரஸ்... பற்கள், எலும்புகளுக்குப் பலம் கொடுக்கும். சுரைக்காய் பொரியலை வாரம் மூன்று முறை சாப்பிட்டால், உடல் நன்கு இளைக்கும். வேர்க்கடலை சப்ஜி தேவை: பச்சை வேர்க்கடலை - ஒரு கப் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) பூண்டு - 3 பல் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு.அரைக்க: பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப் பச்சை மிளகாய் - 2 தோல் சீவிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு. அலங்கரிக்க: நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: பச்சை வேர்க்கடலையுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்துத் தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பூண்டு, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, அரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு கொதிவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும். குறிப்பு: வேர்க்கடலை சப்ஜியை வாரம் மூன்று முறை செய்து இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிட, உடலில் சதை பிடிக்கும். இளநீர் பானம் தேவை: வழுக்கையுடன் சேர்ந்த இளநீர் - 2 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன் தயிர், தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயப்பொடி - ஒரு சிட்டிகை. செய்முறை: இளநீரைத் தனியாக எடுத்து வைக்கவும். வழுக்கையை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும். இளநீருடன் அரைத்த வழுக்கை, தயிர், தேன், எலுமிச்சைச் சாறு, வெந்தயப் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை டம்ளர்களில் ஊற்றிப் பருகவும். நிறைய நீருடன் இருந்தால் ஒரு இளநீர் போதுமானது. இந்த இளநீர் பானத்தை வெறும் வயிற்றில் பருகக் கூடாது. காலை உணவு உண்டபின்தான் பருக வேண்டும். குறிப்பு: தொடர்ந்து 10 நாள்கள் இந்த இளநீர் பானத்தை அருந்தி வந்தால், ஆரம்ப நிலை குடற்புண் குணமாகும்; இந்தப் பானம் இதயக்கோளாறுகள் வருவதைத் தடுக்கும். கருணைக்கிழங்குத் துவையல் தேவை: கருணைக்கிழங்கு - 150 கிராம் (தோல் சீவி, கேரட் துருவியில் துருவவும்) புளி - சிறிதளவு (சுண்டைக்காய் அளவு) உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 வெங்காய வடகம் (சிறியது) - ஒன்று பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெங்காய வடகம் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, கருணைக்கிழங்குத் துருவலைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியவுடன் வறுத்த பொருள்களை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விடாமல் இரண்டு சுற்று சுற்றவும். அதனுடன் வதக்கிய கருணைக்கிழங்குத் துருவல், புளி, உப்பு தேவையான தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். (விரும்பினால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்). இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசை, உப்புமா போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: கருணைக்கிழங்கில் இரும்புச் சத்து, வைட்டமின்-சி உள்ளது. மூலநோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்குத் துவையலைத் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். முடக்கத்தான் கீரை அடை தேவை: சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரை - 2 கப் புழுங்கல் அரிசி - ஒரு கப் துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் கேரட் துருவல் - 3 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு களைந்து அதனுடன் கீரை, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கேரட் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை அடைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த முடக்கத்தான் கீரை அடையைச் செய்து பூண்டு சட்னியுடன் பரிமாறலாம். குறிப்பு: மூட்டுவலி, இடுப்புப்பிடிப்பு, முழங்கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாய்வு தொல்லை, பித்தம் குறையும். பத்தியக்குழம்பு தேவை: முருங்கைக்காய் - ஒன்று (விரல் நீள துண்டுகளாக்கவும்) பூண்டு - கால் கப் மணத்தக்காளி வற்றல் - கால் கப் கத்திரிக்காய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) புளிக்கரைசல் - கால் கப் தட்டிய விரலி மஞ்சள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 3 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 சீரகம், தனியா (மல்லி) - தலா ஒரு டீஸ்பூன் சிறிய வெங்காய வடகம் - ஒன்று நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், தனியா சேர்த்து வறுத்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே அதனுடன் விரலி மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நல்லெண்ணெய்விட்டு பூண்டு, மணத்தக்காளி வற்றல், வெங்காய வடகம் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலுடன் உப்பு, முருங்கைக்காய் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் பாதியளவு வெந்ததும் வறுத்த பூண்டு கலவை, கத்திரிக்காய், அரைத்த விழுது, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். பிரசவித்த பெண்கள் இதைக் குழைவாக வெந்த, சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து நல்லெண்ணெய்விட்டு 15 நாள்கள் சாப்பிட வேண்டும். புளியைக் குறைந்த அளவுதான் சேர்க்க வேண்டும். குறிப்பு: கத்திரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்-சி உள்ளது. கத்திரிக்காய் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். பிரசவித்த பெண்கள் இந்தக் குழம்பைச் சாப்பிட்டால், தாய்ப்பால் நன்கு சுரக்கும். நல்லெண்ணெய், மஞ்சள் வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ் தேவை: சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப் பாசுமதி அரிசி (அ) பச்சரிசி - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்) மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய் - கால் கப் மெல்லியதாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன் மோர் - 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: வாழைப்பூவுடன் மோர், சிறிதளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவிட்டு எடுத்துத் தனியாக வைக்கவும். அரிசியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து உதிர் உதிராக வேகவிட்டு எடுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதனுடன் வாழைப்பூ, சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும். பிறகு, சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ் தயார். முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த வாழைப்பூ ஃப்ரைடு ரைஸைச் சுவைக்கலாம். குறிப்பு: வாழைப்பூ இரும்புச் சத்து, கால்சியம், புரதச் சத்து நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். பெண்களுக்குக் கருப்பை பலம் பெற உதவும். நூல்கோல் ஃப்ரைடு ரைஸ் தேவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய நூல்கோல் - ஒரு கப் உதிர் உதிராக வேகவைத்த சாதம் - 2 கப் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட் (சேர்த்து) கால் கப் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு பெரிய வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, இறுதியில் நூல்கோலைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து எல்லா காய்களும் வதங்கியதும் (நூல்கோல் அதிகமாக வேகக் கூடாது) மிளகுத்தூள் தூவி, வெந்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வாரத்தில் இரண்டு மூன்று நாள்கள் இந்த நூல்கோல் ஃப்ரைடு ரைஸ் செய்து சாப்பிடலாம். இதற்குத் தொட்டுக்கொள்ள பீன்ஸ் பொரியல் ஏற்றது. குறிப்பு: நூல்கோல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பக்கவாதம், புற்றுநோய் வராமலும் இது தடுக்கிறது. கொத்தமல்லிப் புளி தேவை: கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு காய்ந்த மிளகாய் - 2 உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கொத்தமல்லித்தழையை வேர் நீக்கி தழையை மட்டும் நறுக்கி, அலசி உலரவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, புளியையும் சேர்த்து வதக்கி இறக்கவும். இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி, பிறகு உலர்ந்த கொத்தமல்லித்தழை சேர்த்துச் சுற்றவும் (துளிகூட நீர் விடக் கூடாது). கொத்தமல்லிப் புளி தயார். ஃப்ரிட்ஜ் இல்லாதவர்களும் இதைச் செய்து வெளியில் வைத்தே மூன்று நாள்கள் வரை பயன்படுத்தலாம். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: இது சோர்வை நீக்கி, மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட உதவுகிறது. பீட்ரூட் குழிப்பணியாரம் தேவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப் இட்லி மாவு - 3 கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப் கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். சிறிதளவு ஆறியதும் உப்பு, கொத்தமல்லித்தழை சேர்க்கவும். இதை இட்லி மாவுடன் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து மாவைக் குழிகளில் ஊற்றி, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சட்னி (அ) சாம்பாருடன் பரிமாறலாம். குறிப்பு: ரத்தம் விருத்தி அடைய பீட்ரூட் உதவுகிறது. இது இரும்புச் சத்து, கால்சியம் உட்பட பல்வேறு சத்துகளைக்கொண்டுள்ளது. பாதாம் மிக்ஸர் தேவை: பாதாம்பருப்பு - 30 கெட்டி அவல் - கைப்பிடி அளவு பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை - தலா 3 டேபிள்ஸ்பூன் உலர் திராட்சை - 4 டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் பூண்டு - 4 பல் (தோலுடன் தட்டவும்) பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் பாதாம்பருப்பு, அவல், பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பாதாம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை சேர்த்து ஒருமுறை புரட்டி அடுப்பை அணைக்கவும். மேலே மிளகுத்தூள் தூவி, உலர் திராட்சை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பாதாம் மிக்ஸர் ரெடி. இதை நான்கு நாள்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம். குறிப்பு: பாதாம்பருப்பு ஞாபக சக்தியை அதிகரிக்கும். சுண்டைக்காய் கொத்சு தேவை: பிஞ்சு சுண்டைக்காய் - ஒரு கப் (கழுவி தட்டவும்) புளிக்கரைசல் - கால் கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: எள் - 2 டீஸ்பூன் வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன் தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன் சீரகம், வெந்தயம் - தலா அரை டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: வெறும் வாணலியில் வறுக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்துத் தாளித்துத் தனியாக வைக்கவும். அதே வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிடவும். பிறகு வெல்லத்தூள், தாளித்த பொருள்களைச் சேர்த்து இறக்கவும். இந்தச் சுண்டைக்காய் கொத்சு இட்லி, தோசை, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஏற்றது. குறிப்பு: சுண்டைக்காயில் இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. சுண்டைக்காய் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும். மிதி பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பார் தேவை: மிதி பாகற்காய் - ஒரு கப் புளிக்கரைசல் - கால் கப் மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன் குழைவாக வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப் கொத்த மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 தனியா (மல்லி) - 3 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: வறுத்து அரைக்கக்கொடுத்துள்ளவற்றை வறுத்து விழுதாக அரைக்கவும். மிதி பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், 4 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல், கால் கப் தண்ணீர் சேர்த்து அரை வேக்காடாக வேகவிட்டுத் தனியாக வைக்கவும். மீதமுள்ள புளிக்கரைசலைக் கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்த மிதி பாகற்காய் சேர்த்து நன்றாக வேகவிடவும். பிறகு, துவரம்பருப்பு, அரைத்த விழுது சேர்த்து இரண்டு கொதிவிடவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்த மிதி பாகற்காய் அரைத்துவிட்ட சாம்பாரை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். குறிப்பு: பாகற்காய் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து மிக்கது. இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது; வயிற்றிலுள்ள பூச்சிகளையும் ஒழிக்கிறது. வாழைத்தண்டுப் பொரியல் தேவை: நார் நீக்கிப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒன்றரை கப் உதிர் உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் கெட்டியான மோர் - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு ­ தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கடுகு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் மோர், உப்பு, மஞ்சள்தூள், வாழைத்தண்டு சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும். வாழைத்தண்டு வெந்ததும் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்த வாழைத்தண்டுப் பொரியலை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். சாலட் போலவும் சாப்பிடலாம்; சாம்பார், ரசம் சாதங்களுக்கும் தொட்டுக் கொள்ளலாம். குறிப்பு: வாழைத்தண்டு வைட்டமின் - ஏ மற்றும் வைட்டமின் - சி கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் சேருவதைத் தடுக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரகக் கற்களை வாழைத்தண்டு கரைத்துவிடும். இஞ்சி ஊத்தப்பம் தேவை: தோல் சீவி துருவிய இஞ்சி - கால் கப் இட்லி மாவு - 2 கப் கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 3 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இஞ்சித் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். இட்லி மாவுடன் இஞ்சித் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தோசைக் கல்லில் மாவை ஊத்தப்பங்களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப் போடாமல் வேகவைத்து எடுக்கவும். வாரத்தில் ஒருமுறை இரண்டு இஞ்சி ஊத்தப்பங்களைச் சட்னி (அ) சாம்பாருடன் சுவைக்கலாம். குறிப்பு: இஞ்சி சாப்பிடுவது ஜீரணத்துக்கு மிகவும் ஏற்றது. பித்தத்தையும் இஞ்சி குறைக்கிறது. இட்லி மாவிலேயே உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப்பட்டால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். பூண்டு சூப் தேவை: பொடியாக நறுக்கிய பூண்டு - 8 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் கேரட் துருவல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். பூண்டு சூப் ரெடி. வாரம் மூன்று முறை இந்தப் பூண்டு சூப்பை அருந்தலாம். குறிப்பு: பூண்டு கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது. வெங்காயத்தாள் சப்பாத்தி தேவை: கோதுமை மாவு - 2 கப் வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் ஓமம் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி கவனமாக மசாலா பிரிந்து வராதவாறு மெதுவாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். வாரம் இருமுறை இந்த வெங்காயத்தாள் சப்பாத்தியை முள்ளங்கி தயிர்ப் பச்சடியுடன் சுவைக்கவும். குறிப்பு: வெங்காயத்தாள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதுடன் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சி அளிக்கிறது. வாழைப்பழ மில்க்‌ஷேக் தேவை: நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 துருவிய வெல்லம் - 4 டேபிள்ஸ்பூன் காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன் உலர்திராட்சை - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: துருவிய வெல்லத்தை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும். அதனுடன் வாழைப்பழம், சிறிதளவு பால், ஏலக்காய்த்தூள் சேர்த்து அடிக்கவும். பிறகு, மீதமுள்ள பாலை ஊற்றி அடித்தெடுக்கவும். இதை டம்ளர்களில் ஊற்றி, மேலே உலர்திராட்சை தூவி அலங்கரித்துப் பருகவும். ஐஸ்கட்டிகளையும் சிறிதளவு மேலே சேர்க்கலாம். வாரம் இருமுறை இந்த வாழைப்பழ மில்க் ஷேக் பருகலாம். வாழைப்பழமாகக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகள்கூட இதை மிகவும் விரும்பி அருந்துவார்கள். குறிப்பு: வாழைப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து அடங்கியுள்ளது. வாழைப்பழமும் உலர்திராட்சையும் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். மிக்ஸ்டு தயிர்ப் பச்சடி தேவை: கெட்டித் தயிர் - ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன் மெல்லியதாக நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகள் - கால் கப் மாதுளை முத்துகள் - 6 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், சர்க்கரை, உப்பு, வெள்ளரித் துண்டுகள், மாதுளை முத்துகள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். மேலே மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறவும். வாரம் இரண்டு மூன்று முறை இந்த மிக்ஸ்டு தயிர்ப் பச்சடி செய்து சாப்பிடலாம். குறிப்பு: இந்தப் பச்சடி எலும்பு, நகங்களை உறுதியாக்கும். வெள்ளரிக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கியுள்ளன. கேழ்வரகு அடை தேவை: கேழ்வரகு மாவு - 2 கப் வெள்ளை எள் - 2 டேபிள்ஸ்பூன் துருவிய வெல்லம் - ஒன்றரை கப் நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - கால் கப். செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி கல், மணல் போக வடிகட்டவும். இதை மீண்டும் கொதிக்கவிட்டு தேங்காய்த் துருவல், எள், கேழ்வரகு மாவு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் மாவை நன்கு பிசையவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. விருப்பப்பட்டால் வெண்ணெய் தொட்டுக்கொள்ளலாம். குறிப்பு: இரும்புச் சத்து மிகுந்த இந்த அடையை வாரம் இருமுறை சுவைத்தால், உடல் உறுதியுடன் இருக்கும். மசாலா மோர் தேவை: மோர் - 2 கப் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. அரைக்க: துருவிய வெள்ளரி - 4 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தலா 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய், கடுகு - தலா அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். மோருடன் உப்பு, பெருங்காயத்தூள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மோருடன் சேர்க்கவும் (விருப்பமில்லாவிட்டால் தாளிக்கத் தேவையில்லை). கோடைக்காலத்தில் இதை வாரத்தில் மூன்று முறை அருந்தலாம். குறிப்பு: தாகத்தையும் உடல் சூட்டையும் தணிக்கும். ஆந்திரா வெங்காய தோசை தேவை: இட்லி மாவு - 2 கப் சாம்பார் வெங்காயம் - ஒரு கப் காய்ந்த மிளகாய் - 3 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: சாம்பார் வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். தவாவில் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி, தேய்த்து அரைத்த வெங்காய விழுதை 3 டீஸ்பூன் போட்டு, தோசைத் திருப்பியால் தோசை முழுவதும் பரவலாகத் தேய்த்து ஓரங்களில் நல்லெண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவை இல்லை. வாரத்தில் மூன்று நாள்கள் ஆந்திராவின் பிரசித்தி பெற்ற இந்த தோசையைச் சாப்பிடலாம். குறிப்பு: வெங்காயம் நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தடுக்கும்; கொழுப்பைக் குறைக்கும்; ஞாபக சக்தியை அதிகரிக்கும். கொண்டைக்கடலை - சோளம் சுண்டல் தேவை: கொண்டைக்கடலை - ஒரு கப் இனிப்புச் சோளம் - அரை கப் நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன் கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் அரிசிப் பொரி - கால் கப் எலுமிச்சைச் சாறு - ­ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்துச் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். இனிப்புச் சோளத்தையும் வேகவைத்துத் தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, கொண்டைக்கடலை, இனிப்புச் சோளத்தை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் துருவல் சேர்க்கவும். இதனுடன் அரிசிப் பொரி, கொத்தமல்லித்தழை சேர்த்து அனைத்தையும் நன்றாகக் கலந்துவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சுவைக்கவும். வாரத்தில் இரண்டு நாள்கள் இந்தச் சுண்டலைச் செய்து சுவைக்கலாம். குறிப்பு: இந்தக் கொண்டைக்கடலைச் சுண்டல் சாப்பிடுவதால் வைட்டமின்-சி கூடுதலாகக் கிடைத்து, சுறுசுறுப்பாக இருக்கலாம். சோளம் பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கிறது. கேரட் எலும்பு மெலிவடைவதைத் தடுக்கிறது. உணவே மருந்து கூந்தல் முதல் நகங்கள் வரை உள்ள அனைத்துப் பகுதிகளிலும் எந்தவிதக் கோளாறும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதும், ஒருவேளை ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்துகொள்வதும் நாம் உண்ணும் உணவில் காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றைத் தேவையான அளவில் சேர்த்துக்கொள்வதிலேயே அடங்கியிருக்கிறது. இவற்றில் இரும்புச் சத்து, உயிர்ச் சத்து எனப்படும் வைட்டமின்கள் உட்பட பல்வேறு சத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. தலைமுடி வளர்ச்சி, கண்ணுக்குக் குளிர்ச்சி, ரத்த விருத்தி, இதயத்துக்கு பலம், வயிற்றுக்கு இதம் எனப் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய உணவு வகைகளை, ஆரோக்கியத்துடன் சுவையிலும் அக்கறை செலுத்தி `டூ இன் ஒன்’ ரெசிப்பிகளாகத் தயாரித்து வழங்கியிருக்கிறார் சமையல் கலைஞர் எஸ்.ராஜகுமாரி. ``உணவுகளை எண்ணெயில் பொரிக் காமல் சமைக்கும்போது முழுமையான பலன் கிடைக்கும் என்பதைக் கவனத்தில்கொண்டு இந்த ரெசிப்பிகளைத் தயாரித்துள்ளேன். இவற்றை அடிக்கடி செய்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்’’ என்று உற்சாகம் பொங்க கூறுகிறார். https://www.vikatan.com
  19. தனிகாட்டுராஜாவுக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  20. வேர்கடலை - தேங்காய் சாதம் செய்வது எப்படி தேங்காய் சாதம் செய்யும் பொழுது அதில் வேர்க்கடலையை வறுத்து சேர்த்தால் சூப்பராக இருக்கும். வேர்கடலை - தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் - கால் கப் வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் ) கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி உளுந்து - ஒரு தேக்கரண்டி வேர்கடலை - ஒரு தேக்கரண்டி கடுகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு கொத்தமல்லி - சிறிது பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப செய்முறை : உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான வேர்கடலை - தேங்காய் சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல், புதினா துவையல் சூப்பராக இருக்கும். https://www.maalaimalar.com
  21. உலகம் முழுக்க விரும்பி ருசிக்கப்படும் அசைவ உணவு சிக்கன். மசாலா, கறி, வறுவல் என வீட்டிலும், விதம்விதமான ஃப்ரைடு உணவுகளாக ஹோட்டல்களிலும் சிக்கனைப் பலர் சுவைத்திருக்கலாம். இங்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ் அழகிய படங்களுடன் வழங்கியிருக்கும் சிக்கன் ரெசிப்பிகளோ முற்றிலும் வித்தியாசமானவை. மீண்டும் மீண்டும் செய்யத்தூண்டும் வசீகரத்தன்மை வாய்ந்தவை. பல நாடுகளில் புகழ்பெற்ற அசத்தலான சிக்கன் ரெசிப்பிகளை இனி நம் வீட்டிலும் செய்யலாமே. சிக்கன் ரிசாட்டோ தேவையானவை: வெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன் பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப் நறுக்கிய சிக்கன் துண்டுகள் – அரை கப் ஆர்போரியோ அரிசி – அரை கப் வெள்ளை ஒயின் – ஒரு கப் சிக்கன் ஸ்டாக் – 2 கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் பார்மேசன் சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் பேசில் இலைகள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் 2 டீஸ்பூன் வெண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து வதக்கவும். பிறகு ஆர்போரியோ அரிசி, அரை கப் ஒயின் சேர்த்து வேக விடவும். பிறகு மீதமுள்ள ஒயின் சேர்த்து வேகவிடவும். பிறகு, இதேபோல சிக்கன் ஸ்டாக் அரை அரை கப்பாகச் சேர்த்து வேகவிடவும். இறுதியாக உப்பு, சீஸ், மிளகுத்தூள், மீதமுள்ள வெண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே பேசில் இலைகளைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். தாய் பேசில் சிக்கன் ஃப்ரை தேவையானவை: பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கவும்) ஃப்ரெஷ் சிவப்பு மிளகாய் (காயவைக்காதது) - 3 சிக்கன் துண்டுகள் – அரை கப் ஃபிஷ் சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் – 2 டீஸ்பூன் தாய் பேசில் இலைகள் – கைப்பிடி அளவு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிவப்பு மிளகாய்த் துண்டுகள், சிக்கன் துண்டுகள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு, சோயா சாஸ், ஃபிஷ் சாஸ், உப்பு, பாதியளவு பேசில் இலைகள் சேர்த்து வதக்கவும். சிக்கன் நன்கு வெந்த பிறகு மீதமுள்ள பேசில் இலைகள் சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும். கிரிஸ்பி ஹனி சிக்கன் தேவையானவை: சிக்கன் நெஞ்சுக்கறி – கால் கிலோ (நீளவாக்கில் துண்டுகளாக்கவும்) சோயா சாஸ் – 2 டீஸ்பூன் ஃபைவ் ஸ்பைஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) ரெட் சில்லி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன் முட்டை – ஒன்று கார்ன்ஃப்ளார் (சோள மாவு) 4 – 5 டேபிள்ஸ்பூன் வறுத்த எள் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு ஹனி சாஸ் செய்ய: எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 3 தேன் – 3 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் ஃபைவ் ஸ்பைஸ் பவுடர் – ஒரு டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) உப்பு – தேவையான அளவு செய்முறை: சிக்கன் துண்டுகளுடன் சோயா சாஸ், ஸ்பைஸ் பவுடர், உடைத்த முட்டை, ரெட் சில்லி பேஸ்ட், உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் மூடி ஊறவிடவும். இதனுடன் சோள மாவு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேன், சோயா சாஸ், ஃபைவ் ஸ்பைஸ் பவுடர், உப்பு சேர்த்துக் கிளறவும். சாஸ் கலவை கெட்டியானவுடன் பொரித்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த எள் தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும். குறிப்பு: அன்னாசி மொட்டு, மிளகு, கிராம்பு, பட்டை, பெருஞ்சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பவுடராக அரைத்து எடுத்தால் ஃபைவ் ஸ்பைஸ் பவுடர் ரெடி! சிக்கன் ரஸெல்லா தேவையானவை ஊறவைக்க: சிக்கன் – 300 கிராம் வெங்காய விழுது, தயிர் – அரை கப் இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு கிரேவி செய்ய: பட்டை – சிறிய துண்டு கிராம்பு, ஏலக்காய் – தலா 2 பிரியாணி இலை, மிளகு – 4 வெங்காய விழுது – அரை கப் கேவ்ரா வாட்டர் – சில துளிகள் வெங்காய வில்லைகள் – சிறிதளவு காய்ந்த மிளகாய் - 3 எண்ணெய், உப்பு – தேவையான அளவு அரைக்க: முந்திரி – 6 அல்லது 7 கசகசா – அரை டீஸ்பூன் செய்முறை: ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெங்காய வில்லைகள், காய்ந்த மிளகாயைச் சிறிதளவு எண்ணெயில் வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெயைக் காயவிட்டு, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, ஊறவைத்த சிக்கன், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்த பிறகு அரைத்த விழுது, கேவ்ரா வாட்டர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். மேலே வறுத்த வெங்காய வில்லைகள், மிளகாய் சேர்த்துச் சூடான சாதத்துடன் பரிமாறவும். ரொட்டி, புல்கா, நாண் போன்றவற்றுடனும் பரிமாறலாம். வியட்நாம் ஜிஞ்சர் சிக்கன் தேவையானவை ஊறவைக்க: சிக்கன் – கால் கிலோ (துண்டுகளாக்கவும்) பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்) சர்க்கரை – ஒரு டீஸ்பூன் சிக்கன் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன் ஃபிஷ் சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் மெல்லியதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள் – கால் கப் உப்பு – தேவையான அளவு கறி செய்ய: எண்ணெய், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் உப்பு - சிறிதளவு அலங்கரிக்க: மெல்லியதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள் – சிறிதளவு செய்முறை: ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். சர்க்கரை கேரமலைஸ் ஆனதும் (பழுப்பு நிறமானதும்) ஊறவைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்த பிறகு இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து அலங்கரித்துச் சூடான சாதத்துடன் பரிமாறவும். பார்சி சிக்கன் கறி தேவையானவை: சிக்கன் – கால் கிலோ பச்சை மிளகாய் – 4 வெங்காயம், தக்காளி – ஒன்று எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மசாலா கலவைக்கு : இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன் பட்டைத்தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் உருளை சிப்ஸ் செய்ய: உருளைக்கிழங்கு – 2 கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி கழுவி, கேரட் துருவலில் துருவவும். பிறகு தண்ணீரில் அலசி, பேப்பர் டவலில் போட்டு அரை மணி நேரம் ஈரம் போக உலரவிடவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நன்கு உலர்ந்த உருளைத் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பொரித்தெடுக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இதுவே உருளைக்கிழங்கு சிப்ஸ். மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துக் கிளறி, பிறகு தக்காளி விழுது, மசாலா கலவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேகவிட்டு இறக்கவும். மேலே உருளைக்கிழங்கு சிப்ஸ் கலவையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். சிக்கன் வித் வெண்டைக்காய் தேவையானவை: சிக்கன் துண்டுகள் – கால் கிலோ வெண்டைக்காய் – 10 (சிறிய துண்டுகளாக்கவும்) வெங்காயம் – ஒன்று (மெல்லியதாக நறுக்கவும்) பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: சிக்கன் துண்டுகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும். பிறகு வெண்டைக்காய், தக்காளி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு மீண்டும் நன்கு வேகவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும். சிக்கன் ஸக்யூட்டி (Chicken Xacuti) தேவையானவை: சிக்கன் – 300 கிராம் (சிறிய துண்டுகளாக்கவும்) மசாலா செய்ய: மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன் அன்னாசி மொட்டு – ஒன்று பட்டை – சிறிய துண்டு ஏலக்காய் - 2 ஜாதிபத்ரி – ஒன்று கசகசா, சீரகம் – ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள் – அரை டீஸ்பூன் மிளகு – ஒரு டீஸ்பூன் கிராம்பு – 3 காய்ந்த மிளகாய் – 10 மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம், வெந்தயம் – அரை டீஸ்பூன் கறி செய்ய: எண்ணெய் - 2/3 டேபிள்ஸ்பூன் பிரியாணி இலை – 2 ஏலக்காய் - 2 கிராம்பு - ஒன்று பட்டை – சிறிய துண்டு அன்னாசி மொட்டு – ஒன்று வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு – தேவையான அளவு ஊறவைத்து அரைக்க: பச்சை மிளகாய் – 3 கொத்தமல்லித்தழை – கைப்பிடி அளவு எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் அரைக்க: வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் – கால் கப் செய்முறை: ஊறவைத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சிறிது நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். வெறும் வாணலியில் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசி மொட்டு சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துக் கிளறி, தக்காளி சேர்த்து வதக்கவும். ஊறவைத்த சிக்கன், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, 2 - 3 டேபிள்ஸ்பூன் அரைத்த மசாலா பவுடர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய் – முந்திரி விழுது சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். ஆப்பிள் அண்டு சிக்கன் சாலட் தேவையானவை: எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – கால் கிலோ ஆப்பிள் – 2 (தோல் சீவி, சதுர துண்டுகளாக்கவும்) வெள்ளரிக்காய் – 2 (சதுர துண்டுகளாக்கவும்) வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் – அரை கப் கறி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன் புதினா இலைகள் – சிறிதளவு ஆரஞ்சுப் பழச்சாறு – அரை கப் மயோனைஸ் – ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் – அரை கப் மிளகுத்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு முட்டை கோஸ் இலைகள் அல்லது லெட்யூஸ் இலைகள் – சிறிதளவு (பரிமாற) செய்முறை: ஒரு டீஸ்பூன் ஆரஞ்சுப் பழச்சாற்றைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள ஆரஞ்சு பழச்சாற்றுடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கறி மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, இறக்கி ஆறவிடவும். ஒரு பவுலில் வேகவைத்த சிக்கன் துண்டுகளுடன் ஆப்பிள் துண்டுகள், வெள்ளரிக்காய் துண்டுகள், வெங்காயக் கலவை சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பவுலில் மயோனைஸுடன் ஃப்ரெஷ் க்ரீம், தனியாக எடுத்து வைத்த ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு சாறு சேர்த்துக் கலக்கவும். சிக்கன் - ஆப்பிள் கலவையுடன், மயோனைஸ் கலவை, புதினா இலைகள், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். முட்டைகோஸ் இலைகள் அல்லது லெட்யூஸ் இலைகளில் இந்த சாலடைப் போட்டுப் பரிமாறவும். https://www.vikatan.com
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன்??
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.