Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வை நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மூன்று தடவைகளாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுவந்தது. இதில் 7818 தொல் பொருட்கள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வுகளில் காணக்கிடைத்த பல கட்டடத் தொகுதிகளும், தொல் பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்தன. இருந்தபோதும் அங்கு ஆய்வுகளைத் தொடர்வதில்லையென மத்தியத் தொல்லியல் துறை முடிவுசெய்தது. இதற்குப் பிறகு அங்கு கிடைத்த பொருட்கள், அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்துக்கு கார்பன் டேட்டிங் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வுக்கு அனுப்பப்பட்ட முதலாவது மாதிரியின் காலம் 2,160 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும், இரண்டாவது மாதிரியின் காலம், 2,200 ஆண்டுகள் அல்லது அதற்கு 30 ஆண்டுகள் முன்போ, பின்போ பழமையானதாக இருக்கும் என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்குப் பிறகு, கீழடியில் மாநில அகழாய்வுத் துறையாவது தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், 2017-2018ல் பட்டறைப் பெரும்புதூரிலும் கீழடியிலும் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கக்கோரி தொல்லியல் துறைக்கான மத்திய ஆலோசனைக் குழுவிடம் விண்ணப்பித்தது. இதற்கென மாநில அரசு 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், கீழடியில் ஆய்வுநடத்த முதலில் அனுமதி கிடைத்தது. இதன் பிறகு கீழடியில், மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திய இடத்திற்கு அருகில் ஆய்வுப் பணிகள் இந்த ஆண்டில் துவங்கின. 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு, அதிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்திருப்பதாக மாநில தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்த ஜெகன்னாதன் பிபிசியிடம் தெரிவித்தார். இது தவிர, உறைகிணறு ஒன்றின் கட்டுமானம் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த உறை கிணறு 93 சென்டிமீட்டர் சுற்றளவு கொண்ட ஆறு உறைகளைக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக கீழடியில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்விலும் இதேபோல இரண்டு உறை கிணறுகள் கிடைத்தந. தற்போது கிடைத்துள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் முயற்சிகளும் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு அனுப்பும் முயற்சிகளும் தற்போது நடந்துவருவதாக ஜெகன்னாதன் தெரிவித்தார். படத்தின் காப்புரிமைM K STALIN இதற்கு முந்தைய காலங்களில் அகழாய்வு முடிந்த பிறகு, ஆய்வுக்கென தனியாக அரசிடம் நிதி கோரி, அதற்குப் பிறகுதான் கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு பொருட்களை அனுப்புவது வழக்கமாக இருந்தது. "ஆனால், இப்போது துவக்கத்தில் ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே ஆய்வுகளுக்கென நிதி தனியாக எடுத்துவைக்கப்பட்டுவிடுகிறது. இதனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுகளை உடனடியாகச் செய்ய முடியும்" என்கிறார் ஜெகன்னாதன். இதேபோல, சென்னையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டறைப் பெரும்புதூரில் தொல்லியல் ஆய்வு நடத்த அனுமதி கிடைத்ததையடுத்து அங்கும் மாநில தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கென 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளன. 2016ல் இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சமூக - கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பல தொல் பொருட்கள் கிடைத்தன. கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம் ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என முந்தைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. மாநில தொல்லியல் துறை நடத்திவரும் இந்த ஆய்வுகளைத் தவிர, மத்தியத் தொல்லியல் துறை கொடுமணலில் ஒரு அகழாய்வை மேற்கொண்டுவருகிறது. https://www.bbc.com/tamil/india-44280092
  2. ஒ....ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரியோம்
  3. சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு ஓ சலாம் பாபு... சலாம் பாபு சலாம் பாபு என்னைப்பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு ஓ சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தண்னாலே உண்டாக கண்ணாலே பேசியே தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே காந்த சிலை காதல் வலை காந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க கனவு இல்லீங்க நினைவுதானுங்க கனவு இல்லீங்க நினைவுதானுங்க கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே ஜொலிக்கும் உடை தளுக்கு நடை மயக்கும் முகம் பாருங்க சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும் கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
  4. தித்திப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி அ-அ+ இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2 சர்க்கரை - 1 கப் பால் - 2 கப் ஏல‌க்கா‌ய் - 2 நெய் - தேவையான அளவு முந்திரி - சிறிதளவு செ‌ய்முறை : மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள். அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம். பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும். சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர் https://www.maalaimalar.com
  5. நீ இல்லாத உலகத்திலே, நிம்மதி இல்லை, உன், நினைவில்லாத இதயத்திலே, சிந்தனையில்லை, சிந்தனையில்லை, காயும் நிலா, வானில் வந்தால், கண்ணுறங்கவில்லை, காயும் நிலா, வானில் வந்தால், கண்ணுறங்கவில்லை, உன்னைக், கண்டு கொண்ட, நாள் முதலாய், பெண்ணுறங்கவில்லை, பெண்ணுறங்கவில்லை, உன் முகத்தைப், பார்ப்பதற்கே, கண்கள் வந்தது, உன் மார்பில், சாய்வதற்கே, உடல் வளர்ந்தது, கன்னி மனம், உனக்கெனவே, காத்திருக்குது, கன்னி மனம், உனக்கெனவே, காத்திருக்குது, இந்தக், காவல் தாண்டி, ஆவல் உன்னைத், தேடி ஓடுது, தேடி ஓடுது, பொன் விலங்கை, வேண்டுமென்றே, பூட்டிக் கொண்டேனே, உன்னைப், புரிந்த போது, சிறையில் வந்து, மாட்டிக் கொண்டேனே, இன்று நாளை, என்று நாளை, எண்ணுகின்றேனே, இன்று நாளை, என்று நாளை, எண்ணுகின்றேனே, நான், என்றும் உன்தன், எல்லையிலே, வந்திடுவேனே, வந்திடுவேனே, நீ இல்லாத உலகத்திலே, நிம்மதி இல்லை, உன், நினைவில்லாத, இதயத்திலே, சிந்தனையில்லை, சிந்தனையில்லை - Nee illatha ulagathile - movie:- DEIVATHIN DEIVAM (தெய்வத்தின் தெய்வம்)
  6. உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் அ-அ+ வயிற்று கோளாறு, வயிற்று உபாதை இருப்பவர்களுக்கு இந்த லெமன் சூப் சிறந்த உணவாகும். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலுமிச்சைச் சாறு - கால் கப், கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று. எலுமிச்சை தோல் - சிறிதளவு, காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு கப், உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் - தேவைக்கு. செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும். அதனுடன் காய்கறி வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை தோல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து பருகலாம். புத்துணர்ச்சி தரும் லெமன் சூப் ரெடி. https://www.maalaimalar.com
  7. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்? உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
  8. குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூ மணக்க மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன், சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன் சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? கண்ணழகு பார்த்திருந்து காலமெல்லாம் காத்திருந்து பெண்ணழகை ரசிப்பதற்கு பேதை நெஞ்சம் துடி துடிக்க பேதை நெஞ்சம் துடி துடிக்க வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னி அவள், சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை... பக்கத்தில் பழமிருக்க பாலோடு தேனிருக்க உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னன் அவன் உட்கார்ந்த மன்னன் அவன் வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன் சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை? கல்வி என்று பள்ளியிலே கற்று வந்த காதல் மகள் காதலென்னும் பள்ளியிலே கதை படிக்க வருவாளோ கதை படிக்க வருவாளோ? வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள் சேராதிருப்பளோ தென்னவனாம் மன்னவனை? வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணன் அவன் சேராதிருப்பனோ சித்திரப் பூம் பாவை தன்னை?
  9. ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா – இங்கே நீ பிறந்தபோது தெய்வம் நேரில் வந்ததம்மா தெய்வம் நேரில் வந்ததம்மா
  10. கிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு அ-அ+ சூடான சாதத்தில் வெந்தய குழம்பை ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று கிராமத்து ஸ்டைலில் வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 15, தனியா - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, வெந்தயம் - 3 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், பெரிய தக்காளி - 1, நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது), வெல்லம் - சிறிது, கறிவேப்பிலை - ஒரு கொத்து. செய்முறை : வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை நன்றாகக் குழைய வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். அடுத்து அதில் உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். சுவையான வெந்தயகுழம்பு தயார். https://www.maalaimalar.com
  11. பிரண்டை குழம்பு செய்வது எப்படி வயிறு கோளாறு, வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பிரண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிரண்டை இளசாக - 1 கப் புளி - 100 கிராம், சின்னவெங்காயம் - 10, தக்காளி - 1, பூண்டு - 7 பல், சாம்பார்பொடி - தேவைக்கேற்ப, வெல்லம் - சிறிது, கடுகு - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/2 தேக்கரண்டி, உளுந்துப்பருப்பு - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, வறுத்துப்பொடி செய்ய : நல்லெண்ணைய் - 1 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், தனியா - 2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, கசகசா - 1/4 தேக்கரண்டி செய்முறை : பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம். தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும். வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும் தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும். புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். https://www.maalaimalar.com
  12. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயக் கீரை சூப் அ-அ+ சிறியவர் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வெந்தயக் கீரை சூப் செய்து எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெந்தயக் கீரை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, சோள மாவு - ஒரு டீஸ்பூன், பூண்டு - 2 பல், வெண்ணெய் - சிறிதளவு, காய்ச்சிய பால் - அரை டம்ளர், மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். பூண்டை தட்டிக்கொள்ளவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கும்போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும். காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். சூப்பரான வெந்தயக் கீரை சூப் ரெடி. https://www.maalaimalar.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.