Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழ

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு

திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போதுஇ ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றுஇ தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்துஇ ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாத் குழுவில் அங்கம் பெறும் குறிப்பிடத்தக்க ஆயுததாரிகள்இ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவினர் ஆதரவுடன் இஸ்லாமிய சமயக் கல்வி என்ற போர்வையில்இ பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜிகாத் குழு அங்கத்தவர்கள்இ பாகிஸ்தானின் மலையோரங்களில் உள்ள லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் பாசறைகளில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ராஜதந்திரியாக தற்போது கடமையாற்றும் பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர்இ ஜிகாத் ஆயுத் குழுவினருக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான இந்த ராஜதந்திரிஇ அண்மையில் யாழ். குடாநாட்டிற்கு பாகிஸ்தான் உளவாளிகள் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாத இறுதியில் பாகிஸ்தான் செல்வதன் பின்னணியில்இ இந்த ராஜதந்திரி செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

லண்டனில் முன்னர் பணியாற்றிய இந்த ராஜதந்திரிஇ சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில்இ மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு காரணமாக ஸ்ரீலங்காவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவ் இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/vira/html/head_vi...iew.asp?key=585

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுப்போர் மீது தாக்குதல்

புதன்கிழமைஇ 15 மார்ச் 2006 லக்ஸ்மன்

தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் முஸ்லிம் துணை இராணுவக் குழுவில் இணைய மறுப்போர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாழைச்சேனை முஸ்லிம் வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன. முஸ்லிம் துணை இராணுவக் குழுவினரை வாழைச்சேனையிலும் உருவாக்க கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் இதை நிராகரிப்போரைத் தாக்கி வருவதாகவும் அத்தகவல்கள் தெரிவித்தன. தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் வாழைச்சேனை மக்கள் தெரிவித்தனர்.

http://www.nitharsanam.com/?art=15906

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1985/1986 ம் ஆண்டுப்பகுதிகளில் தமிழ்தேசிய போராட்டத்தில் மத நீதியான பிரிவினையை ஏற்படுத்தி, குழப்பங்களை உருவாக்கும் நோக்கில் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா/அத்துலத்முதலிகளினால் ஏற்படுத்தப்பட்ட திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவரே "அஸ்ரப்" ஆவார்!! அஸ்ரப்பிற்கிருக்கும் கிழக்கு மாகான தொடர்புகளைப் பயன்படுத்தி, ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் கிழக்குப்பகுதிகளில் இருந்த முஸ்லீம் இளைஜர்களை பயன்படுத்தி அமைக்கப்பட்ட அமைப்பே "ஜிகாத்!!!!

அக்காலப்பகுதிகளில் போராட வெளிக்கிட்டவர்கள் என்று கூறும் கும்பல்களால் கிழக்கில் நடாத்தப்பட்ட பல நடவடிக்கைகளை, இலங்கை அரசும்/புலனாய்வுப்பிரிவும் ஜிகாத்தை பற்றியெரிய வைக்க எண்ணையாக்கியது!! ஆரம்பத்தில் ஓரிரு தமிழ் மக்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜிகாத், பின் பாரிய கொலைகள், கற்பளிப்புக்கள் எனத் தொடங்கி கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் வாழும் கிராமங்களை/வர்த்தக ஸ்தாபனங்களை அழிக்கத் தொடங்கினார்கள்!! அக்கால கட்டத்தில் தேசிய இராணுவத்தின்/ஊடகங்களின் வளர்ச்சியிமையை சாதகமாக பயன்படுத்தி, இலங்கை முப்படைகளின் ஆசியுடனும், பாதுகாப்புடனும் கோடூரங்களை செய்து கொண்டிருந்தார்கள்!! மதமுலாம் பூசப்பட்டு நடாத்தப்பட்ட இக்கொடூரங்களில் கிழ்க்கில் கிண்ணியா, மூதூர், காத்தான்குடி, கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, ... என தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படாத ஊர்களே இல்லையெனலாம்!! ஜிகாத் எனும் காட்டுமிராண்டிகளின் பிரதம அமைப்பாளராக அஸ்ரப் இருந்தாலும், தென்பகுதியை சேர்ந்த பல முஸ்லீம் அரசியல்வாதிகளும் இவற்றின் பின்னனியில் இருந்தார்கள்!!! 1986 ஆண்டு காலப்பகுதிகளில் அன்றைய சபாநாயகராக இருந்த "முகமட்", பல நூற்றுக்கணக்கான முஸ்லீம் காடையர்களை மருதானை மற்றும் பல தென்பகுதிகளில் முஸ்லீங்கள் கூடுதலாக வாழும் பகுதிகளிலிருந்து திரட்டி லொறிகள் மூலம் கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பினார்!!!

இதன் அடுத்த கட்டம் 1990களில் வடபகுதி மன்னார் பிரதேசத்தை குறியாக வைத்து நகர்த்தப்பட்டது!! பின்பு யாழை நோக்கி நகர்த்தப்படவே தேசியத்தின் உறுதியான செயற்பாட்டினால் தடுக்கப்பட்டது!!!

இந்த ஜிகாத் கும்பலை உருவாக்க பல முஸ்லீம் நாடுகளின் உதவிகள் கூட பெறப்பட்டது. குறிப்பாக பாகிஸ்தான், ஈரான் நிதியுதவிகள், ஆயுதப் பயிற்சிகள் வழங்கின!!

பிற்காலங்களில் தமிழ்தேசிய இராணுவத்தின் வளர்ச்சியால் முடக்கப்பட்ட ஜிகாத்தானது, தற்போது யுத்த நிறுத்த காலத்தில் மீண்டும் புத்துணர்ச்சியூட்டுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை/பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவுகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக செய்திகள் கூறுகின்றன.

இன்று ஏனைய ஒட்டுப்படைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மீண்டும் முளைக்க வெளிக்கிடும் இவ் ஜிகாத் காடைக்கும்பலை அழித்தொழிப்பதற்கு, தமிழ்தேசியம் எடுக்கப்போகும் உறுதியான நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஜிகாத்திற்கு துணையாக "ஒசாமா, சதாம், ..." என்று ஒவ்வொரு முஸ்லீம் பகுதிகளிலும் "மதத்தின் பெயரால்" கும்பலுகள் முளைத்திருக்கிறதாம்!! இதில் "ஒசாமா" எனும் கும்பலுக்கு, லண்டனில் இருந்து மற்றைய ஒட்டுப்படைகளான "ஈ.என்.டி.எல்,எப், கருணா" குழுக்களுடன் நெருங்கிச் செயற்படும் "பஷீர்" என்பவரே தலைமை தாங்குகிறாராம்!! ஜனநாயகவாதிகளின் முகமூடியை அணிந்துள்ள பஷீர், சில முஸ்லீம் நாடுகளின் மேற்கத்தைய தூதரகங்கள் குறிப்பாக பாகிஸ்தான் தூதரகத்துடன் வெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கிறாராம்!! மற்றும் "அஸ்ரப்"இன் மனைவி "பேரியல் அஸ்ரப்" உடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறாராம்!! என்ன தொடர்போ????? எல்லாம் அல்லாவுக்குத்தான் விளங்கும்!!!!! ... அரோகரா....

http://www.nitharsanam.com/?art=13690

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் ஹபவ்ரல்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை

அஜாதசத்ரு

கிழக்கில் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதான நோக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் மிகவும் மோசமானதோர் நிலைமைக்கு வழிவகுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

கடந்தமுறை ஜெனீவாவில் இடம்பெற்ற அரசு - விடுதலைப்புலிகள் சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.)இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- வரதர் அணி மற்றும் கருணா குழு என்பவற்றின் மாவட்டப் பொறுப்பாளர்கள்இ அவர்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் இஅவர்கள் செயற்படும் மறைவிடங்கள் என்பனவும் எழுத்துமூலம் வழங்கப்பட்டது.

இதெல்லாவற்றிற்குமப்பால் அரசுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விபரத்தில் மிகவும் கவனிக்க வேண்டியதொரு விடயம் கிழக்கில் ஹஜிகாத்' என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பானதாகும்.

குறிப்பாகஇ திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம்இ நூர்தீன் ஷரோம்இ பஷீன் ஷரோம்இ குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழு- ஆயுதக்குழுவின் முழு விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகஇ கிழக்கில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சிறுசிறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பல்வேறு மோதல்களுக்கும் விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இவற்றின் பிரதான தளங்களாக கிழக்கில் மூதூர்இ கிண்ணியாஇ தோப்பூர்இ ஓட்டமாவடிஇ ஏறாவூர்இ காத்தான்குடிஇ அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்குவதும் கவனிக்கத்தக்கது.

கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப் பிரச்சினை சம்பந்தமான இரு தரப்பினருக்குமிடையிலான மோதல்களின் போதும் கூட கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பனவும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.

இவை நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகும் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் பின்னர் அறியவந்தது.

இதனைவிட ஓட்டமாவடிஇ ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஜிகாத் என்ற பெயரில் செயற்பட்ட ஒரு முஸ்லிம் ஆயுதக் குழுஇ அப்பகுதியில் உள்ள வீடியோக் கடைகளை மூடுமாறும் சூதாட்டம் மதுபாவனையில் ஈடுபட வேண்டாமென்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

கடந்த வருடம் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் ஏறாவூர்இ ஓட்டமாவடிஇ வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வீடியோக்கடைகளை மூடுமாறும் அச்சுறுத்தியது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இதெல்லாவற்றிற்குமப்பால்இ கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான மோதல்களுக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றே பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் அறியவருகிறது.

இதெல்லாவற்றிற்குமப்பால்இ அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியிலேயே இந்த ஆயுதக் குழு செயற்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும்இ கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் முக்கிய அரசியல்வாதிகளுக்கிடையேயான மோதல் சம்பவங்களின் போது கூட இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பின்னணியும் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினராலேயே குற்றஞ்சாட்டப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்களைப் போன்று முஸ்லிம் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள்இ தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்)இ ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகிய தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று தியாகம் செய்த வரலாறும் ஒன்று உள்ளது.

இதனைவிடஇ தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரின் வருகை உள்வாங்கப்பட்ட போதுஇ அதற்கெதிராக கிழக்கில் வீதிகளில் இறங்கி முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மறக்க முடியாது.

இந்த நிலைமையை மாற்றியமைக்கவேஇ சிங்களப் பேரினவாதம் அப்போதிருந்த கிழக்கின் முஸ்லிம் தலைமைகளுடன் பேரம்பேசி முஸ்லிம் ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை தமிழர்களுக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வீழ்த்தியது.

இந்த நடவடிக்கைகளுக்கு அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமே பிரதான பங்காளியாக இருந்ததை எவரும் மறுத்துவிடமுடியாது.

கிழக்கில் இரண்டாவது ஈழ யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழர் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரையேஇ அரச படையினர் பயன்படுத்தினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதன் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மறக்கமுடியாத கசப்பான வரலாற்றை தோற்றுவித்தது.

இவ்வாறானதோர் நிலைமைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் அரச படையினர் மட்டுமன்றிஇ வேறு பல அந்நிய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றதாகவே அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையேஇ கிழக்கில் ஜிகாத் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தவொரு பெயரிலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ள நிலையில்இ கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள் தம்மிடமுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கான பேரினவாத சக்திகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமையும் அதிக கரிசனை எடுப்பது இன்றைய தருணத்தில் அவசியமானதொன்றாகும்.

http://www.thinakural.com/New%20web%20site...9/Article-3.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் ஹபவ்ரல்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை

அஜாதசத்ரு

கிழக்கில் அண்மைய காலங்களில் மிக மோசமாக அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரதான நோக்காகக் கொண்டுள்ள முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளும் மிகவும் மோசமானதோர் நிலைமைக்கு வழிவகுத்து வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.

கடந்தமுறை ஜெனீவாவில் இடம்பெற்ற அரசு - விடுதலைப்புலிகள் சந்திப்பின் போது விடுதலைப்புலிகள் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.)இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- வரதர் அணி மற்றும் கருணா குழு என்பவற்றின் மாவட்டப் பொறுப்பாளர்கள்இ அவர்களுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் இஅவர்கள் செயற்படும் மறைவிடங்கள் என்பனவும் எழுத்துமூலம் வழங்கப்பட்டது.

இதெல்லாவற்றிற்குமப்பால் அரசுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட விபரத்தில் மிகவும் கவனிக்க வேண்டியதொரு விடயம் கிழக்கில் ஹஜிகாத்' என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பானதாகும்.

குறிப்பாகஇ திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம்இ நூர்தீன் ஷரோம்இ பஷீன் ஷரோம்இ குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழு- ஆயுதக்குழுவின் முழு விபரமும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகஇ கிழக்கில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறான சிறுசிறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் பல்வேறு மோதல்களுக்கும் விரும்பத்தகாத செயற்பாடுகளுக்கும் வழிவகுத்துள்ளது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இவற்றின் பிரதான தளங்களாக கிழக்கில் மூதூர்இ கிண்ணியாஇ தோப்பூர்இ ஓட்டமாவடிஇ ஏறாவூர்இ காத்தான்குடிஇ அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்குவதும் கவனிக்கத்தக்கது.

கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற மார்க்கப் பிரச்சினை சம்பந்தமான இரு தரப்பினருக்குமிடையிலான மோதல்களின் போதும் கூட கைக்குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் என்பனவும் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.

இவை நன்கு பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகும் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் பின்னர் அறியவந்தது.

இதனைவிட ஓட்டமாவடிஇ ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் ஜிகாத் என்ற பெயரில் செயற்பட்ட ஒரு முஸ்லிம் ஆயுதக் குழுஇ அப்பகுதியில் உள்ள வீடியோக் கடைகளை மூடுமாறும் சூதாட்டம் மதுபாவனையில் ஈடுபட வேண்டாமென்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

கடந்த வருடம் ஆரம்பத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் ஏறாவூர்இ ஓட்டமாவடிஇ வாழைச்சேனை பகுதிகளிலுள்ள வீடியோக்கடைகளை மூடுமாறும் அச்சுறுத்தியது கவனிக்கத்தக்கதொரு விடயமாகும்.

இதெல்லாவற்றிற்குமப்பால்இ கடந்த வருடம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான மோதல்களுக்கும் முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றே பின்னணியிலிருந்து செயற்பட்டதாகவும் அறியவருகிறது.

இதெல்லாவற்றிற்குமப்பால்இ அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியிலேயே இந்த ஆயுதக் குழு செயற்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும்இ கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் காலங்களில் முக்கிய அரசியல்வாதிகளுக்கிடையேயான மோதல் சம்பவங்களின் போது கூட இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பின்னணியும் தொடர்புபட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பினராலேயே குற்றஞ்சாட்டப்பட்டதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழ் இளைஞர்களைப் போன்று முஸ்லிம் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப்புலிகள்இ தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்)இ ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்)இ ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகிய தமிழ்ப் போராட்ட அமைப்புகளில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்று தியாகம் செய்த வரலாறும் ஒன்று உள்ளது.

இதனைவிடஇ தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடிக்க அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் இஸ்ரேலிய மொசாட் உளவுப் பிரிவினரின் வருகை உள்வாங்கப்பட்ட போதுஇ அதற்கெதிராக கிழக்கில் வீதிகளில் இறங்கி முஸ்லிம் சமூகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் மறக்க முடியாது.

இந்த நிலைமையை மாற்றியமைக்கவேஇ சிங்களப் பேரினவாதம் அப்போதிருந்த கிழக்கின் முஸ்லிம் தலைமைகளுடன் பேரம்பேசி முஸ்லிம் ஊர்காவல்படை என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை தமிழர்களுக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வீழ்த்தியது.

இந்த நடவடிக்கைகளுக்கு அப்போதிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமே பிரதான பங்காளியாக இருந்ததை எவரும் மறுத்துவிடமுடியாது.

கிழக்கில் இரண்டாவது ஈழ யுத்தத்திற்கு பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற தமிழர் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையினரையேஇ அரச படையினர் பயன்படுத்தினர் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் அதன் எதிரொலியாக முஸ்லிம் கிராமங்களில் இடம்பெற்ற சம்பவங்களும் தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையே மறக்கமுடியாத கசப்பான வரலாற்றை தோற்றுவித்தது.

இவ்வாறானதோர் நிலைமைகளுக்கு மத்தியில் தான் மீண்டும் கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்கும் முயற்சிகளில் அரச படையினர் மட்டுமன்றிஇ வேறு பல அந்நிய சக்திகளும் ஈடுபட்டு வருகின்றதாகவே அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையேஇ கிழக்கில் ஜிகாத் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தவொரு பெயரிலும் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் எதுவுமில்லையென்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மறுத்துள்ள நிலையில்இ கிழக்கில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான விபரங்கள் தம்மிடமுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் - முஸ்லிம் சமூகங்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கான பேரினவாத சக்திகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமையும் அதிக கரிசனை எடுப்பது இன்றைய தருணத்தில் அவசியமானதொன்றாகும்.

http://www.thinakural.com/New%20web%20site...9/Article-3.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.