Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனையிறவு - வவுனியா ஊடான வீதி - 01.02.2011

Featured Replies

பஸ்சில் போனாலும் - எனக்கு

கப்பலில் போவது போலவே இருந்தது.

அலைகள் இருக்கவில்லை - ஆனால்

ஆட்டம் இருந்தது.

குன்றும் குழியுமான அந்த வீதிகளில்

மழை நீர் தேங்கி...

ஓரத்து வாய்க்காலோடு ஒன்று சேர்ந்து

குளக்கரையை...நோக்கி சலசலக்கிறது.

லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே

புரண்டு கவிண்டு கிடந்தன.

இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த

விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து

புது வர்ணம் பூசப்பட்டிருந்தது.

இடையிடையே "நன்றி மீண்டும் வருக "

என்பது மட்டும் மகுட வாக்கியமாக...

பொறிக்கப்பட்டிருந்தது.

குலுக்கிற குலுக்கலில்

குடல் வெளியே வந்து.. விடும் போல் இருந்தது.

சாளரம் ஊடாக சிலர்

கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள்.

பலர் இருக்க முடியாமல்

துள்ளித்துள்ளி எழுந்து நின்றார்கள்.

ஒன்று மட்டும் பரவாயில்லை... வீதிகள்

குன்றும் குழியுமாக இருப்பதால் - ஓட்டுனருக்கு

தூக்கம் வர வாய்ப்பில்லை....

-நெடுந்தீவு முகிலன் (24.01.2012)-

  • கருத்துக்கள உறவுகள்

கொக்காவில் தனில்..

கொடும் பகைவர் விதி முடித்து..

சீறும் அந்தப் புலி - நடுவே

பதிந்து நிற்க

பறந்த

அந்தச் செங்கொடி...

மாங்குளந்தனிலும் ஏற

அண்ணன் போர்க்

கரும்புலியாய் வாகனம் ஏறி

ஏக வழிவிட்ட வீதி..!

ஆகாய கடல் வெளியில்

எம் சொந்தங்கள்

சுகமாற..சுமந்த வீதி

பால்ராஜும் சூசையும்

களம் பார்க்க

பாதை காட்டிய

சுதந்திர வீதி..!

யாழ் தேவி கொண்டு

பகை.. புறப்பட

புலி வீரர்

காட்டிய தீரத்தில்

அது தடம்புரள..

சத்ஜெயவால் அது தொடர..

அடிக்கு அடி

எம் சொந்தங்களின்

தசைகளின் சிதறலில்

பசி தீர்த்து

ஜெயசிக்குறுவில்

மிச்ச இரத்தம் குடித்து

ஏப்பம் விட்டு..

சிங்களம்

கேடயம் தந்து

வெற்றி விழா எடுக்க...

சினங் கொண்ட

எம் புலிவீரர்

புயலாகி எழுந்து

அடித்த..

ஓயாத அலைகளில்

எம் கைகளில்

மீண்டும் தவிழ்ந்த

வராலாற்றுப் பூமி..!

வீரத்தின் குருதியும்

தமிழ் மாதரின் பூசு மஞ்சளும்

செம்மையும் மஞ்சளுமாய்

அலங்கரிக்க

வரிகளாய்

இயற்கையை அன்னை

நாட்டிவிட்ட

பாலையும் வீரையும்

வீரம் காட்ட

புலிவீரர்

நிலை எடுத்த மண்..!

எத்தனையோ

விண்ணேகு கழுகுகள்

ஆயிரமாயிரமாய் இட்ட

கந்தக முட்டைகள் கண்டும்..

சீர் குலையாது

சீராய் நின்ற

தேசம்..!!!

சர்வதேசம் கொண்டு வந்த

கொடும் பகை நடுவில்..

துரோகமும் பகையும்

கூட்டணி வைத்து

கொட்டிய நஞ்சுக் குண்டுகளில்

புலி வீரர் தம்

தீரம்

வேரோடு சாய

மீண்டும்

மண்டியிட்டுக் கொண்டது..!!

இன்று

அது அடிமையாய்..!!!

சுமந்து நின்ற

சொந்தப் புதல்வர்களின்

கல்லறைக் கூடுகளின்

புனிதக் கற்களைக் கூட

இழந்து..

அநாதையாய்...!!!!

அடுத்தவன்

ஏசும்

கூலிக்கு

கேலிக்கு

இரையாகி

புத்தன் சிலைகளின்

சரணாலயமாய்..!

மீண்டும்

அந்த பண்டார வன்னியனும்

பிரபாகரனும்

வரலாறாய் மீளும்

நாள் வரும்

வன்னி மண்

சுமந்த வீதியே

நீ...

விடுதலை பெறுவது

உறுதி..!

எம் உயிர் மீது

சத்தியம்

செய்கிறோம்..!

உன் புனித மண்ணெடுத்து

எம் மாவீரர்

இல்லம்

இமயம் அளவு

அமைத்து....

உலகிற்கு

எம் இன

நிமிர்வு காட்டுவோம்..!

செங்கொடியாம்

சோழப் புலிக்கொடி

அங்கும்

பட்டொளி

வீசும் நாள்

இவ்வகையகத்துள்

வந்தே

தீரும்..!!

தமிழா

அதுவரை

துரோகிகள் ஓட்டும்

குலுங்கு வண்டியோ

சொகுசு வண்டியோ

நிரந்தரம் என்று

எண்ணாதே...!!!

சொந்த இரத்தத்தில்

சேறான அந்த மண்ணின்

புனிதம் அறியாது

சகதி என்று அள்ளித் தெளிக்காதே..!

மாவீரர்

தியாகம் நிறைந்த

புனித பூமியை

ஒரு தடவை

தொட்டு வணங்கு

பாதணி அகற்றி..

பாதம் வைத்து

புனிதம் பெறு..!

வீரம் வளர்..!!

இன.. மண்..

விடுதலைக்காய்

உழைக்க

சாத்தியமாம் வழியெல்லாம்

அங்கேயே உறுதி எடு...!

நன்றி: நெடுக்ஸ் (01-04-2012)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு முகிலனின் கவிதைகளை, முக நூலில் படித்திருக்கின்றேன்!

அவர் வர்ணித்திருப்பது போல, ஏ- 9 பாதை, இப்போதைய பொழுதில், இவ்வளவு மோசமில்ல என எண்ணுகின்றேன்!

நன்றி, மீண்டும் வருக,! என்பதை விட 'நாகதீப' என எழுதப் பட்டுப் பாதை காட்டிய 'வீதிக் கல்லுகளே' என்னை அதிகம் கலவரப் படுத்தின!

ஏதோ 'நாகதீபத்துக்குப்' போகிற வழியில், யாப்பணய' இருப்பது போலவும், யாழ்ப்பாணம் ஒரு முக்கியமில்லாத நகரம் போலவும் காட்டப்படுகின்றது!

இணைப்புக்கு நன்றிகள், காதல்!!!

  • தொடங்கியவர்

நெடுந்தீவு முகிலனின் கவிதைகளை, முக நூலில் படித்திருக்கின்றேன்!

அவர் வர்ணித்திருப்பது போல, ஏ- 9 பாதை, இப்போதைய பொழுதில், இவ்வளவு மோசமில்ல என எண்ணுகின்றேன்!

நன்றி, மீண்டும் வருக,! என்பதை விட 'நாகதீப' என எழுதப் பட்டுப் பாதை காட்டிய 'வீதிக் கல்லுகளே' என்னை அதிகம் கலவரப் படுத்தின!

ஏதோ 'நாகதீபத்துக்குப்' போகிற வழியில், யாப்பணய' இருப்பது போலவும், யாழ்ப்பாணம் ஒரு முக்கியமில்லாத நகரம் போலவும் காட்டப்படுகின்றது!

இணைப்புக்கு நன்றிகள், காதல்!!!

நன்றி உங்கள் கருத்திற்கு.

A-9 வீதியில் வீதி புனரமைக்கப்பட்டிருந்தாலும் colombo செல்லும் போது ஓமந்தை சோதனை சாவடி வரை அவதானித்து பாருங்கள். தற்பொழுதும் அங்கு பள்ளம் திட்டிகளாக தான் காணப்படுகிறது. அப்பகுதி இன்னும் புனரமைக்கப்படவில்லை.

அத்துடன் பஸ்ஸின் குலுக்கல்கள் பஸ் ஓட்டுனரின் வேகத்தை பொறுத்தும் உள்ளது :) .

கடந்த வருடம் நான் A-9 வீதியால் பயணித்த பொழுது என் தலை வேறு உடல் வேறாக பிரிந்து சென்று விடுமோ என்று பயந்தேன் :( . அவ்வளவுக்கு பள்ளம் திட்டி பார்க்காது ஓட்டுனர் படு வேகமாக பஸ்ஸை ஓட்டினார்.

ஆனால் என்ன வாசகம் எழுதப்பட்டுள்ளது என்று நான் கவனிக்கவில்லை.

Edited by காதல்

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் அண்ணா, நல்ல கவிதை. அதுவும் உங்கள் சொந்த வரிகளில். வாழ்த்துக்களும், நன்றிகளும்.

சொந்த இரத்தத்தில்

சேறான அந்த மண்ணின்

புனிதம் அறியாது

சகதி என்று அள்ளித் தெளிக்காதே..!

இது எனக்கு பிடிச்சிருக்கு.

நன்றி: நெடுக்ஸ் (01-04-2012)

வேறொருவரின் கவிதை என்பதால் நான் எழுதியவரின் பெயர், எழுதப்பட்ட திகதி போட்டிருக்கிறேன். உங்கள் சொந்த கவிதைக்கு நீங்கள் ஏன் பெயர் போட்டிருக்கிறீர்கள்? போட தேவையில்லை தானே?

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, நல்ல கவிதை. அதுவும் உங்கள் சொந்த வரிகளில். வாழ்த்துக்களும், நன்றிகளும்.

இது எனக்கு பிடிச்சிருக்கு.

வேறொருவரின் கவிதை என்பதால் நான் எழுதியவரின் பெயர், எழுதப்பட்ட திகதி போட்டிருக்கிறேன். உங்கள் சொந்த கவிதைக்கு நீங்கள் ஏன் பெயர் போட்டிருக்கிறீர்கள்? போட தேவையில்லை தானே?

நன்றி தங்கச்சி.

இன்னொரு கவிதையின் தாக்கத்தில் எழுதியதால் அப்படிப் போட்டுக் கொண்டேன். கால இடவெளியை எதிர்காலத்தில் தெரிந்து கொள்ள..! மற்றும்படி.. சொந்த ஆக்கத்திற்கு பெயர் போடத் தேவையில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். :)

a9-road-2006.jpg?w=470

a9-at-2010.jpg?w=470

(A9 in 2010)

a9.jpg?w=252&h=262

நன்றி: நெடுக்ஸ் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.