Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மிதிவண்டி உதவி வழங்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளுக்கும், யாழ்க்கள உறவுகளுக்கும்,

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், வடக்குக், கிழக்கில் கடும்சேதமடைந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் அடிக்கடி உரையாடிவருகிறோம். இந்த உரையாடல்கள், அரசியல் கலப்பில்லாத, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வறுமையிலிருந்து விடுதலை காண்பது என்பதைப்பற்றிய பேச்சு வார்த்தைகளாகும். இந்த உரையாடல்களில் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்படும் ஒரு பிரதானமான விடயம், ஈழ தேசத்தின் வருங்காலம் காக்கப்படவேண்டுமாயின், சிறார்களின் பள்ளிப்படிப்பு பேணப்படவேண்டுமென்பதாகும். என்னிடம் இன்னமும் எல்லாப் புள்ளிவிபரங்களும் இல்லாவிட்டாலும், கிழக்கு மாகாணத்தில் விரைவாக முன்னேறி வரும் முஸ்லீம் சமுதாயத்துடன் பார்க்கும் பொது நம்மவர்களின் நிலை தாழ்வாக இருப்பதுடன் கிளிநொச்சியில் பள்ளிப்படிப்பு மிகவும் கவலைக்கிடமாகவும் இருக்கிறது.

ஆகவே நாங்கள் முதலில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து சில நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தச் சிறார்களுக்கு, தற்சமயம், பலவிதமான தேவைகள் இருப்பதாக நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சில பிள்ளைகள் தமது கல்வித்தேவைக்கு ஒரு பள்ளியை சென்றடைய, காலையும், மாலையும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடையத்தில் இவர்களுக்கு உதவயாரும் இல்லையானால் இவர்களால் இனிமேல் பள்ளி செல்ல முடியாத நிலையொன்றிருக்கிறது. ஆனால் நாங்கள் இவர்களுக்கு ஒவ்வொரு மிதிவண்டி கொடுத்துதவ முன்வந்தால், இவர்களால் தங்கள் படிப்புக்களைத் தொடர முடியும். மேலும் இந்தச் சிறார்கள் பலரிலேயே, அவர்களின் குடும்பங்கள், தங்கள் வாழ்வூதியத்திற்கும் தங்கியிருப்பதால், இந்த மிதிவண்டிகளைப் பயன்படுத்தி தங்கள் குடும்பங்களுக்கும் அவர்களால் உதவ முடியும்.

நாங்கள் அளிக்க இருக்கும் முதல் தொகுதியான 50 மிதிவண்டிகளிலும், குறைந்தது 30 வண்டிகளையாவது, அமெரிக்கா வாழ் உறவுகளிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு $3000-$4000 வரையிலாகும். நாம் எல்லோரும் மனதார சிறு சிறு உதவிகள் செய்ய முன்வந்தால் இது ஒரு பெரிய சுமையாக இருக்கமுடியாது. இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நீங்கள் அவர்களுக்கும் இந்த தொண்டு வாழ்க்கை பயிற்றுவிக்கலாம். எப்படி நீங்கள் இந்த உதவியைச் செய்தாலும், இது வருங்கால தமிழீழத்தின் இளம் தளிர்கள் கருகிவிடாது நீர்வார்க்கும் அரிய கைங்கரியம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இதில் நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம் என்று இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்திலிருந்து, தயவுசெய்து, ஒரு மிதிவண்டியாவது தந்துதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த மிதிவண்டி இலக்குக்கு மேலாக பணங்கொடுத்து உதவப்பட்டால் அதில், பாடப்புத்தகங்கள், எழுத்து உபகரணங்கள் போன்றவையும் அன்பளிப்பு செய்யலாமென்றிருக்கிறோம்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

or please visit

nowwow-us.org

நல்லதொரு பயனுள்ள முயற்சி. வாழ்த்துக்கள்.

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ... ஆனால் ..

... சிலவற்றை நீங்கள் புரிய வேண்டும், ஏன் அள்ளி எறிந்தவர்கள் எல்லாம் இப்போ பின் நிற்கிறார்கள் என்று??? ...

... மக்களின் அவலங்களை கூறி வாங்கியவர்களில் சிலர் சுருட்டி விட்டனர்! ,,, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

... இப்படியாக பல பிரட்சனைகளினால் எட்டு விலகி நிற்கிறார்கள் ...

... இப்படியான சில பிரட்சனைகளை தீர்க்கும் மட்டும் ... கிள்ளியாவது தருபவர்கள் பின்னிக்கவே செய்வார்கள் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்காலில் ஓடும் நீரை வரம்பு ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை. வரம்பின் நோக்கமும் பணியும் நீர் எங்கே போய்ச்சேரவேண்டும் என்று வாய்க்காற் பள்ளத்துக்கு நினவூட்டுவது தான்.அந்த வகையில் பார்த்தால் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை, நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியவை. ஆட்சேபிக்கப்படக்கொடாதவை. மூன்றாண்டுகளாக நாங்கள் தயங்கித் தயங்கி நின்றமைக்குக்காரணமே நாங்கள் கண்ணால் கண்டவைகளும் காதால் கேட்டவைகளும் மட்டும் தான். ஆனால் இப்போது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நவ்வவ்" என்றொரு அறக்கட்டளை அமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம். நாம் செய்யும் பணிகள் பயங்கரவாதத்துக்குத் துணை போவது என்ற ஐயம் யாருக்குமே இருக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்க வருமானத் திணைக்களத்திடம் இது பற்றிய குறீப்புக்களை அனுப்பி அவர்களிடம் அவற்றுக்கான விளக்கங்களையும் கேட்டுள்ளோம். அவர்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்றுவோம்.

மறு புறத்தில், எமது உதவிகளை யாருமே "இலவசமாகக் கிடைப்பவை தாமே!" என்ற எண்ணத்தில் தப்பாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கிழக்கிலொருவரும் வடக்கிலொருவருமாக மக்கள் பிரதிநிதிகள் இருவர் எமக்கு இந்த உதவிகளைப் பகிர்வதிலும் தேவைகளை அடையாளப்படுத்துவதிலும் உதவுவார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரும் "ஊழிக்காலம்" என்று வருணிக்கப்படக்கூடிய, அந்தக் கொடிய நாட்களில் தம் சேவை மனப்பான்மையை நன்கு நிரூபித்தவர்கள். இதைவிடவும் கத்தோலிக்க திருச்சபையும் இதில் எங்களுடன் பங்கு கொண்டு உழைக்கும். மதபேதங்களைப்பாராது உண்மையான தேவைகளை மட்டும் கணக்கிலெடுக்கும் தகுதியும், திறமையும், கண்ணியமும், பாரதூரமான பொறுப்புக்களை சுமக்கும் தைரியமும் தனக்கு உண்டென்று கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே எமக்கு நிரூபித்துள்ளது.

இந்த ஈருருளித் திட்டம் ஒரு ஆரம்பம் மட்டும் தான், நாம் கிழக்கில் கிராமப்புறங்களில் சரிந்து விழுந்துள்ள கல்விப்பிரச்சினயை அடுத்ததாக எதிர் நோக்கவுள்ளோம். அங்கே எதிர்காலம் தெரியாது தவிக்கும் இளம் பட்டதாரிகளுக்கு ஏதாவது கஞ்சிக்கு வாய்ப்புக்கொடுப்பதன் மூலம் கல்வியில் திசை தெரியாது தவிக்கும் எமது வளர்ந்த பிள்ளைகளுக்கு உயர்தரப் பரீட்சை நிலைக்கு இலவசமாகப்படம் சொல்லித்தர இருக்கின்றோம். முடிந்தவரை அவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களையும் தர இருக்கின்றோம். அவ்வாறு எம்மிடம் உதவி பெற்றவர்கள் இளஞ்சிறார்க்குத் தம்மால் இயன்றளவு பாடம் புகட்டித்தரவேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போம். இதில் கிழக்கத்தைய மக்கள் பிரதிநிதியே எமக்குத் திட்டங்களை வரைந்து தந்து மேற்பார்வையும் செய்வார். இவ்வளவுக்கும் பணம் ஏதும் எம்மிடம் இல்லை. திரும்பத் திரும்ப "பணத்தைக் கொடுங்கள்" என்று கூவிக்கொண்டு உங்களிடமே வருவோம். "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். நாம் இதுவரை மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே தனிமனிதர்களின் பொறுப்புக்களாக எவையுமே நடை பெற்று எவருக்குமே தம்மைத் தாமே களங்கப்படுத்தும் சந்தர்ப்பங்கள் வந்தமைந்து விடக்கூடாது என்ற அடிப்படையைப் பலப்படுத்தும் நோக்கிலானவை. இதற்கு மேல் ஏதாவது நடந்துவிட்டால் அது ஆண்டவன் விட்ட வழி. அங்கே குழந்தைகளினதும் இனத்தினதும் கல்வியினதும் எதிர்காலம் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது "முன்பு இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்களே, இதற்குள்ளே எமக்கேன் வீண் பேர்" என்ற தயக்கம் ஒரு சில நாட்கள் இருக்கலாம். ஆனால் அந்தத் தயக்கம் என்றென்றைக்குமே எம்மைஅடிமைப்படுத்திவிடுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பது தான் எமது நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். பாராட்டுக்கள். 

இப்போது ஒ. எல். பெயிலானவர்கள் இலஞ்சம் குடுத்து வேலை எடுத்து கல்வி தரத்தை குறைக்கிறார்கள். 

மற்றும், குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சிறி லங்கா கல்வி முறையையும் மாற்றவேண்டும்.  பல மாணவர்கள் தற்கொலை செய்வதை எமது சமுதாயம் பெரிது படுத்துவதில்லை.

அதே நேரம் எல்லோரும் படித்து ஆறடி பெட்டிக்குள் இருக்க ஆசை படுவதால் மற்றைய தொழில் துறைகளில் ஆள் பற்றாக்குறை. 

We need more Tamil skilled labours and respect for all types of jobs. Local economy won't take off without skilled labours.

Are you partnering with any American colleges for school adoption programs?

உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

மூலத்தின் ஆரம்பத்தில் இந்த பிரச்சனைகளை நீண்டகால அடிப்படையில் கவனிக்கப்போவதாகத்தானே கூறியிருக்கிறார்கள் நெல்லையான்.

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.

Edited by மல்லையூரான்

இன்றும் ... லண்டனில் இருந்து கடந்த பல வருடங்களாக தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் ஓர் முக்கிய ஆலய நிர்வாகமான ஈலிங் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்திடம் இக்கேள்வியை கேட்டேன்!!! .. பதில் வந்தது ... இன்றுவரை புலத்தில் இருந்து உதவி வழங்கும் அமைப்புகளுக்குக்குள் இது தொடர்பாக எந்த தொடர்பாடல்களும் இல்லை என்று!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

அக்கா, எனது இருபது வருட ஈழ அரசியல் போராட்டத்தில் கண்டுபிடித்தது, எம்மக்களுக்கு உதவுவது மிகவும் கடினம். 

இங்கேயே மலையாள மாந்திரி நாளை கேரளா காடுக்கு செல்கிறார் கையின் படத்தை அனுப்பினால் போதும் என்று திரி தொடங்கியிருந்தால் நூறு ஈருருளிகள் தேறி இருக்கும். 

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

நெல்லையர்,  நான் கேட்க இருந்த கேள்விகள் பல கேட்டு உதவியதற்கு நன்றி.  தீர விசாரித்து குடுப்பது தான் சரி. 

மற்றும், சைக்கிள் உதவிக்கும் நன்றி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மீண்டும் கூறிகொள்ள விரும்புவது "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இன்னும் 12 மிதிவண்டிக்கான கொடையாளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உதவி செய்ய விரும்புபவர்கள் தயவு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

nowwow-us.org

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 6 மிதிவண்டிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. விரைவில் இந்தத் திட்டம் உங்கள் ஆசியுடன் பூர்த்தியடையும் என்று நம்புகிறேன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவண்டி வழங்குவதற்கு உதவி செய்த அனைவருக்கும் NOWWOW என்ற அமைப்பின் சார்பில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலதிக விபரங்களுக்கு,

http://tamilwin.com/show-RUmqyGTZOWis3.html

அத்துடன் எமது சேவை முடிந்து விடவில்லை.

அடுத்தபடியாக கடந்த 2009 ம் ஆண்டு யுத்த சூழலினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடியேறியுள்ள மிகவும் வறிய குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகவும் கஷ்டப்பிரதேசமான வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 3300 வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு சுமார் 10,000.00 USD உடனடியாகத் தேவைப்படுகிறது. மேலதிக விபரம் தேவைப்படின் அதனை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம். இப்பண உதவியை நீங்கள் வங்கிக் காசோலை மூலமாகவோ அல்லது பின்வரும் இணையதளத்தினுடாகவோ அனுப்பலாம்.

http://nowwow-us.org/

பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்கு கைகொடுப்போம்.

தாழ்மையுடன் உங்கள் மக்கள் பிரதிநிதி,

சுபா சுந்தரலிங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே அந்த மக்களுக்கு

சேவை செய்பவர்கள் போற்றுதலுக்கு

உரியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.