Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசாட்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Featured Replies

இந்தியாவின் நவீன செயற்கை கோளான ராடார் இமேஜிங் செய்மதி ரிசாட் - 1 இன்று காலை 5.47 மணியளவில் சிறீஹரிகோட்டா தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

சந்திராயன் - 1 மற்றும் ஜி.சாட் -12 ஆகிய செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவிய பி.எஸ்.எல்.விசி -19 ராக்கெட் மூலமே 1858 கிலோ எடையுள்ள ரிசாட் 1 செய்மதியும் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. தற்போது ரிசாட் -1 பூமியின் சுற்றுவட்ட பாதையில் தன்னை வெற்றிகரமாக இணைத்து கொண்டுள்ளதாக விஞ்னானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 வருட கால கடும் உழைப்பில் முற்றுமுழுதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரிசாட்-1 செய்மதியின் வடிவமைப்புக்காக இஸ்ரோ மொத்தம் ரூ.498 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்செய்மதி ஏவும் திட்டத்தின் இயக்குனரான வளர்மதி தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்மதி மூலம் பூமியின் மேற்பரப்பை மிக துல்லியமாக கண்காணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 1 மி.மீ நீள அகலமுள்ள பொருட்களையும் துல்லியமாக படப்பிடிக்கும் வசதி இருப்பதால் இந்தியாவில் பனி அதிகமுள்ள காலங்களில் மிகத்தெளிவான நிலப்பரப்பு படங்களை பெறமுடியும். இதன் மூலம் கோதுமை, நெல் உள்ளிட்ட விவசாய நிலங்கள் பற்றிய தகவல்களையும், எவ்வாறான நிலங்களில் விளைச்சல்கள் சாத்தியாமனவை எனவும் மத்திய அரசுக்கு முன்கூட்டியே சொல்ல முடியும். மேலும் இராணுவ நடமாட்டம், வெள்ளம், ஆறுகளில் நீர் வற்று, இயற்கை சீற்றங்கள் என்பவை தொடர்பிலும் முன்கூட்டியே அறிவிக்க முடியும். மேலும் தானிய உற்பத்தி அதிகரிப்பில் இச்செய்மதி பெரும்பங்கு வகிக்கவுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.4tamilmedia.com/newses/india/4886-risat-1-satellite-launch-a-grand-success-isromething

இது இந்தியாவின் முதல் உளவு செய்மதி.

100% இந்தியாவாலேயே தயாரிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் இயக்குனர் நா. வளர்மதி என்பவர் முதல் தமிழ் பெண் விஞ்ஞானி.

ஏவப்பட்டு சுமார் பூமியில் இருந்து 480 கிலோமீட்டருக்கு மேல் 97.55 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தபட்டது.

இது 1858 கிலோ எடையுள்ளது.

அக்னி 5 க்கு பயன்படுத்திய பி.எஸ்.எல்.வி ராக்கெட்களின் வரிசையில் பி எஸ் எல் வி - extra large மூன்றாம் முறையாக பயன்படுத்தபட்டது.

ரிஸாட் - 2 என்ற செய்மதி 2009ல் இஸ்ரேலில் இருந்து வாங்கி இந்தியாவில் launch செய்யபட்டிருந்தாலும் அதை விட இது 400% மடங்கு அதிக வலிமையுள்ளது.

10 வருட உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தான் இந்தியாவின் மிக விலையுயர்ந்த செய்மதி. ஏறத்தாள 500 கோடி. அதில் 380 கோடி செய்மதிக்கும் 120 கோடி இதனை மேலே கொண்டு போய் நிறுத்திய ராக்கெட்டுக்கும் செலவானது.

இதற்கு இந்தியா insurance செய்யவில்லை. செய்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு சுமார் 780 கோடி insurance க்கு மட்டுமே செலவாகியிருக்கும்.

இதன் பயன்கள்.

இது உளவு சாட்டிலைட் என்றால் போர் உபயோகத்திற்கு மட்டும் பயன்படுவதல்ல.

  • இதில் இயற்கை சீற்றம் பற்றிய துல்லிய புள்ளி விபரம் அறியலாம். அதாவது நல்ல மழை அடிக்கும் போது நதிகளின் உயரம், மற்றும் வெள்ள எச்சரிக்கையை துல்லியமாக கணிக்கலாம்.
  • அது போக இது எவ்வளவு மேகம் இருந்தாலும் இதன் பயன் மிக அதிகம். இதில் synthetic aperture radar(SAR) ஆனது c-band இல் இருப்பதால் 1m அளவுக்கு படம் பிடிக்க முடியும்.
  • இதனால் பல நன்மைகள் இருப்பினும் எல்லை பாதுகாப்பு விஷயத்தில் இதன் பயன் மிக அதிகம். இதில் இரவு நேரம் கூட கண்காணிக்க கூடிய கமராக்கள் (night vision surveillance camera) உள்ளது.

இந்த மாதத்தில் இது இந்தியாவின் இரண்டாவது வெற்றி ஆகும்.

- முக நூலின் உதவியுடன் -

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.