Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள்பெயர் (------)கீறு.

Featured Replies

காதல் நான் வேணுமென்று பிழை விடவில்லை.

அண்ணா, நான் உங்களை சொல்லேல்லை, ஜோக்காக கோமகன் அண்ணாவை சொன்னனான். யோசிக்காதையுங்கோ. :) :) :)

நீங்கள் இணைத்த நான் வாசித்த சிறு ஜோக்ஸ் பகுதியில்

நானும் எதோ இணைக்க உங்களிடம் இந்தமாதிரி ஜோக்ஸ் இங்கு வேண்டாம்.என வந்த விமர்சனத்தால் நான் என்னை திருத்திக் கொள்ள முடிந்தது.நன்றி.

நான் வாசித்த சிறு ஜோக்ஸ் பகுதியில் நீங்கள் எழுதியது அவ்வளவு பிழை இல்லை. ஆனாலும் அப்படியான ஆரம்ப ஜோக்ஸ் வேண்டாம் என்று சொன்னனானே தவிர ஆபாசமில்லாமல் அனைவரையும் நீங்கள் கிண்டலடிக்க முடியும். அதற்கு தடை சொல்ல மாட்டன். சொல்லவும் முடியாது.

"நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்" என்ற திரி சிரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டாலும் அங்கு எழுதப்படும் சில கருத்துகள் மக்களை(முக்கியமாக பெண்களை) முகம்சுளிக்க வைக்கின்றன. அங்கும் ஒரு தடவை கூறினேன். அவர்கள் நான் கூறியதை கவனிக்கவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்னொருவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் உங்கள் மனப்பான்மைக்கு பாராட்டுகள். :) :) :)

Edited by காதல்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

்காலநீர் ஓட்டத்தில் எல்லாக் கனவுகளும் அடித்துச்செல்லப்பட அவனின் காதல்கனவுமட்டும் தேங்கிப்போய் சந்தன வாசமாய்'உயிர் கொல்லும் கந்தக வாடையாய் அவனிடம் மிஞ்சிப்போய் இருந்தது.அழகு மிகு சுவிசின் கோடைகாலம். இருவார கோடைவிடுமுறை.சுவிஸ் தாண்டிப்போக அனுமதியும் இல்லை.அதை தாண்டிப்போக அலுவல்களும்இல்லாததால் வீட்டை சுத்தம் செய்து அனைத்து வேலைகளும் முடித்து ஆற்றங்கரையோரம்

மாலைப்பொழுதில் தனித்தொதுங்க முடிவெடுத்தான்.நண்பர்கள்குறைவு.இவனின் மௌனம் நண்பர்களை தேடித்தரவில்லை.ஆனால் இயல்பே அப்படித்தான்.புதிதாய் கிடைத்த மிகப்பெரும் நண்பன் மது.------------------

நிலவுகள் தரையிறங்கி (நிலவு ஒன்று மட்டும் தான் உவமைக்கு மன்னிக்கவும்)அணிவகுப்பு செய்தது போல் வெள்ளை மயில்கள்.

ஆற்றங்கரையே அழகான ஆடையுடுத்திக்கிடக்க இவன் மட்டும் வெறுமையுடுத்தியவனாய்'காற்றின் தொடுகை மறந்தவனாய். வெள்ளியை உருக்கி செய்துவிட்ட பொம்மைகள் போல அழகான பெண்கள் மறைக்க வேண்டிய இடங்களைத்தவிர்த்து மற்ற இடங்களை கவசமிட்டு இவனத்தாண்டிச்செல்ல உணர்சிகள் அனைத்தும் உள்ள துறவியாய். உள்ளே போன போதையில் அவள் வெளியே வந்தாள்.

என்னை வாழவும் சாகவும் வைக்கிறாய்.இங்கே அலைகின்ற அழகான பெண்கள் மத்தியில் நீ பூச்சியம்.ஆனால் நீ இல்லாத வாழ்கையும் எனக்கு அதுதானே.(உவமைகளை அடுக்கினால்எனக்கே நித்திரை வந்திடும் விடுவோம்) ஐந்து நுறு மிற்றர்களே உல்ல

தூரத்தை எப்படி அடைந்தான் அவனுக்கே தெரியாது.புதிய நண்பன் காட்டிய வழியிலே தான் அவனின் பாதை வகுக்க பட்டிருந்தது.--------

தொலைபேசி எப்போதாவது இருந்து அழைக்கும்.அழைக்கும் ஒவ்வொரு தரமும் இவனின் இரவுப்பொழுதுகள் சுருங்கும்.மேலதிக வேலை தேடவேண்டிய கட்டாயம் உருவாகும்.(இல்லையில்லை உருவாக்கப்படும் பாவப்பட்ட ஆண்கள்.)

அப்படிதான் அன்று இரவுப்பொழுதிலும் அழைத்ததுதொலைபேசி.

--------- மறுமுனை நான் ----உடன் பேச முடியுமோ என்றது .ஆம் நான் தான் சொல்லுங்கோ' --- மச்சான் நான் சத்தியன் -----நாயே உயிருடன் இருக்கிறியே ---------'''''----''''----

போதை தெளிந்தவனாய் முகவரி பெற்று புறப்பட்டான்.

இடையில் வாகனத்தை நிறுத்தி சாப்பிடவும் குடிக்கவும் வாங்கினான்.----

அகதிகளுக்கான முகாம் வாசலில் சத்தியன்.வெறுமை சுமந்த கண்களுடன் சிரிப்பைத்தொலைத்த முகத்துடன்.

சிரிக்க மட்டும் பிறந்தவனே என் தொலைந்து போனாய்.

நீ அழுவதே சிரிப்பது போலிருக்கும் .இன்று எதை தொலைத்தாய்.

நீட்டிய கரங்களுக்குள் சரண் புகுந்தான் அவன் நண்பன்.--

-------------------- ஓடும் வாகனத்தை தாண்டி இருவரின் மனங்களும் ஓடின. நீ சரியாய் மாறி போனாய் நண்பா' குடிக்கிறாய் வேகமாக வாகனம் ஓட்டுகிறாய்.உடலும் பெருத்து மனமும் சுருங்கிப்போய் உள்ளாய். நான் அறிந்த நண்பனாய் நீ இல்லை.

---மௌனம் ---

சொல்லுடா என்னானாய்?--மூடியைத்திறந்து அண்ணாந்து வாயில் விட்டபடி காரின் பாட்டு சத்தத்தை கூட்டினான்.-------

சனிக்கிழமை காலை வழமைக்கு மாறாக அவனுக்கு விடிந்தது.

சத்தியன் எழுந்தததும் அவன் கேட்ட முதல் கேள்வி எங்கே டா அவள் .

மௌனம்

சரி எங்கேட உன் குடும்பம்

மச்சான் எல்லாரும் தமிழ் நாட்டிலை.நான் உன்ரை முகவரி தேடி எத்தனையோ தரம் உன் வீட்ட போனனான் .நீ போன பிறகு எல்லாரும் மாறிட்டின.--- அவள் பாவம் மச்சான் உன்னை விரும்பி அவள் பட்ட அவமானம் கொஞ்சமில்ல உனக்கு அது வேண்டாம் .

மௌனம் உனக்கென்ன நீ சுவிசில .உன்ரை ஆட்கள் அவளின் குடும்பத்தையே அவமானப்படுத்தினது உனக்கு தெரியுமே?

மௌனம்

உன்னுடைய மச்சாள் சுமதிக்கு தான் உன்னோட கலியாணம் எண்டு உன்னுடைய மாமி தலைகீழாய் நிக்கிறா உனக்கு தெரியாதே`?

இவன்-----முதலில் உன்னை சாக்காட்டிபோடுவன்.எனக்கு யாரும் ஏதும் சொல்லேல்லை.அக்கா சொன்னா கிலாலியில அவளும் குடும்பமும் இல்லை எண்டு. அண்டைக்கே நான் செத்துப்போனான் மச்சான்.அதைவிடு உன் தங்கை துளசி என்ன செய்யுற ?

அம்மா அப்பா மற்றவை எல்லாரும் சுகமா இருக்கினமோ?

-- துளசிக்கு கால் போச்சு மச்சான் .ஆட்டுக்குட்டிக்கு கிழுவமிலை பறிக்க போனவள்.அங்காலை போகாதையுன்னோ எண்டு இயக்கம் சொன்னது மச்சான்.விதைச்சிருக்கிரம் கவனம் எண்டு சொன்னவங்கள் .இவள் சொல்வார்த்தை கேட்டேல்லை .எல்லாம் போச்சு மச்சான்.வலது கால் இல்லை .கால் போனதுக்கு அழேல்லையடா ஆட்டுக்குட்டி செத்ததுக்கு அவள் அழுதது இருக்கே .மச்சான் எனக்கு தங்கைச்சி எவ்வளவு உயிர் தெரியுமே.போச்சடா?

மற்றது உன்ரை ஆள் செத்தது எண்டதை நம்பிட்டியோ?

---------------------------------------------------------------------------------------------

நறுக்கப்பட்ட இறகுகள் மீண்டும் முளைக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.