Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தீஸ்கர்: கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் விடுவிக்கப்பட்டார்!

Featured Replies

:சத்தீஸ்கர் மாநிலத்தில்,மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

அவரை விடுவிக்க வேண்டுமானால்,சிறையில் உள்ள 17 மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும்;மாவோயிஸ்டு தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்; பழங்குடியினர் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்புக்கும்,மாவோயிஸ்டுகள் தரப்புக்கும் இடையே

நடைபெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து மேனன் மே 3ம் தேதியன்று, அதாவது இன்று விடுவிப்பதாக ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள குறுந்தகவ்லில் மாவோயிஸ்டுகள் தெரிவித்திருந்தனர்.

தாட்மேட்லா பகுதியில் ஆட்சியரை ஒப்படைக்கப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்ததால்,மாவோயிஸ்டுகள் சார்பில் அரசுடன் பேச்சு நடத்திய மத்தியஸ்தர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஹர்கோபால் ஆகியோர்,மேனனை அழைத்து வருவதற்காக தாட்மேட்லா வனப்பகுதிக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், ,மாலை 3 மணி அளவில் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் விடுவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சி

பால்மேனன் விடுவிக்கப்பட்டது குறித்து அவரது மனைவி மற்றும் பெற்றோர் ,உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட இருப்பட இருப்பதையொட்டி திருநெல்வேலி, சமாதானபுரத்தில் உள்ள அவரது வீடு முன்னர் இன்று ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்களும் குவிந்திருந்தனர்.

இந்நிலையில் பால்மேனன் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டின் அருகிலுள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மனம் நெகிழ்ச்சியுடன் செய்தியாளர்களை சந்தித்த அலெக்ஸ் பால்மேனனின் தந்தை வரதாஸ், தமது மகன் விடுவிக்கப்பட்டது தமக்கும், தமது குடும்பத்தின்ருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், கூண்டில் அடைக்கப்பட்ட கிளி விடுதலையானது போன்ற் மகிழ்ச்சியை தாம் அடைவதாகவும் அவர் கூறினார்.

அவரது விடுதலைக்கு முயற்சி செய்த அரசியல் தலைவர்களுக்கும், அவரை பத்திரமாக விடுவித்தத்ற்காக மாவோயிஸ்டுகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

மாவோயிஸ்டுகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்க வேண்டும். அதற்காக யாரையும் கடத்த வேண்டாம் என்று அவர் மேலும் கூறினார்

.

6 மாவோயிஸ்டுகளுக்கு ஜாமீன் மனு தாக்கல்

முன்னதாக மாவோயிஸ்டுகள் கோரியபடி, சிறையில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 6 பேருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து பால் மேனன் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே, அலெக்ஸ் பால்மேனனை விடுவிக்க அரசு தரப்புக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி,மாவோயிஸ்டுகள் விடுவிக்க கோரிய நபர்கள் உள்ளிட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் அனைத்து சிறைகளிலும் உள்ள அப்பாவிகள் மீதான வழக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.இதற்காக மாவோயிஸ்டுகளுடன் அரசு தரப்பு தூதர்களாக சென்ற இரண்டு பேரில் ஒருவரான நிர்மலா பச் தலைமையில் உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்படும்

http://news.vikatan.com/?nid=7822#cmt241

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒன்றும் நல்லபண்டமில்லை, சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்தி அவர்களது பாரம்பரிய நிலங்களை அம்பானிகளுக்கும் ஏனைய சர்வதேச பணமுதலைகட்கும் பங்குபோட்டுக்கொடுத்து கொழுத்த இலாபம் சம்பாதிக்க வழிவகைசெய்து அப்பிரதேசத்தின் பழங்குடிமக்களது வாழ்வுரிமையைபறிக்க இந்திய ஏகாதிபத்திய அரசால் இயக்கப்பட்ட கைகூலி. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒடுக்கப்படும் மக்களது வாழ்வுரிமையைத் தட்டிப்பறிக்க கடந்தகாலங்களிலும் இப்போதும் யாராவது தமிழன் ஒருவன் தன் தரங்கெட்டதனத்தால் கல்வியை சாட்சியமாகவைத்து ஆதிக்க சக்திகளுக்கு அடிமைசேவகம் செய்வது பன்னெடுகாலமாகவே நடந்துவருகின்றது. இவ் இந்திய ஏவல் நாயை கல்லால் அடித்துக் கொலைசெய்யவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.