Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணெய் வள அரசியல் + கனியவள அரசியல் = பயங்கரவாதத்துக்கெதிரான போர்!

Featured Replies

9/11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை உலகளவில் தொடக்கி இருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம் என்பது பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உலகளவில் ஏற்படுத்தி இருந்தபோதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஒரு தலைப்பட்சமாகவே அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்பது மேற்கின் நவகாலனிய வடிவமோ என சந்தேகிக்கும் அளவுக்கு இன்று அது எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

9/11 தாக்குதலின் சூத்திரதாரி என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டும் அல்-கைதா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை பிடிப்பதை காரணமாக கூறியே அமெரிக்கா 2001 ல் ஆப்கானை ஆகிகிரமித்ததை நாம் அறிவோம். (இதுவே அமெரிக்காவின் பயங்கரவாத்துக்கெதிரான? முதலாவது யுத்தம்) ஆனால் ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின்; வெளிப்படையான காரணங்களுக்குப் பின்னால் எப்போதும் மறைமுக அமெரிக்க நலன்சார் அரசியல் அதன் ஒவ்வொரு ஆக்கிரமிப்புக்குப் பின்னாலும் இருந்தே வந்துள்ளது. கடந்த கால அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு வரலாறுகள் நமக்கு இந்த உண்மையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எண்ணெய் வள அரசியலே காரணம் என்பது ஏறத்தாழ நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். எனினும் உலகின் மிக வறிய நாடுகளுள் ஒன்றான ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்குப் பின்னால் உள்ள அரசியல் இப்போது தெளிவாகி வருவது போல் உள்ளது. ஓஸாமா பின்லேடனைப் பிடிப்பது, தாலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றுவது, ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது போன்ற காரணங்களே ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பின் போது அமெரிக்காவால் கூறப்பட்டவை.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னால் ஆப்கானிஸ்தான் இன்று அமெரிக்காவுக்கும்,உலகுக்கும் வேறு வழிகளிலும் முக்கியம் பெறும் ஒரு நாடாக மாறியுள்ளது. அங்கு அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டு வரும் கனிய வள ஆய்வுகள் மற்றும் அதன் பெறுபேறுகளால் ஆப்கானிஸ்தான் உலகின் முக்கிய கனிமப் பொருள் நிறைந்த கேந்திர நிலையமாக ஆகுவதுற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் வெற்றியளித்துவரும் கனிய வள ஆய்வுகள்,அமெரிக்கா அதன் மூலம் அடையும் புளகாங்கிதம் இவைகளை வைத்துப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் உள்ளரசியலை இன்று வேறொரு கோணத்தில் எங்களை சிந்திக்கத் தூண்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கனிய வளம்AP-04.jpg

மத்தியாசியா நாடென்றும், தென்னாசிய நாடென்றும் மாறிமாறி குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான் இன்று தென்னாசிய நாடுகளின் கூட்டுச் சங்கமான ‘சார்க்’ அமைப்பிலும் அங்கம் வகிக்கிறது. உலகில் மிகவும் வறுமையான நாடுகளுள் ஒன்றாக கொள்ளப்படும் ஆப்கானிஸ்தான் அதன் வரலாற்றில் தொடரும் பல்வேறு போர் நடவடிக்கைகளால் மேலும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. போர்,வறுமை,ஊழல்,அடிப்டைவாதம் என்பனவே இன்றைய ஆப்கானிஸ்தானின் பொது அடையாளமாக உள்ள நிலையில் ஆச்சரியமளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் கனியவளம் குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஆய்வுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் ஒரு கனிய வளங்கொழிக்கும் நாடு என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கனியவளம் குறித்த கண்டுபிடிப்பு அண்மையில் கண்டறியப்பட்ட ஒரு விடயமல்ல, ஆப்கானிஸ்தான் உலகுக்குத் தேவையான முக்கியமான கனியவளங்களைக் கொண்ட நாடு என்ற உண்மையை 1980 களிலேயே அறிய முடியுமாக இருந்தது. 1980 களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது சோவியத் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆப்கானிஸ்தானில் கனிய வள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானின் சில பாகங்களில் அவர்கள் மேற்கொண்ட கனிப்பொருள் வள ஆய்வுகளின்போது அவர்களால் அது குறித்து பல்வேறு தகவல்களை சேகரிக்க முடிந்தது. 1989ல் சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டபோது ஆப்கானிஸ்தானின் புவியியல் ஆய்வாளர்கள் சிலர் அந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாலிபான்களின் ஆட்சியை கவிழ்த்த பிறகு அவர்கள் அந்த தகவல்களை மீண்டும் காபூலிலுள்ள புவியியல் ஆராய்ச்சி நூலகத்திற்கே கையளி;த்ததாக கூறப்படுகிறது.

2004ல் ஆப்கானிஸ்தானின் ஓர் எல்லைப் பகுதியின் மீள்கட்டுமாணப் பணிகளுக்காக அமெரிக்க புவி ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். காபூலிலுள்ள புவியியல் ஆராய்ச்சி நூலகத்தில் இது பற்றிய தகவல்கள் மற்றும் வரைபடங்கள் போன்றன அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தன.AP-02.jpg

இதையடுத்து 2006 ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் கனியவள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சோவியத் யூனியனின் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்த அந்த கனியவள ஆய்வுகளின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை முக்கிய உசாத்தணையாகக்கொண்டே அமெரிக்க புவியில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வினைத் தொடங்கினர்.இக்கனியவள ஆய்வுகளின் விளைவாக ஏறத்தாழ 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனிமப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவரை ஆப்கானிஸ்தானில் அறியப்படாமலிருந்த பாரிய கனிய வளங்கள் இந்த ஆய்வுகளின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பின்வரும் கனிய வளங்கள் இதில் கண்டறியப்பட்டுள்ன.

கனியம் காணப்படும் இடங்கள்

செம்பு- இக்கனியம் ஹெராத், ஃபராஹ், கபிஸா, கந்தகார், சபுல் போன்ற மாகாணங்களில்; காணப்படுகிறது

தங்கம்- தகார் மற்றும் பதாக்ஸான் போன்ற மாகாணங்களில் காணப்படுகிறது.

இரும்புத்தாது -பாமியன் மாகாணத்தில் காணப்படுகிறது

மாணிக்கக் கல் -ஜெஜலக், பதாக்ஸான்,நூரிஸ்தான், பன்ஜிர் பள்ளத்தாக்கு

பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு- வடக்கு ஆப்கானிஸ்தான்

மேலும் கைத்தொழில் துறையை விருத்தி செய்வதற்குத் தேவையான லித்தியம் போன்ற மிகவும் மதிப்ப வாய்ந்த உலோகப் பொருட்களும் இக் கண்டுபிடிக்கப்பட்ட கனிப்பொருட்களில் அடங்குகின்றன.

ஆப்கானைப் பொறுத்தவரை இக்கனியவள கண்டுபிடிப்புக்கள் ஆப்கானின் சமூக-அரசியல்-பொருளாதாரத் துறைகளில் நேர் மறையானதும் எதிர்மறையானதுமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவை..உலகின் மிக வறுமையான நாடுகளுள் ஒன்றாக ஆப்கான் விளங்குகிறது. ஆப்கானின் பொருளாதாரரீதியான புள்ளிவிபரங்களின்படி அங்கு 2/3 வீதமான மக்கள் நாளொன்றுக்கு 2 அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர். அதேநேரம் வேலையில்லா வீதம் மிக அதிகரித்த அளவில் காணப்படுகிறது. போதாக்குறைக்கு அது தொடராக சந்தித்து வந்த போர் நடவடிக்கைகள் காரணமாகவும் அதன் பொருளாதாரம் மேலும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் இக்கனிய வளக் கண்டுபிடிப்பானது ஆப்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிச்சயம் உதவும்.AP-03.jpg

ஆப்கானின் கனியவள அமைச்சின் ஆலோசகர்களில் ஒருவரான கலீல் ஜூம்ரைனி “ஆப்கான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இது மாறும்” என்கிறார். சர்வதேச கனிப்பொருள் வர்த்தக சந்தையில் ஆப்கானுக்கும் ஒரு நல்ல இடம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது. இன்று ஆப்கானுக்கு இது தொடர்பிலான நிபுணத்துவ ஆலேசனைகளை வழங்குவதற்காக பென்டகன் ஒரு சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.அதேநேரம் இக்கண்டுபிடிப்பானது ஆப்கானில் எதிர்மறையான சில விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இது நாட்டில் அமைதிக்கு பதிலாக முரண்பாடுகளையே தோற்றுவிக்கக்கூடிய நிலையும் காணப்படுகிறது.இக்கனிய வளங்கள் காணப்படும் மாவட்டங்களில் மத்தியரசு-மாநில அரசுகள் மற்றும் கிளர்ச்சிக் குழுத் தலைவர்கள் போன்றவர்களுக்கிடையில் முடிவற்ற நீண்ட தொடர்ச்சியான மோதல்களையும் இது தோற்றுவித்துள்ளது. இன்னொரு புறம் தாலிபான்கள் மீண்டும் நாட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குத் தீவிரமாக போராடக்கூடிய நிலையும் தோன்றியுள்ளது. அது தவிர ஏற்கனவே ஊழல் மலிந்து காணப்படும் கர்ஸாயி அரசாங்கத்தில் இது மேலும் பல சீரழிவுகளுக்கு வழிவகுக்கவும் கூடும்.

கனிய வளங்களும் அமெரிக்காவின் புளகாங்கிதமும்.

உண்மையில் ஆப்கானில் வெற்றியளித்துள்ள கனிய வள ஆய்வுகள் அமெரிக்காவை மிகவும் புளகாங்கிதத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து அதன் கனிய வளங்களை சூறையாடும் ஒரு ஏகாதிபத்திய சுரண்டலையே ஆப்கான் மீது அமெரிக்கா பிரயோகிக்கப்போகிறது. அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டு வரும் கருத்துகளும் அவர்களின் சில நடவடிக்கைளும் அமெரிக்காவின் இந்த நோக்கத்தை வெளிப்படையாக்கியுள்ளன. அமெரிக்கப்படைகளின் மத்திய கட்டளைக் கொமாண்டர் ஜெனரல் “இங்கே ஒரு ஆச்சரியம் மறைந்திருக்கிறது” என புளகாங்கிக்கிறார். இது இன்று ஒரு பாரிய முக்கியத்துவமிக்க கண்டு பிடிப்பு என்று மேலும் அவர் உறுதிப்படுத்துகிறார். இந்த மகிழ்ச்சிக் கொந்தளிப்பின் அரசியல் என்ன என்பதை எல்லோரும் இப்போது கிட்டத்தட்ட புரிந்து கொண்டுவிட்டனர்.

அதேநேரம் அமெரிக்கா, ஆப்கான் இன்னும் கனிய வளங்களை தனியாக கையாளும் நிலைக்கு தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை என்றும் ஆப்கான் அதனை தனது சொந்த வருமானத்துக்குரிய துறையாக மாற்றிக் கொள்வதற்கு பல தசாப்தங்கள் தேவைப்படலாம் என்றும் ஆலோசனைகூறியதோடு மட்டுமல்லாது மேலும் ஒரு படி சென்று அந்த ஆலோசனைகூறும் பணியையும் தானே பொறுப்பேற்றதுடன் ஆப்கானில் கனிப்பொருள் அபிவிருத்தியைக் கையாள்வதற்கான ஒரு சிறப்புக் குழுவொன்றையும் பென்டகன் நியமித்துள்ளது.

பென்டகன் கனிப்பொருள் ஆராய்ச்சித் தலைவரும், அமெரிக்க வர்த்தகப் பாதுகாப்புத் துறையின் துணைச் செயலாளரும “இதனைக் கையாள்வதற்கு ஆப்கானின் கனிய வள அமைச்சு தயாரில்லை. நாங்கள் அவர்களைத் தயார்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுவதிலிருந்தே அமெரிக்க நலன் வெளிப்படுகிறது.

இக்கனிய வளங்களின் பயன்பாடு வேறு எவரிடமும் சென்றுவிடக்கூடாது என்பதிலும் அமரிக்கா மிகவும் அவதானமாகவேயுள்ளது. பிராந்தியத்தில் சீனா இதன் மீது கடுமையான கவனத்தைச் செலுத்தி வருகிறது. ஆப்கானின் கனியவள அமைச்சர் இது தொடர்பில் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்த முனைந்தபோது அவர் பதவி நீக்கப்பட்டார்.ஆப்கானின் இக்கனிய வள அபிவிருத்தியை விருத்திசெய்யும் பணியை பவுல் பிரிங்லி அமெரிக்காவைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். அவர் “இங்கு ஒரு பாரிய பிரச்சினையுள்ளது. சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வின் அடிப்படையில் இதனை விருத்தி செய்ய முடியுமா? எப்படி அந்த வேலையை செய்வதென்பது யாருக்கும் தெரியாது” என அவர் குறிப்பிட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இக்கனியவளப் பொருளாதாரத்தை விருத்தி செய்து ஏற்கனவே வறுமையினாலும் போரினாலும் சீரழிந்துள்ள ஆப்கானின் பொருளாதாரத்தை சீர்படுத்தி ஆப்கானை சமூகப் பொருளாதார அரசியல் அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கத்தை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதைத்ததான் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுக்களும் நடவடிக்கைகளும் எடுத்துக் காட்டுகின்றன.. உண்மையில் அமெரிக்காவிடம் ஆப்கானோ உலகமோ இதனை எதிர்பார்க்கவும் முடியாது

NEWYORK TIMES

தமிழில்-ஜே-எச்

http://eathuvarai.net/?p=332

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.