Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் ஈழப்பாசம்! - கேள்வி எழுப்புகிறது இந்திய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

karunanithi-180512-150.jpg

சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் உரை ஆற்றிய கருணாநிதி திமுக ஆட்சி அமைந்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற நேரத்தில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் வாழ்த்துப் பெறவும் டெல்லி சென்றேன். ராஜீவ் காந்தியைச் சந்தித்த போது என்னிடம் பிரபாகரன் பற்றி விசாரித்த ராஜீவ் காந்தி பிரபாகரன் சிறந்த வீரர் என்று சொன்னதோடு பிரபாகரனின் அதிகாரத்தின் கீழ் தமிழ் ஈழம் உருவாகத் தம்மாலான உதவிகளைச் செய்வதாகச் சொன்னார்.

நீங்கள் , மாறன், கோபாலசாமி ( வைகோ ) வவுனியா சென்று தங்கி இருந்து எனக்குத் தகவல் அனுப்புங்கள். நான் பிரபாகரனோடு பேசி அவர் என்ன கேட்கிறார் என்று தெரிந்து கொள்கிறேன்.பிறகு உங்களோடு பேசுகிறேன் என்று ராஜீவ் காந்தி சொன்னார். மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் திரும்பி இவ்விசயத்தை திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடமும் சொன்னேன்.அதற்குள் தமிழ்நாட்டில் ஏதேதோ நடந்து விட்டது. அதன் காரணமாக அந்த முயற்சி தொடர வில்லை. தொடர்ந்து இருந்தால் ராஜீவ் காந்தியே தமிழ் ஈழத்தைப் பெற்று தந்து இருப்பார்.

தமிழ் ஈழம் பெறும் முயற்சி நாசமானதற்கு என்ன காரணம் என்பதை வெளியே சொல்லி விவகாரம் ஆக்க விரும்ப வில்லை. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று பேசியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலைக்கு தி மு க வே காரணம் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படதன் காரணத்தால் தி மு க தேர்தலில் தோற்றபோதோ ஜெயின் கமிஷன் விசாரணையின் போதோ கூட, இதைத் தெரிவிக்கவில்லை கருணாநிதி.

ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் எனச் சொல்லப்பட்டு வழக்கு விசாரணை நடக்கும்போது கூட ,அடப்பாவிகளே! அவசரப்பட்டு விட்டீர்களே! ராஜீவுக்கு இப்படி ஓர் எண்ணம் இருந்தது உங்களுக்குத்தெரிந்திருந்தால் இப்படிச்செய்திருக்க மாட்டீர்களே என்று ஒரு அறிக்கை கூட விடவில்லை. அல்லது அவர் வழக்கமாக நானே வினா நானே விடை என்று எழுதும் பகுதியில் கூட இப்படித் தெரிவித்ததில்லை.

ராஜீவ் காந்தியின் தமிழ் ஈழ விருப்பம் குறித்து மத்தியில் 2004 ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் போதோ 2009 ல் இறுதிக் கட்டப் போர் நடைபெற்று வரும் போதோ வாயைத் திறக்காத கருணாநிதி தற்போது ராஜீவ் காந்தியின் தமிழ் ஈழ வேட்கை குறித்து பேசியுள்ளது கருணாநிதி எதை மனதில் வைத்து இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்று தமிழ் இன உணர்வாளர்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009 ம் ஆண்டு மே மாதம் இறுதிக் கட்டப் போரில் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசி இலங்கை அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப் பட்ட போது கருணாநிதி என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது தமிழக மக்கள் அறியாததல்ல. தம்முடைய நிறைவேறாத ஆசை தனித் தமிழ் ஈழம் மட்டுமே என்று தெரிவித்து இருந்த கருணாநிதி ஈழத்தமிழர்கள் மீதும் தனித் தமிழ் ஈழம் அமைவதிலும் உண்மையிலேயே அக்கறை கொண்டு இருந்தால் 2004 ஆமாண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்த போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்து இருப்பார்.காரணம் 2004 ஆமாண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்த போது திமுகவுக்கு இருந்த மரியாதை அந்த மாதிரி.

இன்னின்ன இலாகா வேண்டும், இத்தனை இலாகா வேண்டும் என்று பேரம் பேசவும், மகள் கனிமொழியின் ஜாமீனுக்காகவும் டெல்லி சென்ற கருணாநிதி ஈழத் தமிழர் நலனுக்காக எத்தனை முறை டெல்லி சென்று இருப்பார்?

கருணாநிதியின் கபட நாடகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோவும் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள ராணுவத்துக்கு ராணுவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை நிறுத்த கருணாநிதி கோரிக்கை விடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். டெசோ உறுப்பினர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் டெசோ இனி செயல்படாது என்று அறிவித்த கருணாநிதி மீண்டும் டெசொவுக்கு உயிர் கொடுத்துள்ளார். டேசொவின் உறுப்பினரான பழ நெடுமாறனும் காங்கிரசைக் கழட்டி விட கருணாநிதி செய்யும் முயற்சியே இது என்று கூறியிருந்தார்.

கருணாநிதியின் திடீர் தனித் தமிழ் ஈழம், ஈழத் தமிழர் பாசம் எல்லாம் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்காக நடத்தப் பெறும் நாடகமோ என்ற சந்தேகம் தமிழ் இன உணர்வாளர்களிடையே எழுந்துள்ளதையும் ஒதுக்கி விட முடியாது.

நன்றி- இந்நேரம்

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.