Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் ஆதரவுத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

congress-200512-150.jpg

ராஜிவ் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், இந்தக் கொலைக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக காங்கிரசார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சர்வதேச இனப்படுகொலை நாளாகக் கருதி, அப்படுகொலைக்கு நியாயம் கேட்டு, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணியை சென்னை, கோவையில் நடத்தினர்.

பொதுக்கூட்டங்களில் ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் சிலர் பேசியுள்ளனர். இவர்களின் பேச்சுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக காங்கிரசார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நாளை ராஜிவின் 22வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தில் ரத்த தானம், அன்னதானம், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை காங்கிரசார் நடத்துகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ராஜிவ் நினைவிடத்தில், "ராகுல் காந்தி மக்கள் சேவகர்கள்' சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதத்தை, அகில இந்திய காங். உறுப்பினர் ரமணி துவக்கி வைக்கிறார். இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 11.30 மணி வரை தொடர்ந்து 30 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொள்ள, காஞ்சிபுரம் போலீஸ் டி.எஸ்.பியிடம் அனுமதி கேட்டு, ராகுல் சேவகர் பேரவையின் தலைமை சேவகர் மோகன் காந்தி கடிதம் வழங்கினார்.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத காங்., பிரமுகர் கூறியதாவது: கருணாநிதி தலைமையில், டெசோ' என்ற அமைப்பு உருவாகியுள்ளது. இந்த அமைப்பை உருவாக்கியதில் காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜிவ் மற்றும் அவருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் என 16 பேரை, விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். கொலையாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்.

ராஜிவ் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பேசுபவர்கள் மீதும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத் தலைவர்களின் புகைப்படத்துடன் பிரசாரம் செய்து, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=60452&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய தமிழகமல்ல

வாங்கப்போகினம்

விதி யாரை விட்டது

கருணாநிதியை விழுத்த தான் இந்த திட்டம். தமிழ் நாட்டு காங்கிரசார், அவர் மீதுள்ள கோபத்தைதான் இப்படி காட்டுகிறார்கள். அவர் தலை எடுப்பது இனி கஸ்ட்டம்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இருப்புக்காக போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இது ஒரு விசப்பரிட்சை

இதற்கும் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியினர் ஒரு பாடம் புகட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக காங்கிரஸ் மிகவும் பிழையான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

இப்போது இருக்கின்ற குறைந்தளவு ஆதரவும் இனிமேல் கிடைக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“புலிகளின் தலைவர்களை, பிரபாகரன் போட்டோவுடன் அமுக்குங்கள்!” -ராகுல் சேவகர்

images_31.jpg

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், யுத்தம் முடிவுக்கு வந்த மே 18-ம் தேதி, தமிழகத்தில் சில இன உணர்வு அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்தின.

அந்த நிகழ்ச்சிகளுக்கு எதிர் நிகழ்ச்சி போல, நாளை (21-ம்) தேதி, “விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்களை கைது செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன், தமிழக காங்கிரஸ் உண்ணாவிரதம் இருக்கவுள்ளது.

நாளை என்ன விசேஷம்? ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நினைவு தினம்.

• 2009-ல் இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது, பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு மே 18-ம் தேதி அறிவித்தது.

• விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர் என்ற அறிவிப்பு, மே-19-ம் தேதி வெளியானது.

• யுத்தத்தின் இறுதி பீரங்கி வேட்டு (ஜெயித்த அணி, தோற்ற அணி இருந்த திசையில் உள்ள வெட்டவெளியை நோக்கி பீரங்கியால் சுடும் சடங்கு), என்ற சடங்கு மே 20-ம் தேதி இலங்கை ராணுவத்தால் நிறைவேற்றப்பட்டது.

• அதற்கு மறுதினம் மே 21-ம் தேதி ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நினைவு தினம் வந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்ட அறிவிப்பு அல்லது, யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட அறிவிப்பை, ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தில் வெளியிடுமாறு, மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது என்று ஒரு கதை அந்த நாட்களில் அடிபட்டது. வெற்றிச் செய்தியை தாமதிக்க விரும்பாத இலங்கை அரசு, அறிவிப்பை உடனே வெளியிட்டுவிட்டது என்று சொல்வார்கள்.

யுத்தம் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளின்பின் இப்போது, இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த 3-வது நினைவு தினத்தில் இருந்து 72 மணி நேரத்தின்பின் வரும் ராஜிவ் காந்தியின் 22-வது நினைவு தினத்தை, தமிழக காங்கிரஸ் கட்சி பெரியளவில் நடந்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ரத்த தானம், அன்னதானம், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி என்று அன்றைய தினம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள தமிழக காங்கிரஸ். அத்துடன் நாம் மேலே குறிப்பிட்ட உண்ணாவிரதமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் சேவகர்கள் என்ற அமைப்பின பெயரில், உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

“இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் போட்டோவை வைத்து பிரசாரம் செய்யும், விடுதலைப்புலி ஆதரவு தலைவர்களை கைது செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன், 30 மணி நேர உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெற்றுள்ளது தமிழக காங்கிரஸின் கிளை அமைப்பான, ராகுல் சேவகர்கள்.

எமக்கு இரு சந்தேகங்கள்.

முதலாவது, அதென்ன 30 மணி நேர கணக்கு? இரண்டாவது, போராட்டம் நடத்தும் அமைப்பின் பெயரை (‘ராகுல் சேவகர்கள்’) எங்கிருந்து எடுத்தீர்கள்? சேவகம் செய்வதற்கு வேறு கௌரவமான பெயர் கிடைக்கவில்லையா?

http://www.kathirava...?mid=35&id=2347

Edited by தமிழரசு

தமிழினப் படுகொலையாளர்கள், தமிழினப் படுகொலைகாரர்களுக்கு துணை போபவர்கள் தூக்கு மேடையேற்றப்பட்டு தமிழ் மண்ணில் இருந்து முற்றாக அகற்றப்பட வேண்டியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.