Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிகால் சோழன்

Featured Replies

கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.

கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதித் தற்கொலை செய்து கொண்டான். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம் .

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

பொருநாற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால்வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.

http://ta.wikipedia....i/கரிகால்_சோழன்

Edited by சொப்னா

பகிர்வுக்கு நன்றி சொப்னா.

கரிகால் சோழன் இலங்கையில் போர் நடத்தி, போரில் வென்று 10 ஆயிரம் போர் கைதிகளைக் இலங்கையில் இருந்து அழைத்து வந்து இந்த கல்லணையை கட்டியதாக ஒரு நூலில் படித்தேன். இக்கூற்று உண்மையானால் சங்க காலத்திலேயே தமிழர்கள் மரக்கலம் கொண்டு கடலோடிய கூற்றும் உண்மையாகும். இதைப் பற்றி ஏதும் இலக்கியக் குறிப்புகளோ, கல்வெட்டு குறிப்புகளோ காணக் கிடைத்ததால் அறியத் தரவும்.

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பகிர்வுக்கு நன்றி சொப்னா.

கரிகால் சோழன் இலங்கையில் போர் நடத்தி, போரில் வென்று 10 ஆயிரம் போர் கைதிகளைக் இலங்கையில் இருந்து அழைத்து வந்து இந்த கல்லணையை கட்டியதாக ஒரு நூலில் படித்தேன். இக்கூற்று உண்மையானால் சங்க காலத்திலேயே தமிழர்கள் மரக்கலம் கொண்டு கடலோடிய கூற்றும் உண்மையாகும். இதைப் பற்றி ஏதும் இலக்கியக் குறிப்புகளோ, கல்வெட்டு குறிப்புகளோ காணக் கிடைத்ததால் அறியத் தரவும்.

இலக்கிய குறிப்புகளோ கல்வெட்டுக்களோ தேடீட்டு இருக்கேங்க ஆதித்த இளம்பிறையன் அண்ணன் . ஆனா ஒரு வலைப்பூவிலை ஒரு கட்டுரை பாத்தேங்க . இது வரலாற்று ஆவணமான்னு எடுக்க முடியுமான்னு தெரியலீங்க .

02.03கி.ஆ 2012 தமிழாண்டு2043-பண்டைய தமிழகத்தின் கடற்கரை 1500 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்திருந்தது. இதனால் தமிழர்கள் தொல்பழங்காலத்திலேயே வெளிநாடுகளோடு வணிகத் தொடர்பும் கலாசார தொடர்பும் கொண்டிருந்தனர்.

தமிழக கடற்கரையில் வாழ்ந்த மக்கள் சிறந்த கடலாடிகளாக இருந்தார்கள். குறிப்பாகக் கப்பல் கட்டும் கலையிலும் அலைகடலில் கப்பலைச் செலுத்தும் கலையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகம் மற்றும் மதப்பிரசாரம் ஆகியவற்றுக்காகத் தமிழர்கள் சென்றார்கள். பிறகு அந்நாடுகளில் குடியேறினர். இத்தகைய குடியேற்றங்கள் கி.பி.முதலாம் நூற்றாண்டில் தொடங்கி சில காலத்திற்கு நடைபெற்றது. மியான்மர், சீனம், கம்போடியா முதலிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம், போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்.

தாம் குடியேறி வாழ்ந்த இடங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்கள். இதன் விளைவாக இந்த நாடுகளில் பண்டைக்காலச் சின்னங்கள், தமிழகத்தில் கிடைத்துள்ள அதே அளவுக்கு தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான சூலங்கள், வேலின் அலகும் மலேசியாவில் கிடாவிலும் சுமத்திராவிலும் பிலிப்பைன்சிலும் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாய்த் தெய்வம் போன்றவை தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன.

சங்க பழங்கால சூதபவழம் போன்றவற்றில் செய்யப்பட்டுள்ள மணிகள், வளையல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின்போது குவியல்குவியலாகக் கிடைத்துள்ளன. இதைப்போன்ற மணிகளும் வளையல்களும் காம்போசம், பிலிப்பைன்சிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

போருக்குப் பயன்படும் ஈட்டி, வேல், வாள், அரிவாள், கோடாலி போன்ற பலவகைக் கருவிகள் தமிழ்நாட்டிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் ஒரேமாதிரியாகக் கிடைத்துள்ளன.

முருக வழிபாட்டுக்குரிய வேல், சேவல், காவடி போன்ற பொருட்கள் ஆதிச்சநல்லூர், பிலிப்பைன்ஸ் தீவுகளில் கிடைத்துள்ளன.

தென்கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ள பழைய பெருங்கற்காலப் பண்பாடு, சோழ மண்டலக் கடற்கரையிலிருந்து அந்நாடுகளுக்குச் சென்று பரவியிருக்க வேண்டுமென அறிஞர்கள் கருதுகிறார்கள். சாவகம், சுமத்திரா, பாலி, போர்னியோ, பிலிப்பைன்ஸ் தீவுகளிலேயே முதல் காலகட்ட பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்கள் ஏராளமான அளவில் கிடைத்துள்ளன. சோழ மண்டலக் கடற்கரைக்கு நேராக அமைந்துள்ள தீவுகளாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்ககாலத்திற்கு முன்பிலிருந்து கடைச்சங்க காலம் முடிவு வரை கி.பி.350 வரை தமிழகத்தில் வீசிய பண்பாட்டு அலை மியான்மர், சாம்பா, காம்போசம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சுமத்திரா, சாவகம் முதலிய தீவுகளிலும் பரவியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய நடுகற்கள் அமைக்கும் வழக்கம் மேற்கண்ட நாடுகளிலும் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும்.

மன்னர் குலம்

தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களுக்கும் தமிழக மன்னர் குலங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு இருந்திருப்பதற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவ, சோழ, பாண்டிய மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்களே தென்கிழக்காசிய நாடுகளின் அரச பரம்பரைகளைத் தோற்றுவித்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.

தமிழக மன்னர் குலங்களுக்குரிய குடிப்பெயர்களை தென்கிழக்காசிய மன்னர்கள் தங்களுக்கும் சூட்டிக் கொண்டார்கள். மணவினை உறவும் இவர்களுக்குள் இருந்தது. சமய, பண்பாடு ரீதியான தொடர்புகளும் அந்நாடுகளுக்கும் தமிழர்களுக்குமிடையே நெருக்கமாக இருந்தது.

வர்மன் என்னும் குடிப்பெயரை கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ அரச மரபினர் தங்கள் பெயரோடு சேர்த்து வழங்கினர். இந்த வர்மன் என்னும் பெயரைத் தம்முடைய சிறப்புப் பெயராகத் தென்கிழக்காசிய நாடுகளை ஆண்ட பல்வேறு மன்னர் குலங்களைச் சேர்ந்தவர்கள் தத்தம் பெயர்களோடு சேர்த்துப் பயன்படுத்தியுள்ளனர்.

மியான்மரைச் சேர்ந்த மோன் பழங்குடி மன்னர்கள் விக்கிரவர்மன், பிரபுவர்மன் என்னும் பெயர்களை உடையவர்களாகத் திகழ்ந்தனர்.

பியூனானை ஆண்ட அரசன் ஒருவர் குணவர்மன் என்று குறிப்பிடப்படுகிறான்.

சம்பாவின் புகழ்மிக்க அரசன் பத்திரவர்மன் ஆவான். காம்போசத்தை ஆண்ட முதல் அரச மரபைச் சேர்ந்தவன் உருத்திரவர்மன் ஆவான்.

மலேயாவை ஆண்ட மன்னர்கள் சிலரும் வர்மன் என்னும் பெயரைச் சூட்டிக்கொண்டனர். அவர்களில் விஷ்ணுவர்மன் முக்கியமானவன். சாவகத்தை ஆண்ட மன்னர்களுள் தேவவர்மன், பூர்ணவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். போர்னியோவை அசுவவர்மன் என்னும் மன்னன் ஆண்டான்.

இந்த வர்மன் என்னும் குடிப்பெயரை முதலில் சூட்டிக்கொண்ட பியூனான், சம்பா, காம்போச அரசர்கள் பல்லவ அரசர்களுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவர்களாக இருந்திருக்கவேண்டும். மாறன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் சம்பாவை ஆண்டுள்ளான். அவன் பாண்டிய அரச மரபினைச் சேர்ந்தவன் என்பது அறிஞர் பிலியோசாயின் கருத்தாகும்.

இராசாதிராசன் என்னும் பட்டப்பெயரை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயினவுங்கு என்னும் அரசன் சூட்டிக்கொண்டுள்ளான். இப்பெயர் இராசேந்திர சோழனின் மூத்த மகனின் பெயராகும். இதே பட்டப்பெயரை காம்போசத்தை ஆண்ட சூரியவம்ச இராம மகாதரன் என்பவனும் சூட்டிக்கொண்டுள்ளான். பிற்காலச் சோழ மன்னர்கள் பயன்படுத்திய திரிபுவன சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை மியான்மரை 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கியாசித்தன் பயன்படுத்தியுள்ளான்.

12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சாவகத்தை ஆண்ட சைலேந்திர அரசன் ஒருவன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன் என்னும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ளான். இவன் பாண்டிய குலத்தோடு தொடர்பு கொண்டவனாகத் தோன்றுகிறது.

திருமுறை இலக்கியம் :

தமிழகத்தில் மட்டுமின்றி தமிழ் நாகரிகம், பண்பாடு, சமயம் ஆகியவை கடல் கடந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவியிருந்தன. தாய்லாந்து நாட்டில் நடைபெறும் மன்னருக்கு முடிசூட்டும் விழாவில் திருமுறைகள் ஓதப்பட்டன. திருஞானசம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதல் பதிகமும், சுந்தரரின் பித்தா பிறைசூடி பெருமானே என்ற முதல் பதிகமும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும் தென்னாட்டுக்குரிய கிரந்த எழுத்தில் எழுதப்பெற்று இன்றும் தாய்லாந்து நாட்டின் அரச விழாக்களில் பாடப்பட்டு வருகின்றன.

காம்போசம், தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளில் காரைக்கால் அம்மையாரின் கோயில்கள் காணப்படுகின்றன. எனவே, தமிழர்களின் திருமுறைகள் தென்கிழக்காசிய நாடுகளில் பல்லவர், சோழர் காலங்களில் பரவியிருக்கவேண்டும்.

தமிழ்க்காப்பியமான மணிமேகலை கதைத்தலைவி மணிமேகலை சாவகத்துக்குச் சென்று தருமசாவகனைச் சந்தித்து வந்ததைப் பற்றிய செய்தி குறிப்பிடத்தக்கதாகும். சிலப்பதிகாரத்தால் சுட்டப்படும் மணிமேகலை என்னும் கடல் தெய்வம் தாய்லாந்து மக்களால் வழிபாடு செய்யப்பட்டது. மணிமேகலை வரலாற்றைக் கூறும் கதைப் பாடல்களும் அம்மானைப் பாடல்களும் இன்னும் தாய்லாந்தில் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சமயம் :

தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயம் மட்டுமல்ல சைவ சமயமும் பரவியிருந்தது. இந்நாடுகளில் அகத்தியர் வழிபாடு இருந்தது என்பதைத் தொல்பொருள் சின்னங்கள் புலப்படுத்துகின்றன. காம்போசம், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் அகத்தியரின் சிலைகள் கிடைத்துள்ளன.

அதைப்போலவே காரைக்கால் அம்மையாரின் செப்புச் சிலைகள் காம்போசம், பினிசியா போன்ற நாடுகளில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டு வணிகர்கள் தங்களின் குலதெய்வமான காரைக்கால் அம்மையாரைத் தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுத்துச்சென்றிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.

நடராசர் வழிபாடு :

தமிழர்களுக்கே உரியதும் சோழர் காலத்ததுமான நடராசர் வழிபாடு தாய்லாந்து, காம்போசம், இந்தோ னேசியா போன்ற நாடுகளில் பரவி இருப்பதற்கான சான்றுகள் கிடைத் துள்ளன. இந்நாடுகளில் உள்ள கோயில் சிற்பங்களில் நடராசர் உருவமும் காரைக்கால் அம்மையார் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லாலும் செம்பாலும் செய்யப் பட்டுள்ள இந்தச் சிலைகள் இன்ன மும் அந்த நாடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பல்லவ நாட்டுத் தலை நகரமாக விளங்கிய காஞ்சிபுரம் புத்த மதத்தின் தலையாய இடமாக ஒரு காலகட்டத்தில் விளங்கிற்று. இந்த காஞ்சியிலிருந்து 6ஆம் நூற்றாண்டில் போதிதர்மன் என்ற புத்தத் துறவி சாவகத்தின் வழியாக சீனா சென்றார். மாபெரும் தத்துவஞானியாக விளங்கிய தருமபாலர் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வந்தார். 10ஆம் நூற்றாண்டு முடிவுவரை காஞ்சியைச் சேர்ந்த தமிழ் புத்தத் துறவிகள் தென்கிழக்காசிய நாடுகளில் புத்த சமயப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

மன்னர் நில உறவுகள் :

தென்கிழக்காசிய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயர்களையே சூட்டியிருக்கிறார்கள். சம்பா என்னும் நாட்டின் பெயர் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்புப் பெயரான சம்பாபதியின் திரிபாகும். மலேயாவின் இக்காலப் பெயர் முதலாம் இராசேந்திரனின் காலத்தில் மலையூர் என விளங்கியது. சிங்கப்பூரின் பழங்காலப் பெயர் சிங்கபுரம் என்பதாகும். இந்தோனேசியாவில் சிறப்புற்று விளங்கிய மதுரா பாண்டியரின் தலைநகரமான மதுரையோடு கொண்டிருந்த தொடர்பைப் புலப்படுத்துகிறது.

தென்கிழக்காசிய நாடுகளில் அரசோச்சிய மன்னர்கள் தமிழ்நாட்டிலிருந்த பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார்கள். மியான்மரின் அரசர்கள் பல்லவ அரசர்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். பியூனான் அரச மரபின் தோற்றம் பற்றிய கதை பல்லவரின் அரச குடியின் தோற்றம் பற்றிய செப்பேடு செய்திகளோடு பெரிதும் ஒத்திருக்கிறது.

சம்பாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் மூலம் அந்நாட்டு அரச மரபு பல்லவரோடு கொண்டிருந்த உறவு வெளிப்படுகிறது.

காம்போச இளவரசி ரெங்கபதாகையை இரண்டாம் நரசிம்ம பல்லவன் மணந்து கொண்ட வரலாறு குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் நரசிம்மன் என அழைக்கப்பட்ட இராசசிம்மனின் ஆட்சிக்கு தீவாந்திர பிரதேசத் தீவுகள் உட்பட்டிருந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இரண்டாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் காம்போசத்திலிருந்து அழைத்துவரப்பட்டு தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசனாக முடிசூட்டப்பட்டான்.

சுமத்திராவை ஆண்ட சைலேந்திர மன்னர்கள் பல்லவ குலத்தோடு தொடர்புடையவர்கள்.

மலேசியாவில் கங்க, பல்லவர் அரச குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சிசெய்துள்ளனர்.

கி.பி.9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சோழப் பேரரசு எழுச்சிபெற்றபோது தென்கிழக்காசிய நாடுகள் சோழர்களோடு நெருக்கமான அரசியல் உறவு கொண்டிருந்தன.

மியான்மரை ஆண்ட கியாசிந்தன் என்னும் அரசன் சோழ இளவரசியை மணம் செய்து கொண்டான்.

மாமன்னன் இராசராசன் ஆட்சி காலத்தில் சைலேந்திர அரசரின் முயற்சியால் நாகைப்பட்டினத்தில் சூளாமணி பெளத்த விகாரம் கட்டப்பட்டது. சைலேந்திர அரசரின் மகளைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் திருமணம் செய்து கொண்டதாக மரபுவழிச் செய்தி ஒன்றுண்டு. நாகப்பட்டினத்தில் எழுப்பப்பட்ட சூளாமணி விகாரத்திற்காக ஆனைமங்கலம் என்னும் ஊரையே இராசேந்திரசோழன் தானமாக அளித்தான்.

முதலாம் இராசராசன் காலத்தில் சைலேந்திரர்களுக்கும் சோழப் பேரரசுக்குமிடையே நெருக்கமான நட்புறவு நிலவியது. ஆனால் இராசேந்திர சோழன் காலத்தில் அவனுடைய படைகள் cவிசய அரசைத் தாக்கி அதன் அரசனைச் சிறைப்படுத்திச் சென்றதாக வரலாறு கூறுகிறது. கி.பி.1025இல் நடைபெற்ற இந்த படையெடுப்பில் சுமத்திராவில் உள்ள பண்ணை, மலையூர் ஆகியவற்றையும் மலேயாவில் இருந்த மாயிருமங்கம், இலாமுரி தேசம் ஆகியவற்றையும் நிக்கோபார் என இன்று வழங்கும் நக்காவரம் தீவினையும் சோழர் படை கைப்பற்றிக்கொண்டு தமிழகம் திரும்பியது.

கி.பி.1068இல் விசய அரச குடும்பத்தினரிடையே போர்ப்பூசல் உண்டாயின. அவர்களுக்குள் ஒரு குழுவினர் சோழப் பேரரசனான வீரராசேந்திர சோழனிடம் உதவியை நாடினர். அந்த வேந்தனும் தனது கடற்படையை அனுப்பி கடாரத்தை வென்று உரியவனிடம் அதைக் கொடுத்து அரசனாக்கினான்.

சுமத்திராவிலுள்ள ஒரு கல்வெட்டு நானா தேசத்துத் திசை ஆயிரத்து ஐநூற்றுவர் என்று தமிழகத்து வணிகர் குழாம் ஒன்றைப்பற்றிக் குறிப்பிடுகிறது.

பண்டைய மன்னர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட சைலேந்திரனுக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்தது. மாறன் என்னும் குடிப்பெயர் கொண்ட மன்னர்கள் சாவகத்தை ஆண்டுள்ளனர். இம்மன்னர்கள் பாண்டியர்களுக்குரிய இரட்டைக்கயல் சின்னத்தைத் தங்கள் இலச்சினையாகக் கொண்டிருந்தனர். சாவக மன்னன் ஒருவனின் பெயர் பாண்டியன் விக்கிரமதுங்கன் என்பதாகும்.

மணவினை உறவுகள் :

தமிழ்நாட்டின் பல்வேறு அரச குடிகளைச் சேர்ந்த பெண்களைத் தென்கிழக்காசிய நாடுகளின் அரசர்கள் மணந்த வரலாறு குறிப்பிடத்தக்கதாகும்.

பழக்கவழக்கங்கள் :

தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் இடம்பெற்ற பல பழக்கவழக்கங்கள் தமிழர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும். திருமண விழா, சடங்குகள், இறந்தவரை அடக்கம் செய்தல், திருவிழாக்கள் போன்ற பல்வேறு பழக்கவழக்கங்களைத் தமிழர்களிடமிருந்து அவர்கள் பெற்றார்கள்.

பியூனான் திருமணச் சடங்குகளும் விருந்தோம்பலும் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் ஒத்துள்ளன. வேட்டி, சேலை அணியும் பழக்கமும் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கவேண்டும்.

காம்போசத்தில் திருமண விழாவில் பரிசம் போடுதல், குழந்தை பிறந்த 9ஆம் நாள் சடங்கு செய்தல் ஆகியவை தமிழ்நாட்டோடு நெருக்கமான தொடர்புடையன.

உணவு முறையில் அப்பம், கொழுக்கட்டை போன்றவற்றை கெமருகள் செய்து முன்நின்றனர். கெமருகளின் நாட்டியக்கலை தமிழக நாட்டிய வழித்தோன்றலே ஆகும்.

தாய்லாந்தில் குழந்தையைத் தொட்டிலில் இடுதல், 3 ஆண்டுகளுக்குப் பின் மொட்டை அடித்துக் காது குத்துதல் ஆகியவை இன்னமும் வழக்கத்தில் உள்ளன.

திருவிழாக் காலங்களில் அன்னதானம் தாய்லாந்தில் காணப்படுகிறது.

திருவிழாத் தொடக்கத்தில் கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் ஆகிய பழக்கவழக்கங்கள் உள்ளன. இறைவழிபாட்டின்போது பழங்களைப் படைப்பதும், பூக்களால் வழிபடுவதும் நடைமுறையில் இருக்கின்றன.

திருப்பாவை, திருவெம்பாவை விழாவினை மார்கழி மாதக் கடைசியில் தாய்லாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலேசியாவில் நன்னிகழ்ச்சிகளில் மலர், வெற்றிலை-பாக்கு கொடுத்தல் செய்யப்படுகிறது.

சிங்கப்பூரில் விருந்தினர்களை வழியனுப்பும்போதும், பெரியோரிடம் பேசிவிட்டுத் திரும்பும்போதும் ஏழு அடி பின்சென்று திரும்புகின்றனர். மன்னரை வாழ்த்தும் மரபு சிங்கப்பூரில் தமிழர்களின் வழக்கத்தைப் போலவே அமைந்திருக்கிறது.

மலாய் மக்களின் திருமணச் சடங்கில் ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுகிறது. மலாக்காவில் தீமிதித்தல் திருவிழா நடைபெறுகிறது.

பாலித் தீவில் பொங்கலைப் போன்று அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

போர்னியோவில் தமிழ் மாதங்களின் பெயர்களே வழக்கில் இருந்து வருகின்றன.

பியூனானில் இறந்தவரை அடக்கம் செய்தலில் தமிழர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிவருகின்றனர்.

காம்போசத்தில் இறப்பு நிகழுமாயின் 15 நாட்கள் துக்கம் காத்தல் வழக்கத்தில் உள்ளது. 16.ஆம் நாள் தலை மழித்தல் சடங்கும் நடத்தப்படுகிறது.

சம்பாவில் இறந்தவருக்காக உறவினர், பங்காளிகள் தலையை மழித்துக் கொள்கின்றனர். தாய்லாந்தில் ஈமச்சடங்குகள் தமிழர்களின் சடங்குகளைப் போலவே நடைபெறுகின்றன.

பாலியில் சவ அடக்கத்தில் எலும்புகளைப் பானையிலிட்டு கடலில் விடுவது வழக்கமாக இருக்கிறது.

போர்னியோவில் புருனா என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் தமிழ்நாட்டு சைவசமயச் சித்தாந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. பாலியில் பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள் தமிழர்களுடையவை போன்றே உள்ளன. தாலாட்டுப் பாடல் பாடுவதும், பொன்னால் செய்யப்பட்ட தாலியைக் கட்டுவதும் அங்கே உள்ளது.

குழந்தைகளுக்கு பெயரிடுதல், தொட்டிலில் இடும் சடங்கு முதலியன தமிழ்நாட்டைப் போன்றவையாக அமைந்திருக்கின்றன.

மியான்மர் எழுத்துக்களில் 33 உயிர் எழுத்துகள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான எழுத்துகள் அப்படியே தமிழ் எழுத்துகளால் குறிக்கப்படுகின்றன. 33 மியான்மர் உயிர் எழுத்துக்களும் தமிழ் உயிர் எழுத்துகளின் ஒலியையே கொண்டிருக்கின்றன.

சங்கத் தொகை நூல்களில் வெற்றிலையைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பிற்கால நூல்களில் வெற்றிலை பற்றிய குறிப்புகள் உண்டு. மலாய் தீபகற்பத்தில் இருந்தவர்கள், மலாய் தீவுகளில் இருந்தவர்கள்தான் வெற்றிலையைத் தமிழ்நாட்டுக்கு முதலில் கொண்டு வந்தார்கள் எனக் கருதப்படுகிறது.

சுமத்திராவில் வாழும் மக்களிடையே காணப்படும் பழங்குடிப் பெயர்கள் தமிழகத்தினைப் பின்பற்றியவை ஆகும். சோழியன், பாண்டியன், பல்லவன், தக்கன் முதலிய பெயர்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.

வவுனியாவில் தமிழர்களின் 2,200 ஆண்டு முற்பட்ட சுடுமண் சிற்பங்கள் வவுனியாவில் மீட்பு

2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, தென்னிந்தியப் பண்பாட்டை ஒத்த சுடுமண் சிற்பங்கள் பெரும் எண்ணிக்கையில் வவுனியா சாஸ்திரிகுழாங்குளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

அங்கிருந்து சுமார் 50 சிற்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் தெரிவித்தார். ‘மீட்கப்பட்டவற்றில் அதிகமான சுடுமண் சிற்பங்கள் பெண் உருவிலானவை. தவிர மிருகங்கள், பறவைகள், அகவல்விளக்கு என்பவற்றின் உடைந்த நிலையிலான சிற்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன’ என்று அவர் தெரிவித்தார்.

சாஸ்திரி கூழாங்குளத்தின் மேற்குப்புறப் பகுதியில் மண் அள்ளப்பட்டபோது இந்தச் சுடுமண் சிற்பங்கள் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள பொது நோக்கு மண்டபத்திற்காக மண் அள்ளப்பட்டபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாகப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு வவுனியா அரச அதிபருக்கு அறிவிக்கப்பட்டது. அரச அதிபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையில் சென்று ஆய்வு நடத்தி சுடுமண் சிற்பங்களை மீட்டெடுத்துள்ளனர்.

இது குறித்துப் பேராசிரியர் தெரிவித்ததாவது, இந்தச் சுடுமண் சிற்பங்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். இவற்றைப் பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரியவையாகக் கூறலாம். தென்னிந்தியாவில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களின் பண்பாட்டை ஒத்த பண்பாட்டை உடைய மக்கள் இங்கும் வாழ்ந்துள்ளார்கள் என்பதையே இந்தச் சான்றுகள் நிரூபிக்கின்றன.

குளக்கட்டை அண்டிய காட்டுப் பகுதியில் இருந்து இவை மீட்கப்பட்டிருக்கின்றன. அங்கு விவசாயக்குடிகள் இருந்ததை இவை உறுதிப்படுத்துகின்றன. அந்தக் காலப்பகுதியில் மக்களின் வழிபாட்டுக்குரிய பெண் தெய்வங்களின் உருவங்களாக மீட்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள் இருக்கலாம். இதே மாதிரியான பெண் தெய்வ உருவங்கள் தமிழ் நாட்டில் உள்ள கொடுமணல், அழகன்குளம், கொற்றை, அரிக்கன்மேடு ஆகிய பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் கந்தரோடை, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இதேபோன்ற சிற்பங்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் இந்தத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து மண் அள்ளுவது தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் பகுதியைத் தொல்லியல் மையமாகப் பிரகடனப்படுத்துமாறு தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கும் அறிவித்துள்ளோம் என்றார் பேராசிரியர்.

மீட்கப்பட்ட தொல்லியல் சிற்பங்களில் பல யாழ். பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கணிசமானவை வவுனியா அரச அதிபரின் பாதுகாப்பிலும் வைக்கப்பட்டுள்ளன.

http://kumarinadu.ne...02-01&Itemid=71

Edited by சொப்னா

வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

http://swisstamilsangam.blogspot.ch

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

http://swisstamilsangam.blogspot.ch

[size=4]ரெம்ப நன்றீங்க யாழ்அன்பு அண்ணன் :) .[/size]

ஆராய வேண்டியது.மிக்க நன்றி சொப்னா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.