Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிரடி அரசியல்

Featured Replies

புலிகளின் தலைவர் ஆகச் சிறந்த மேதை தான்..! சரத் பொன்சேகாவிற்கு மறுப்பு ..!

21 - ம் நூற்றாண்டின் ஆகச் சிறந்த தலைவரும், இளைஞர்களின் கனவு நாயகனுமான புலிகளின் தலைவர் மிகச் சிறந்த மேதை என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம். புலிகளின் தலைவருக்கு நிகராக உலகில் யாரை சொல்வீர்கள்..? ஒழுக்கமும் மிகச் சிறந்த அறநெறியும் கொண்ட புலிகளின் தலைவர் ஒரு ஒப்பற்றவர் என்று ஐ.நா.வின் தருஷ்மன் அறிக்கை ஒப்புக் கொண்டுள்ளதே ஒரு சான்று தான். மிகவும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் உலகில் வேறு எங்கும் கிடையாது என்று சொன்னதே இந்த கமிட்டியின் அறிக்கை. தமிழ் ஈழ அரசு அமைத்து அந்த அரசில் ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாமல் ஒரு அரசு நடத்திட முடியுமா இன்றைய உலகில்..? ஒரு சிறு நிலப்பகுதியில் ஒரு பெரும் சிங்கள ராணுவ கூட்டத்தை, உலகின் பெரும் ராணுவ கூட்டமான இந்திய ராணுவத்தையும் குலை நடுங்க வைக்க வேண்டுமெனில் ஆகச் சிறந்த மேதை ஒருவரால் தான் முடியும்..? கோமாளி சரத் பொன்சேகாவினால் இலங்கை ராணுவத்தை வழி நடத்திட முடியாமால் போனதினால் தான் சுமார் ஒரு லட்சம் மேலான இலங்கை ராணுவத்தினர், தங்களது துவக்கையும் சீருடையையும் தூக்கி எறிந்து விட்டு ஓடிப் போனார்கள். இந்திய ராணுவ தளபதிகள் மூவரும் விடுதலைப் புலிகளின் போர்த் தந்திர மேதமையை, ராணுவ யுத்த தந்திர மேட்டிமையை வெகுவாக பாராட்டி உள்ளதே ஒரு சான்றுதான். விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின் வரலாறு தொகுக்கப்படவில்லை இன்றுவரை. தொகுக்கப்பட்ட வரலாறு வெளிவந்தவுடன் தெரியும் உலகிற்கு எப்பேர்பட்ட ஒரு சிறந்த ராணுவ மேதை ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்துள்ளோம் என்று பெரும் வியப்பை வெளிப்படுத்தும் உலக சமூகங்கள். நிற்க,

கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவ நம்பிக்கையும் சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் தான் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களவர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்று கூறி உள்ளார் சரத் பொன்சேகா.

தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை. இரு இனங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட வேண்டும் என்று யாருக்கேனும் அக்கறை இருக்குமானால் முதலில் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து வாழ்வது வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது போன்றவற்றின் மூலம் தான் இந்த நம்பிக்கையை உருவாக்க முடியும். எல்லாம் ஒரே நாளில் நடந்து விடாது. கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். பத்து இருபது ஆண்டுகள் கூட ஆகலாம் நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும். இப்போதிருக்கும் இந் நம்பிக்கையே கூட கடந்த 30 ஆண்டு கால சண்டைகளின் விளைவு தான் என்கிறார் பொன்சேகா.

தமிழர்களின் பகுதிகளில் அதிகளவு ராணுவம் குவிக்கப்பட்டிருப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கைது செய்யப்படுவது சரியானது தான். ராணுவம் அங்கு இருக்க வேண்டும். இராணுவத்தை வெளியேறுமாறும் தமிழ்க் கட்சிகள் கோரக்கூடாது. 200 விடுதலைப் புலிகள் சேர்ந்தால் குண்டு வெடிப்புகள் மூலம் இப்போதிருக்கும் நிலையை தலை கீழாக மாற்றிவிட முடியும் என்கிறார் பொன்சேகா.

மறு வாழ்வு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தச்சு வேலை சொல்லிக் கொடுப்பதோ, அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு இராணுவ வீரரை ஊக்கப்படுத்துவதோ கிடையாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவரின் மனதை மாற்ற வேண்டும். தீவிரவாத மன நிலையுடன் அதாவது சுதந்திர ஈழம் என்ற மன நிலையுடன் இருக்கும் ஆயுதம் இல்லாத ஒருவர் ஆயுதமேந்திய விடுதலைப் புலிகளை விட ஆபத்தானவர் என்கிறார் பொன்சேகா.

சர்வாதிகார நாடுகளுடன் நட்பு கொண்டு, ஜனநாயக நாடுகளைப் பகைத்துக் கொண்ட ராஜபக்சே அரசின் தவறான கொள்கையில் தான் தவறு இருக்கிறது. ஜனநாயக நாடுகளிடம் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.கற்றுக் கொண்டு நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய நிலைக்காக பிற நாடுகளைக் குறைக் கூறக்கூடாது. அதே நேரத்தில் போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்.மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன என்பனவற்றை மறுக்கின்றேன். போரின் போது நான்கு வீரர்கள் மற்றும் எட்டு வீரர்கள் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் குழுக்களை நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். அப்பாவிப் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தான் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன் படுத்தப்படாத பாதுகாப்பு வலயங்களை நாங்கள் உருவாக்கித் தந்தோம்.

விடுதலைப் புலிகளை கண்காணிப்பதற்காக ஆளற்ற விமானங்களை பயன்படுத்தினோம். ஒருபோதும் நாங்கள் தீவிரவாதிகளைப் போல நடந்து கொள்ளவில்லை.அதனால் தான் 2,70,000 தமிழர்கள் எங்கள் பகுதிக்கு வந்தார்கள். மே 17 ந் தேதி இரவுக்குப் பிறகு யாரும் சரணடைய முன்வரவில்லை. அவ்வாறு யாராவது சரணடைய முன்வந்திருந்தால் அதை எங்கள் வீரர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார். வெள்ளை கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித் தேவன் போன்ற விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டது போரில் என்று சொல்கிறார் பொன்சேகா. அதே நேரத்தில் மே 17 ஆம் தேதி இரவு ஒன்பது மணிவரை தான் இலங்கையில் இல்லை என்பதால் அந்த நேரத்தில் யாரவது சரணடைய முன்வந்திருந்தால் இதுபற்றித் தனக்கு தெரியாது என்று கூறி உள்ளார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொள்ளுமாறு மகிந்தாவும், கோத்தபாயவும் தான் ராணுவத்திற்கு உத்தரவிட்டனர் என்று சொன்ன காரணத்திற்க்காக இவ்வளவு நாள் சிறையில் இருந்து விட்டு, அனாமிக பொன்சேகா, அப்சரா பொன்சேகா சகிதம் மகிந்தாவின் கை காலுகளில் விழுந்து இனிமேலும் என் கணவரால் சிறையில் காலம் கழிக்க முடியாது. அவர் சிறையில் இருந்தால் விரைவிலேயே இறந்து விடுவார், எனவே நீங்கள் தான் எப்படியாவது விடுதலை செய்ய வேண்டும் என்று கதறி கண்ணீர் விட்டதின் விளைவே, சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். ஒரு நிபந்தனையுடன், மேற்கண்ட செய்திகளை இந்தியப் பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற அந்த நிபந்தனை தான் இன்றைய சரத் பொன்சேகாவின் பத்திரிக்கை செய்தி என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர் மறுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதுகிறார்கள் ஆட்சியாளர்கள். பாதிக்கப்பட்டவர் கூறுவதை எக்காரணம் கொண்டும் செவிமெடுக்க மாட்டோம் என்கிறார்கள்.இவைதான் கார்ப்பரேட் அரசியலின் இறுதியான நியாயமும் நீதியும் என்று உரக்க சொல்கிறார்கள் மனித குலத்திற்கு.

சங்கிலிக்கருப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.