Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழனே!! குலம்மறந்து போகாதே!!

Featured Replies

பிருத்தாணியா வாழ் தமிழர்களே! உங்கள் மனச்சாட்சியுடன் நாங்கள் யார்? எங்கள் அடையாளம் என்ன? என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்போம் அன்று அடையாள அட்டைகளை காட்டி காட்டியே எங்கள் அடையாளங்களை தொலைத்தவர்களாய் அகதிகளாகி இலங்கைத்தீவுக்குள் சுதந்திரமாக வாழ வழியற்றவர்களாகி சொந்த வீடு வாசல் சொந்த பந்தம் ஏன் எத்தனையோ உயிர்களைக்கூட பலிகொடுத்து அந்த மாங்கனித்தீவை விட்டு வெளியேறி வந்தோம் ஆனாலும் கூட பரந்த உலகில் சுதந்திரமாக இறக்கைகளை விரித்துப்பறப்பதற்க்குக்கூட இயலாது இறக்கைகள் வெட்டப்பட பறவைகளாய் கள்ளத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் கடல் அலைகள் அழைத்துச்சொல்லும் திசைகள் நோக்கி உயிரையே பணயமாக வைத்து இன்று எங்கெல்லாமோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நாங்கள் அகதிகளாய் வந்தால் கூட யாருக்கும் எங்கும் அடிமைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை பிருத்தானியா என்பது ஒரு மனிதநேயமும் சமாதனாமும் மிக்க ஒரு நாடு அத்தகைய நாட்டிலே இன்று அகதியாகி வந்த நாங்கள் சமஉரிமையுடனும் சமாதானமாகவும் வசதியாகவும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் ஆனால் எங்கள் செந்தங்கள் எங்கள் உறவுகள் அங்கே திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் அடைபட்டுக்கிடக்கின்றார்கள் சொந்த மண்ணிலே

சாவதே பெருமை என்று மரணத்தையும் மார்புடன் அணைத்தபடி தங்கள் கைகளில் பூட்டப்பட்ட விலங்குகள் உடையாதா என்று ஒவ்வெரு விடியலையும் எதிர்பாத்து ஏங்கித்தவிக்கின்ரார்கள்.

ஆனால் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு செயலை செய்து இன்று உலகத்தில் தானும் ஒரு நிரபராதியாகவும் மாவீரனாகவும் உலகமெங்கும் வலம்வந்துகொண்டிருக்கும் போர்க்குற்றவாளி மகிந்தவும் அவனது கூட்டமும் ஈழத்தமிழினத்தை எவளவு இழிவாக நினைத்திருந்தால் பிருத்தாணியமண்ணிலே மீண்டும் ஒருமுறை காலடி வைத்திருப்பான் இந்த போர்க்குற்றவாளி பிருத்தானியா வருகின்றான் என்ற செய்தி காதுகளில் ஒரு போர்ப்பறயாகவே தமிழன் காதுகளில்

ஒலித்தது மானமுள்ள தமிழனெலாம் போருக்கு புரப்பட்டான் ஆயுதப்போர் அல்ல அகிம்சைப்போர் போர்ப்பறையின் ஒலிகேட்டு புரண்டு படுப்பவன் தமிழனில்லை தமிழனே ஒரு ஊரைத்தின்று ஏப்பம்விட்ட எழியவனை விமானநிலையத்தில் வைத்தே திரும்பி அனுப்பத்தவறிவிடோம் அண்மையில் விமானநிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அங்கே மிக மிக குறைவான மக்களே கலந்து கொண்டார்கள் பிருத்தணியாவில் பல லட்சம்

தமிழர்கள் வாழ்ந்து வந்தும் நூற்றுக்கணக்காண மக்களே அன்றைய தினம் ஒன்றாக திரண்டுவந்தார்கள்.

இது ஒவ்வெரு தமிழனும் வெட்கப்படவேண்டிய வேதனைப்படவேண்டிய விடயம் எங்களை அகதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்தி கொண்றெழித்த ஒரு கொடியபகைவன் எங்கள் முன் தலை நிமிர்ந்து தானும் மனிதன் என்று நடமாட அனுமதி கொடுத்து நாங்கள் அமைதியாக இருப்பது வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றாக சேந்து உலகத்தை எங்கள் பக்கம் திரும்பி பார்க்கவைத்து போர்க்குற்றவாளி மஹிந்தவை எதிர்த்து போர்க்கொடி தூக்குவதால் பிருத்தானியாவின் துப்பாக்கிகள் எங்களை துளைக்கப்போவதில்லை அல்லது கைதுசெய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்போவதும் இல்லை அல்லது ஓட ஓட விரட்டி பிருத்தானிய காவல்துறையின் லத்தி தடிகள் எங்களை தாக்கபோவதும் இல்லை.

காரணம் இது சிறீலங்கா அல்ல பிருத்தானியா எனவே எங்கள் இனத்தை அழித்து சிங்கள காடையரின் காமவெறியாட்டத்தை கண்டு கைகொட்டி ரசித்த மன்னிக்கமுடியாத குற்றவாளி பிருத்தானியா மண்ணிலே காலடிவைக்கும்போது அவனது கால்களை தறித்து அவன் உடலை கிழித்து எங்கள் சுதந்திர தேவியை குளிப்பாட்டவேண்டும் என்பது ஒவ்வெரு தமிழனுக்கும் இருக்கு கோபமாகும் ஆனாலும் இன்று அகிம்சை வழியாகவே போராடவேண்டிய கட்டாயத்தில் எங்களை காலம் நிர்ப்பத்திக்கின்றது எனவே எங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் போகலாம் ஆனால் இன்று விலங்குகள் இல்லை.

சுதந்திர தேசத்தில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தும் ஏன் நாங்கள் இந்த கொடியவனை விரட்டி அவன் முகமூடியினை கிழிக்காது வீட்டுகுள் அமைதியாக இருக்கவேண்டும். அப்படி இருப்பதால் வரலாறு எங்களை மன்னிக்குமா நாளைய சந்ததி எங்களை தூற்றாதா?? ஒருசிலர் அச்சம் காரணமாகவே தங்கள் கடமையினை செய்ய முன்வரவில்லை என்பது வேதனையாக உள்ளது காரணம் மனிதமே மரணித்துப்போன அந்த மண்ணுக்கு தாம் செல்லும்போது தம்மை

பகைவன் அடையாளம் கண்டுகொள்வானோ என்ற அச்சமே மூல கரனமாகும் சுயநலமற்ற எங்கள் போராளிகளும் மக்களும் அங்கே மாமிச துண்டுகளாகி மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்ரனர் ஆனால் இங்கே சுயநலவாத போக்கினால் ஒரு சிலர் நடமாடும் பிணங்களாகிப்போய் ஓடி ஒழிந்து கொண்டு உயிருக்கு பயந்து உரிமையினைவிட்டு யடங்களாக

வாழ்கின்ரனர்.

முள்ளிவக்காலில் ஒரே நாளில் 40ஆயிரம் உறவுகளை கொன்று குவித்தபோது அவர்களின் கண்ணீரையும் சென்னீரையும் ஓடிச்சென்று துடைக்காதவர்கள் இன்று அவர்கள் உடல் சிதறி உயிரைவிட்ட இடங்களை எல்லாம் கன்டு ரசிப்பதற்கும் உல்லாசமாக தம் உறவுகளுடன் ஊர்திகளில் சுற்றி உல்லாசம் காணபதற்கே பேராவலாக உள்ளது வேதனையான விடயம்

காரணம் மனிதமே மரணித்துப்போன அந்த தேசத்தில் இன்று தங்கமுலாம் பூசப்பட்ட இரும்புக்கம்பிகளுக்குள் இறக்கைகள் வெட்டப்பட்ட ஜோசியக்கிளிகளாக அடைக்கப்பட்ட மக்களை மீட்டு அவர்களை சுதந்தியமாக வாழவைக்க முடியாதவர்கள் அங்கே சென்று இலங்கை அரசின் போலியான பிரச்சாரத்தின் சாட்சியங்களாக மாறுகின்றனர்.

தமிழனே இன்று எம் முன்னோரையும் அவர்கள் அவல்களின் வீரத்தையும் தீரத்தையும் புகளாரமாக்கி ஒரு தனித்துவமாகிய இனமாக நம்மை கண்டு நாம் மெருமிதம் கொள்கின்றோம், ஆனால் நாளைய தலைமுறை எங்களை தூற்றாதா எங்கள் சுயநலவாதப்போக்கினால் எங்கள் இனமே பாதிக்கப்படுகின்றது மனிதநேயமுள்ள ஒவ்வெருதமிழனும் எமக்கான கடமையினை காலம் தவறாது செய்வோம்.

காலம் அவ்வப்போது தரும் சந்தர்ப்பங்களை எலாம் தவறவிடது அதை சாதனையாக்கி காட்டுவோம் உலகத்தமிழினமே ! உறக்கத்தை கலைத்து உரிமைக்காய் போராடு எதிர்கால சந்ததிக்கான விடுதலைக்காய் களமாடு போர்க்குற்றவாளி மஹிந்தாவை இலங்கைத்தீவுக்ள்ளே சிறைவைப்போம் ஒட்டுமொத்த தமிழனின் பலமும் சிங்களதேசத்தை பலவீனப்படுத்தும் ஆயுதம் இல்லை ரத்தம் இல்லை ஆனாலும் யுத்தம் செய்வோம்.

தமிழனே உன் கரங்களும் என் கரங்களும் சேர்ந்தால் நம் கரங்கள் பலமாகும் ஒற்றுமையே எமது பலம்மானமுள்ள தமிழனே மானத்தை இழந்து மனிதத்தை சிதைக்காதே உறுதியுடன் போராடுவோம் எழுக எழுக என் தமிழ் சாதியே!!

-ஆதி

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.