Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

LLRCஉத்தேச அமுலாக்க யோசனைகளை இலங்கை நேரடியாக USடம் கையளித்திருப்பது தொடர்பில் புதுடெல்லி அதிர்ப்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

India%20vs%20srilanka1_CI.jpg

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர்பிலான உத்தேச அமுலாக்க யோசனைகளை இலங்கை அரசு நேரடியாக அமெரிக்காவிடம் கையளித்திருப்பது தொடர்பில் புதுடெல்லி இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பைக் கொழும்புக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப அமுல்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலான திட்டவரைபை அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்திருந்தார்.

ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமுலாக்க யோசனைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசு அமெரிக்காவிடம் உறுதியளித்திருந்தது.இந்நிலையில், இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு, இலங்கை நேரடியாக அமெரிக்காவுடன் தொடர்புகொண்டு செயற்படுவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதால், அந்த அதிருப்தியை புதுடில்லி, கொழும்புக்கு இராஜதந்திர ரீதியில் அறிவித்திருக்கிறது என மேற்கண்ட மூத்த ராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டின்போது இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட வேளையில், அதனை நெகிழ்வுபடுத்த இந்தியா பெரிதும் உதவியது. ஆனால், இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு இலங்கை நேரடியாக அமெரிக்காவுடன் செயற்படுகிறது. இலங்கையால் கையளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அமெரிக்கா எம்மை அறிவுறுத்தியிருக்கிறது. இதனை கொழும்பு எம்மிடம் நேரடியாகவே கூறியிருக்கலாம். எம்மைப் புறந்தள்ளிச் செயற்படுவது ஆரோக்கியமானதல்லவென எமது இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பை கொழும்பிடம் தெரிவித்திருக்கிறோம் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

U.N. சட்டரீதியாக வெளியிட முன் இலங்கைக்கு தனிப்பட்ட முறையில் கொடுத்த தனது நிபுணர் அறிக்கையை கோபத்தபயா தங்களிடம்தான் கொண்டுவந்து அறிவுரை கேட்டு நடந்துதான், இன்று மனித உரிமைகள் சபையின் பிரேரணைக்குள் மாட்டுப்பட்டுப் போயிருக்கிறார்கள். பாவம் இலங்கையை இனியும் எங்கெங்கேயெல்லாம் மாட்டிவைக்க உத்தேசம்?

அவர்கள் அந்த அறிக்கையை உங்களுக்கு இரகசியமாக காட்டிய நன்றிக்காகத் தன்னும் நீங்கள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் விடவில்லை. உங்களிடம் ஒரு பொழுதும் இலங்கை அரசு மாட்டவில்லை. நாவல் பழம் தின்ற குரங்கின் இருதயத்தை தின்ன அலைந்த மோட்டு முதளை மாதிரி நீங்கள் தான் வீணே குரங்கை அந்த கரைக்கும் இந்த கரைக்கும் காவித்திரிகிறீர்கள். உங்கள் இருதயம் தின்னும் ஆசையை குரங்கு தெரிந்துதான் வைத்திருக்கிறது.

அமெரிக்காவிடம் நேரடியாக அறிக்கையை கையளித்தமை குறித்து அதிருப்தி! - எதிர்ப்பை வெளியிட்டது புதுடில்லி!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான உத்தேச அமுலாக்க யோசனைகளை சிறிலங்கா அரசாங்கம் நேரடியாக அமெரிக்காவிடம் கையளித்திருப்பது தொடர்பில் புதுடில்லி இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பை கொழும்புக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களுககு ஏற்ப நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலான திட்டவரைபை அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்திருந்தார்.

நான்கு அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமுலாக்க யோசனைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவிடம் உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்கா நேரடியாக அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டு செயற்படுவது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அது தொடர்பிலான அதிருப்தியை கொழும்புக்கு புதுடில்லி இராஜதந்திர ரீதியில் அறிவித்திருப்பதாக மூத்த இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த கூட்டத் தொடரின்போது சிறிலங்கா மீதான தீர்மானம் கொண்டு வரப்பட்ட வேளையில், அதனை நெகிழ்வுபடுத்த இந்தியா பெரிதும் உதவியது. ஆனால், இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு சிறிலங்கா அரசாங்கம் நேரடியாக அமெரிக்காவுடன் செயற்படுகிறது என இந்தியா அஞ்சுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தால் நேரடியாக கையளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அமெரிக்கா எம்மை அறிவுறுத்தியிருக்கிறது. இதனை கொழும்பு எம்மிடம் நேரடியாகவே கூறியிருக்கலாம். எம்மைப் புறந்தள்ளிச் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல என எமது இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பை கொழும்பிடம் தெரிவித்திருக்கிறோம் என்றும் அந்த இராஜதந்திரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=fbaa1472-88f0-4664-b75e-20c6dd44c329

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.